search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "preacher"

    • விபத்து நடந்த சில நிம்டங்களிலேயே போலே பாபா அங்கிருந்து நழுவிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.
    • போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி சிங் கூட்டநெரிசல் குறித்து கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதில் அதிகம் பேர் பெண்கள் ஆவர். 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 2.5 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடியதாலும், போலே பாபாவின் காலடி மண்ணை எடுக்க நெறுக்கியடித்ததாலும் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலே பாபா அங்கிருந்து நழுவிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தேவப் பிரகாஷ் மதுக்கருக்கு அரசியல் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சியின் பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த வழக்கில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாததையும் கவனிக்க வேண்டி உள்ளது. வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க போலே பாபாவின் சொத்துமதிப்பு 100 கோடியாக உள்ளது என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி சிங் கூட்டநெரிசல் குறித்து கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், போலே பாபாவின் அன்றைய கூட்டத்தில் சுமார் 15 முதல் 16 பேரின் கையில் விஷத் தன்மையுள்ள பொருள் அடைத்த பாட்டில்கள் இருந்துள்ளது என்றும், அதை அவர்கள் திறந்துவிட்டதாலேயே இந்த கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் கூட்டத்தில் பங்கேற்ற சிலர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக பேட்டியளித்துள்ளார். மேலும், விஷ பாட்டில்களை வைத்திருந்த நபர்கள் தப்பிச் செல்ல கார்களும் அங்கு தயாராக இருந்துள்ளதாக குறிப்பிடடுள்ளார்.

    இதற்கான தகுந்த ஆதாரத்தை வெளியிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதற்கு புறம்பாக போலே பாபாவின் வக்கீல் சொல்லும் புதிய குற்றச்சாட்டுகள் வழக்கை திசை திருப்பும் முயற்சியா என்ற கேள்வியும் பலர் மத்தியில் எழுந்துள்ளது.  

    • நீண்ட நாட்களாகியும் அர்ஜூன் கிருஷ்ணன் பரிகார பூஜைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
    • சாமியார் அர்ஜூன் கிருஷ்ணன் நடத்தி வந்த கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், சாமியார் தலைமறைவாகிவிட்டார்.

    திருப்பூர்:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 39 வயது பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தங்கி அங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது கணவன் மற்றும் மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தனது கணவன்-மகனுடன் சேர்ந்து வாழ விரும்பினார். இதற்காக அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

    அப்போது யூ டியூப்பில் பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் உள்ள அர்ஜூன் கிருஷ்ணன் என்ற சாமியார் மாந்திரீகம் மூலம் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வீடியோ க்களை பார்த்துள்ளார். இதையடுத்து கணவரை தன்னுடன் சேர்த்து வைப்பதற்காக சாமியார் அர்ஜூன் கிருஷ்ணனின் வராகி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமியாரிடம் நடந்த விவரத்தை கூறியதுடன் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

    அப்போது கணவன் மற்றும் மகனை சேர்த்து வைப்பதற்கான பரிகாரங்கள் செய்ய முன்பணமாக ரூ.10 ஆயிரம் கட்டுமாறு அர்ஜூன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண் ரூ.10ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார். கட்டிய சிறிது நாட்களுக்கு பின் பரிகாரம் செய்ய அதிக செலவாகும். ரூ.1.50 லட்சம் கொடுத்தால்தான் பரிகார பூஜைகளை ஆரம்பிக்க முடியும் என சாமியார் தெரிவித்துள்ளார்.

    கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் அந்த பெண் தனது சக ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி பணத்தை சாமியாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அர்ஜூன் கிருஷ்ணன் பரிகார பூஜைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு தனது வீட்டிற்கு வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு சாமியார் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து அர்ஜூன் கிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற நிலையில் அந்த பெண்ணை , சாமியார் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் மேற்கண்ட விவரங்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், சாமியார் அர்ஜூன் கிருஷ்ணன் நடத்தி வந்த கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், சாமியார் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் பரிகார பூஜைகள் செய்வதாக கூறி 50 பெண்களிடம் பணம் பெற்று சாமியார் ஏமாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாமியாரை கைது செய்து விசாரித்தால் இந்த சம்பவத்தில் மேலும் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    • ரியல் எஸ்டேட் அதிபர் சாமியார் சத்தியத்துடன் தொடர்பிலிருந்தது தெரியவந்தது சாமியாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • கொலை செய்தவர்களை சாமியார் சத்தியம் புதைத்தாரா? அல்லது உடல்களை எரித்து விட்டாரா? என்பது தெரியவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் சத்யம் (வயது 42). மந்திரவாதியான இவர் பில்லி சூனியம் நீக்குவதாக கூறி வந்தார்.

