என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய வீரர்"

    • இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
    • பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கிரிக்கெட் போட்டியின்போது டாஸ் நிகழ்வில் இரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்வது வழக்கமானது. இதே போல போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்கள்.

    பகல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களிடம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியின்போது கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

    மேலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், அந்நாட்டு அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மோஷின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையையும் வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்துவிட்டார்.

    இந்த சர்ச்சை முடிந்த பிறகு இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பைக்காக இன்று மோதுகிறார்கள். இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

    இன்றைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    டாஸ் முடிவிற்கு பிறகு, இரு நாட்டு கேப்டன்களும் பரஸ்பரமாக கை குலுக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இந்தியா- பாகிஸ்தான் கேப்டன்கள் இருவரும் மீண்டும் கை குலுக்கலை தவிர்த்து கடந்து சென்றனர்.

    • மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மா 12-21, 13-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் லின் சுன்யிடம் அடங்கினார்.
    • போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 19-21, 13-21 என்ற நேர்செட்டில் 6-ம் நிலை வீரரான கோடை நரோகாவிடம் (ஜப்பான்) தோற்று நடையை கட்டினார். மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மா 12-21, 13-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் லின் சுன்யிடம் அடங்கினார்.

    பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப் 17-21, 12-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் யு போ பாயிடம் தோல்வி கண்டார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமீத் ரெட்டி-சிக்கி ரெட்டி இணை 12-21, 14-21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஜியான் ஜென் பாங்-வெய் யாஜின் ஜோடியிடம் பணிந்தது. அத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    ×