என் மலர்
நீங்கள் தேடியது "Kerala Government"
ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல 2 இரண்டு இளம்பெண்கள் மீண்டும் முயற்சி செய்த சம்பவத்தை அறிந்த இந்து அமைப்பினர், பாரதிய ஜனதா கட்சியினர் சபரிமலையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது திரளான அய்யப்ப பக்தர்கள் குவிவார்கள்.
இது போல ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சபரி மலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும். தற்போது வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படுகிறது. சில நாட்களே சபரிமலை கோவில் நடை திறந்து இருக்கும் என்பதால் தற்போது சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. காலம் காலமாக இந்த ஐதீகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து தற்போது அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சபரிமலை நடை திறக்கும் போது எல்லாம் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்படுகிறது.
தற்போது சபரிமலை கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது சபரிமலைக்கு பிந்து உள்பட 3 பெண்களும் சென்றால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீசார் அது பற்றி அந்த பெண்களுக்கு அறிவுரை கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட அந்த 3 பெண்களும் அங்கிருந்துச் சென்றனர்.
இதற்கிடையில் இந்த தகவல் கிடைத்து சபரிமலையில் இந்து அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சபரிமலையில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இளம்பெண்கள் சபரிமலைக்கு செல்லாமல் இருக்க மலைப்பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது திரளான அய்யப்ப பக்தர்கள் குவிவார்கள்.
இது போல ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சபரி மலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும். தற்போது வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படுகிறது. சில நாட்களே சபரிமலை கோவில் நடை திறந்து இருக்கும் என்பதால் தற்போது சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. காலம் காலமாக இந்த ஐதீகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து தற்போது அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சபரிமலை நடை திறக்கும் போது எல்லாம் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்படுகிறது.
தற்போது சபரிமலை கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் உள்பட 2 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். ஏற்கனவே சபரிமலை சென்று வந்த இளம்பெண்ணான பிந்துவும் சபரிமலைக்கு மீண்டும் செல்வதற்காக போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டார்.
தற்போது சபரிமலைக்கு பிந்து உள்பட 3 பெண்களும் சென்றால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீசார் அது பற்றி அந்த பெண்களுக்கு அறிவுரை கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட அந்த 3 பெண்களும் அங்கிருந்துச் சென்றனர்.
இதற்கிடையில் இந்த தகவல் கிடைத்து சபரிமலையில் இந்து அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சபரிமலையில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இளம்பெண்கள் சபரிமலைக்கு செல்லாமல் இருக்க மலைப்பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சபரிமலையில் 17 இளம்பெண்கள் மட்டுமே தரிசனம் செய்ததாக புதிய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. #Sabarimala #SC
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இது தொடர்பாக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் 51 இளம்பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததாக அறிவித்தனர்.
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழா காலங்களில் 51 இளம்பெண்களும் தரிசனம் செய்ததாகவும் தெரிவித்த கேரள அரசு அவர்களின் பெயர் விவரம் மற்றும் ஆதார் அட்டை விவரங்களையும் பட்டியலில் குறிப்பிட்டிருந்தது.
இந்த பட்டியல் வெளியானதும் அதில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சில ஆண்களின் பெயர்கள் பட்டியலில் இருந்தது தெரிய வந்தது.
பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி கேரள அரசுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது. இதையடுத்து பட்டியலில் உள்ள குளறுபடியை கண்டறிந்து புதிய பட்டியல் தயாரிக்க கேரள அரசு உத்தரவிட்டது.
இதற்காக தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் அடங்கிய புதுக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஏற்கனவே வெளியான 51 பேர் பட்டியலை ஆய்வு செய்தனர். அதில், 34 பேரை விடுவித்தனர். மீதம் 17 பேரே சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்ததாக தெரிவித்தனர். இந்த புதிய பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது. #Sabarimala #SC
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த கேரள மாநில அரசு முயற்சி மேற்கொண்டது. இதை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். பக்தர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தி போலீசார் இளம்பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் 51 இளம்பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததாக அறிவித்தனர்.
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழா காலங்களில் 51 இளம்பெண்களும் தரிசனம் செய்ததாகவும் தெரிவித்த கேரள அரசு அவர்களின் பெயர் விவரம் மற்றும் ஆதார் அட்டை விவரங்களையும் பட்டியலில் குறிப்பிட்டிருந்தது.
