என் மலர்

    நீங்கள் தேடியது "Instagram"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவியிடம் வேல்முருகன் அடிக்கடி பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
    • வீட்டில் இருந்த 12 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு பெற்றோர் சந்தேகம் அடைந்தனர்.

    வண்டலூர்:

    மறைமலை நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த என்ஜினீயரான வேல்முருகன்(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் மூலம் பேசி காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் செல்போனில் பிரீபயர் கேம் விளையாடுவது வழக்கம். இந்த விளையாட்டுக்காக பணம் தேவைப்படுகிறது என்று கூறி மாணவியிடம் வேல்முருகன் அடிக்கடி பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மாணவி பெற்றோருக்கு தெரியாமல் வேல்முருகனுடன் பழகி வந்து உள்ளார்.

    இந்நிலையில் வீட்டில் இருந்த 12 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். மகளிடம் விசாரித்த போது அவர், காதலன் வேல்முருகனுக்கு பணம் தேவைப்பட்டதால் நகையை கூரியர் மூலம் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் மகளின் ஆபாசமான புகைப்படங்கள், வீடியோக்கள் வேல்முருகனுக்கு அனுப்பி இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் திசையன்விளை சென்று மாணவியை ஏமாற்றி நகை-பணம் பறித்த வேல்முருகனை கைது செய்தனர். அவர் இதுபோல் வேறு பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு உள்ளாரா? என்று அவரது செல்போனை கைப்பற்றி மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இறந்த பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. அந்த பெண்ணுக்கு 20 முதல் 22 வயது இருக்கலாம் என்று கூறப்பட்டது.
    • கைதான சிறுவன் உள்பட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வலசை கிராமம் உள்ளது. அதன் அருகில் சேர்ந்தமரம் சாலையில் கண்டமான் குளம் என்னும் குளத்தின் கரை அருகில் பயன்பாடற்ற நிலையில் இருக்கும் கிணற்றில் கடந்த 10-ந்தேதி சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பெண் பிணம் மிதந்தது.

    தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் அங்கு சென்று பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இறந்த பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. அந்த பெண்ணுக்கு 20 முதல் 22 வயது இருக்கலாம் என்று கூறப்பட்டது.

    அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்தது யார்? அவரை எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து தனிப்படை அமைத்து துப்பு துலக்கப் பட்டது.

    அதே நேரத்தில் அந்த பெண்ணின் கையில் எம்.வி. என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதை வைத்தும் போலீசார் துப்பு துலக்கினர். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து இளம்பெண் யார் என்று விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் தனிப்படையின் தீவிர விசாரணையில், அந்த பெண் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள இருவாணி வயல் பகுதியை சேர்ந்த வினோதினி(வயது 21) என்பதும், கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்த மனோ ரஞ்சித்(22) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வினோதினியை கொலை செய்ததும் தெரியவந்தது.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வினோதினிக்கும், மனோ ரஞ்சித்துக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. தொடர்ந்து அவர்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வினோதினிக்கு சிவகங்கையை சேர்ந்த வேறு ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்றது.

    இதனால் மனம் உடைந்த மனோ ரஞ்சித் தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனால் மனோ ரஞ்சித்தை மறக்க முடியாமல் தவித்த வினோதினி, கடந்த 5-ந்தேதி தனது கணவரை உதறி தள்ளிவிட்டு வலசைக்கு வந்துள்ளார்.

    பின்னர் காதலன் மனோ ரஞ்சித்துடன் சேர்ந்து ஊருக்குள் சுற்றி திரிந்துள்ளார். ஆனால் வினோதினிக்கு வேறு சிலருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த மனோ ரஞ்சித் அவரிடம் கேட்டுள்ளார்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த மனோ ரஞ்சித் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து வினோதினியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

    அதன்படி சம்பவத்தன்று மனோ ரஞ்சித் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த பரத், மகா பிரபு, கடையநல்லூரை சேர்ந்த மணிகண்டன், 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து வினோதினியை அடித்துக்கொலை செய்தார்.

