என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fraud"

    • Spritual healers என அழைத்துக்கொள்ளும் அந்த ஆன்மீக மோசடி கும்பலிடம் தம்பதியினரை அறிமுகப்படுத்தி உள்ளார்.
    • சித்தரின் ஆவி உடலில் நுழைவதாகவும், அது அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்

    மகாராஷ்டிராவில் புனே நகரில் பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபர் மூடநம்பிக்கையால் போலி ஆன்மீக கும்பலிடம் சிக்கி ஏமாந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    அந்த ஐடி ஊழியருக்கு ஆட்டோ இம்யூன் நோய் மற்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது இரண்டு மகள்கள் உள்ளனர்.

    2018 ஆம் ஆண்டு, ஒரு பக்தி பஜனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலந்து கொண்ட ஐடி ஊழியரின் மனைவிக்கு ஒருவரும் அறிமுகம் ஏற்பட்டது. அந்த நபர் 3 பேர் அடங்கிய Spritual healers என அழைத்துக்கொள்ளும் அந்த ஆன்மீக மோசடி கும்பலிடம் தம்பதியினரை அறிமுகப்படுத்தி உள்ளார்.

    சித்தரின் ஆவி உடலில் நுழைவதாகவும், அது அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் என்றும் அந்த கும்பல் தம்பதியினரை நம்பவைத்துள்ளது.

    நோய்களைக் குணப்படுத்த சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறி அவர்கள் தொடர்ந்து தம்பதியிடம் பணம் பெற்று வந்துளளனர்.

    பின்னர், பிரிட்டனில் உள்ள தம்பதியின் வீடு மற்றும் புனே அருகே சொந்தமாக உள்ள விவசாய நிலங்கள் உட்பட குடும்பத்தின் சொத்துக்கள் துரதிர்ஷ்டத்தைத் தருவதாக அவர்களை நம்ப வைத்தனர்.

    இந்தக் கும்பல் குடும்பத்தினரை இவற்றை விற்க வற்புறுத்தியது. விற்பனையிலிருந்து கிடைத்த பணத்தை, அது துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறி, புத்திசாலித்தனமாக கும்பல் வசப்படுத்தியுள்ளது.

    இதன் பின்னரும் பூஜைகளுக்காகக் கேட்ட பெரும் தொகையைச் செலுத்த உறவினர்களிடமிருந்து ஐடி ஊழியர் கடன் வாங்கியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.14கோடியை அந்த கும்பல் தம்பதியிடமிருந்து ஏமாற்றி பறித்துள்ளது.

    பல வருடங்கள் கடந்தும் குழந்தைகளின் உடல்நிலை மாறாமல் இருந்ததால், தம்பதியினருக்கு சந்தேகம் வந்த நிலையில் தற்போது அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் ஒரு சாமியார் உட்பட அந்த கும்பலை சேர்ந்தவர்களை தேடி வருகின்றனர்.    

    • செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்தது ஆன்லைன் விற்பனை நிறுவனமா? அல்லது கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களா? என்பது தெரியவில்லை.
    • மோசடி குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசில் பிரேம் ஆனந்த் புகார் அளித்தார்.

    பெங்களூரு குமாரசாமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பிரேம் ஆனந்த். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், ஒரு ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ரூ.1.85 லட்சத்திற்கு ஒரு செல்போனை ஆர்டர் செய்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் அவர் ஆர்டர் செய்த செல்போன் கூரியர் மூலமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், கூரியர் நிறுவன ஊழியரும், நேற்று முன்தினம் பிரேம் ஆனந்த் வீட்டுக்கு வந்து ஒரு பார்சலை கொடுத்துவிட்டு சென்றார். உடனே அவரும், தான் ஆசையாக ஆர்டர் செய்த செல்போன் வந்ததாக நினைத்து பார்சலை பிரித்து பார்த்தார்.

