என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india pakistan"

    • காங்கோ மற்றும் ருவாண்டா இடையேயான போர்கள் உட்பட எட்டு நீண்டகால போர்களை நான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன்.
    • வரிகள் இல்லாமல், அது ஒருபோதும் நடந்திருக்காது

    இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை நிறுத்தியதாக டிரம்ப் பேசியதன் எண்ணிக்கை ஏற்கனவே 50ஐ கடந்தது.

    இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

    நேற்று, மியாமியில் நடந்த அமெரிக்க வணிக மன்றத்தில் உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், "கடந்த எட்டு மாதங்களில், கொசோவோ மற்றும் செர்பியா, காங்கோ மற்றும் ருவாண்டா இடையேயான போர்கள் உட்பட எட்டு நீண்டகால போர்களை நான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போரை நான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன்.

    நான் சில செய்தித்தாள்களின் முதல் பக்கங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அணு ஆயுதம் ஏந்திய நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்குப் போவதை நான் அறிந்தேன். அந்த நேரத்தில், ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. எட்டாவது விமானமும் மோசமாக சேதமடைந்தது. அடிப்படையில் எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    பின்னர் நீங்கள் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்யாவிட்டால், நான் உங்களுடன் வியாபாரம் செய்ய மாட்டேன் என்று மிரட்டினேன்" என்று தெரிவித்தார்.

    அச்சுறுத்தலுக்கு பிறகு, மறுநாள் இரு நாடுகளும் சமாதானம் செய்து கொண்டதாக தனக்கு அழைப்பு வந்தது என்றும் வரிகள் இல்லாமல், அது ஒருபோதும் நடந்திருக்காது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

    இருப்பினும் எந்த நாட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை. டிரம்ப் கூற்றை இந்தியா ஏற்கனவே மறுத்துள்ளது குறிப்பிடத்க்கது. 

    • நான் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறேன்.
    • இந்த போரில் 7 புத்தம் புதிய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

    இதில் பேசிய டிரம்ப், "நான் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறேன்.

    உங்களுக்குத் தெரியும், பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு. எங்களுக்கு ஒரு சிறந்த உறவு இருக்கிறது. பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர். ஆனால் சற்று கடினமானவர்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் போரின்போது, நீங்கள் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கினால், நாங்கள் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்று கூறினேன்.

    நான் சொன்ன இரண்டு நாட்களுக்குள், மோடியும் ஷெரீப்பும் என்னிடம் பேசி போரை நிறுத்தினர்" என்று தெரிவித்தார்.

    இதன்மூலம் இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை நிறுத்தியதாக டிரம்ப் பேசியதன் எண்ணிக்கை 50ஐ கடனத்துள்ளது.

    மேலும் இந்த போரில் 7 புத்தம் புதிய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அது இந்தியா உடையதா, பாகிஸ்தான் உடையதா என்று குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியர்கள் கவலைப்படுவது இயல்பானதுதான் என்று நாங்கள் அறிவோம்.
    • அவர்கள் நாங்கள் கூட உறவிலில்லாத சில நாடுகளுடன் நல்ல உறவு வைத்துள்ளனர்.

    பாகிஸ்தானுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கம் இந்தியாவுடனான உறவுகளை பாதிக்காது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த பதட்டங்கள் காரணமாக, இந்தியர்கள் கவலைப்படுவது இயல்பானதுதான் என்று நாங்கள் அறிவோம்.

    ஆனால், நாங்கள் பல நாடுகளுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாகிஸ்தானுடன் எங்கள் மூலோபாய உறவை விரிவுபடுத்த ஒரு வாய்ப்பு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

    இந்தியர்கள் இராஜதந்திர விஷயங்களில் மிகவும் முதிர்ச்சியுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் நாங்கள் கூட உறவிலில்லாத சில நாடுகளுடன் நல்ல உறவு வைத்துள்ளனர். எனவே, நாங்கள் பாகிஸ்தானுடன் என்ன செய்தாலும், நட்பு நாடான இந்தியாவுடனான உறவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது" என்று தெரிவித்தார்.

