ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் போலீஸ், ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.அமெரிக்கத் தயாரிப்பான M4 கார்பைன் ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதி என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Published on

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற என்கவுண்டரில் பாகிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

கதுவா மாவட்டத்தின் பர்ஹேதர் பகுதியில் பயங்கவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஜம்மு காஷ்மீர் போலீஸ், ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.

இதன்போது என்கவுண்டர் நடந்துள்ளது. கொல்லப்பட்டவர் பாகிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து அமெரிக்கத் தயாரிப்பான M4 கார்பைன் ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் இன்னும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com