என் மலர்
நீங்கள் தேடியது "வங்காளதேசம்"
- டாக்காவில் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 23ம் தேதி கலிதா ஜியா அனுமதிக்கப்பட்டார்.
- கலிதா ஜியாவுக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
டாக்கா:
அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 23ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே நீரழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகள், இதய கோளாறு போன்ற உடல்நலப் பிரச்சனைகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கலிதா ஜியாவை மேல் சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்ல உள்ளோம் என அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.
அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலிதா ஜியாவின் உடல்நலப் பாதிப்பு அக்கட்சிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.
கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
- மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மிகப்பெரிய அளவில் நடந்த இந்த போராட்டம் வன் முறையாக மாறியது. இதில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டது. பிரதமர் இல்லமும் குறிவைத்து தாக்கப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் தற்போது இந்தியாவில் இருந்து வருகிறார்.
வங்காளதேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்று ஆட்சி நடத்தி வருகிறார். இந்தநிலையில் அவர் மீது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த குற்றசாட்டினை ஷேக் ஹசீனா மறுத்து வந்தார்.
இந்நிலையில், ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்து.
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்றவயில் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
- நியாயமான முறையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
- வங்காளதேசம் ஜனநாயக நாடாக மாற வேண்டும்.
வங்காளதேசத்தில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் ரகசிய இடத்தில் தங்கி உள்ளார்.
இதுவரை மவுனம் காத்து வந்த அவர் முதல் முறையாக ஒரு செய்தி நிறுவனத்திற்கு மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-
வங்காளதேசத்தில் நடந்த நிகழ்வுகள் ஜனநாயகத்தின் துயரமான அழிவு ஆகும். நியாயமான முறையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் மிரட்டல் மூலம் வன்முறையை தூண்டிவிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்ற ஜனநாயக விரோத சக்திகள் சதி செய்தது.
நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் எனது குடும்ப பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதை தடுப்பதற்காகவும், நான் நாட்டைவிட்டு வெளியேறுவது தான் ஒரே வழி என நினைத்தேன். ஆனால் நாட்டை விட்டு நான் வெளியேறியது வேதனை அளிப்பதாக உள்ளது.
நமது பன்முக கலாச்சாரம் தாக்கப்பட்டதையும், பொருளாதார வளர்ச்சிக்காக நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் அர்த்தமற்ற முறையில் தலைகீழாக மாற்றப்பட்டதையும் பார்க்கும்போது கடினமாக இருக்கிறது.
வங்காளதேசம் ஜனநாயக நாடாக மாற வேண்டும் என்பது தான் அங்குள்ள மக்களின் விருப்பமாகும். எனது தந்தையின் வரலாற்று சிறப்புமிக்க இல்லத்தை அழித்தது ஒரு காட்டு மிராண்டி தனமான முயற்சி ஆகும்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் நமது விடுதலை போரின் உணர்வை அழிக்க விரும்புகிறார்கள். இது நமது எதிர்காலத்திற்காக தங்கள் உயிரை கொடுத்தவர்களின் நினைவுகளை அவமானப்படுத்துவது போன்றதாகும்.
வங்கதேச மக்கள் தங்கள் பாரம்பரியத்தை ஒரு போதும் மறக்க அனுமதிக்கமாட்டார்கள். முகமது யூனுஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறை சம்பவங்களால் வேதனை அடைந்துள்ளேன்.
என்னை வரவேற்று தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இந்திய மக்களுக்கு மிகவும் நன்றி உள்ளராக இருப்பேன்
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நாளையுடன் ‘லீக்’ ஆட்டம் முடிகிறது.
- 11 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (50 ஓவர்) 8 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளன. இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவை வாய்ப்பை இழந்து வெளியேறின.
இந்தூரில் இன்று நடைபெறும் 26-வது போட்டியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும். நாளையுடன் 'லீக்' ஆட்டம் முடிகிறது. நாளை 2 போட்டிகள் நடக்கிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து (விசாகப்பட்டினம்) அணிகளும், மாலை 3 மணிக்கு தொடங்கும் 2-வது போட்டியில் இந்தியா-வங்காளதேசம் அணிகளும் (மும்பை) மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் இலங்கை (59 ரன்), பாகிஸ்தானை (88 ரன்) வீழ்த்தியது. அதன்பிறகு தொடர்ச்சியாக தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா (3 விக்கெட்), இங்கிலாந்து (4 ரன்), அணிகளிடம் தோற்றது. 6-வது போட்டியில் நியூசிலாந்தை 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
நாளைய ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய மகளிர் அணி உள்ளது.
- ரசாயனக் கிடங்கு மற்றும் ஒரு ஆடைத்தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
டாக்கா:
வங்கதேசம் தலைநகர் டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷியல்பாரி பகுதியில் உள்ள ஒரு ரசாயனக் கிடங்கு மற்றும் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அருகிலுள்ள ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து நச்சுப் புகையை சுவாசித்ததால் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.
