search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Instagram"

    • ஆசிப் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ரீல் படம்பிடித்துக் கொண்டிருந்தார்.
    • வீடியோ எடுக்கும்போது தவறுதலாக மூன்றாவது மாடியில் இருந்து ஆசீப் கீழே விழுந்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஸ்லோ மோஷனில் ரீல்ஸ் எடுக்க முயன்ற 20 வயது இளைஞர் 3 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆசிப் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ரீல்ஸ் வீடியோ படம்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட கதவை திறக்கும் போது தவறுதலாக மூன்றாவது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்துள்ளார்.

    3 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் ஆசிஃப்பிறகு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆசிப்பை அவரது நண்பர்கள் பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பலத்த காயம் மற்றும் அதிக ரத்தம் வெளியேறியதினால் ஆசீப் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நாய்க்குட்டிக்கு ஒருவர் பீர் ஊட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நாய்க்குட்டிக்கு ஒருவர் பீர் ஊட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சிக்கந்தாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாஸ்திரிபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

    • தலைநகர் இஸ்தான்புல்லில் சுல்தான்பெய்லி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டின் 5 வது மாடியில் இருந்து குதித்து அய்குட் தற்கொலை செய்துகொண்டுள்ளார்
    • அய்குட் உடலின் அருகே கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த துருக்கியை சேர்ந்த இளம் இன்ஸ்டா பிரபலம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பிரபலமடையத் தொடங்கியுள்ள தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் சோலோகேமி [SOLOGAMY] திருமண முறைப்படி கடந்த வருடம் [2023] தான் திருமணம் செய்து கொண்டதாக துருக்கியை சேர்ந்த இன்ஸ்ட்டா பிரபலம் குப்ரா அய்குட் (வயது 26) அறிவித்திருந்தார்.

     

    இந்நிலையில் நேற்றய தினம் தலைநகர் இஸ்தான்புல்லில் சுல்தான்பெய்லி [Sultanbeyli] மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டின் 5 வது மாடியில் இருந்து குதித்து அய்குட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் கடைசியாக இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்த வீடியோவில், உடல் எடையை அதிகரிப்பது சவாலாக உள்ளது.

    நான் மிக விரைவில் எடையை அதிகரித்தே ஆகவேண்டும். ஆனால் தினமும் ஒருகிலோ எடை குறைந்துகொண்டே வருகிறேன் என வேதனையுட தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அய்குட் உடலின் அருகே கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • நயன்தாரா தான் காது குத்திக் கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    • காதில் ரத்தம் வரும்போது விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாறே பாடலை நயனதாரா பாடுகிறார்.

    நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கு விக்கி மற்றும் நயன் அவ்வப்போது அவர்கள் ஒன்றாக வெளியே செல்வது மற்றும் குழந்தைகளுடன் செலவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

    அவ்வகையில் நயன்தாரா தற்போது தான் காது குத்திக் கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், காது குத்தும் கடைக்குச் செல்லும் நயன், அங்கு தனக்குப் பிடித்த தோடை தேர்வு செய்கின்றார். அதன் பின்னர் அங்கிருக்கும் ஊழியர்கள், நயன்தாராவுக்கு அந்த தோடை குத்தி விடுகின்றனர். இப்படியான நிலையில், நயனுக்கு காதில் இருந்து ரத்தம் வருகின்றது. அப்போது, விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாறே பாடலைப் பாடுகிறார்

    இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்


    • சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • காளிமுத்து என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள பள்ளபாளையத்தில் சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    காளிமுத்து என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். சிறுமிகளுக்கு ஜீப் ஓட்ட கற்றுக்கொடுத்து இந்த வீடியோவை அவர் படம் பிடித்துள்ளார்.

    சிறுமிகள் ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் இந்த வீடியோவிற்கு இணையத்தில் கடும் கண்டனம் எழுந்தது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அரசு அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.

