search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth murder"

    • மோதலில் ஈடுபட்ட அந்த வாலிபர் மாயமாகி இருப்பதால் சந்தேகம் வலுத்து உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பரத்(வயது 17), சத்ரியன்(17), விஷ்வா(17). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவர்.

    இவர்களில் பரத், ஒரகடத்தில் உள்ள ஐ.டி.ஐ.யிலும், சத்ரியன் வாலாஜா பாத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பும் படித்து வந்தனர். விஷ்வா பிளஸ்-2 முடித்து உள்ளார். கடந்த 12-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பரத் உள்பட 3 பேரும் பின்னர் வீடுதிரும்பவில்லை. அவர்களை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    மேலும் இது தொடர்பாக சாலவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் உத்திரமேரூர் அடுத்த காட்டாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட விழுத வாடி கிராமத்தில் உள்ள ஏரியில் பரத், சத்ரியன், விஷ்வா ஆகியோர் பிணமாக மிதந்தனர்.

    தகவல் அறிந்ததும் உத்திரமேரூர் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ், இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் மாரி செல்வம் விசாரணை நடத்தினர். மாணவர்கள் 3 பேரும் எப்படி இறந்தனர் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது.

    அவர்களின் முகம் தீவைத்து எரிக்கப்பட்டு கருகி இருந்தது. மேலும் மாணவர்களின் முழங்கால், காலின் கீழ் பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. மேலும் இறந்து போன மாணவர்கள் அனைவரும் அவர்கள் அணிந்து இருந்த ஆடையுடன் இருந்தனர்.

    அவர்கள் ஏரியில் குளிக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. எனவே மர்ம நபர்கள் மாணவர்கள் 3 பேரையும் கடத்தி எரித்து கொலை செய்து விட்டு உடல்களை ஏரியில் வீசி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. உடல்கள் உப்பிய நிலையில் காணப்படுவதால் அவர்கள் மாயமான 12-ந்தேதியே கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதேபோல் திருட்டு குற்ற வழக்கில் தொடர்புடைய சிறுமையிலூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் மர்மமாக இறந்து போன பரத் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகராறில் கொலை நடந்து உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மோதலில் ஈடுபட்ட அந்த வாலிபர் மாயமாகி இருப்பதால் சந்தேகம் வலுத்து உள்ளது.

    மர்மமாக இறந்து போன 3 மாணவர்களுக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? கடைசியாக செல்போன்களில் யாருடன் பேசினார்கள்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த நண்பருடன் நெருக்கமாக உள்ள ஒருவரை சரவணன் தாக்கியதாக தெரிகிறது.
    • கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    வண்டலூர்:

    உத்திரமேரூர் அடுத்த களியப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சரவணன் (வயது 20). நேற்று இரவு சரவணன் நண்பர்களுடன் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் மதுகுடித்தார். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் சரவணனை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த சரணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே உடன் இருந்த நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் அறிந்ததும் மறைமலை நகர் போலீசார் விரைந்து வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரித்த போது பரபரப்பு தகவல் கிடைத்தது. சரவணன் மற்றொரு நண்பருக்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த நண்பருடன் நெருக்கமாக உள்ள ஒருவரை சரவணன் தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக மதுகுடித்த போது சரவணனை உடன் இருந்த நண்பர்கள் கேட்டு உள்ளனர்.

    அப்போது ஏற்பட்ட மோதலில் சரவணன் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    • நீதிமன்றம் முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் சாட்சிகள் எப்படி சாட்சி சொல்ல வருவார்கள்.
    • என்ன சம்பவத்திற்காக கொலை நடந்தது என்பதை விட கொலை நடந்த இடம் தான் கவலை அளிப்பதாக உள்ளது.

    நெல்லை மாவட்ட நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் பாதுகாப்பு பணியில் கவனக் குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நெல்லை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் ஒரே ஒருநபர் மட்டும் குற்றவாளிகளை பிடிக்க ஆர்வம் காட்டிய நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் என்ற செய்து கொண்டிருந்தனர்.

    என்ன சம்பவத்திற்காக கொலை நடந்தது என்பதை விட கொலை நடந்த இடம் தான் கவலை அளிப்பதாக உள்ளது. நீதிமன்றம் முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் சாட்சிகள் எப்படி சாட்சி சொல்ல வருவார்கள்.

