என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death"

    • "Man with the golden arm" என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
    • தனது வாழ்நாள் இறுதி வரை 10 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்தார்.

    நாம் ஆண்டின் இறுதியை நெருங்கியுள்ள நிலையில் இந்தாண்டு மண்ணை விட்டு மறைந்த ஆனால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். அதன்படி உலகெங்கிலும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களின் தொகுப்பை காலவரிசைப்படி இங்கு பார்ப்போம். 

    ரத்த தானம் மூலம் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன்

    தனது அரிய வகை ரத்த பிளாஸ்மா தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88), கடந்த பிப்ரவரி 17, 2025 அன்று காலமானார்.

    "Man with the golden arm" என்று அன்போடு அழைக்கப்படும் இவர், தனது 18 வயது முதல் 81 வயது வரை சுமார் 1,173 முறை ரத்த தானம் செய்துள்ளார்.

    இவரது ரத்தத்தில் இருந்த 'Anti-D' என்ற அரிய வகை ஆன்டிபாடி, கர்ப்ப காலத்தில் தாய்மார்களிடமிருந்து குழந்தைகளுக்கு ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நோயைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றியது.

    2022 வரை உலகிலேயே அதிக பிளாஸ்மா தானம் செய்தவர் என்ற சாதனையைப் படைத்த ஹாரிசன், உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் பெற்றோரின் பார்வையில் ஒரு ஹீரோ ஆவார்.

    ஆகா கான் 

    இஸ்லாமின் ஷியா இஸ்மாயிலி பிரிவின் தலைவரான ஆகா கானும் (IV) இந்த ஆண்டு காலமானார். சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல நற்காரியங்களை செய்த அவர் பிப்ரவரி 4 தனது 88வது வயதில் காலமானார்.  

     

    பழம்பெரும் பேட்மேன்

    ஹாலிவுட்டின் பிரபல நடிகரும், 'பேட்மேன்' கதாபாத்திரத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றவருமான வால் கில்மர் (65), நிமோனியா பாதிப்பு காரணமாக ஏப்ரல் 1, 2025 அன்று காலமானார்.

    1984-ல் 'டாப் சீக்ரெட்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், 'பேட்மேன் ஃபாரெவர்' மற்றும் டாம் குரூஸுடன் 'டாப் கன்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.

    2014-ல் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருந்த நிலையில், தற்போது நிமோனியா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற விஞ்ஞானியுமான கஸ்தூரிரங்கன் (84), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஏப்ரல் 25, 2025 அன்று பெங்களூருவில் காலமானார்.

    1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராகப் பணியாற்றிய இவர், இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றியவர்.

    ராஜ்யசபா உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய மூன்று உயரிய விருதுகளையும் வழங்கி கௌரவித்தது.

    இந்தியாவின் Tiger Man.. வனவிலங்கு பாதுகாவலர் வால்மிக் தாப்பர்

    "இந்தியாவின் புலி மனிதன்" (Tiger Man of India) என்று போற்றப்படும் பிரபல வனவிலங்கு ஆர்வலர் வால்மிக் தாப்பர் (73), புற்றுநோய் பாதிப்பு காரணமாக மே 31, 2025 அன்று டெல்லியில் காலமானார்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் புலிகள் பாதுகாப்புக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த இவர், 1988-ல் ரந்தம்போர் அறக்கட்டளையை நிறுவி புலி வேட்டையைத் தடுக்கவும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும் போராடினார்.

    வனவிலங்குகள் குறித்து 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், தேசிய வனவிலங்கு வாரியம் உள்ளிட்ட பல அரசு குழுக்களிலும் பணியாற்றியுள்ளார்.

    10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை.. மனிதநேய மருத்துவர் ரத்தினம்

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வெறும் 10 ரூபாய் கட்டணத்தில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ரத்தினம் (96), வயது முதிர்வு காரணமாக ஜூன் 7, 2025 அன்று காலமானார்.

