என் மலர்
நீங்கள் தேடியது "20 ஓவர் உலக கோப்பை"
- இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
- பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
கிரிக்கெட் போட்டியின்போது டாஸ் நிகழ்வில் இரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்வது வழக்கமானது. இதே போல போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்கள்.
பகல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களிடம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியின்போது கைகுலுக்க மறுத்துவிட்டனர்.
மேலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், அந்நாட்டு அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மோஷின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையையும் வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்துவிட்டார்.
இந்த சர்ச்சை முடிந்த பிறகு இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பைக்காக இன்று மோதுகிறார்கள். இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
இன்றைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
டாஸ் முடிவிற்கு பிறகு, இரு நாட்டு கேப்டன்களும் பரஸ்பரமாக கை குலுக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்தியா- பாகிஸ்தான் கேப்டன்கள் இருவரும் மீண்டும் கை குலுக்கலை தவிர்த்து கடந்து சென்றனர்.
- நாளைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
- இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
கிரிக்கெட் போட்டியின்போது டாஸ் நிகழ்வில் இரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்வது வழக்கமானது. இதே போல போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்கள்.
பகல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களிடம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியின்போது கைகுலுக்க மறுத்துவிட்டனர்.
மேலும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், அந்நாட்டு அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மோஷின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையையும் வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்துவிட்டார்.
இந்த சர்ச்சை முடிந்த பிறகு இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பைக்காக நாளை மோதுகிறார்கள். இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
நாளைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பேச்சு வார்த்தையின்போது ஐ.சி.சி.யிடம் இந்த நிபந்தனையும் பாகிஸ்தான் முன்வைத்ததாக தகவல் வெளியானது. இதை ஐ.சி.சி. நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
- 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் வங்கதேசத்தை நீக்கி ஸ்காட்லாந்தை ஐசிசி சேர்த்தது.
- பாகிஸ்தான் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்து இருந்தது
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடக்கிறது.
பாதுகாப்பு காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாட இந்தியா செல்லமாட்டோம் என்று வங்கதேசம் அறிவித்தது. இதனால் வங்கதேசத்தை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்தை சேர்த்து ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முடிவு எடுத்தது.
இதற்கிடையே வங்காளதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்து இருந்தது. இந்நிலையில் வங்காள தேசத்துக்கு ஆதரவாக உலக கோப்பையில் பங்கேற்பது குறித்து சந்தேகத்தை கிளப்பி அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக தனிமைப்படுத்தப்படும் என்று எச்சரித்தது.
இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடருக்கு சல்மான் அகா தலைமையில் 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்தது. பாகிஸ்தான் அணி அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
2026 டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:
சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் ஆசம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், கவாஜா முகமது நஃபே, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சாஹிப்சாதா, ஷாஹிம்ஹானி ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.
- பிரதமர் தற்போது பாகிஸ்தானில் இல்லை.
- அரசு எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடக்கிறது.
பாதுகாப்பு காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாட இந்தியா செல்லமாட்டோம் என்று வங்காளதேசம் அறிவித்தது. இதனால் வங்காளதேசத்தை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்தை சேர்த்து ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முடிவு எடுத்தது.
இதற்கிடையே வங்காளதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்து இருந்தது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஷின் நக்வி கூறியதாவது:-
இந்தியாவுக்கு சாதகமாக ஐ.சி.சி. செயல்படுகிறது. இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. வங்காள தேசத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பது குறித்த நிலைப்பாடு அரசின் அறிவுறுத்தலின்படியே இருக்கும். பிரதமர் தற்போது பாகிஸ்தானில் இல்லை. அவர் திரும்பியதும் எங்களின் இறுதி முடிவு தெரிய வரும். அரசு எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். ஐ.சி.சி.-ன் கீழ் நாங்கள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் வங்காள தேசத்துக்கு ஆதரவாக உலக கோப்பையில் பங்கேற்பது குறித்து சந்தேகத்தை கிளப்பி அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக தனிமைப்படுத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் விலக முடிவு செய்தால் வரலாறு காணாத தடையை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
இரு தரப்பு தொடர், ஆசிய கோப்பையில் ஒதுக்கி வைத்தல், பி.எஸ்.எல். போட்டிகளுக்கு தடையில்லா சான்றிதழ் இல்லை, சர்வதேச போட்டிகள் இல்லை என பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடலாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், கடுமையான வருவாய் இழப்பும் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் விளையாடாவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று எச்சரித்தது.
