search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal affair"

    • விஜயின் வீட்டுக்கு அடிக்கடி மாரேஷ் சென்று வந்துள்ளார்.
    • சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மாரேசின் அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாரேசை மீட்டார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் அருகே நடந்த நெஞ்சை பதறவைக்கும் இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள பட்டலபள்ளியை சேர்ந்தவர் விஜய் (வயது 36). இவர் சிந்தாமணி டவுனில் தனது மனைவி மாலாவுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மாரேஷ் (34). இவரது சொந்த ஊர் பாகேபள்ளி தாலுகா மந்தம்பள்ளி கிராமம் ஆகும். நண்பர்களான இவர்கள் இருவரும் சரக்கு ஆட்டோவில் துணிகளை எடுத்து கொண்டு கிராமம், கிராமமாக சென்று வியாபாரம் செய்து வந்தனர்.

    இதனால் விஜயின் வீட்டுக்கு அடிக்கடி மாரேஷ் சென்று வந்துள்ளார். மாலாவுடனும் அவர் சிரித்து பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் விஜய், தனது மனைவியுடன் மாரேசுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்துள்ளார். இந்த சந்தேகம் அவருக்கு நாளுக்கு நாள் வலுத்து வந்துள்ளது.

    இதனால் மாரேசை கொலை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று சரக்கு ஆட்டோவில் விஜய், மாரேஷ் மற்றும் தனது மற்றொரு நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு சித்தேப்பள்ளி கிராஸ் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றார். அங்கு சரக்கு ஆட்டோவை நிறுத்திய விஜய், மாரேசிடம் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறி தகராறு செய்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விஜய், மாரேசை கீழே தள்ளி தான் வைத்திருந்த கத்தியால், ஆட்டை அறுப்பது போல் மாரேசின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் மாரேசின் கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறியது. அதில் விஜய் தனது வாயை வைத்து உறிஞ்சி ரத்தம் குடித்த கொடூரத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை விஜயுடன் சென்ற அவரது மற்றொரு நண்பர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

    இதற்கிடையே சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மாரேசின் அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாரேசை மீட்டார். பின்னர் மாரேஷ் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இருதரப்பினரும் சமரச பேச்சுவார்த்தைக்கு தயாராகி வந்துள்ளனர்.

    இந்தநிலையில், விஜய், மாரேசின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் திடீரென்று வைரலானது. இது காண்போரின் நெஞ்சை பதறவைப்பதாக இருந்தது. கடந்த 19-ந்தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இந்த வீடியோவின் அடிப்படையில் கெஞ்சர்லஹள்ளி போலீசார் மாரேசிடம் புகார் பெற்று விஜயை கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனது மனைவியுடன் மாரேஷ் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தில் அவரது கழுத்தை அறுத்து ரத்தம் குடித்ததாக விஜய் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகமடைந்த துணி வியாபாரி நண்பரின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 17-ந்தேதி காலை பெருங்குடி ஏரியில் ராஜீவ் காந்தி பிணமாக கிடந்தார்.
    • உடலை ஏரியில் வீசி விட்டு விஜயகாந்த் எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்று உள்ளார்.

    வேளச்சேரி:

    பெருங்குடி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(வயது32). கூலித்தொழிலாளி. இவர் உறவினரான விஜயகாந்த் என்பவரின் வீட்டில் தங்கி வேலைபார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி காலை பெருங்குடி ஏரியில் ராஜீவ் காந்தி பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது உறவினரான விஜயகாந்த் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் விஜயகாந்தை போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது, தனது மனைவியுடன் ராஜீவ்காந்தி கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் கொலை செய்ததாக தெரிவித்து உள்ளார்.

    கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் ஆத்திரத்தில் இருந்த விஜயகாந்த் கடந்த 16-ந்தேதி இரவு உறவினரான ராஜீவ்காந்தியை தீர்த்துகட்ட முடிவு செய்து பெருங்குடி ஏரிக்கரைக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு இருவரும் மது குடித்தபோது போதையில் இருந்த ராஜீவ்காந்தியை தாக்கி அவரது கழுத்தை நெரித்து விஜயகாந்த் கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    பின்னர் உடலை ஏரியில் வீசி விட்டு விஜயகாந்த் எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்று உள்ளார்.