- வங்காளதேச அணி லீக் சுற்றில் ஹாங்காங், ஆப்கானிஸ்தான் அணிகளை வென்றது.
- இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் 'சூப்பர்4' சுற்றுக்கு வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
இந்த நிலையில் துபாயில் இன்று நடக்கும் 'சூப்பர்4' சுற்றின் 4-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.
நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக வலம் வரும் இந்தியா, லீக் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஓமனை அடுத்தடுத்து பந்தாடியது. தொடர்ந்து சூப்பர்4 சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை மீண்டும் தோற்கடித்தது.
இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் வர்மா (74 ரன்), சுப்மன் கில் (47 ரன்) அதிரடியால் பாகிஸ்தான் நிர்ணயித்த 172 ரன் இலக்கை 7 பந்துகள் மீதம் வைத்து இந்தியா எளிதாக எட்டியது. மேலும் பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சனும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்ரவர்த்தியும், ஆல்-ரவுண்டராக ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேலும் வலுசேர்க்கின்றனர். ஆனால் பீல்டிங் தான் சற்று கவலைக்குரியதாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் 4 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்ட இந்திய வீரர்கள் பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
2024-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து 35 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் இந்தியா 32-ல் வெற்றி பெற்றுள்ளது. 3-ல் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி, இறுதிப்போட்டியை உறுதி செய்யும் வேட்கையுடன் காத்திருக்கிறது.
வங்காளதேச அணி லீக் சுற்றில் ஹாங்காங், ஆப்கானிஸ்தான் அணிகளை வென்றது. இலங்கையிடம் தோல்வி கண்டது. சூப்பர் 4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி பழிதீர்த்தது. அந்த நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் களம் காணும். அந்த அணியில் பேட்டிங்கில் தவ்ஹித் ஹிரிடாய், கேப்டன் லிட்டான் தாஸ், சைப் ஹசன், தன்சித் ஹசனும், பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரகுமான், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசனும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்திய அணியோடு ஒப்பிடுகையில் வங்காளதேச அணியின் வலிமை குறைவானது என்றாலும், சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமான மைதானத்தில் அந்த அணி எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வல்லமை கொண்டதாகும். இந்தியாவுக்கு எதிராக ஆடும் போது வங்காளதேச அணியினர் ஆக்ரோஷத்துடனும், போர்க்குணத்துடனும் போராடுவார்கள். இருப்பினும் கடந்த கால வரலாற்றையும், தற்போதைய இந்திய அணியின் வளமான செயல்பாட்டையும் பார்க்கையில் வங்காளதேசம் சரிசமமான சவால் அளிப்பது கடினம் தான்.
இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் இந்தியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.
மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி குறித்து வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் நேற்று கூறுகையில், 'இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி கிடையாது. ஒவ்வொரு அணிக்கும் இந்தியாவை வீழ்த்தும் திறன் உள்ளது. ஆட்டத்தின் முடிவு அன்றைய நாளில் 3½ மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்தே அமையும். இதற்கு முன்பு இந்திய அணி என்ன செய்தது என்பது விஷயமல்ல. எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இந்திய அணி தவறிழைக்கும் வகையில் நெருக்கடி கொடுத்து, அதன் மூலம் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறோம்.
20 ஓவர் கிரிக்கெட்டில் 'நம்பர் ஒன்' அணியாக விளங்கும் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு எப்போதும் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். அதற்குள் நாங்களும் பயணித்து, அந்த தருணத்தை அனுபவித்து எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்' என்றார்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
வங்காளதேசம்: சைப் ஹசன், தன்சித் ஹசன், லிட்டான் தாஸ் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடாய், ஷமிம் ஹூசைன், ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன், முஸ்தாபிஜூர் ரகுமான்.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- வங்காளதேசத்துக்கு தீக்காய சிறப்பு டாக்டர்கள், நர்சுக்கள் குழுவை அனுப்புவதாக இந்தியா அறிவித்துள்ளது.
- நோயாளிகளின் நிலையை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் இந்தியாவில் சிறப்பு சிகிச்சைக்கான பரிந்துரையை செய்வார்கள்.
வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உத்தரா பகுதியில் பள்ளி மீது ராணுவத்தின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 31 பேர் பலியானார்கள். 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வங்காளதேசத்துக்கு தீக்காய சிறப்பு டாக்டர்கள், நர்சுக்கள் குழுவை அனுப்புவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, "தேவையான மருத்துவ உதவியுடன் தீக்காய சிறப்பு டாக்டர்கள் மற்றும் நர்சுக்கள் குழு விரைவில் டாக்காவிற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளது.