    மேலும் திடீர் அதிர்ஷ்டம் வேலை வாய்ப்பு திருமணத்தடை சொத்து கைவசப்படுத்துவது, வசியம் செய்வது, மந்திர பூஜையால் எந்த விஷயத்தையும் நடத்தி காட்டுவதாகவும் கூறி பொதுமக்களை நம்ப வைத்துள்ளார்.

    இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் திடீரென மாயமானார். இது குறித்து அவருடைய மனைவி போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரியல் எஸ்டேட் அதிபர் கடைசியாக சந்தித்த நபர்கள் குறித்து விசாரணையில் இறங்கினர்.

    அப்போது ரியல் எஸ்டேட் அதிபர் சாமியார் சத்தியத்துடன் தொடர்பிலிருந்தது தெரியவந்தது சாமியாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சாமியார் ரியல் எஸ்டேட் அதிபரை தலை துண்டித்து கொலை செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் சொத்து அபகரித்தது தெரியவந்தது. தொடர்ந்து சாமியாரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சாமியார் சத்தியம் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. சாமியார் சத்தியம் தன்னிடம் பில்லி, சூனியம் நீக்குவதற்காக பூஜை செய்ய வருபவர்கள் குறித்த பின்னணியை அறிந்து கொண்டுள்ளார்.

    அவர்களை தனியாக வரவழைத்து அதிக பணம் நகை வாங்கியுள்ளார். பின்னர் அவர்களை தலை துண்டித்து கொலை செய்துள்ளார்.

    ஐதராபாத்தில் வாலிபர் ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கியுள்ளார். வாலிபர் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை என சாமியாரை தட்டி கேட்டார். அப்போது வாலிபரை சாமியார் கொலை செய்துள்ளார்.

    சாமியார் இதுவரை 21 பேரை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.கொலை செய்யப்பட்டவர்களிடமிருந்து பணம் சொத்து உள்ளிட்டவற்றை சாமியார் அபகரித்துள்ளார்.

    கொலை செய்தவர்களை சாமியார் சத்தியம் புதைத்தாரா அல்லது உடல்களை எரித்து விட்டாரா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    21 பேர் தவிர மேலும் யாரையாவது சாமியார் கொலை செய்தாரா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திரா, தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதே போல ஆந்திர மாநிலம் வனபர்த்தி மாவட்டம் நாகப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சாமியாரிடம் தங்கள் குடும்ப பிரச்சினை தீர்க்க வேண்டும் எனக் கூறி வந்தனர். அவர் குடும்பத்தினர் 4 பேரையும் வரவழைத்து பில்லி சூனிய பூஜை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.அவர்களை தலை துண்டித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். அவர்கள் உடல்களை என்ன செய்தார் என்பது தெரியவில்லை. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • பெண்னை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
    • தனது பணத்தை மீட்டு தரக்கோரியும் தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் அலுவலகத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.

    தூத்துக்குடி:

    சென்னை வேளச்சேரி கன்னிகாபுரத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் சென்னையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2013-ம்ஆண்டு திருமணமாகி ஒரு பெண்குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஆசிரியை தூத்துக்குடி புதுக்கோட்டை மங்களகிரி விலக்கில் உள்ள ஒரு தியான இல்லத்திற்கு சென்று போதகர் மைக் மகிலன் என்பவரிடம் முறையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் மற்றொரு போதகரை இளம்பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    இந்நிலையில் அந்த போதகர் இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தான் தொழில் செய்ய வேண்டும் என்றும் அப்பெண்ணிடம் இருந்து தனது சகோதரர் மூலமாக ரூ 5 லட்சம் வரை பெற்றுள்ளார். இதற்கிடையே அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டதற்கு அந்த போதகர் மறுத்துள்ளார். இதனால் அந்தபெண் இதுகுறித்து போதகர் மகிலனிடம் முறையிட்டபோது அவரும், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

    இந்நிலையில் இது தொடர்பாக கடந்த 11-ந் தேதி நேரடியாக ஆலயத்திற்கு சென்று இருவரிடம் கேட்டபோது வெளியே அந்த பெண்னை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து மதபோதகர் மைக் மகிலன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனது பணத்தை மீட்டு தரக்கோரியும் தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் அலுவலகத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.