    இந்த கொலை தொடர்பாக கைதான விஜயகாந்திடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • சில ஆண்டுகளுக்குப் பிறகு ரூபிக்கு முகேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
    • கடந்த பிப்ரவரி மாதத்தில் நீரஜூம் ரூபியும் திருமணம் செய்துக் கொண்டனர்.

    மனிதர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி தீர்க்க கோபத்தின் உச்சத்தில் ஏதேதோ செய்வார்கள். ஆனால், பீகாரில் ஒருவர் காதலனுடன் ஓடிச்சென்ற மனைவியை பழி தீர்க்க வினோத செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த நீரஜ் என்பவருக்கும், ரூபி தேவி என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு ரூபிக்கு முகேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீரஜூக்கு தெரியவந்ததை அடுத்து, இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டைவிட்டு வெளியேறிய ரூபி தனது கள்ளக்காதலன் முகேஷூடன் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நீரஜ், தனது மனைவியை முகேஷ் கடத்தியதாக காவல் துறையில் புகார் அளித்தார்.

    மேலும், இந்த விஷயத்திற்கு முடிவுகட்ட நீரஜ் பஞ்சாயத்தை கூட்டினார். ஆனால், பஞ்சாயத்திற்கு இணங்க மறுத்த முகேஷ், ரூபியுடன் அன்றே ஊறைவிட்டு வெளியேறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த நீரஜ், மனைவி ரூபியை பழிவாங்குவதற்காக, முகேஷின் மனைவியான அதே பெயரைக் கொண்ட ரூபி என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீரஜூம் ரூபியும் திருமணம் செய்துக் கொண்டனர். முகேஷூக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த வினோதமான திருமணங்கள் பற்றிய செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

    • 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
    • தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிரேமா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே பாப்பினி-வரதப்பம்பாளையம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில். இவரது மனைவி பிரேமா (வயது 30). இவா்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக பிரேமா கணவரைப் பிரிந்து வரதப்பம்பாளையம் காலனியில் தனி வீடு எடுத்து குழந்தைகளுடன் தங்கி, அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்துள்ளாா்.

    இந்நிலையில், பிரேமாவுக்கும், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் பகுதியைச் சோ்ந்த விஜய் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜய், பிரேமாவை சந்திக்க வரதப்பம்பாளையம் காலனிக்கு வந்துள்ளாா். அங்கு வீட்டில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னா் சிறிது நேரத்தில் விஜய் அங்கிருந்து சென்றுள்ளாா். அவா் சென்ற சில நிமிடங்களில் வீட்டில் பிரேமாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து பாா்த்தபோது, பிரேமா உடலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

    உடல் முழுவதும் தீவிர தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிரேமா மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரேமா உயிரிழந்தாா்.

    இறப்பதற்கு முன் போலீசாரிடம் பிரேமா அளித்த மரண வாக்குமூலத்தில், விஜய் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்ததாகத் தெரிவித்துள்ளாா்.இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், விஜய், பிரேமா ஆகியோா் பழகி வந்த நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பிரேமா பரப்பியதால், ஆத்திரமடைந்த விஜய் பிரேமாவை எரித்துக் கொல்ல முயற்சி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் அவரிடமிருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு யாரையாவது காதலித்து ஏமாற்றியுள்ளாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.

    மதுரை :

    மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது35). என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும்(24) திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

    இதன்படி மதுரைக்கு வந்த அவர் கடந்த மாதம் 27-ந் தேதி மகளை பள்ளியில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஜி.ஆர்.நகர், பொன்விழா நகர் அருகே மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்த 2 பேர் அவரை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி, தனது கணவர் மீதான தாக்குதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்தநிலையில் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதில் வைஷ்ணவி ஒருவரிடம் பல மணி நேரம் பேசியது தெரியவந்தது. வைஷ்ணவிக்கும், சிவகங்கையை சேர்ந்த அவரது தாய்மாமா மகன் என்ஜினீயரான வெங்கடேசனுக்கும்(25) கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. செந்தில்குமார் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்ததால் அவர்களால் சரிவர சந்திக்க முடியவில்லை. எனவே அவரது ஒரு கை, காலை வெட்டினால் அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்று வைஷ்ணவி கொடூரமாக எண்ணினார். இதுகுறித்து வெங்கடேசனிடம் தெரிவித்தார்.

