என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய அரசு"
- 72 மணிநேரத்திற்குள் அனைத்து ஆபாசப் படங்களையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்தது.
- எக்ஸ் தளத்தில் இருந்து 600 கணக்குகளும், சுமார் 3,500 சட்டவிரோத உள்ளடக்கங்களும் நீக்கப்பட்டுள்ளன.
எலான் மஸ்க்குக்கு சொந்தமான சமூக ஊடகமாக எக்ஸ் தளத்தின் ஏஐ சாட்போட் ஆன Grok மூலம் சமூக விரோதிகளால் பெண்களின் ஆபாசப் படங்கள் உருவாக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, ஜனவரி 2-ம் தேதி மத்திய அமைச்சகம் எக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
72 மணிநேரத்திற்குள் அனைத்து ஆபாசப் படங்களையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்தது. சரியான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் எக்ஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டதோடு, இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதி அளித்துள்ளது.
மேலும், அரசின் உத்தரவைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் இருந்து 600 கணக்குகளும், சுமார் 3,500 சட்டவிரோத உள்ளடக்கங்களும் நீக்கப்பட்டுள்ளன.
- கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
- மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
இதனிடையே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இரு நகரங்களிலும் இல்லை என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்தது.
20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, போபால், இந்தூர் போன்ற பிற நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர், "கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்படவில்லை. நிலம் எடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டன. விரிவான திட்ட அறிக்கை மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- அரசியல் ரீதியாகவோ, நடப்பு விவகாரங்களிலோ அரசையோ, பிரதமரையோ விமர்சித்து வீடியோவோ அல்லது தகவலோ யாருக்கும் அனுப்ப வேண்டாம்.
- மீறினால் போலீசார் நோட்டீசு அனுப்புவதோடு, தண்டனைக்குரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் வாட்ஸ்அப் செயலியை தங்களது செல்போன்களில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்பு விடுக்கும் தகவல் தொடர்பு விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்து உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
அதில், வாட்ஸ்அப்பில் செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படும். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள் கண்காணிக்கப்படும். ஒவ்வொருவரின் செல்போன் எண்களும், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தோடு இணைக்கப்படும். எனவே அரசியல் ரீதியாகவோ, நடப்பு விவகாரங்களிலோ அரசையோ, பிரதமரையோ விமர்சித்து வீடியோவோ அல்லது தகவலோ யாருக்கும் அனுப்ப வேண்டாம். அதை மீறினால் போலீசார் நோட்டீசு அனுப்புவதோடு, தண்டனைக்குரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது தவறான தகவல். மத்திய அரசு இதுபோன்ற ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவில்லை" என்று கூறப்பட்டு உள்ளது.
- U/A சான்றிதழை உடனடியாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ‘ஜன நாயகன்’ படம் வெளியாவதில் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், முதலில் விஜய் ரசிகர் மன்றத்தை தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு உதவிகளை வழங்கி வந்தார். ஒரு புறம் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றுவது தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே விஜய்க்கு பிரச்சனைகள் ஆரம்பித்து என்றே சொல்லலாம். அதாவது 'தலைவா', 'மெர்சல்' படங்கள் வெளியாவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து படங்கள் வெளியாகின.
இதனிடையே, கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 'தமிழ வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கிய விஜய், அதே ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் தனது அரசியல் திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் அறிவித்தார். இதற்கு பிறகு அவரை சுற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாத விஜய், கட்சியை பலப்படுத்தும் வேளைகளிலும், சட்டசபை தேர்தலை நோக்கி தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதனிடையே, தனது கடைசி படமான 'ஜன நாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்தார். இதனால் 'ஜன நாயகன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்த விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கினார். இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வருகிற திங்கட்கிழமை ஆஜராகும் படி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 'ஜன நாயகன்' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தணிக்கை குழு சான்றிதழ் வழங்காததால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழு சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் U/A சான்றிதழை உடனடியாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் சென்சார் போர்டு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முறையிடுவதாகவும் அதனை வருகிற திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டு உள்ளது. இதனால் 'ஜன நாயகன்' படம் வெளியாவதில் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது.
சென்சார் போர்டு வழக்கை தாக்கல் செய்தால் இன்றே விசாரிப்பதாக நீதிமன்றமே கூறும் நிலையில், தணிக்கை குழு ஏன் திங்கட்கிழமைக்கு விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறது என்ற வினா எழச்செய்கிறது. அதாவது, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகிற திங்கட்கிழமைசி.பி.ஐ. விசாரணை முன்பு விஜய் ஆஜராகிறார். இவ்விரு விஷயங்களை வைத்து விஜய்க்கு அழுத்தம், நெருக்கடி தரப்படுவதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே, கரூர் விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்து பா.ஜ.க.வும், 'ஜன நாயகன்' பட விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து காங்கிரசும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தன.
