என் மலர்
நீங்கள் தேடியது "Instagram"
- சாய் பல்லவியும் அவரது தங்கை பூஜா கண்ணனும் ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளனர்.
- சுற்றுலா சென்ற புகைப்படங்களை சாய் பல்லவி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து இருந்தார். இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
இதையடுத்து தெலுங்கில் நாகசைதன்யாவுடன் 'தண்டேல்' படத்தில் நடித்து இருந்தார். தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள ராமாயனா படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தில் சீதா கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் சாய் பல்லவியும் அவரது தங்கை பூஜா கண்ணனும் ஒன்றாக சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது கடற்கரையில் இருவரும் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவின.
இந்நிலையில், அண்மையில் சுற்றுலா சென்ற புகைப்படங்களை சாய் பல்லவி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
- தனது நண்பரை வீடியோ எடுக்கக் கூறி, பின்னர் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.
- இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது.
சென்னையில் நீதிமன்றம் உள்ளே குற்றவாளிக் கூண்டில் நிற்பதை வீடியோ பதிவு செய்து பின்னணி இசையுடன் பரத் என்ற நபர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.
வழக்கு விசாரணைக்கு ஆஜரான அவர், தனது நண்பரை வீடியோ எடுக்கக் கூறி, பின்னர் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிய நிலையில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட பரத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வீடியோ எடுத்த 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்
கைதான பரத் (24) மீது ஏற்கனவே வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
- பெற்றோரின் அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் இதற்கான வசதிகளை மாற்ற முடியாது
இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.
18 வயதிற்குட்பட்ட சிறார்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதில் அபாயகரமான மோசமான உள்ளடக்கங்களை அவர்கள் பார்ப்பதாக விமர்சங்கள் எழுந்தன.
இந்நிலையில், திரைப்படங்களுக்கு PG-13 ரேட்டிங் இருப்பது போல், இன்ஸ்டாகிராமிலும் புதிய நடைமுறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
இதன்மூலம் அபாயகரமான மற்றும் பெரியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் உள்ளடக்கங்களை இனி 18 வயதுக்குக் குறைவானவர்களால் பார்க்க முடியாது. அதன்படி பாலியல் உள்ளடக்கிய காட்சிகள், போதைப் பொருள், அபாயகரமான சண்டை காட்சிகள் அல்லாத வீடியோக்களை காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரின் அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் இதற்கான வசதிகளை மாற்ற முடியாது
இந்த கட்டுப்பாடுகளை விரும்பும் பெற்றோருக்கு, இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. சிறார்கள் தங்களை 18 வயதுக்கு மேற்பட்டோர் எனக் கூறினாலும் அதனை கண்டறிய அதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் விரைவில் இந்த நடைமுறை அறிமுகமாகிறது
- அரோரா சின்கிளேரை இன்ஸ்டாகிராமில் 1892 பேர் ரூ.390 பணம் செலுத்தி சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
- இவர்களுக்கு மட்டும் பிரத்யேகமான புகைப்படம் வீடியோக்களை அரோரா வெளியிட்டு வந்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5 ஆம் தேதி அன்று தொடங்கியது. முதல் நாளில் போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
இதில், இன்ஸ்டா பிரபலமான அரோரா சின்கிளேர் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். 'பலூன் அக்கா' என்று நெட்டிசன்களால் அழைக்கப்படும் அரோராவை இன்ஸ்டாகிராமில் 7.5 லட்சத்திற்கும் மேல் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில், அரோரா சின்கிளேரை இன்ஸ்டாகிராமில் 1892 பேர் ரூ.390 பணம் செலுத்தி சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவர்களுக்கு மட்டும் பிரத்யேகமான புகைப்படம் வீடியோக்களை அரோரா சின்கிளேர் வெளியிட்டு வந்துள்ளார். இதன்மூலம் அவருக்கு ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 7 லட்சம் வருமானம் கிடைத்து வந்தது.