இந்த பட்டியல் வெளியானதும் அதில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சில ஆண்களின் பெயர்கள் பட்டியலில் இருந்தது தெரிய வந்தது.
பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி கேரள அரசுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது. இதையடுத்து பட்டியலில் உள்ள குளறுபடியை கண்டறிந்து புதிய பட்டியல் தயாரிக்க கேரள அரசு உத்தரவிட்டது.
இதற்காக தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் அடங்கிய புதுக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஏற்கனவே வெளியான 51 பேர் பட்டியலை ஆய்வு செய்தனர். அதில், 34 பேரை விடுவித்தனர். மீதம் 17 பேரே சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்ததாக தெரிவித்தனர். இந்த புதிய பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது. #Sabarimala #SC
சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது என்று சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. #SC #Devaswomboard
புதுடெல்லி:
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது.
இதுபோல கேரளாவின் வேறு சில கோவில்கள் கொச்சின் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோவில்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதில் அரசின் வெளிப்படை தன்மை பற்றி பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கேள்வி எழுப்பி இருந்தார்.
இது தொடர்பாக சுப்பிரமணிய சாமியும், மோகன்தாஸ் என்பவரும் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
கேரள ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரித்தது. இதில் அரசின் நடவடிக்கையில் தவறு ஏதும் இல்லை என கூறியது. இதையடுத்து சுப்பிரமணிய சாமியும், மோகன்தாசும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மனு தொடர்பாக சில அறிவுறுத்தல்களை கேரள அரசுக்கு வழங்கியது. அதில் தேவசம் போர்டு நிர்வகிக்கும் கோவில்களில் இருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பைசா கூட அரசின் கஜானாவுக்கு போகக்கூடாது. அவை அனைத்தும் தேவசம்போர்டின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். மேலும் தேவசம் போர்டின் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது என்றும் கூறி உள்ளது. #SC #Devaswomboard
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது.
இதுபோல கேரளாவின் வேறு சில கோவில்கள் கொச்சின் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோவில்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதில் அரசின் வெளிப்படை தன்மை பற்றி பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கேள்வி எழுப்பி இருந்தார்.
இது தொடர்பாக சுப்பிரமணிய சாமியும், மோகன்தாஸ் என்பவரும் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
கேரள ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரித்தது. இதில் அரசின் நடவடிக்கையில் தவறு ஏதும் இல்லை என கூறியது. இதையடுத்து சுப்பிரமணிய சாமியும், மோகன்தாசும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மனு தொடர்பாக சில அறிவுறுத்தல்களை கேரள அரசுக்கு வழங்கியது. அதில் தேவசம் போர்டு நிர்வகிக்கும் கோவில்களில் இருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பைசா கூட அரசின் கஜானாவுக்கு போகக்கூடாது. அவை அனைத்தும் தேவசம்போர்டின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். மேலும் தேவசம் போர்டின் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது என்றும் கூறி உள்ளது. #SC #Devaswomboard
சபரிமலை தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரிய கேரள அரசின் மனு மீது 8-ந்தேதி விசாரணை நடைபெறுகிறது. #Sabarimala
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதனைக் கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கேரள ஐகோர்ட்டிலும் இது தொடர்பாக பலர் வழக்கு தொடர்ந்தனர்.
கேரள ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கேரள அரசு மனு செய்தது.
இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு வருகிற 8-ந்தேதி விசாரணை நடத்த உள்ளது. அதன் பிறகே ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்படுமா? என்பது தெரிய வரும்.
சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீது 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அமர்வில் இடம் பெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா விடுமுறையில் இருக்கிறார்.
அவர், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய பின்னரே இன்று நடக்க இருந்த விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார். கேரள அரசின் மனு மீதான விசாரணை 8-ந்தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்கள் தொடர்பான விசாரணை வருகிற 8-ந்தேதிக்கு முன்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Sabarimala
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதனைக் கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கேரள ஐகோர்ட்டிலும் இது தொடர்பாக பலர் வழக்கு தொடர்ந்தனர்.
கேரள ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கேரள அரசு மனு செய்தது.
இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு வருகிற 8-ந்தேதி விசாரணை நடத்த உள்ளது. அதன் பிறகே ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்படுமா? என்பது தெரிய வரும்.
சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீது 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அமர்வில் இடம் பெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா விடுமுறையில் இருக்கிறார்.
அவர், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய பின்னரே இன்று நடக்க இருந்த விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார். கேரள அரசின் மனு மீதான விசாரணை 8-ந்தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்கள் தொடர்பான விசாரணை வருகிற 8-ந்தேதிக்கு முன்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Sabarimala
சபரிமலை கோவிலில் தரிசனம் செய்த இளம்பெண்கள் குறித்து கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் முரண்பாடு இருப்பதாக ஐயப்ப பக்தர்கள் தெரிவித்தனர். #Sabarimalatemple #SC
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்களை கட்டுப்படுத்தி சபரிமலைக்கு சென்ற பெண்களை போலீசார் சன்னிதானம் அழைத்துச் சென்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த இளம்பெண்கள் குறித்த தகவலை கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில், சபரிமலையில் கோவில் நடைதிறந்த பின்பு 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்படி கேரள அரசு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் கோவிலில் தரிசனம் செய்த 51 பெண்களின் பெயர் பட்டியலையும் தாக்கல் செய்தனர்.
கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் முரண்பாடு இருப்பதாக ஐயப்ப பக்தர்கள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களும் இதுபற்றி ரகசிய ஆய்வு செய்தனர். மேலும் பட்டியலில் இடம் பெற்றவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் வயது விவரங்களை கேட்டனர்.
அதில், பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த வயதும், அவர்களின் உண்மையான வயதிலும் வித்தியாசம் இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக சென்னையைச் சேர்ந்த ஷீலா என்ற பெண் சபரிமலையில் தரிசனம் செய்ததாகவும், அவருக்கு 48 வயது என்றும் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி கேரள ஊடகங்கள் சென்னையில் இருந்த ஷீலாவை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர், சபரிமலை செல்ல ஆன்லைனில் பதிவு செய்ததாக கூறினார். அப்போது இன்டர்நெட் மையத்தில் விவரங்களை பதிவு செய்தபோது, வயதை 52 என்பதற்கு பதில் 48 என்று குறிப்பிட்டு விட்டனர்.
இதனை நான், உடனே கண்டுபிடித்து இன்டர்நெட் ஊழியர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் கோவிலுக்கு செல்லும்போது ஆதார் அட்டையை காட்டுங்கள் என்று கூறிவிட்டனர். நான், கோவிலுக்கு சென்றபோது அங்கிருந்த போலீசாரிடம் வயது விவரம் குறித்து தெரிவித்தேன். மேலும் உண்மையான வயதை குறிப்பிட ஆதார் அட்டையையும் காண்பித்தேன். போலீசார் ஆன்லைன் விவரங்களை மட்டுமே பதிவு செய்து கொண்டனர் என்றார்.

ஆனால் பரஞ்ஜோதி பெண் அல்ல, ஆண் என்பது தெரிய வந்துள்ளது. இதுபோல ஆந்திராவைச் சேர்ந்த வசந்தி உள்பட பலரும் தங்களது வயது 50-க்கு மேல் என்று கூறி உள்ளனர்.
கேரள அரசு தாக்கல் செய்த அறிக்கையில் 10-க்கும் மேற்பட்டோரின் வயது குறித்த விவரங்களில் தவறு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி கேரள அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-
சபரிமலைக்கு சென்ற இளம்பெண்கள் யாரும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள தயங்குகிறார்கள். பாதுகாப்பு கருதி குடும்ப உறுப்பினர்களும், மறுப்பு தெரிவித்திருக்கலாம். சபரிமலையில் நடந்து வரும் போராட்டம் காரணமாக அவர்கள் இவ்வாறு கூறி இருக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பா.ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தாக்கல் செய்த அறிக்கை போலியானது. தரிசனத்திற்கு ஆன்லைனில் பதிவு செய்த கம்யூனிஸ்டு பெண் ஆர்வலர்களின் பெயர்களை பட்டியலில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் சபரிமலை வழக்கின் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணைக்கு பாதிப்பு இருக்காது என்றார். #Sabarimalatemple #SC
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்களை கட்டுப்படுத்தி சபரிமலைக்கு சென்ற பெண்களை போலீசார் சன்னிதானம் அழைத்துச் சென்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த இளம்பெண்கள் குறித்த தகவலை கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில், சபரிமலையில் கோவில் நடைதிறந்த பின்பு 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்படி கேரள அரசு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் கோவிலில் தரிசனம் செய்த 51 பெண்களின் பெயர் பட்டியலையும் தாக்கல் செய்தனர்.
கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் முரண்பாடு இருப்பதாக ஐயப்ப பக்தர்கள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களும் இதுபற்றி ரகசிய ஆய்வு செய்தனர். மேலும் பட்டியலில் இடம் பெற்றவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் வயது விவரங்களை கேட்டனர்.
அதில், பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த வயதும், அவர்களின் உண்மையான வயதிலும் வித்தியாசம் இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக சென்னையைச் சேர்ந்த ஷீலா என்ற பெண் சபரிமலையில் தரிசனம் செய்ததாகவும், அவருக்கு 48 வயது என்றும் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி கேரள ஊடகங்கள் சென்னையில் இருந்த ஷீலாவை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர், சபரிமலை செல்ல ஆன்லைனில் பதிவு செய்ததாக கூறினார். அப்போது இன்டர்நெட் மையத்தில் விவரங்களை பதிவு செய்தபோது, வயதை 52 என்பதற்கு பதில் 48 என்று குறிப்பிட்டு விட்டனர்.
இதனை நான், உடனே கண்டுபிடித்து இன்டர்நெட் ஊழியர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் கோவிலுக்கு செல்லும்போது ஆதார் அட்டையை காட்டுங்கள் என்று கூறிவிட்டனர். நான், கோவிலுக்கு சென்றபோது அங்கிருந்த போலீசாரிடம் வயது விவரம் குறித்து தெரிவித்தேன். மேலும் உண்மையான வயதை குறிப்பிட ஆதார் அட்டையையும் காண்பித்தேன். போலீசார் ஆன்லைன் விவரங்களை மட்டுமே பதிவு செய்து கொண்டனர் என்றார்.
இதுபோல சென்னையைச் சேர்ந்த பரஞ்ஜோதி என்ற 47 வயது பெண்ணும் சபரிமலையில் தரிசனம் செய்ததாக கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபரிமலையில் தரிசனத்திற்கு சென்ற பரஞ்ஜோதியின் பெயர் ஆண் என்றும், பெண் என்றும் டிக்கெட்டில் பதிவாகி இருப்பதை காணலாம்.
ஆனால் பரஞ்ஜோதி பெண் அல்ல, ஆண் என்பது தெரிய வந்துள்ளது. இதுபோல ஆந்திராவைச் சேர்ந்த வசந்தி உள்பட பலரும் தங்களது வயது 50-க்கு மேல் என்று கூறி உள்ளனர்.
கேரள அரசு தாக்கல் செய்த அறிக்கையில் 10-க்கும் மேற்பட்டோரின் வயது குறித்த விவரங்களில் தவறு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி கேரள அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-
சபரிமலைக்கு சென்ற இளம்பெண்கள் யாரும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள தயங்குகிறார்கள். பாதுகாப்பு கருதி குடும்ப உறுப்பினர்களும், மறுப்பு தெரிவித்திருக்கலாம். சபரிமலையில் நடந்து வரும் போராட்டம் காரணமாக அவர்கள் இவ்வாறு கூறி இருக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பா.ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தாக்கல் செய்த அறிக்கை போலியானது. தரிசனத்திற்கு ஆன்லைனில் பதிவு செய்த கம்யூனிஸ்டு பெண் ஆர்வலர்களின் பெயர்களை பட்டியலில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் சபரிமலை வழக்கின் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணைக்கு பாதிப்பு இருக்காது என்றார். #Sabarimalatemple #SC
சபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Sabarimalatemple #SC
திருவனந்தபுரம்:
சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு சார்பில் ஆஜரான வக்கீல், சபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக கூறி, ஒரு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார். கேரள அரசு இப்போது தான் முதல் முறையாக 10-50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் 51 பேர் சபரிமலை கோவிலுக்கு சென்றதாக தெரிவித்துள்ளது. இது கேரளாவில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ், சபரிமலை கர்மா சமிதி, பந்தளம் அரண்மனை குடும்பம் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பா.ஜனதா மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, “இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் இது. சுப்ரீம் கோர்ட்டில் பொய் தகவலை கூறியதுடன், மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்கள்” என்றார்.
