search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தூர் மலைப்பகுதியில் வன விலங்குகள் ஊருக்குள் புகாமல் இருக்க தண்ணீர் தொட்டி அமைக்கப்படுமா?
    X

    கோப்பு படம்.

    புத்தூர் மலைப்பகுதியில் வன விலங்குகள் ஊருக்குள் புகாமல் இருக்க தண்ணீர் தொட்டி அமைக்கப்படுமா?

    • வழங்கப்படும் மூலிகைகள் அடங்கிய பிரசாதம் அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டதாக நம்பப்படுகிறது
    • பல விலங்குகள் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள தேங்காய், நிலக்கடலை, தக்காளி, மக்காசோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து விடுகின்றன.

    காங்கயம்:

    காங்கயம் அருகே உள்ள ஊதியூரில் வரலாற்று சிறப்பு மிக்க பொன்னூதி மலையில் முருகன், உத்தண்ட வேலாயுதசாமி என்னும் உருவில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த மலையின் மீது கொங்கன சித்தர் குகைக்கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி அன்று நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதில் தாராபுரம், காங்கயம் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

    அப்போது வழங்கப்படும் மூலிகைகள் அடங்கிய பிரசாதம் அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டதாக நம்பப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த மலையோடு சுமார் 940 ஏக்கர் பரப்பளவில் காட்டுப்பகுதி உள்ளது. இங்கு புள்ளிமான், முயல், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, காட்டு் அணில் உள்பட ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன.

    இவைகளுக்கு மலை மற்றும் காட்டுப்பகுதியில் தற்போது போதுமான தண்ணீர் வசதி இல்லாததால் அருகில் உள்ள ஊர்களுக்குள் வருவதாக குற்றச்சாட்டு் எழுந்துள்ளது.

    இதுகுறித்து ஊதியூர் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கூறியதாவது:-

    ஊதியூர் பொன்னூதி மலை மற்றும் அதைச்சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. அவை அங்குள்ள சுனைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்துக்கொள்கின்றன. கடந்த ஒரு வருடமாக ஊதியூர் பகுதியில் போதுமான மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது.

    இதனால் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர், உணவு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு்ள்ளது. இந்த நிலையில் விலங்குகள் அனைத்தும் தண்ணீர் மற்றும் உணவு தேவைகளுக்காக அருகில் உள்ள தோட்டங்கள் மற்றும் ஊர்களுக்குள் வரத்தொடங்கிவிட்டன. குரங்குகள் காங்கயம் வரை பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. திருப்பூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2 மான்கள் அடிபட்டு சாலையோரத்தில் இறந்தன. சிறுத்தை ஒன்று விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடுகளை வேட்டையாடுவது, தண்ணீர் தொட்டிகளில் உள்ள நீரினை அருந்தி செல்வது என இருந்து வருகிறது. பல விலங்குகள் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள தேங்காய், நிலக்கடலை, தக்காளி, மக்காசோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் கடும் துயரத்தில் இருந்து வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஊதியூர் மலை மீது தண்ணீர் தொட்டிகள் அமைப்பதோடு, விலங்குகள் தண்ணீர் அருந்தி செல்வதற்கு ஏதுவாக அந்த தொட்டிகளில் வருடம் முழுவதும் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என ஊதியூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×