என் மலர்
நீங்கள் தேடியது "#கொலை"
- பிரேத பரிசோதனையில் ஜான் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அருகே கீழப்பெருவிளை இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் (வயது 64), ஜோதிடர். இவரது மனைவி விஜயகுமாரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் கோவையில் தங்கி படித்து வருகிறார். இதனால் ஜான் ஸ்டீபனும் விஜயகுமாரியும் இங்கு வசித்து வந்தனர்.
வீட்டு வேலைகள் செய்து வரும் விஜயகுமாரி சம்பவத்தன்று வழக்கம் போல் வீட்டு வேலை செய்வதற்காக வெளியே சென்று இருந்தார். மாலை 5 மணிக்கு அவர் வீட்டிற்கு வந்தபோது ஜான் ஸ்டீபன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஜான் ஸ்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயகுமாரி புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் ஜான் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை தொடர்பாக இரணியல் அருகே உள்ள கட்டி மாங்கோடு பகுதியை சேர்ந்த கலையரசி (43), நெல்லை மாவட்டம் கருவேலங்குளத்தைச் சேர்ந்த நம்பிராஜன் (25) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட கலையரசி கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் தன் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக ஜோதிடம் பார்ப்பதற்காக ஜான் ஸ்டீபனிடம் வந்து உள்ளார். அப்போது சில பரிகாரங்களை செய்தால் கணவருடன் சேர்ந்து வாழலாம் என்று ஜான் ஸ்டீபன் கூறியதுடன் பணமும் வாங்கியுள்ளார்.
ஆனால் ஜோதிடம் பார்த்த பிறகு கணவன்- மனைவி இடையேயான தகராறு தான் அதிகரித்தது. இதனை ஜான் ஸ்டீபனிடம் தெரிவித்த கலையரசி, தான் கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த விரோதத்தில் தான் ஜான் ஸ்டீபனை தீர்த்து கட்ட கலையரசி முடிவு செய்தார்.
கூலிப்படையை ஏவி கொலை செய்ய அவர் திட்டம் திட்டினார். இதற்காக நெல்லை மாவட்டம் கருவேலங்குளத்தைச் சேர்ந்த நம்பி ராஜனை தொடர்பு கொண்டு பேசினார். அதற்காக அவருக்கு பணமும் கொடுத்து உள்ளார். ஜான் ஸ்டீபனை தீர்த்து கட்டுவதற்காக அவரது வீட்டிற்கு நம்பிராஜன் வந்துள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த ஜான் ஸ்டீபனை துண்டால் கழுத்தை இறுக்கியும், தரையில் அடித்தும் கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்து உள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள கலையரசி மற்றும் நம்பி ராஜனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இருவரையும் போலீசார் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்கள்.
- மனைவி காணாமல் போனது குறித்து திவாகர் வனஸ்தலிபுரம் போலீசில் புகார் செய்தார்.
- தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் சென்றுள்ளனர்.
திருப்பதி:
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் திவாகர். இவரது மனைவி பிந்து (வயது 25). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம், சங்கர் பள்ளிக்கு வந்தனர். திவாகர் பிளம்பர் வேலை செய்து வந்தார்.
பிந்து வீட்டு வேலைக்கு சென்று வந்த போது அங்கீத் சாகேத் (25) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த திவாகர் சிந்தில் குண்டாவிற்கு வீட்டை மாற்றினார். கடந்த 8-ந் தேதி பிந்து கள்ளக்காதலன் அங்கித் சாகேத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
கள்ளக்காதல் ஜோடி புப்புலகுடாவில் உள்ள நண்பரின் வீட்டில் 3 நாள் தங்கி இருந்தனர். மனைவி காணாமல் போனது குறித்து திவாகர் வனஸ்தலிபுரம் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அங்கித் சாகேத்தின் நண்பர் ஒருவர் அவருக்கு போன் செய்து புப்புல குடா அனந்த பத்மநாபசாமி கோவில் அருகே வருமாறு தெரிவித்தார்.
நண்பர் கூறிய இடத்திற்கு அங்கித் சாகேத் மற்றும் பிந்து ஆகியோர் சென்றனர். அப்போது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து அங்கித் சாகேத் மது அருந்தினார். மது போதை ஏறியதும் நண்பர்களுக்கும், அங்கித் சாகேத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் அங்கித் சாகேத்தை தலையில் சரமாரியாக கத்தியால் குத்தியும், முகத்தில் கல்லை போட்டு கொலை செய்தனர். இதனைக் கண்ட பிந்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவரையும் பிடித்து கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கித் சாகேத் மற்றும் பிந்துவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் சென்றுள்ளனர்.