    அதன்பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, போதகர் மைக் மகிலன் மீது இந்திய தண்டனை சட்டம் 294 பி, 417, 420, 506 (1) மற்றும் பெண்களை கொடுமைப்படுத்துதல் தடைச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
    • இந்து மத சாமியார்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் 1500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா ஆகியவற்றுடன் சனாதன தர்மத்தை ஒப்பிட்டு அவர் பேசிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக பாரதிய ஜனதா. இந்து முன்னணியினர் போராட்டமும் நடத்தினார்கள். உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு மாநில போலீஸ் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல்லியில் இன்று இந்து அமைப்பினர் சார்பில் போராட்டம் நடந்தது.

    அவர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் டெல்லி மட்டுமல்லாது பக்கத்து மாநிலமான அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இந்து மத சாமியார்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் 1500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    தமிழ்நாடு இல்லத்தை அடைந்ததும் அவர்கள் அதன் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உதயநிதியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத் தின் போது அவர்கள் உருவ பொம்மைகளையும் தீ வைத்து எரித்ததால் அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் தமிழ்நாடு இல்லம் முன்பு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

    இந்து அமைப்பினரின் இந்த பேரணி-ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பேரணி சென்ற சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியார் அறிவிப்பு வெளியிட்டார்.
    • மாநகர பகுதியில் சர்ச்சைக்குரிய வாசகத்துடன் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோவை:

    சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவரது தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியார் அறிவிப்பு வெளியிட்டார்.

    சாமியாரின் இந்த மிரட்டலுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சாமியாரின் உருவப்படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாமியார் மீது போலீஸ்நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் பொள்ளாச்சியில் சாமியாரின் உருவப்பொம்மையை நள்ளிரவில் யாரோ தூக்கில் தொங்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் ரோட்டில் மேம்பாலம் உள்ளது.

    இந்த மேம்பாலத்தில் இரவு 9.30 மணி அளவில் சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவ பொம்மையை சிலர் தூக்கில் தொங்க விட்டு சென்றனர். இரவு நேரம் என்பதால் யாரோ ஒருவர் தூக்கில் தொங்குவது போல அந்த பொம்மை காணப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு சாமியாரின் படம் ஒட்டப்பட்டு உருவப்பொம்மை தொங்கவிடப்பட்டு இருந்தது. உடனடியாக அந்த உருவப்பொம்மையை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    சனாதனம் பிரச்சினை தொடர்பாக கோவையில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க .வினர் மாறி, மாறி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இதற்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில் மாநகர பகுதியில் சர்ச்சைக்குரிய வாசகத்துடன் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுவரொட்டிகளில் அச்சகத்தின் பெயர், உரிமம் எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். அப்படி குறிப்பிடவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கோஷம் எழுப்பி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
    • உமாபதி,குப்புராஜ் தகவல் தொழில்நுட்ப அணி பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    தமிழக விளையாட்டுதுறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்த பரம ஹம்ச ஆச்சார்யா சாமியாரை கண்டித்து கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமையில் கடலூரில் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . பின்னர் கோஷம் எழுப்பி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ இள. புகழேந்தி முன்னிலை வகித்தார். இதில் மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் , பகுதி செயலாளர் சலீம், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகரத் துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி செந்தில் முருகன், கவுன்சிலர்கள்ஆராமுது, சுபாஷிணி ராஜா, கவிதா ரகுராமன், பகுதி துணை செயலாளர்கள் லெனின், கார் வெங்கடேசன், ஜெயசீலன்,இளைஞரணி ஜெயச்சந்திரன்,கோபி, உமாபதி,குப்புராஜ் தகவல் தொழில்நுட்ப அணி பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரமேசின் மகன்களான கவுதம், ஹரிஸ் இருவரும் தவித்து வந்த நிலையில் தலைமறைவான ரமேஷை போலீசார் தேடி வந்தனர்.
    • காவி உடை அணிந்து சாமியாராக மாறியது ஓட்டேரி போலீசுக்கு தற்போது தெரியவந்தது.