    1959-ல் தனது மருத்துவப் பணியைத் தொடங்கிய இவர், ஆரம்ப காலத்தில் 2 ரூபாய்க்கும், பின்னர் தனது வாழ்நாள் இறுதி வரை 10 ரூபாய்க்கும் சிகிச்சை அளித்து வந்ததால், மக்கள் மத்தியில் "பத்து ரூபாய் மருத்துவர்" என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

    கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா

    லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான டியோகோ ஜோட்டா (28), ஸ்பெயினில் கடந்த ஜூலை 3 நடந்த கார் விபத்தில் தனது சகோதரருடன் உயிரிழந்தது கால்பந்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போர்ச்சுகல் அணியின் பல வெற்றிகளில் முக்கியப் பங்காற்றிய ஜோட்டாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது ஆகும். ரொனால்டோ அவரது மறைவுக்கு உருக்கான இரங்கலை தெரிவித்திருந்தார்.

    உலகின் மிக வயதான மாரத்தான் வீரர் பௌஜா சிங்

    உலகின் மிக வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரான பௌஜா சிங் (114), கடந்த ஜூலை 14, 2025 அன்று பஞ்சாபில் நடந்த சாலை விபத்தில் காலமானார்.

    தனது சொந்த கிராமத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர், ஜலந்தரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    "தி டர்பண்ட் டோர்னாடோ" (The Turbaned Tornado) என்று அழைக்கப்படும் இவர், தனது 89-வது வயதில் மாரத்தான் ஓடத் தொடங்கி உலக அளவில் பல சாதனைகளைப் படைத்தவர் ஆவார்.

    மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன்

    உலகின் புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரரான ஹல்க் ஹோகன் (71), மாரடைப்பு காரணமாக ஜூலை 24, 2025 அன்று அமெரிக்காவின் புளோரிடாவில் காலமானார்.

    90-களில் மல்யுத்தப் போட்டிகளை உலக அளவில் பிரபலமாக்கியதில் இவருக்கு மிகப்பெரிய பங்குண்டு. தனது கம்பீரமான தோற்றம், தனித்துவமான ஸ்டைல் மற்றும் தேசபக்தி மிக்க விளம்பரங்கள் மூலம் '90ஸ் கிட்ஸ்'களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

    உலகெங்கும் மக்களின் அன்பைப் பெற்ற நீதிபதி ஃபிராங் கேப்ரியோ

    அமெரிக்காவின் பிரபல நீதிபதி ஃபிராங் கேப்ரியோ (88), கணையப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 21, 2025 அன்று காலமானார்.

    "Caught in Providence" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ்பெற்ற இவர், போக்குவரத்து விதிகளை மீறியவர்களை விசாரிக்கும்போது காட்டிய அதீத மனிதாபிமானத்தால் உலகின் மிகவும் கனிவான நீதிபதி என்று போற்றப்பட்டார்.

    தண்டனை வழங்குவது மட்டுமே நீதியல்ல, குற்றம் செய்தவர்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு கருணை காட்டுவதும் நீதியே என்பதை உலகுக்கு உணர்த்தியவர் இவர்.

     

    ஆடை வடிவமைப்பாளர் ஜார்ஜியோ அர்மானி

    ரெடி-டு-வேர் ஃபேஷனில் புரட்சியை ஏற்படுத்திய புகழ்பெற்ற இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் ஜியோர்ஜியோ அர்மானி, இந்த ஆண்டு செப்டம்பரில் தனது 91 வயதில் காலமானார்.

    கொரோனா போராளி பீலா வெங்கடேசன்

    தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன் (55), ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் கடந்த செப்டம்பர் 25 அன்று காலமானார்.


    ஜேன் குடால்

    உலகப் புகழ்பெற்ற சிம்பன்சி ஆய்வாளர் ஜேன் குடால் இந்த ஆண்டு அக்டோபர் 1, தனது 91வது வயதில் காலமானார். தனது 60 ஆண்டுகால ஆய்வின் மூலம், சிம்பன்சிகளின் புத்திசாலித்தனத்தை அவர் நிரூபித்தார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் தனது இறுதி மூச்சை விட்டுள்ளார்.

