என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal affair"

    • நித்யாவுக்கு மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தது மறு புறம் என வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவருடைய மகன் வினோத்குமார்(வயது 38). இவர் புகைப்பட கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி நித்யா(35). இந்த தம்பதியினர் மணவாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்தது. இவர்களது அன்பான இல்லற வாழ்க்கையின் பயனாக இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.

    இதில் மூத்த மகள் ஓவியா(12) 6-ம் வகுப்பு படித்து வந்தாள். 2-வது மகள் கீர்த்தி(8) 3-ம் வகுப்பு படித்து வந்தாள். 3-வதாக 5 வயதில் ஈஸ்வரன் என்ற மகன் இருந்தான்.

    இந்த நிலையில், நித்யாவுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    பாழாய்ப்போன இந்த கெட்ட சகவாசத்தால் நித்யா தனது அன்பான கணவரையும், குழந்தைகளையும் மறந்து கள்ளக்காதலனே கதி என்றானார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து, தனது கள்ளக்காதலனுடன் நித்யா சென்று விட்டார். கள்ளக்காதலனுடன் தனது மனைவி ஓடிச்சென்ற பிறகும் மனைவியை பிரிய முடியாத சூழ்நிலையில் வினோத்குமார் இருந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை சந்தித்து மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.

    அப்போதும் மனம் இரங்காத நித்யா கள்ளக்காதலனை விட்டு கணவருடன் வரமறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    மனைவி தன்னை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய வேதனை ஒரு புறம். 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தது மறு புறம் என வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இதனால் மனைவி மீது மிகுந்த ஆத்திரம் அடைந்த வினோத்குமார் நேற்று மாலை வீட்டில் குழந்தைகளுக்கு பலகாரங்கள் வாங்கி கொடுத்து சாப்பிடுமாறு கூறி உள்ளார். குழந்தைகளும் தந்தை வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசை ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பாவம் அவர்களுக்கு தெரியவில்லை... அதுதான் தங்களது இறுதி சாப்பாடு என்பது.

    அப்போது தனது மனதை கல்லாக்கிக்கொண்ட வினோத்குமார் தான் பெற்ற குழந்தைகள் என்றும் பாராது தனது 3 குழந்தைகளையும் துடிக்க, துடிக்க சரமாரி கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்.

    இதில் 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். பின்னர் குழந்தைகளை கொலை செய்த வினோத்குமார், மதுக்கூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தான் தனது 3 குழந்தைகளையும் கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    • வீட்டில் மாமியார் வள்ளியம்மாளும், மருமகள் அபிதாவும் மட்டும் இருந்தனர்.
    • போலீசாரின் விசாரணையால் அபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

    பூந்தமல்லி:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மணிகண்டன் நகர், காந்தி சாலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி அபிதா(59), ராஜேந்திரனின் தாய் வள்ளியம்மாள்(88). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ராஜேந்திரன் வேலை பார்த்த இடத்தில் தங்கி விட்டார்.

    வீட்டில் மாமியார் வள்ளியம்மாளும், மருமகள் அபிதாவும் மட்டும் இருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், அபிதாவையும் மாமியார் வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டு 11 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டார்.

    இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அபிதாவே தனது கள்ளக்காதலனை வரவழைத்து இந்த நகை பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அபிதாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது.

    அபிதாவிற்கு குழந்தைகள் இல்லை. இதனால் அவர் அடிக்கடி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தபோது அங்கு வந்த திருநெல்வேலியை சேர்ந்த 35 வயதுடைய வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும் கள்ளக்காதலர்கள் தங்களது நட்பை வளர்த்து அடிக்கடி தனியாக சந்தித்து வந்து உள்ளார். அந்த வாலிபர் அபிதாவிடம் பணம் கேட்கும் போதெல்லாம் தன்னிடம் பணம் இல்லை. ஆனால் வீட்டில் நகைகள் உள்ளது. அதுவும் தனது மாமியாரிடம் உள்ளது என்று கூறி உள்ளார். செலவுக்கு பணம் இல்லாததால் அந்த நகையை திருடி இருவரும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று திட்டமிட்டனர்.