    பணியில் இருக்கும் போலீசார் பணியை விட செல்போனில் மூழ்கி கிடப்பது வேதனையாக உள்ளது. கொலையாளியை பிடித்த சிறப்பு எஸ்ஐ உய்கொண்டானுக்கு நீதிபதிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • ஒரு மாநிலத்தில் அமைதியும், சட்டம் - ஒழுங்கும் நிலவாவிட்டால், அங்கு மக்களால் வாழ முடியாது.
    • தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பது இல்லாமலேயே போய்விட்டது.

    நெல்லை நீதிமன்ற வாசலில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட அறிகையில் கூறப்பட்டுள்ளதாவது,

    திருநெல்வேலி நகரின் மையப் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்ற இளைஞர் பட்டப்பகலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்ற வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களையும் மீறி இந்தப் படுகொலை நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வரும் அனைவரும் தீவிர ஆய்வுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், காவல்துறையின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே வந்தது எப்படி? அப்படியானால், காவல்துறையினர் கவனக்குறைவாக இருந்தார்களா? அல்லது கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே நுழைவதை காவல்துறையினரே கண்டும் காணாமலும் விட்டுவிட்டார்களா? என்ற ஐயங்கள் எழுகின்றன. இவை அனைத்திற்கும் தமிழக காவல்துறையும், அரசும் விளக்கம் அளிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களில் மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை சரமாரியாக வெட்டியது, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது, நீதிமன்றத்திற்குள் நுழைந்து விசாரணைக்கு வந்தவரை படுகொலை செய்தது என கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

    ஒவ்வொரு நிகழ்வின் போதும் முன்பகை காரணமாகவே இத்தகைய நிகழ்வுகள் நடப்பதாகக் கூறி காவல்துறையின் தோல்வியை நியாயப்படுத்தும் வகையில் தான் தமிழக அரசு பதிலளிக்கிறதே தவிர, சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையின் அலட்சிய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

    நெல்லை நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு வந்தவரை கொலை செய்தவர்களை கைது செய்துவிட்டோம் என்று காவல்துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையினர் முன்னிலையில் படுகொலை நடைபெற்றிருக்கிறது. அதைத் தடுக்க தவறிய காவல்துறையினர், கொலை நடந்த பிறகு கொலையாளியைப் பிடிப்பது ஒன்றும் சாதனையல்ல. கொலையைத் தடுக்கத் தவறியது காவல்துறையின் படுதோல்வி. அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

    கடந்த சில நாட்களுக்கு முன் கடலூரில் கடை ஒன்றில் வணிகம் செய்து கொண்டிருந்த அதன் உரிமையாளர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அதற்குக் காரணமானவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டு, 15 நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், அந்த வழக்கிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பது இல்லாமலேயே போய்விட்டது. அது எங்கு போயிருக்கிறது? என்பதுதான் தெரியவில்லை.

    ஒரு மாநிலத்தில் அமைதியும், சட்டம் - ஒழுங்கும் நிலவாவிட்டால், அங்கு மக்களால் வாழ முடியாது. சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத தமிழக ஆட்சியாளர்கள், தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் இருந்து வெளியே வந்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி நடமாடவும் வகை செய்ய வேண்டும்.

    • கோர்ட்டு முன்பு உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • கொலைக்கு பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி என்ற பல்லு மாயாண்டி (வயது 28).

    இவரது தந்தை மணி பால் வியாபாரம் மற்றும் பந்தல் கட்டும் தொழில் செய்து வந்தார். மாயாண்டி தனது தந்தைக்கு உதவி செய்து வந்ததோடு, கூலி வேலைக்கும் சென்று வந்தார்.

    மாயாண்டி மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கில் ஆஜராவதற்காக மாயாண்டி இன்று காலை நெல்லை மாவட்ட நீதிமன்றத்துக்கு தனது தம்பி மாரிச்செல்வத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    இவர்கள் கே.டி.சி. நகர்-திருச்செந்தூர் ரோட்டில் கோர்ட்டு முன்பு வந்தனர். அப்போது காரில் ஒரு மர்மகும்பல் வந்தது. அதில் இருந்து இறங்கிய ஒருவர் மாயாண்டியை நோக்கி அரிவாளால் வெட்டுவதற்காக ஓடி வந்தார்.