எனவே, வருகிற சட்டசபை தேர்தலை மையமாக கொண்டு விஜயை கூட்டணியில் இழுக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், விஜய் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- இந்தப் பைலாடிலா வனப்பகுதி மிக உயர்தரமான இரும்புத் தாது மற்றும் பழமையான மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகும்.
- மூத்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் மாதவ் காட்கில் மறைந்த அதே நேரத்தில், காடுகளை அழிக்கும் இத்தகைய திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
சத்தீஸ்கர் மாநிலத்தின் பைலாடிலா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், அரசுக்குச் சொந்தமான NMDC நிறுவனம் இரும்புத் தாது சுரங்கப் பணிகளை விரிவுபடுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் 874.924 ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதியில் இரும்புத் தாது தோண்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரும்புத் தாது உற்பத்தியை ஆண்டுக்கு 11.30 மில்லியன் டன்னில் இருந்து 14.50 மில்லியன் டன்னாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பைலாடிலா வனப்பகுதி மிக உயர்தரமான இரும்புத் தாது மற்றும் பழமையான மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகும்.
இந்த விரிவாக்க நடவடிக்கையால் இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கம் மற்றும் நீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தார்வாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காடுகளை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் வழங்கும் இந்த நடவடிக்கையை அவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.
மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் மாதவ் காட்கில் மறைந்த அதே நேரத்தில், காடுகளை அழிக்கும் இத்தகைய திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது முரணாக பார்க்கப்படுகிறது.
- 2017 முதல் மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பைக் குறைத்து, நிதி ஆதாரங்களை முடக்கி வருவதாக குறிப்பிட்டார்.
- இந்தியாவின் இறையாண்மையை அவமதிக்கும் அமெரிக்க அதிபருக்கு எதிராக ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கக் கூட மத்திய அரசால் முடியவில்லை.
நிதி ரீதியாக முடக்கி கேரளாவின் கழுத்தை நெரிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 12-ம் தேதி திருவனந்தபுரத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்கும் மாபெரும் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அரசு கேரளா மீது பொருளாதார முற்றுகையை நடத்தி வருவதாக சாடிய அவர், நிதிப் பங்கீட்டை குறைத்தும், 2017 முதல் மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பைக் குறைத்து, நிதி ஆதாரங்களை முடக்கியும் வருவதாக குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டித்து, ஜனவரி 12 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெறும்.இதில் கேரளாவின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் இறையாண்மையை அவமதிக்கும் அமெரிக்க அதிபருக்கு எதிராக ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கக் கூட மத்திய அரசால் முடியவில்லை என்று பினராயி விஜயன் விமர்சித்தார். மேலும் amerik
- கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.
- தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கலந்து கொண்டு உரையாற்றினர்.
குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பெயரை மாற்றியதை கண்டித்தும், விபி- ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கலந்து கொண்டு உரையாற்றினர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகைகத்பட் கண்டன குரல் எழுப்பினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல்முறையாக பொதுமக்களே தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள முடியும்.
- மக்கள்தொகை கணக்கெடுப்பு, டிஜிட்டல் வழிமுறையில் நடத்தப்படும்.
புதுடெல்லி:
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. பின்னர் 2021-ம் ஆண்டு கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்த கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2027) 2 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்ட கணக்கெடுப்பு இந்த ஆண்டே தொடங்குகிறது.
அதன்படி வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை வீடுகளை பட்டியலிடுதல், வீடுகளை கணக்கெடுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல்முறையாக பொதுமக்களே தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள முடியும்.
இதற்கான முறையான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.
அதன்படி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், '2027-ம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் வீட்டுப் பட்டியல் நடவடிக்கைகள் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அந்தந்த மாநிலமும் யூனியன் பிரதேசமும் குறிப்பிடும் 30 நாட்களுக்குள் நடைபெறும் என்று மத்திய அரசு இதன்மூலம் அறிவிக்கிறது' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், வீடு வீடாக சென்று வீடு பட்டியலிடும் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்பு, சுய கணக்கெடுப்பு பணிகள் 15 நாட்கள் நடத்தப்படும் என்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.
வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுப்பு பணிகள் அடங்கிய முதல்கட்ட கணக்கெடுப்பு முடிவடைந்தவுடன் 2-ம் கட்ட கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படும்.
அதன்படி லடாக் யூனியன் பிரதேசம், காஷ்மீரில் பனிப்பொழிவு மிகுந்த பகுதிகள், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இடங்களை தவிர, மீதி பகுதிகளில், 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். லடாக் யூனியன் பிரதேசம், காஷ்மீரில் பனிப்பொழிவு மிகுந்த பகுதிகள், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இடங்களில், வருகிற செப்டம்பர் மாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, டிஜிட்டல் வழிமுறையில் நடத்தப்படும். செல்போன் செயலிகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்படும். மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்பது நினைவுகூரத்தக்கது.
- அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் எம்பிக்கள் ரத்தினவேல், ப. குமாருடன் அமித்ஷா ஆலோசனை.
- கூட்டத்தில் திமுகவிற்கு எதிராக அமித்ஷா கருத்துகளை முன்வைத்தார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயண நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
பின்னர், அங்கு திமுகவிற்கு எதிராக அமித்ஷா கருத்துகளை முன்வைத்தார்.
விழாவிற்கு பிறகு, திருச்சியில் தங்கியுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் எம்பிக்கள் ரத்தினவேல், ப. குமாருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
சட்டமன்றத் தேர்தல் வியூகம் தொடர்பாக அமித் ஷாவுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை செய்ததாக தகவல்
மேலும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
- பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
- இந்தியா இப்போது முழு சுதந்திரத்துடன் அணைகளை வடிவமைக்கிறது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள நதிநீர் ஆதாரங்களை முழுமையாகப் பயன்படுத்தவும், பிராந்தியத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்திய அரசு தனது நீர்மின் திட்டங்களை அதிவேகமாக முடுக்கிவிட்டுள்ளது.
குறிப்பாக, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா 2025-இல் முறைப்படி நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, இந்தப் பணிகள் இன்னும் வேகம் பெற்றுள்ளன.
மத்திய அரசு மற்றும் தேசிய நீர்மின் கழகம் இணைந்து சுமார் 3,000 மெகாவாட்டிற்கு அதிகமான மின் உற்பத்தித் திறன் கொண்ட நான்கு பெரிய திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளன.
அதன்படி, பகல் துல் - 1000 மெகாவாட்(MW): செனாப் நதியின் கிளை நதியான மருசுதார் நதியில் அமைகிறது. இது செப்டம்பர் 2026-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராட்லே - 850 MW: செனாப் நதியின் குறுக்கே அமையும் இந்தத் திட்டம் மே 2026-இல் மின் உற்பத்தியைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரு - 624 MW: கிஷ்த்வார் மாவட்டத்தில் அமையும் இத்திட்டம் டிசம்பர் 2026-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
குவார்- 540 MW: இது 2028-ம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 2025-இல் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதனால், நதிநீரைத் தேக்கி வைப்பதில் இருந்த கட்டுப்பாடுகள் நீங்கி, இந்தியா இப்போது முழு சுதந்திரத்துடன் அணைகளை வடிவமைக்கிறது.
நீண்ட காலத்திற்குப் பிறகு சலால் மற்றும் பாக்லிஹார் அணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. இது மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும்.
அண்மையில் (டிசம்பர் 2025 இறுதியில்), செனாப் நதியில் துல்ஹஸ்தி நிலை-II (260 MW) மற்றும் சவல்கோட் (1,856 MW) ஆகிய பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் தங்களுக்கு வரும் நதிநீர் குறையும் என்று பாகிஸ்தான் சர்வதேச அளவில் முறையிட்டு வருகிறது. இருப்பினும், தனது இறையாண்மை மற்றும் வளர்ச்சி நலன்களின் அடிப்படையில் இந்தியா பணிகளைத் தொடர்ந்து வருகிறது.
- 2025-ம் ஆண்டில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடந்தது.
- பெரிய மாநிலங்களில் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக 'தமிழ்நாடு' பெயர் பெறப்போகிறது.
சென்னை:
ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் ஒரு சக்திவாய்ந்த கருவி, எழுத்தறிவு. மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் 100 சதவீதம் எழுத்தறிவு பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், 95 சதவீதத்தை தாண்டினாலே அது முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கருதப்படுகிறது. ஏனென்றால், மிகவும் வயதானவர்கள், தன்னிச்சையாக செயல்பட முடியாதவர்களால் எழுத்தறிவை பெற முடியாது என்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனை 2027-ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களும் எட்டிவிட வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு திட்டங்களை வகுக்கிறது.