    சென்னை:

    சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது மனைவி வாணியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்தார். இது தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    காதல் திருமணம் செய்து கொண்டு 16 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்த ரமேஷ் மனைவியுடன் ஏற்பட்ட மோதலால் தலையில் கல்லை தூக்கி போட்டு அவரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். இதனால் ரமேசின் மகன்களான கவுதம், ஹரிஸ் இருவரும் தவித்து வந்த நிலையில் தலைமறைவான ரமேஷை போலீசார் தேடி வந்தனர்.

    போலீசார் தீவிரமாக தேடியும் ரமேஷ் சிக்காமல் ஊர் ஊராக சென்று பதுங்கினார். இதன் பின்னர் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு தாடி வளர்க்க தொடங்கினார். பின்னர் காவி உடை அணிந்து சாமியாராக மாறியது ஓட்டேரி போலீசுக்கு தற்போது தெரியவந்தது.

    இதையடுத்து கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ரமேஷை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இணை கமிஷனர் ரம்யா பாரதி, துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன் ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சாமியாராக மாறிய ரமேஷை பிடிக்க களத்தில் இறங்கினர்.

    திருவண்ணாமலை, வடலூர், சதுரகிரி உள்பட சாமியார்கள் அதிகமாக தங்கி இருக்கும் இடங்களுக்கு சென்று ரமேஷ் காவி உடையில் அடையாளம் மாறிப்போய் யாசகம் கேட்டு அந்த பணத்தை வைத்து சாப்பிட்டு வந்தது தெரிய வந்தது.

    இந்நிலையில் ரமேஷ், தனது நண்பரான இன்னொரு சாமியாரின் செல்போன் எண்ணில் இருந்து நண்பரின் செல்போனுக்கு 'கூகுள் பே' மூலமாக பணம் அனுப்பியது தெரிய வந்தது. இந்த பணத்தை தனது மகன்களிடம் கொடுத்து விடுமாறு நண்பரிடம் போன் செய்து ரமேஷ் கூறியதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சாமியாரின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர்.

    இந்நிலையில் ரமேஷ் சாமியார் வேடத்தில் சென்னைக்கு வந்திருப்பதும், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஆசிரமத்துக்கு செல்ல இருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே போலீசார் கண்காணித்தனர். அப்போது இன்று அதி காலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய பகுதிக்கு வந்த ரமேஷை இன்ஸ்பெக் டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் சேவியர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தேவஆசீர்வாதம் (62).
    • பணப்பிரச்சினை தொடர்பாக பாண்டியராஜ், தேவஆசீர்வாதம் மீது களக்காடு போலீசில் புகார் செய்துள்ளார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் சேவியர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தேவஆசீர்வாதம் (62). கிறிஸ்தவ போதகர்.இவருக்கு சொந்தமான வயலில் களக்காடு பஸ் ஸ்டாண்ட் கீழத்தெருவை சேர்ந்த பாண்டியராஜ் (49) விவசாய வேலைகள் செய்தார்.

    இதற்கு தேவஆசீர்வாதம் தனது மகன் மூலம் போன் பேயில் ரூ.7 ஆயிரம் அனுப்பினார். ஆனால் அந்த பணம் போதாது என்று பாண்டியராஜ் கூறி வந்தார். இதுதொடர்பாக பாண்டியராஜ், தேவஆசீர்வாதம் மீது களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று தேவ ஆசீர்வாதம் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அங்கு 2 பேருடன் வந்த பாண்டியராஜ், தேவஆசீர்வாதத்தை அவதூறாக பேசி, தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்கு பதிவு செய்து பாண்டியராஜை தேடி வருகிறார்.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. #CuddaloreStudents #CuddaloreCourt
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மேல் நிலைப்பள்ளி அருகே இட்லி கடை நடத்தி வந்தவர் தனலட்சுமி (வயது 40).

