என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன்"

    • ஸ்மார்ட்போன் பார்ப்பதால் தான் அவரது கண்ணை சுற்றி அவ்வாறு கருப்பாக இருப்பதாக அந்த பெண் கூறுகிறார்.
    • இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது.

    முன்பெல்லாம் குழந்தைகள் கதை கேட்டு தூங்கிய காலம் போய், தற்போது செல்போன் பார்த்து விட்டு தான் தூங்கும் நிலை அதிகரித்து விட்டது. இந்நிலையில் அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைக்கு பாடம் புகட்ட தாய் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் இருக்கிறார். அவரது கண்ணை சுற்றி அவரது தாய் கருப்பு மையை தடவி விட்டுள்ளார். ஸ்மார்ட்போன் பார்ப்பதால் தான் அவரது கண்ணை சுற்றி அவ்வாறு கருப்பாக இருப்பதாக அந்த பெண் கூறுகிறார். உடனடியாக அந்த குழந்தை கண்ணாடியை பார்த்து அழத் தொடங்குகிறது. இனிமேல் செல்போன் பார்ப்பியா? என தாய் கேட்கும் போது, குழந்தை அழுதபடி தலையசைத்து மறுக்கிறது. மேலும் குழந்தை எனது கண்கள் சிவப்பாகுமா? என கேட்கும் போது அவரது தாய், இல்லை… கருப்பாகும் என கூறுகிறர்.

    இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது. நெட்டிசன்கள் சிலர், இது சூப்பர் ஐடியா, எல்லா அம்மாவும் இதை முயற்சி செய்ய வேண்டும் என்று பாராட்டி பதிவிட்டனர்.

    • செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்தது ஆன்லைன் விற்பனை நிறுவனமா? அல்லது கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களா? என்பது தெரியவில்லை.
    • மோசடி குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசில் பிரேம் ஆனந்த் புகார் அளித்தார்.

    பெங்களூரு குமாரசாமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பிரேம் ஆனந்த். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், ஒரு ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ரூ.1.85 லட்சத்திற்கு ஒரு செல்போனை ஆர்டர் செய்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் அவர் ஆர்டர் செய்த செல்போன் கூரியர் மூலமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், கூரியர் நிறுவன ஊழியரும், நேற்று முன்தினம் பிரேம் ஆனந்த் வீட்டுக்கு வந்து ஒரு பார்சலை கொடுத்துவிட்டு சென்றார். உடனே அவரும், தான் ஆசையாக ஆர்டர் செய்த செல்போன் வந்ததாக நினைத்து பார்சலை பிரித்து பார்த்தார்.

    அப்போது அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த பார்சலில் செல்போன் பாக்சுக்குள் செல்போனுக்கு பதில் ஒரு பளிங்கு கல் இருந்தது. ரூ.1.85 லட்சம் மதிப்பிலான செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்ததால் கோபம் அடைந்த பிரேம் ஆனந்த் உடனடியாக கூரியர் ஊழியரின் செல்போனுக்கு அழைத்தார். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை.

    செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்தது ஆன்லைன் விற்பனை நிறுவனமா? அல்லது கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களா? என்பது தெரியவில்லை.

    இந்த மோசடி குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசில் பிரேம் ஆனந்த் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த வசதி '4ஜி' அலைக்கற்றை சேவையில் இருந்து படிப்படியாக பிற அலைக்கற்றைகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளது.
    • அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளியிட்ட 6 மாதங்களுக்குள் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கவேண்டும்.

    இந்தியாவில் தகவல் பரிமாற்றத்துக்காக 120 கோடிக்கும் அதிகமானோர் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் சுமார் 95 கோடி பேர் தங்களது ஸ்மார்ட்போன்களில் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். செல்போன் பயன்படுத்துபவர்களை குறிவைத்து மோசடி கும்பல் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

    மோசடி வலையில் சிக்கி நிதி இழப்பு ஏற்பட்டதாக அன்றாடம் பதிவாகி வரும் சம்பவங்களே இதற்கு சாட்சி. இது ஒருபுறம் இருக்க செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு, தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்தும், தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருந்தும் அவ்வப்போது அழைப்புகள் வந்து வீண் தொல்லை கொடுக்கின்றன.

