என் மலர்
நீங்கள் தேடியது "மருமகன்"
- விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், விஜய் கொடுத்த ரூ. 20 லட்சத்தை தனது மருமகன் வீணாக்கி வருவதாக மாமியார் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "3 ஆண்டுகளுக்கு முன்பு எனது மக்களுக்கு திருமணம் நடைபெற்றது. அவளுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமான ஒரு வருடத்திலேயே எனது மகள் கணவனுடன் வாழாமல் என வீட்டிற்கு வந்துவிட்டாள். இப்போது விஜய் கூட்டத்தில் என் மகள் உயிரிழந்தார். அப்போது கூட என் மகளின் சடலத்தை பார்க்க வராத என் மருமகன், இழப்பீடு பணம் அறிவித்தவுடன் மருத்துவமனையில் வந்து சண்டையிட்டு சடலத்தை வாங்கி அடக்கம் செய்ததோடு மகளையும் தன்னோடு அழைத்து சென்றார்.
இப்போது ரூ.20 லட்சம் பணம் வாங்கியவுடன் வேறு மாதிரி நடந்து கொள்கிரார். ஆகையால் என் மகளின் இறப்பிற்கு கிடைத்த இழப்பீட்டு பணத்தை என் மகளின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யவேண்டும். அதற்கு அவரையும் என்னையும் நாமினியாக நியமிக்க வேண்டும். அப்போது தான் என் பேத்தியின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். அனால் அந்த பணத்தை என் விருப்பப்படி தான் செலவு செய்வேன் என்று எகத்தாளமாக பேசுகிறார்" என்று அழுதபடியே தெரிவித்தார்.
- 18 வயது வாலிபர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- மாமியாருக்கும் மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர்.
இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அதே பகுதியில் வசித்து வந்தனர் இவர்களுடன் கணவனை இழந்த சிறுமியின் 40 வயது தாயாரும் வசித்து வந்தார்.
இந்த நிலையில் மாமியாருக்கும் மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது சிறுமி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் இருந்தனர்.
இதனை அறிந்த சிறுமி தனது கணவர் மற்றும் தாயாரை கண்டித்தார் ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை. மேலும் மாமியார் தனது மருமகனை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டிலேயே வாலிபர் தனது மாமியாருக்கு தாலி கட்ட முயன்றார். இதனை கண்ட அவருடைய மனைவி தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தார்.
ஆத்திரமடைந்த அவரது தாயும் கணவரும் அவரை கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றனர்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டனர் . மேலும் மாமியார் மற்றும் மருமகனை சரமாரியாக தாக்கினார் அவர்கள் இருவரையும் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஒரு ஆண்டு ஆகியும் கணவர் வீட்டிற்கு வரவில்லை.
- வாலிபரை கம்பத்தில் கட்டி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது.
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜலந்தர் பாலியர் சிங். இவரது மனைவி சுபத்ரா மல்பிசோ. கடந்த ஆண்டு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது பாலியர் சிங் தனது மனைவியை கடுமையாக தாக்கினார். இதுகுறித்து சுபத்ரா தனது தாயாரிடம் தெரிவித்தார். அவர் தனது உறவினர்களுடன் வந்து பஞ்சாயத்தை கூட்டினார்.
அப்போது ஊர் பெரியவர்கள் சுபத்ராவை அவரது தாய் வீட்டிற்கு சென்று சில மாதங்கள் தங்கி இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதன்படி சுபத்ரா தாய் வீட்டிற்கு சென்றார். ஒரு ஆண்டு ஆகியும் கணவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது கணவர் மனைவி மனமிறங்கி தனது வீட்டிற்கு வருவார் என ஆவலுடன் காத்திருந்தார். மனைவி வராததால் அவரை அழைத்து வர நேற்று முன்தினம் பாலியர் சிங் மாமியார் வீட்டிற்கு சென்றார்.
மருமகன் மீது கடும் கோபத்தில் இருந்த மாமியார் அவரை சரமாரியாக தாக்கினார். பாலியர் சிங் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட சுபத்ராவின் உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்களும் பாலியர் சிங்கை கண்மூடித்தனமாக தாக்கினார்.
பாலியர் சிங் வலி தாங்க முடியாமல் கதறினாலும் ஒருவர் பின் ஒருவராக தாக்கிக் கொண்டே இருந்தனர்.
பின்னர் அவரை அங்குள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து அடி வெளுத்து வாங்கினர். விடிய விடிய பாலியர் சிங்கை மின்கம்பத்திலேயே கட்டி வைத்திருந்தனர்.
கிராம மக்கள் வேடிக்கை பார்த்தனர். யாரும் மீட்கவில்லை. சினிமா காட்சியை மிஞ்சும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாலியர் சிங்கை மீட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து பாலியர் சிங்கின் மனைவி, மாமியார் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபரை கம்பத்தில் கட்டி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது.