     இந்திய விளம்பரங்களின் ஜாம்பவான் பியூஷ் பாண்டே

    இந்திய விளம்பரத் துறையின் ஜாம்பவான் என்று போற்றப்படும் பியூஷ் பாண்டே (70), உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 24, 2025 அன்று காலமானார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 'ஓகில்வி' (Ogilvy) நிறுவனத்தில் பணியாற்றிய இவர், ஃபெவிகால், காட்பரி, ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற 90-களின் மறக்க முடியாத பல ஐகானிக் விளம்பரங்களை உருவாக்கியவர். விளம்பர உலகில் இந்தியத் தன்மையையும், நகைச்சுவையையும் புகுத்திய இவரது சிறந்த பணிக்காக 2016-ல் 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

    தாய்லாந்தின் ராஜமாதா

    தாய்லாந்து நாட்டின் ராஜமாதா சிரிகிட், உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 24, 2025 அன்று தனது 93-வது வயதில் காலமானார். தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான இவர், தாய்லாந்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் மனைவியாவார்.

    ரத்தத் தொற்று காரணமாகப் பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவரது உயிர் பிரிந்தது. தாய்லாந்தில் இவரது பிறந்தநாள் 'அன்னையர் தினமாக' கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்துஜா சாம்ராஜ்யத்தின் தலைவர் கோபிசந்த் இந்துஜா

    இந்துஜா குழுமத்தின் தலைவரான கோபிசந்த் பி. இந்துஜா (85), நவம்பர் 3, 2025 அன்று லண்டனில் காலமானார். நான்கு இந்துஜா சகோதரர்களில் இரண்டாமவரான இவர், 2023-ல் தனது மூத்த சகோதரர் ஸ்ரீசந்த் இந்துஜாவின் மறைவுக்குப் பிறகு குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

    அசோக் லேலண்ட் மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய இந்துஜா குழுமத்தை ஆட்டோமொபைல், வங்கி, தொழில்நுட்பம் என 11 துறைகளில் விரிவுபடுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. சண்டே டைம்ஸின் 2025 பணக்காரர்கள் பட்டியலில், இவரது குடும்பம் பிரிட்டனின் மிகவும் செல்வந்தக் குடும்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    DNA கட்டமைப்பை கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட்சன்

    டிஎன்ஏவின் (DNA) 'இரட்டை ஹெலிக்ஸ்' கட்டமைப்பைக் கண்டறிந்த உலகப்புகழ் பெற்ற அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் (97), நவம்பர் 6, 2025 அன்று நியூயார்க்கில் காலமானார்.

    1953-ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிரிக்குடன் இணைந்து இவர் வெளியிட்ட டிஎன்ஏ கட்டமைப்பு குறித்த ஆய்வு, உயிரினங்களின் பரம்பரைத் தகவல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பதை விளக்கியதுடன், நவீன மருத்துவ மற்றும் தடயவியல் அறிவியலுக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தது.

    இந்த வரலாற்றுச் சாதனைக்காக 1962-ஆம் ஆண்டு இவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    'தி சிம்ப்சன்ஸ்' கார்ட்டூனை உருவாக்கிய ஜாம்பவான் டான் மெக்ராத்

    உலகப்புகழ் பெற்ற 'தி சிம்ப்சன்ஸ்' (The Simpsons) கார்ட்டூன் தொடரின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான டான் மெக்ராத் (61), பக்கவாத பாதிப்பு காரணமாக நவம்பர் 14, 2025 அன்று காலமானார்.

    1997-ல் வெளியான 'ஹோமர்'ஸ் போபியா' (Homer's Phobia) என்ற புகழ்பெற்ற எபிசோடுக்காக இவர் 'எம்மி' விருது வென்றவர்.

    90-களில் தொடங்கி இன்றுவரை உலகெங்கிலும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இத்தொடரின் வளர்ச்சிக்கு மெக்ராத்தின் எழுத்துக்கள் மிகப்பெரிய பலமாக இருந்தன.

    ஈரோடு தமிழன்பன் - ஈடுசெய்ய முடியாத இழப்பு

    தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் கவிஞரும், எழுத்தாளருமான ஈரோடு தமிழன்பன் (92), வயது மூப்பு காரணமாக நவம்பர் 22, 2025 அன்று காலமானார்.

    மரபுக் கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து விளங்கிய இவர், பாவேந்தர் பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகிய பெருமைக்குரியவர்.