    இந்த சூழலில் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் காண புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளன. அதன்படி, செல்போனில் சேமித்து வைக்காத எண்களில் இருந்து அழைப்பு வரும்போது, அழைப்பு வரும் எண்களுடன் சேர்த்து அந்த சிம் கார்டை பயன்படுத்துபவரின் பெயர் விவரமும் பதிவாகும்.

    இந்த வசதி '4ஜி' அலைக்கற்றை சேவையில் இருந்து படிப்படியாக பிற அலைக்கற்றைகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளது. மோசடி மற்றும் சிரமத்தை கொடுக்கும் விரும்பாத அழைப்புகளுக்கு செல்போன் எண்ணோடு பெயரும் வரும் வகையிலான இந்த சேவை கடிவாளம் போடும் வகையில் இருக்கும். இதனால் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை இனி அடையாளம் கண்டு பயமின்றி எடுக்கலாம்.

    தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த வசதியை அறிமுகப்படுத்த ஒருமித்த கருத்தை எட்டும் முயற்சியில் இறங்கியுள்ளன.

    விரைவில் 2 அமைப்புகளும் இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து, அமலுக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளியிட்ட 6 மாதங்களுக்குள் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • இளைஞர் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலத்தில் நீண்ட நேரமாக அழைத்தும் காதலியின் செல்போன் பிஸியாகவே இருந்ததால் இளைஞர் ஒருவர் கோபத்தில், காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின்சார ஒயர்களை ஒட்டுமொத்தமாக துண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    இளைஞர் ஒருவர் கையில் மின் வயரை கட் செய்யும் கருவியுடன் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    2022 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் எலக்ட்ரீசியன் ஒருவர் தனது காதலியை அடிக்கடி சந்திக்க ஒட்டுமொத்த கிராமத்தின் மின்சாரத்தை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டுபிடித்த கிராம மக்கள் அந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரவு உறங்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தவறான பழக்கமாகும்.
    • கண்களில் வறட்சி, வலி, கார்னியா பாதிப்பு, பார்வை குறைபாடு போன்றவை இதனால் ஏற்படக் கூடும்.

    இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் இன்றியமையாத ஒன்றாக அமைந்துவிட்டது. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நெருக்கமான அனைவரிடமும் வாட்ஸ்அப் உரையாடலில் தொடங்கி, செய்திகளை தெரிந்து கொள்வது, நொடிக்கு நொடி தகவல்களை வழங்குவது, வங்கியில் பணம் பரிவர்த்தனை செய்வது என அனைத்துக்கும் செல்போனை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். ஆனால், அத்தகைய செல்போனுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கவேண்டும். இல்லையென்றால், நம் உடல் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ளும்.

    * மன அழுத்தம்

    நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனால் தேவையற்ற மன அழுத்தம், தசைகளில் பாதிப்பு நரம்புகளில் பிரச்சனைகள் ஏற்படலாம். செல்போன் பழக்கம் நீடித்துக் கொண்டே சென்றால் நம்மை மன நோய்க்கு ஆளாக்கி விடும். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு இடையே சீரான அளவில் இடைவெளி எடுத்துக் கொண்டு அளவோடு மொபைல் போன் பயன்படுத்துவது இது போன்ற கடுமையான பாதிப்புகளை களைய உதவும்.

    * உறக்கமின்மை

    இரவு உறங்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தவறான பழக்கமாகும். இரவு நேரங்களில் செல்போனில் இருந்து வெளிப்படும் நீல வெளிச்சம் காரணமாக தூக்கம் கெடுவதோடு உடல் பருமன், நீரிழிவு நோய் போன்ற பலவித உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். முடிந்த அளவு, இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும்.

    * பார்வை குறைபாடுகள்

    செல்போனிலிருந்து வரும் நீல வெளிச்சம் எனப்படும் ஒளிக்கதிர்கள் நம்முடைய கண்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. கண்களில் வறட்சி, வலி, கார்னியா பாதிப்பு, பார்வை குறைபாடு போன்றவை இதனால் ஏற்படக் கூடும். எந்த அளவிற்கு மொபைல் போன் பயன்படுத்துவதை நாம் குறைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய கண்கள் பாதுகாக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

    * கூன் விழும் அபாயம்

    நம்மில் பலர் செல்போனை பயன்படுத்தும்போது குனிந்த நிலையிலேயே அதிக நேரம் உட்கார்ந்திருக்கிறோம். இதனால் முதுகுவலி மற்றும் கழுத்துவலி அதிகம் ஏற்படும். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் கூன் முதுகு விழுந்துவிடும். மேலும், இந்த பாதிப்பை சரி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். இதனை தவிர்க்க கழுத்து பகுதியை வலுவாக்கும் உடற்பயிற்சிகளோடு சரியான அளவு ஓய்வும் வேண்டும்.