    அப்போது அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த பார்சலில் செல்போன் பாக்சுக்குள் செல்போனுக்கு பதில் ஒரு பளிங்கு கல் இருந்தது. ரூ.1.85 லட்சம் மதிப்பிலான செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்ததால் கோபம் அடைந்த பிரேம் ஆனந்த் உடனடியாக கூரியர் ஊழியரின் செல்போனுக்கு அழைத்தார். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை.

    செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்தது ஆன்லைன் விற்பனை நிறுவனமா? அல்லது கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களா? என்பது தெரியவில்லை.

    இந்த மோசடி குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசில் பிரேம் ஆனந்த் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த வசதி '4ஜி' அலைக்கற்றை சேவையில் இருந்து படிப்படியாக பிற அலைக்கற்றைகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளது.
    • அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளியிட்ட 6 மாதங்களுக்குள் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கவேண்டும்.

    இந்தியாவில் தகவல் பரிமாற்றத்துக்காக 120 கோடிக்கும் அதிகமானோர் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் சுமார் 95 கோடி பேர் தங்களது ஸ்மார்ட்போன்களில் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். செல்போன் பயன்படுத்துபவர்களை குறிவைத்து மோசடி கும்பல் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

    மோசடி வலையில் சிக்கி நிதி இழப்பு ஏற்பட்டதாக அன்றாடம் பதிவாகி வரும் சம்பவங்களே இதற்கு சாட்சி. இது ஒருபுறம் இருக்க செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு, தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்தும், தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருந்தும் அவ்வப்போது அழைப்புகள் வந்து வீண் தொல்லை கொடுக்கின்றன.

    இந்த சூழலில் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் காண புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளன. அதன்படி, செல்போனில் சேமித்து வைக்காத எண்களில் இருந்து அழைப்பு வரும்போது, அழைப்பு வரும் எண்களுடன் சேர்த்து அந்த சிம் கார்டை பயன்படுத்துபவரின் பெயர் விவரமும் பதிவாகும்.

    இந்த வசதி '4ஜி' அலைக்கற்றை சேவையில் இருந்து படிப்படியாக பிற அலைக்கற்றைகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளது. மோசடி மற்றும் சிரமத்தை கொடுக்கும் விரும்பாத அழைப்புகளுக்கு செல்போன் எண்ணோடு பெயரும் வரும் வகையிலான இந்த சேவை கடிவாளம் போடும் வகையில் இருக்கும். இதனால் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை இனி அடையாளம் கண்டு பயமின்றி எடுக்கலாம்.

    தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த வசதியை அறிமுகப்படுத்த ஒருமித்த கருத்தை எட்டும் முயற்சியில் இறங்கியுள்ளன.

    விரைவில் 2 அமைப்புகளும் இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து, அமலுக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளியிட்ட 6 மாதங்களுக்குள் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.
    • அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பெரும் தொகையை அந்த கும்பல்கள் கேட்டு மிரட்டுகிறது.

    ஈரானில் வேலைவாய்ப்பு தருவதாக நடக்கும் மோசடிகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

     வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சில ஏஜென்ட்கள் இந்தியர்களுக்கு ஈரானில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வழங்குவதாக அல்லது அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.

    இவர்களின் பேச்சுகளை நம்பி ஈரானுக்குச் செல்லும் இந்தியர்கள், அங்குள்ள குற்றக் கும்பல்களால் கடத்தப்பட்டு, பணயக்கைதிகளாக வைக்கப்படுகின்றனர்.

    பின்னர், அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பெரும் தொகையை அந்த கும்பல்கள் கேட்டு மிரட்டுவதாக அரசுக்குத் தெரியவந்துள்ளது.

    சமீபகாலமாக இத்தகைய வழக்குகள் அதிகரித்துள்ளதால், இதுபோன்ற போலியான உறுதிமொழிகளை நம்பி ஏமாறாமல் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.  

    • தனது வீட்டில் ஒரு சிறிய மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
    • வரி நோட்டீஸ் அல்லது கடன் வசூல் அழைப்புகளை எதிர்கொள்ளும்போதுதான் இந்த மோசடிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.

    உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நயாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சுதிர் என்ற நபர் தனது வீட்டில் ஒரு சிறிய மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் அவருக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது கடையில் ரூ.141 கோடிக்கு விற்பனை செய்ததாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் இதுற்குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். 

    இதுகுறித்து சுதிர் கூறும்போது, "டெல்லியில் 6 நிறுவனங்களை நிறுவ எனது பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    2022ஆம் ஆண்டும் எனக்கு இது போல் ஒரு நோட்டீஸ் வந்தது. அப்போது அந்த நிறுவனங்களுக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வருமானவரி அதிகாரிகளிடம் விளக்கினேன். தற்போது மீண்டும் நோட்டீஸ் வந்துள்ளது" என்றார்.

    மற்றவர்களின் பான் கார்டு விவரங்களை சட்டவிரோதமாகப் பெற்று வங்கிக் கணக்குகளைத் திறக்க, போலி நிறுவனங்களை உருவாக்க, கடன்களைப் பெற அல்லது வரிகளைத் தவிர்க்க அவற்றைப் பயன்படுத்துவது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

    இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் வருமான வரி நோட்டீஸ் அல்லது கடன் வசூல் அழைப்புகளை எதிர்கொள்ளும்போதுதான் இந்த மோசடிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.

    • 21 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்குகிறது.
    • நான்கு சக்கர வாகனம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 1.62 லட்சம் பெண்களும் பலன் பெற்றுள்ளனர்.

    மகாராஷ்டிராவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்காக தொடங்கப்பட்ட "லட்கி பஹின் யோஜனா" திட்டத்தில் பெரும் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைநடத்திய தணிக்கையில், 14,298 ஆண்கள் போலியாகப் பதிவு செய்து, 21.44 கோடி ரூபாய் நிதி பலன்களைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த 21 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்குகிறது.

    இந்நிலையில் 14,298 ஆண்கள் போலியாகப் பதிவு செய்து, ரூ.21.44 கோடி பெற்றுள்ளனர். இந்தத் தொகை அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில், தகுதியற்றவர்கள் அதிகம் சேர்ந்ததால், ரூ.1,640 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஒரே குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண்களுக்கு மட்டுமே பலன் என்ற விதி இருந்தும், 7.97 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மூன்றாவது உறுப்பினர்களாகப் பதிவு செய்து, ரூ.1,196 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

    65 வயதுக்கு மேற்பட்ட 2.87 லட்சம் பெண்கள் பலன் பெற்றுள்ளனர். இதனால் ரூ.431.7 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    நான்கு சக்கர வாகனம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 1.62 லட்சம் பெண்களும் பலன் பெற்றுள்ளனர்.

    இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூன் 2025 முதல், சுமார் 26.34 லட்சம் தகுதியற்ற பயனாளிகளுக்கு திட்டப் பலன்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 2.25 கோடி தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஜூன் மாதத்திற்கான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அதிதி தட்கரே தெரிவித்துள்ளார்.

    • இவருக்கு சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசுவாமி மற்றும் சவுதி ஆயுத வியாபாரி அட்னான் காஷோகி ஆகியோருடன் தொடர்பு இருந்துள்ளது.
    • இராஜதந்திர அடையாளங்களைப் பயன்படுத்தியது தங்கள் நெறிமுறைகளை மீறிய செயல் என்றும் வெஸ்டார்டிகா அறிவித்துள்ளது.

    கடந்த 8 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி, சுமார் 300 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹர்ஷ்வர்தன் ஜெயின் கைது செய்யப்பட்டார்.

    இவரிடமிருந்து போலி தூதரக நம்பர் பிளேட் கொண்ட கார்கள், போலி ஆவணங்கள், ஆடம்பர கடிகாரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    ஜெயின், காசியாபாத்தில் வாடகை வீட்டில் 'வெஸ்ட் ஆர்டிகா' என்ற அங்கீகரிக்கப்படாத நாட்டின் போலி தூதரகத்தை நடத்தி வந்துள்ளார். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றியுள்ளார்.