    பின்னர் யாருக்கும் தெரியாமல் தப்பிக்க வினோதினி உடலை சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு சென்று கிணற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் வழக்கம் போல் ஊருக்குள் நடமாடிய அவர்கள் ஊரை விட்டு புறப்பட்டு சென்றனர்.

    பொக்லைன் டிரைவர்களான மனோ ரஞ்சித், மணிகண்டன், மகா பிரபு ஆகியோர் கோவைக்கும், 17 வயது சிறுவன் சென்னைக்கும் தப்பிச் சென்ற நிலையில், போலீசார் துப்பு துலக்கி 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

    கைதான சிறுவன் உள்பட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராகுலின் மனைவிக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் அதிக ஈடுபாடு இருந்தது.
    • ராகுலின் குழந்தைகள் தாயை கொலை செய்ததை கூறினார்கள்.

    லக்னோ:

    பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சிறு சிறு பிரச்சினைகளுக்காக பெண்கள் கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது.

    சமூக வலைதளத்தில் அதிக பாலோவர்களை பெற்றதால் ஒரு பெண் அவளது கணவராலே கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் பாரா பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ராகுல் மிஸ்ரா(வயது37). இவர் டூர் மற்றும் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், 12 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    ராகுலின் மனைவிக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் அதிக ஈடுபாடு இருந்தது. குறிப்பாக அவர் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி பதிவுகள் போட்டு வந்தார். அவரது பதிவுகளுக்கு அதிக லைக்குகள் வந்தன. மேலும் அவருக்கு பாலோவர்கள் அதிகமானோர் உருவானார்கள். இதனால் அவர் அதிகநேரம் இன்ஸ்டாகிராமில் செலவழித்தார்.

    இது ராகுலுக்கு தெரியவந்தது. அவரும் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருந்தார். தன்னைவிட அதிக பாலோவர்கள் மனைவிக்கு இருக்கிறார்களே என்ற தாழ்வு மனப்பான்மை அவருக்குள் ஏற்பட்டது. மேலும் பாலோவர்களில் சிலர் மனைவியை சந்திப்பதாகவும் சந்தேகப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராகுல் தனது மனைவி, குழந்தைகளுடன் ரேபரேலிக்கு இனோவா காரில் சென்றார்.

    பூர்வாஞ்சல் சாலையில் முஜ்ஏஸ் சதுக்கம் அருகே வந்தபோது காரை ஓரமாக நிறுத்தினார். பின்னர் ஆவேசமாக தனது குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்பு குழந்தைகளுடன் காரில் அமர்ந்திருந்தார். அப்போது அந்தவழியாக சென்ற போலீஸ் ரோந்து குழுவினர் அவர்களிடம் விசாரித்தனர்.

    அப்போது ராகுலின் குழந்தைகள் தாயை கொலை செய்ததை கூறினார்கள். இதையடுத்து போலீசார் ராகுலை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் "மனைவிக்கு இன்ஸ்டாகிராம் பாலோவர்கள் அதிகரித்ததால் ஏற்பட்ட பொறாமையிலும், பாலோவர்கள் சிலரை ரகசியமாக சந்தித்ததாலும் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

    இதை தொடர்ந்து ராகுல் மனைவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கி வைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் கோலி 11.45 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.
    • டோனி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதில்லை இருந்தும் இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து பணம் சம்பாதிக்கும் வழியை கண்டுபிடித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, கிரிக்கெட் வீரர்கள் இப்போது தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து ஒரு பதிவுக்கு பெரிய தொகையை பெற்று வருகின்றனர்.

    இந்தப் பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் இருப்பதாக புதிய அறிக்கை தெரிவிக்கிறது. ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் கோலி 11.45 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். அடுத்த இடத்தில் எம்எஸ் டோனி உள்ளார். இவர் ஒரு பதிவுக்கு இந்திய மதிப்பில் 1.44 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனால் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதில்லை இருந்தும் இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்.

    இவர்களை அடுத்து ரோகித் சர்மா 76 லட்சம், ரெய்னா 34 லட்சம், ஹர்திக் பாண்ட்யா 65 லட்சமும் சம்பாதிக்கின்றனர்.