காங்கிரஸ் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறும்போது, “தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது மாநிலத்துக்கு ஏற்பட்ட அவமானம். இதற்கு முதல்-மந்திரியே பொறுப்பேற்க வேண்டும்” என்றார். #Sabarimalatemple #SC
சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு சார்பில் ஆஜரான வக்கீல், சபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக கூறி, ஒரு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார். கேரள அரசு இப்போது தான் முதல் முறையாக 10-50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் 51 பேர் சபரிமலை கோவிலுக்கு சென்றதாக தெரிவித்துள்ளது. இது கேரளாவில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறும்போது, “இதுவரை 7,564 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் வரிசைப்படி 51 பெண்கள் கோவிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் சன்னிதானத்தை அடைந்தார்களா? வழிபட்டார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது” என்றார்.

சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ், சபரிமலை கர்மா சமிதி, பந்தளம் அரண்மனை குடும்பம் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பா.ஜனதா மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, “இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் இது. சுப்ரீம் கோர்ட்டில் பொய் தகவலை கூறியதுடன், மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்கள்” என்றார்.
காங்கிரஸ் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறும்போது, “தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது மாநிலத்துக்கு ஏற்பட்ட அவமானம். இதற்கு முதல்-மந்திரியே பொறுப்பேற்க வேண்டும்” என்றார். #Sabarimalatemple #SC
சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் போக்கு வரலாற்றில் மிகவும் மோசமானது என்று பிரதமர் மோடி கூறினார். #PMModi #Sabarimala #KeralaGovernment
கொல்லம்:
கேரளாவில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கொல்லம் நகரில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “பல்வேறு காரணங்களுக்காக பல நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த போக்கு மாற வேண்டும் என பா.ஜனதா விரும்பியது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வெறும் 56 சதவீத பின்தங்கியப் பகுதிகளுக்கு மட்டுமே போக்குவரத்து வசதி இருந்தது. ஆனால் தற்போது அதனை 90 சதவீதமாக அதிகரித்துள்ளோம். இது விரைவில் 100 சதவீதம் எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கும் என்பதை யாராவது அறிவார்களா? தற்போது மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் இருந்து வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. அதற்கான தரவரிசையில் 142-ஆவது இடத்தில் இருந்து 77-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
இந்திய கலாச்சாரத்தை கம்யூனிஸ்டுகள் எப்போதும் மதிக்க மாட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால், இந்தளவு மிகவும் மோசமாக இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் போக்கு வரலாற்றில் மிகவும் மோசமானதாக இடம்பெறப்போகிறது. இவர்களைப் போன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் மோசமானதுதான்.
முத்தலாக் விவகாரத்திலும் காங்கிரசும், இடதுசாரியும் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினோம். இதன்மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் இந்த திட்டத்தில் பலனடைய முடியும்.
இடதுசாரியும், காங்கிரசும் பெயரளவில் தான் வெவ்வேறு, ஆனால் கேரள இளைஞர் சக்தியை வீணடிப்பதில் ஒரே மாதிரியானது தான். மேலும் அவர்கள் ஏழைகளையும் புறக்கணித்து வருகின்றனர். கேரள மக்களை ஏமாற்றுவதிலும் அவர்கள் இருவரும் ஒன்றுதான். ஏனென்றால் இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நாணயத்தின் இரு பகுதிகள். பெயரளவில் வேறுபட்டிருந்தாலும் ஊழல், சாதி மற்றும் மதப் பிரிவினைகளில், அரசியல் வன்முறைகளில் ஒன்றுதான்” என்று கூறினார்.