இந்த எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்தறிவும், நிதிசார் கல்வி, டிஜிட்டல் கல்வி மற்றும் முக்கியமான வாழ்க்கைத் திறன் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேர்வும் நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறுபவர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.
மத்திய அரசு 2027-ல் இலக்கை நிர்ணயித்தாலும், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்த நிலையை கடந்த ஆண்டிலேயே (2025) அடைந்துவிட்டோம். ஆனாலும் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் முறையாக இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அந்த ஒப்புதலுக்காகவும், அந்த ஒப்புதல் அளித்ததும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்காகவும் தமிழ்நாடு அரசு ஆவலோடு காத்திருக்கிறது.
95 சதவீதத்தை தாண்டுவது மட்டுமல்லாமல், முடிந்த வரை 100 சதவீதத்தை எப்படியாவது நெருங்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழ்நாடு அரசும் எழுத்தறிவு பயிற்சி வழங்கி, அதன் மூலம் தேர்வை நடத்தி வருகிறது. 2025-ம் ஆண்டில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடந்தது. ஜூனில் நடந்த தேர்வை 5 லட்சத்து 38 ஆயிரத்து 29 பேரும், டிசம்பரில் நடந்த தேர்வை 9 லட்சத்து 63 ஆயிரத்து 169 பேரும் என மொத்தம் 15 லட்சத்து ஆயிரத்து 38 பேர் எழுதியுள்ளனர். இதன் தேர்ச்சியும், முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலம் என்ற அறிவிப்பும் ஒருசேர வரும் சூழல் இருக்கிறது.
அப்படி அறிவிப்பு வந்தால், முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெறும். இதற்கு முன்பு மிசோரம், கோவா, திரிபுரா, இமாசல பிரதேசம், லடாக் ஆகிய மாநில, யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன.
இவைகள் எல்லாவற்றிலும் மக்கள் தொகை என்பது மிகவும் குறைவு. இந்த மாநிலங்களின் மக்கள் தொகையைவிட பல மடங்கு அதிகம் கொண்டவையாக தமிழ்நாடு உள்ளது. அந்த வகையில் பெரிய மாநிலங்களில் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக 'தமிழ்நாடு' பெயர் பெறப்போகிறது.
கேரளாவை பொறுத்தவரையில், 1991-ம் ஆண்டிலேயே யுனெஸ்கோ அமைப்பால் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.
- 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள்.
மத்திய பாஜக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு 'விபி ஜி ராம் ஜி' என்று பெயர் சூட்டியது.
மேலும் திட்டத்தில் பல்வேறு திருத்தங்களையும் கொண்டு வந்து மசோதா நிறைவேற்றி அது சட்டமாகவும் மாறியது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் பெங்களூருவில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா,
"மகாத்மா காந்தியை முதல்முறை கோட்சே கொன்றார். இப்போது இந்த அரசு அவரை இரண்டாம் முறையாகக் கொல்கிறது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஏழைகள் மற்றும் சிறு விவசாயிகளுக்காக வேலை செய்யும் உரிமையைக் கொண்டு வந்தார்.
இப்போது மத்திய அரசு மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், சர்வாதிகாரப் போக்கோடு இந்த விபி ஜி ராம் ஜி சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் டிசம்பர் 17-ல் கொண்டு வந்து, அடுத்த நாளே விவாதம் இன்றி இந்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டார்கள். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.
பஞ்சாயத்துகளுக்கு இருந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டு, இனி எந்த ஊருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை டெல்லியில் இருந்து மத்திய அரசே முடிவு செய்யும்.
முன்பு 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள். இது அரசியலமைப்பிற்கு எதிரானது.
பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.
ஆர்எஸ்எஸ் அந்த மனுஸ்மிருதியால் ஈர்க்கப்பட்டது. அந்த ஆர்எஸ்எஸ் தான் பாஜகவை வழிநடத்துகிறது. அதனால்தான் ஏழைகளின் வாழ்வாதாரமான இந்தத் திட்டத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்.
இந்த விபி ஜி ராம் ஜிசட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பழைய 100 நாள் வேலைத் திட்டத்தையே மீண்டும் கொண்டு வர வேண்டும்.
வேளாண் சட்டங்களைப் போராடித் திரும்பப் பெற வைத்தது போல, இந்த மக்கள் விரோதச் சட்டத்தையும் திரும்பப் பெற வைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று தெரிவித்தார்.