    செய்தி வாசிப்பாளர், பேராசிரியர் எனப் பல தளங்களில் பணியாற்றிய இவர், 'சாகித்ய அகாதெமி', 'கலைமாமணி' உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றுத் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

    துல்சா படுகொலை: அமெரிக்க நிறவெறியின் சாட்சி

    அமெரிக்க வரலாற்றின் கருப்பு அத்தியாயமான 1921-ம் ஆண்டு 'துல்சா' (Tulsa) இனப்படுகொலையில் உயிர் பிழைத்தவர்களில் மிக மூத்தவரான வயோலா பிளெட்சர் (111), நவம்பர் 24, 2025 அன்று காலமானார்.

    தனது 7-வது வயதில் அரங்கேறிய அந்த கோரமான வன்முறையில் 300-க்கும் மேற்பட்ட கறுப்பின மக்கள் கொல்லப்பட்டதையும், அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதையும் நேரில் கண்ட இவர், தன் வாழ்நாள் முழுவதும் அந்த நீதிக்காகப் போராடினார். நிறவெறியின் கோர முகத்தை உலகுக்கு எடுத்துரைத்த சாட்சியாக பிளெட்சர் திகழ்ந்தார்.

    சென்னையின் பறவை மனிதர் ஜோசப் சேகர்

    சென்னையின் "பறவை மனிதர்" என்று அன்போடு அழைக்கப்படும் ஜோசப் சேகர் (73), புற்றுநோய் பாதிப்பு காரணமாக டிசம்பர் 10, 2025 அன்று காலமானார். ராயப்பேட்டை பகுதியில் கேமரா பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த 20 ஆண்டுகளாகத் தனது வீட்டின் மாடியில் தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளிப்பதை ஒரு தவமாகவே செய்து வந்தார்.

    தொடக்கத்தில் "கேமரா ஹவுஸ் சேகர்" என்று அறியப்பட்ட இவர், பின்னாளில் பல்லாயிரக்கணக்கான கிளிகளுடனான தனது பிணைப்பால் "பறவை மனிதர்" என்று உலகப் புகழ் பெற்றார்.

    பதவியை உதறிய முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல்  

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90), வயது மூப்பு காரணமாக டிசம்பர் 11, 2025 அன்று மகாராஷ்டிராவின் லத்தூரில் காலமானார்.

    இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் மன்மோகன் சிங் அமைச்சரவைகளில் பாதுகாப்பு, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் உள்துறை போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்த இவர், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுத் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

    உலகின் மிக உயரமான சிலையை வடிவமைத்த சிற்பக் கலைஞர்:

    உலகின் மிக உயரமான சிலையான, குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் "ஒற்றுமை சிலை"யை (Statue of Unity) வடிவமைத்த புகழ்பெற்ற சிற்பி ராம் வி. சுதார் (100), வயது மூப்பு காரணமாக டிசம்பர் 17, 2025 அன்று காலமானார்.

    மகாராஷ்டிராவின் எளிய குடும்பத்தில் பிறந்த இவர், தனது அபாரத் திறமையால் இந்தியாவின் தலைசிறந்த சிற்பக் கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இவரது அரிய சேவையைப் பாராட்டி இந்திய அரசு 1999-ல் பத்மஸ்ரீ விருதையும், 2016-ல் பத்மபூஷண் விருதையும் வழங்கி கௌரவித்தது.    

    • துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 8 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒரு ஆண் என்றும் அவர் கருப்பு நிற உடை அணிந்து இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

    பல்கலைக்கழகத்தில் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 8 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒரு ஆண் என்றும் அவர் கருப்பு நிற உடை அணிந்து இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சீத்தாக்குளம்-சத்திரம் பகுதிக்கு இடைப்பட்ட இடத்தில் வந்தபோது மல்லிகார்ஜூன ரெட்டி திடீரென மயங்கி விழுந்தார்.
    • போலீசாரின் முதல் கட்ட அறிக்கையில் மாரடைப்பு காரணமாக மல்லிகார்ஜூன ரெட்டி இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜூன ரெட்டி (வயது 42). இவர் கடந்த 19-ந் தேதி வண்டி பெரியாறு சத்திரத்தில் இருந்து புல்மேட்டு பாதை வழியாக 25 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழுவுடன் சபரிமலை சன்னிதானத்துக்கு சென்று கொண்டு இருந்தார்.

