search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Pakistan"

    • ஆசிய கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது.
    • எந்த நேரத்திலும் வெற்றியை பறிக்கும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சில தரமான பந்துவீச்சாளர்கள் அவர்களிடம் இருக்கின்றனர்.

    கொழும்பு:

    இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் புதன்கிழமை தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடரை தொடங்கியது. இதில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர் பார்க்கும் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு உங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.

    இது பற்றி விராட் கோலி கூறியதாவது:-

    அவர்களுடைய பலம் பந்துவீச்சு என்று நான் கருதுகிறேன். குறிப்பாக போட்டியின் எந்த நேரத்திலும் வெற்றியை பறிக்கும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சில தரமான பந்துவீச்சாளர்கள் அவர்களிடம் இருக்கின்றனர். எனவே நல்ல நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்ட அவர்களை எதிர்கொள்வதற்கு நீங்கள் உங்களுடைய சிறந்த செயல்பாடுகளில் இருக்க வேண்டும்.

    நான் என்னுடைய ஆட்டத்தை எப்படி முன்னேற்றலாம் என்பதை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அது தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிற்சியிலும் ஒவ்வொரு வருடமும் நீண்ட காலமாக என்னுடைய அணிக்கு சிறப்பாக செயல்பட உதவி வருகிறது. நீங்கள் ஒரு சிறந்த நிலையை அடைந்த பின் மேற்கொண்டு தொடுவதற்கு எந்த நிர்ணயிக்கப்பட்ட சாதனைகளும் கிடையாது.

    அதனால் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட சூழ்நிலையில் இருந்து எப்படி என்னுடைய அணியை வெற்றி பெற வைக்கலாம் என்பதே என்னுடைய மனநிலையாகும். அதற்காக ஒவ்வொரு நாளும் முன்னேறுவதற்கு நான் பயிற்சிகளை எடுத்து வருகிறேன்.

    என்று கூறியுள்ளார்.

    • இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தவிர நேரடி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை.
    • இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் விளையாட உள்ள போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை தொடரின் மிகப் பெரிய மோதல் என இந்தப் போட்டி குறித்து கேப்ஷன் கொடுக்கப்பட்டு வருகிறது.

    வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளன. குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு விளையாட வேண்டும். புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தத் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்தத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

    இந்தச் சூழலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் விளையாட உள்ள போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

    அதற்கு முன்னதாக ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு இந்திய அணி சென்று விளையாடுவது இயலாத காரியமாக உள்ளது. அதனால், இந்தத் தொடர் வேறு இடத்தில் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

    இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தவிர நேரடி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும் என இந்தியாவின் நிரந்தர குழு ஆலோசகர் காஜல் பட் கூறியுள்ளார்.

    நியூயார்க்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் சமீபத்தில் பேசியது. அப்போது இந்தியா மீது குற்றச்சாட்டுகள் தெரிவித்தது. இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

    இது தொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர குழு ஆலோசகர் காஜல் பட் ஐ.நா.சபையில் பேசியதாவது:-

    இங்கு இந்தியாவின் நிலைப்பாட்டை நான் திட்டவட்டமாக கூற விரும்புகிறேன். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய முழு யூனியன் பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்க முடியாத பகுதியாக எப்போதும் இருந்திருக்கும்.

    இது பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளையும் உள்ளடக்கியது. பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக காலி செய்து வெளியேற வேண்டும்.

    இந்தியாவுக்கு எதிராக தவறான மற்றும் தீங்கிளைக்கும் பிரசாரங்களை பரப்புவதற்கு ஐ.நா. சபை வழங்கிய தளங்களை பாகிஸ்தானின் பிரதிநிதி தவறாக பயன்படுத்துவதும் பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் தனது நாட்டின் சோகமான நிலையில் இருந்து உலகின் கவனத்தை திசை திருப்ப வீணாக முயல்வதும் பாகிஸ்தானுக்கு உகந்தது அல்ல.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானின் பிரதிநிதி சில அர்ப்பமான கருத்துக்களை ஐ.நா.சபையில் தெரிவித்துள்ளார். அதற்கு நான் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும்.

    பாகிஸ்தான் உள்பட அனைத்து நாடுகள்,அண்டை நாடுகளுடனான உறவுகளை இந்தியா விரும்புகிறது. மேலும் சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தின்படி நிலுவையில் உள்ள பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் இரு தரப்பும், அமைதியான முறையில் தீர்க்க உறுதிபூண்டுள்ளது.

    ஆனாலும் பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில் மட்டுமே எந்த அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையும் நடத்த முடியும். அதுபோன்ற சாதகமான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது.