    அதன்படி சம்பவத்தன்று கணவர் வீட்டில் இல்லாததை அபிதா தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். திட்டமிட்டபடி அந்த கள்ளக்காதலன் வந்து அபிதாவையும், மாமியார் வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்து சென்று விட்டார். ஆனால் இதில் கள்ளக்காதலர்களின் திட்டம் சொதப்பியதால் அபிதா சிக்கிக் கொண்டார். முதலில் மாமியார் வள்ளியம்மாளை மட்டும் தாக்கி நகையை பறித்து உள்ளார். பின்னர் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக தன்னையும் கட்டிப்போட்டு விட்டு செல்லுமாறு அபிதா கூறி இருக்கிறார். இதன் பின்னர் அபிதாவையும், வள்ளியம்மாளையும் கட்டிப் போட்டு கள்ளக்காதலன் தப்பி இருக்கிறார்.

    போலீசார் வந்து விசாரணை செய்தபோது மாமியார் வள்ளியம்மாள் உட லில் மட்டும் காயங்கள் இருந்தன. ஆனால் அபிதாவின் உடலில் சிறிய காயங்கள் கூட இல்லை. விசாரணையின்போது அபிதா முன்னுக்குபின் முரணான பதில்களை கூறி உள்ளார். மேலும் வள்ளியம்மாள் அணிந்து இருந்த நகையை மட்டுமே கள்ளக்காதலன் பறித்து சென்று இருந்ததால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

    பின்னர் போலீசார் தங்களது பாணியில் விசாரித்தபோது அபிதா கள்ளக்காதலனை வரவழைத்து மாமியாரை கட்டிப்போட்டு நகை பறித்து இருப்பது தெரிய வந்தது.

    ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இதே போல் நகை பறிப்பு சம்பவம் நடந்து உள்ளது. இதனை சமாளித்து போலீசில் புகார் கொடுக்காமல் கள்ளக்காதலனை அபிதா காப்பாற்றி உள்ளார். அதேபோல் தற்போதும் நகை பறித்து போலீசில் சிக்காமல் உல்லாசமாக செலவு செய்யலாம் என்று நினைத்து நகை கொள்ளையில் ஈடுபட்டபோது போலீசாரின் விசாரணையால் அபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

    இதேபோல் கொள்ளை நடந்த நேரத்தில் அப்பகுதியில் அபிதா, கள்ளக்காதலனிடம் நின்று பேசிக் கொண்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியும் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. அபிதா போலீசில் சிக்கியது பற்றி அறிந்ததும் தற்போது அவரது கள்ளக்காதலன் தலைமறைவாகி விட்டார். அவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவை கடுஷெட்டிஹள்ளி உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்தார்.
    • போலீசார் சுமங்கலா மற்றும் நாகராஜு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகாவில் உள்ள நோனவினகெரே அருகே உள்ள கடுஷெட்டிஹள்ளியில் வசித்து வந்தவர் சங்கரமூர்த்தி (வயது 50). இவருடைய மனைவி சுமங்கலா (43).

    திப்தூர் நகரில் உள்ள கல்பதரு கல்லூரியின் பெண்கள் விடுதியில் சமையல்காரராக சுமங்கலா பணிபுரிந்து வந்தார். அதே விடுதியில் சமையல் உதவியாளராக கரடலு சாந்தே கிராமத்தை சேர்ந்த நாகராஜூ என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

    இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏறப்பட்டது. 2 பேரும் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த விஷயத்தை அறிந்த சங்கரமூர்த்தி மனைவி சுமங்கலாவை கண்டித்தார். இது பற்றி சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவிடம் தெரிவித்தார். தகாத உறவுக்கு சங்கரமூர்த்தி ஒரு தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ய சுமங்கலாவும், நாகராஜுவும் ஒரு திட்டத்தை வகுத்தனர்.

    அதன்படி கடந்த 24-ந்தேதி இரவு சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவை கடுஷெட்டிஹள்ளி உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்தார். பண்ணை வீட்டில் சங்கரமூர்த்தி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அவரது கால்களை நாகராஜூ இறுக்கமாக பிடித்துக் கொண்டார். சுமங்கலா, கணவரின் கண்களில் மிளகாய் பொடி, உப்பு பொடி கலந்து ஊற்றினார். இதனால் சங்கரமூர்த்தி சத்தம் போடவே, அவரை கம்பால் அடித்து அவரது கழுத்தை மிதித்து துடிக்க, துடிக்க சுமங்கலா கொலை செய்தார்.

