என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "#கொலை"
- தனிப்படை போலீசார் சரவண வேலனை கடத்தி சென்ற மர்மநபர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் என்று விசாரணை நடத்தினர்.
- கைதான சரவணபாண்டியனின் சொந்த ஊர் மதுரை திருப்பரங்குன்றம். கோவை தெலுங்குபாளையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மெட்டராத்தி பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 44). திருமணமாகாத இவருக்கு அவரது உறவினர்கள் பெண் பார்த்து வந்தனர். இந்தநிலையில் சின்னச்சாமிக்கும், பல்லடத்தை சேர்ந்த சரவண வேலன்(37) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது சரவண வேலன், நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறேன். எனக்கு சொந்தக்கார பெண்கள் நிறைய பேர் உள்ளனர்.
எனவே அவர்களில் யாரையாவது பார்த்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய சின்னச்சாமி, சரவண வேலனுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் சின்னச்சாமியை தொடர்பு கொண்ட சரவணவேலன் என்னிடம் திருமணத்திற்கான பெண்களின் புகைப்படங்கள் உள்ளது. அதனை நீங்கள் பார்த்து தேர்வு செய்து கொள்ளுங்கள். பிடித்தால் உடனே திருமணத்தை நடத்தி விடலாம் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சின்னச்சாமி அவரது சொந்த ஊரான குடிமங்கலத்திற்கு வருமாறு சரவண வேலனை அழைக்கவே, அவர் அங்கு சென்றுள்ளார். அவருக்காக சின்னச்சாமி குடிமங்கலத்தில் உள்ள விடுதியில் அறையும் எடுத்து கொடுத்தார்.
அங்கு வைத்து இருவரும் பெண்ணின் புகைப்படங்களை பார்த்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடுதி அறையில் தங்கியுள்ளனர்.
பின்னர் நேற்று காலை சின்னச்சாமி பணத்தம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்திற்கு சரவண வேலனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
சிறிது தூரம் செல்லும் போது திடீரென அங்கு காரில் வந்த 3பேர் கும்பல், மோட்டார் சைக்கிளை மறித்ததுடன் சரவண வேலனை அலாக்காக தூக்கி காரில் போட்டு கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சின்னச்சாமி, காரை பின்தொடர்ந்து துரத்தியுள்ளார். அப்போது 3பேரும் மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளி விட்டு காரில் தப்பிச்சென்றனர்.
உடனே இது குறித்து சின்னச்சாமி குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா (பொறுப்பு) உத்தரவின் பேரில் உடுமலை டி.எஸ்.பி., சுகுமாறன் மேற்பார்வையில், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின், சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சலிங்கம் மற்றும் போலீஸ்காரர்கள் முத்துமாணிக்கம், லிங்கேஸ்வரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சரவண வேலனை கடத்தி சென்ற மர்மநபர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் என்று விசாரணை நடத்தினர்.
காரின் நம்பரை வைத்து விசாரணை நடத்தும் போது 3பேரும் கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்த சரவண பாண்டியன் (வயது 28), முத்துசெல்வம் (27), ரித்திக் (20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சரவண வேலனை கடத்தி சென்று கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது சரவண வேலன் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது.
கைதான சரவணபாண்டியனின் சொந்த ஊர் மதுரை திருப்பரங்குன்றம். கோவை தெலுங்குபாளையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் சரவணபாண்டியனுக்கும், சரவண வேலனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சரவணவேலன் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்றும், எனக்கு கேரளா செல்ல வாடகைக்கு கார் வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே சரவண பாண்டியன் கார் ஒன்றை வாடகைக்கு கொடுத்துள்ளார். அதனை வாங்கி சென்ற சரவண வேலன், செல்லாத ரூ.2ஆயிரம் நோட்டுக்களை மாற்றுவதற்காக கேரளா சென்றுள்ளார். அப்போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக கேரள போலீசார் சரவண வேலனை கைது செய்ததுடன், காரையும் பறிமுதல் செய்தனர். அதன்பிறகே சரவண வேலன் போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி காரை வாடகைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சரவண பாண்டியன் ரூ.3 லட்சம் வரை பணம் செலுத்தி கேரளாவில் இருந்து காரை மீட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த சரவண வேலனிடம் பணத்தை திருப்பி தருமாறு சரவண பாண்டியன் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். நேற்று குடிமங்கலத்தில் இருப்பதை அறிந்த சரவண பாண்டியன் தன்னிடம் டிரைவர்களாக பணியாற்றும் முத்து செல்வம் , ரித்திக் ஆகியோரை அழைத்து கொண்டு குடிமங்கலம் சென்றதுடன் அங்கு வைத்து சரவணவேலனை காரில் கடத்தி கோவைக்கு சென்றுள்ளார். அப்போது சரவணவேலன் சத்தம் போடவே அவரது வாயை பொத்தியுள்ளனர். இதில் அவர் மூச்சுதிணறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த 3பேரும், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். அங்கு சரவண வேலன் மூச்சுத்திணறி இறந்துள்ளதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் விசாரணையில் 3பேரும் சிக்கிக்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட சரவண வேலன் இது போல் பலரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக சரவணவேலனை அவரது மனைவி பிரிந்து சென்றதுடன் வேறு திருமணம் செய்துள்ளார். சின்னச்சாமியிடம் திருமணத்திற்கு பெண் பார்த்து தருவதாக கூறி ரூ.1.50 வரை பணம் பறித்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி பணம் பறித்த நபர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி. துர்காதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
- 5 மாத கைக்குழந்தை கதறி அழுதது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு பூத்தாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மனைவி மாரியம்மாள் (வயது70). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
அவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக பக்கது ஊரில் வசித்து வருகின்றனர். பெரியசாமி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மாரியம்மாள் மட்டும் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார்.
