என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ladakh"

    • சீனாவின் நீண்ட தூர HQ-9 தரை-வான் ஏவுகணைகளுக்கு ஏற்றவையாக இருக்கும்.
    • இந்தியாவின் நியோமா போர் விமான தளத்திற்கு எதிரே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாடு கொடு அமைந்துள்ள திபெத்தில் தங்கள் பக்கம் உள்ள பகுதியில் சீனா கட்டுமானங்களை செய்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.

    இந்நிலையில் திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் வான் பாதுகாப்பு வளாகம் ஒன்றை சீனா கட்டி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

    2020இல் திபெத்தின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன வீரர்கள் தாக்குதல் நடத்தி 20 இந்திய வீரர்களை கொன்ற இடத்தில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் இந்த சீன வான் பாதுகாப்பு வளாக கட்டுமானம் முழுவீச்சில் நடைபெறுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

    இந்த வளாகத்தில் மறைவான ஏவுகணை ஏவுதளங்கள் இடம்பெற்றுள்ளது. இங்கு ஏவுகணைகளை ஏற்றிச் சென்று சுடும் வாகனங்களை பாதுகாத்து மறைத்துவைக்க கூரைகள் பொருத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. கூரைகள் திறக்கப்பட்டவுடன் ஏவுகணைகளைச் சுட அனுமதிக்கிறது. இதன்பின் எதிர்தாக்குதலில் இருந்து தப்பிக்க கூரைகள் மீண்டும் மூடப்படும்.

    இந்த பாதுகாப்பு அமைப்பு, சீனாவின் நீண்ட தூர HQ-9 தரை-வான் ஏவுகணைகளுக்கு ஏற்றவையாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

    இந்த வடிவமைப்பைக் கொண்ட ஒரு மாதிரி வளாகம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள கார் கவுண்டியில், இந்தியாவின் நியோமா போர் விமான தளத்திற்கு எதிரே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    எல்லைப் பகுதியில் சீனா தனது ராணுவ உள்கட்டமைப்பைத் தொடர்ந்து பலப்படுத்தி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

    • தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
    • நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும்.

    கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இருவேறு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.

    ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அண்மையில் லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

    போராட்டத்தை தூண்டியதாக சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்க்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில் அங்கும் மாநில அந்தஸ்துக்கான கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

    ஆயினும், பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்களையும் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    இது ஒரு தனித்துவமான பிரச்சினை என்றும், பல காரணிகளை பரிசீலிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் கால அவகாசம் கோரினார்.

    மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மத்திய அரசின் மேற்பார்வையில் இருந்தபோதுதான் காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்தது என்று குறிப்பிட்டார்.

    மேலும், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய அரசுக்கு அனுமதி அளித்தால், நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும் என்று மற்றொரு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

    கடந்த 2023 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 2023 டிசம்பர் 11 அன்று, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது செல்லும் என்று உறுதி செய்து அதேசமயம், ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்காதது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை மீறுவதாகும் என்றும் மனுதாரர்கள் கோரினர்.

    இந்த வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனுவுக்கு நான்கு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

    முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 14 அன்று விசாரணையின்போது, பதிலளிக்க இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இதுவரை எந்தப் பதிலும் தாக்கல் செய்யாத நிலையில் தற்போது மேலும் 4 வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • செப்டம்பர் 10 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
    • பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையும் டான் மீடியாவும் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்தன.

    லடாக்கில் தனி மாநில அந்தஸ்து, 6வது அட்டவணையில் சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலநிலை ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.

    அவருக்கு ஆதரவாக தலைநகர் லேவில் கடந்த செப்டம்பர் 24 அன்று முழு அடைப்பு போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட வாங்சுக் அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.

    ஆனால் இந்த வன்முறையை தூண்டியதாக செப்டம்பர் 26 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டு ராஜஸ்தானின் ஜோத்புர் சிறையில் அடைக்கப்பட்டார்.  

    இந்நிலையில் தனது கணவர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. அங்மோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

    தனது கணவர் கைது செய்யப்பட்டு ஒரு வாரமாகியும், அவரது உடல்நலம், நிலை மற்றும் அவர் தடுத்து வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து தனக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்று அங்கமோ தெரிவித்தார்.