    ஜெயின் வேலை மோசடிகளிலும், ஹவாலா மூலம் பணமோசடியிலும் ஈடுபட்டுள்ளது உ.பி. சிறப்பு அதிரடிப் படை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இவருக்கு சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசுவாமி மற்றும் சவுதி ஆயுத வியாபாரி அட்னான் காஷோகி ஆகியோருடன் தொடர்பு இருந்துள்ளது.

    சந்திராசுவாமிதான் ஜெயினை மோசடிக்காரர் அஹ்சன் அலி சையதுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். சையது, ஜெயினுடன் இணைந்து 25 போலி நிறுவனங்களைதொடங்கி சுமார் 300 கோடி ரூபாய் பணமோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சையது ஏற்கனவே லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஜெயின் ஒரு கெளரவ தூதர் மட்டுமே என்றும், அவர் போலி இராஜதந்திர அடையாளங்களைப் பயன்படுத்தியது தங்கள் நெறிமுறைகளை மீறிய செயல் என்றும் வெஸ்டார்டிகா அறிவித்துள்ளது. மேலும், ஜெயினை தனது அமைப்பின் பிரதிநிதி பதவியிலிருந்து காலவரையின்றி இடைநீக்கம் செய்துள்ளது.

    ஜெயின் 10 ஆண்டுகளில் 162 வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார் மற்றும் வெளிநாடுகளில் பல வங்கிக் கணக்குகளை வைத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல்துறை நாளை நீதிமன்றத்தில் ஜெயினை காவலில் எடுத்து மேலும் விசாரிக்க உள்ளது. 

    • இளம்பெண்களின் கைகளில் முத்திரை எண்கள் இருந்துள்ளது.
    • பெங்களூருவில் உள்ள நிறுவனத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாக அந்த இருவரும் நம்ப வைத்து, பீகார் செல்லும் ரெயிலில் ஏற்றியுள்ளனர்.

    திங்கள்கிழமை இரவு மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (ஆர்பிஎப்) சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு பெட்டியில் இளம் பெண்கள் அதிக அளவில் இருந்தனர். அவர்கள் யாரிடமும் டிக்கெட்கள் இல்லை. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டுமே டிக்கெட் இருந்துள்ளது. மேலும் இளம்பெண்களின் கைகளில் முத்திரை எண்கள் இருந்துள்ளது.

    சந்தேகமடைந்த ஆர்பிஎப் அதிகாரிகள், அந்த ஆண் மற்றும் பெண்ணிடம் விசாரித்துள்ளனர். கேள்விகளுக்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

    இதன்பின் நடந்த விரிவான விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரெயிலில் இருந்த அப்பெண்களை, பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக அந்த இருவரும் நம்ப வைத்து, பீகார் செல்லும் ரெயிலில் ஏற்றியுள்ளனர். வேலையில் அமர்த்துவதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை.

    அப்பெண்கள் அனைவரும் மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி, கூச் பெஹர் மற்றும் அலிபுர்துவார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அனைத்து பெண்களும் 18 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். ஏமாற்றி அழைத்துவரப்பட்ட மொத்தம் 56 பெண்களை போலீசார் மீட்டு அவர்களின் குடும்பங்களிடம் சேர்க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஏமாற்றி அழைத்து வந்த அந்த ஆணும் , பெண்ணும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

    • ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ.1,192 கோடியை இந்தியர்களிடம் மோசடி செய்து பறித்துள்ளனர்.
    • பிப்ரவரியில் ரூ.951 கோடி, மார்ச்சில் ரூ.1,000 கோடி மற்றும் ஏப்ரல் மாதத்தில் ரூ.999 கோடி மோசடி நடந்துள்ளது.

    2025 இன் முதல் ஐந்து மாதங்களில், இந்தியர்கள் ஆன்லைன் மோசடியால் ரூ.7,000 கோடியை இழந்துள்ளனர்.

