என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் திலீப்"

    • நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி திலீப்பை விடுவித்தது.
    • குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற ஆறுபேருக்கு தண்டனையை உயர்த்தி வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

    பிரபல நடிகை வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் திலீப் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற ஆறுபேருக்கு தண்டனையை உயர்த்தி வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், கடந்த டிசம்பர் 8 அன்று எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி திலீப்பை (எட்டாவது குற்றவாளி) விடுவித்தது. இந்தத் தீர்ப்பு சட்டவிரோதமானது என்றும், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் கூறி அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    திலீப்புடன் சேர்த்து விடுவிக்கப்பட்ட சார்லி தாமஸ், சனில் குமார் மற்றும் சரத் ஆகியோரின் விடுதலையையும் அரசு எதிர்த்துள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேருக்கும் தண்டனையை உயர்த்தி (ஆயுள் தண்டனை வரை) வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பிரபல நடிகர் திலீப்பும் ஒருவர் ஆவார்.
    • 84 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், நடிகர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகை கடந்த 2017-ம் ஆண்டு சினிமா சூட்டிங் முடித்து விட்டு கொச்சியில் இருந்து தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியது.

    மேலும் அந்த காட்சிகளை அந்த கும்பல் வீடியோவும் எடுத்திருக்கிறது. கேரளாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பிரபல நடிகர் திலீப்பும் ஒருவர் ஆவார்.

    நடிகை மீதான பாலியல் தாக்குதல் வழக்கின் முதல் குற்றவாளியாக சுனில்குமார் என்கிற பல்சர் சுனி சேர்க்கப்பட்டிருக்கிறார். வழக்கின் 8-வது குற்றவாளியாக நடிகர் திலீப் சேர்க்கப்பட்டார். அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதியப்பட்டது. 84 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், நடிகர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    நடிகை பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கின் இறுதிக்கக்கட்ட விசாரணை தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியும், நடிகர் திலீப்புக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தவருமான பிரபல இயக்குனர் பால சந்திரகுமார் திடீரென மரணம் அடைந்தார்.

    சிறுநீரகம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், செங்கனூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் தான் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணம் அடைந்திருக்கிறார்.


    நடிகர் திலீப்பும், இயக்குனர் பால சந்திரகுமாரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். அப்படி இருந்த நிலையில் தான் நடிகை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிரான கருத்துக்களை இயக்குனர் பாலசந்திரகுமார் தெரிவித்தார்.

    நடிகை பாலியல் தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனியை நடிகர் திலீப் வீட்டில் பார்த்ததாகவும், நடிகை தாக்குதலுக்கு உள்ளான வீடியோ காட்சி திலீப்பிடம் இருப்பதாகவும், விசாரணை அதிகாரிகளுக்கு அவர் ஆபத்து ஏற்படுத்த முயன்றதாகவும் பாலசந்திரகுமார் வாக்குமூலம் அளித்தார்.

    அவரது இந்த வாக்கு மூலம் நடிகை பாலியல் தாக்குதல் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகர் திலீப் மீது கொலைக்கு சதி செய்ததாகவும், சாட்சியங்களை அழித்ததாகவும் வழக்கு பதியப்பட்டது.

    இயக்குனர் பாலசந்திர குமாரின் உடல் செங்கனூர் மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    ×