    இன்ஸ்டாகிராம் வலைதளம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவோர் பட்டியலில் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். இவர் ஒரு பதிவுக்கு இந்திய மதிப்பில் ரூ. 26.75 கோடியை பெற்று வருகிறார். மற்றொரு புகழ்பெற்ற கால்பந்து வீரரான மெஸ்ஸி ஒரு பதிவுக்கு இந்திய மதிப்பில் ரூ. 21 கோடியே 49 லட்சத்தை பெற்று வருகிறார்.

    உலக அளவில் இன்ஸ்டாகிராம் வலைதளம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவோர் பட்டியலில் முதல் 20 இடங்களில் இடம்பிடித்த ஒரே இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்று இருக்கிறார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் பின்னர் திரும்பி வரவில்லை.
    • கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவருடன் பழகிவந்தது தெரியவந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த காட்டாவூர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம் பெண் கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2019 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவிலலை.

    இதுகுறித்து பொன்னேரி போலீஸ்நிலையத்தில் இளம்பெண்ணின் கணவர் புகார் செய்தார். விசாரணையில் மாயமான இளம்பெண் கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவருடன் பழகிவந்தது தெரியவந்தது.

    இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த மாதவரம் முஸ்லிம் நகரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி மாயமானார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை முதியோர் இல்ல தாத்தா, பாட்டிகள் நடனமாடி இன்ஸ்டாகிராமில் சாதித்த வீடியோ வெளியானது.
    • பொதுமக்கள் அதிகமாக பார்த்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது

    மதுரை

    கூட்டுக்குடும்பம் சிதைந்து போனதால் சிற–கொடிந்த பறவைகளை போன்று தங்களது கடைசி காலத்தை கழிக்க போராடும் மூத்த குடிமக்களுக்காக உருவானதுதான் முதியோர் இல்லங்கள். பிள்ளைகள் இருந்தும் பல்வேறு கார–ணங்களுக்காக தனித்தும், துரத்தியும் விடப்படுப–வர் களை கண்டறிந்து அவர்க–ளின் வாழ்க்கையை இனி–தாக்கும் முயற்சியில் தொடங்கப்பட்ட முதியோர் இல்லங்கள் இன்று எண் ணில–டங்காமல் முளைத்து–விட்டது.

    ஒத்த வயதுடையவர்களை உறவினர்களாக நினைத்து வாழ்வின் இறுதி நாட்களை கழித்துவரும் முதியோர் களும் நாகரீகத்திற்கேற்ப தங்களை மாற்றி வருகிறார் கள் என்பதற்கு சமூக ஊட–கங்களே சாட்சி.

    எத்தனை நாளைக்குத் தான் வரலாற்று கதைகளை நினைவு கூர்ந்து, அனுபவ்ட களை பகிர்ந்து–கொண்டு காலத்தை கடத்துவது? காலத்தின் சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள முதியோர்களும் தயாராகி–விட்டனர் என்பதற்கு மதுரை முதியோர் இல்லமும் சான்றாக அமைந்துள்ளது. அதிலும் சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளி–யிட்டு லைக்குகளை பெறுவ–திலும் அவர்கள் முன்னேற் றம் கண்டுள்ளனர். அதுபற் றிய விபரம் வருமாறு:-

    மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகரில் அடைக்கலம் என்கிற முதி–யோர் இல்லம் செயல் பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டு–களாக இலவசமாக நடத்தப் பட்டு வரும் இல்லத்தில் கணவரை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்கள், சாலையோரம் தவித்தவர் கள், தனிமையில் வாடுபவர் கள் என தற்போது 14 பாட்டிகளும், 11 தாத்தாக்க–ளும் தங்கியுள்ள–னர்.

    இதுவரை 14 பேர் இறந்துள்ள நிலையில் 58 பேர் வசித்துள்ளனர். முதி–யோர்களின் உடல் நிலையை பரிசோதித்து அவர்களுக் கேற்ற உணவுகள் தவறாமல் வழங்கப்படுகிறது. பொழுதை கழிக்க பழங்கதை பேசியவர்கள் தற்போது ஆண்டிராய்டு போன்கள் பற்றியும் அறிந்து, தெரிந்து பழகிக்கொண்டுள்ளனர்.