    எனவே அவர் தனது நண்பரான, கூலிப்படையை சேர்ந்த சாந்தகுமாரிடம் கூறினார். அதற்கு அவர் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. வைஷ்ணவி தனது நகைகளை கள்ளக்காதலன் வெங்கடேசன் மூலம் சிவகங்கையில் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். அவர்கள் தெரிவித்தப்படி சாந்தகுமாரும், மற்றொருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து செந்தில்குமாரை வெட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. எனவே நேற்று இரவு வைஷ்ணவி, அவரது கள்ளக்காதலன் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.

    • மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
    • கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .

    திருப்பூர் : 

    திருப்பூர் அடுத்த அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ,பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுசீலா. இவரும் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சுசிலா வேலை பார்த்த நிறுவனத்தின் மேலாளராக இருந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவன் கோபாலுக்கு தெரிந்ததால் அவரை கொலை செய்ய மனைவி சுசீலாவும் கள்ளக்காதலன் மாரீஸ்வரனும் முடிவு செய்தனர்.

    அதன்படி இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கோபாலை கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கோபாலின் மனைவி சுசீலா ,கள்ளக்காதலன் மாரீஸ்வரன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த மதன் குமார், மணிகண்டன், வினோத், லோகேஸ்வரன், விஜய் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .அந்த உத்தரவையடுத்து கோவை சிறையில் உள்ள 7 பேருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை வழங்கினர்.

    • தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட, அந்த பெண்ணுடன் சேர்ந்து பாண்டியன் நகரில் கணவர் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
    • 20க்கும் மேற்பட்ட முறை புகார் அளித்தும் போலீசார் அவரது கணவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதாக புகார்.

    திருப்பூர் :

    திருப்பூர் எம் .எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் சுமதி- . இவருக்கு 17 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே சுமதியின் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவர் சுமதி மற்றும் மகளை விட்டு பிரிந்து சென்றார்.

    தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட , அந்த பெண்ணுடன் சேர்ந்து பாண்டியன் நகரில் கணவர் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து சுமதி திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் திருவாரூர் காவல் நிலையம் என மாறி மாறி 20க்கும் மேற்பட்ட முறை புகார் அளித்தும் போலீசார் அவரது கணவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமடைந்த சுமதி தனது கணவரை அந்த பெண்ணிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார். 

    • திருமணமான 15 நாட்களில் குடும்ப தகராறு காரணமாக பவித்ரா கணவரை பிரிந்து தனது ெபற்றோர் வீட்டுக்கு சென்றார்.
    • சிவக்குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலப்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    கோவை:

    கோவை மேட்டுப்பாளையம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 29). கூலிெதாழிலாளி. இவருக்கம் தாசம்பாளையம் பகுதியை சேர்ந்த பவித்ரா (27) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் திருமணமான 15 நாட்களில் குடும்ப தகராறு காரணமாக பவித்ரா கணவரை பிரிந்து தனது ெபற்றோர் வீட்டுக்கு சென்றார். அதன் பின்னர் பலமுறை சிவக்குமார், பவித்ராவின் வீட்டுக்கு சென்று அவரை சமாதானம் செய்து தன்னுடன் வந்து வாழுமாறு கூறினார். ஆனால் அவர் சிவக்குமாருடன் செல்ல மறுத்தார். தொடர்ந்து சிவக்குமார், பவித்ராவின் வீட்டுக்கு சென்று அவரை தொந்தரவு செய்து வந்ததால் அவர் மீது பவித்ராவின் குடும்பத்தினர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் தெரிவி த்தனர்.