    மேலும் இந்தியா தங்கள் கச்சா எண்ணெய் தேவைகளுக்கு ரஷியாவை மட்டுமே அதிகம் சார்த்திருக்காமல் மற்ற நாடுகளின் சப்ளையர்களிடமிருந்தும் வாங்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

    இந்தியா மீது அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் பற்றி பேசிய அவர், எங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால், எப்போதுமே இந்தியா எங்கள் கூட்டாளி என்பதில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறினார். 

    முன்னதாக ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா முற்றிலும் நிறுத்திவிட்டதாக டிரம்ப் நேற்று மீண்டும்  தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • காஷ்மீர் மக்கள் தாங்கள் எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்று ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்ய வேண்டும் என்று கோரினார்.
    • பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் ஒரு நாடு பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருப்பது வருந்தத்தக்கது

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் ஒடுக்குமுறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐநா சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

    நேற்று ஐ.நா.வின் 80வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பி. ஹரிஷ் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள்ளும் ஜனநாயக மரபுகளின்படியும் தங்கள் அடிப்படை உரிமைகளைப் அனுபவிக்கின்றனர். இருப்பினும், இந்த அரசியலமைப்பு, ஜனநாயகம் உள்ளிட்ட கருத்துக்கள் பாகிஸ்தானுக்கு முற்றிலும் பரிச்சயமற்றவை என்பதை நாங்கள் அறிவோம்.

    பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாகிஸ்தானின் இராணுவ ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறை மற்றும் வளங்களை சுரண்டுவதற்கு எதிராக அங்குள்ள மக்கள் வெளிப்படையாக கிளர்ச்சி செய்து வருகின்றனர்" என்று தெரிவித்தார். 

    கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, 1948 ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, காஷ்மீர் மக்கள் தாங்கள் எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்று ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்ய பாகிஸ்தான் பிரதிநிதி கோரினார்.

    இதற்கு பதிலளித்த இந்திய பிரதிநிதி ஹரிஷ், அந்த தீர்மானத்தின்படி பொது வாக்கெடுப்பு நடப்பதற்கு முன், பாகிஸ்தான் முதலில் காஷ்மீரின் தான் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து தன்னுடைய இராணுவத்தையும், பொதுமக்களையும் முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும்.

    ஆனால் அந்த நிபந்தனையை இதுவரை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை. எனவே பொது வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் பற்றி இப்போது பேசுவது காலாவதியாகிவிட்டது." என்று தெரிவித்தார்.

    முன்னதாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று டெல்லியில் நடந்த ஐ.நா.வின் 80வது ஆண்டு நினைவு முத்திரை வெளியீட்டு விழாவில் பேசுகையில், பயங்கரவாதத்தை ஊக்குவித்து பாதுகாக்கும் ஒரு நாடு பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருப்பது வருந்தத்தக்கது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   

    • 200 சதவீதம் வரிவிதிப்பதாக மிரட்டி இந்தியா - பாகிஸ்தான் சண்டையை தானே நிறுத்தியதாக பேசியிருந்தார்.
    • டிரம்ப் தான் விடுத்ததாகக் கூறப்படும் வரி அச்சுறுத்தல்கள் குறித்து குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை வழங்கியுள்ளார்.

    எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்காவில் இருந்து கிளம்பிய டிரம்ப் முன்னதாக இஸ்ரேல் சென்றார்.

    எகிப்துக்கு புறப்படும் முன் செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், 200 சதவீதம் வரிவிதிப்பதாக மிரட்டி 24 மணி நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் சண்டையை தானே நிறுத்தியதாக பேசியிருந்தார்.

