என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india pakistan"

    • இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
    • பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கிரிக்கெட் போட்டியின்போது டாஸ் நிகழ்வில் இரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்வது வழக்கமானது. இதே போல போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்கள்.

    பகல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களிடம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியின்போது கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

    மேலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், அந்நாட்டு அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மோஷின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையையும் வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்துவிட்டார்.

    இந்த சர்ச்சை முடிந்த பிறகு இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பைக்காக இன்று மோதுகிறார்கள். இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

    இன்றைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    டாஸ் முடிவிற்கு பிறகு, இரு நாட்டு கேப்டன்களும் பரஸ்பரமாக கை குலுக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இந்தியா- பாகிஸ்தான் கேப்டன்கள் இருவரும் மீண்டும் கை குலுக்கலை தவிர்த்து கடந்து சென்றனர்.

    • நாளைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    • இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

    கிரிக்கெட் போட்டியின்போது டாஸ் நிகழ்வில் இரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்வது வழக்கமானது. இதே போல போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்கள்.

    பகல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களிடம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியின்போது கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

    மேலும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், அந்நாட்டு அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மோஷின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையையும் வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்துவிட்டார்.

    இந்த சர்ச்சை முடிந்த பிறகு இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பைக்காக நாளை மோதுகிறார்கள். இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

    நாளைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பேச்சு வார்த்தையின்போது ஐ.சி.சி.யிடம் இந்த நிபந்தனையும் பாகிஸ்தான் முன்வைத்ததாக தகவல் வெளியானது. இதை ஐ.சி.சி. நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    • ஒரு கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
    • இரு தரப்பிலும் சேர்த்து சுமார் 10 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்

    2025 மே மாதம் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் மோதலைத் தனது வரி அச்சுறுத்தல் மூலம் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்றுடன் 80-வது முறையாக தெரிவித்துள்ளார்.

    பாக்ஸ் பிசினஸ்ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய டிரம்ப், "நீங்கள் போரை நிறுத்தவில்லை என்றால், உங்கள் மீது மிக அதிக வரி விதிக்கப்படும் என்று இரு நாடுகளையும் அச்சுறுத்தியே அமைதி ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு முழுமையான அணுஆயுதப் போர் மூளும் அபாயம் இருந்ததாகவும், தனது தலையீட்டால் ஒரு கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இந்த மோதலின் போது இரு தரப்பிலும் சேர்த்து சுமார் 10 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்

    ஏப்ரல் 22, 2025 இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

    மே 7 ஆம் தேதி இதற்குப் பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. பதிலுக்குப் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு மே 10 அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    மோதலைத் தணிக்க எந்த ஒரு மூன்றாவது நாட்டின் தலையீடும் இல்லை என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. 

    • சூப்பர் சிக்ஸ் சுற்று நாளையுடன் முடிகிறது.
    • பாகிஸ்தான் வீழ்த்தினால் 8 புள்ளியுடன் தகுதி பெறும்.

    16-வது ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.

    இதில் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. கடந்த 23-ந்தேதி 'லீக்' ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் ஜப்பான், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, தான்சானியா ஆகிய 4 நாடுகள் வெளி யேற்றப்பட்டது. 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு 12 நாடுகள் தகுதி பெற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டன.

    குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    குரூப் 1 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், ஆப்கானிஸ்தான் 2-வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன.

    குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளிகள் பெற்று அரைஇறுதிக்கு முன்னேறிவிட்டது. 2-வது அணி எது என்பது நாளை தெரியும்.

    சூப்பர் சிக்ஸ் சுற்று நாளையுடன் முடிகிறது. புல வாயோவில் நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவில் 2-வதாக அரை இறுதிக்கு நுழையும் அணி எது என்பது தெரியவரும்.

    இந்திய அணி 6 புள்ளியுடன் இருக்கிறது. பாகிஸ்தான் வீழ்த்தினால் 8 புள்ளியுடன் தகுதி பெறும். பாகிஸ்தான் 4 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி வெற்றி பெற்றால் இரு அணிகளும் சமபுள்ளியை பெறும். ரன் ரேட் அடிப்படையில் ஒரு நாடு தகுதி பெறும். பாகிஸ் தானை விட இந்தியா ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது.

    ஆயுஸ் மாத்ரே தலைமையிலான அணி பாகிஸ்தானை தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்திய அணி இந்த தொடரில் தோல்வியை தழுவவில்லை. 'லீக்' சுற்றில் அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வங்காள தேசத்தை 18 ரன் வித்தியா சத்திலும், நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும் 'சூப்பர் 8' சுற்றில் ஜிம்பாப் வேயை 204 ரன் வித்தியா சத்திலும் தோற்கடித்தது.