    அதாவது, ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நிகழ்ந்துள்ளது. சிட்டிசன் ஃபைனான்சியல் சைபர் மோசடி மற்றும் மேலாண்மை அமைப்பின் ஆய்வில் இது கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கை நாட்டில் பதிவு செய்யப்பட்ட சைபர் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டது. புகார் அளிக்கப்படாத வழக்குகளையும் சேர்த்தால், தொகை இன்னும் அதிகமாக இருக்கும்.

    இந்தப் பணத்தில் பாதிக்கும் மேற்பட்டவை கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட மோசடி மூலம் பறிக்கப்பட்டுள்ளது.

    சீன ஆபரேட்டர்களால் கட்டுப்படுத்தப்படும் மிகவும் பாதுகாப்பான மையங்களில் மோசடிக்காரர்களின் நடவடிக்கைகள் மேற்கொள்படுகின்றன.

    தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த மோசடி செய்பவர்கள் ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ.1,192 கோடியை இந்தியர்களிடம் மோசடி செய்து பறித்துள்ளனர். பிப்ரவரியில் ரூ.951 கோடி, மார்ச்சில் ரூ.1,000 கோடி மற்றும் ஏப்ரல் மாதத்தில் ரூ.999 கோடி மோசடி நடந்துள்ளது.

    இது தொடர்பாக கம்போடியாவைச் சேர்ந்த அதிகாரிகள் சமீபத்தில் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். கம்போடியாவில் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் 45 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. லாவோஸில் 5, மியான்மரில் 1 மையம் கண்டறியப்பட்டது . இந்த மோசடிகாரர்கள் முக்கியமாக பங்கு வர்த்தகம், முதலீட்டு மோசடி, டிஜிட்டல் கைதுகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியர்களை வைக்காதே இந்த மோசடிகளை அரங்கேற்றும் கும்பல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. முன்னதாக, கம்போடியாவில் சுமார் 5,000 இந்தியர்கள் சைபர் குற்றங்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • ஜேன் ஸ்ட்ரீட் இந்திய சந்தையில் வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டு, ரூ.4,843 கோடி லாபம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • மோடி அரசு யாருடைய விருப்பத்தின் பேரில் கண்களை மூடிக்கொண்டு இருந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.

    அமெரிக்க வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் இந்திய பங்குச்சந்தையில் , ஜனவரி 2023 முதல் மே 2025 வரையிலான காலகட்டத்தில், பங்குகள், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) சந்தைகளில் ஒரே நேரத்தில் பந்தயம் கட்டி, குறியீடுகளை கையாண்டு லாபம் ஈட்டியதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி கண்டறிந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து, ஜேன் ஸ்ட்ரீட் இந்திய சந்தையில் வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டு, ரூ.4,843 கோடி லாபம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "செபி இவ்வளவு காலம் ஏன் அமைதியாக இருந்தது? மோடி அரசு யாருடைய விருப்பத்தின் பேரில் கண்களை மூடிக்கொண்டு இருந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.

    ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) சந்தை பெரிய முதலீட்டாளர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானமாக மாறிவிட்டதாகவும், சிறிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணத்தை இழந்து வருவதாகவும் 2024-ஆம் ஆண்டிலேயே தான் குறிப்பிட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

    • இந்த மோசடியின் மையம் மத்திய சுகாதார அமைச்சகத்திலேயே இருந்திருக்கிறது
    • லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி ராஜஸ்தானில் ரூ.75 லட்சம் மதிப்பில் அனுமான் கோயில் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது .

    இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவக் கல்வி ஊழல் ஒன்றை சிபிஐ வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

    இந்த மோசடியில், புகழ்பெற்ற சாமியார் ரவி சங்கர் மகராஜ், முன்னாள் கல்வித் தலைவர் டி.பி. சிங் மற்றும் அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட 34 சக்திவாய்ந்த நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

    தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்க இவர்கள் பெரும் தொகை லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

    சாமியார் ரவி சங்கர் அறக்கட்டளையால் நடத்தப்படும் ஒரு கல்லூரிக்கு சாதகமான ஆய்வு அறிக்கையை வழங்குவதற்காக ரூ.55 லட்சம் வாங்கிய மூன்று மருத்துவர்களை சிபிஐ கைது செய்ததில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

    தகவல்களின்படி, இந்த மோசடியின் மையம் மத்திய சுகாதார அமைச்சகத்திலேயே இருந்திருக்கிறது. அங்கிருந்த எட்டு அதிகாரிகள் ரகசிய கோப்புகளைப் புகைப்படம் எடுத்து, ஆய்வு தேதிகள் மற்றும் அதிகாரிகள் பெயர்களை கல்லூரி நிர்வாகங்களுக்கு பெரும் லஞ்சம் பெற்று கசியவிட்டுள்ளனர்.