    முன்னதாக சோனம் வாங்சுக்கின் விடுதலைக்காக ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உடனடி தலையீட்டை ஆங்மோ கோரினார்.

    லே போலீசார் சோனம் வாங்சுக்கின் பாகிஸ்தான் சென்றதை குறிப்பிட்டு, அவருக்கு பாகிஸ்தான் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியது குறித்து விளக்கம் அளித்த அங்மோ, பிப்ரவரியில், பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையும் டான் மீடியாவும் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்தன. அதில் சோனம் பங்கேற்றார். அதில் எந்தத் தவறும் இல்லை, அங்குகூட அவர் மேடையில் பிரதமர் மோடியின் 'மிஷன் லைஃப்' திட்டத்தை பாராட்டினார்" என்று தெரிவித்தார்.

    தனது கணவர் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு, உளவு பார்த்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதாக கூறிய ஆங்மோ, "குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்தும் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம், ஆனால் சோனமை அவதூறு செய்யவும், ஆறாவது அட்டவணை இயக்கத்தை பலவீனப்படுத்தவும் ஒரு இருட்டடிப்பு வேலை நடக்கிறது என்று தெரிவித்தார்.  

    • பாகிஸ்தானியர்களால் அவனைக் கொல்ல முடியவில்லை, ஆனால் நம் சொந்தப் படைகள் அவன் உயிரைப் பறித்துவிட்டன என்று அவரின் தந்தை தெரிவித்தார்.
    • லடாக்கில் நடந்த இந்தக் கொலைகள் குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    லடாக்கில் மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை லேவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் உடனான மோதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களில் முன்னாள் ராணுவ வீரரான ட்சேவாங் தார்ச்சின் என்பவரும் ஒருவர். 1999 முதல் 2017 வரை அவர் ராணுவத்தில் பணியாற்றினார். சியாச்சின் பனிமலையில் பணியாற்றியவர் ஆவார். கார்கில் போரில் அவர் பங்குபெற்றார். அவரது தந்தையும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.

    மகன் இறப்பு குறித்து தந்தை அளித்த பேட்டியில், "என் மகன் ஒரு தேசபக்தன். அவன் கார்கில் போரில் போராடினான். மூன்று மாதங்கள் போர்முனையில் இருந்தான்.

    டா டாப் மற்றும் டோலோலிங்கில் பாகிஸ்தானியர்களுடன் சண்டையிட்டான். பாகிஸ்தானியர்களால் அவனைக் கொல்ல முடியவில்லை, ஆனால் நம் சொந்தப் படைகள் அவன் உயிரைப் பறித்துவிட்டன" என்று ஆதங்கத்துடன் கூறினார்.

    அவரின் பேட்டியை பகிர்ந்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், "தந்தை ராணுவத்தில், மகன் ராணுவத்தில் - தேசபக்தி அவர்களின் இரத்தத்தில் ஊறுகிறது.

    லடாக்கிற்காகவும் அவரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக பாஜக அரசு இந்த துணிச்சலான தேச மகனை சுட்டுக் கொன்றது. 

    தந்தையின் வலி நிறைந்த கண்கள் ஒரு கேள்வியைக் கேட்கின்றன: இன்று தேசத்திற்கு சேவை செய்ததற்கான வெகுமதி இதுதானா?

    லடாக்கில் நடந்த இந்தக் கொலைகள் குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

    மோடி ஜி, நீங்கள் லடாக் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டீர்கள். அவர்கள் தங்கள் உரிமைகளைக் கோருகிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் - வன்முறை மற்றும் பயத்தின் அரசியலை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
    • லடாக்கியர்கள் தங்களுக்கென ஒரு குரல் வேண்டும் என்று கோரினர்.

    லடாக் யூனியன் பிரதேசத்துக்கு தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியல் அமைப்பில் 6வது அட்டவணையில் இடம் கோரி கடந்த வாரம் வெடித்த இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

    போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் வன்முறையை தூண்டியதாக காலநிலை செயல்பாட்டாளர்கள் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில், இது குறித்து ராகுல் காந்தி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், லடாக்கின் அற்புதமான மக்கள், கலாச்சாரம் மற்றும் மரபுகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியோரால் தாக்கப்படுகின்றன.