    பாகிஸ்தான் அணி 'லீக்' சுற்றில் ஸ்காட்லாந்து (6 விக் கெட்), ஜிம்பாப்வே (8 விக் கெட்) வென்றது. இங்கிலாந்திடம் 36 ரன்னில் தோற்றது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் நியூசி லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    • கலிதா ஜியாவின் இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
    • 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறை.

    வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டாக்கா சென்றார்.

    அங்கு பாகிஸ்தான் தேசிய அவையின் சபாநாயகர் அயாஸ் சாதிக்கைச் சந்தித்துப் பேசினார். கலிதா ஜியாவின் இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

    கடந்த ஏப்ரலில் காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்திற்குப் பிறகு, இரு நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

    இந்தச் சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, இது வெறும் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று கூறியுள்ளது.

    இத்தகைய பலதரப்பு நிகழ்வுகளில் சந்திப்பதும், வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதும் இயல்பான ஒன்று என்றும், இது முறையான ராஜதந்திரப் பேச்சுவார்த்தை அல்ல என்றும் தெரிவித்துள்ளது.  

    • சீனாவின் பீஜிங்கில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
    • இதில் பேசிய சீன வெளியுறவு மந்திரி, இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்தோம் என்றார்.

    பீஜிங்:

    பீஜிங்கில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யீ, கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றமான சூழலின்போது தாங்கள் மத்தியஸ்தம் செய்ததாகக் குறிப்பிட்டார்.

    சர்வதேச அளவில் மோதல்களைத் தீர்ப்பதிலும், நீடித்த அமைதியைக் கட்டியெழுப்புவதிலும் சீனா நியாயமான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

    ஏற்கனவே, இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறிவரும் நிலையில் சீன மந்திரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலி படங்களை உருவாக்கி போலி சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பரப்பி வருகிறது.
    • கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்டங்களை சீனா பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகிறது.

    கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹ்லகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டனர்.

    பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மோதல் மே 9 அன்று அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்தியாவை குறிவைத்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அமெரிக்க காங்கிரஸ் நிபுணர் குழு தனது ஆண்டறிகையில் தெரிவித்துள்ளது.

    அறிக்கைப்படி, சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலி படங்களை உருவாக்கி போலி சமூக ஊடகக் கணக்குகள் மூலம் தங்கள் ஏவுகணைகள் இந்தியாவிடம் இருக்கும் பிரான்சின் ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி வருகிறது.

    இதற்குப் பின்னால் ஒரு உத்தி இருப்பதாகவும், இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் உலகளவில் ரஃபேல் போர் விமானங்கள் மீதான நம்பிக்கையை சேதப்படுத்துவதாகவும் அறிக்கை நம்புகிறது.

    அதே நேரத்தில், சீனா தனது சொந்த J-35 போர் விமானங்களுக்கான தேவையை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்டங்களை சீனா பயன்படுத்திக் கொள்ள முயன்று வருவதாக அறிக்கை தெரிவித்துள்ளது. நேரடி இராணுவ மோதல் இல்லாமல் புவிசார் அரசியல் விவகாரங்களில் செல்வாக்கு செலுத்த சீனா உத்திகளை உருவாக்கி வருவதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.  

    • இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக இருந்தன.
    • அமெரிக்காவில் இருந்து 93 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

     கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹ்லகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டனர்.

    பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மோதல் மே 9 அன்று அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை தானே ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

    இந்நிலையில் 60வது முறையாக டிரம்ப், வரி விதிப்பேன் என மிரட்டி இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கலந்து கொண்ட அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் பேசிய டிரம்ப், "மோதல்களை தீர்ப்பதில் நான் ஒரு நிபுணர். இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக இருந்தன.

    நீங்கள் போருக்குச் செல்லலாம், ஆனால் இரு நாடுகளுக்கும் 350 சதவீத வரிகளை விதிப்பேன் என்று நான் சொன்னேன். உங்களுடன் அமெரிக்கா இனி எந்த வர்த்தகமும் செய்யாது என சொன்னேன்.

    நீங்கள் ஒருவருக்கு ஒருவர் அணு ஆயுதத்தால் தாக்கி மில்லியன் கணக்கான மக்களை கொன்று, அந்த அணு ஆயுத தூசு லாஸ் ஏஞ்சல்ஸ் மேல் படிய நான் அனுமதிக்கப்போவதில்லை என்று சொன்னேன்.

    350 சதவீத வரி விதிக்க எல்லாம் தயாராக இருந்தது. எந்த அதிபரும் போர்களை நிறுத்த வரிகளை பயன்படுத்தியதில்லை. ஆனால் நான் நிறுத்திய 8 போர்களில் 5 போர்களை இதன்மூலமே நிறுத்தினேன்" என்று கூறினார்.

    போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறிய கருத்தை பாகிஸ்தான் ஆமோதித்த நிலையில் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து 93 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இடையே நான்கு நாள் நீண்ட எல்லை மோதல் மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.
    • ஒரு பெரிய போர் தவிர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்த்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.