- வழக்கமாக திருமணம் நிச்சயம் நடந்த பின்னர் மணமக்கள் ஜோடிதான் செல்போனில் மணிக்கணக்காக பேசுவார்கள்.
- என்ன நடந்தாலும் நான் ராகுல்குமாருடன்தான் வாழ்வேன்.
உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்த வாலிபருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஒரு வாரத்திற்கு பின் அந்த ஜோடி போலீசில் சரணடைந்தனர். அப்போது நான் எனது மருமகனையே திருமணம் செய்து கொள்வேன் என்று அந்த பெண் போலீசாரிடம் பிடிவாதமாக கூறி வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் சப்னா. இவரது கணவர் ஜிஜேந்திரகுமார். இந்த தம்பதியின் மகள் ஷிவானி. இவருக்கு திருமணம் செய்ய ராகுல் குமார் என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்தனர்.
வழக்கமாக திருமணம் நிச்சயம் நடந்த பின்னர் மணமக்கள் ஜோடிதான் செல்போனில் மணிக்கணக்காக பேசுவார்கள். ஆனால் இங்கு வினோதமாக பெண்ணின் தாய் சப்னா மருமகன் ராகுல்குமாரிடம் மணிக்கணக்கில் பேசி வந்தார்.
அப்போது குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டு ஏன் மருமகனிடம் போனில் அதிக நேரம் பேசுகிறாய் என்று கணவர் கேட்டுள்ளார். திருமண ஏற்பாடு சம்பந்தமாக பேசுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கடந்த வாரம் மருமகன் ராகுல்குமாருடன் மாமியார் சப்னா திடீரென ஓட்டம் பிடித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சப்னா-ராகுல்குமார் ஜோடி டாடன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசாரிடம் சப்னா நான் ராகுல் குமாரையே திருமணம் செய்து கொள்வேன். நான் வீட்டில் இருந்து செல்லும் போது ஒரு செல்போனும், ரூ.200 மட்டுமே என்னிடம் இருந்தது.
லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் நகைகளுடன் நான் ஓடி விட்டதாக எனது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். நான் எதையும் எடுத்து செல்லவில்லை. எனது கணவரும், மாமியார்களும் என்னை சித்ரவதை செய்தனர். எனது கணவர் குடித்து விட்டு வந்து என்னை அடித்து உதைப்பார். எனது மகளும் என்னிடம் அடிக்கடி சண்டையிடுவார் என குற்றம்சாட்டினார். இதனால்தான் இவ்வாறு செய்தேன் என்றார்.
என்ன நடந்தாலும் நான் ராகுல்குமாருடன்தான் வாழ்வேன். அவரை திருமணம் செய்து கொண்டு நாங்கள் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்துவோம் என்று அவர் பிடிவாதமாக போலீசாரிடம் கூறினார்.
ராகுல்குமார் கூறும் போது, சப்னா தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டியதால் அவருடன் ஓடிப்போக ஒப்புக் கொண்டேன். அலிகார் பஸ் நிலையத்தில் நான் அவரை சந்திக்கவில்லை என்றால் அவர் தற்கொலை செய்திருப்பார். அதனால்தான் நான் சென்றேன்.
நாங்கள் முதலில் லக்னோவுக்கு சென்றோம். அங்கிருந்து முசாபர்பூருக்கு சென்றோம். போலீசார் தங்களை தேடுகிறார்கள் என்பதை அறிந்து சரணடைந்தோம் என்றார். சப்னாவை திருமணம் செய்து கொள்வீர்களா என்று போலீசார் கேட்டபோது, முதலில் அப்படி எதுவும் இல்லை என்று சொன்ன அவர் சிறிது நேர மவுனத்திற்கு பின்னர் அவரை திருமணம் செய்வேன் என்றார்.
சப்னாவின் குடும்பத்தினர் எங்களுக்கு சப்னா திரும்ப வேண்டாம். அவர் வீட்டில் இருந்து எடுத்து சென்ற நகை, பணத்தை மட்டும் மீட்டு தாருங்கள் என்று போலீசாரிடம் கூறினர்.
மகளுக்கு நிச்சயித்த மருமகனையே மாமியார் திருமணம் செய்து கொள்வேன் என்ற அடம்பிடித்த இந்த சம்பவம் போலீசார் மட்டும் அல்ல அங்கிருந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு
- முன்விரோதத்தால் தாக்குதல்
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் மணவா ளக்குறிச்சி அருகே உள்ள கட்டைக்காடை சேர்ந்தவர் ராஜன், தொழிலாளி.
இவரது மகள் சிவகலாவை இளையான் விளையை சேர்ந்த ஸ்டீபன் (வயது 38) திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
இதன் காரணமாக சிவ கலா, கணவர் வீட்டில் இருந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இதனால் ராஜன் மீது ஸ்டீபன் ஆத்திரம் அடைந்தார்.இது தொடர்பாக அவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது.