- 5 பேரின் உடல்களிலும் காயங்கள் இருந்தன.
- பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள லசாரிகேட் பகுதியை சேர்ந்தவர் மொயின். இவரது மனைவி அஸ்மா. இவர்களுக்கு அப்சா (வயது 8), அஜிசா (4) மற்றும் அதிபா (1) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர்களின் வீடு நேற்று முன்தினம் முதல் பூட்டப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு மொயின் மற்றும் அவரது மனைவி அஸ்மா ஆகியோர் தரையில் பிணமாக கிடந்தனர். அவர்களது 3 குழந்தைகளும் வீட்டில் இருந்த படுக்கை பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணமாக கிடந்தனர்.
இதைக்கண்டு போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 5 பேரின் உடல்களிலும் காயங்கள் இருந்தன. எனவே மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களை வைத்து அவர்களை அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இறந்தவர்களில் ஒருவரின் கால்கள் பெட்ஷீட்டால் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் கதவு பூட்டப்பட்டுள்ளது.
எனவே கொலையாளிகள் குடும்பத்தினருக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம் என கருதுகிறோம். பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
- சிறுவன் அங்கு வந்து திடீரென அம்மிக்கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுக்கொலை செய்தான்.
- விசாரணைக்கு பின்னர் சிறுவனை நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் 17 வயதான மூத்த மகனுக்கு திடீரென மனநலம் சற்று பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று சிறுவனின் தந்தை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், இரவில் சிறுவனின் 45 வயதான தாய் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது சிறுவன் அங்கு வந்து திடீரென அம்மிக்கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுக்கொலை செய்தான். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போன அந்த சிறுவன், தனது தந்தைக்கு போன் செய்து அம்மாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டுவிட்டேன். தலையில் இருந்து ரத்தம் கொட்டுகிறது என்று கூறியுள்ளான்.
உடனே பதறிப்போன அவர், தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர்களிடம் போனில் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அந்த பெண் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். அவனை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தபோது, தனது தாயை நினைத்து தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தான்.
மேலும் அங்கிருந்த போலீசாரிடம், எனது தாயை எங்கே, நான் அவரிடம் போக வேண்டும் என்று அழுதபடியே கேட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது. தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் சிறுவனை நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
- மாயாண்டி தடுமாறி கீழே விழுந்தார்.
- கூட்டாளிகள் மேலும் 3 பேரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி கீழ நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் மணிகண்டன் (வயது 22). இவர் சென்னையில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர் நேற்று முன்தினம் வயலுக்கு சென்று விட்டு திரும்பிய போது சேரன்மகாதேவி லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த மாயாண்டி(46) மற்றும் அவரது கூட்டாளிகளான அம்பை அருகே உள்ள கோடாரங்குளத்தை சேர்நத 3 பேர் சேர்ந்து மணிகண்டனை கத்தியால் சரமாரி குத்திக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வி.கே.புரம் அருகே உள்ள கோட்டாரங்குளத்தில் சிவராமன்(25) என்பவர் கொலை செய்யப்பட்டார். அதில் மணிகண்டனின் நெருங்கிய உறவினருக்கு தொடர்பு இருந்ததாக நினைத்து, அதற்கு பழி தீர்க்கும் விதமாக சிவராமனின் தாய்மாமாவான மாயாண்டி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். நேற்று நெல்லையில் காட்டுப்பகுதியில் மாயாண்டி பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து தனிப்படையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசாரை கண்ட மாயாண்டி தப்பி ஓடினார். அவரை பின்தொடர்ந்து போலீசார் சென்ற நிலையில், மாயாண்டி தடுமாறி கீழே விழுந்தார்.
உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் மாயாண்டிக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாயாண்டியின் கூட்டாளிகள் மேலும் 3 பேரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- மூதாட்டி கொலை தொடர்பாக மாற்றுத்திறனாளி வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
- ரெயில் நிலையத்தில் மூதாட்டி லட்சுமியும் வசித்து வந்தார்.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று காலை மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்த மூதாட்டியின் பெயர் லட்சுமி (வயது 63) என்று தெரியவந்தது. அவர் சைதாப்பேட்டை ரெயில் நிலைய பகுதியிலேயே வசித்து வந்தார். ரெயில் நிலையத்துக்கு வருவோரிடம் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார்.
மூதாட்டி பிணமாக கிடந்த போது அதே ரெயில் நிலையத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி முத்து என்பவர் சந்தேகப்படும்படி அங்கு இருந்துள்ளார். அவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மூதாட்டியை மாற்றுத்திறனாளி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர். இந்த தகவலை அறிந்த மூதாட்டியின் உறவினர்கள் திடீரென்று அந்த மாற்றுத்திறனாளியை தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதற்கிடையே மூதாட்டி கொலை தொடர்பாக மாற்றுத்திறனாளி வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடீர் திருப்பமாக மூதாட்டி கொலை செய்யப்படவில்லை என்றும், அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்றும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
இதுதொடர்பாக மாற்றுத்திறனாளி முத்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
நான் சைதாப்பேட்டை ரெயில் நிலைய பகுதியில் வசித்து வருகிறேன். அதே ரெயில் நிலையத்தில் மூதாட்டி லட்சுமியும் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நானும், மூதாட்டி லட்சுமியும் மது அருந்தினோம். அப்போது நாங்கள் 2 முறை பாலியல் உறவு கொண்டோம்.
இந்த நிலையில் மீண்டும் அவருடன் உறவு கொள்ளலாம் என்று சென்றேன். அப்போது மூதாட்டி லட்சுமி அசைவின்றி காணப்பட்டார். அவரை தொட்டுப் பார்த்த போது இறந்து கிடந்தார். அவரை நான் கொலை செய்து விட்டதாக கருதி அவரது உறவினர்கள் என்னை தாக்கினார்கள்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் மூதாட்டி லட்சுமி கொலை செய்யப்படவில்லை என்றும், அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
- அண்ணன், தம்பிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல் செங்கம் குப்புசாமி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 50) விவசாயி. இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
முதல் மகன் சக்திவேல் கூலி வேலையும், இளைய மகன் மணிகண்டன் டிராக்டரும் ஓட்டி வந்தார். அண்ணன், தம்பிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் சக்திவேல் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த மணிகண்டனிடம், சக்திவேல் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி அண்ணன், தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது தம்பி என்றும் பாராமல் மார்பு, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் மணிகண்டனை சரமாரியாக குத்தினார்.
இதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேல் செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சொத்து தகராறில் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஆம்பர்பேட்டை, சாய்பாபா நகர் காலனியை சேர்ந்தவர் லிங்கா ரெட்டி (வயது 80). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி ஊர்மிளா தேவி ( 75). தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். திருமணமாகி 2 மகள்கள் அமெரிக்காவிலும் மற்றொரு மகள் வெளியூரிலும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள மகள்கள் தினமும் தங்களது பெற்றோரிடம் செல்போனில் பேசுவது வழக்கம். கடந்த 3 நாட்களாக அமெரிக்காவில் உள்ள மகள்கள் தங்களது பெற்றோருக்கு போன் செய்தனர். பெற்றோரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் சந்தேகம் அடைந்த அவர்கள் நேற்று அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது படுக்கை அறையில் லிங்கா ரெட்டி மற்றும் அவரது மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது லிங்கா ரெட்டியையும், அவரது மனைவியையும் தலையில் பலமாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் ரத்தம் உறைந்து கிடந்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சொத்து தகராறில் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாததால் குற்றவாளிகளை அடையாளம் காண்பது போலீசாருக்கு சிரமமாக உள்ளது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
- ஐகோர்ட், காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கும்படி மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
- ஆனந்த், கார்த்திக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை:
மறைந்த முன்னாள் மத்திய மந்திரி எழில்மலையின் மருமகனும், பிரபல வக்கீலுமாக இருந்தவர் காமராஜ். இவரை கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து சென்னை கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த கோர்ட்டு, காமராஜ் கொலை வழக்கை மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில், இந்த வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த ஐகோர்ட், காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கும்படி மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை அந்த வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே 9 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள அந்த வழக்கை விசாரித்து முடிக்க கெடு விதிக்கும்படி கொலையுண்ட காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி, மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், காமராஜ் கொலை வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு விட்டது. இன்று (19-ந்தேதி) அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவ கடாட்சம் இந்த வழக்கில் கைதான கல்பனா என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனந்த், கார்த்திக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
- கொலை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
- 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் குப்பனூர் வெள்ளியம்பட்டியை சேர்ந்தவர் பட்டறை சரவணன் (45) இவர் நேற்று முன்தினம் வெள்ளாளகுண்டம் பகுதியில் உள்ள தனது பீரோ பட்டறைக்கு காரில் சென்றார். அப்போது அயோத்தியாபட்டணம் அடுத்த அரூர் மெயின்ரோடு பனங்காடு பகுதியில் சென்றபோது மற்றொரு கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் சரவணன் ஓட்டி வந்த கார் மீது மோதி நின்றது.