    இதனால் அவர் அங்கு செல்வதை தவிர்த்தார். இந்த நிலையில் சிவக்குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலப்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனை அறிந்த சிவகுமாரின் தந்தை அவரை கண்டித்தார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பிய அவர் ரத்த வாந்தி எடுத்து மயங்கினார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பெறாமல் வீடு திரும்பினார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரப்பப்பட்டது.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போபால் :

    மத்தியபிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டம் பொர்படவ் கிராமத்தை சேர்ந்த நபர் மங்கிலால். இவரது மனைவிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வேறொரு நபருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், மங்கிலால் தனது மனைவியை உறவினர்களுடன் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளார். அந்த பெண்ணை கடுமையாக தாக்கி, உடைகளை கலைந்து மானபங்கம் செய்துள்ளனர். பின்னர், அந்த பெண்ணை அவரது கணவர் மங்கிலாலை தோளில் சுமக்க வைத்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரை தோளில் சுமந்தபடி ஊர் முழுவதும் சுற்றவைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரப்பப்பட்டது.

    இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் கணவன் மங்கிலால் உள்பட 11 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி லாட்ஜில் வி‌ஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடியில் பெண் பலியான நிலையில் சிகிச்சை பெற்று வந்த காதலன் இன்று உயிரிழந்தார்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்வதால் இங்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் வருகை தருகிறார்கள்.

    இவர்கள், இங்குள்ள லாட்ஜுக்கள், தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி கன்னியாகுமரி மற்றும் அருகில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கிறார்கள். காதல் ஜோடிகள், கள்ளக்காதலர்களும் இங்குள்ள சில விடுதிகளில் தங்கி ஜாலியாக பொழுதை கழிப்பதால் இங்கு தங்குபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

    லாட்ஜுகளில் அறை எடுப்பவர்கள் தங்களது முகவரி சான்று நகலை அளிக்க வேண்டும். மேலும் சந்தேகப்படும் வகையில் இங்கு தங்குபவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். போலீசாரும் அடிக்கடி சோதனை நடத்துவார்கள்.

    ஆனாலும் கன்னியாகுமரியில் சில லாட்ஜுகளில் காதல் ஜோடி, கள்ளக்காதலர்கள் அறை எடுத்து தங்கி தற்கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள கருமாந்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 27). கோபி செட்டிப்பாளையம் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்த கார்த்திகா (26) ஆகிய கள்ளக்காதல் ஜோடி கன்னியாகுமரி லாட்ஜில் அறை எடுத்து தங்கி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

    கார்த்திகாவுக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சதீசுக்கு திருமணம் ஆகவில்லை. சதீஷ் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கார்த்திகா ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    கள்ளக்காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இது உறவினர்களுக்கு தெரிய வந்ததால் சதீசும், கார்த்திகாவும் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தனர். கன்னியாகுமரி வந்து லாட்ஜில் தங்கியிருந்து பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

    எப்படியும் தங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டதால் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவரும் வி‌ஷத்தை குடித்தனர். அதன் பிறகு தங்களது கைகளையும் பிளேடால் வெட்டிக் கொண்டனர்.

    இதில் கார்த்திகா, லாட்ஜ் அறையிலேயே இறந்து விட்டார். உயிருக்கு போராட்டிக் கொண்டிருந்த சதீஷை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்ததனர்.

    அங்கு சதீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.30 மணிக்கு சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இறந்த கார்த்திகாவின் உடலும் அதே ஆஸ்பத்திரியில் உள்ளது. அவர்கள் இருவரின் உடல் பிரேத பரிசோதனைகளும் இன்று நடக்கிறது. இதையொட்டி சதீஷ் மற்றம் கார்த்திகாவின் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
    திருவாரூர் அருகே கள்ளக்காதலியை நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி கற்பழித்த சம்பவம் குறித்து 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாபநாசம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா கோவிந்த குடியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது45). இவரது மனைவி ஜெயபாரதி(38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். தற்போது கார்த்திகேயன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்கு முன் ஒரு தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பஸ்சில் பாபநாசம் அருகே உள்ள கோபுராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(32) என்பவர் டிரைவராக இருந்துள்ளார். இதில் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

    கார்த்திகேயன் வெளிநாட்டில் இருந்து வரும் நிலையில் இவரது மனைவி ஜெயபாரதிக்கும், வெங்கடேசனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தனது கள்ளத்தொடர்பு பற்றி வெங்கடேசன் குடிபோதையில் தனது நண்பர்கள் சிலரிடம் கூறியுள்ளார். இதனால் அவர்கள் தாங்களும் ஜெயபாரதியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு வெங்கடேசன் கோபுராஜபுரத்துக்கு ஜெயபாரதியை அழைத்து வந்து அப்பகுதியில் உள்ள ஒரு தோப்புக்குள் சென்று பேசிக் கொண்டிருந்தனராம்.