    லடாக்கியர்கள் தங்களுக்கென ஒரு குரல் வேண்டும் என்று கோரினர். ஆனால் அதற்கு பாஜக, 4 இளைஞர்களை கொன்றும் சோனம் வாங்க்சுக்கை சிறையிலடைத்தும் பதிலடி அளித்துள்ளது.

    கொலையை நிறுத்துங்கள். வன்முறையை நிறுத்துங்கள். லடாக்குக்கு ஒரு குரல் வேண்டும், அதனை வழங்குங்கள். அவர்களுக்கு அரசமைப்பின் 6-ஆவது அட்டவணையை வழங்குங்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • வாழ்நாள் அர்ப்பணிப்புக்காக ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் ராமன் மக்சேசே விருது அவருக்கு வழங்கப்பட்டது.
    • தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க செயற்கை பனிக்கட்டிகள் (Ice Stupas) உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.

    கடந்த 2019 இல் மத்திய அரசு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதை யூனியன் பிரதேசமாக அறிவித்தது. அதனுடன் இருந்த லடாக் தனி யூனியன் பிரதேசமானது.

    மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் துணை நிலை ஆளுநர் மேற்பார்வையில் லடாக் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

    லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கக் கோரி சுற்றுச்சூழல், காலநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் (59 வயது) தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

    6-வது அட்டவணையில் சேர்ப்பதால் பழங்குடி மக்களின் நிலம், கலாச்சாரம், மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க சுயாட்சி நிர்வாகம் அமையும்.

    இந்தச் சலுகை லடாக்கின் பழங்குடிக் கலாச்சார அடையாளம், எளிதில் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாக அமைப்புகளைப் பாதுகாக்கும் என்று அவர் வாதிடுகிறார்.

    இது லடாக்கின் 90% க்கும் அதிகமான பழங்குடி மக்களுக்கு பிழைப்புக்கான வழி என்றும் அவர் வாதிடுகிறார்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் அவரது தலைமையில் காலவரையற்ற உண்ணாவிர போராட்டம் தொடங்கியது. அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த புதன்கிழமை லே-வில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் வன்முறையாக மாறியது.

    இதற்கிடையே அவர்களுக்கு ஆதரவாக தலைநகர் லே-வில் முழு அடைப்பு போராட்டதற்கு 'லே அபெக்ஸ் பாடி' என்ற அமைப்பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்தது. கடந்த புதன்கிழமை நடந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

    போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், லே-வில் உள்ள பாஜக அலுவலகத்தையும் தாக்கினர்.

    செப்டம்பர் 10 முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த சோனம் வாங்க்சுக், வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இளைஞர்கள் அமைதிக்காக வேண்டும் என்று கூறி தனது போராட்டத்தை நிறுத்திக்கொண்டார்.

    ஆனால் வன்முறைக்குக் காரணம் வாங்க்சுக்கின் தூண்டுதல் பேச்சுகளே என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை மூலம் குற்றம் சாட்டியது.

    அரபு வசந்தம் மற்றும் நேபாள 'ஜென் இசட்' போராட்டங்களைப் பற்றி அவர் பேசியது வன்முறையைத் தூண்டியதாக அமைச்சகம் தெரிவித்தது.

    இந்தக் குற்றச்சாட்டுகளை வாங்க்சுக் கடுமையாக மறுத்தார். இப்பிரச்சனையின் மூல காரணிகளைத் தீர்க்காமல் பலிகடா தேடும் தந்திரமாகவே மத்திய அரசு தன்னைக் குறிவைப்பதாக அவர் விமர்சித்தார்.

    அவரது கல்வி நிறுவனமான SECMOL (Students' Educational and Cultural Movement of Ladakh)-ன் வெளிநாட்டுப் நிதி பெறும் உரிமத்தை (FCRA) உள்துறை அமைச்சகம் இரத்து செய்தது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று மதியம் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளதாக கூறியிருந்த நிலையில் வன்முறையைத் தூண்டியதாக காலையிலேயே அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்தது. லே பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    தற்போது ஜோத்பூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் கைது எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் காலநிலை செயல்பாட்டாளர் சோனம் வான்சுக் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

     யார் இந்த சோனம் வாங்சுக்?

    1966 ஆம் ஆண்டு லடாக்கின் தொலைதூர கிராமமான உலேடோக்போவில் பிறந்தார்.