பின்னர் அந்த கும்பல் காரில் இருந்து சரவணனை வெளியே இறக்கி கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி தெரியவந்ததும் காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சரவணன் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட காட்டூர் ஆனந்தன் கொலையாளிகளுக்கு பட்டறை சரவணன் பண உதவி செய்ததும், இதனால் பழிக்கு பழியாக காட்டூர் ஆனந்தனின் மைத்துனர் கார்த்திக் தலைமையிலான கும்பல் சரவணனை கொலை செய்ததும் தெரியவந்தது.
மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 7 பேர் கும்பல் சரவணனை வெட்டி கொலை செய்தது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பட்டறை சரவணன் கொலை வழக்கு தொடர்பாக காட்டூர் ஆனந்தனின் மனைவி சத்யா (38), அவரது மற்றொரு தம்பி கணேஷ் (30), பொன்னமா
பேட்டையை சேர்ந்த ஜீவன்ராஜ் (24), கருப்பூரை சேர்ந்த சாரதி (21), சூர்யா (25), காமலாபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (28), மற்றும் ஆனந்தராஜ் ஆகிய 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இவர்கள் பட்டறை சரவணனை தீர்த்து கட்டுவதற்கு ஒன்று சேர்ந்து திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆனந்தனின் மைத்துனர் கார்த்திக் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இதில் மேலும் 10 பேர் காரிப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
முன்னதாக கைதான 7 பேரையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசாருக்கும் அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
- வீடுகளை விட்டு தப்பியோடிய மக்கள், அருகிலுள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்தனர்.
- தாக்குதலில் வேறு யாரும் காயமடைந்தனரா? என்ற தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
இம்பால்:
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக (53 சதவீதம்) உள்ள மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி, நாகா பழங்குடியினா் எதிர்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கான பிரதான காரணமாகும்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அப்போது, ஏராளமான வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. இதனால் இடம்பெயா்ந்த மக்கள், அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
இக்கலவரத்துக்குப் பிறகு இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இரு சமூகத்தினா் சார்ந்த பயங்கரவாதிகளும் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபடுவதால் உயிர்ச்சேதம் தொடா்ந்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனா்.
இந்நிலையில், மலைப் பகுதி மாவட்டமான ஜிர் பாமில் குகி-ஸோ பழங்குடியினா் வசிக்கும் ஜைரான் ஹமா் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள், அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்தனா்.
இதில் 17 வீடுகள் தீக்கிரையாகின. கிராம மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதனால், வீடுகளை விட்டு தப்பியோடிய மக்கள், அருகிலுள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்தனா்.
இத்தாக்குதலில் பெண் ஒருவா் உயிரிழந்ததாக பழங்குடியின அமைப்பினா் தெரிவித்தனா். அந்த பெண் எதிர் தரப்பு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்து மிக கொடூரமாக தாக்கப்பட்டு பிறகு எரித்து கொல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகின. இதனால் மணிப்பூரில் பதட்டம் நிலவுகிறது.
மேலும், தாக்குதலில் வேறு யாரும் காயமடைந்தனரா? என்ற தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தார்.
- கொலை செய்யப்பட்டவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள கஜுலுரு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் சின்னி, பேரன் ராஜு. இவர்கள் 3 பேரும் தலை நசுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்களுடைய கைகளில் அரிவாள்கள் இருந்தன.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரமேஷ் குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேரும் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.