search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போராட்டம்"

    • 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ரூ.600 ஆக வழங்க வேண்டும்.
    • ஒரத்தநாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    திருவோணம்:

    100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய விவசாய தொழிலாளர்களுக்கு 3 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்ற கூடிய விவசாய தொழிலாளர்கள் ஜாப்காடு வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும், ஊதியத்தை ரூ.600 ஆக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஒரத்தநாடு பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர்.

    பின்னர், ஒரத்தநாடு கடைத்தெரு வழியாக ஊர்வலமாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு உறுப்பினர் வாசுகி உள்பட சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    அதனைத் தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் அளித்தனர்.

    இதனை யொட்டி ஒரத்தநாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக தகர கொட்டகை அமைக்கப்பட்டது.
    • போராட்டத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கடந்த 1959-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

    இந்த பள்ளி 2 கட்டிடங்கள் மூலம் மாணவ மாணவிகள் கல்வி பயின்று வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பழுது காரணமாக இடிக்கப்பட்டது.

    மீதம் இருந்த ஒரு கட்டிடம் கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை தினத்தின் போது மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.மாணவர்களுக்கு விடுமுறை என்பதால் அசம்பாவிதம் இல்லை.

    இரண்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தகர கொட்டகையில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் 63 பேரும் நெருக்கடியில் இருந்து வருகின்றனர்.

    தற்போது மழை காலத்தில் சாரல் விழுவதால் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் செய்து வந்தனர்.

    தகவறிந்து நேரில் வந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, செல்வேந்திரன், காவல் ஆய்வாளர் காவேரி சங்கர் விரைவில் பள்ளி கட்டிடம் கட்டி தரப்படும் என உறுதி கூறினர்.

    இருப்பினும் பெற்றோர்கள், மாணவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.
    • கிராமமக்கள் சிலர் பணி நடைபெறும் பம்ப்செட் நோக்கி திரண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றும் முடியவில்லை.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ளது பெரம்பூர் கிராமம். இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு இலவச வீட்டு நிலப்பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு பெரம்பூர் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் லட்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்த 46 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

    இதற்கு பெரம்பூர் கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த இடத்தை தங்களது கிராமத்திற்கு வேறு திட்டத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டு இருந்ததாக கூறி அவர்களும் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே நேற்று இரவு 7 மணியளவில் பெரம்பூர் கிராமத்தில் பட்டா வழங்கப்பட்ட இடத்திற்கு குடிநீர் வழங்க அங்குள்ள பம்ப் செட் பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கு பெரம்பூர் கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கிருந்த ஊழியர்களிடமும் கடும் வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெரம்பூர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ஆனால் அவர்கள் லட்சிவாக்கம் கிராமத்தினருக்கு பட்டா வழங்கப்பட்டதற்கும், குடிநீர் இணைப்பு வழங்க பள்ளம் தோண்டப்படுவதற்கும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கலைந்து செல்ல மறுத்தனர். மேலும் அவர்கள் பெரம்பூர்-பாட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் கிராமமக்கள் சிலர் பணி நடைபெறும் பம்ப்செட் நோக்கி திரண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றும் முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கிராமமக்களை கலைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா உட்பட 3 போலீசார் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கிராமமக்களின் போராட்டம் நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்கா கூடுதல் போலீசார் அங்கு வரவைழக்கப்பட்டனர். பின்னர் கிராமமக்களை அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர்.

    பெரம்பூர் கிராம பகுதியில் இன்று காலையும் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    பட்டா வழங்கப்பட்ட இடம் தொடர்பாக பெரம்பூர் கிராமமக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்து உள்ளனர்.

    • கூட்டுறவு துறையில் காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.
    • வேளாண் உபகரணங்களை வாடகைக்கு விடும் திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும்.

    மெலட்டூர்:

    சாலியமங்களத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது .

    மாவட்ட துணை செயலாளர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாய கடன் வழங்குதல், உரம் வழங்குதல், குறுவை தொகுப்பு திட்டம், பொங்கல் தொகுப்பு உள்பட அவ்வப்போது அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    கூட்டுறவு துறையில் காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படா மல் உள்ளது.

    இதனால் ஆட்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது .

    இந்நிலையில் வேளாண் உபகரணங்களை விலைக்கு வாங்கி கூட்டுறவு சங்கம் மூலம் வாடகைக்கு விடும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

    இத்திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு வங்களில் போதுமான ஊழியர்கள் இல்லை.

    அதனால் இத்திட்டத்தை கைவிட கோரி தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கி ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரசு உடனடியாக இத்திட்ட த்தை கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதில் ஒன்றிய நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
    • மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் தென்பகுதி நுழைவாயிலாக திருமங்க லம் உள்ளது. குறிப்பாக எடப்பாடியார் திருமங்கலம் தொகுதிக்கு, பல்வேறு நலத்திட்டங்களை செய்தார். கள்ளிக்குடியில் புதிய வட்டம், திருமங்க லத்தில் புதிய கோட்டம், அதனைத் தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில் உள்ள 324 கிராமங்கள், 116 ஊராட்சிகள், திருமங்கலம் நகரில் உள்ள 27 வார்டுகள், இரண்டு பேரூராட்சியில் உள்ள 30 வார்டுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சாலைகள், புதிய கிராம இணைப்பு சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை எடப்பாடியார் செய்து கொடுத்தார்.

    மேலும் எடப்பாடியார் ஆட்சியில் தான் திருமங்கலம் யூனியன் சிறப்பாக செயல்பட்டு மத்திய அரசு விருது பெற்று இதற்காக 25 லட்சம் ரூபாயை பரிசாக பெற்றது. அதேபோல் கல்லுப்பட்டி பேரூராட்சியும் சிறப்பு விருதினை பெற்றது. திருமங்கலம் நகராட்சிக்கு புதிய கட்டிடங்கள், கல்லூரி களுக்கு புதிய கட்டிடங்கள் உருவாக்கி தரப்பட்டது.

    அதேபோல் திருமங்க லத்தில் ரெயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டது. அது கிடப்பில் போடப் பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை சட்டமன்றத்தில் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    மேலும் மக்களின் பிரதானமாக கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது. மத்திய அமைச்சர் நிதி கட்காரி 6 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுங்க சாவடி அகற்றப்படும் எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கப்பலூர் சுங்க சாவடியை அகற்றுவோம் என்று முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தி ருந்தார்.

    எடப்பாடியார் ஆட்சி காலத்தில் உள்ளூர் வானங்களை முறையாக கையாளும் வகையில் பல்வேறு சலுகைகள் பெற்று தரப்பட்டது. ஏற்கனவே உங்கள் தொகுதி முதல்-அமைச்சர் என்ற திட்டத்தில் 10 கோரிக்கையில் இதுவும் பிரதான கோரிக்கையாக நான் கொடுத்துள்ளேன்.

    கப்பலூர் டோல்கேட் குறித்து நான் மக்களிடம் மனுககளை வாங்கும் பொழுது ஒரு நாள் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்து என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கும் நிலுவையில் தான் உள்ளது. தொடர்ந்து எதிர்கட்சி தொகுதிகளை பாராபட்சம் காட்டி வஞ்சிக்க கூடாது இது ஜனநாயகத்திற்கு அழகல்ல

    கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற நடவடிக்கை எடுக்க விட்டால் எடப்பாடியார் அனுமதியை பெற்று தமிழக அரசுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திண்டுக்கல்லில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் 10 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பொதுத்தேர்வுகள் முடிந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு இன்று காலை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற்கூட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மேலும் காலம் கடத்தாமல் விரைந்து அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி உயர்வை நிலுவைத்தொகையுடன் உடனே வழங்கவேண்டும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பிரான்சிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார்.