    அப்போது வெங்கடேசன் ரகசியமாக தனது நண்பர்களான கோட்டுச் சேரியை சேர்ந்த அய்யப்பன்(18), கார்த்திக்(20), சுந்தரப்பெருமாள் கோவில் பகுதி ஜெகன்(19) ஆகிய 3 பேரையும் போன் செய்து வர செய்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த 3 பேரும் வெங்கடேசனுடன் சேர்ந்து ஜெயபாரதியை மிரட்டி கற்பழித்துள்ளனர்.

    மேலும் அவர் அணிந்திருந்த செயின், மோதிரம், தோடு உள்ளிட்ட 5 பவுன் நகைகளையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனராம்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயபாரதி அங்கிருந்து பாபநாசம் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவம் பற்றி போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோபுராஜபுரத்தில் பதுங்கியிருந்த வெங்கடேசன் உள்பட 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    கள்ளக்காதலினால் மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கீழ் கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற கணவனை விடுதலை செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. #Highcourt #IllegalAffair
    சென்னை:

    சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கும், சங்கீதா என்பவருக்கும் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், மாணிக்கத்துக்கு, வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்தது. இதை சங்கீதா கடுமையாக எதிர்த்தார். இதை மாணிக்கம் கேட்காததால், தன்னுடைய 18 மாத பெண் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து சங்கீதா தற்கொலை செய்து கொண்டார்.



    இதுகுறித்து மாணிக்கம் மீது தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் கோர்ட்டு, தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமை குற்றத்துக்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மாணிக்கம் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    இந்த வழக்கில் மாணிக்கம் மீது வரதட்சணை கேட்டு மனைவி சங்கீதாவை கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை சங்கீதாவின் தாயார் மட்டுமே சுமத்தியுள்ளார். மற்ற சாட்சிகள் இதற்கு ஆதாரமாக எந்த ஒரு வாக்குமூலத்தையும் கொடுக்கவில்லை.

    இந்த வழக்கில் வட்டார வருவாய் அலுவலரிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில் கூட, மனுதாரர் வரதட்சணை கொடுமை செய்யவில்லை என்று கூறியுள்ளார். அதேபோல பிற சாட்சிகள் வரதட்சணை கொடுமை குறித்து எதுவும் கூறவில்லை. அதனால் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அடுத்தப்படியாக தற்கொலைக்கு தூண்டினார் என்ற குற்றச்சாட்டு மனுதாரர் மீது உள்ளது.

    கள்ளக்காதல் விவகாரத்தில், தன்னுடைய மனைவியை ஆத்திரமூட்டி, அவரை தற்கொலை செய்ய வைத்தார் என்பதை போலீசார் நிரூபிக்கவில்லை. அந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு உருப்படியான ஆதாரங்களையும் போலீசார் சமர்ப்பிக்கவில்லை. சமீபத்தில் பிரகாஷ்பாபு என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்தால், மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்று எல்லா சூழ்நிலைகளிலும் கணவனை தண்டிக்க முடியாது. அதேநேரம், இந்த கள்ளக்காதல் விவகாரத்தினை சுட்டிக்காட்டி, விவாகரத்து பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறி உள்ளது

    மனுதாரர் 2008-ம் ஆண்டே ஜாமீனில் வெளியில் வந்து, மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு, 3 குழந்தைகள் உள்ளனர் என்றும் கூறப்பட்டது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, கள்ளக்காதலினால் மனைவியை தற்கொலைக்கு மனுதாரர் தூண்டினார் என்று மாணிக்கத்தை தண்டிக்க முடியாது. அதனால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்கிறேன். கீழ் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.  #Highcourt #IllegalAffair


    ×