நோயாளிகளின் நிலையை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் இந்தியாவில் சிறப்பு சிகிச்சைக்கான பரிந்துரையை செய்வார்கள்.
அவர்களின் ஆரம்ப மதிப்பீடு மற்றும் சிகிச்சையைப் பொறுத்து கூடுதல் மருத்துவக் குழுக்களும் அனுப்பப்படலாம்" என்று தெரிவித்துள்ளது.
- மே 11-ந் தேதி மட்டும் நீங்கள் (இந்தியா) தாக்கியிருந்தால் நாங்களும் பதிலுக்கு உங்களை தாக்கியிருப்போம்.
- ஷேக் ஹசீனா அரசு இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் நல்ல நட்புடன் செயல்பட்டு வந்தது.
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.
இதனால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்தது நாங்கள்தான் என்று லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தெரிவித்துள்ளது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய ஜமாத்-உத்-தாவா அமைப்பைச் சேர்ந்த சைபுல்லா கசூரி மற்றும் ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட முசம்மில் ஹாஷ்மி ஆகியோர் ரஹீம் யார் கான் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது முசம்மில் ஹாஷ்மி பேசும் போது, "கடந்த ஆண்டு வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்து நாங்கள் தோற்கடித்தோம். இது இந்திய பிரதமர் மோடிக்கு நன்கு தெரியும்.
மே 11-ந் தேதி மட்டும் நீங்கள் (இந்தியா) தாக்கியிருந்தால் நாங்களும் பதிலுக்கு உங்களை தாக்கியிருப்போம். மே 7-ந்தேதி இரவில் தாக்குதல் நடத்தினீர். ஆனால் மே 10-ந் தேதி நாங்கள் காலை வேளையில் தாக்குதல் நடத்தினோம். நாங்கள் உங்களுக்கு பதிலடி கொடுப்போம். கொடுத்து கொண்டிருக்கிறோம். நீங்கள் போர்க்களத்துக்கு வந்தால் நாங்களும் போர்க்களத்துக்கு வருவோம்" என்றார்.
வங்காளதேசத்தில் இருந்த ஷேக் ஹசீனா அரசு இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் நல்ல நட்புடன் செயல்பட்டு வந்தது. இதற்கிடையே ஷேக் ஹசீனா அரசு கவிழ்க்கப்பட்டது.
இதில் பாகிஸ்தானின் சதி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு நாங்கள்தான் காரணம் என்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.
- இறுதிப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
ஜூனியர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்றது. லீக் சுற்றின் முடிவில் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் வங்காளதேச அணியை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனாக, பெனால்டி ஷூட் அவுட்டில் 3-4 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- சிறந்த கிரிக்கெட் வீரரின் சிறப்பு நினைவு பரிசு என ஹசன் கருத்து
- இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை ஹசன் வென்றார்.
மிர்பூர்
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் வங்காளதேச நட்சத்திர வீரர் மெகிதி ஹசன் சிறப்பாக செயல்பட்டார். ஒருநாள் தொடரில் வங்களாதேசம் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். ஒருநாள் தொடரில் அவர் சராசரியாக 141 ரன்கள் எடுத்ததுடன் 4 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.
இதன் மூலம் ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். டெஸ்ட் தொடரில், மொத்தம் பதினொரு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இந்நிலையில் மெகிதி ஹசனுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தனது ஆட்டோகிராப் போடப்பட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார். விராட் 18 என எழுதப்பட்டிருந்த அந்த ஜெர்சியை பெற்றுக் கொண்ட ஹசன், சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சிறப்பு நினைவு பரிசு என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்
- முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது
- இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை இழக்கும்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட தொடரை இந்திய வீராங்கனைகள் 2-1 எனக் கைப்பற்றினர்.
தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்நிலையில், இந்தியா- வங்காளதேசம் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் வங்காளதேசத்திற்கு இந்திய அணி தகுந்த பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
- வங்காளதேச அணியின் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 89 ரன்களை அடித்தார்.
- இலங்கை அணியில் சரித் அசலங்கா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களை குவித்தார்.
ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் ஆடியது. வங்காளதேச அணியின் துவக்க வீரர்கள் முகமது நைம் மற்றும் தம்சித் ஹாசன் முறையே 16 ரன்கள் மற்றும் டக் அவுட் ஆகி வெளியேறினர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 89 ரன்களை அடித்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக வங்காளதேசம் அணி 42.4 ஓவர்களில் வெறும் 164 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. இலங்கை அணியின் துவக்க வீரர்களான பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணரத்னே முறையே 14 மற்றும் 1 ரன் எடுத்து அவுட் ஆகினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 5 ரன்களுக்கு அவுட் ஆனார். சதீரா சமரவிக்ரமா 54 ரன்களை குவித்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய சரித் அசலங்கா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களை குவித்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதன் மூலம் இலங்கை அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 165 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.