    இதற்கிடையே இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்புக்கு டிரம்ப்-ஐ பாராட்டி பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் டிரம்ப் பேசிய வீடியோவை பகிர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த முறை இந்தியாவை ஆபரேஷன் சிந்தூரை திடீரென நிறுத்த கட்டாயப்படுத்த வரிகளைப் பயன்படுத்தியதாக டிரம்ப் கூறுவது 51வது முறையாகும். டிரம்ப் தான் விடுத்ததாகக் கூறப்படும் வரி அச்சுறுத்தல்கள் குறித்து குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை வழங்கியுள்ளார்.

    காசா தொடர்பாக அவர் மேற்கொண்ட அமைதி முயற்சிகளைப் பாராட்டும்போது நமது பிரதமர் அதேவேளையில் இதுகுறித்து தொடர்ந்து அமைதியாக இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.  

    • அமெரிக்க போர் விவகாரங்கள் துறை கடந்த செப்டம்பர் 30 அன்று பல்வேறு நாடுகளுடனான ஆயுத ஒப்பந்தங்களின் திருத்தப் பட்டியலை வெளியிட்டது.
    • வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர AMRAAMS ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு விற்கும் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.

    பாகிஸ்தானுக்கு ஆயுத விற்பனை செய்ய புதிய ஒப்பந்தம் போடப்பட்டகாக பரவிய செய்தியை அமெரிக்க அரசு மறுத்துள்ளது.

    புதிய ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை பராமரிப்பதற்கு மட்டுமே என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தி உள்ளது.

    அமெரிக்க போர் விவகாரங்கள் துறை கடந்த செப்டம்பர் 30 அன்று பல்வேறு நாடுகளுடனான ஆயுத ஒப்பந்தங்களின் திருத்தப் பட்டியலை வெளியிட்டது.

    அதில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தங்களின் வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர AMRAAMS ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு விற்கும் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.  

    இந்நிலையில் இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செப்டம்பர் 30, 2025 வெளியிடப்பட்ட அறிவிப்பு பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கான பாதுகாப்பு மற்றும் உதிரிபாகங்களுக்கான ஏற்கனவே உள்ள இராணுவ விற்பனை ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதைக் குறிக்கிறது.

    தவறான ஊடக அறிக்கைகளுக்கு மாறாக, இந்த குறிப்பிடப்பட்ட ஒப்பந்த திருத்தத்தில் எந்தப் பகுதியும் புதிய மேம்பட்ட வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர ஏவுகணைகளையும் (AMRAAMS) வழங்குவதற்கானது அல்ல என்பதை நிர்வாகம் வலியுறுத்த விரும்புகிறது.

    இந்த ஒப்பந்த திருத்தம், பாகிஸ்தானின் தற்போதைய திறன்களில் எதையும் மேம்படுத்த அல்ல" என்று தெரிவித்துள்ளது.   

    • தனது சொந்த குடிமக்கள் மீது குண்டுவீசி திட்டமிட்ட இனப்படுகொலையைச் செய்யும் அதே நாடு இது.
    • உலகம் அதன் இரட்டைத் தரத்தை உணர்ந்திருந்தாலும், இப்போது அது தன்னை 'மனித உரிமைகளின் பாதுகாவலர்' என்று சித்தரிக்க முயற்சிக்கிறது.

    ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் "பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நேற்று விவாதம் நடைபெற்றது.

    இதில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி சைமா சலீம், காஷ்மீரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பல தசாப்தங்களாக போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

    ஆனால் இதை மறுத்து பேசிய இந்தியாவுக்கான நிரந்தர ஐநா பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பாகிஸ்தான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

    அவர் பேசியதாவது, "ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டிற்கு எதிராக பொய்களைப் பரப்பும் பாகிஸ்தானிடமிருந்து தவறான அறிக்கைகளைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

    1971 ஆம் ஆண்டு வங்கதேச போரில் ஆபரேஷன் சர்ச்லைட்டின் போது 400,000 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய உத்தரவிட்ட அதே நாடு இதுதான்.