    கடந்த 2014-ம் ஆண்டு அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி தனலட்சுமியின் இட்லி கடைக்கு அடிக்கடி சென்று இட்லி வாங்கி சென்றார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து தனலட்சுமி அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார். இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் பள்ளியிலும், உறவினர்களிடம் தெரிவித்து விடுவதாக கூறி மிரட்டினார்.

    மேலும் நெல்லிக்குப்பம் திருகண்டேஸ்வரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருடன் பல்வேறு பகுதிகளுக்கு மாணவியை அனுப்பி வைத்தார். தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதால் அந்த மாணவி கதறி அழுதார். அப்போது வேறு ஒரு மாணவியை என்னிடம் அழைத்து வந்தால் உன்னை விட்டு விடுகிறேன் என்று தனலட்சுமி கூறினார்.

    அதை நம்பி அந்த மாணவி தன் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மற்றொரு மாணவியை தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த மாணவியை அறையில் அடைத்து வைத்து 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    மேலும் 2 மாணவிகளையும் திட்டக்குடியை சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவரது வீட்டுக்கு தனலட்சுமி அனுப்பி வைத்தார். அவர் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் தனலட்சுமி 2 மாணவிகளையும் விருத்தாசலம், வடலூர், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த விபசார கும்பலிடம் விற்றார்.

    அந்த கும்பலிடம் சிக்கிய 2 மாணவிகளும் தப்பி திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் 5.8.2014 அன்று தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கண்ணீர் விட்டு கதறி அழுதபடி கூறினர்.

    இதையொட்டி மதபோதகர் அருள்தாஸ் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் 17 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதி உள்ள சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

    அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று 14 வயது மாணவியின் உறவினர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    அதனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு 4.7.2016 அன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதன்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தீபா துரித விசாரணை நடத்தி கடலூர் மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணை நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் கடந்த 4-ந் தேதி நடந்தது. மாணவிகளை பாலியலில் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் அருள்தாஸ் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

    1) கலா (48), விருத்தாசலம்.

    2) தனலட்சுமி, திட்டக்குடி.

    3) ஸ்ரீதர் (23), ஊ.மங்கலம், காட்டுக்கூனங்குறிச்சி.

    4) பாத்திமா (35), வளவனூர்.

    5) ராதா (35), நெல்லிக்குப்பம், சுல்தான்பேட்டை.

    6) ‌ஷர்மிளாபேகம் (34), விருத்தாசலம்.

    7) கவிதா (34), வடலூர்.

    8) அன்பழகன் (28), சேலம், அயோத்தியாபட்டினம்.

    9) அமுதா (28), சேலம்.

    10) மோகன் (28), திட்டக்குடி.

    11) மதிவாணன் (23), திட்டக்குடி.

    12) அன்பு, விருத்தாசலம்.

    13) ஆனந்தராஜ், நெல்லிக்குப்பம் அருகே உள்ள திருக்கண்டேஸ்வரம்.

    14) பாலசுப்பிரமணியன் (42), புதுப்பேட்டை, விருத்தாசலம்.

    15) ராதிகா (30), பண்ருட்டி.

    16) மதபோதகர் அருள்தாஸ், திட்டக்குடி.

    பண்ருட்டியை சேர்ந்த மகாலட்சுமி மீது போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். குற்றவாளிகள் அனைவருக்கும் இன்று (திங்கட்கிழமை) தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வ பிரியா ஆஜராகி வாதாடினார்.

    அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு குற்றவாளிகள் அனைவரும் கடலூர் சிறையில் இருந்து மகளிர் நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.



    பின்னர் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நீதிபதி லிங்கேஸ்வரன் விசாரணை நடத்தினார். அதன் பின்னர் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரத்தை நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார்.

    மதபோதகர் அருள்தாசுக்கு 30 ஆண்டு ஜெயில் தண்டனையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஆனந்தராஜ், பாலசுப்பிரமணியனுக்கு 4 ஆயுள் தண்டனையும், கலா, தனலட்சுமி, ஸ்ரீதர், பாத்திமா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும் விதித்த நீதிபதி லிங்கேஸ்வரன் மேலும் தண்டனை விபரங்களை தொடர்ந்து வாசித்து வருகிறார். #CuddaloreStudents #CuddaloreCourt

    ×