- இலங்கையில்தான் தாங்கள் விளையாடுவோம் என்று 2-வது முறையாக வங்காளதேசம் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது.
வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் கிரிக்கெட்டிலும் எதிரொலித்து வருகிறது.
ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்தது. இந்தியாவில் விளையாடாவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று எச்சரித்தது. ஆனாலும் இலங்கையில்தான் தாங்கள் விளையாடுவோம் என்று 2-வது முறையாக வங்காளதேசம் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. தங்களது முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக ஐ.சி.சி. குழு இன்று வங்காளதேசம் செல்கிறது. 2 பேர் கொண்ட குழு வங்காளதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இது தொடர்பாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறும்போது,
'ஐ.சி.சி. குழு வருவது உண்மைதான். அனைத்துவித சூழல் குறித்து விவாதிக்கப்படும். வங்காளதேச அரசின் சார்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது உள்ளூர் போட்டியில் தனது செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளார்.
- இந்தியாவுக்காக டி.ஆர்.எஸ். முடிவை எடுப்பதில் டோனிக்கு பிறகு ஜிதேஷ்தான் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தார்.
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் கேப்டனாக இருக்கும் சுப்மன்கில் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
20 ஓவர் அணியில் துணை கேப்டனாக இருக்கும் அவர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தேர்வுக் குழு துணிச்சலான முடிவு எடுத்து அவரை நீக்கி உள்ளது. உள்ளூர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார். இதேப் போல ரிங்குசிங்குக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் தேர்வில் எந்த தவறும் இல்லை என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இஷான்கிஷன் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருவர் சிறப்பாக செயல்படுவதை பார்த்தால் அவரை தேர்ந்து எடுக்க வேண்டும். இஷான் கிஷன் ஏற்கனவே அணியில் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்து உள்ளார்.
தற்போது உள்ளூர் போட்டியில் தனது செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 2 ஆண்டுகளாக அணிக்கு வெளியே இருந்தார். சையத் முஸ்தாக் அலி கோப்பையை ஜார்க்கண்ட் அணி கைப்பற்ற இஷான் கிஷன் முக்கிய பங்கு வகித்தார்.
ஜிதேஷ்சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை. இந்தியாவுக்காக டி.ஆர்.எஸ். முடிவை எடுப்பதில் டோனிக்கு பிறகு ஜிதேஷ்தான் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தார். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். இளம் வீரரான அவர் மீண்டும் உள்ளூர் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
- அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- போட்டிகள் நடைபெறும் சில மைதானங்களை ஐ.சி.சி. குழு சமீபத்தில் ஆய்வு செய்தது.
துபாய்:
9-வது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 10 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் போட்டிகள் நடைபெறும் சில மைதானங்களை ஐ.சி.சி. குழு சமீபத்தில் ஆய்வு செய்தது.
- நாம் நீண்ட காலம் விளையாடி முன்னணி வீரர்களாக வலம் வரும்போது வயதைப் பற்றி பேசத் தொடங்குவார்கள்.
- கோலி, ரோகித் சர்மா இந்தியாவிற்கு சிறந்த வீரர்களாக உள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
நாம் நீண்ட காலம் விளையாடி முன்னணி வீரர்களாக வலம் வரும்போது வயதைப் பற்றி பேசத் தொடங்குவார்கள். உங்களது பார்மை மறந்து விடுவார்கள். கோலி, ரோகித் சர்மா இந்தியாவிற்கு சிறந்த வீரர்களாக உள்ளனர். அவர்கள் விரும்பும் போது ஓய்வு பெற தகுதியானவர்கள்.
எப்போது நினைக்கிறார்களோ அப்போது அவர்கள் தங்களின் ஓய்வு குறித்து முடிவெடுக்கலாம். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் நிறைய இளம் வீரர்கள் விளையாட நான் விரும்புகிறேன். அது மூத்த வீரர்களின் வேலைப் பளுவை குறைக்கும். இந்த 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு நிறைய இளம் வீரர்கள் அணிக்குள் வந்து அடுத்த 20 ஓவர் உலகக் கோப்பைக்கு அணியில் இடம் பெறுவதைப் பார்க்க விரும்புகிறேன். 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு கோலி, ரோகித் 20 ஓவர் அணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
- வடக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்து இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று தெரிவித்து உள்ளது.
