கடையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னரசு, ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், ஆழ்வார்குறிச்சி தனிப்பிரிவு ஏட்டு ரவி மற்றும் போலீசார் சென்றனர். சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
கடையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை
Published on

கடையம் :

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கீழஆம்பூர் ஊராட்சி மன்றத்திற்கு பின்புறம் உள்ள நெல் களத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னரசு, ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் , ஆழ்வார்குறிச்சி தனிப்பிரிவு ஏட்டு ரவி மற்றும் போலீசார் சென்றனர். அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

மேலும் கொலையானவர் அந்த பகுதிகளில் 2 நாட்களாக மனநிலை சரியில்லாதது போல் சுற்றி திரிந்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com