    * காது கேட்கும் திறன் இழப்பு

    சிலர் ஹெட்போனில் பாடல் கேட்கும் பொழுது அதிக சவுண்ட் வைத்து பயன்படுத்துவார்கள். இதனால் 30 முதல் 40 வயதிலேயே காது கேட்கும் திறனை படிப்படியாக இழக்க நேரிடும். எனவே ஹெட்போன் பயன்படுத்தும் பொழுது ஒலி அளவை 50 சதவீதம் குறைத்து பயன்படுத்துங்கள். பாதிப்புகள் ஏற்படாது.

    சில டிப்ஸ்...

    * ஸ்மார்ட்போனின் பயன்பாட்டை குறைக்க இரவில் தூங்கும் போது அதனை உங்களிடமிருந்து விலக்கி வைக்க பழகுங்கள்.

    * ஸ்மார்ட்போன் பழக்கத்தை குறைக்க இணையத்தை எப்போதும் ஆன் செய்து வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

    * காலை எழுந்தவுடன் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன் முகத்தில் தான் கண் விழிக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் காலை தூங்கி எழுந்ததில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு போனை கையில் எடுக்காமல் இருக்க பழகிக் கொள்ளலாம்.

    * குடும்பம், புத்தகம், வாசிப்பு, சினிமா, நண்பர்கள் என்று நம்முடைய பொழுதுபோக்குகளை மாற்றம் செய்து கொள்வது சிறந்தது.

    • ஊழியர் மகேஷ் நீண்ட நேரமாக பேசிகொண்டு இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
    • நாங்கள் பொறுமையை இழந்த பிறகு தான் இந்த வீடியோவை வெளியிடுகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் மகேஷ் என்பவர் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணியில் இருந்த இவர் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பணி நேரத்தில் தனது செல்போனில் நீண்ட நேரம் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தார். மேலும் நாற்காலியில் ஹாயாக படுத்துக்கொண்டு பயணிகளை கண்டு கொள்ளாமல் இருந்தார்.

    ஊழியர் மகேஷ் நீண்ட நேரமாக பேசிகொண்டு இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் நேரம் ஆகிறது டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டும் ஊழியர் மகேஷ் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து அங்கு இருந்த பயணிகள் சிலர், டிக்கெட் எடுக்க பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும், அந்த நேரத்தில் ரெயில்வே ஊழியர் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருப்பதையும் வீடியோ எடுத்தனர்.

    பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். வீடியோவில் ஒரு பயணி 15 நிமிடமாக காத்திருக்கிறோம். டிக்கெட் கொடுக்காமல் ஊழியர் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறார். நேரமாகிறது டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டால் அமைதியாக காத்திருங்கள் என்று கூறுகிறார். நாங்கள் பொறுமையை இழந்த பிறகு தான் இந்த வீடியோவை வெளியிடுகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

    இதுபற்றி குண்டக்கல் ரெயில்வே பிரிவு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பணியின் போது செல்போனில் அரட்டை அடித்த ஊழியர் மகேசை நிலைய மேலாளர் பகீரத் மீனா சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். 

    • ஆசிரியர் ஷம்புலால் தகாத், மாணவர்களின் தனிப்பட்ட வீடியோக்களை பதிவு செய்தது தெரியவந்தது.
    • புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ஷம்புலால் தகாத்தை கைது செய்தனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஷம்புலால் தகாத். இவர் அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்களின் செல்போன்களில் இருந்த அந்தரங்க வீடியோக்களை, தனது செல்போனில் பதிவேற்றம் செய்துள்ளார். பின்னர் அதை வைத்து மாணவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். இந்த விகாரம் பற்றி அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் ஷம்புலால் தகாத், மாணவர்களின் தனிப்பட்ட வீடியோக்களை பதிவு செய்தது தெரியவந்தது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ஷம்புலால் தகாத்தை கைது செய்தனர்.