    துணைத்தலைவர் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சுவக்கின்அமல்ராஜ் கோரிக்கை விளக்கஉரையாற்றினார். செய்தி தொடர்பு செயலாளர் முருகேசன், பொருளாளர் செந்தில்குமார் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.
    தேவகோட்டையில் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தி.மு.க. அரசை கண்டித்தும், மாநில தலைவர் அண்ணாமலை பேரணியை தடுத்ததை கண்டித்தும் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். நகரத்தலைவர் ரிஷிபாலகிருஷ்ணன், தேவகோட்டை ஒன்றிய தலைவர் ஏலப்பன், கண்ணங்குடி ஒன்றிய தலைவர் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். 

    மாவட்ட செயலாளர் லட்சுமி, மாவட்ட மகளிர் அணி தலைவி கோமதி நாச்சியார் முன்னிலை வகித்தனர். தேவகோட்டை பஸ் நிலையத்தில் மறியல் செய்யப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    முன்னதாக தியாகிகள் பூங்காவில் இருந்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு பஸ் நிலையம் வாசலில் அமர்ந்து பஸ் மறியல் செய்தனர். 

    இதில் இறகுசேரி காசிராஜா, புதுகுறிச்சி ராமலிங்கம், இருமதி முத்துராமலிங்கம், ஆசைத்தம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    மறியலில் ஈடுபட்டவர்களை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

    முதன்மை கல்வி அதிகாரியை கண்டித்து தஞ்சையில் பிளஸ்-2 வினாத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, பட்டுக்கோட்டை ,கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன.

    தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்து வினாத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் அந்தந்த கல்வி மாவட்டங்களில்நடந்து வருகிறது. 

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில்  தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் வினாத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் மட்டும் வினாத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த கல்வி மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் எங்களுக்கும் வினாத்தாள் திருத்தும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

     இதையடுத்து நீங்கள் மற்ற 3 கல்வி மாவட்டங்களில் வினாத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டனர்.

    அதன்படி இன்று காலை ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரிய- ஆசிரியைகள் தஞ்சை மாரியம்மன் கோவில் புறவழி சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வினாத்தாள் திருத்தும் பணிக்காக வந்தனர். அப்போது அங்கு வந்த முதன்மைக் கல்வி அதிகாரி சிவகுமார் நீங்கள் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்துக்கும் சென்றும் வினாத்தாள் திருத்த வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

    அப்போது ஆசிரியர்களுக்கும், முதன்மைக் கல்வி அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து முதன்மை கல்வி அதிகாரி அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். தொடர்ந்து ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் வினாத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து பள்ளி முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் ‌‌ அப்போது முதன்மைக்கல்வி அதிகாரி எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரச முடிவு எடுத்தால் தான் கலைந்து செல்வோம் என கூறினர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.‌ இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சேலத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
    சேலம்:

    தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. 

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி அதன்படி சேலம் மாவட்டத்தில் 4 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில் சேலம் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் விடைத்தாள் திருத்துவதற்காக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது பணிக்கு வந்த ஆசிரியர்கள் திடீரென விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வழக்கமாக பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் விருப்பத்தின் பேரில் தன் மையங்கள் நியமனம் செய்யப்பட்டு வந்தது. 

    தற்போது வழக்கமான நடைமுறை மாற்றப்பட்டு மையங்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான ஆசிரியர்கள் தொலைவிலுள்ள மையங்களுக்கு செல்ல வெகுதூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

    தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அதிகாரிகளுடன் சமரசம் பேசியதில் உடன்பாடு ஏற்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் வெங்கடேசன், மலர்க்கொடி, மாலா, மாவட்ட இணை செயலாளர்கள் கருணாகரன், தேன்மொழி வனிதா, மாநில செயற்குழு உறுப்பினர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சந்திரசேகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    இதில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கொளுத்தும் வெயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடை முறைப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு 58 வயதில் இருந்து 60 வயதாக உயர்த்தியதைப்போல் சத்துணவு ஊழியர்களின் பணி காலத்தை 60 வயதில் இருந்து 62 வயதாக உயர்த்த வேண்டும்.

    வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் ஆயிரக்கணக்கான அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூபாய் 6750 குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.முடிவில் மாவட்ட பொருளாளர் குணசுந்தரி நன்றி கூறினார்.
    16 மீனவ கிராம மக்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் இன்று காலை குடும்பத்துடன் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுக வாசல் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளியில் தனியார் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் இயங்கிவருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு இந்த பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக இங்கு இருந்த மீனவ கிராம மக்கள் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

    இதனால் வாழ்வாதாரம் பாதித்த கடலோரகிராம மீனவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 1,750 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக தனியார் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் நிர்வாகத்தினர் அறிவித்தனர்.

    இதில் முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

    மீதமுள்ள 1500 பேருக்கு வேலை வாய்ப்பு, நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிலம் வழங்கிய மீனவ கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பழவேற்காடு, தாங்கள் பெரும்புலம் அரங்ககுப்பம் கூணங்குப்பம் திருமலை நகர்,சாட்டங்குப்பம், செம்பாசி பள்ளி,கலங்கரை விளக்கம், நடுக்குப்பம், நக்கத்துரவூ, பேட்டை, பள்ளிகுப்பம், கோரைக் குப்பம், பசியா வரம், உள்ளிட்ட 16 மீனவ கிராம மக்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் இன்று காலை குடும்பத்துடன் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுக வாசல் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை வாய்ப்பு மற்றும் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

    பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல்அறிந்ததும் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்படடனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப் படுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே குவிந்து உள்ளனர். தொடர்ந்து மீனவ கிராமமக்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ கிராமமக்கள் கூறும்போது, கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் முன்னிலையில் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்குவதாக கம்பெனி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இது வரை கம்பெனியில் வேலை வாய்ப்பு வழங்க வில்லை. எனவே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.

    நகைகளை திருப்பி எடுத்து சென்ற 84 பேருக்கும் சேர்த்தே இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

    திருப்பூர்:

    பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் சேகர் என்பவர் வாடிக்கையாளரின் நகைகளில் சில வளையங்களை துண்டித்து மோசடியில் ஈடுபட்டார்.

    புகார் அடிப்படையில் சேகர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இழந்த நகைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்தனர். தாசில்தார் நந்தகோபால் மற்றும் வங்கி உயர் அதிகாரிகள் போலீசார் முன்னிலையில் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்தது.

    வங்கி அதிகாரிகள் கூறுகையில், தினசரி 30 - 40 வாடிக்கையாளருடன் பேச்சு நடத்தி இழப்பீடு குறித்து தீர்மானிக்கப்பட்டு உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற 25 நாட்கள் ஆகும். அதன்பின் இழப்பீடு அறிவிக்கப்படும் என்றனர்.

    பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:-

    நகை மோசடியில் நகைகளை அடமானம் வைத்துள்ள சிலரும் உடந்தை என குற்றம்சாட்டி உள்ளீர்கள். வாடிக்கையாளரை ஏமாற்றியே இந்த மோசடி நடந்துள்ளது. எனவே மோசடியில் வாடிக்கையாளர் உடந்தையாக உள்ளார்கள் என்பதை ஏற்க இயலாது. நகைகளை இழந்துள்ள 557 பேர் உட்படஏற்கனவே நகைகளை திருப்பி எடுத்து சென்ற 84 பேருக்கும் சேர்த்தே இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

    பாதிக்கப்பட்டவர்களின் நகைகள் வங்கி கஸ்டடியில் உள்ளதால் அவற்றுக்கு வட்டி செலுத்த மாட்டோம்.ஜூன் 20-ந்தேதி கட்டாயம் இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் அன்று காலை அனைவரும் வங்கி முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×