என் மலர்

    நீங்கள் தேடியது "struggle"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுதரக்கோரி போராட்டம் நடந்தது.
    • அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் கருகும் பயிரை காப்பாற்ற தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்று தரக் கோரி தொடர் முழக்கப் போராட்டம் நடை பெறுகிறது.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சிம்சன், வீரராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மதியழகன் முன்னிலை வகித்தாார்.

    போராட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளான காவிரியில் கர்நாடக வழங்க வேண்டிய சட்டரீ தியான தண்ணீரைஉடனடி யாக திறந்துவிட உச்ச நீதி மன்றம் அவசர வழக்காக எடுத்து உடனே உத்தரவிட வேண்டும், குருவைசாகுபடி யில் பாதிக்க ப்பட்டஅனை த்து விவசாயி களுக்கும் ஏக்கருக்கு 35 ஆயிரம் வழங்க வேண்டும், காவிரியில் தமிழகத்துக்கு மாத வாரிய தண்ணீர் வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கர்நாடக அரசு தர மறுத்தால் அம்மாநிலத்தில் உள்ள அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து தண்ணீர் வழங்கிட வேண்டும்.

    உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    போராட்டத்தை தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொருளாளர் பெருமாள் தொடங்கி வைத்தார்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், பொதுச் செயலாளர் மாசிலா மணி, டெல்டா பாசன விவசாய சங்க தலைவர் அன்பழகன், காவிரி டெல்டா பாசனக்காரர்கள் முன்னேற்ற சங்கம் தலைவர் குரு கோபி கணேசன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், உள்ளிட்ட ஏராளமான அனைத்து கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்
    • கூடுதல் பணியிடங்களை வழங்கக்கோரி அடையாள போராட்டம்

    பெரம்பலூர்,

    ஊழியர் விரோத நடவடிக்கைகளை... பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுாிந்தனர். அந்த கோரிக்கை அட்டையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக கூடுதல் பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். அரசுடனான பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் மீது உடன் அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், என்று இடம் பெற்றிருந்தது.

    இன்றும் கோரிக்கை அட்டை அணியவுள்ளனர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் பணிபுரியும் 60 பெண் அலுவலா்கள் உள்பட 140 வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். அவர்கள் 2-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியவுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூடாரம் அமைத்து கவுன்சிலர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • இந்த நூதன போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 4-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் இளங்கோவன். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆர்.வி. நகரில் கழிவுநீர் வடிகால் கட்டி தரக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

    ஆனால் அதற்கான நடவ டிக்கைகள் எதுவும் தொடங் காததால் போராட்டம் நடத்த முடிவு செய்தார். மேலும் பேரூராட்சி நிர்வா கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் நூதன முறையில் தனி ஒருவராக திடீரென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

    பேரூராட்சி அலுவலகத் தின் நுழைவு வாயில் முன் பாக வாடிப்பட்டி பேரூ ராட்சி நிர்வாகமே, ஆர்.வி.நகர் சாக்கடை நீரை வெளியேற்ற 20 அடி நீள வாய்க்கால் கட்ட ஆறு மாதங்களா, ஏற்கனவே டெங்கு மரணம் உறுத்த வில்லையா, திறமையற்ற நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் சாக்கடை கட்டு என கோஷங்கள் எழுப்பினார்.

    மேலும் கோரிக்கை வாச கம் எழுதப்பட்ட பதாதை வைக்கப்பட்டு அதன் அருகில் துணியால் கூடாரம் அமைத்து தனது போராட் டத்தை தொடங்கினார். தகவலறிந்த செயல் அலுவ லர் ஜெயலட்சுமி, கவுன்சிலர் இளங்கோவனுடன் பேச்சு வார்த்தை நடத்தி விரை வில் காலக்கெடுப்படி வடி கால் அமைப்பதாக உறுதிய ளித்ததன் பேரில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட் டது.

    இந்த நூதன போராட் டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரியலூர் பேருந்து நிலையம் முன்பு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியகத்தினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • குறுவையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்

    அரியலூர், 

    டெல்டாவில் கருகும் நெற்பயிரை காப்பாற்ற தமிழத்துக்கான காவிரி நீரை பெற்றுத் தரக் கோரி, அரியலூர் பேருந்து நிலையம் முன்பு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியகத்தினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும், அரியலூர் மாவட்டம் தூத்தூர்தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் இர.மணிவேல், விவசாய பாதுகாப்புச் சங்க மாவட்ட அமைப்பாளர் க.பாலசிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் ஏ.பழனிச்சாமி போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஆர்.செந்தில்வேல்,மாவட்டக் குழு உறுப்பினர் டி.தியாகராஜன், விவசாய சங்க பிரதிநிதி த.ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் திருச்சி கணேசன் போராட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினார். போராட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் தங்க.தர்மராஜன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஏ.கந்தசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அ.விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.
    • இலவச வீட்டு மனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாபநாசம்:

    பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் சரகம் அன்னப்பன்பேட்டை கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் சிறு விவசாயிகள் அனுபவித்து வரும் நத்தம் இடத்தை வேறொருவர் நபர்களுக்கு சிட்டா அடங்கல் வழங்கி நில அபகரிப்பு செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அம்மாபேட்டை விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய குழுவின் சார்பில் உண்ணாவிரதபோராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

    இதுகுறித்து பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டாட்சியர் பூங்கொடி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மெலட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் மகாபிரபு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், விவசாய சங்க மாவட்ட செயலாளர் தர்மராஜன், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய தலைவர் சின்னராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கொத்தங்குடி கிராமத்தில் முறைகேடாக வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்ததை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது என விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 24 மணி நேரம் அவசர சிகிச்சை பிரிவு கோரி கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
    • 3-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு பின்னர் 2014-ம் ஆண்டு மீண்டும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