    சிறுவயதில் பள்ளிகள் வெகு தொலைவில் இருந்ததால், அவருடைய தாயார் வீட்டிலேயே அடிப்படைகளைக் கற்றுக் கொடுத்தார்.

    ஒன்பது வயதில் ஸ்ரீநகரில் உள்ள பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு புதிய மொழியால் படிப்பில் சிரமப்பட்ட அவரை மந்தமானவர் என்று முத்திரை குத்தினர்.

    அந்த சூழ்நிலையை சோனம் வாங்சுக்கால் தாங்க முடியவில்லை. அப்பொழுது ஒருநாள் சோனம் யாருக்கும் சொல்லாமல் தன் வீட்டிலிருந்து டில்லிக்கு ஓடி வந்துவிடுகிறார். 

    அங்கு ஒரு கட்டத்தில் விஷேஷ் கேந்திர வித்தியாலயா பள்ளியில் தலைமை ஆசிரியரைச் சந்திக்கிறார். வாங்சுக் -இன் மொழி தெரிந்த நிலையில் அவருடன் பேசி பிரச்னையை  புரிந்து கொன்றார்.

    வாங்சுக்கை மீண்டும் ஸ்ரீநகருக்குச் அனுப்பி வைத்து அங்கு அவர் படிப்பதற்காக உதவுகிறார். அவரின் உதவிக்குப் பின்பு சோனம் நன்றாகப் படிக்கத் தொடங்கினார்.

    பின் 1987 ஆம் ஆண்டில், ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ( NIT) மெக்கானிக்கல் இன்ஜியரிங்கில் பி.டெக். பட்டம் பெற்றார்.

    பெயர் பெற்ற கல்வி நிறுவனத்தில் படிப்பை முடித்தும் வேலைக்கு செல்லமால் 1988 ஆம் ஆண்டில் லடாக்கின் சீரற்ற கல்வி முறையைச் சீர்திருத்த சொந்த ஊருக்குத் திரும்பினார். 

    சகோதரர்களுடன் சேர்ந்து லடாக் மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கம் (SECMOL) என்ற அமைப்பை நிறுவினார்.

    அவரது கல்வி நிறுவனத்தில் லடாக்கிற்கு ஏற்ற ஒரு கல்வி முறையை அவர் உருவாக்கினார்.

    அந்தக் கல்வி முறை லடாக்கின் கலாசார, சுற்றுச்சூழல் தன்மைக்கு ஏற்றதாக இருக்கும் என்று அவர் குரல் கொடுத்து வந்தார்.

     சாஸ்போல் என்ற பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியை உருவாக்கி அதில் அவர் திட்டத்தின் படி  தொடங்கி பாரம்பரிய கல்வி முறையால் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவினார்.

    அந்த பள்ளியில் மற்ற பள்ளியில் படித்த மாணவர்கள் சேர வேண்டும் என்றால் கட்டாயம் அவர்கள் அந்த பள்ளியில் பெயில் ஆகியிருக்க வேண்டும். 

    அந்த பள்ளிக்கு மின்சாரம் வெளியிலிருந்து வராது அந்த பள்ளிக்குத் தேவையான மின்சாரத்தை அங்குப் படித்த மாணவர்கள் தயாரித்த சூரிய மின் சக்தியிலிருந்தே பயன்படுத்தப்படுகிறது.

    அந்த பள்ளிக் கட்டிடமே செங்கல்களால் கட்டப்படவில்லை முற்றிலும் களிமண்ணை வைத்துக் கட்டப்படுகிறது.

    ஏட்டுக் கல்வியோடு நிறுத்தாமல் மாணவர்களுக்கு செயல்முறை கல்வி வழங்க வேண்டும் என்பதே அவரது இலக்கு.

    இதற்கிடையில் 2001ம் ஆண்டு அரசு கல்வித்துறையின் ஆலோசகராகச் சேர்ந்தார்.

    2002ம் ஆண்டு சில தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து லடாக் வாலென்டரி நெட்வோர் என்ற அமைப்பையும் உருவாக்கினர்.

    அடுத்த 20 ஆண்டுகளில் லடாக்கில் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு பெரும் திட்டத்தை வகுத்து அதை அரசிடம் சமர்ப்பித்தார்.

    இது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கின் பார்வைக்குச் சென்றது. அசந்து போன பிரதமர் அவரை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் தொடக்க நிலை கல்வி கவுன்சில் உறுப்பினராக நியமித்தார். 