இவரது வீட்டிற்கு அருகே வடமதுரை கொல்லப்பட்டியை சேர்ந்த ஜெகநாதன் (30), அவரது மனைவி கவுசல்யா (25) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதிலும், 5 மாதத்திலும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி மாரியம்மாளின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பார்த்து வந்தனர். மேலும் கவுசல்யா மாரிம்மாள் வீட்டிலும்வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு மாரியம்மாளுடன் சேர்ந்து கவுசல்யா மற்றும் அவரது கணவர் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் நள்ளிரவில் அவரை இரும்பு கம்பியால் அடித்து கொன்று விட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை திருடிக் கொண்டு தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர்.
அதிகாலையில் மாரியம்மாளின் வீடு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவரது மகன் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.
ராஜேந்திரன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி. துர்காதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மாரியம்மாள் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு ஜெகநாதன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரித்ததில் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளனர்.

அதன்பின்பு போலீசார் நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில் தாங்கள் கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கவுசல்யாவை போலீசார் அழைத்து சென்றபோது அவரது 5 மாத கைக்குழந்தை கதறி அழுதது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மாரியம்மாள் தனது வீட்டில் வேலை பார்த்த கவுசல்யாவை சரியாக வேலை பார்க்க வில்லை என சத்தம்போட்டு வந்துள்ளார். இது குறித்து அவர் தனது கணவரிடம் கூறவே அவரும் கோபத்தில் இருந்துள்ளார்.
நேற்று இரவு ஜெகநாதன் எப்படியும் மாரியம்மாளை கொலை செய்து விட வேண்டும் என முடிவு செய்துள்ளார். வழக்கமாக டி.வி. பார்த்து விட்டு தூங்க சென்ற மாரியம்மாளை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு வீட்டில் இருந்த ரத்த கறையை துணியால் துடைத்து அதனை வெளியில் வீசி உள்ளார். கொலையை மறைக்க அவர் கீழே தவறி விழுந்து இறந்ததுபோல காட்ட வேண்டும் என முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முடியாமல் போகவே இரவு மாரியம்மாளின் மகன் ராஜேந்திரனுக்கு தானே போன் செய்துள்ளார். உங்கள் அம்மாவை 4 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்து விட்டனர். நான் அவர்களை பிடிக்க செல்வதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று கூறி உள்ளார். ஆனால் அவரது பேச்சில் நம்பிக்கை இல்லாமல் போலீசார் விசாரித்தபோது மாட்டிக்கொண்டனர் என தெரிவித்தனர்.
- குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.
- குழந்தையை கொடூரமாக கொன்ற நீத்துவை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் மல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நீத்து (வயது21). அவர் திருச்சூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு திருமணமாகாத நிலையில், நீத்து கர்ப்பமாகியதாக தெரிகிறது.
இருந்தபோதிலும் காதலர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீத்துவுக்கு சுமத்ரா பகுதியில் உள்ள வீட்டில் வைத்து குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் அந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்பு அந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த குழந்தையின் மூக்கில் தண்ணீர் புகுந்ததால் மூச்சு திணறி இறந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினர். ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தபடி இருந்திருக்கிறார். இருந்தபோதிலும் போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதால், தனது குழந்தையை கொன்றதை நீத்து ஒப்புக்கொண்டார்.