    பின்னர் சுமங்கலாவும், கள்ளக்காதலனும் சேர்ந்து சங்கரமூர்த்தியின் உடலை ஒரு சாக்குப் பையில் அடைத்து, சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள துருவேகெரே தாலுகாவில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கொண்டு சென்று அங்கே வீசினர். பின்னர் எந்த சந்தேகமும் ஏற்படாதபடி இருவரும் கிராமத்திற்கு திரும்பினர்.

    இதையடுத்து சுமங்கலா தனது கணவர் மாயமானதாக நோனவினகெரே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சங்கரமூர்த்தி மீது காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    முதலில் சுமங்கலாவின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆராய்ந்த போலீசார் சுமங்கலாவின் கள்ளக்காதல் மற்றும் கொடூரமான சதித்திட்டத்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து சங்கரமூர்த்தியின் பண்ணை வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு சங்கரமூர்த்தி தூங்கிக் கொண்டிருந்த படுக்கையில் மிளகாய், உப்பு பொடி மற்றும் ஒருவர் இழுத்துச் செல்லப்பட்டதற்கான அடையாளமும் காணப்பட்டன.

    இதனால் போலீசார் சுமங்கலாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது தானும், கள்ளக்காதலனும் சேர்ந்து சங்கரமூர்த்தியை கொலை செய்ததை சுமங்கலா ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சுமங்கலா மற்றும் நாகராஜு ஆகிய இருவரையும் கைது செய்தனர். தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து சங்கரமூர்த்தியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது

    கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த கணவரின் கண்களில் மனைவி மிளகாய், உப்புப் பொடியை ஊற்றி, அவரது கழுத்தை மிதித்து கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஷாலினியின் உடல் கிடந்த இடத்தில் 19-ந்தேதி செல்போன் சிக்னலில் பதிவாகி இருந்த நம்பர்கள் யாருடையது என விசாரணை மேற்கொண்டனர்.
    • என்னை திருமணம் செய்து கொள். நாம் இருவரும் வேறு ஊருக்கு சென்று விடலாம் என ஷாலினி கூறினார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே உள்ள கோனேகவுண்டனூர் கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று நேற்று முன்தினம் இரவு கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து தகவலறிந்த வேப்பனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இறந்து கிடந்த பெண் பல்லேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தமூர்த்தி மகள் ஷாலினி (வயது25) என்பதும், 8 மாதம் கர்ப்பிணி என்பதும் தெரிந்தது. மேலும் அவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டும், துப்பட்டாவால் கழுத்து இறுக்கியும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து ஷாலினியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட அவர் கடந்த 19-ந்தேதி முதல் காணவில்லை என்றும், அவரை தேடி வந்ததாக கூறியுள்ளனர்.

    இதையடுத்து ஷாலினியின் உடல் கிடந்த இடத்தில் 19-ந்தேதி செல்போன் சிக்னலில் பதிவாகி இருந்த நம்பர்கள் யாருடையது என விசாரணை மேற்கொண்டனர். அதில், பந்திகுறி கிராமத்தை சேர்ந்த மேகநாதன் (21) மற்றும் கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய அக்ரஹாரத்தை சேர்ந்த புகழேந்தி (19) என்பவர்களின் செல்போன் எண்கள் என தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மேகநாதனுக்கும், ஷாலினிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததும், இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் மேகநாதன் தனது நண்பர் புகழேந்தி உதவியுடன் ஷாலினியை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

    போலீசாரிடம் கள்ளக்காதலன் மேகநாதன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    பல்லேரிப்பள்ளியை சேர்ந்த ஷாலினிக்கும், வேப்பனஹள்ளி அருகே உள்ள என் தாசிரிப்பள்ளியை சேர்ந்த மதியழகன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    அதன் பின்னர் ஷாலினி கணவரை பிரிந்து வேப்பனஹள்ளி அருகே உள்ள பந்திகுறியை சேர்ந்த தனது முன்னாள் காதலன் ஆஞ்சி (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் அதே ஊரில் வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில்தான் ஷாலினிக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஷாலினி அவரது இரண்டாவது கணவருக்கு தெரியாமல் என்னுடன் தொடர்பில் இருந்து வந்தார். நாங்கள் பலமுறை உல்லாசமாக இருந்ததில் ஷாலினி கர்ப்பமானார். அவர் தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார்.

