என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜம்மு காஷ்மீர்"

    • சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு 6 மாதங்கள் முடிவடைந்துள்ளன.
    • அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வந்திருந்தபோது, அவருடன் தனிப்பட்ட முறையில் சிறந்த ஆலோசனை மேற்கொண்டேன்.

    ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக இருக்கும் உமர் அப்துல்லா சரியான நேரம் வந்துவிட்டது, மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-

    சரியான நேரம் வந்துவிட்டதாக நாங்கள் நினைக்கிறோம். சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு 6 மாதங்கள் முடிவடைந்துள்ளன. அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வந்திருந்தபோது, அவருடன் தனிப்பட்ட முறையில் சிறந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றேன். ஜம்மு-காஷ்மீர் விரைவில் மாநில அந்தஸ்து பெறும் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது.

    இவ்வாறு அப்துல்லா தெரிவித்தார்.

    • பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் காஷ்மீரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
    • அப்பகுதியில் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிஷ்த்வார் மாவட்டம் தந்து என்ற பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இப்பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் கூட்டாக இணைந்து சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காட்டுக்குள் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் அவர்களை பார்த்து துப்பாக்கியால் சுட்டனர்.

    பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் நேற்று ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். இன்று அதிகாலை மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க கமாண்டர் என்றும், அவரது பெயர் சைபுல்லா என்றும் தெரிய வந்தது. மற்றவர்கள் பெயர் பர்மான், பாஷா ஆகும். இவர்களது தலைக்கு தலா ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அவர்களிடம் இருந்து நவீனரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.

    ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் அக்னூர் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஊடுருவல் முயற்சியை தடுத்த ராணுவ வீரர் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். அவரது பெயர் குல்தீப்சந்த் ஆகும். இந்த துப்பாக்கி சண்டையில் ஜூனியர் ராணுவ அதிகாரி ஒருவரும் காயம் அடைந்தார்.

    • பாஜக இந்த போதையிலிருந்து விடுபட விரும்பவில்லை. ஒரு அரசியல்வாதிக்கு ஒருபோதும் மதம் இருக்கக்கூடாது
    • இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

    வக்பு சட்டத்திருத்தம் தொடர்பான விவாதத்தில் ஏற்பட்ட அமளி காரணமாக இன்று ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் 3 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் வக்பு சட்டத்திருத்தம் தொடர்பான கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில் அவைக்கு வெளியே ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கும் பாஜகவினரும் இடையே மோதல் வெடித்தது.

    ஆத்மி கட்சி எம்.எல்.ஏ மெஹ்ராஜ் மாலிக், பண்டிகைகளின் போது இந்துக்கள் குடிபோதையில் இருப்பார்கள் என்று கூறியதற்காக பாஜக எம்எல்ஏக்களால் அவைக்கு வெளியே வைத்து தாக்கப்பட்டார்.

    "ஒரு முஸ்லிம் சம்பந்தப்படும் போதெல்லாம் பாஜகவினர் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இந்துக்கள் போதைக்கு அடிமையாவது குறித்து அவர்களுக்கு கவலையில்லை. மதுக் கடைகளை மூடுவார்களா என்று கேளுங்கள்.

    இல்லை, பண்டிகைகளின் போதும், திருமணங்களின் போதும் இந்துக்கள் குடிப்பதால் அவர்கள் அவற்றை மூட மாட்டார்கள், ஆனால் பாஜக இந்த போதையிலிருந்து விடுபட விரும்பவில்லை. ஒரு அரசியல்வாதிக்கு ஒருபோதும் மதம் இருக்கக்கூடாது" என்று அவர் கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்எல்ஏக்கள் அவருடன் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதன்பின் அவைக்குள் சென்ற மெஹ்ராஜ் மாலிக் தன்னை பாஜக எம்எல்ஏக்கள் தாக்கியதாக மேஜை மீது ஏறி நின்று முறையிட்டார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

    • வக்பு திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீசு வழங்கினர்.
    • இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.

    வக்பு திருத்த சட்ட விவகாரம் தொடர்பாக காஷ்மீர் சட்டசபையில் நேற்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

    இன்று 2- வது நாளாக காஷ்மீர் சட்டசபை கூடியது. முன்னதாக மக்கள் ஜனநாயக கட்சி ( பி.டி.பி.) மற்றும் அவாமி இத்தேஹாத் கட்சி உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு வக்பு திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீசு வழங்கினர். ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.