    அந்த வகையில் இந்த இல்லத்தைச் சேர்ந்த முதிய–வர்கள் சினிமா பாட–லுக்கு நடனமாடும் காட்சிகள் இன்ஸ்டாகிராமில் அடைக்க–லம் என்கிற பெயரில் வீடியோக்கள் வைரலாகி மில்லியன் கணக்கில் பார் வை–யாளர்களை பெற்று சாதனை படைத்துள் ளது.

    மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏறு பூட்டி வயக்காட்ட உழுதுபோடு செல்லக்கண்ணு... என்ற புதிய ரீமேக் பாடலுக்கு ஏற்ப நளினமாக ஆடிய நடனம் பார்வையாளர்க–ளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதுகுறித்து அந்த முதி–யோர் இல்லத்தில் வசித்து வரும் ராஜகோபால் மற்றும் ராக்காயி கூறியதாவது:-

    குடும்ப சூழ்நிலை கார–ணமாக இங்கு வந்தோம். இங்கு எங்களை நல்லபடி–யாக பார்த்துக் கொள்கி–றார்கள். நடனம் ஆடுவதில் ஆர்வம் இருந்த காரணத்தால் நடனமாடி வீடியோ எடுத் தோம். மேலும் இதுபோன்ற விஷயங்களை செய்வது மூலம் எங்கள் கஷ்டங்களை மறந்து மகிழ்ச்சியாக இருக்கி–றோம்.

    மனதில் அடக்கி வைத்தி–ருந்த கஷ்டங்கள் காணாமல் போய்விட்டது. இந்த வீடியோ காட்சிகள் எதார்த்தமாக நாங்கள் எடுத்தோம். ஆனால் தற்போது இதை பொதுமக்கள் அதிகமாக பார்த்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கவுரி விர்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு காரின் பானட் மீது அமர்ந்து செல்வது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
    • போலீசார் வாகனத்தின் பதிவு எண் மூலம் கவுரியை அடையாளம் கண்டு அவரது காரை பறிமுதல் செய்தனர்.

    சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவே சில இளைஞர்களும், இளம்பெண்களும் வித்தியாசமான வீடியோக்களையும், சாகசங்களையும் செய்து ரீல் வீடியோக்கள் எடுத்து பதிவிட்டு வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது. அவற்றில் சில ஆபத்தானவையாக இருக்கிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் ஹோசியர்புர் மாவட்டத்தை சேர்ந்த கவுரி விர்டி என்ற இளம்பெண் இன்ஸ்டாகிராமல் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவராக திகழ்கிறார். இவரது இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான பாலோயர்களை கொண்ட இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரின் பானட் மீது அமர்ந்து செல்வது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

    சில மணி நேரங்களிலேயே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெற்று வைரலான இந்த வீடியோ ஜலந்தர்-ஜம்மு சாலையில் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாகனத்தின் பதிவு எண் மூலம் கவுரியை அடையாளம் கண்டு அவரது காரை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர் ரீல் வீடியோவுக்காக இந்த செயலில் ஈடுபட்டதாக கூறினார். அவருக்கு எச்சரிக்கை செய்த போலீசார் இதுதொடர்பான விளக்கத்தையும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோகன் அனுப்பிய புகைப்படத்திற்கு சிபி கார்த்திக் கடினமான வார்த்தையை பயன்படுத்தி பதில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
    • வாக்குவாதம் அதிகமாக ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் முருகம்பாளை யத்தை சேர்ந்தவர் சிபி கார்த்திக் (வயது21). இவருக்கும் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த டெய்லர் மோகன் என்ற கபாலிக்கும் இடையே இன்ஸ்டா கிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவருக்கொருவர் தகவல் மற்றும் படங்களை பரிமாறிக்கொள்வது வழக்கம்.