    இதைப்பார்த்த மாயாண்டியும், மாரிச்செல்வமும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஆளுக்கொரு திசையில் ஓட்டம் பிடித்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய மேலும் 3 பேர் சேர்ந்து மாயாண்டியை விரட்டினர்.

    அந்த கும்பல் கோர்ட்டு முன்பு மாயாண்டியை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. மாயாண்டியின் கை மணிக்கட்டை துண்டாக்கிய கும்பல், கால் மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டியதோடு தலையையும் சிதைத்தது.

    இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மாயாண்டி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    உடனே கொலையாளிகள் காரில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அங்கு நின்ற ஒரு வக்கீல், ஒரு போலீஸ்காரர் சேர்ந்து, கும்பலில் இருந்த ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். மற்ற கொலையாளிகள் காரில் ஏறி தப்பிச்சென்றனர்.

    கோர்ட்டு முன்பு ஏராளமான வக்கீல்கள், போலீசார் மற்றும் பொது மக்கள் திரண்டிருந்த நிலையில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்துக்கு மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா, கிழக்கு மண்டல துணை கமிஷனர் விஜயகுமார், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் மாயாண்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    கொலை செய்யப்பட்ட மாயாண்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ராஜாமணி (33) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மாயாண்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக பிடிபட்ட கீழநத்தம் இந்திரா காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற வாலிபரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கொலை நடந்த சமயத்தில் கோர்ட்டு முன்பு ஏராளமான போலீசார் இருந்தும் குற்றவாளிகள் தப்பிச்சென்ற போது அவர்களை பிடிக்க முடியாமல் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர்.

    இதைத்தொடர்ந்து வக்கீல்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதற்கிடையே கோர்ட்டு முன்பு உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கொலை கும்பல் கேரள பதிவெண் கொண்ட ஒரு காரில் வந்து கொலை செய்ததும், அந்த காரிலேயே தப்பிச்சென்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து காரின் அடையாளத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

    இதன் பயனாக கொலையில் தொடர்புடைய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமகிருஷ்ணன், சுரேஷ், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், சிவா, தங்க மகேஷ், மனோ ராஜ் ஆகியோரும் கைதாகி உள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • 5-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளக்கண்ணுவை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
    • பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளி பொன்நகரை சேர்ந்தவர் வெள்ளக்கண்ணு (வயது 23). இவரது தந்தை முருகேசன் கூட்டாம்புளி பிரதான சாலையில் இரும்பு கடை நடத்தி வருகிறார்.

    வெள்ளக்கண்ணுவுக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை வீட்டின் முன்பாக வெள்ளக்கண்ணு நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு கும்பலாக வந்த 5-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளக்கண்ணுவை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

    அப்போது வெள்ளக்கண்ணுவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டினுள் இருந்து வெளியே ஓடி வந்த அவரது தம்பி, வெள்ளக்கண்ணுவை கும்பல் தாக்குவதை தடுக்க முயன்றார்.

    அப்போது அவரையும் கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அவரும் படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், ரூரல் டி.எஸ்.பி. சுதிர், இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வெள்ளக்கண்ணுவை கொலை செய்த கும்பல் யார்? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எனது தங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார்.
    • இதனால் எனக்கு மனவேதனை ஏற்பட்டது.

    நெல்லை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விஜயகுமார் (வயது 25). இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிமெண்டு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும், நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் 24-வது தெருவை சேர்ந்த ஞானராஜ் மகள் ஜெனிபர் (23) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த ஜெனிபரின் சகோதரர் சிம்சன் என்ற புஷ்பராஜ் செல்போனில் பேசி விஜயகுமாரை நெல்லைக்கு வரவழைத்துள்ளார்.

    நேற்று காலை ரெயிலில் நெல்லைக்கு வந்த விஜயகுமாரை சிம்சன் தனது நண்பரான பாளை அண்ணா நகரை சேர்ந்த சிவாவுடன் (35) சேர்ந்து அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்து கொலை செய்தார்.

    இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்சனையும், சிவாவையும் கைது செய்து நடத்திய விசாரணையில் சிம்சன் கூறியதாவது:-

    எனது தங்கையை நான் கஷ்டப்பட்டு வளர்த்து என்ஜினீயரிங் படிக்க வைத்தேன். பின்னர் அவர் நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் விஜயகுமாருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இதனை அறிந்து நாங்கள் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டோம். இதனால் சமீபத்தில் ஜெனிபர் கள்ளக்குறிச்சியில் விஜயகுமாரை தேடி சென்றுவிட்டார்.

    இதுகுறித்து பாளை மகளிர் போலீசில் சமாதானம் பேசி மீண்டும் ஜெனிபரை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம். ஆனாலும் எனது தங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார். இதனால் எனக்கு மனவேதனை ஏற்பட்டது. எனது தங்கையை இவ்வளவு கஷ்டபடுத்தும் விஜயகுமாரை கண்டிக்க வேண்டும் என்று நினைத்து அவரை நைசாக பேசி நெல்லைக்கு வரவழைத்தேன்.

    ஆனால் அவர் முன் எச்சரிக்கையாக அவரது நண்பர் ஒருவரை அழைத்து வந்திருந்தார். இதனால் அவரை நம்பும்படி பேசி கழட்டிவிட்டுவிட்டு விஜயகுமாரை மட்டும் அழைத்து வந்தேன். எனது நண்பன் சிவா வீட்டில் வைத்து சமாதானம் பேசினோம். அப்போது அவர் எங்களது சமாதானத்தை கேட்கவில்லை. காதலை கைவிட மறுத்தார். இதனால் நான் அவரை தாக்கினேன். ஆத்திரம் அதிகரித்ததில் நாங்கள் 2 பேரும் சேர்ந்து விஜயகுமாரை கொலை செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே விஜயகுமார் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று காலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • மர்ம கும்பல் நண்பர்களை அங்கிருந்து விரட்டி விட்டு முத்துகிருஷ்ணனை படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநெல்வேலி:

    திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் அழகுமுத்து இவரது மகன் முத்துகிருஷ்ணன் 21 வயது வாலிபரான இவர் அங்குள்ள அலுமினியம் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார்.

    அப்பகுதியில் உள்ள கல்வெட்டான்குழி அருகே நண்பர்களுடன் மாலையில் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மாலை நேரத்தில் அப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் நண்பர்களை அங்கிருந்து விரட்டி விட்டு முத்துகிருஷ்ணனை முகம் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருந்த பொழுது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
    • மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீத்தப்பட்டி டாஸ்மார்க் கடை அருகே உள்ள பாலத்தின் அடியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக காட்டுப்புத்தூர் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் பாரதிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்து போனவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கஸ்தூரிபாய் புரம், கோவில் தெரு காமாட்சி மகன் பாலகிருஷ்ணன் (வயது 24) என தெரியவந்தது. மேலும் விசாரணை மேற்கொண்டதில் பாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டது தெரியவந்தது. பாலகிருஷ்ணனும், அவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் (38) ஆகிய இருவரும் கரூர் அருகே உள்ள மோகனூரில் தங்கி பர்னிச்சர் வேலை செய்து வந்தனர். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்தது. சம்பத்தன்று 2 பேரும் மோகனூர் டாஸ்மாக் கடையில் மது அருந்தி உள்ளனர்.

    அப்பொழுது அவர்கள் அருகே தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி உள்ளனர். இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருந்த பொழுது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் பாலகிருஷ்ணன் மற்றும் ரமேஷை அந்த கும்பல் சரமாரியாக தாக்கினர். பின்பு அவர்கள் இருவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீத்தப்பட்டி டாஸ்மார்க் கடை அருகே உள்ள பாலத்தில் இறக்கிவிட்டு சென்றனர். இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் பாலத்தின் கீழ் சென்று மயங்கி விழுந்து இறந்தார். ரமேஷ் அப்பகுதியில் வந்த இருசக்கர வாகனங்களின் உதவியுடன் காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கொலையாளிகளை பிடிக்க தொட்டியம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் காட்டுப்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்கா மேற்குவார் பட்டி ராமர் கோவில் தெருவை சேர்ந்த தாசில்ராஜா மகன் சதீஷ்குமார் (21), மலைச்சாமி மகன் புவனேஸ்வரன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில் தொடர்பு உடைய மேலும் 6 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

    • அய்யனார் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • போலீசார் தேடிய போது மற்றொரு இடத்தில் உடல் கிடந்ததை கண்டுபிடித்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் பூவையா (வயது45). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    பூவையா மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் மனைவியிடம் கூறிவிட்டு மாடுகளை மேய்ப்பதற்காக ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிக்கு சென்றுள்ளார்.