அவர் தனது குழந்தையின் முகத்தில் தொடர்ந்து தண்ணீரை ஊற்றி மூச்சு திணறடித்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார். திருசூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை நீத்து காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் நீத்து கர்ப்பமாகி இருக்கிறார். அதன்பிறகும் இருவரும் திருமணம் செய்யாமலேயே இருந்தனர்.
இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது. திருமணமாகாத நிலையில் குழந்தை பிறந்திருக்கிறது என்று மற்றவர்களுக்கு தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால் வீட்டில் வைத்தே குழந்தை பெற்றெடுத்து கொன்றிருக்கிறார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற நீத்துவை போலீசார் கைது செய்தனர்.
- தங்கத்தாய் காதலித்து வந்ததாகவும், இதற்கு தங்கத்தாய் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துவை கைது செய்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆசீர் பாண்டியன். கூலி தொழிலாளி. இவருக்கு தங்கத்தாய்(வயது 20) என்ற மகளும், முத்து(18) என்ற மகனும் உள்ளனர். முத்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் தங்கத்தாய்க்கு திருமணம் செய்வதற்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், நேற்று இரவு அவரது வீட்டில் இது தொடர்பாக அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரம் அடைந்த முத்து அரிவாளால் சகோதரி என்று கூட பாராமல் தங்கத்தாயை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
இதுகுறித்து அறிந்த தாழையூத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தங்கத்தாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துவை கைது செய்தார்.
விசாரணையில் காதல் விவகாரத்தில் தங்கத்தாய் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பிளஸ்-2 வரை படித்திருந்த தங்கத்தாய், கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு அவருடன் வேலை பார்க்கும் ஒரு வாலிபரை தங்கத்தாய் காதலித்து வந்ததாகவும், இதற்கு தங்கத்தாய் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்கத்தாய்க்கு திருமணம் செய்ய பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும், அதனை தங்கத்தாய் தவிர்த்து வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்தனர். நேற்றும் மாப்பிள்ளை பார்ப்பது சம்பந்தமாக காலை முதல் வீட்டில் இருந்தவர்கள் சண்டையிட்டு வந்த சூழலில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முத்து வீட்டின் முன்பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
- சுகதேவ் சிங் கோகமெடியும், மர்ம கும்பலை சேர்ந்த ஒருவனும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
- துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேதி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வலதுசாரி ஆதரவு அமைப்பான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோககெடி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுகதேவ் தனது வீட்டில் இன்று மதியம் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டது.
இதில், சுகதேவ் சிங் கோகமெடியும், மர்ம கும்பலை சேர்ந்த ஒருவனும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். சுகதேவ் உடன் பேசிக் கொண்டிருந்த நபர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேதி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட ஒரு ஆண் தலை தனியாக கிடந்தது
- கொலை செய்யப்பட்டவர் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டிைய சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குமார்( 43) என்பதும், அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளதும் தெரிய வந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட ஒரு ஆண் தலை தனியாக கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தலையை கைப்பற்றியதுடன் உடலையும், கொலையாளியையும் தேடினர். தொடர்ந்து தலை வீசப்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் குள்ளம்பட்டி பள்ளக்காட்டை சேர்ந்த பிரபல ரவுடியான திருமலை (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர் உடலை அங்குள்ள நாட்டாமங்கலம் ஏரிக்கரையில் வீசியதாக தெரிவித்தார். அதன்படி அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டனர். கொலை செய்யப்பட்டவர் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டிைய சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குமார்( 43) என்பதும், அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளதும் தெரிய வந்தது.
திருமலை கொடுத்த தகவலின்பேரில் அவரது பைக் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமலை கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது - பிரபல ரவுடியான திருமலை நேற்று முன்தினம் பைக்கில் வாழப்பாடி முத்தம்பட்டி சென்றார். அங்கு விவசாய தோட்ட பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த முத்தம் பட்டியை சேர்ந்த மாணிக்கம் மனைவி ஜோதி 45 என்பவரை மிரட்டி ஒன்றரை பவுன் நகையை பறித்தார்.
அங்கிருந்து நடுப்பட்டி வழியாக வந்த போது சாலையில் நடந்து வந்த குமார் மீது மோதுவது போல சென்று தகராறு செய்தார். பின்னர் இரு வரும் சமரசம் ஆகிய நிலையில் தன்னுடன் வந்தால் மது வாங்கி தருவதாக கூறி குமாரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு நீர்முள்ளிக் குட்டை சிவசக்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கினர்.
