என் மலர்
நீங்கள் தேடியது "Jaish e Mohammed"
- ஜம்மு காஷ்மீரின் ஷோபியானைச் சேர்ந்த மத அறிஞர் மௌல்வி இர்பான் அகமது மூலம் ஹன்சுல்லா டாக்டர் ஷகீலைத் தொடர்பு கொண்டார்.
- வெடிபொருட்களை 'பிரியாணி' என்றும் தாக்குதலை 'தாவத்' என்றும் கூறி அவர்கள் தங்கள் தாக்குதல்களைத் திட்டமிட்டனர்.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தின் அருகில் கடந்த 10 ஆம் தேதி நடந்த கார் குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இது தற்கொலை படை தாக்குதல் என என்ஐஏ உறுதி செய்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் என கண்டறியப்பட்டது.
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணியாற்றி அவர் பணியாற்றி வந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த மற்ற மருத்துவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முசாமில் ஷகீல், அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த டாக்டர் அதீல் அகமது ராதர், லக்னோவை சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சயீத், ஷோபியான் பகுதியைச் சேர்ந்த முஃப்தி இர்பான் அகமது வாகே என 4 பேர் நேற்று என்ஐஏ காவலில் எடுக்கப்பட்டனர்.
டெல்லி பயங்கரவாத தாக்குதலில் இந்த 4 பேருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்த சதியில் ஈடுபட்ட மருத்துவர்கள் கும்பலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி 'ஹன்சுல்லா' என்பவர் வெடிகுண்டு தயாரிப்பதில் ஆன்லைனில் பயிற்சி அளித்ததாக விசாரணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 'ஹன்சுல்லா' என்பது மாற்றுப்பெயர் என்று நம்பப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான டாக்டர் முசாமில் ஷகீலுக்கு குண்டுகள் தயாரிப்பது தொடர்பான 40 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அனுப்பப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
தகவல்களின்படி, ஜம்மு காஷ்மீரின் ஷோபியானைச் சேர்ந்த மத அறிஞர் மௌல்வி இர்பான் அகமது மூலம் ஹன்சுல்லா டாக்டர் ஷகீலைத் தொடர்பு கொண்டார்.
முதலில் ஷகீலை பயங்கரவாதத்திற்குத் தூண்டிய மௌல்வி, பின்னர் பரிதாபாத்தில் உள்ள அல் பாலா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மற்ற மருத்துவர்களை அந்தக் கும்பலில் சேரச் செய்தார்.
வெடிபொருட்களை கொண்டு செல்வதிலும், தற்கொலைத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 காரை பயங்கரவாதி உமர் முகமதுவிடம் ஒப்படைப்பதிலும் ஷகீல் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணை நிறுவனங்களின் கவனத்தைத் திசைதிருப்ப அந்தக் கும்பல் டெலிகிராம் செயலியில் சிறப்பு குறியீட்டு வார்த்தைகளைப் பயன்படுத்தியது.
வெடிபொருட்களை 'பிரியாணி' என்றும் தாக்குதலை 'தாவத்' என்றும் கூறி அவர்கள் தங்கள் தாக்குதல்களைத் திட்டமிட்டனர்.
டெல்லி, குருகிராம் மற்றும் பரிதாபாத்தின் முக்கிய பகுதிகளில் தாக்குதல்களுக்காக 200 சக்திவாய்ந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
பரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகம் இந்த பயங்கரவாத சதியின் மையமாக மாறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டில் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஜாவேத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த பரிதாபாத் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.
- டெல்லியில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- பெண் டாக்டரின் காரில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தலைநகர் டெல்லி அருகே பரிதாபாத்தில் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், லக்னோவை சேர்ந்த டாக்டர் ஷஹீனா ஷாஹித் என்ற பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் ஷஹீனா பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெண்கள் பிரிவுக்கு ஆள்சேர்ப்பு மற்றும் தலைமை பொறுப்பை வகித்தவர் என தெரிய வந்தது.
ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசாரின் சகோதரி சாடியா அசாரின் தலைமையில் செயல்படும் பிரிவுக்கு ஷஹீனா தலைமை தாங்கியதும், பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மருத்துவர் முஜம்மில் கணாய் என்பவருடன் ஷஹீனா நெருங்கிய தொடர்பு வைத்ததும் தெரியவந்தது.
- ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் பயங்கரவாதத் தலைமையகங்கள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.
பஹாவல்பூரில் இந்தியத் தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரவுஃப் அசார் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
IC-814 விமான கடத்தல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவன் அப்துல் ரவுஃப் அசார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரான அசார், 2001 நாடாளுமன்றத் தாக்குதல் முதல் 2019 புல்வாமா குண்டுவெடிப்பு வரை பல வழக்குகளில் தேடப்பட்டவர்.
- காந்தஹாரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட பின்னர் இந்திய அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட 3 பயங்கரவாதிகளில் மசூத் அசாரும் ஒருவர்.
இந்தியாவின் மிகவும் தேடப்படும் பாகிஸ்தானிய பயங்கரவாதி மசூத் அசாரின் கோட்டையாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் கருதப்படுகிறது.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான அசார், 2001 நாடாளுமன்றத் தாக்குதல் முதல் 2019 புல்வாமா குண்டுவெடிப்பு வரை பல வழக்குகளில் நமது அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பஹவல்பூரில் மசூத்துக்கு 2 வீடுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்று உஸ்மான்-ஓ-அலி மசூதிக்கு அருகில் அமைந்துள்ளது.
மசூதின் 2-வது வீடும் முதல் வீட்டிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஜாமியா மசூதி என்ற மசூதிக்கு அடுத்ததாக அமைந்துள்ளது.