    இதற்கிடையே 2 நாட்களாகியும் பூவையா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது மனைவி உறவினர்களை அழைத்து கொண்டு பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் பூவையா குறித்து எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பூவையாவை தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜபாளையத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு செல்லும் வழியில் முடங்கியார் சாலையில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் வாலிபர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    உடனடியாக ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு வாலிபரின் தலை மட்டும் கிடந்தது. மோப்ப நாய் உதவியுடன் அந்த பகுதி முழுவதும் போலீசார் தேடிய போது மற்றொரு இடத்தில் உடல் கிடந்ததை கண்டுபிடித்தனர்.

    தலை மற்றும் உடலை கைப்பற்றிய போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது பூவையா என்றும், அவர் தான் அழைத்து சென்ற மாடுகளை அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் மேய விட்டதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் நில உரிமையாளரின் மகன்கள் 2 பேர் சேர்ந்து பூவையாவை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையுண்ட பூவையாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக காவலாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    • கும்பல் பார்த்திபனை அரிவாளால் வெட்டியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கப்பட்டினத்தை அடுத்த வட்டாலூர் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் கடல்மணி. இவரது மகன் பார்த்திபன்(வயது 24). இவர் பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட் வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு தனது ஊருக்கு அருகே உள்ள முத்து கிருஷ்ணபேரி கிராமத்தில் நடைபெற்ற பலவேசக்கார கோவில் கொடை விழாவில் கச்சேரி பார்த்துவிட்டு பார்த்திபன் நள்ளிரவில் தனது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் வட்டாலூர் ஊருக்கு வடபுறம் காட்டுப்பகுதியில் வைத்து ஒரு கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    தகராறு முற்றியதில் அந்த கும்பல் பார்த்திபனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

    இந்நிலையில், இன்று காலை பார்த்திபனை கொலை செய்ததாக கூறி வட்டாலூர் பகுதியை சேர்ந்த பார்த்திபனின் உறவினரான பாஸ்கர் என்ற வாலிபர் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே பாஸ்கர் தான் பார்த்திபனை கொலை செய்தார் என சரண் அடைந்த தகவல் அறிந்து, பாஸ்கரின் தாயார் செல்வி ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்குளம் தீயணைப்பு படை வீரர்கள் செல்வியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கர் அளித்த தகவலின்பேரில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அனைவரையும் கைது செய்த பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் கொலையான பார்த்திபன் மீது பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • கார்த்திக் வீட்டிற்கு சமாதானம் பேச ராஜேந்திர பிரசாத், சண்முகராஜ் ஆகிய இருவரும் சென்றனர்.
    • போலீசார் கார்த்திக் மற்றும் சண்முகராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கார்த்திக் (வயது 29). திருப்பரங்குன்றம் மேலப்பச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திர பிரசாத் (21) மற்றும் சண்முகராஜ் (24). நண்பர்களான மூன்று பேரும் மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வருகின்றனர்.

    இவர்களுக்கிடையே கடந்த தீபாவளி பண்டிகையின் போது ஏற்பட்ட வாக்கு வாதம் மோதலாக மாறி கைகலப்பில் முடிந்தது. அப்போது முதல் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. ஒருவருக்கொருவர் ஒரே இடத்தில் வேலை பார்த்தபோதும் பேசாமல் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கார்த்திக் வீட்டிற்கு சமாதானம் பேச ராஜேந்திர பிரசாத், சண்முகராஜ் ஆகிய இருவரும் சென்றனர். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது மீண்டும் தகராறு உருவானது. இதில் ராஜேந்திர பிரசாத், கார்த்திக்கை அருகில் இருந்த தராசு படிக்கல்லை எடுத்து தாக்கியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் தனது வீட்டில் இருந்த சூரிக் கத்தியை எடுத்து வந்து ராஜேந்திர பிரசாதின் தோள்பட்டையில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திர பிரசாத் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திர பிரசாத் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் கார்த்திக் மற்றும் சண்முகராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவில் சமாதானம் பேச சென்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×