    மே 7 ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு நாள் நீண்ட எல்லை மோதல் மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் நேற்று அஜர்பைஜான் நாட்டு தலைநகர் பாகுவில் நடைபெற்ற அணிவகுப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணிச்சலான மற்றும் தீர்க்கமான தலைமையுடன், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு தெற்காசியாவில் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய போர் தவிர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன" என்றார்.

    முன்னதாக வர்த்தகத்தை நிறுத்துவேன் என மிரட்டி இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 முறைக்கும் மேல் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. 

    • நான் முடிவுக்குக் கொண்டு வந்த எட்டு போர்களில், ஐந்து அல்லது ஆறு போர்கள் வரி விதிப்புகளால் முடிவுக்கு வந்தன.
    • 24 மணி நேரத்திற்குள் நான் போரை முடித்து வைத்தேன்.

    மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

    இதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அவர் விதித்திருந்தார். வர்த்தக பதட்டங்களை தவிர்க்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்தியா ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துவிட்டதாக டிரம்ப் கூறி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்தியா உடனான நமது பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கின்றன.

    மோடி எனது நண்பர், நல்ல மனிதர். ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அவர் நிறுத்திவிட்டார் என்பது நல்ல விஷயம்.

    என்னை அவர் இந்தியாவிற்கு வருமாறு அழைத்தார். நான் அடுத்த வருடம் இந்தியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், நான் முடிவுக்குக் கொண்டு வந்த எட்டு போர்களில், ஐந்து அல்லது ஆறு போர்கள் வரி விதிப்புகளால் முடிவுக்கு வந்தன.

    அணு ஆயுத நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 'நீங்கள் சண்டையை நிறுத்தாவிட்டால், நான் உங்கள் மீது வரி விதிப்பேன்' என்று கூறி  24 மணி நேரத்திற்குள் நான் போரை முடித்து வைத்தேன்.

    இந்த போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. வரிவிதிப்பு இல்லையென்றால், அந்த போரை என்னால் நிறுத்தியிருக்க முடியாது" என்று தெரிவித்தார். 

    • காங்கோ மற்றும் ருவாண்டா இடையேயான போர்கள் உட்பட எட்டு நீண்டகால போர்களை நான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன்.
    • வரிகள் இல்லாமல், அது ஒருபோதும் நடந்திருக்காது

    இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை நிறுத்தியதாக டிரம்ப் பேசியதன் எண்ணிக்கை ஏற்கனவே 50ஐ கடந்தது.

    இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

    நேற்று, மியாமியில் நடந்த அமெரிக்க வணிக மன்றத்தில் உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், "கடந்த எட்டு மாதங்களில், கொசோவோ மற்றும் செர்பியா, காங்கோ மற்றும் ருவாண்டா இடையேயான போர்கள் உட்பட எட்டு நீண்டகால போர்களை நான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போரை நான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன்.

    நான் சில செய்தித்தாள்களின் முதல் பக்கங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அணு ஆயுதம் ஏந்திய நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்குப் போவதை நான் அறிந்தேன். அந்த நேரத்தில், ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. எட்டாவது விமானமும் மோசமாக சேதமடைந்தது. அடிப்படையில் எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    பின்னர் நீங்கள் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்யாவிட்டால், நான் உங்களுடன் வியாபாரம் செய்ய மாட்டேன் என்று மிரட்டினேன்" என்று தெரிவித்தார்.

    அச்சுறுத்தலுக்கு பிறகு, மறுநாள் இரு நாடுகளும் சமாதானம் செய்து கொண்டதாக தனக்கு அழைப்பு வந்தது என்றும் வரிகள் இல்லாமல், அது ஒருபோதும் நடந்திருக்காது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

    இருப்பினும் எந்த நாட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை. டிரம்ப் கூற்றை இந்தியா ஏற்கனவே மறுத்துள்ளது குறிப்பிடத்க்கது. 

    • நான் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறேன்.
    • இந்த போரில் 7 புத்தம் புதிய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

    இதில் பேசிய டிரம்ப், "நான் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறேன்.

    உங்களுக்குத் தெரியும், பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு. எங்களுக்கு ஒரு சிறந்த உறவு இருக்கிறது. பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர். ஆனால் சற்று கடினமானவர்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் போரின்போது, நீங்கள் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கினால், நாங்கள் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்று கூறினேன்.

    நான் சொன்ன இரண்டு நாட்களுக்குள், மோடியும் ஷெரீப்பும் என்னிடம் பேசி போரை நிறுத்தினர்" என்று தெரிவித்தார்.

    இதன்மூலம் இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை நிறுத்தியதாக டிரம்ப் பேசியதன் எண்ணிக்கை 50ஐ கடனத்துள்ளது.

    மேலும் இந்த போரில் 7 புத்தம் புதிய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அது இந்தியா உடையதா, பாகிஸ்தான் உடையதா என்று குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×