     2007-2010 வரை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த வாங்சுக் பின் நேபாள அரசின் கல்வித்துறை அமைச்சராகவும் இருந்தார்.

    லடாக் பகுதியின் நீர் பஞ்சத்தை தீர்க்க குளிர்காலத்தில் செயற்கை பனிக்கட்டிகள் (Ice Stupas) உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தது மற்றும் லடாக் மக்களுக்காக மைனஸ் 15 டிகிரி குளிரையும் தாக்குப்பிடிக்கும் வகையிலான களிமண் வீடுகளை உருவாக்கியது அவரது சாதனைகளில் ஆகும்.

    இந்த உயரமான Ice Stupas கட்டமைப்புகள் குளிர்காலத்தில் உருகும் நீரைக் கொண்டு கட்டப்படுகின்றன. இது வசந்த காலத்தில் விவசாயிகளுக்கு மிகவும் தேவைப்படும்போது நீரை மெதுவாக வெளியிடுகிறது.

    இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றது.   2018 ஆம் ஆண்டில், அவரது வாழ்நாள் அர்ப்பணிப்புக்காக ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் ராமன் மக்சேசே விருது அவருக்கு வழங்கப்பட்டது.

    சோனம் வாங்சுக்கின் கதை பாலிவுட் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் கவனத்தை ஈர்த்தது. அவரை மையமாக 3 இடியஸ்ட்ஸ் என்ற ஹிட் படத்தை இயக்கினார். அதில் அமீர் கான் கதாபத்திரம் சோனம் வாங்சுக் உடைய நேரடி இன்ஸபிரேஷன் ஆகும்.

    தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரீமேக்காக உருவான நண்பன் படத்தில் விஜய்,  கொசக்சி பசபுகழ் என்ற பெயரில் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    2024 மார்ச் மாதம் லடாக் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து 21 நாட்கள் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார்.

    தொடர்ந்து 2024 செப்டம்பரில் வாங்சுக், லே முதல் டெல்லி வரை 'டெல்லி சலோ' பாதயாத்திரை என்ற பெயரில் மாநில அந்தஸ்துக்கான பாதயாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.

    தற்போது அவரின் கைது அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே லடாக் டிஜிபி, சோனம் வான்சுக் பாகிஸ்தான்  முகவரியுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.  

    • செப்டம்பர் 10 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்.
    • நேபாள 'ஜென் இசட்' போராட்டங்களைப் பற்றி அவர் பேசியது வன்முறையைத் தூண்டியதாக அமைச்சகம் கூறியுள்ளது.

    லடாக் யூனியன் பிரதேசத்திற்கு தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கக் கோரி சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதற்கிடையே அவர்களுக்கு ஆதரவாக கடந்த புதன்கிழமை லே-வில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் வன்முறையாக மாறியது.

    அங்கு போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், லே-வில் உள்ள பாஜக அலுவலகத்தையும் தாக்கினர்.

    செப்டம்பர் 10 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த சோனம் வாங்க்சுக், வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இளைஞர்கள் அமைதிக்காக வேண்டும் என்று கூறி தனது போராட்டத்தை நிறுத்திக்கொண்டார்.

    வன்முறைக்குக் காரணம் வாங்க்சுக்கின் "தூண்டுதல் பேச்சுகளே" என்று மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

    அரபு வசந்தம் மற்றும் நேபாள 'ஜென் இசட்' போராட்டங்களைப் பற்றி அவர் பேசியது வன்முறையைத் தூண்டியதாக அமைச்சகம் கூறியுள்ளது.

    இந்தக் குற்றச்சாட்டுகளை வாங்க்சுக் கடுமையாக மறுத்துள்ளார். இப்பிரச்சனையின் மூல காரணிகளைத் தீர்க்காமல் பலிகடா தேடும் தந்திரமாகவே மத்திய அரசு தன்னைக் குறிவைப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

    இந்நிலையில் வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இன்று சோனம் வாங்க்சுக் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே வாங்க்சுக் நிறுவிய SECMOL என்ற  அரசு சாரா நிறுவனத்தின் FCRA (வெளிநாட்டுப் பங்களிப்பு) உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 

    • இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    • அதை பிரதமர் மோடி ஜூன் 19, 2020 இல் பூசி மெழுகியதும் அங்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.

