என் மலர்
நீங்கள் தேடியது "Instagram"
- விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் ஆனது.
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரில் நடந்தது. காலையில் தெலுங்கு முறைப்படியும், மாலையில் கொடவா முறைப்படியும் நடந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் வெளியிட்டதிருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் ஆனது.
இந்நிலையில், ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவின் திருமண புகைப்படங்கள் குறித்த பதிவு ஆசியாவிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளைப் பெற்ற பதிவாக மாறியுள்ளது.
விராட் கோலியின் டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்த பதிவை விட ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு அதிக லைக்குகள் பெற்று இந்த சாதனையை படைத்துள்ளது.
கோலி பகிர்ந்த புகைப்படம் 22.9 மில்லியன் லைக்குகளை கடந்து நிலையில், ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா பகிர்ந்த திருமண புகைப்படம் 24.4 மில்லியன் லைக்குகளை கடந்து ஆசியாவிலேயே அதிக லைக் வாங்கிய புகைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
வருகிற மார்ச் 4-ந்தேதி விஜய் தேவரகொண்டாவுக்கும்-ராஷ்மிகாவுக்கும் திருமண வரவேற்பு ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட முறையில் நடைபெற இருக்கிறது. விழாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் இந்திய திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்த இருக்கின்றனர்.
- பிரதமர் நரேந்திர மோடி 2014 இல் இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.
- தனது சர்வதேச சகாக்களை விட குறிப்பிடத்தக்க முன்னிலை வகிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒரு பெரிய டிஜிட்டல் மைல்கல்லைக் கடந்து, இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களைக் குவித்த முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என்கிற சாதனையை படைத்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2014-ல் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். கடந்த பத்தாண்டுகளில் அவரது கணக்கு சீராக வளர்ந்து, உலகில் அதிகம் பின்தொடரப்படும் கணக்காக உருவெடுத்துள்ளது.
இந்த தளம் அதிகாரப்பூர்வ ஈடுபாடுகள், சர்வதேச வருகைகள், பொது தொடர்பு முயற்சிகள், கலாச்சார தருணங்கள் மற்றும் தனிப்பட்ட பிரதிபலிப்புகளின் காட்சிகளைப் பகிர்ந்து கொள்ளப் பயன்படுத்தப்படுகிறது, இது பரந்த மற்றும் மாறுபட்ட பார்வையாளர்களுடன் இணைக்க அவருக்கு உதவுகிறது.
இந்த சாதனையின் மூலம், பிரதமர் மோடி இப்போது இன்ஸ்டாகிராமில் உலகத் தலைவர்களில் முதலிடத்தில் உள்ளார். தனது சர்வதேச சகாக்களை விட குறிப்பிடத்தக்க முன்னிலை வகிக்கிறார்.
பிரதமரின் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 43.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ 15 மில்லியன் பின்தொடர்பவர்களுடன், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா 14.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடன், துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் 11.6 மில்லியன் பின்தொடர்பவர்களுடன், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே 6.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் உள்ளிட்ட பிற உலகத் தலைவர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர்.
- இன்ஸ்டாவில் தற்போது ஒரு புதிய க்யூட் வீடியோவை பிரபு தேவா வெளியிட்டுள்ளார்.
- இன்ஸ்டாகிராமில் நான் உங்கள் தேவா என்று ரீல்ஸ் வெளியிட்டு 2 சிறுவர்கள் வைரலானார்கள்
நடிகர் பிரபு தேவா அவ்வப்போது சில க்யூட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் இன்ஸ்டாவில் தற்போது ஒரு புதிய க்யூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் நான் உங்கள் தேவா என்று ரீல்ஸ் வெளியிட்டு வைரலாக 2 சிறுவர்களை அழைத்து அவர்களுடன் பிரபு தேவா நடனமாடி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "ரெண்டே பேருக்குதான் போட்டியே... ஒன்னு இன்ஸ்டா தேவா இன்னொன்னு பிரபு தேவா என்று ஜாலியாக சிறுவர்கள் பேசுவது அனைவரையும் கவர்ந்துள்ளது.
- வீடியோ வைரலான நிலையில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- வீடியோவை பதிவிட்டவர் மேல்மலை கிராமம் பூம்பாறையைச் சேர்ந்த செல்வக்குமார் என தெரிய வந்தது.