    இந்நிலையில் எனது கர்ப்பத்திற்கு நீ தான் காரணம். எனவே நீ என்னை திருமணம் செய்து கொள். நாம் இருவரும் வேறு ஊருக்கு சென்று விடலாம் என ஷாலினி கூறினார். அவரை திருமணம் செய்ய விரும்பாத நான், அவரை ஏமாற்றி வந்தேன்.

    ஆனாலும் ஷாலினி என்னை விடவில்லை. என்னுடன் அடிக்கடி செல்போனில் பேசி வாக்குவாதம் செய்து வந்தார். கடந்த 19-ந்தேதி என்னை தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் என்று கூறினார்.

    ஷாலினி மீது வெறுப்பின் உச்சத்தில் இருந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக எனது நண்பரான கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய அக்ரஹாரத்தை சேர்ந்த புகழேந்தி (19) என்பவரை அழைத்துக்கொண்டு, கத்தியை மறைத்து எடுத்து சென்றேன்.

    நான், ஷாலினி, புகழேந்தி 3 பேரும் ஒரே டூவிலரில் அன்றிரவு 11 மணிக்கு கோனேகவுண்டனூர் வனப்பகுதிக்கு சென்றோம். அங்கு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

    அப்போது மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஷாலினி கூறினார். அப்போது, ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷாலினியின் கழுத்தில் குத்தினேன். அவர் துடிதுடித்து கீழே விழுந்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத நான் கர்ப்பிணி என்றும் பாராமல் புகழேந்தி உதவியுடன் ஷாலினியின் கழுத்தில் இருந்த துப்பட்டாவால் கழுத்தில் இறுக்கி மரத்தில் கட்டி தூக்கிட்டு துடிக்க துடிக்க கொன்று விட்டு அங்கிருந்து சென்று விட்டோம்.

    ஷாலினியை காணவில்லை என்று அவரது கணவர் ஆஞ்சி மற்றும் குடும்பத்தினர் தேடுவதை அறிந்தேன். போலீசார் எங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தேன். ஆனாலும் செல்போன் டவர் லோகேஷன் மூலமாக எங்களின் எண்ணை போலீசார் கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கைதான மேகநாதன், புகழேந்தி ஆகிய 2 பேரையும் போலீசார் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். முதல் கணவரை பிரிந்து இரண்டாவது கணவருடன் வாழ்ந்து, பின்னர் வாலிபருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் நிறைமாத கர்ப்பிணி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் வேப்பனப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கொலை தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள பகதூர்பூரை சேர்ந்தவர் தேவேந்திரகுமார். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி மாயா தேவி.

    சம்பவத்தன்று தேவேந்திர குமார் திடீரென மாயமானார். போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி ஹரித் கிராமத்தில் ஒரு பிளாஸ்டிக் பையில் மனித கைகளும், கால்களும் கிடந்தன. தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு அருகில் உள்ள கிணற்றில் மனித உடல் கண்டு எடுக்கப்பட்டது.

    ஆனால் கொலை செய்யப்பட்டவரின் தலை கிடைக்கவில்லை. இதற்கிடையே கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டது தேவேந்திர குமார் என்பது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக அவரது மனைவி மாயாதேவியை போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடந்த விசாரணையில் மாயாதேவிக்கு அதே பகுதியை சேர்ந்த அனில்யாதவ் என்பவருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

    இவர்களது கள்ளக்காதலை அறிந்த தேவேந்திர குமார் மனைவியை கண்டித்ததால் ஆத்திரமடைந்த அவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கை, கால், தலை என உடல் பாகங்களை 6 துண்டுகளாக வெட்டி நள்ளிரவில் எடுத்து சென்று வெவ்வேறு பகுதிகளில் வீசி எறிந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மாயாதேவி மற்றும் அவரது கள்ளக்காதலன் அனில் யாதவ், அவரது கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
    • கொலை செய்துவட்டு தப்பி ஓடிய பாலு குளத்தேரி பகுதியில் பதுங்கி இருந்தார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே உள்ள புது குடியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (வயது 30). கூலி வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டை பழைய ரேசன் கடை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மகள் புவனேஷ்வரி (26)-க்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

    பாலுவின் வீட்டின் எதிரில் அவருடைய உறவினர் விஜய் (26) என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். புவனேஸ்வரிக்கும், விஜய்க்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி கணவரை பிரிந்து கீழ்புதுப்பேட்டையில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு வந்தார். மேலும் அவர் கர்ப்பமானார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    மனைவி பிரிந்து சென்றதால் பாலுவுக்கு குடிப்பழக்கம் அதிகரித்தது. தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவர் மனைவி இல்லாமல் தவித்தார் .