    ஆபத்தான முறையில் சிறுமி வாகனத்தை இயக்கியது சட்டப்படி குற்றம்தான். தனது சொந்த விவசாய நிலத்தில் உரிமையாளர், வாகனத்தை சிறுமியிடம் கொடுத்து இயக்கச் சொல்லியுள்ளார். சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்கும் போது சிலர் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.
    • குழந்தையின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் அப்பெண் ரீல்ஸ் எடுத்துள்ளார்.

    சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகள் பெறுவதற்காக ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து வெளியிடும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது. ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்கும் போது சிலர் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.

    தற்போது குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கிணற்றுக்கு அருகில் அமர்ந்துள்ள பெண் ஒரு பாடலுக்கு ஏற்றவாறு நடன அசைவுகள் செய்து ரீல்ஸ் எடுத்துள்ளார்.

    அப்போது அவளது காலை பிடித்தவாறு கிணற்றுக்குள் அருகில் அவளது குழந்தை உள்ளது. சிறிது கை கழுவினால் கூட குழந்தை கிணற்றுக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. ஆனால் குழந்தையின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் அப்பெண் ரீல்ஸ் எடுத்துள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில் பலரும் அப்பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    • முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.
    • ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பிரதர் படத்திலும் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.

    2021 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் நடிகையாக பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

    அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சூர்யாவின் சனிக்கிழமை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பிரதர் படத்திலும் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது அவர் சேலை கட்டி எடுத்த அழகிய புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உண்மை வெல்லும் என்று நான் நம்புகிறேன்.
    • நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

    புதுடெல்லி:

    மலையாள திரையுலகில் எழுந்துள்ள நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து புகார் கூறி வருகின்றனர்.

    அந்த வகையில் நடிகர் முகேஷ், சித்திக், ஜெயசூர்யா மற்றும் தயாரிப்பாளர் ரஞ்சித், பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் நடிகர் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயசூர்யா மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குகிறார்.

    தமிழ் சினிமாவில் என் மன வானில், மனதோடு மழைக்காலம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., சக்கரவியூகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இவர் மீது நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் 2013-ம் ஆண்டு தொடுபுழாவில் நடந்த ஒரு படப்பிடிப்பின் போது தன்னிடம் நடிகர் ஜெயசூர்யா அத்துமீறயதாக திருவனந்தபுரத்தை சேர்ந்த நடிகை அளித்த புகார் மீது ஜெயசூர்யா மீது 2-வது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தன் மீதான பாலியல் புகார்களை நடிகர் ஜெயசூர்யா மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஜெயசூர்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஒரு பொய் எப்போதும் உண்மையைவிட வேகமாக பயணிக்கும். ஆனால் உண்மை வெல்லும் என்று நான் நம்புகிறேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடரும்.

    என் மீதான புகார்களை சட்ட ரீதியாக தொடர முடிவு செய்துள்ளேன். இந்த வழக்கு தொடர்பான மீதமுள்ள நடவடிக்கைகளை எனது வக்கீல்கள் குழு கவனித்து கொள்ளும்.

    மனசாட்சி இல்லாத எவரும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது எளிது. துன்புறுத்தலை போல, துன்புறுத்தப்படுதலும் வேதனையானது.

    நமது நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த பிறந்தநாளை மிகவும் வேதனையான பிறந்தநாளாக மாற்ற பங்களித்தவர்களுக்கு நன்றி.

    இவ்வாறு ஜெயசூர்யா தனது பதிவில் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 20 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்த தாய், மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
    • மகனுக்கும் தாய்க்கும் அவ்வப்போது முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு, தாயுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    21 வயதான நிலேஷ், தனது இன்ஸ்டாகிராம் பதிவில், என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நான் உங்களை கொன்றுவிட்டேன். மிஸ் யூ' என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது தாயை கொலை செய்துவிட்டு அவரது சடலத்தின் பக்கத்தில் அமர்ந்திருந்த மகனை போலீசார் கைது செய்தனர்.