    இந்த நிலையில் மோகன் அனுப்பிய புகைப்படத்திற்கு சிபி கார்த்திக் கடினமான வார்த்தையை பயன்படுத்தி பதில் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மோகன் திருப்பி தரக்குறைவான பதில் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மங்கலம் சாலை புவனேஸ்வரி நகர் பகுதியில் சிபி கார்த்திக் நின்று கொண்டிருந்தார். அங்கு மோகன் மற்றும் அவருடைய நண்பர்கள் அசோக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த மோகன், அசோக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிபி கார்த்திக்கை ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சிபி கார்த்திக் ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்தார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிபி கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக திருப்பூர் மத்திய பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்ததாக மூன்று பேரையும் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புவனேஸ்வர்குமார் இன்ஸ்டாகிராம் பயோவில் புதிய மாற்றங்களை செய்துள்ளார்.
    • தனது இன்ஸ்டாகிராம் பயோவில் 'இந்தியன் கிரிக்கெட்டர்' என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதனை மாற்றியுள்ளார்.

    டெல்லி:

    இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஷ்வர் குமார். இவர் பந்தை 'ஸ்விங்' செய்வதில் வல்லவர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி கவனத்தை ஈர்த்தவர் புவனேஷ்வர் குமார். டி20 போட்டிகளில் விக்கெட் பெரிய அளவில் கைப்பற்றாவிட்டாலும் டாட் பந்துகளை அதிகம் வீசக்கூடியவர். இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். காயம் காரணமாக சில தொடர்களில் இடம்பெறவில்லை. காயம் சரியான பின்பும் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

    33 வயதான புவனேஷ்வர் குமார், கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணிக்காக விளையாடினார். இந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். இதில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

    இந்நிலையில் புவனேஸ்வர்குமார் இன்ஸ்டாகிராம் பயோவில் புதிய மாற்றங்களை செய்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பயோவில் 'இந்தியன் கிரிக்கெட்டர்' என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதனை மாற்றி 'இந்தியன்' என மட்டுமே குறிப்பிட்டுள்ளார். மேலும் அதற்கு கீழ் குடும்பம் தான் முதல் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மாற்றம் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறாரா? என்ற அச்சத்தை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திரெட்ஸ் ஆப்-இல் டெக்ஸ்ட் அப்டேட்கள், லைக், ரிப்ளை, ரி-போஸ்ட், ஷேர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    • திரெட்ஸ் செயலியில் புதிய அம்சங்கள் எப்போது வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    மெட்டா நிறுவனம் டுவிட்டர் தளத்துக்கு போட்டியாக உருவாக்கி இருக்கும் புதிய செயலி தான் திரெட்ஸ். இன்ஸ்டாகிராமை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய திரெட்ஸ் செயலி அறிமுகமானது முதலே அதிகளவு டவுன்லோட்களை கடந்து வருகிறது.

    தற்போது திரெட்ஸ் ஆப்-இல் டெக்ஸ்ட் அப்டேட்கள், லைக், ரிப்ளை, ரி-போஸ்ட், ஷேர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. எனினும், திரெட்ஸ் ஆப்-இல் நேரடி குறுந்தகவல் செய்யும் வசதி இதுவரை வழங்கப்படவில்லை. விரைவில் இந்த நிலை மாறி, இந்த அம்சம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

     

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    இன்ஸ்டாகிராம் தலைமை செயல் அதிகாரி ஆடம் மொசெரி, திரெட்ஸ் ஆப்-இல் டைரக்ட் மெசேஜ்களை தற்போதைக்கு வழங்கும் திட்டம் இல்லை என்று முன்னதாக தெரிவித்து இருந்தார். சமூக வலைதள ஆய்வாளரான மேட் நவரா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், விரைவில் திரெட்ஸ் செயலியில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.

    அதில், டிரென்ட்ஸ் அன்ட் டாபிக்ஸ் (Trends&Topics), இம்ப்ரூவ்டு சர்ச் (Improved Search) மற்றும் மெசேஜிங் (Messaging) போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கிரியேட்டர்கள் வழங்கும் கருத்துக்களுக்கு ஏற்ப அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில், திரெட்ஸ் செயலியில் குறுந்தகவல் அம்சம் வழங்க கோரி ஏராளமான கோரிக்கைகள் எழுந்து இருக்கும் என்று தெரிகிறது. புதிய அம்சங்கள் எப்போது திரெட்ஸ் செயலியில் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin