என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா"

    • திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை மொத்தம் 22 பெண்களை பாகுலேயன் ஏமாற்றி மணமுடித்துள்ளார்.
    • பாகுலேயன் மீது கேரளாவில் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமி பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்றிங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில், திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு பகுதியை சேர்ந்த பாகுலேயன் (வயது 56) என்பவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த பாகுலேயன் தலைமறைவானார்.

    இந்தநிலையில் நெய்யாற்றின்கரை பகுதியில் வைத்து அவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மனைவியை திருப்தி படுத்த நகை பறிப்பில் ஈடுபட்டது அம்பலமானது. ஒரு மனைவியா? என போலீசார் கேட்க அவர் அளித்த பதில் போலீசாரை திகைக்க வைத்தது. மாவட்டம்தோறும் மனைவிகள் இருப்பதாக கூறி தம்பட்டம் அடித்துள்ளார்.

    அதாவது பாகுலேயன் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்த பெண்களை குறிவைத்து அவர்களை ஏமாற்றி திருமணம் செய்து வந்துள்ளார். இவ்வாறு திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை மொத்தம் 22 பெண்களை ஏமாற்றி மணமுடித்துள்ளார்.

    ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதும் தனது பெயரை மாற்றி மாற்றி கூறி லீலைகளை அரங்கேற்றி வந்துள்ளார். அதன்படி இவருக்கு தாஸ், பாபு, சுந்தரன். ராஜன், விஜயன், கல்யாணராமன் என பல பெயர்கள் உள்ளன.

    மேலும் தனது மனைவிகளை திருப்திபடுத்தவும், அவர்களுக்கு விதவிதமாக நகைகளை அணிவித்து அழகு பார்க்கவும் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக பூட்டப்பட்டு கிடக்கும் வீடுகளை குறி வைத்து கைவரிசை காட்டியுள்ளார். பாகுலேயன் மீது கேரளாவில் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என்பன போன்ற தகவல்கள் போலீஸ் விசாரணை மூலம் அம்பலமானது.

    இதையடுத்து பாகுலேயனை போலீசார் ஆற்றிங்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பலே ஆசாமி 22 பெண்களை மணந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • பாதுகாப்பு கோரி கேரள போலீசில் அவர் புகார் அளித்திருந்தார்.

    2025 ஜனவரியில் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றது. இங்கு பாசிமணி, வளையல் விற்றுக் கொண்டிருந்த இளம்பெண் மோனலிசா போஸ்லே தனது இயற்கையான மாநிறத்துக்கான வைரலானார்.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் எளிய குடும்பத்தை சேர்ந்த மோனாசிலாவுக்கு அதன் பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது.

    அவர் தொடர்ந்து மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கேரளாவின் அருமனுார் கோவிலில் நேற்று மோனலிசா தனது காதலர் பர்மான் கானை திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களது திருமணம் இந்து சடங்குகளின்படி நடைபெற்றது. திருமணத்தில் கேரள அமைச்சர் உட்பட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

    இதற்கு முன்னர், தனது தந்தை தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை வேறொருவருடன் கட்டாய திருமணம் செய்து வைக்க முயல்வதாவும் தனக்கு பாதுகாப்பு கோரியும் கேரள போலீசில் அவர் புகார் அளித்திருந்தார்.

    இந்நிலையில் திருமணத்தின் பின் இன்று கணவர் பர்மான் கானுடன் மோனலிசா செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எங்களது திருமணம் இந்து முறைப்படிதான் நடந்தது, இது லவ் ஜிஹாத் அல்ல" என்று மோனலிசா கூறினார்.

    இருவருமே தங்களது மதங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்று அவரது கணவர் பர்மேன் கான் தெரிவித்தார். 

    • பெற்றோர் எதிர்ப்பை மீறி கும்பமேளா அழகி மோனலிசா முஸ்லிம் நபரை காதலித்து திருமணம் செய்தார்
    • பெற்றோர் தங்கள் காதலை எதிர்த்ததால், மோனலிசா தனது காதலனுடன் கேரளா வந்தடைந்தார்.

    மகா கும்பமேளாவில் வீதி வீதியாக பாசிமணி மாலை விற்றுக் கொண்டிருந்தவர் மோனலிசா. பாசிமணி வாங்கலியோ என கூவி விற்றுக் கொண்டிருந்த மோனலிசாவின் காந்த கண்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவருடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார்.