    நேற்று இரவு அவர் அதிக அளவில் மது குடித்ததாக தெரிகிறது. இதனைதொடர்ந்து கீழ் புதுப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனை பாலுவின் மாமியார் பாரதி (45) தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த பாலு கத்தியால் அவருடைய மாமியாரை வெட்ட முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாரதி அவரிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார். பாலு அவரை விரட்டி சென்று தலை மற்றும் பின்பக்க கழுத்து ஆகிய இடங்களில் மாறி மாறி வெட்டினார். இதில் பாரதி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதனைக் கண்ட பாலு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த பாலுவுக்கு ஆத்திரம் தீரவில்லை. மனைவியின் பிரிவுக்கு காரணமான விஜயையும் வெட்டிக்கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.

    இதனையடுத்து புதுப்பேட்டையில் இருந்து அவருடைய சொந்த ஊரான புதுக்குடியானூர் கிராமத்திற்கு வந்தார்.

    அப்போது வாலிபர் விஜய் வீட்டில் இல்லை. அவர்கள் அதன் அருகில் ஒரு புதிய வீடு ஒன்று கட்டி வருகிறார்கள். அங்கு இருக்கலாம் என சந்தேகம் அடைந்த பாலு அங்கு விஜயை தேடி சென்றார்.

    அப்போது விஜயின் தந்தை அண்ணாமலை (60) அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ஆத்திரம் அடைந்த பாலு இரும்பு கம்பியை எடுத்து அண்ணாமலையின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    அண்ணாமலையின் மனைவி ராஜேஸ்வரி (55) வீட்டில் உள்ள மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். பாலு அவரையும் இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்தார்.

    ஒரே நாளில் மாமியார் மற்றும் உறவினர் 2 பேரை கொலை செய்த பாலு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது பற்றி தகவல் அறிந்த வாலாஜா மற்றும் கொண்டபாளையம் போலீசார் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்துவட்டு தப்பி ஓடிய பாலு குளத்தேரி பகுதியில் பதுங்கி இருந்தார். அவரை வாலாஜா போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது பாலு கீழே விழுந்தார். அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

    போலீசார் அவரை வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மாவு கட்டு போட்டனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார் பாலுவை கைது செய்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 3 கொலைகள் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • பெண் தொழிலாளி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வாலிபரிடம் வற்புறுத்தினார்.
    • வாலிபருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளதால் திருமணம் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார்.

    திருப்பதி:

    மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜில் பிகர் அலி (வயது 43). இவர் தெலுங்கானா மாநிலம், சந்திராயங் குட்டாவில் தங்கி இருந்து கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த பெண் கட்டிட தொழிலாளியான கேதாவாத் புஜ்ஜி என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் பெண் தொழிலாளி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஜில் பிகர் அலியிடம் வற்புறுத்தினார்.

    ஜில் பிகர் அலிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளதால் திருமணம் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜில்பிகர் அலி கள்ள உறவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    பின்னர் அவரது உடலை படுக்கையில் போட்டு தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றார். வீட்டில் இருந்து புகை வந்ததால் அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கேதாவாத் புஜ்ஜி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜில் பிகர் அலியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.

    மதுரை :

    மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது35). என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும்(24) திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

    இதன்படி மதுரைக்கு வந்த அவர் கடந்த மாதம் 27-ந் தேதி மகளை பள்ளியில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஜி.ஆர்.நகர், பொன்விழா நகர் அருகே மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்த 2 பேர் அவரை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி, தனது கணவர் மீதான தாக்குதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்தநிலையில் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதில் வைஷ்ணவி ஒருவரிடம் பல மணி நேரம் பேசியது தெரியவந்தது. வைஷ்ணவிக்கும், சிவகங்கையை சேர்ந்த அவரது தாய்மாமா மகன் என்ஜினீயரான வெங்கடேசனுக்கும்(25) கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. செந்தில்குமார் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்ததால் அவர்களால் சரிவர சந்திக்க முடியவில்லை. எனவே அவரது ஒரு கை, காலை வெட்டினால் அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்று வைஷ்ணவி கொடூரமாக எண்ணினார். இதுகுறித்து வெங்கடேசனிடம் தெரிவித்தார்.