    இதையடுத்து தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    எம்.எல்.ஏ.க்கள் அமளியால் சபை நடவடிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் வாஹித்பாரா சட்டசபையில் இருந்து வெளியேற்றப் பட்டார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்.கள் அமளியில் ஈடுபட்டதால் சபையை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    • புதிய அரசு வரும்போது மக்கள் அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படும் என நினைத்தார்கள்.
    • உங்களுக்கு வாக்களித்த மக்கள் பிரச்சினைகளை கூட பேச பயப்படுகிறீர்கள்.

    ஜம்மு-காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையில் அதிகாரிகளை மாற்றம் செய்வதில் யாருக்கு அதிகாரம் என்பதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. உண்மையான பிரச்சினையில் எடுக்கக்கூடிய நிலை குறித்து கவனம் செலுத்துவதில்லை என மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக மெகபூபா முஃபதி கூறியதாவது:-

    புதிய அரசு வரும்போது (சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் நடைபெற்ற சட்டசபை தேர்தல்) மக்கள் அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படும் என நினைத்தார்கள். துரதிருஷ்டவசமாக 6 மாதங்களாக ஜெயிலில் வாடும் இளைஞர்கள், நம்முடைய வேலைவாய்ப்பு பறிப்பு, தினக்கூலிகளின் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை பற்றி பேசப்படவில்லை. அரசாங்கம் எல்லாவற்றிலும் கோழைத்தன்மையை காட்டியுள்ளது.

    ஆட்சிக்கு வந்தபோது மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை என்றார்கள். டெல்லியுடன் யாரும் மோதலை விரும்பவில்லை. ஆனால் நீங்கள் ஏற்கனவே சரணடைந்து விட்டீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்கள் பிரச்சினைகளை கூட பேச பயப்படுகிறீர்கள்.

    இவ்வாறு மெகபூபா முஃப்தி குற்றம்சாட்டினார்.

    • கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் என்கவுண்டர் நடைபெற்றது.
    • இதில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முயற்சியை எல்லை பாதுகாப்புப் படைவீரர்கள் தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில், கதுவா மாவட்டத்தில் உள்ள தொலைதூர காட்டுப் பகுதியில் 5 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறப்பு செயல்பாட்டுக்குழு மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸ் ராணுவம், பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் உதவியுடன் இந்த நடவடிக்கையில் இறங்கியது.

    அப்போது வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் பயங்கர சண்டை நடைபெற்றது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 5 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், கதுவா என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதில் பாதுகாப்புப் படைவீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை.
    • ஐந்து பயங்கரவாதிகளில் இரண்டு பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட முயற்சி மேற்கொள்கின்றனர்.

    இதை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் தடுத்து நிறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஐந்து பயங்கரவாதிகள் கதுவா மாவட்டத்தில் உள்ள தொலைதூர காட்டுப் பகுதியில் ஊடுருவியதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் பயங்கர சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஐந்து வீரர்கள் காயம் அடைந்தனர்.

    காயம் அடைந்த வீரர்களுக்கு கதுவா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுமிக்கப்பட்டுள்ளனர்.

    பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறப்பு செயல்பாட்டுக்குழு மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸ் ராணுவம், பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் உதவியுடன் இந்த நடவடிக்கையில் இறங்கியது.

    • ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது.
    • பாரத ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன்.

    ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதம் வரலாறாகிவிட்டு என மத்திய உள்துறை அமைச்சர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஹரியத்தின் இரண்டு அமைப்புகளான ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது.

    பாரத ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். இதைபோன்று அனைத்து அமைப்புகள் (குழுக்கள்) முன்வந்து பிரிவினைவாதத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    வளர்ந்த, அமைதியான மற்றும் ஒன்றுபட்ட பாரதத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இது ஒரு பெரிய வெற்றியாகும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • யூனியன் பிரதேசம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது.
    • பாராளுமன்றத்தில் நம்முடைய மாநில அந்தஸ்தை திரும்பப்பெறும் வரை, நாம் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகத்தான் இருப்போம்.

    ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) சட்டம் 2017, திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் என குறிப்பிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    மக்கள் மாநாட்டு கட்சி உறுப்பினர் சஜாத் கானி லோன், இந்த மசோதாவை நிறைவேற்றியது, சட்டமன்றத்தால் ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசம் என அங்கீகரிப்பதாகிவிடும் விமர்சித்தார்.

    இதற்கு பதில் அளித்து முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:-

    யூனியன் பிரதேசம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. துரதிருஷ்டவசமாக, பாராளுமன்றத்தில் நம்முடைய மாநில அந்தஸ்தை திரும்பப்பெறும் வரை, நாம் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகத்தான் இருப்போம். எனவே, இதை அரசியலாக்க வேண்டாம்.

    ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் பெற வேண்டும். Inshallah, அதை மீட்டெடுப்போம். யூனியன் பிரதேசம் என்ற வார்த்தையை நீக்குவது நம்முடைய யதார்த்தத்தை மாற்றாது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் யூனியன் பிரதேசம்தான். இந்த அரசாங்கம் யூனியன் பிரதேசமாக ஆட்சி செய்கிறது.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.
    • பயங்கரவாதிகளை தங்கள் கண்களில் வைத்திருப்பவர்கள் எல்லா இடங்களிலும் பயங்கரவாதிகளை மட்டுமே பார்ப்பார்கள்

    இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தின்போது மாநிலங்களவையில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

    அவர் பேசியதாவது, முதலில், நான் காஷ்மீரைப் பற்றிப் பேசுகிறேன். அண்டை நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்தனர். அவர்கள் இங்கு குண்டுவெடிப்புகளையும் கொலைகளையும் அரங்கேற்றினர். எந்த கவலையும் இல்லாமல் ஒரு பண்டிகையைக் கூட காஷ்மீர் மக்கள் கொண்டாட முடியவில்லை.

    இந்த விவகாரத்தில் முந்தைய மத்திய அரசு நெகிழ்வான அணுகுமுறையைக் கொண்டிருந்தது. அவர்கள் அமைதியாக இருந்தனர், பேசுவதற்கு பயந்தனர். அவர்கள் தங்கள் வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்பட்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் காட்டினோம்.  

    நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் உரி மற்றும் புல்வாமாவில் தாக்குதல்கள் நடந்தன. 10 நாட்களுக்குள், நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.

     

    எங்களின் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை அங்கிருந்து தொடங்கியது. காஷ்மீரில் பிரிவினைவாதத்திற்கான அடிப்படையாக பிரிவு 370 இருந்தது. ஆனால் பிரிவு 370 ஆகஸ்ட் 5, 2019 அன்று எங்கள் அரசால் நீக்கப்பட்டது.

    இந்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் முழுமையாக ஒருங்கிணைப்பதை உறுதி செய்தது. தற்போதைய நிர்வாகம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், எந்தவொரு அச்சுறுத்தல்களிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது.

    நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் எல்லைகளை வலுப்படுத்த உயர்ந்த தியாகத்தைச் செய்த ஆயிரக்கணக்கான மாநில காவல்துறை மற்றும் மத்திய துணை ராணுவப் படை வீரர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    மேலும்  பேசிய அமித்ஷா "தான் பயங்கரவாதிகளை தூரத்திலிருந்து கூட பார்க்கிறேன்" என்று ஒருவர் (ராகுல் காந்தி காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது) கூறினார். பயங்கரவாதிகளை தங்கள் கண்களில் வைத்திருப்பவர்கள் எல்லா இடங்களிலும் பயங்கரவாதிகளை மட்டுமே பார்ப்பார்கள் என்று விமர்சித்தார். மேலும் நக்சல் பிரச்சனை குறித்து பேசிய அமித் ஷா, இடதுசாரி பயங்கரவாதம், மார்ச் 31, 2026க்குள் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

    போதைப்பொருள், சைபர் குற்றம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் ஹவாலா போன்ற மாநிலங்களுக்கிடையேயான மற்றும் வெளிநாட்டில் இருந்து நடக்கும் குற்றங்களை தடுக்க உள்துறை அமைச்சகத்தில் (அதிகார வரம்பில்) பல மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்றும் அமித் ஷா பேசினார்.

    • வளர்ச்சித் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
    • ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிப் பெற மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாக தகவல்.

    குல்காம்:

    மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து காஷ்மீர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி எல். முருகன், இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.

    குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 75 நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் அமிர்த ஏரிகள் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன், வளர்ச்சித் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். 


    அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் முழுமையான வளர்ச்சிப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது என்றார். குல்காம் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

    இந்த நடவடிக்கையின் மூலம், இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து உள்ளூர் மீன் வளர்ப்போருடன் அவர் கலந்துரையாடினார்.

    அப்பகுதியில் உள்ள மீன்வளர்ப்புப் பண்ணைகளையும் அவர் பார்வையிட்டார். உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதாகவும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலனடைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

    • காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ளூர் போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
    • பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் தீவிரவாதிகள் நடத்த இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் அவ்வப்போது அவர்கள் அப்பாவி பொது மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ளூர் போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    கடந்த 3 நாட்களாக நடந்த இந்த சோதனையில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 2 ஏ.கே. 74 ரக துப்பாக்கிகள், 2 சீன துப்பாக்கிகள், 7 தோட்டாக்கள், கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள், போதை பொருட்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் தீவிரவாதிகள் நடத்த இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    ×