இந்த முன்விரோதத்தில் ராஜன் வீட்டுக்கு வந்த ஸ்டீபன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் அங்கு கிடந்த தென்னை மட்டையை எடுத்து ராஜனை தாக்கி உள்ளார். மேலும் அவருக்கு மிரட்டலும் விடுத்ததாக போலீசில் ராஜன் புகார் செய்தார்.
அதன் பேரில் மணவா ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி ஸ்டீபன் மீது வழக்குப்பதிவு செய்த னர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- முரளிதரையும், மகள் குஷ்மாவையும் தொழில் அதிபர் பீஷ்மாராவ் தனது வீட்டுக்கு தலை பொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார்.
- உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
விசாகப்பட்டினம்:
ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு மிக பிரமாண்டமாக விருந்து வைப்பது சமீப ஆண்டுகளாக புகழ்பெற்று வருகிறது.
போட்டி போட்டு வகை வகையாக மருமகன்களுக்கு விருந்து வைத்து பொங்கல் திருநாளில் பெயர் பெறுவதை ஆந்திராவில் பல்வேறு பகுதி மக்களும் பெருமையாக கருதுகிறார்கள். குறிப்பாக கோதாவரி மாவட்ட மக்கள் இத்தகைய விருந்து வைப்பதில் புகழ் பெற்று திகழ்கிறார்கள்.
கடந்த ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொழில் அதிபர் ஒருவர் தனது மருமகனுக்கு 365 வகைகளில் பொங்கல் விருந்து வைத்திருந்தார். இந்த ஆண்டு எலுரு நகரை சேர்ந்த தொழில் அதிபர் பீமாராவ் அந்த சாதனையை முறியடிக்க முடிவு செய்தார்.
அவர் மகள் குஷ்மாவை விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியை சேர்ந்த புத்தா முரளிதர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். இந்த ஆண்டு முரளிதருக்கு தலை பொங்கல் ஆகும்.
முரளிதரையும், மகள் குஷ்மாவையும் தொழில் அதிபர் பீஷ்மாராவ் தனது வீட்டுக்கு தலை பொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார். நேற்று முன்தினம் அவர்களுக்கு தடபுடலாக விருந்து வைக்கப்பட்டது. விருந்தில் 379 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன.
அந்த உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் கடும் அதிர்ச்சி அடைந்தார். 379 வகையான உணவுகளில் 10 சதவீதத்தை கூட அவர் சாப்பிடவில்லை. என்றாலும், இந்த பிரமாண்ட விருந்து ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது.
- கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டார்.
பல்லடம் :
பல்லடத்தைச் சேர்ந்தவர் குமார்( 60) பனியன் தொழிலாளி. இவரது மனைவி வசந்தா(55) இவர்களது மகளும், பல்லடம் காரணம்பேட்டையை சேர்ந்த பால்ராஜ் மகன் அருணாச்சலம் (48) என்பவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் சமீபகாலமாக அருணாச்சலத்துக்கு அதிகமான குடி பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே சம்பவத்தன்று மது போதையில் இருந்த அருணாச்சலம் வசந்தாவின் வீட்டுக்கு சென்று, தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு வற்புறுத்தி, தகராறில் ஈடுபட்டதுடன், வசந்தாவின் தலையில் மதுபான பாட்டிலால் தாக்கி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த வசந்தா, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் அருணாச்ச லத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கூலி தொழிலாளியான சரவணன் தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்தார்.
- விசாரணை நடத்திய போது சரவணன், மருதையை கல்லால் தாக்கி கொலை செய்து உடலை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நாகியம்பட்டி ஆண்டிக்குட்டைய சேர்ந்தவர் மருதை (வயது 60) இவர் தனது மகள் தனலட்சுமியை கடநத 15 ஆண்டுகளுக்கு முன்பு கெங்கவல்லி அருகே உள்ள உலி புரம் புங்கமரத்துக்காடு பகுதியை சேர்ந்த சரவணன் (40) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு 12 மற்றும் 5 வயதில் 2 மகள்களும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
கூலி தொழிலாளியான சரவணன் தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்தார். நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சரவணன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார். இதனால் கோபித்து கொண்டு தனலட்சுமி நாகியம்பட்டியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
அன்று இரவு 10 மணியளவில் நாகியம்பட்டி சென்ற சரவணன் தனது மாமனார் மருதையிடம் மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கூறினார். நீ சந்தேகப்பட்டு அடிப்பதால் அவளை உன்னுடன் அனுப்ப முடியாது, நீ இங்கிருந்து சென்று விடு என்று கூறினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் தகராறு செய்ததால் அருகில் கிடந்த கம்பை எடுத்து பின்னால் விரட்டியுள்ளார். அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை.