கொடைக்கானல்:
சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் ஆர்வ மிகுதியில் பல்வேறு வீடியோக்களை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளில் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வது, தடை செய்யப்பட்ட அருவிகள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சென்று அதன் அனுபவங்களை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இது போல கடந்த சில நாட்களாக கையில் மிகப்பெரிய வாளுடன் திரைப்பட பாடல் பின்னணியில் வாகனங்களில் அமர்ந்தவாறு வீடியோ எடுத்து வாலிபர் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் இது குறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் வீடியோவை பதிவிட்டவர் மேல்மலை கிராமம் பூம்பாறையைச் சேர்ந்த செல்வக்குமார் (25) என தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். வீடியோவில் பதிவு செய்த வாள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இது போன்று வீடியோ பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- இன்ஸ்டாவில் ஃபாலோவர்ஸை வளர்ப்பதற்கு என்னிடம் தகுதி இல்லையே
- தியானம் செய்தால் எதாவது ஐடியா கிடைக்கும் என்று நினைத்தால், அது செய்தாலும் எதுவும் தோணவில்லை.
ஆர்.ஜே.வாக பணியாற்றி, பின் யூடியூப் சேனல்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் ஷா ரா. 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் மற்றும் மீசைய முறுக்கு ஆகிய திரைப்படங்கள் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து கோமாளி, நான் சிரித்தால், ஓ மை கடவுளே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அதர்வா நடிப்பில் வெளியான தணல் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில்,
"4 மணிக்கு தூக்கம் வராமல் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். இப்போது படம் பேசுபவர்கள் எல்லாம் இன்ஸ்டாவில் உங்களுக்கு எவ்வளவு ஃபாலோவர்ஸ் (பின்தொடர்பவர்கள்) இருக்கிறார்கள் என்றுதான் கேட்கிறார்கள். அதை பார்த்துதான் சம்பளம் பேசுகிறார்கள். இன்ஸ்டாவில் ஃபாலோவர்ஸை வளர்ப்பதற்கு என்னிடம் தகுதி இல்லையே. எனக்கு கூந்தல் கிடையாது, மொழு மொழு கன்னங்கள் கிடையாது. முகம் முழுவதும் தாடி, அதுவும் நரைத்து போயுள்ளது.
நெஞ்சில் முழுவதும் முடி. எனக்கு ரீல்ஸ் பண்ணவும் பிடிக்காது. என்ன செய்து இன்ஸ்டாவில் ஃபாலோவர்ஸை வளர்ப்பது என்று தெரியாமல், தூக்கம் வராமல், தியானம் செய்தால் எதாவது ஐடியா கிடைக்கும் என்று நினைத்தால், அது செய்தாலும் எதுவும் தோணவில்லை. இது என் மூளைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.
ஃபாலோவர்ஸை ஏற்றுவதற்கு என்னிடம் கவர்ச்சி இல்லையே. நான் என்ன செய்வேன், எதாவது ஐடியா இருந்தால் கீழே (comment-ல்) சொல்லுங்கள்". என பேசியுள்ளார்.
இதனை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் திறமையான நடிகருக்கு இப்படி ஒரு நிலையா என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து அடையாளம் காணப்பட்டார்.
- தனது மனைவி, தாய், சகோதரன் மற்றும் சகோதரியின் உதவியுடன் வீசியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நிஷத்புரா பகுதியில் கமல் நகர் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை, இங்குள்ள ஒரு செப்டிக் டேங்கிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
செப்டிக் டேங்கிற்குள் சோதனை செய்தபோது, ஒரு இரும்புப் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து அவர் மகாராஷ்டிர மாநிலம் கோண்டியாவைச் சேர்ந்த அஷ்ரபி என்று அடையாளம் காணப்பட்டார்.
போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

மத்தியப் பிரதேசத்தை சமீர் கான் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும், அஷ்ரபிக்கும் ஓராண்டிற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அஷ்ரபி போபாலில் சமீருடன் வசித்து வந்துள்ளார்.
ஏற்கனவே திருமணமான சமீரைத் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அஷ்ரபி வற்புறுத்தியதாகவும், பணம் தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சமீர், கடந்த பிப்ரவரி 7 இல் அஷ்ரபியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு, தனது மனைவி, தாய், சகோதரன் மற்றும் சகோதரியின் உதவியுடன் சடலத்தை ஒரு இரும்புப் பெட்டிக்குள் திணித்து, வீட்டின் அருகே இருந்த செப்டிக் டேங்கிற்குள் சமீர் வீசியுள்ளார்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி சமீர் கான் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரசாத் மற்றும் ரோஷினி ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பேசி காதலித்துள்ளனர்.
- பிரசாத் ரோஷிணியுடன் பேசுவதை நிறுத்து விட்டு, அவரை ப்ளாக் செய்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தனது செல்போன் நம்பரை பிளாக் செய்ததற்காக காதலன் பிரசாத்தை (25) காதலி ரோஷினி (22) கத்தியால் மார்பிலேயே குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசாத் மற்றும் ரோஷினி ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பேசி பழகி காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், திடீரென பிரசாத் ரோஷிணியுடன் பேசுவதை நிறுத்து விட்டு, அனைத்து சமூக வலைதளங்களிலும் அவரை ப்ளாக் செய்துள்ளார்.