    தனது சொந்த குடிமக்கள் மீது குண்டுவீசி திட்டமிட்ட இனப்படுகொலையைச் செய்யும் அதே நாடு இது.

    உலகம் அதன் இரட்டைத் தரத்தை உணர்ந்திருந்தாலும், இப்போது அது தன்னை 'மனித உரிமைகளின் பாதுகாவலர்' என்று சித்தரிக்க முயற்சிக்கிறது.

    பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவின் சாதனை எந்த விதத்திலும் குறைபாடற்ற முன்மாதிரியான ஒன்றாகும்" என்று தெரிவித்தார்.   

    • அவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.
    • இந்தியாவுக்கு கொண்டு வர பிசிசிஐ முயன்று வருகிறது.

    கடந்த செப்டம்பர் 28 அன்று துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோஹ்சின் நக்வி கோப்பையை வழங்க முன்வந்தார். ஆனால் அவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.

    மற்றொரு நிகழ்ச்சி வைத்து அதில் தனது கைகளால்தான் கோப்பையை வழங்குவேன் என்றுகூறிய நக்வி, கோப்பையை தன்னுடன் எடுத்துச் சென்றார்.

    கோப்பை தற்போது ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் வசம் உள்ளது. அதை இந்தியாவுக்கு கொண்டு வர பிசிசிஐ முயன்று வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு கோப்பையை வழங்க மறுத்ததற்காக மோஹ்சின் நக்விக்கு பாகிஸ்தான் அரசு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிந்து மற்றும் கராச்சி கூடைப்பந்து தலைவர் குலாம் அப்பாஸ் ஜமால், கராச்சியில் நடக்க உள்ள ஒரு விருந்து விழாவில் நக்விக்கு பதக்கம் வழங்கப்படும் என்று கூறியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

    • குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக்.
    • இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

    குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக் (Sir Creek) ஆகும்.

    இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அணமைக் காலமாக பாகிஸ்தான் இந்தப் பகுதியில் ராணுவக் கட்டமைப்புகளை அதிகப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    இந்நிலையில் சர் க்ரீக்பகுதியில் பாகிஸ்தான் எந்த வகையிலும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால், சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

    குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் தசரா கொண்டாட்டத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், "சர் க்ரீக் பகுதியில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏதேனும் தவறான முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அதற்கு வரலாறு மற்றும் புவியியலை மாற்றும் அளவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.

    இந்தப் பிரச்சினை குறித்துப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா பலமுறை முயன்றபோதும், பாகிஸ்தானின் ஒத்துழைக்கவில்லை.

    1965 போரில் இந்திய இராணுவம் லாகூர் வரை சென்றது. இப்போது 2025-ல், கராச்சிக்கு செல்லும் ஒரு வழி இந்த க்ரீக் வழியாகவும் செல்கிறது என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூரின் அனைத்து இலக்குகளையும் இந்தியா வெற்றிகரமாக அடைந்ததாகவும், பாகிஸ்தானுடன் போரைத் தொடங்குவது இந்தியாவின் நோக்கம் அல்ல என்றும் அவர் கூறினார்.  

    • சூப்பர்-4 சுற்று போட்டி யின்போது பாகிஸ்தான் வீரர்கள் பர்ஹான், ஹாரிஸ் ரவூப் ஆகியோர் ஆத்திர மூட்டும் சைகைகளை காண் பித்தனர்.
    • சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ரவூப் ஆகியோருக்கு அபராதம் விதித்தது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் தொடங்கும் இறுதிப்போட்டி யில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இத்தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் மற்றும் சூப்பர்-4 சுற்றில் மோதி இருந்தன. இந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

    இத்தொடரில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டங்க ளில் சர்ச்கைகள் எழுந்தது. லீக் போட்டியின்போது ஆட்டம் முடிந்தபிறகு பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் புகார் செய்தது.

    மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக் கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி) புகார் செய்தது.