    கடந்த புதன்கிழமை லடாக் தலைநகர் லே-வில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது லடாக் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டககாரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனம் காட்டாமல் விரைந்து செயல்பட காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

    "6 வருடங்களுக்கு முன்பு லடாக் யூனியன் பிரதேசம் உருவான போது அம்மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்கொண்டது என்னவோ பெருத்த ஏமாற்றத்தை மட்டுமே!.

    தற்போது, லடாக் மக்களின் நிலமும், வேலைவாய்ப்பு உரிமையும் மிகுந்த ஆபத்தில் உள்ளது. அங்குள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம், துணை நிலை ஆளுநர் மற்றும் அதிகாரத்தால் கைப்பற்றப்பட்டது.

    மாநில அந்தஸ்து, அரசியலமைப்பு 6வது பட்டியலில் சேர்க்கப்படுவது, தேர்தல் நடத்தபடுவது ஆகியவை குறித்து லடாக் மக்களின் கோரிக்கைள் குறித்து மீட்டிங் மேல் மீட்டிங் மட்டுமே நடக்கிறதே அன்றி எந்த முன்னேற்றமும் இல்லை.

    லடாக்கில் ஏற்கனவே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்ற ஒப்பந்தத்தை தங்கள் படைகளை இந்தியா அருகே நிலைநிறுத்தி சீனா ஒருதலைபட்சமாக மீறியதும் அதை பிரதமர் மோடி ஜூன் 19, 2020 இல் பூசி மெழுகியதும் அங்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    லடாக் இந்தியாவுக்கு அதன் கலாச்சாரம், சூழலியல் மற்றும் மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. தாங்கள் இந்தியர்கள் என்பதில் லடாக் மக்கள் எப்போதும் பெருமை கொண்டிருந்தனர்.

    அவர்களின் கோபமும், துன்பமும் இந்திய அரசின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும். மேலும் வெறும் மீட்டிங் பேச்சுக்களை மட்டுமே மேற்கொள்வதை விட்டு விட்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை முழு வீச்சில் முடிந்த அளவு விரைவாக நிறைவேற்றிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    2020 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜூன் 19, 2020 அன்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தில் உரையாற்றினார்.

    அந்தக் கூட்டத்தில், "நமது எல்லைக்குள் யாரும் வரவில்லை, நமது ராணுவப் paguthigalaiயாரும் கைப்பற்றவில்லை" என்று பிரதமர் மோடி கூறினார். இதையே பிரதமரின் பூசி மெழுகல் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 

    • லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
    • லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று காலை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    இதனிடையே, போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதனையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், லடாக்கில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நேற்று மாலை 4 மணியில் இருந்து அங்கு எந்த வன்முறை சம்பவமும் நிகழவில்லை என்றும் வன்முறையைத் தூண்டும் விதமான பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

    • லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்தனர்.
    • போராட்டத்தைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

    லடாக்:

    யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, லடாக்கில்முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று காலை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    இந்நிலையில், போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    மேலும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • லடாக்கில் இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
    • போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    லடாக்:

    யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 10-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டமும் நடந்து வருகிறது.

    இந்தப் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, லடாக்கில்முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று காலையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    மேலும், மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    • மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
    • லெப்டினன்ட் கர்னல் பானு பிரதாப் சிங் மன்கோடியா மற்றும் லான்ஸ் கார்போரல் தல்ஜித் சிங் ஆவர்.

    கிழக்கு லடாக்கில் சாலையில் ஒரு பெரிய பாறை விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒரு லெப்டினன்ட் கர்னல் உட்பட இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

    கல்வானில் உள்ள துர்பக் அருகே உள்ள சர்பாக்கில் புதன்கிழமை காலை 11.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

    இராணுவ வாகனத் தொடரணியின் ஒரு பகுதியாக அவர்கள் ஜீப்பில் பயணித்தபோது பாறை விழுந்து விபத்து ஏற்பட்டது.

    இறந்தவர்கள் லெப்டினன்ட் கர்னல் பானு பிரதாப் சிங் மன்கோடியா மற்றும் லான்ஸ் கார்போரல் தல்ஜித் சிங் ஆவர். காயமடைந்த மேஜர் மயங்க் சுபம், மேஜர் அமித் தீட்சித் மற்றும் கேப்டன் கௌரவ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

    ×