தன்னை பிளாக் செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் பிரசாத் பழக்க ஆரம்பித்து விட்டதாக சந்தேகப்பட்ட ரோஷிணி கத்தியை எடுத்துக்கொண்டு பிரசாத் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ரோஷினி தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து பிரசாத்தின் நெஞ்சில் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து ரோஷினியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேம்பாலம் மேலே ஏறி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
- இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினர் சமூகவலைத்தளத்தில் லைக்குகளை அள்ளும் ஆசையில் சாகச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதில் சில சமயம் உயிருக்கு ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
அவ்வகையில் உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் மேலே ஏறி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
மேம்பாலத்தின் மேலே கான்க்ரீட் Slabs மீது ஏறி நடனமாடியபோது, Slabs சரிந்து முகமது ஃபைசான் (22) என்ற இளைஞர் தலை மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அஜித் குமார் பல சர்வதேச கார் ரேஸிங் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
- "Transition Reels" எனும் முறையில் அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.
ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வரும் "Transition Reels" எனும் முறையில் அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 27.4 கோடி ஃபாலோவர்களைக் கொண்ட கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியது.
- இது தொடர்பாக அவரது மனைவி அனுஷ்காவின் இன்ஸ்டாகிராம் கணக்கை டேக் செய்து ரசிகர்கள் காரணத்தை கேட்டு வந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. முன்னாள் கேப்டனான அவர் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். கோலிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 27.4 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.
இந்த நிலையில் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் நள்ளிரவில் திடீரென்று முடங்கியது. அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை ரசிகர்கள் அணுகியபோது இந்தப் பக்கம் கிடைக்கவில்லை என்று காண்பித்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் கோலியின் சகோதரர் விகாஸ் இன்ஸ்டாகிராம் கணக்கும் செயலிழக்கப்பட்டிருந்தது.
பல மணி நேரத்துக்கு பிறகு இன்று காலை 8.30 மணிக்கு கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த திடீர் முடக்கம் வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்து கோலி, அவரது நிர்வாகக் குழு அல்லது இன்ஸ்டாகிராம் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கிய போது அதற்கான விளக்கத்தை அறிய ரசிகர்கள் முயன்றனர்.
சில ரசிகர்கள் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அண்ணாவின் (கோலி) கணக்கு எங்கே போனது?" என்பது போன்ற கருத்துக்களைப் பதிவிட்டனர்.
- நடிகை ஸ்ரீ அஸ்வினிக்கு இன்ஸ்டாகிராமில் மணிகண்டன் என்பவர் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னையில் இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய நபரை துணை நடிகை ஸ்ரீ அஸ்வினி அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துணை நடிகை ஸ்ரீ அஸ்வினிக்கு இன்ஸ்டாகிராமில் மணிகண்டன் என்பவர் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதனை பார்த்து கடுப்பான ஸ்ரீ அஸ்வினி குறுஞ்செய்தி அனுப்பிய உணவக ஊழியர் மணிகண்டன் என்பவரை உணவகத்திற்கு நேரிலே சென்று நடுரோட்டில் வைத்து அடித்து அவரை காவல்துறையில் ஒப்படைத்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- கடந்த மாதம் 23-ம் தேதி மந்தனாவுக்கும் - பலாஷ் முச்சலுக்கும் திருமணம் நடக்கவிருந்தது.
- மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சல் தொடர்பான வீடியோவை நீக்கிவிட்டார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. இவர் மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர். சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய மந்தனா மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.
இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரின் திருமணம் கடந்த 23-ம் தேதி சாங்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடப்பதாக இருந்த நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மந்தனா மனம் உடைந்து போனார். தந்தை பூரண குணமடைந்து திரும்ப வேண்டும். அதன் பிறகே திருமணம் என்று மந்தனா சொல்லிவிட்டார். அதனால் அவரது திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. முச்சலின் 'துரோகம்'தான் திருமணம் நின்றதற்கு உண்மையான காரணம் என இணையத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த விவகாரம் பேசுபொருளாகிய நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை நீக்கிவிட்டார். திருமண கொண்டாட்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இது பலரது மத்தியில் சந்தேகத்தை கிளப்பியது.

இந்த நிலையில் திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா மீண்டும் சோசியல் மீடியா பக்கம் திரும்பி இருக்கிறார்.
தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "கடந்த சில வாரங்களாக என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. என் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புபவள் நான் இல்லை. இதையும் அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். ஆனால், திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறேன்; நீங்களும் அதையே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.