வடக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை டிரினிடாட் பிரதமரும் வெளிப்படுத்தி உள்ளார். இதை தொடர்ந்து போட்டி நடைபெறும் நகரங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
- இந்திய அணி இரண்டு குழுவாக அமெரிக்கா செல்கிறது. ஒரு பகுதி வீரர்கள் இன்று செல்கிறார்கள்.
- ஐ.பி.எல். இறுதிப்போட்டி முடிந்த பிறகு மற்றொரு குழு செல்கிறது.
9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
'ஏ'பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந்தேதி எதிர் கொள்கிறது. பாகிஸ்தானுடன் 9-ந்தேதியும் அமெரிக்காவுடன் 12-ந்தேதியும் கனடாவுடன் 15-ந்தேதியும் மோதுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டிகள் நடக்கிறது.
உலக கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா-கனடா (இந்திய நேரப்படி ஜூன் 2, காலை 6 மணி) மோதுகின்றன.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறது.
இந்திய அணி இரண்டு குழுவாக அமெரிக்கா செல்கிறது. ஒரு பகுதி வீரர்கள் இன்று செல்கிறார்கள். ஐ.பி.எல். இறுதிப்போட்டி முடிந்த பிறகு மற்றொரு குழு செல்கிறது.
கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரிஷப்பாண்ட், அர்ஷ்திப் சிங் உள்ளிட்ட வீரர்கள் இன்று நியூயார்க் புறப்பட்டு செல்கிறார்கள்.
சஞ்சு சாம்சன், ஜெய்ஷ் வால், அவேஷ்கான், யசுவேந்திர சாஹல், ரிங்கு சிங், உள்ளிட்டோர் வருகிற 27-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்கள்.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்கள் விவரம்:-
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஜெய்ஷ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
மாற்று வீரர்களாக சுப்மன்கில், ரிங்குசிங், கலீல் அகமது, அவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- கோப்பையை வென்றால் தரவரிசையில் மேம்பாடு அடைந்து ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள்.
- நிதி நெருக்கடியை குறைத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு நன்மை கிடைக்கும்.
கயானா:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இன்று காலை தொடங்கியது.
முதல் ஆட்டத்தில் அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவை (ஏ பிரிவு) தோற்கடித்தது.
2-வது போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று நடக்கி றது. கயானாவில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத் தில் 'சி' பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன.
2 முறை 20 ஓவர் உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் உலக கோப்பையை வெல்வது வெஸ்ட் இண்டீசுக்கு நிதி நெருக்கடியை குறைத்து பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த அணி கேப்டன் போவெல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
உலக கோப்பையை 3-வது முறையாக வெல்வது வெஸ்ட் இண்டீசுக்கு நல்லதாக இருக்கும். சொந்த மண்ணில் கோப்பையை வென்றால் சிறப்பாக இருக்கும். கோப்பையை வென்றால் எங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளிடம் நினைவு கூர்வோம்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் நிதி நிலைப்பாடு குறித்து நாங்கள் அறிவோம். உலக கோப்பையை வெல்வது நிதி ரீதியாக எங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். நிதி நெருக்கடியை குறைத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு நன்மை கிடைக்கும்.
மேலும் கோப்பையை வென்றால் தரவரிசையில் மேம்பாடு அடைந்து ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள்.
இவ்வாறு போவெல் கூறியுள்ளார்.
- தரமற்று இருப்பதாக முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
- விரும்பியபடி இல்லை என்பதை ஐ.சி.சி அங்கீகரிக்கிறது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆடுகளம் உருவாக்கப்பட்டது.
இந்த செயற்கை ஆடு களத்தில் பந்து கணிக்க முடியாத அளவுக்கு சீரற்ற முறையில் பவுன்ஸ் ஆகிறது. இது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஏற்றதல்ல என்றும் தரமற்று இருப்பதாகவும் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இவ் விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறும்போது, 'நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இது வரை பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் நாம் அனைவரும் விரும்பியபடி இல்லை என்பதை ஐ.சி.சி அங்கீகரிக்கிறது. உலகத் தரம் வாய்ந்த மைதானக் குழு, நிலைமையை சரி செய்யவும், மீதமுள்ள போட்டிகளுக்கு சிறந்த மேற்பரப்புகளை வழங்கவும் கடினமாக உழைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.