    எனவே அவர் தனது நண்பரான, கூலிப்படையை சேர்ந்த சாந்தகுமாரிடம் கூறினார். அதற்கு அவர் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. வைஷ்ணவி தனது நகைகளை கள்ளக்காதலன் வெங்கடேசன் மூலம் சிவகங்கையில் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். அவர்கள் தெரிவித்தப்படி சாந்தகுமாரும், மற்றொருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து செந்தில்குமாரை வெட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. எனவே நேற்று இரவு வைஷ்ணவி, அவரது கள்ளக்காதலன் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.

    • 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
    • தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிரேமா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே பாப்பினி-வரதப்பம்பாளையம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில். இவரது மனைவி பிரேமா (வயது 30). இவா்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக பிரேமா கணவரைப் பிரிந்து வரதப்பம்பாளையம் காலனியில் தனி வீடு எடுத்து குழந்தைகளுடன் தங்கி, அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்துள்ளாா்.

    இந்நிலையில், பிரேமாவுக்கும், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் பகுதியைச் சோ்ந்த விஜய் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜய், பிரேமாவை சந்திக்க வரதப்பம்பாளையம் காலனிக்கு வந்துள்ளாா். அங்கு வீட்டில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னா் சிறிது நேரத்தில் விஜய் அங்கிருந்து சென்றுள்ளாா். அவா் சென்ற சில நிமிடங்களில் வீட்டில் பிரேமாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து பாா்த்தபோது, பிரேமா உடலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

    உடல் முழுவதும் தீவிர தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிரேமா மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரேமா உயிரிழந்தாா்.

    இறப்பதற்கு முன் போலீசாரிடம் பிரேமா அளித்த மரண வாக்குமூலத்தில், விஜய் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்ததாகத் தெரிவித்துள்ளாா்.இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், விஜய், பிரேமா ஆகியோா் பழகி வந்த நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பிரேமா பரப்பியதால், ஆத்திரமடைந்த விஜய் பிரேமாவை எரித்துக் கொல்ல முயற்சி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் அவரிடமிருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு யாரையாவது காதலித்து ஏமாற்றியுள்ளாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • சில ஆண்டுகளுக்குப் பிறகு ரூபிக்கு முகேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
    • கடந்த பிப்ரவரி மாதத்தில் நீரஜூம் ரூபியும் திருமணம் செய்துக் கொண்டனர்.

    மனிதர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி தீர்க்க கோபத்தின் உச்சத்தில் ஏதேதோ செய்வார்கள். ஆனால், பீகாரில் ஒருவர் காதலனுடன் ஓடிச்சென்ற மனைவியை பழி தீர்க்க வினோத செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த நீரஜ் என்பவருக்கும், ரூபி தேவி என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு ரூபிக்கு முகேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீரஜூக்கு தெரியவந்ததை அடுத்து, இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டைவிட்டு வெளியேறிய ரூபி தனது கள்ளக்காதலன் முகேஷூடன் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நீரஜ், தனது மனைவியை முகேஷ் கடத்தியதாக காவல் துறையில் புகார் அளித்தார்.

    மேலும், இந்த விஷயத்திற்கு முடிவுகட்ட நீரஜ் பஞ்சாயத்தை கூட்டினார். ஆனால், பஞ்சாயத்திற்கு இணங்க மறுத்த முகேஷ், ரூபியுடன் அன்றே ஊறைவிட்டு வெளியேறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த நீரஜ், மனைவி ரூபியை பழிவாங்குவதற்காக, முகேஷின் மனைவியான அதே பெயரைக் கொண்ட ரூபி என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீரஜூம் ரூபியும் திருமணம் செய்துக் கொண்டனர். முகேஷூக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த வினோதமான திருமணங்கள் பற்றிய செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

    • கடந்த 17-ந்தேதி காலை பெருங்குடி ஏரியில் ராஜீவ் காந்தி பிணமாக கிடந்தார்.
    • உடலை ஏரியில் வீசி விட்டு விஜயகாந்த் எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்று உள்ளார்.