இந்நிலையில், அரோரா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதால் அவர் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வரும் வரை அவரது இன்ஸ்டா கணக்கில் இருந்து எதுவும் பதிவிடப்படாது. இதனால் ரூ.390 பணம் போச்சா என்று அரோராவை சப்ஸ்கிரைப் செய்தவர்களை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
- செலினா கோமஸின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
- செலினா கோம்ஸ்-யை இன்ஸ்டாகிராமில் 425 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான செலினா கோம்ஸ் பாடலாசிரியர் பென்னி ப்ளான்கோவை காதலித்து வந்தார்.
இருவருக்கும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது தனது காதலர் பென்னி பிளாங்கோவை செலினா கோம்ஸ் திருமணம் செய்துள்ளார். செலினா கோமஸின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் தனது திருமணம் குறித்து பேசிய செலினா கோம்ஸ், "தனக்கு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகவும், அதனால் தன்னால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் தற்போது வாடகைத் தாய் மற்றும் குழந்தை தத்தெடுப்பு போன்றவை இருப்பதால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
33 வயதான செலினா கோம்ஸ் இன்ஸ்டாகிராமில் 400 மில்லியன் பாலோயர்ஸைக் கொண்ட முதல் பெண் பிரபலம் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போதுவரை அவரை இன்ஸ்டாகிராமில் 425 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
- விளம்பரங்கள் இல்லாத சந்தாவின் விலை இணையத்தில், ஆப்களில் தனித்தனி ஆகும்.
- Account Center இல் இணைக்கப்பட்ட அனைத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளிலும் விளம்பரங்கள் தோன்றாது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டிலும் விளம்பரங்களை தவிர்க்க சந்தா முறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
முதலில் இங்கிலாந்தில் அடுத்த சில வாரங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மெட்டா அறிவித்துள்ளது.
சமீபத்திய இங்கிலாந்து ஒழுங்குமுறை வழிகாட்டுதலுக்கு இணைங்க இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.
விளம்பரங்கள் இல்லாத சந்தாவின் விலை இணையத்தில் மாதம் £2.99 மற்றும் iOS மற்றும் Android ஆப்களில் பயன்படுத்துவோருக்கு மாதம் £3.99 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் Account Center இல் சேர்க்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கணக்கிற்கும் இணையத்தில் £2 , iOS/Android-இல் £3 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் Account Center இல் இணைக்கப்பட்ட அனைத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளிலும் விளம்பரங்கள் தோன்றாது. இந்த நடைமுறை வருங்காலங்களில் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, ‘இன்ஸ்டாகிராமில்’ 15 லட்சம் பேர் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
- தமிழக அரசியல்வாதிகளில் நான்கு பேருக்கே அதிக பின் தொடர்பவர்கள் உள்ளனர்.
சென்னை:
சமூக வலைத்தளங்கள் மக்களின் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்றன. அதனால் அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் கணக்குகளை வைத்திருக்கின்றனர். அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையிலேயே, அவர்களுக்கான ரசிகர்கள் எவ்வளவு என்பதை கணிக்கலாம். அந்த வகையில், தமிழக அரசியல்வாதிகளில் அதிக பின்தொடர்பவர்களை பெற்றிருப்பவர் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் ஆவார்.
விஜய்க்கு, 'இன்ஸ்டாகிராமில்' 1 கோடியே 46 லட்சம், 'பேஸ்புக்'கில் 77 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 55 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். ஒரே நபர் 3 தளங்களிலும் பின்தொடர்ந்து இருக்கக்கூடும். எனவே, மூன்றையும் சேர்த்து சராசரியாக பார்த்தால், சுமார் 93 லட்சம் பேர் விஜய்யை பின்தொடர்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'இன்ஸ்டாகிராமில்' 18 லட்சம், 'பேஸ்புக்'கில் 31 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 40 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 30 லட்சம் பேர் அவரை பின்தொடர்கிறார்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, இன்ஸ்டாகிராமில் 63 ஆயிரம், 'பேஸ்புக்'கில் 1.68 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 6.55 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 2.95 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, 'இன்ஸ்டாகிராமில்' 15 லட்சம், 'பேஸ்புக்'கில் 5.77 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 10 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 10.25 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, 'இன்ஸ்டாகிராமில்' 98 ஆயிரம், 'பேஸ்புக்'கில் 11 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 37 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 16.25 லட்சம் பேர் அவரை பின்தொடர்கிறார்கள்.