    தவறு செய்யும் மாணவர்களை திருத்த வேண்டிய ஆசிரியரே இப்படி நடந்தால் எப்படி? என்று சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    • மன அழுத்தத்தை உணரும்போது அதற்கான காரணங்களை அடையாளம் காண வேண்டும்.
    • எந்தெந்த காரணிகள் நமக்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

    இளைஞர்களில் பலர் எல்லாவற்றிலிருந்தும் அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். கல்வி, வேலை, நிதி சிக்கல்கள், அதிகரித்த செல்போன் பயன்பாடு, போட்டித்தன்மை போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

    கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர்களிடையே பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவதாக அமெரிக்க நரம்பியல் அகாடமி எச்சரித்துள்ளது.

    வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக அதிகரித்து வரும் மன அழுத்தம் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அது விளக்கம் அளித்துள்ளது.

    இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூளையின் ஒரு பகுதிக்கு ரத்த விநியோகம் துண்டிக்கப்படுகிறது. அவர்கள் சோம்பேறியாக மாறுகிறார்கள், பேச முடியாத நிலை ஏற்படும். அவர்கள் பார்வையை இழக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்படுகிறது.



    பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு கடுமையான மன அழுத்தத்தை அனுபவித்ததாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

    பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி பல்கலைக்கழக மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் இந்த ஆய்வில் பங்கேற்றன. மன அழுத்தத்தில் இருக்கும்போது. கார்டிசோல் அட்ரினலின் மற்றும் நோராட்ரெனலின் போன்ற ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன.

    சிறிது மன அழுத்தத்துடன் இந்த ஹார்மோன்கள் உடலுக்கு அவசியமானவை. ஆனால் அவை அதிகமாக வெளியிடப்பட்டால் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

    இது உறுப்புகளை சேதப்படுத்தும் மன அழுத்தம் மூளை மற்றும் இதயம் உட்பட அனைத்து உறுப்புகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    தொடர்ச்சியான மன அழுத்தம் நினைவாற்றலைக் குறைக்கிறது. படிக்கும் திறன் குறைகிறது. முடிவுகளை சரியாக எடுக்க முடியாது. கவனம் குறைகிறது. உணர்ச்சிகளில் அதன் தாக்கத்தால் பயம் மற்றும் பதட்டம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் ஆபத்தானது. சிலர் எடை கூடுகிறார்கள். சிலர் எடை குறைகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பாலியல் திறன் குறைகிறது. மனச்சோர்வு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    மன அழுத்தத்தை உணரும்போது அதற்கான காரணங்களை அடையாளம் காண வேண்டும். எந்தெந்த காரணிகள் நமக்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

    நீங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்வது உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். இயற்கையில் நடப்பது. தியானம் செய்வது, இசை கேட்பது. புத்தகங்கள் படிப்பது மற்றும் நடனம் ஆடுவது ஆகியவை உதவும்.

    நீண்ட நேர செல்போன் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை விட்டுவிட்டு நேர்மறை சிந்தனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தைக் குறைப்பது நம் கையில்தான் உள்ளது. நமது வாழ்க்கை முறையிலும் உணவு முறையிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

    சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து புரதம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள். தேவைப்பட்டால் ஒரு உணவியல் நிபுணரின் ஆலோசனையுடன் சீரான உணவை உண்ணுங்கள். தினமும் அரை மணி நேரம் வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