    வேளச்சேரி:

    பெருங்குடி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(வயது32). கூலித்தொழிலாளி. இவர் உறவினரான விஜயகாந்த் என்பவரின் வீட்டில் தங்கி வேலைபார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி காலை பெருங்குடி ஏரியில் ராஜீவ் காந்தி பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது உறவினரான விஜயகாந்த் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் விஜயகாந்தை போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது, தனது மனைவியுடன் ராஜீவ்காந்தி கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் கொலை செய்ததாக தெரிவித்து உள்ளார்.

    கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் ஆத்திரத்தில் இருந்த விஜயகாந்த் கடந்த 16-ந்தேதி இரவு உறவினரான ராஜீவ்காந்தியை தீர்த்துகட்ட முடிவு செய்து பெருங்குடி ஏரிக்கரைக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு இருவரும் மது குடித்தபோது போதையில் இருந்த ராஜீவ்காந்தியை தாக்கி அவரது கழுத்தை நெரித்து விஜயகாந்த் கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    பின்னர் உடலை ஏரியில் வீசி விட்டு விஜயகாந்த் எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்று உள்ளார்.

    இந்த கொலை தொடர்பாக கைதான விஜயகாந்திடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • விஜயின் வீட்டுக்கு அடிக்கடி மாரேஷ் சென்று வந்துள்ளார்.
    • சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மாரேசின் அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாரேசை மீட்டார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் அருகே நடந்த நெஞ்சை பதறவைக்கும் இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள பட்டலபள்ளியை சேர்ந்தவர் விஜய் (வயது 36). இவர் சிந்தாமணி டவுனில் தனது மனைவி மாலாவுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மாரேஷ் (34). இவரது சொந்த ஊர் பாகேபள்ளி தாலுகா மந்தம்பள்ளி கிராமம் ஆகும். நண்பர்களான இவர்கள் இருவரும் சரக்கு ஆட்டோவில் துணிகளை எடுத்து கொண்டு கிராமம், கிராமமாக சென்று வியாபாரம் செய்து வந்தனர்.

    இதனால் விஜயின் வீட்டுக்கு அடிக்கடி மாரேஷ் சென்று வந்துள்ளார். மாலாவுடனும் அவர் சிரித்து பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் விஜய், தனது மனைவியுடன் மாரேசுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்துள்ளார். இந்த சந்தேகம் அவருக்கு நாளுக்கு நாள் வலுத்து வந்துள்ளது.

    இதனால் மாரேசை கொலை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று சரக்கு ஆட்டோவில் விஜய், மாரேஷ் மற்றும் தனது மற்றொரு நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு சித்தேப்பள்ளி கிராஸ் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றார். அங்கு சரக்கு ஆட்டோவை நிறுத்திய விஜய், மாரேசிடம் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறி தகராறு செய்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விஜய், மாரேசை கீழே தள்ளி தான் வைத்திருந்த கத்தியால், ஆட்டை அறுப்பது போல் மாரேசின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் மாரேசின் கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறியது. அதில் விஜய் தனது வாயை வைத்து உறிஞ்சி ரத்தம் குடித்த கொடூரத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை விஜயுடன் சென்ற அவரது மற்றொரு நண்பர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

    இதற்கிடையே சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மாரேசின் அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாரேசை மீட்டார். பின்னர் மாரேஷ் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இருதரப்பினரும் சமரச பேச்சுவார்த்தைக்கு தயாராகி வந்துள்ளனர்.

    இந்தநிலையில், விஜய், மாரேசின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் திடீரென்று வைரலானது. இது காண்போரின் நெஞ்சை பதறவைப்பதாக இருந்தது. கடந்த 19-ந்தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இந்த வீடியோவின் அடிப்படையில் கெஞ்சர்லஹள்ளி போலீசார் மாரேசிடம் புகார் பெற்று விஜயை கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனது மனைவியுடன் மாரேஷ் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தில் அவரது கழுத்தை அறுத்து ரத்தம் குடித்ததாக விஜய் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகமடைந்த துணி வியாபாரி நண்பரின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    ×