மேலும், பஹவல்பூரில் பயங்கரவாத அமைப்புக்கு 4 பயிற்சி மையங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹவல்பூரில் பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் மற்றும் விமானப்படை தளம் உள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் உள்ளது.
1999-ம் ஆண்டு காந்தஹாரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட பின்னர் இந்திய அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட 3 பயங்கரவாதிகளில் மசூத் அசாரும் ஒருவர். அவர் பாகிஸ்தானுக்குச் சென்று ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பைத் தொடங்கினார்.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கு, பதான்கோட் விமானப்படைத் தளத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் 2019-ம் ஆண்டு தெற்கு காஷ்மீரில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல் ஆகியவற்றிலும் மசூத் அசார் மிகவும் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். இதனால் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் பஹவல்பூரை குறி வைத்து தாக்கியுள்ளது.
- லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஸ்-இ-முகமது அமைப்புக்கு இந்தியா தடை.
- இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து புதிய பயங்கரவாத முகாமை அமைத்துள்ளதாக ரகசிய தகவல்.
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருநாட்டு எல்லை வழியாக பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பங்கரவாதிகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபடுவதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்தியாவுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. நேற்றிரவு பாரமுல்லாவில் வாகனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு வீரர்கள் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில்தான் பாகிஸ்தானில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பின்லேடன் வகித்து வந்த அபோதாபாத்தில் பயங்கரவாத மையம் செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இந்திய அரசு லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஸ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புக்கு தடைவிதித்துள்ளது.
இந்த அமைப்புகள் இணைந்து அபோதாபாத்தில், பாகிஸ்தான் ராணுவம் கேம்பஸ் பகுதிக்குள் பயிற்சி முகாமை உருவாக்கியுள்ளதாக புலனாய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த முகாம் பக்கத்தில் பாகிஸ்தான் ராணுவ முகாமின் கதவு உள்ளதால், வெளியில் இருந்து பயங்கரவாத பயிற்சி மையத்தை ராணுவத்தின் அனுமதி இல்லாமல் எளிதில் அணுக முடியாது எனவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் புலானாய்வுத்துறையான ஐ.எஸ்.ஐ.-யின் அதிகாரி ஒருவர் அந்த முகாமின் மேற்பார்வையாளராக உள்ளார் என நம்பப்படுகிறது, இந்த முகாமில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கையாள்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தெரிகிறது.
அபோதாபாத்தில் பின்லேடன் பாதுகாப்பான ஒரு வீட்டை வளாகத்திற்குள் அமைத்து செயல்பட்டு வந்தார். அமெரிக்க ராணுவம் அவரை தேடிவந்த நிலையில், 2011-ம் ஆண்டு சுட்டுக்கொலை செய்தது. பாகிஸ்தான் அந்த இடத்தை 2012-ல் இடித்தது.
பயிற்சி முகாம் பின்லேடன் பாதுகாப்பாக வாழ்ந்து வந்த வீட்டின் இடிபாட்டிற்கு மேல் கட்டப்பட்டதா? எனத் தெளிவாக தெரியவில்லை. இந்த முகாம் ஹபீஸ் சயீத் (லஷ்கர்), சயத் சலாஹுதீன் (ஹிஸ்புல்), மசூத் அசார் (ஜெய்ஷ்) ஆகியோரால் மிகப்பெரிய அளவில் இயக்கப்பட்டு வருகிறது.

சயத் சலாஹுதீன்
இந்த மூன்று பேரும் இந்தியாவின் பயங்கரவாத தடுப்பு அமைப்பான என்.ஐ.ஏ.-வின் மிகவும் தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளனர்.
இந்த முகாமின் முக்கிய நோக்கம் மூன்று அமைக்களுக்கும் ஆட்களை சேர்ப்பதுதான். கடந்த சில தினங்களாக ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த முகாம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வரும் நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத குழுவான தெரீக் லபைக் யா முஸ்லிம் பல்வேறு மாவட்டங்களில் தீவிர சோதகை்குப்பிறகு கலைக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ- முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் (50). இந்தியாவில் தற்கொலை தாக்குதல்கள் நடக்க காரணமாக இருந்தவன். 2001-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தாக்குதல், 2005-ம் ஆண்டு நடைபெற்ற அயோத்தியா தாக்குதல் மற்றும் 2016-ம் ஆண்டு பதன்கோட் விமான படை தளம் தாக்குதல்களில் தொடர்புடையவன்.
தற்போது இவன் முதுகு தண்டுவடம் மற்றும் சிறுநீரக கோளாறினால் அவதிப்பட்டு வருகிறான். உயிருக்கு ஆபத்தான நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் அவன் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் தங்கி கடந்த 1½ ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறான்.
எனவே இவனது சகோதரர்கள் ரயூப் அஸ்கர், ஆதார் இப்ராகீம் ஆகியோர் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை பிளவுபடுத்தி நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் இந்த இயக்கம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
மசூத் அசார் உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக கிடப்பதை இந்திய உளவுத்துறை உறுதி செய்துள்ளது. ஆனால் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளால் இதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் இவனை பாகிஸ்தானில் உள்ள பகவல் பூரிலோ வேறு எங்குமோ காண முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.
மசூத்அசார் கைது செய்யப்பட்டு இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, பயங்கரவாதிகள் விமானத்தை காந்தகாருக்கு கடத்தி அதில் இருந்த 814 பயணிகளை பணய கைதிகளாக வைத்தனர். பின்னர் மசூர் அசார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை மீட்டு சென்றனர். இவனை சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது. அதை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. #JeM #MasoodAzhar