    அதுவரை இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, உதவி செய்வது, தீவிரமாக ஆதரிப்பது போன்ற கொள்கைகளை பாகிஸ்தான் கொண்டுள்ளது என்பதை ஐ.நா. உறுப்பு நாடுகள் அறிந்திருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இதையும் படியுங்கள்...நதி என்றால் இப்படி இருக்கவேண்டும்... டுவிட்டரில் வைரலாகும் புகைப்படம்

    இந்தியாவுடனான எந்த பிரச்சனையையும் போரினால் தீர்த்துவிட முடியாது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி குறிப்பிட்டுள்ளார். #PakistanForeignMinister #warwithIndia #ShahMehmoodQureshi
    நியூயார்க்:

    நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் நாட்டின் புதிய வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி  அமெரிக்கா சென்றுள்ளார்.

    மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அவர் சமீபத்தில் பேட்டியளித்தார்.

    இந்தியாவுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பாக இந்த பேட்டியின்போது கருத்து தெரிவித்த ஷா மெஹ்மூத் குரேஷி , அமைதிக்கான வழியில் இந்தியா ஓரடி முன்னெடுத்து வைத்தால் பாகிஸ்தான் இரண்டடி எடுத்து வைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னர் தெரிவித்திருந்ததை சுட்டிக் காட்டினார்.

    நாங்கள் அமைதிக்கான முதலடியை எடுத்து வைத்தோம். இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இருநாடுகளுமே அணு ஆயுத வலிமைமிக்க நாடுகளாக இருக்கும் நிலையில் பிரச்சனைகளை போரினால் சரிசெய்ய முடியாது.

    போர்முறை என்பது இதில் தீர்வாகாது. பேச்சுவார்த்தை மட்டும்தான் ஒரே தீர்வாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். #PakistanForeignMinister #warwithIndia #ShahMehmoodQureshi 
    இந்திய வீரர்கள் எங்களைவிட திறமையானவர்கள் என ஆசிய கோப்பை போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார். #AsiaCup2018 #INDvPAK
    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    எங்களது பந்து வீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக பந்து வீசினார்கள். தவானின் பேட்டிங் அபாரமாக இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து எங்களது பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:-



    நாங்கள் சிறப்பாகவே ஆடினோம். ஆனால் 20 முதல் 30 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். சில முக்கியமான கேட்ச்களை தவறவிட்டோம். இது மாதிரி கேட்சுகளை தவறவிட்டால் வெற்றி பெறுவது கடினம்.

    நாங்கள் தொடக்கத்லேயே சில விக்கெட்டுகளை வீழ்த்த நினைத்தோம். இது தொடர்பாக பந்து வீச்சாளர்களிடம் பேசினேன். ஆனால் தவான் ரோகித் போன்ற வீரர்களை ‘அவுட்’ செய்ய முடியவில்லை. அவர்கள் திறமைசாலிகள்.

    எங்களைவிட இந்திய வீரர்கள் திறமையானவர்கள் அடுத்த ஆட்டம் எங்களுக்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். இதனால் அதில் சிறப்பாக செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதுவது பாகிஸ்தானா? வங்காளதேசமா? என்பது இரு அணிகள் நாளை மோதும் ஆட்டத்தின் முடிவு மூலம் தெரிய வரும்.

    இந்திய அணி நாளைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. #AsiaCup2018 #INDvPAK
    முன் அனுபவம் இல்லாத பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடனான உறவை புதுப்பிப்பதில் அவசரம் காட்டியதால் நிலைமை மேலும் மோசமடைந்ததாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. #ImranKhan #HasteinMending #FenceswithIndia
    இஸ்லாமாபாத்:

    இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச இந்தியா சம்மதித்தது.

    இதற்கிடையே, காஷ்மீரில் மூன்று போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த படுகொலைகள் பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.
     
    மேற்கண்ட இரு சம்பவங்களையடுத்து, இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது என பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இந்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இந்தியாவின் நடவடிக்கை குறித்து நேற்று கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், ‘இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்கும் எனது முயற்சிக்கு இந்தியா அளித்த அடாவடியான மற்றும் எதிர்மறை அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், பெரிய படத்தை பார்க்கும் பார்வையை பெறாத சிறிய மனிதர்கள், பெரிய அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளதை எனது வாழ்க்கையில் பார்த்தே வந்துள்ளேன்’ என குறிப்பிட்டிருந்தார்.

    இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், ‘‘இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மாற்றத்தையும் இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியையும் ஏற்படுத்த உதவக் கூடிய நல்லதொரு பேச்சுவார்த்தையை மீண்டும் ஒரு முறை இந்தியா வீணடித்து விட்டது. 