    சூப்பர்-4 சுற்று போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் பர்ஹான், ஹாரிஸ் ரவூப் ஆகியோர் ஆத்திர மூட்டும் சைகைகளை காண்பித்தனர்.

    இதுதொடர்பாக சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார் செய்தது. இப்புகார் களை விசாரித்த ஐ.சி.சி, சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ரவூப் ஆகியோருக்கு அபராதம் விதித்தது. பர்ஹானுக்கு எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டது. இந்த சர்ச்கைகளுக்கு மத்தியில் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டனுடன் கோப்பை புகைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா மறுத்துவிட்டது.

    இறுதிப் போட்டிக்கு முன் அதில் மோதும் அணிகளின் கேப்டன்கள் கோப்பையுடன் புகைப்ப டத்துக்கு போஸ் கொடுப் பார்கள். இது பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெறவிருந்தது. ஆனால் அதில் பங்கேற்க இந்தியா மறுத்து விட்டதாக கூறப்படு கிறது.

    இதனால் கோப்பை புகைப்பட நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்திய அணி நேற்று ஒரு நாள் விடுமுறை எடுத்து எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

    • பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம்.
    • இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நான்தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அதை திட்டவட்டமாக இந்தியா மறுத்தது.

    பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம். இதில் 3-வது நாடு தலையீடு இல்லை என்று இந்தியா தெரிவித்தது. ஆனாலும் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து கூறி வருகிறார்.

    இந்தநிலையில் போரை நிறுத்த அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமெரிக்க வெளியுறவு செயலர் ரூபியோ மூலம் எனக்கு மே 11-ந்தேதி போர் நிறுத்தம் குறித்த தகவல் வந்தது. இந்தியாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் ஒரு பொதுவான இடத்தில் விரைவில் ஒரு பேச்சுவார்த்தை இருக்கும் என்று எனக்கு சொல்லப்பட்டது. ஜூலை 25-ந் தேதி வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை நான் சந்தித்தேன்.

    அப்போது மோதல் தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சு வார்த்தையின் நிலை குறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் இது ஒரு இருதரப்பு பிரச்சினை என்று இந்தியா கூறியதாக ரூபியோ பதிலளித்தார்.

    இந்தியா எந்த 3-ம் தரப்பு தலையீட்டையும் திட்டவட்டமாக நிராகரித்தது. பாகிஸ்தானுடனான பிரச்சினைகள் இருதரப்பு அடிப்படையில் கண்டிப்பாக கையாளப்பட வேண்டும் என்று இந்தியா எப்போதும் கூறி வருகிறது.

    இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. இதில் பயங்கரவாதம், வர்த்தகம், பொருளாதாரம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்த கருத்து மூலம் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்பது மேலும் உறுதியாகி உள்ளது.

    • இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
    • 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கிய நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்திய அணியின் பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

    பாகிஸ்தான் அணி 10வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்பிற்கு 49 ரன்களை எடுத்து திணறியது.

    இதில், முதல் பந்திலேயே சயீம் அயூப் ஆட்டத்தை இழந்தார். தொடர்ந்து, முகமது ஹாரீஸ் 6 ரன்களிலும், ஃபக்கார் சமான் 45 ரன்களிலும், சல்மான் அகா 49 ரன்களிலும், ஹசான் நவாஸ் 5 ரன்களிலும், முகமது நவாஸ் 6 ரன்களிலும், சஹீ்ப்சதா ஃபர்ஹான் 40 ரன்களிலும், ஃபஹீம் அஷ்ரப் 11 ரன்களிலும், சுபியாஜ் முக்கீம் 10 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர்.

    குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து, பும்ரா, அக்சார் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    இந்நிலையில், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 127 ரன்களை பாகிஸ்தான் எடுத்தது.

    இதன்மூலம், 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலங்கை நோக்கி இந்தியா பேட்டி செய்ய களமிறங்குகிறது. 

    ×