    20 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்த தாய், மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மகனுக்கும் தாய்க்கும் அவ்வப்போது முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முரண்பாடு வாக்குவாதமாய் மாறி கடைசியில் பெற்ற தாயையே மகன் கொலை செய்துள்ளார்.

    தாயின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பெண்ணின் முன்னாள் கணவரிடம் உடலை பெற்றுக்கொள்ள சொல்லி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் உடலை பெற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டதால், அப்பெண்ணின் உடலுக்கு போலீசாரே இறுதி சடங்குகள் மேற்கொண்டனர்.

    • ஒரிஜினல் மாம்பழங்களின் மூலம் இந்த ஜூஸ்கள் தயாரிக்கப்டுகின்றனவா என்ற கேள்வி பலருக்கு இருக்கும்.
    • இதுதான் உங்களின் மாம்பழ ஜூஸ் என்ற கேப்ஷனுடன் இஸ்டாகிராமில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது

    சீசனில் மட்டுமே கிடைப்பதால் வாட்டத்தில் இருக்கும் மாம்பழப் பிரியர்களுக்கு பேக்கேஜ் செய்யப்பட்ட மாம்பழ ஜூஸ்கள் ஆறுதலாக இருந்து வருகிறது. ஒரிஜினல் மாம்பழங்களின் மூலம் இந்த ஜூஸ்கள் தயாரிக்கப்டுகின்றனவா என்ற கேள்வி பலருக்கு இருக்கும். அந்த வகையில், செயற்கையான முறையில் மாம்பழ ஜூஸ் தயாரிக்கப்பட்டு பேக்கேஜிங் செய்யப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மாம்பழ ஜூஸ் தயாராகும் ஆலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறமிகளுடன், மாம்பழத்தைப் போன்ற மஞ்சள் நிறம் வரவைத்து செயற்கையான திரவத்தைக் கலந்து அதில் இனிப்புச் சுவைக்காக சர்க்கரையை கலக்கின்றனர். இறுதியாக அதை பிளாஸ்டிக் பேப்பர் பாக்கெட்டுகளில் அடைகின்றனர்.

    இதுதான் உங்களின் மாம்பழ ஜூஸ் என்ற கேப்ஷனுடன் இஸ்டாகிராமில் இந்த வீடியோ பகிரப்பட்ட நிலையில், இதைப்பார்த்த நெட்டிஸின்கள் அதிர்ச்சியில் உள்ளனர்

    • சிறுவனின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட போலீசார் அவனை மீட்டுள்ளனர்.
    • தன்னை யாரோ கடத்தி விட்டதாக சிறுவன் நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் பதேபூரில் 17 வயது சிறுவனை காணவில்லை என்று அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சிறுவனை போலீசார் மீட்டுள்ளனர்.

    இதனையடுத்து போலீசாரின் விசாரணையில், சிறுவனை யாரும் கடத்தவில்லை என்று, தன்னை யாரோ கடத்தி விட்டதாக சிறுவன் நாடகம் ஆடியதும் தெரிய வந்துள்ளது.

    இன்ஸ்டாகிராமில் அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் இந்த சிறுவன் மெசேஜ் அனுப்பி தொடர்ச்சியாக பேசி வந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட பெண்ணின் குடும்பம் சிறுவனின் குடும்பத்திடம் இதை பற்றி தெரிவித்துள்ளனர்.

    இதனால் பயப்பட்ட சிறுவன் இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளான். அவரது தந்தைக்கு செல்போனில் அழைத்து உங்கள் மகனை கடத்தியுள்ளோம். உங்கள் மகனை விடுவிக்க ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் மிரட்டியுள்ளான். பின்னர் தனது செல்போனை சிறுவன் சுவிட்ச் ஆப் செய்துள்ளான்.

    சிறுது நேரம் கழித்து தனது போனை சிறுவன் சுவிட்ச் ஆன் செய்த போது சிறுவனின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட போலீசார் அவனை மீட்டுள்ளனர்.

    • இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
    • இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    இந்நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×