    சீத்தாக்குளம்-சத்திரம் பகுதிக்கு இடைப்பட்ட இடத்தில் வந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து சத்திரத்தில் உள்ள சுகாதார மையத்தில் மல்லிகார்ஜூன ரெட்டிக்கு முதல்-உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புல்மேட்டில் இருந்து வந்த மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.

    அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அவரது உடல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட அறிக்கையில் மாரடைப்பு காரணமாக மல்லிகார்ஜூன ரெட்டி இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

    • சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நில உரிமையாளர் பாஷா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    • நில உரிமையாளர் இளைஞர்களின் உடல்களை அருகில் இருந்த கிணற்றில் வீசி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் முயல்வேட்டைக்கு சென்றனர். அப்போது குப்பநத்தம் பகுதியில் மின்வேலியில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

    சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 17 மற்றும் 27 வயதான இளைஞர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

    சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நில உரிமையாளர் பாஷா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். நில உரிமையாளர் இளைஞர்களின் உடல்களை அருகில் இருந்த கிணற்றில் வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • மோகன் லாலின் மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
    • இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த 74 வயதான முன்னாள் விமானப்படை வீரர் மோகன் லால், தான் இறந்தது போல் நடித்து தனக்கு தானே இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

    மோகன் லாலின் மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில், தான் மரணமடைந்தால் இந்த ஊரில் யார் எல்லாம் தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு வருவார்கள், யாரெல்லாம் என் மீது அன்பு வைத்துள்ளார்கள் என்று அறிய மோகன் லாலுக்கு ஆசை ஏற்பட்டது.

    இதையடுத்து தான் இறந்தது போல மொகல் லால் தனக்கு இறுதிச்சடங்கு நடத்தினார். இறுதிச்சடங்கு நடைபெற்ற போது, எழுந்து உட்கார்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 

    • பாலத்தில் இருந்து சிறிது தூரத்தில் லாரி ஒன்று சாலையோரம் நின்றிருந்தது.
    • நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கார் மீட்கப்பட்டது.

    கோவை:

    கோவை-அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த மேம்பாலம் கடந்த 9-ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாலத்தில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த உயர்மட்ட மேம்பாலத்தில் கோவை உப்பிலிபாளையம் பகுதியில் இருந்து கோல்டுவின்ஸ் நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 2 வாலிபர்கள், ஒரு பெண் இருந்தனர்.

    கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள இறங்கு தளத்தில் கார் இறங்கி கொண்டிருந்தது. அப்போது பாலத்தில் இருந்து சிறிது தூரத்தில் லாரி ஒன்று சாலையோரம் நின்றிருந்தது.

    பாலத்தில் இருந்து இறங்கிய கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்ற லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் லாரியின் அடியில் சிக்கி கொண்டது. இதில் கார் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது.

    காரில் இருந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    மேலும், பீளமேடு, கோவை தெற்கு தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் லாரிக்குள் சிக்கிய காரையும், காரில் இருந்தவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கார் மீட்கப்பட்டது. ஆனால் காரில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்.

    இதையடுத்து போலீசார் இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்தவர்கள் யார் என விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இறந்த வாலிபர்கள் கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த ஹாரீஸ்(20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஷேக் உசேன்(20) என்பதும், அவர்களுடன் வந்த பெண் அவர்களது தோழி என்பதும் தெரியவந்தது. மேலும் ஹாரீஸ், சேக் உசேன் ஆகியோர் துணிக்கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    இவர்கள் இரவு நேரத்தில் எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை. புதிய பாலம் திறக்கப்பட்ட பிறகு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாலத்தை பார்ப்பதற்காக பலர் வாகனங்களில் வருகின்றனர். எனவே இவர்கள் பாலத்தை சுற்றி பார்க்க வந்து விட்டு, மீண்டும் திரும்பியபோது விபத்தில் சிக்கி இருக்கலாம் என தெரிகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோர்ஜோ நகரில் பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 29-ம் தேதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

    இதில் 99 மாணவர்களை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 14 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் மேலும் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பள்ளி இடிந்த விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன என தெரிவித்தனர்.

    • இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோர்ஜோ நகரில் பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 29-ந்தேதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

    இதில் 99 மாணவர்களை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 14 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் மேலும் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 26 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இன்று காலை நிலவரப்படி 37 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 104 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் என்றனர்.