    இந்தியாவின் இந்த நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு அதிருப்தி அளிக்கிறது. பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட 24 மணி நேரத்தில் அதை ரத்து செய்து இருப்பதற்கு இந்தியா கூறும் காரணமும் ஏற்புடையது அல்ல’’ என்று தெரிவித்தது.

    இந்நிலையில், முன் அனுபவம் இல்லாத பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடனான உறவை புதுப்பிப்பதில் அவசரம்  காட்டியதால்தான் நிலைமை மேலும் மோசமடைந்ததாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    ‘இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு இணக்கமாக செயல்பட்டால் மோடிக்கு அது பாதகமாக அமையும் என்பதால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு உள்ளது.  இது முழுக்க முழுக்க அந்நாட்டின் அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என பாகிஸ்தான் நாளிதழான டான் செய்தி வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? என இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

    முன் அனுபவம் இல்லாத பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அவசரமான நகர்வு என அந்நாட்டு இருபெரிய எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) ஆகியவை விமர்சனம் செய்துள்ளன. 

    இந்த "ராஜதந்திர தோல்வி"க்கு இம்ரான்கான்தான் பொறுப்பு என்று கூறியுள்ள அக்கட்சிகள், பேச்சுவார்த்தையை நாடுவதற்கு முன்னதாக  அதற்கான வீட்டுப் பாடத்தை ஒழுங்காக முடித்த பின்னர் இந்த நடவடிக்கையை அவர் தேர்வு செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளன. 

    நாமாக முன்வந்து சமாதானத்துக்கு கைகொடுப்பது என்பது நமது பலவீனமாக மற்றவர்கள் புரிந்து கொள்ள கூடாது. இந்தியாவுடன் சமாதானம் செய்துகொள்ள பாகிஸ்தான் அவசரப்படுவதுப் போன்ற ஒரு தோற்றத்தை தனது முதிர்ச்சி பெறாத நடவடிக்கையின் மூலம் இம்ரான் கான் உருவாக்கி விட்டதாக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான காவ்ஜாமொஹம்மத் ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார். #ImranKhan #HasteinMending #FenceswithIndia 
    இன்றைய ஆசிய கோப்பை போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி அந்த அணியை மீண்டும் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக கேப்டன் ரோகித்சர்மா கூறியுள்ளார். #AsiaCup2018 #RohitSharma
    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதன் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    ‘சூப்பர் 4’ சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். நேற்று முன்தினம் ‘குரூப் 4’ சுற்று போட்டிகள் தொடங்கியது.

    தொடக்க ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை போராடி தோற்கடித்தது.

    3-வது ‘லீக்‘ ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி ‘லீக்‘ ஆட்டத்தில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் வென்று இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் இருக்கிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் வேட்கையில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    இன்றைய ஆட்டம் குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-


    ஆசிய கோப்பை போட்டியில் எங்களது செயல்பாடு நன்றாக இருக்கிறது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளோம். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக நன்றாக ஆடி இருக்கிறோம். வங்காள தேசத்துக்கு எதிராகவும் மிகவும் சிறப்பாக ஆடினோம்.

    இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி அந்த அணியை மீண்டும் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அபுதாயில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோற்று இருந்தது. இதனால் இந்தப் போட்டியில் தோற்கும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

    ஆப்கானிஸ்தான் அணி ‘லீக்‘ ஆட்டத்தில் வங்காள தேசத்தை 136 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. #AsiaCup2018 #INDvPAK #RohitSharma
    இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதற்கு ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி மெஹ்பூபா முப்தி வரவேற்றுள்ளார். #MehboobaMufti
    ஜம்மு:

    இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் அனில் சவுகானும், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் சகிர் ஷம்சத் மிர்சாவும் நேற்று தொலைபேசியில் ‘ஹாட்லைன்’ வசதி மூலமாக பேசினர். எல்லை கட்டுப்பாட்டு கோடு, சர்வதேச எல்லை ஆகிய இடங்களில் உள்ள நிலவரம் பற்றி ஆய்வு செய்தனர்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது, 2003-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிப்பது என்றும், இருதரப்பிலும் போர் நிறுத்த மீறலில் ஈடுபடுவது இல்லை என்றும் உடன்பாடு ஏற்பட்டது.

    இந்தநிலையில் இது குறித்து காஷ்மீர் முதல்-மந்திரி மெஹ்பூபா முப்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

    ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இந்த செய்தி ஆறுதலாக இருக்கும். இந்த போர் நிறுத்தம் தொடர்ந்து நீடிக்கும் என நம்புகிறேன். எல்லையில் அமைதி நிலவுவது தான் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்படுவதற்கான முதல் அடி என குறிப்பிட்டுள்ளார். #MehboobaMufti #India #Pakistan
    ×