இந்நிலையில் நேற்று அங்குள்ள அய்யப்பன் கோவில் அருகில் இருக்கும் ஆலமரத்தின் அடியில் மருதை பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் தம்மம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்திய போது சரவணன், மருதையை கல்லால் தாக்கி கொலை செய்து உடலை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது.
போலீசார் சரவணனை தேடிய போது தலைமறைவானதும், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பின்னூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-
எனது மனைவி என்னுடன் கோபித்து கொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டாள். அவளை நான் அழைக்க சென்றபோது எனது மாமனார் மருதை என்னை அடித்து விரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் காட்டுப்பகுதியில் வைத்து அவரை கல்லால் தாக்கினேன், இதில் காயம் அடைந்த அவர் இறந்துவிட்டார், அங்கிருந்து தப்பி கேரளா சென்றேன், ஆனால் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மனைவி இறந்த நிலையிலும் சிக்கந்தர் அங்கேயே இருந்து வந்துள்ளார்.
- இருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை விசாரித்தனர்.
பாட்னா:
பீகாரில் பங்கா மாவட்டம் ஹீர்மோதி காவுன் அருகே சத்ராபால் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர். அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் இவருக்கு திருமணமானது.
இதற்கிடையே, மனைவி இறந்த நிலையிலும் சிக்கந்தர் அங்கேயே இருந்து வந்துள்ளார். அங்கு தன் மாமியாருடன் சிக்கந்தர் நெருங்கி பழகிவந்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.
இருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் சிக்கந்தரின் மாமனார் உள்பட உறவினர்கள் அவர்களை விசாரித்தனர். அதில் மாமியாருடன் சிக்கந்தருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் அங்கு பஞ்சாயத்தை கூட்டினர். அதில் இருவரும் ஒப்புக் கொள்ளவே, கிராமத்தினர் முன்னிலையில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். மேலும், இருவரும் நீதிமன்றத்திலும் திருமணம் நடத்தியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மாமியாரை மருமகன் செய்து கொண்ட திருமண செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- ஆடி மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு விருந்து.
- விருந்தில், இனிப்பு, காரம் என 100 வகையான உணவுகளைச் செய்து மருமகனுக்கு பரிமாறியுள்ளார்.
ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கிர்லாம்பூடி மண்டலத்திற்குட்பட்ட, தாமரடா கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரி என்பவரைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
தமிழில் ஆடி மாதம் போன்று ஆந்திரா மாநிலத்தில் ஆஷாதா மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மாதம் ஜூலை மாதத்தின் பிற்பாதியும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியும் ஆகும்.
இந்நிலையில், ஆடி மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு ரத்னகுமாரி வீட்டில் பிரம்மாண்ட விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.
விருந்தில், இனிப்பு, காரம் என 100 வகையான உணவுகளைச் செய்து மருமகனுக்கு பரிமாறியுள்ளார்.
பிரமாண்ட விருந்து குறித்து பேசிய மருமகன் ரவிதேஜா," ஒரே இடத்தில் 100 வகையான உணவுகளை கண்டது மகிழ்ச்சி. மாமியாரின் இச்செயல் தன்னை மிகுந்த ஆச்சரியத்தில ஆழ்த்தியது" என்றார்.
- மது அருந்தியிருந்த மருமகன் தனது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
- இது தொடர்பாக மாமியார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த மருமகனுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு இன்று உறுதி செய்தது. இது மிகவும் வெட்கக்கேடான செயல் என்றும், பாதிக்கப்பட்ட பெண் அவருக்கு தாய் போன்றவர் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தனது மாமியாரிடம் மருமகன் சண்டை போட்டுள்ளார். பின்னர் மருமகனின் வற்புறுத்தலின் பேரில் அவரது வீட்டிற்கு மாமியார் சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் மது அருந்தியிருந்த மருமகன் தனது மாமியாரை 3 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அப்பெண் தனது மகளிடம் தெரிவித்துவிட்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கை 2018 டிசம்பரில் விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், தனது 55 வயது மாமியாரை பலாத்காரம் செய்ததற்காக அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 2022 மார்ச் மாதம் குற்றவாளி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மேல்முறையீடு மனுவின் விசாரணையில், "தனது மாமியாருடன் நடந்த உடலுறவு சம்மதத்துடன் நடந்த உறவு என்றும் அது பலாத்காரம் இல்லை" என்றும் குற்றவாளி தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், 55 வயதான அப்பெண் போலியான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கான முகாந்திரம் இல்லை என்றும், ஒருவேளை பரஸ்பர சம்மதத்துடன் இந்த சம்பவம் நடந்திருந்தால் அதை தனது மகளிடம் அவர் சொல்லியிருக்க மாட்டார், போலீசிலும் புகார் அளித்திருக்க மாட்டார் என்று தெரிவித்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.