தமிழக அரசியல்வாதிகளில் இந்த நான்கு பேருக்கே அதிக பின் தொடர்பவர்கள் உள்ளனர். மற்ற தலைவர்களுக்கு மிகக் குறைந்த அளவே இருக்கிறது.
விஜய்யை பொறுத்தவரை, அவர் ஏற்கனவே சினிமா பிரபலம் என்பதால், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரை பின்தொடர்கிறார்கள். இதனால், அவருக்கான பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இயற்கையாகவே அதிகமாக இருக்கிறது. அதேபோல் மற்ற கட்சியினர் கூட விஜயை ஒரு நடிகராக பின்தொடர்வார்கள்.
எனவே விஜய்யின் இந்த எண்ணிக்கையை ஓட்டு எண்ணிக்கையாகக் கருதக்கூடாது. எடுத்துக்காட்டாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு 'இன்ஸ்டாகிராமில்' 9 கோடியே 75 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஆனால் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அதைவிட அதிகமாக 27 கோடியே 30 லட்சம் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். காரணம், உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் இருப்பதே. அதேபோல், விஜய்க்கும் திரை உலக பிரபலம் என்பதால் அதிக பின்தொடர்பவர்கள் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது என்று சமூகவலைதள ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
- சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.
நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் பரவுவதை தடுக்க, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாகக் கூறி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் நேபாள பாராளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலை சூறையாடியதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து நேபாள அரசு போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்துள்ளது.
- பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை.
- டெலிகிராம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளது
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.
நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் பரவுவதை தடுக்க, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாகக் கூறி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக நேபாள பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்ததால் தலைநகர் காத்மாண்டுவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- அடையாளம் தெரியாத ஒருவர் அந்த சிறுவனின் செல்போன் எண்ணுக்கு அழைத்தார்.
- இதுவரை டிஜிட்டல் கைதுகளால் மக்களை பயமுறுத்திய இந்த குற்றவாளிகள், புதிய முறையில் பணம் பறித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் அறிமுகமானார். அவர்கள் ஒருவருக்கொருவர் வீடியோக்களை பரிமாறிக்கொண்டனர்.
சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் "ஐ லவ் யூ" என்று ஒரு செய்தியை அனுப்பினாள். அதற்கு அந்த சிறுவன் "ஐ லவ் யூ டூ" என்று பதிலளித்தான்.
மறுநாள், அடையாளம் தெரியாத ஒருவர் அந்த சிறுவனின் செல்போன் எண்ணுக்கு அழைத்தார். இன்ஸ்டாகிராமில் சந்தித்த பெண்ணிடம் "ஐ லவ் யூ" என்று சொல்வீர்களா? இதை அறிந்ததும் அவரது கணவர் எனக்கு போன் செய்ததாகக் கூறினார்.
அவர்கள் அனைவரும் மைலாவரம் போலீஸ் நிலையத்தில் இருக்கிறார்கள். உடனே அங்கு வர வேண்டும் என மிரட்டினார். இந்த வார்த்தைகளால் பயந்துபோன சிறுவன் அழுது, தான் என்ன சொன்னாலும் செய்வேன் என்று கூறினான். இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு, அந்த நபர் ஆன்லைன் மூலம் ரூ. 11,000 பறித்துக் கொண்டார்.
சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஒரு புதிய வகை போக்கைப் புகுத்துகிறார்கள். இதுவரை டிஜிட்டல் கைதுகளால் மக்களை பயமுறுத்திய இந்த குற்றவாளிகள், புதிய முறையில் பணம் பறித்து வருகின்றனர். வாலிபர்கள் இதில் சிக்காமல் இருக்க கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- 52 வயதான ராணி தனது வயதை மறைத்து Filter மூலம் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
- 52 வயதான ராணிக்கு 4 குழந்தைகள் இருப்பது அருணுக்கு தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அருண் (26) என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
52 வயதான ராணி என்ற பெண் தனது வயதை மறைத்து Filter மூலம் புகைப்படத்தை பதிவேற்றி இளம்பெண் போல அருணை ஏமாற்றி வந்துள்ளார்.
முதல்முறையாக ராணியை அருண் நேரில் சந்தித்தபோதே அவளுக்கு 52 வயது என்றும் 4 குழந்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை கண்டு கோபமடைந்த அருண், ராணியை ஏமாற்றி அவரிடம் இருந்து ரூ.1.5 லட்சம் பெற்றுள்ளார்.
பின்னர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் அருணை ராணி அடிக்கடி வற்புறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அருண், ராணியை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அவரது தாவணியை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தூக்கி வீசியுள்ளார்.
ராணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் அருணை கைது செய்தனர். கொலை செய்ததை அருண் ஒப்புக்கொண்டதால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கழிவறை செல்லும் போது நகைகள் அணிந்து செல்லக்கூடாது, அங்கு பாதுகாப்பு இருக்காது என ராகுல் கூறினார்.
- வேறு ஒருவரது செல்போன் மூலம் ராகுலை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
சேலம்:
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி, இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்த நிலையில் செல்போனில் மூழ்கி கிடந்த அந்த மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஈரோட்டை சேர்ந்த ராகுல் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. ராகுல் கல்லூரியில் படிப்பதாக கூறி உள்ளார். இதனை தொடர்ந்து 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், இன்ஸ்டாகிராம் மூலம் தகவல்களை பரிமாறியும் வந்துள்ளனர்.
இந்த நிலையில் 2 பேரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து தனக்கு ஈரோடு என்று கூறிய ராகுல் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தால் நேரில் சந்திக்கலாம் என்று அந்த மாணவியிடம் கூறினார்.
இதனை நம்பிய மாணவி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்தார். தொடர்ந்து இரவு 9.45 மணியளவில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இறங்கிய அவர் ராகுலை சந்தித்தார். ரெயில் நிலையம் முன்புள்ள பஸ் நிறுத்த பகுதிக்கு வந்ததும் தான் கழிவறைக்கு சென்று வருவதாக மாணவி, ராகுலிடம் கூறினார். அப்போது தனது கைப்பையை ராகுலிடம் அந்த மாணவி கொடுத்தார்.
அப்போது கழிவறை செல்லும் போது நகைகள் அணிந்து செல்லக்கூடாது, அங்கு பாதுகாப்பு இருக்காது என ராகுல் கூறினார். இதனை நம்பிய அந்த மாணவி தான் அணிந்திருந்த 3 பவுன் எடை கொண்ட 3 வளையல்கள், ஒரு பவுன் செயின் ஆகியவற்றை கழற்றி அந்த கைப்பையில் வைத்தார்.
மேலும் தனது செல்போன், லேப்டாப்பையும் அந்த கைப்பையில் வைத்து ராகுலிடம் கொடுத்து விட்டு கழிவறைக்கு சென்றார். பின்னர் சற்று நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது ராகுல் அந்த கைப்பையுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கதறினார்.
மேலும் வேறு ஒருவரது செல்போன் மூலம் ராகுலை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் சம்பவம் குறித்து சென்னையில் உள்ள தனது தந்தைக்கு மாணவி தகவல் தெரிவித்தார். இதனால் கதறிய படி சேலம் வந்த அவர் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியுடன் பழகி சேலத்திற்கு வரவழைத்து நூதன முறையில் நகைகளை திருடி சென்ற ராகுலை அவரது போட்டோவை வைத்து தேடி வருகிறார்கள். மேலும் அவரது உண்மையான பெயர் ராகுலா அல்லது வேறு பெயர் கொண்டவர் இந்த பெயரை சொல்லி ஏமாற்றினாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்கள்.