    உதாரணத்திற்கு, ஒரு பல்கலைக்கழக பதிவாளர் மயூரி ராவல், ரகசிய ஆய்வு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள ரூ.25-30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

    இதேபோன்று இந்த மோசடி சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் நடந்துள்ளது.

    கல்லூரிகள், ஆய்வாளர்களை ஏமாற்ற போலி ஆசிரியர்களை நியமித்தல், போலி பயோமெட்ரிக் வருகைப் பதிவேடுகளை உருவாக்குதல், போலி நோயாளிகளைக் காட்டுதல் போன்ற தந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளன.

    இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியில் போலி கைரேகை வருகைக்கு ரப்பர் விரல்கள் பயன்படுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.

    லஞ்சப் பணம் ஹவாலா நெட்வொர்க்குகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு அதிகாரி பெற்ற லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி ராஜஸ்தானில் ரூ.75 லட்சம் மதிப்பில் அனுமான் கோயில் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது .

    இது இந்தியாவின் மிக மோசமான மருத்துவக் கல்வி ஊழல்களில் ஒன்று என்று சிபிஐ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.

    இதுவரை 3 மருத்துவர்கள் மற்றும் ஒரு கல்லூரி இயக்குனர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

    • மூத்த அதிகாரிகளுடன் அடிக்கடி புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து பகிர்ந்து கொண்டார்.
    • சமூக ஊடகங்களில் ஊக்கமளிக்கும் ரீல்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

    ராஜஸ்தான் போலீஸ் அகாடமியில் போலி ஆவணங்களுடன் ஒரு பெண் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் நாக்வார் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகள் மோனா பாக்லியா. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தோல்வியடைந்த பிறகு, மூலி தேவி என்ற பெயரில் போலி ஆவணங்களை உருவாக்கி, தான் தேர்ச்சி பெற்றதாக சமூக ஊடகங்களில் கூறிக்கொண்டார்.

    இதற்கிடையில், சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சியாளர்களுக்கான வாட்ஸ்அப் குழுவிலும் மூலி தேவி என்ற அடையாளத்துடன் இணைந்துள்ளார். விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் சேர்க்கை பெற்றதாகக் கூறி அதிகாரிகளை ஏமாற்றியுள்ளார்.

    இரண்டு வருடங்களாக ராஜஸ்தான் போலீஸ் அகாடமி மைதானத்தில் பயிற்சியில் தவறாமல் கலந்து கொண்ட தேவி, மூத்த அதிகாரிகளுடன் அடிக்கடி புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து பகிர்ந்து கொண்டார். காவல்துறை அதிகாரிகளாக, அவர்கள் சமூக ஊடகங்களில் ஊக்கமளிக்கும் ரீல்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

    தொழில் விழிப்புணர்வு கருத்தரங்குகளில் பங்கேற்று, மோட்டிவேஷன் உரை நிகழ்த்தும் படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட சக பயிற்சி அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

    விசாரணையின் போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட மோனா, தனது குடும்பதினரை திருப்திப்படுத்தவும், போலீஸ் வேலையில் கிடைக்கும் மரியாதைக்காகவும் இந்த மோசடியைச் செய்ததாக தெரிவித்தார்.

    அவரது வீட்டில் இருந்து போலி ஆவணங்கள், ரூ.7 லட்சம் ரொக்கம், போலீஸ் அகாடமி வினாத்தாள்கள் மற்றும் மூன்று போலி சீருடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    ×