    • ரெயில், அதிகாலை 5 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்தபோது விபத்து.
    • இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பீகார் மாநிலம் பூர்ணியாவில் தண்டவாளத்தை கடக்கும்போது வந்தே பாரத் ரெயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    மேலும், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அதிகாலையில் இருட்டாகவும், பனிமூட்டமாகவும் இருந்ததால் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்துள்ளது முதற்கு கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஜோக்பானியிலிருந்து பாடலிபுத்ராவுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில், அதிகாலை 5 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்தபோது விபத்து நடந்துள்ளது.

    மேலும், பொது மக்கள் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், நியமிக்கப்பட்ட கிராஸிங்கை பயன்படுத்தவும், தண்டவாளங்களில் நடப்பதைத் தவிர்க்கவும் என்ஆர்எப் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • குண்டுவெடிப்பு காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
    • பலுசிஸ்தான் சுகாதார அமைச்சர், அனைத்து மருத்துவமனைகளிலும் நகரம் முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளார்.

    பாகிஸ்தானின் குவெட்டாவில் எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குவெட்டாவில் உள்ள சர்கூன் சாலையில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர்.

    குண்டுவெடிப்பை தொடர்ந்து குவெட்டா பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டதால் மக்கள் அலறியடித்து ஓடினர்.

    தகவல் அறிந்து காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.

    குண்டுவெடிப்பு காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 32 பேர் காயமடைந்துள்ளனர்.

    பலுசிஸ்தான் சுகாதார அமைச்சர், அனைத்து மருத்துவமனைகளிலும் நகரம் முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளார். ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் உடனடியாக பணிக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். 

    • கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளனர்.
    • பிரசவம் நடந்தபிறகு ஜெஸ்வீனா திடீரென மயங்கினார்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராசிகுல். இவரது மனைவி ஜெஸ்வீனா (வயது30). இவர்களுக்கு 4 வயதில் ஜோஹிருல் என்ற மகன் இருக்கிறான். ராசிகுல் தனது மனைவி மற்றும் மகனுடன் கேரளாவில் வாழ்ந்து வந்தார். கூலி வேலைகளுக்கு சென்று தனது மனைவி மற்றும் மகனை காப்பாற்றி வந்தார்.

    இந்தநிலையில் ஜெஸ்வீனா மீண்டும் கர்ப்பமானார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராசிகுல் தனது மனைவி மற்றும் மகனுடன் கண்ணூர் மாலோடு பகுதியில் ஒரு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த ஜெஸ்வீனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தில் அவருக்கு அழகிய குழந்தை பிறந்தது. இந்தநிலையில் பிரசவம் நடந்தபிறகு ஜெஸ்வீனா திடீரென மயங்கினார். சுயநினைவை இழந்த அவரை அவரது குடும்பத்தினர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு ஜெஸ்வீனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் தலைமறைவாகினர். ஜெஸ்வீனாவுக்கு புதிதாக பிறந்த குழந்தை மற்றும் மகன் ஜோஹிருல் ஆகியோரை தனியாக தவிக்க விட்டுவிட்டு அவர்கள் மாயமாகினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்பு ஜெஸ்வீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு புதிதாக பிறந்த குழந்தையை மீட்டு பரியாரத்தில் உள்ள கண்ணூர் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவரது மகன் ஜோஹிருலை சைல்டு லைன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவன் அவர்களது பராமரிப்பில் உள்ளான்.

    வீட்டில் பிரசவம் பார்த்ததால் பெண் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் ஜேஸ்வீனாவின் கணவர் மற்றும் குடும்பத்தினரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலை நடத்தினர்.
    • தலைநகர் சனாவில் உள்ள ராணுவ தலைமையகம், எரிபொருள் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல்.

    ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீனத்தின் காசாமுனை மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, அந்நாட்டின் மீது 2023 முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ஏமன் தலைநகர் சனா உள்பட பல பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலை நடத்தினர்.

    தலைநகர் சனாவில் உள்ள ராணுவ தலைமையகம், எரிபொருள் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் 35 பேர் பலியானார்கள். 130 -க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×