    இதை தொடர்ந்து மோனலிசா சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். மேலும் கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்று அவரது வாழ்க்கை உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

    மோனலிசா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தின் பூவாரில் நடந்து வருகிறது. இங்கிருந்து, மோனலிசாவும் அவரது காதலன் ஃபர்மான் கானும் தம்பனூர் காவல் நிலையத்திற்குச் சென்று தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக புகார் அளித்தனர்.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லேவும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஃபர்மான் கானும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பேஸ்புக் மூலம் சந்தித்து பேசி பழகி இவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். மோனாலிசாவின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மோனலிசாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் முடிவு செய்தனர். பெற்றோர் தங்கள் காதலை எதிர்த்ததால், மோனலிசா தனது காதலனுடன் கேரளா வந்தடைந்தார். மற்ற மாநிலங்களில் தங்கள் உறவுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்படும் என்பதில் உறுதியாக இருந்ததால் கேரளாவைத் தேர்ந்தெடுத்ததாக இருவரும் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மோனலிசா திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலில் வைத்து தனது காதலன் ஃபர்மான் கானை திருமணம் செய்தார். இருவரின் பாதுகாப்புக்கும் கேரளா அரசு உறுதி ஏற்றுள்ளது.

    மோனலிசா திருமணத்தில் கேரளா அமைச்சர் சிவன்குட்டி மற்றும் சிபிஎம் கேரளா மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் சிவன்குட்டி, "இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி. இந்த 2 நபர்களின் தைரியத்திற்காக நாம் பெருமைப்பட வேண்டும். கேரளா உண்மையிலேயே சுதந்திரமாக வாழ்வதற்கான இடமாகும்" என்று தெரிவித்தார்.

    இதையடுத்து பேசிய சிபிஎம் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன், "இரண்டு நபர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த சிறப்பு தருணத்திற்காக அவர்கள் கேரளாவையும், நாராயண குருவால் கட்டப்பட்ட ஒரு கோவிலையும் தேர்ந்தெடுத்தனர்" என்று கூறினார்.

    • மோனலிசாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் முடிவு செய்தனர்.
    • பெற்றோர் தங்கள் காதலை எதிர்த்ததால், மோனலிசா தனது காதலனுடன் கேரளா வந்தடைந்தார்.

    மகா கும்பமேளாவில் வீதி வீதியாக பாசிமணி மாலை விற்றுக் கொண்டிருந்தவர் மோனலிசா. பாசிமணி வாங்கலியோ என கூவி விற்றுக் கொண்டிருந்த மோனலிசாவின் காந்த கண்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவருடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார்.

    இதை தொடர்ந்து மோனலிசா சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். மேலும் கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்று அவரது வாழ்க்கை உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

    மோனலிசா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தின் பூவாரில் நடந்து வருகிறது. இங்கிருந்து, மோனலிசாவும் அவரது காதலன் ஃபர்மான் கானும் தம்பனூர் காவல் நிலையத்திற்குச் சென்று தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக புகார் அளித்தனர்.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லேவும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஃபர்மான் கானும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பேஸ்புக் மூலம் சந்தித்து பேசி பழகி இவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். மோனாலிசாவின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மோனலிசாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் முடிவு செய்தனர். பெற்றோர் தங்கள் காதலை எதிர்த்ததால், மோனலிசா தனது காதலனுடன் கேரளா வந்தடைந்தார். மற்ற மாநிலங்களில் தங்கள் உறவுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்படும் என்பதில் உறுதியாக இருந்ததால் கேரளாவைத் தேர்ந்தெடுத்ததாக இருவரும் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மோனலிசா திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலில் வைத்து தனது காதலன் ஃபர்மான் கானை திருமணம் செய்தார். இருவரின் பாதுகாப்புக்கும் கேரளா அரசு உறுதி ஏற்றுள்ளது.

    மோனலிசா திருமணத்தில் கேரளா அமைச்சர் சிவன்குட்டி மற்றும் சிபிஎம் கேரளா மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் சிவன்குட்டி, "இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி. இந்த 2 நபர்களின் தைரியத்திற்காக நாம் பெருமைப்பட வேண்டும். கேரளா உண்மையிலேயே சுதந்திரமாக வாழ்வதற்கான இடமாகும்" என்று தெரிவித்தார்.

    இதையடுத்து பேசிய சிபிஎம் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன், "இரண்டு நபர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த சிறப்பு தருணத்திற்காக அவர்கள் கேரளாவையும், நாராயண குருவால் கட்டப்பட்ட ஒரு கோவிலையும் தேர்ந்தெடுத்தனர்" என்று கூறினார்.

    • சிறப்பு கூப்பன், செருப்புகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

    இலவசம்.. மலிவு விலையில் பொருட்கள் என்ற அறிவிப்புகள் மக்களுக்கு மட்டுமின்றி பலருக்கும் சிரமத்தை தான் தருகின்றன. இதுபோன்று வெளியான ஒரு அறிவிப்பால் திரண்ட மக்கள் கூட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் கோழிக்கோடு வைக்கம் முகமது பஷீர் சாலையில் ஒரு செருப்பு கடை திறப்பு விழா நடந்தது. இதனை முன்னிட்டு ஒரு ரூபாய் நோட்டை கொண்டு வந்தால் சிறப்பு கூப்பன், செருப்புகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    காலை 10 மணிக்கு திறப்பு விழாவின்போது காலணிகள் வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் வெளியான இந்த அறிவிப்பை பார்த்து இன்று அதிகாலையிலேயே ஏராளமானோர் கடை முன்பு திரண்டனர்.

    கடை திறந்தவுடன், சலுகையை பயன்படுத்திக் கொள்ள இளைஞர்கள் கடைக்குள் நுழைய போட்டியிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் அதிகமாகி நிலைமை மோசமடைவதை கண்ட கடை உரிமையாளரே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். அதன்பிறகே கூட்டம் கலைந்தது. இந்த சம்பவத்தின்போது ஓடிய பலரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் கூட்டத்தை உருவாக்கியதற்காகவும், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததற்காகவும் கடைக்காரர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • பல் மருத்துவரான இவர், நடனம் மற்றும் ஆடை அலங்கார போட்டிகளில் பங்கேற்பு.
    • 'மிஸ் கிராண்ட் இந்தியா' போட்டியில் பங்கேற்க உள்ளார்.

    கேரள மாநிலம் மூவாட்டுப்புழாவை சேர்ந்தவர் டாக்டர் கே.எஸ்.அஸ்வினி. பல் மருத்துவரான இவர், நடனம் மற்றும் ஆடை அலங்கார போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

    தொடர்ந்து அழகி போட்டியில் பங்கேற்ற அஸ்வினி, தற்போது 'மிஸ் கிராண்ட் கேரளா 2026' பட்டம் வென்றுள்ளார்.

    இதன் மூலம் அவர் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள 'மிஸ் கிராண்ட் இந்தியா' போட்டியில் பங்கேற்க உள்ளார்.

    இவரது தந்தை ஸ்ரீராஜ், தெற்கு ரெயில்வேயில் மின் பொறியாளராகவும், தாயார் பிந்துமேனன், கேரள நீர் ஆணையத்தில் கணக்கு அதிகாரியாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    • ஈரான் கப்பலில் இருந்து 87 பேர் கொல்லப்பட்டனர்.
    • 183 பேரும் கொச்சியில் தங்கியுள்ளனர்.

    இந்தியாவின் கடற்படை அழைப்பை ஏற்று விசாகப்பட்டினத்தில் நடந்த 'மிலன்-2026' சர்வதேசக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ஈரான் போர் கப்பலான 'ஐரிஸ் டெனா' வந்திருந்தது.

    பயிற்சி முடிந்து மார்ச் 4 அன்று இலங்கை அருகே இந்திய பெருங்கடலில்சென்றுகொண்டிருந்த ஐரிஸ் டெனாவை அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தாக்கி மூழ்கடித்தது. இதில் ஈரான் கப்பலில் இருந்து 87 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்தியாவின் விருந்தினராக சென்ற எங்கள் கப்பலை முன்னறிவிப்பின்றி தாக்கிய அமெரிக்கா விரைவில் வருத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு சில நாட்கள் முன்னர் மற்றொரு ஈரான் போர் கப்பலான ஐரிஸ் லாவன் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் நடைபெற்ற சர்வதேசக் கடற்படை ஆய்வில் பங்கேற்பதற்காக இந்தக் கப்பல் வந்திருந்தது.

    தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில், இந்தக் கப்பலில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

    இதனை சரிசெய்வதற்காக கொச்சித் துறைமுகத்தில் கப்பலை நிறுத்த அனுமதிக்கக் கோரி பிப்ரவரி 28 அன்று ஈரான் அதிகாரிகள் விண்ணப்பித்தனர்.

    மறுநாளே (மார்ச் 1) இந்திய அதிகாரிகள் இதற்கான அனுமதியை வழங்கியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    தற்போது இந்தக் கப்பலும், அதில் உள்ள 183 பேரும் கொச்சியில் தங்கியுள்ளனர். 

    • டிராவல்ஸ் வாகனத்தில் வைத்திருந்த அந்த சீட்டு எப்படியோ காணாமல் போய்விட்டது.
    • கேரள ஐகோர்ட்டு மாநில லாட்டரி இயக்குனருக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது.

    கேரளாவில் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.20 கோடி எக்ஸ்.சி. 138455 என்ற எண்ணுக்கு கிடைத்தது. இந்த லாட்டரி சீட்டை வைத்திருந்த எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு முதல் பரிசு கிடைத்ததாக கூறி திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி இயக்குனரகத்தில் ஒப்படைத்தார்.

    இந்தநிலையில் எர்ணாகுளத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான சஜிமோன் கேரள ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், 'நான் மூவாற்றுபுழாவில் எனது மனைவி வீட்டுக்கு சென்றிருந்தபோது எடுத்த லாட்டரி சீட்டுக்குத்தான் முதல் பரிசு கிடைத்து உள்ளது. எனது டிராவல்ஸ் வாகனத்தில் வைத்திருந்த அந்த சீட்டு எப்படியோ காணாமல் போய்விட்டது. எனவே, பரிசு தொகை ரூ.20 கோடியை எனக்கே தர வேண்டும்' என்று கூறியிருந்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கேரள ஐகோர்ட்டு மாநில லாட்டரி இயக்குனருக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது.

    இந்த விவகாரத்தில் கேரள லாட்டரி இயக்குனரகம் அளித்த அறிக்கையை பரிசீலித்த ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சஜிமோன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் லாட்டரி சீட்டு கைவசம் வைத்து இருந்த அதிர்ஷ்டசாலிக்கு முதல் பரிசு ரூ.20 கோடி வழங்க தீர்ப்பளித்தது.

    • மாணவ-மாணவிகள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
    • அதிக மதிப்பெண் பெற தீவிரமாக தயாராகின்றனர்.

    கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (5-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை நடக்கிறது. அதேபோல் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் (6-ந்தேதி) தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 4 லட்சத்து 18 ஆயிரத்து 516 மாணவ-மாணவிகளும், பிளஸ்-2 பொதுத்தேர்வை 4 லட்சத்து 52 ஆயிரத்து 437 மாணவ-மாணவிகளும் எழுத உள்ளனர்.

    பிளஸ்-2 பொதுதேர்வு மொத்தம் 1,984 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வு கண்காணிப்பு பணியில் 29 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளதால் அந்த வகுப்பு மாணவ-மாணவிகள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    அதேபோல் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவ-மாணவிகளும் இறுதிக் கட்டமாக பாடங்களை படித்து வருகின்றனர். கேரளாவில் நடக்க உள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வை ஒரே பிரசவத்தில் பிறந்த நால்வர் எழுதுகின்றனர். அவர்கள் 4 பேரும் ஒரே நேரத்தில் பொதுத்தேர்வை எதிர்கொள்கின்றனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

    கொல்லம் மாவட்டம் ஓச்சிரா அருகே உள்ள புத்தன்புரா பகுதியை சேர்ந்த தம்பதி சுனில் குமார்-ரேகா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 9 ஆண்டுகளுக்கு பிறகே குழந்தை பிறந்தது. அதிலும் ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை என 4 குழந்தைகள் பிறந்தனர்.

    அவர்கள் 4 பேரும் கடந்த 2008-ம் ஆண்டு மே 17-ந்தேதி பிறந்தனர். அவர்களில் ஆண் குழந்தைகளுக்கு அனந்த கிருஷ்ணன், கோபி கிருஷ்ணன், ராஜ் கிருஷ்ணன் என்று பெயர் சூட்டினர். பெண் குழந்தைக்கு கோபிகா கிருஷ்ணன் என்று பெயர் வைத்தனர்.

    திருமணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்ததை சுனில்குமார்-ரேகா தம்பதியினர் பெரும் பாக்கியமாக கருதினர். இதனால் 4 குழந்தைகளையும் எந்த வேறுபாடும் இல்லாமல் பாசம் காட்டி வளர்த்தனர்.