    இந்த மருத்துவமனையில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லையில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மருத்துவ வசதி பெற்ற ஒரு நிலையில் இங்கு போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததாலும், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளதாலும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்ப டுவதி ல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.மேலும் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் அவசர சிகிச்சை பெற முடியாமல் அப்பகுதி மக்கள் பாதிப்பு க்கு உள்ளாகி வரும் சூழல் உருவாகியுள்ளதால் இந்த மருத்துவமனையில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதோடு 24 மணி நேரம் செயல்படக்கூடிய அவசர சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டுமானால் அந்தப் பகுதியை சேர்ந்த பொது மக்களும் வர்த்தகங்களும் பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

    ஆனால் சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறையினரும் மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கறம்பக்குடி வள்ளுவர் திடலில் இன்று பொதுமக்கள், வர்த்தகர்கள், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட கறம்பக்குடி அரசு மருத்துவமனை மீட்புக் குழுவினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் காலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கூறுகையில்:புதுக்கோட்டை தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நாள் ஒன்றுக்கு 500 பேர் வரை இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூடிய நிலையில், 24 மணி நேரம் செயல்படக்கூடிய அவசர சிகிச்சை பிரிவை உடனடியாக தொடங்க வேண்டுமென்றும், அதேபோல் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் இந்த பகுதி மக்கள் பலகட்ட போராட்டத்தை நடத்தியும் அதிகாரிகளும் அரசும் அலட்சியமாக இருப்பதாகவும் இனியும் அதிகாரிகள் மெத்தனம் காட்டினால் அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பா.ம.க. மாநில அமைப்பாளர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்.

    புதுச்சேரி:

    கடந்த 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சமூதாய மக்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு தொடர் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    இப்போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் பலியானர்கள்.இந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில் புதுவை பா.ம.க. சார்பில் துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுவை முழுவதும் நடந்தது.

    நெட்டப்பாக்கம் தொகுதி எம்.ஆர்.எப். பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் எம்.ஆர்.எப். தொழிற்சாலை நுழைவாயில் முன்பு இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    பா.ம.க. மாநில அமைப்பாளர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் புருஷோத்தமன் தொகுதி தலைவர் குரு, தொகுதி செயலாளர் சிவா, எம்.ஆர்.எப். தொழிற்சங்க தலைவர் விஜயன், பண்டரிநாதன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி), தமிழ்நாடு மதமில்லா உலகம், தமிழ்நாடு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
    • தொடர் முழக்க போராட்டத்தில், சேலம் மாவட்டம் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் சரபங்கா நீர்பாசன ஓடை நிலத்தை போலி பத்திரம் தயாரித்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி), தமிழ்நாடு மதமில்லா உலகம், தமிழ்நாடு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி) தமிழ்நாடு பிரிவின் தமிழ்மாநில அவைத் தலைவரும், தமிழ்நாடு மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனருமான டாக்டர்.கே.நடராஜ் தலைமை வகித்தார். இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி) மாநிலத் தலைவர் டாக்டர்.ஆர்.வெங்கடேசன், இந்திய குடியரசு கட்சி (எம்.சி.ஆர்) மாநிலத் தலைவர் எம்.சி.ராஜேந்திரன், இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தேசியத் துணைத் தலைவர் வழக்கறிஞர் அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார்கள்.

    இந்த தொடர் முழக்க போராட்டத்தில், சேலம் மாவட்டம் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் சரபங்கா நீர்பாசன ஓடை நிலத்தை போலி பத்திரம் தயாரித்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனை ரத்து செய்து மீதமுள்ள காலி நிலத்தில் அனைத்து சமூக பயனாளிகளுக்கும் அரசு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி முழக்கமிட்டனர்.

    இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி) சேலம் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், சேலம் மாநகரத் தலைவர் ராஜபிரசாத், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கே.ரங்கசாமி, இந்திய குடியரசு கட்சி (எம்சிஆர்) சேலம் மாவட்ட தலைவர் பாலசுப்ர மணியன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

    கடலூர்:

    வடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. பண்ருட்டி சாலை ெரயில்வே கேட் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் குறிஞ்சிப்பாடி வட்டச் செயலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

    இந்த போராட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்தி திணிப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பியும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் மறியல் செய்தனர். இதில் ராஜேந்திரன், சுப்பிரமணி, பன்னீர்செல்வம், ராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர். நெய்வேலி டி.எஸ்.பி.ராஜ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 68 பெண்கள் உள்பட 165 பேரை கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு இன்மை போன்றவற்றுக்கு காரண மான மத்திய அரசை கண்டித்து கும்பகோணம் தலைமை தபால் நிலை யத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார்.

    தேசியக்குழு உறுப்பினர் சிவபுண்ணியம் முன்னிலை வகித்தார்.

    இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராதாகி ருஷ்ணன், குமரப்பா, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாலன், ராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், தண்டபாணி, கண்ணகி, நாராயணன், ராஜலட்சுமி, ஏ.ஐ.டி.யூ.சி. கைத்தறி மாநிலத்தலைவர் மணிமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அழகேசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 68 பெண்கள் உள்பட 165 பேரை கைது செய்தனர்.

    முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட அலுவலகத்தில் இருந்து காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு தலைமை தபால் நிலையம் பகுதிக்கு ஊர்வ லமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print