    எல்லாவற்றிலும் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அறிவாற்றல் நடத்தை சிகிச்சையைப் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • பாதிக்கப்பட்டபெண் திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினத்திடம் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கடநகரை சேர்ந்த தனக்கொடி மகன் முத்துக்குமார்(வயது38). பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இதே நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வரும் ஒருவரும், முத்துக்குமாரும் நண்பர்கள். இதனால் இரு குடும்பத்தினரும் நெருக்கமாக பழகி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முத்துக்குமார் வீட்டுக்கு, நண்பரின் மனைவி சென்றுள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து முத்துக்குமார் கொடுத்தார். சிறிது நேரத்தில் நண்பரின் மனைவி மயங்கியதும் தனது செல்போனில் அவரை ஆபாசமாக படங்கள் மற்றும் வீடியோவும் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து தனது செல்போனில் ஆபாசமாக எடுத்திருந்த போட்டோ மற்றும் வீடியோவை காட்டி அடிக்கடி பணம் கேட்டு நண்பரின் மனைவியை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்டபெண் திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினத்திடம் புகார் செய்தார். எஸ்.பி உத்தரவின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் இதே போல் ஏற்கனவே ஒருபெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டு முத்துக்குமார் மிரட்டி வந்ததும், அவரது செல்போனில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருந்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • 50MP பிரதான OIS கேமரா, அதனுடன், 8MP அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது.
    • 90W வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது.

    சியோமி ரெட்மி நிறுவனம், சக்திவாய்ந்த பேட்டரியுடன் கூடிய  ரெட்மி டர்போ 4 ப்ரோ  என்ற புதிய மாடலை வெளியிட்டுள்ளது .

    இது 16 ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 4 செயலி போன்ற சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ரெட்மி போனின் பின்புறத்தில் ஐபோன் 16 போன்ற கேமரா வடிவமைப்பு உள்ளது.

    இந்த ரெட்மி போன் 6.83-இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த போன் Qualcomm Snapdragon 8s Gen 4-இல் இயங்குகிறது. 16GB LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை சேமிப்பு உள்ளது. 50MP பிரதான OIS கேமரா, அதனுடன், 8MP அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது.

    இந்த ரெட்மி போனில் 7,550mAh பெரிய பேட்டரி உள்ளது. இது 90W வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் உடன் வருகிறது.

    ரெட்மி டர்போ 4 ப்ரோ நான்கு சேமிப்பு வகைகளில் கிடைக்கிறது. – 12 ஜிபி ரேம் + 256 ஜிபி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி, 16 ஜிபி ரேம் + 1 டிபி.

    இதன் தொடக்க விலை 2199 சீன யுவான் (தோராயமாக ரூ. 25,700). அதே நேரத்தில், அதன் உயர் வகையின் விலை 2,999 யுவான் (ரூ. 35,100).

    இந்த ஸ்மார்ட்போனை கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் வாங்கலாம். தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் விரைவில் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
    • கோட்டார் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்தனர்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்து செல்லும் நபர்களிடம் செல்போன் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட னர். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோட்டார் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசா ரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சையத் அலி (வயது 23) என்பது தெரியவந்தது. இவர் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன் திருடியதை ஒப்பு கொண்டார். போலீசார் அவரிடம் இருந்து 10 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர் கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • தற்போது சுமார் ரூ. 42 லட்சம் மதிப்புள்ள 300 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டது.
    • 3 பேர் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 17 செல்போன்கள் கைப் பற்றப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்க ளிலும் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    அதன்படி சைபர் கிரைம் போலீசார், காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர். அந்த வகையில் தற்போது சுமார் ரூ. 42 லட்சம் மதிப்புள்ள 300 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டது.

    அவ்வாறு கண்டு பிடிக்க ப்பட்ட செல்போன்களை போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உரிய நபர்களிடம் இன்று ஒப்ப டைத்தார். செல்போன்களை கண்டுபிடிக்க காரணமான சைபர் கிரைம் பிரிவு போலீ சாரையும் அவர் வெகுவாக பாராட்டினார்.

    மேலும் செல்போன் காணாமல் போன தாக பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது துரித நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த வருடத்தில் மட்டும் சுமார் ரூ.87 லட்சம் மதிப்புள்ள 622 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டு உரியவர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தார்.

    மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டு வந்த 3 பேர் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 17 செல்போன்கள் கைப் பற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரியாத நபரிடமிருந்து செல்போன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அது குற்ற சம்ப வத்தில் சம்மந்தப்பட்ட செல்போனாக இருக்கலாம்.

    மேலும் பொதுமக்கள் செல்போன்களை தவற விட்டாலோ, அல்லது திருட்டு போனாலோ அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கவேண்டும். இல்லையெனில் ( https://eservices.tnpolice.gov.in ) என்ற காவல் துறை இணைய தளத்திலும் தங்க ளது புகாரை பதிவு செய்ய லாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×