    ஒரே நேரத்தில் 4 குழந்தைகளையும் வளர்க்க பல்வேறு சிரமங்களை அவர்கள் சந்தித்தனர். இருந்தபோதிலும் அதனை மகிழ்வாக எடுத்துக்கொண்டு 4 குழந்தைகளையும் வளர்த்தனர். அவர்களை சிறு வயது முதலே ஒரே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். அவர்கள் 4 பேரும் சிறு வயது முதல் 10-ம் வகுப்பு வரை, தங்களின் வீட்டின் அருகே உள்ள பள்ளியில் படித்தனர்.

    ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் சேர்ந்து படித்தனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒன்று போலவே எழுதினர். அதில் அனைவரும் தேர்ச்சி பெற்று 11-ம் வகுப்புக்கு சென்றனர். 4 பேரில் அனந்த கிருஷ்ணன் எதிர்காலத்தில் பி.காம் படிக்க விரும்பியதால், வணிகவியல் பாடத்தை தேர்வு செய்தார்.

    மற்ற 3 பேரும் எதிர்காலத்தில் பி.டெக் படிக்க விரும்பியதால் கணிணி அறிவியலை தேர்வு செய்தார்கள். இதனால் 10-ம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள், 11-ம் வகுப்பில் வேறு வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அனந்த கிருஷ்ணனை தவிர மற்ற 3 பேரும் ஒரே வகுப்பில் படித்தார்கள். ஆனால் ஒரே பள்ளியில் தான் படித்தனர்.

    இந்தநிலையில் அவர்கள் 4 பேரும் தற்போது ஒரே நேரத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத உள்ளனர். அவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற இலக்குடன் தீவிரமாக படித்து வருகின்றனர்.

    கோபிகா கிருஷ்ணன், கோபி கிருஷ்ணன், ராஜ் கிருஷ்ணன ஆகிய 3 பேரும் ஒரே பாடப்பிரிவு என்பதால் சேர்ந்து படிக்கின்றனர். அனந்த கிருஷ்ணன் வணிக வியல் பிரிவு என்பதால் அவர் மட்டும் தனியாக படிக்கின்றார்.

    ஒரே நேரத்தில் பொதுத் தேர்வு எழுதும் நால்வருக்கு, அவர்கள் வசித்துவரும் வீடு இருக்கக்கூடிய பகுதியை சேர்ந்தவர்கள், உடன் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச்சார்பற்றதாக இருக்கவேண்டும்
    • இந்த முடிவு எதிர்காலத்தில் தொடங்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்

    கேரளாவில் அரசு சார்பில் இனிமேல் தொடங்கப்படும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு

    மதம் சார்ந்த பெயர்கள் வைக்கப்படாது என கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச்சார்பற்றதாக இருப்பதையும், சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளை பிரதிபலிப்பதையும் உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த முடிவு எதிர்காலத்தில் தொடங்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தற்போதுள்ள அரசு கல்வி நிறுவனங்களின் பெயர்களைப் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.

    • 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் வேடன் கவனம் பெற்றார்.

    கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன், தனது நீண்ட நாள் காதலியான எழுத்தாளர் நவமி லதாவை கரம் பிடித்தார்.

    செம்புக்காவு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து எளிமையான முறையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

    யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. இவரே பின்னணியில் வேடன் ஆனார்.

    2020 கொரோனா காலத்தில், யூடியூபில் வெளிவந்த இவரின் முதல் ஆல்பம் பாடலான 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் கவனம் பெற்றார்.

    "நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் அவர் பேசியிருந்தார். தொடர்ந்து சில படங்களிலும் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

    'மஞ்ஞும்மல் பாய்ஸ்', 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களிலும் இவர் பாடியுள்ளார். திரைப்படங்களை தவிர்த்து சுயாதீன இசை ஆல்பங்களிலும் வேடன் கவனம் செலுத்தி வருகிறார்.

    • கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.
    • முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது.

    கேரள முதல்வர் பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.

    முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணலின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

    இந்த நேர்காணலின் டீசரில் மோகன்லால் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நீங்கள் பழைய நேர்காணல்களில் ரஜினிகாந்த் படங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளீர்கள் என்று கேட்க, அதற்கு ஆம் என்று கூறிய பினராயி விஜயன், ரஜினிகாந்தின் ஆக்சன் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

    ×