என் மலர்
நீங்கள் தேடியது "மோகன்லால்"
- சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்.
- சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் தான் இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3 ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 89 ரன்கள் விளாசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த தொடரில் தொடக்கத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியிலும், அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து மூன்று அரைசதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்து தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.
சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் தான் இந்தியா கோப்பையை கைப்பற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது. அவ்வகையில் சஞ்சு சாம்சனின் மறக்கமுடியாத இந்த உலகக்கோப்பை ஆட்டத்தை பாராட்டி பிரபல மலையாள நடிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் சஞ்சு சாம்சனை புகழ்ந்து பதிவிட்டுள்ளனர்.
- சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.
- சஞ்சு சாசனின் இந்த வாழ்நாள் ஆட்டத்தை மலையாள முன்னணி நடிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்னும், ஹோல்டர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
கேரளாவில் இருந்து தற்போது இந்திய அணிக்காக விளையாடும் ஒரே கிரிக்கெட் வீரரான சஞ்சு சாசனின் இந்த வாழ்நாள் ஆட்டத்தை மலையாள முன்னணி நடிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மோகன்லால், மம்முட்டி, பசில் ஜோசப் ஆகியோர் சஞ்சு சாம்சனை பாராட்டி பதிவிட்டுள்ளனர். அதே போல், சச்சின், யுவராஜ் சிங் ஆகியோரும் சாம்சனை பாராட்டி பதிவிட்டுள்ளனர்.
- பேட்ரியாட் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
- பேட்ரியாட் படம் ஏப்ரல் 23 ஆம் த்தி வெளியாகவுள்ளது
மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் பேட்ரியாட்.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படம் ஏப்ரல் 23 ஆம் த்தி வெளியாகவுள்ளது. இந்நிலையில், பேட்ரியாட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.
- முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணலின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நேர்காணலின் டீசரில் மோகன்லால் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நீங்கள் பழைய நேர்காணல்களில் ரஜினிகாந்த் படங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளீர்கள் என்று கேட்க, அதற்கு ஆம் என்று கூறிய பினராயி விஜயன், ரஜினிகாந்தின் ஆக்சன் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
- மோகன்லால் ஒரு முதலமைச்சரை நேர்காணல் செய்வது இது முதல் முறையல்ல.
- கேரளாவில் தேர்தல் நெருங்கி வருகிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது.
பினராயி விஜயனின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது அரசியல் பயணம் மற்றும் தற்போதைய அரசின் நிர்வாகம் குறித்து மோகன்லால் கேள்விகளை எழுப்பியதாகத் தெரிகிறது.
இந்த நேர்காணலின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டது. முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
கேரளாவில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த நேர்காணல் நடைபெறுவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இது அரசின் ஒரு விளம்பர முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மோகன்லால் ஒரு முதலமைச்சரை நேர்காணல் செய்வது இது முதல் முறையல்ல.
இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அவர்களையும் அவர் இதேபோல் நேர்காணல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- த்ரிஷ்யம் 3 திரைப்படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது.
- த்ரிஷ்யம் 3 படத்திற்கு அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார்.
பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸ் நிறுவன்துடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாள திரைப்படமான 'த்ரிஷ்யம் 3' வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடித்திருக்க, இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது.
பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை, பரபரப்பாக ரசிகர்களை கட்டிப்போடும் திரைக்கதை என பல சாதனைகள் புரிந்த 'த்ரிஷ்யம்' திரைப்படம் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியில் அபிஷேக் பதக் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்ட 'த்ரிஷ்யம் 2' திரைப்படம் உட்பட இந்தப் படத்தின் பல மொழி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் தக்க வைத்துள்ளது.
த்ரிஷ்யம் 3 படத்திற்கு சதீஷ் குருப் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, விநாயக் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். இந்தப் படத்திற்கு அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் த்ரிஷ்யம் 3 படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படத்தின் புதிய போஸ்டரை நடிகர் மோகன்லால் பகிர்ந்துள்ளார்.
- மேப்படியான் படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருதை விஷ்ணு மோகன் பெற்றுள்ளார்.
- மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகவுள்ளது
நடிகர் மோகன்லாலின் 367வது படத்தை இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது படக்குழு. கோகுலம் கோபாலன் தனது ஸ்ரீ கோகுலம் மூவீஸ் நிறுவனத்தின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படம் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், இந்திய அரசின் ஆபரேஷன் கங்காவை அடிப்படையாக கொண்ட கதை என தகவல்கள் பரவிவருகிறது.
உன்னி முகுந்தன் மற்றும் அஞ்சு குரைன் நடித்த மேப்படியான் படம்மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் விஷ்ணு மோகன். இன்னுவாரே எனும் படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் மோகன்லால் உடன் இணைந்துள்ளார். துடரும் படத்திற்குப் பிறகு, தற்காலிகமாக எல் 366 என்று பெயரிடப்பட்டுள்ள தனது 366வது படத்திற்காக தருண் மூர்த்தியுடன் மீண்டும் இணைகிறார் மோகன்லால். இதனைத்தொடர்ந்து இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இதனிடையே மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- Patriot படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
- Patriot படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் PATRIOT.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டர்களில் Morse Code-ல் ஏப்ரல் 23 என குறிப்பு வைத்து வித்தியாசமான முறையில் ரிலீஸ் தேதியை Patriot படக்குழு வெளியிட்டுள்ளனர்
மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- PATRIOT படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
- PATRIOT படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் PATRIOT.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், பேட்ரியாட்" படத்தின் நயன்தாரா கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- PATRIOT படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
- PATRIOT படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் PATRIOT.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 130 நாட்கள் இப்படத்தில் படப்பிடிப்பு நடந்தது. மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
- மோகன்லால் தாயருக்கு 90 வயதாகும்.
கேரள மாநிலத்தின் முன்னணி நடிகரான மோகன்லாலின் தாயார் சந்தானாகுமாரி அம்மா (90) வயது மூப்பு தொடர்பான நோயால் இன்று காலமானார். நோய் பாதிப்பால் பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். இவர் காலமானபோது, மோகன்லால் வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது.
மோகன்லால் தாயார் மறைவு செய்தியை அறிந்த அவரின் நெருங்கிய நண்பர்களாக மம்மூட்டி மற்றும் கேரள சினமா திரையுலக பிரபலங்கள் அவரது வீட்டிற்கு சென்று, அஞ்சலி செலுத்தினர். மோகன்லாலின் தந்தை விஸ்வநாதன் நாயர் கடந்த சில வருடத்திற்கு முன் காலமானார். அவர் சீனியர் அரசு அதிகாரியாக பணியாற்றியவர்.
சினிமா துறையில் தன்னுடைய வெற்றிக்கு தந்தை மற்றும் தாயின் உத்வேகம்தான் காரணம் என அடிக்கடி கூறுவார்.
கேரள மாநில முதல்வர் பினராயி விஜய், சட்டசபை சபாநாயகர் ஏ.என். ஷாம்சீர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- கன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா நடித்துள்ளனர்.
- அரசர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
மோகன்லால் நடித்துள்ள பான் இந்தியன் காவியம் விருஷபா. இதில் மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். மேலும் எக்தா ஆர் கபூர் (Balaji Telefilms), Connekkt Media, AVS Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை Sam CS மேற்கொண்டுள்ளார்.
அரசர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் கிறிஸ்துமஸை ஒட்டி டிசம்பர் 25 அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