கேரளாவில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கொல்லம் நகரில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “பல்வேறு காரணங்களுக்காக பல நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த போக்கு மாற வேண்டும் என பா.ஜனதா விரும்பியது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வெறும் 56 சதவீத பின்தங்கியப் பகுதிகளுக்கு மட்டுமே போக்குவரத்து வசதி இருந்தது. ஆனால் தற்போது அதனை 90 சதவீதமாக அதிகரித்துள்ளோம். இது விரைவில் 100 சதவீதம் எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கும் என்பதை யாராவது அறிவார்களா? தற்போது மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் இருந்து வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. அதற்கான தரவரிசையில் 142-ஆவது இடத்தில் இருந்து 77-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
இந்திய கலாச்சாரத்தை கம்யூனிஸ்டுகள் எப்போதும் மதிக்க மாட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால், இந்தளவு மிகவும் மோசமாக இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் போக்கு வரலாற்றில் மிகவும் மோசமானதாக இடம்பெறப்போகிறது. இவர்களைப் போன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் மோசமானதுதான்.
முத்தலாக் விவகாரத்திலும் காங்கிரசும், இடதுசாரியும் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினோம். இதன்மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் இந்த திட்டத்தில் பலனடைய முடியும்.
இடதுசாரியும், காங்கிரசும் பெயரளவில் தான் வெவ்வேறு, ஆனால் கேரள இளைஞர் சக்தியை வீணடிப்பதில் ஒரே மாதிரியானது தான். மேலும் அவர்கள் ஏழைகளையும் புறக்கணித்து வருகின்றனர். கேரள மக்களை ஏமாற்றுவதிலும் அவர்கள் இருவரும் ஒன்றுதான். ஏனென்றால் இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நாணயத்தின் இரு பகுதிகள். பெயரளவில் வேறுபட்டிருந்தாலும் ஊழல், சாதி மற்றும் மதப் பிரிவினைகளில், அரசியல் வன்முறைகளில் ஒன்றுதான்” என்று கூறினார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்கள் மட்டும் வழிபட 2 நாள் ஒதுக்கலாம் என்று ஐகோர்ட்டில் கேரள அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. #SabarimalaTemple #KeralaGovernment
கொச்சி:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, 4 இளம்பெண்கள் கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். ரேஷ்மா நிஷாந்த், ஷனிலா சஜீஷ், தான்யா, எம்.சூர்யா என்ற அந்த 4 பேரும் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

அவர்கள் தங்கள் மனுவில், “நாங்கள் தீவிர ஐயப்ப பக்தர்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து நாங்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வருகிறோம். ஆனால், அரசியல் கட்சியினரின் எதிர்ப்பால், நாங்கள் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. எனவே, அனைத்து வயது பெண்களும் வழிபட வசதியாக பிரத்யேகமாக 2 அல்லது 3 நாள் ஒதுக்கலாம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.
இந்த மனு, தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அனைத்து வயது பெண்கள் மட்டும் வழிபட 2 நாள் ஒதுக்கலாம்” என்று கேரள அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. #SabarimalaTemple #KeralaGovernment
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, 4 இளம்பெண்கள் கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். ரேஷ்மா நிஷாந்த், ஷனிலா சஜீஷ், தான்யா, எம்.சூர்யா என்ற அந்த 4 பேரும் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

இந்த மனு, தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அனைத்து வயது பெண்கள் மட்டும் வழிபட 2 நாள் ஒதுக்கலாம்” என்று கேரள அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. #SabarimalaTemple #KeralaGovernment
சபரிமலை ஐயப்பன் கோவிலை அழிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். #Sabarimala #PonRadhakrishnan
கோவை:
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நான் சிறுவயது முதலே சபரிமலைக்கு சென்று வருகிறேன். முன்எப்போதும் இல்லாத அளவுக்கு சபரிமலையின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. பம்பைக்கு பஸ்கள் அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் 3 வாகனங்களில் சென்றிருந்தோம். என்னுடன் வந்த 2 வாகனங்களை நிலக்கல் காவல் கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தினார்.
இதுகுறித்து கேட்டபோது நிலச்சரிவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. இதற்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா? என்று அதிகாரத்தொனியில் கேள்வில் எழுப்பினார். இதை எதிர்த்து கேள்வி எழுப்பிய என்னுடன் வந்த கேரள பா.ஜ.க. நிர்வாகியை மிரட்டும் வகையில் அவரது உடல் மொழி அமைந்திருந்தது. இதுதொடர்பாக வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம்.
சபரிமலை வெறிச்சோடி போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. சாலைகள் எங்கும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கேட்டபோது சமூகவிரோதிகளை தடுக்கவே, இரும்புத் தடுப்புகள் போடப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் போலீசார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். கடுமையான விதிமுறைகளால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
இதற்கு பத்தினம்திட்டா எஸ்.பி. ‘மாஸ்டர் பிளான்’ போட்டுள்ளார். கோவிலை அழிக்கக் கூடிய வகையில் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.
கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டுமே கேரள அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. கோவில் ஐயப்பனுக்கு சொந்தமானது. ஐயப்பன் மக்களுக்கு சொந்தமானவர். எனவே சபரிமலை விசயத்தில் கேரள அரசு விதித்துள்ள கெடுபிடிகளை தளர்த்த வேண்டும்.
சபரிமலையில் தங்கி இருக்க நேரம் கிடையாது என்ற வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மத்திய மந்திரியையே கேரள அரசு இப்படி நடத்துகிறது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களது நிலைமை பரிதாபம் தான்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். தமிழக அரசு புயலுக்கு முன்னால் எடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. தற்போது சாலையில் உள்ள தடைகளை அகற்றினால் மட்டுமே கிராமத்துக்குள் செல்லும் நிலை உள்ளது. சிலர் கஜா புயல் விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார்கள்.
கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மாநில அரசு அறிக்கை அளித்தால் அதை தேசியப் பேரிடராக அறிவிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், பா.ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன், நாகராஜன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர். #Sabarimala #PonRadhakrishnan
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நான் சிறுவயது முதலே சபரிமலைக்கு சென்று வருகிறேன். முன்எப்போதும் இல்லாத அளவுக்கு சபரிமலையின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. பம்பைக்கு பஸ்கள் அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் 3 வாகனங்களில் சென்றிருந்தோம். என்னுடன் வந்த 2 வாகனங்களை நிலக்கல் காவல் கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தினார்.
இதுகுறித்து கேட்டபோது நிலச்சரிவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. இதற்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா? என்று அதிகாரத்தொனியில் கேள்வில் எழுப்பினார். இதை எதிர்த்து கேள்வி எழுப்பிய என்னுடன் வந்த கேரள பா.ஜ.க. நிர்வாகியை மிரட்டும் வகையில் அவரது உடல் மொழி அமைந்திருந்தது. இதுதொடர்பாக வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம்.
சபரிமலை வெறிச்சோடி போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. சாலைகள் எங்கும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கேட்டபோது சமூகவிரோதிகளை தடுக்கவே, இரும்புத் தடுப்புகள் போடப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் போலீசார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். கடுமையான விதிமுறைகளால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
இதற்கு பத்தினம்திட்டா எஸ்.பி. ‘மாஸ்டர் பிளான்’ போட்டுள்ளார். கோவிலை அழிக்கக் கூடிய வகையில் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.
கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டுமே கேரள அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. கோவில் ஐயப்பனுக்கு சொந்தமானது. ஐயப்பன் மக்களுக்கு சொந்தமானவர். எனவே சபரிமலை விசயத்தில் கேரள அரசு விதித்துள்ள கெடுபிடிகளை தளர்த்த வேண்டும்.
சபரிமலையில் தங்கி இருக்க நேரம் கிடையாது என்ற வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மத்திய மந்திரியையே கேரள அரசு இப்படி நடத்துகிறது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களது நிலைமை பரிதாபம் தான்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். தமிழக அரசு புயலுக்கு முன்னால் எடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. தற்போது சாலையில் உள்ள தடைகளை அகற்றினால் மட்டுமே கிராமத்துக்குள் செல்லும் நிலை உள்ளது. சிலர் கஜா புயல் விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார்கள்.
கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மாநில அரசு அறிக்கை அளித்தால் அதை தேசியப் பேரிடராக அறிவிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், பா.ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன், நாகராஜன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர். #Sabarimala #PonRadhakrishnan
வரலாற்று ரீதியாக சபரிமலை ஐயப்பன் கோவில் மதச்சார்ப்பற்றது என்றும், அனைத்து சாதி, மதத்தினரும் செல்லலாம் என்றும் உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. #SabarimalaForAll #Sabarimala
திருவனந்தபுரம்:
பா.ஜனதாவை சேர்ந்த பிரமுகர் டி.ஜி.மோகன்தாஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்களையும், சிலையை வழிபடாதவர்களையும் அனுமதிப்பதை தடுக்கவேண்டும் என்று கோரி இருந்தார்.
மேலும் இது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கும், 1965-ம் ஆண்டின் கேரள அரசின் பொது இடங்கள் வழிபாட்டு நுழைவு அங்கீகார சட்டத்துக்கும் எதிரானது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான கேரள அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி இருப்பதாவது:-
சபரிமலை அய்யப்பன் கோவில் ஆதிகாலத்தில் பழங்குடியினர் வழிபடும் இடமாக இருந்தது என்று வெளிப்படையாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சரணம் அய்யப்பா என்று கோஷத்தில் உள்ள சரணம், புத்த மதத்தில் இருந்து வந்தது என்ற சிந்தனையும் உள்ளது.

வரலாற்று ரீதியாக சபரிமலை கோவில் மதச்சார்ப்பற்றது. எனவே அங்கு சாதி, மதத்தை காரணம் காட்டி யாருக்கும் அனுமதி மறுக்கக்கூடாது. அங்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம். அய்யப்பனின் நண்பராக கூறப்படும் வாவருக்கு, சபரிமலை சன்னிதானத்தில் தனி இடம் உள்ளது. வாவரை வழிபட இங்கு ஏராளமான முஸ்லிம்களும் வருகிறார்கள். அவர்கள் அய்யப்பனையும் வழிபடுகின்றனர்.
சபரிமலைக்கு வரும் வழியில் உள்ள எருமேலியில் வாவர் பள்ளி என்னும் ஒரு மசூதியும் உள்ளது. இங்கு அனைத்து அய்யப்ப பக்தர்களும் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். மேலும் பேட்டை துள்ளல் என்னும் நிகழ்ச்சியும் இங்கிருந்தே தொடங்குகிறது. பிறப்பால் கிறிஸ்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல்தான் அய்யப்பனின் தாலாட்டு பாடலாகவும் உள்ளது. அய்யப்ப பக்தரான அவரும் சபரிமலைக்கு அவ்வப்போது சென்று வருகிறார்.

இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். எனவே மனுதாரரின் வேண்டுகோளை நிராகரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #SabarimalaForAll #Sabarimala
சபரிமலை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டமிட்டு உள்ளது. #SabarimalaTemple #KeralaGovernment
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு 2 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனினும் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதில் மாநில அரசு தீவிரமாக உள்ளது.
அதேநேரம் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மறு ஆய்வு மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17-ந் தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது கோவிலுக்குள் நுழைய முயன்ற 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதேபோல் கடந்த 5-ந் தேதி மாலை முதல் மறுநாள் மாலை வரை கோவில் நடை திறக்கப்பட்டபோதும் போராட்டங்கள் வெடித்தன.
இந்த நிலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகியவற்றுக்காக அய்யப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 17-ந் தேதி திறக்கப்படுகிறது. 2 மாதங்கள் வரை நடை திறக்கப்பட்டு இருக்கும். எனவே, மீண்டும் இந்த விவகாரம் விசுவரூபம் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டமிட்டு இருக்கிறது.
இதுபற்றி தேவசம் மந்திரி சுரேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “சபரிமலை தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றி பேசுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது பற்றி யோசித்து வருகிறோம். எனினும் இது தொடர்பாக இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் வெளியாகும் முடிவின் அடிப்படையில் இதுகுறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு 2 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனினும் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதில் மாநில அரசு தீவிரமாக உள்ளது.
அதேநேரம் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மறு ஆய்வு மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17-ந் தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது கோவிலுக்குள் நுழைய முயன்ற 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதேபோல் கடந்த 5-ந் தேதி மாலை முதல் மறுநாள் மாலை வரை கோவில் நடை திறக்கப்பட்டபோதும் போராட்டங்கள் வெடித்தன.
இந்த நிலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகியவற்றுக்காக அய்யப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 17-ந் தேதி திறக்கப்படுகிறது. 2 மாதங்கள் வரை நடை திறக்கப்பட்டு இருக்கும். எனவே, மீண்டும் இந்த விவகாரம் விசுவரூபம் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டமிட்டு இருக்கிறது.
இதுபற்றி தேவசம் மந்திரி சுரேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “சபரிமலை தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றி பேசுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது பற்றி யோசித்து வருகிறோம். எனினும் இது தொடர்பாக இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் வெளியாகும் முடிவின் அடிப்படையில் இதுகுறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.