பின்னர் இருவரும் அக்ரஹாரம் நாட்டாமங்கலம் ஏரிக்கரைக்கு வந்து மது அருந்தினர். அப்போது 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த திருமலை, குமாரை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து தலையை அறுத்து குள்ளம்பட்டி பிரிவு சாலையில் வீசி விட்டு சென்றதும், அங்குள்ள சி.சி.டி.சி. காமிரா பதிவால போலீசாரிடம் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்துஅவரை கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டு உள்ளதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ைகதான பிரபல ரவுடி ஏற்கனவே 2 கொலைகள் செய்துள்ள நிலையில் தற்போது சிறிய பிரச்சினையில் ஒருவரரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பீதி நிலவி வருகிறது. மேலும் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே நடமாடும்நிலை உள்ளது.
- நியூ காலனியில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
- சம்பந்தப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் குறித்து போலீசார் விசாரணை.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரிஹல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது, அரிஹல் பகுதியில் உள்ள நியூ காலனியில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதில், அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர்.
சம்பந்தப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் மற்றும் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சந்திரசேகரின் தந்தை கந்தசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார்.
- வாலிபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நடுவனேரி புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காகாபாளையம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நடுவனேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சந்திரசேகர் (வயது 29). தறிதொழிலாளி.
இவருக்கும், பிரியா (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது பிரியா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் சந்திரசேகரின் தந்தை கந்தசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இந்த அதிர்ச்சியை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் அவர் மது குடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து மது குடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையானார். மது குடித்து விட்டு அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு வந்தார்.
கடந்த 25-ந்தேதி சந்திரசேகர் மது குடித்துவிட்டு வந்து போதையில் கத்தியை காட்டி அம்மாவிடம் தகராறு செய்தார். இதனால் அவரை மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து சோதனை செய்தபோது அவரது சட்டை பையில் இருந்து கத்தி மற்றும் போதை மாத்திரை ஆகியவை இருந்தது. இவற்றை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து போலீசார் எச்சரிக்கை செய்து, அறிவுரைகள் சொல்லி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் அவர் குடி பழக்கத்தை கைவிடவில்லை. மறுநாள் (26-ந்தேதி ) மீண்டும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்தார். இதனால் அவரை குடிபழக்கத்தில் இருந்து மீட்பதற்காக இடங்கணசாலை-சின்னப்பம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மீட்பு மையத்தில் சேர்த்தனர்.
இந்த நிலையில் சந்திரசேகர் அரியானூர் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்சில் பலத்த காயங்களுடன் இருப்பதாக இன்று காலை உறவினர்களுக்கு போதைமீட்பு மையத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்க்கையில் ஆம்புலன்சில் கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்களுடன் சந்திரசேகர் பிணமாக கிடந்தார்.
இது பற்றி மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று சந்திரசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போதை மறுவாழ்வு மையத்துக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சந்திரசேகரின் கை, கால்கள் ஆகியவற்றை முதுகு பக்கமாக சேர்த்து வைத்து கட்டி வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த காட்சி பதிவாகி இருந்தது. இதனால் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது.
இதனிடையே அங்கு உறவினர்கள் குவிந்தனர். இதனால் பதட்டம் நிலவியது. பாதுகாப்புக்காக போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து போலீசார் சி.சி.டி.வி. காட்சியை கைப்பற்றி போதை மறுவாழ்வு மைய ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு இங்கு என்ன நடந்தது?, அவரை கொலை செய்தவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வாலிபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நடுவனேரி புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தகவல் கிடைத்ததும் கொல்லம் போலீசார் விரைந்து வந்து, ஸ்வத்வாவின் உடலை கைப்பற்றினர்.
- யோகா ஆசிரியர் கிருஷ்ணசந்திரன், கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் கிருஷ்ண சந்திரன், யோகா ஆசிரியர். இவரிடம் யோகா கற்பதற்காக, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்வத்வா (வயது 36) என்பவர் வந்திருந்தார்.
இவர், கிருஷ்ண சந்திரனின் உறவினர் வீட்டில் தங்கி யோகா பயின்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஸ்வத்வா, வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதே வீட்டில் யோகா ஆசிரியர் கிருஷ்ணசந்திரன், கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கொல்லம் போலீசார் விரைந்து வந்து, ஸ்வத்வாவின் உடலை கைப்பற்றினர். கிருஷ்ண சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஸ்வத்வாவை கொலை செய்து விட்டு, கிருஷ்ணசந்திரன் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யோகா ஆசிரியரான கிருஷ்ணசந்திரன், உத்தரகாண்ட் மாநிலத்தில் பணியாற்றி வந்ததாகவும் அங்கிருந்து வரும்போதே, ஸ்வத்வாவை கேரளாவுக்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.