என் மலர்
சென்னை
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
- அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்த நிலையில், த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.
- சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- பிற இடங்களில் இருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவையும் ரத்து.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது.
மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் 3-வது நாளாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.
இந்த நிலையில், 4-வது நாளாக இன்று சென்னையில் 65 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிற இடங்களில் இருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவை என நேற்று இரவு 8 மணி முதல் தற்போது வரை 65 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
- எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.
- சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரெயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16866), கொல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22662), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16752) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16865) நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 15-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.
* எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22661), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16751), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.42 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), மேற்கண்ட தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கார்த்திகை தீபம் என்பது தமிழ் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படக் கூடியது.
- தமிழர்கள் கொண்டாடக்கூடிய பண்டிகையில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் இல்லை என்றார்.
சென்னை:
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:
கார்த்திகை தீபம் என்பது தமிழ் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படக் கூடியது.
தமிழர்கள் கொண்டாடக்கூடிய பண்டிகையில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் இல்லை.
தமிழ்நாட்டில் எந்த வழியிலாவது காலூன்ற வேண்டும் என மதவாத சக்திகள் சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர்.
2014-ம் ஆண்டின் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. 2014-ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அரசு செயல்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு உள்ளது; இது தனி நீதிபதியின் தீர்ப்பு.
2014ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அறியாமல் புதிதாக ஒரு வழக்கை தொடுத்து தற்போது தீர்ப்பை பெற்றுள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சனையை உருவாக்குகிறார்கள். மத ஒற்றுமை, மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்கிறது.
ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது பெற்ற தீர்ப்பையே மறந்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பா.ஜ.க.வுக்கு முழு அடிமை என்பதை உறுதிசெய்திருக்கிறார் பழனிசாமி.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என தெரிவித்தார்.
- பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு, இந்த சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது.
- இந்த வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை?
சென்னை:
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையின் மேற்பகுதியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
நேற்றைய தினம் திமுக அரசு, உயர்நீதிமன்ற உத்தரவையும், முருகப் பெருமான் பக்தர்களின் நம்பிக்கையையும் வெளிப்படையாக மீறி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் ஆபத்தை உருவாக்கியிருக்கும் நிலையில் இன்று இந்த தீர்ப்பு வந்துள்ளது.
பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு, இந்த சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது. கடந்த டிசம்பர் 2-ம் தேதி அன்றே இந்து சமய அறநிலையத் துறையை முறைகேடாகப் பயன்படுத்தி, அவசரமாக மேல்முறையீடு செய்ய வைத்தும், பின்னர் அவ்வழக்கில் அலட்சியம் காட்டி, காலம் தாழ்த்தியும் வந்த திமுக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பிறகே பதிலளிக்க முன்வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, பக்தர்களின் பாதுகாப்புக்காக உயர்நீதிமன்றம் நியமித்த CISF, மற்றும் மாநில காவல்துறை இடையே தேவையற்ற மோதலை உருவாக்கி, இறுதியில் 144 தடையுத்தரவையும் பிறப்பித்தது திமுக அரசு.
இந்த வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை?
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு அளிக்க வேண்டிய தேவை இருப்பது, அது தர்கா நிர்வாகம் மட்டுமே. ஆனால் அவர்கள் மேல்முறையீடு செய்யவில்லை. ஏனெனில் சிக்கந்தர் தர்கா அருகிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது குறித்த வரலாறும், இருதரப்பு ஒப்பந்தமும் இருப்பதை தர்கா நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்.
தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் தங்கள் அநாகரிக அரசியல் நாடகங்களை திமுக எப்போது நிறுத்தப் போகிறது?
திமுக அரசு குறைந்தபட்சம் இனியாவது உயர்நீதிமன்ற உத்தரவை மதிப்பார்களா அல்லது தங்கள் வழக்கமான பிரிவினை நாடகங்களைத் தொடரப் போகிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வடதமிழக - புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 17.30 மணிஅளவில், வடதமிழக பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று காலை 08.30 மணி அளவில் மேலும் வலுவிழந்தது.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- உயிரிழந்த சரவணனின் உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
இன்று காலை வயது மூப்பின் காரணமாக பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏ.வி.எம். சரவணன் உடலுக்குநடிகர்கள் சிவக்குமார் மற்றும் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவக்குமார், "என்னுடைய சொந்த பெயர் பழனிசாமி. அதை சிவகுமார் என மாற்றியது சரவணன் சார் தான். இதன் காரணமாக தான் எனது சூர்யாவுக்கு நான் சரவணன் என பெயர் வைத்தேன்" என்று தெரிவித்தார்.
- 4 நாட்களுக்கு பிறகு இன்று மழை நின்றதால் சூரிய பிரவேசம் இருந்தது
- சென்னை மக்கள் வெயிலை இன்று பார்த்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை கடந்த 30-ந்தேதி முதல் வட தமிழகத்தில் பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மட்டுமின்றி ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 3 நாட்கள் பலத்த மழை பெய்தது.
இந்தநிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று மழை நின்றதால் சூரிய பிரவேசம் இருந்தது. சென்னை மக்கள் வெயிலை இன்று பார்த்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். பயன்படுத்திய உடைகளையெல்லாம் துவைத்து வெயிலில் காய வைத்தனர்.
இதனிடையே, சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
- உயிரிழந்த சரவணனின் உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
வயது மூப்பின் காரணமாக இன்று காலை உயிரிழந்த சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- கருமேகங்கள் திரண்டு வானம் இருண்டு கனமழை கொட்டி தீர்த்தது.
- சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை கடந்த 30-ந்தேதி முதல் வட தமிழகத்தில் பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மட்டுமின்றி ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 3 நாட்கள் பலத்த மழை பெய்தது.
30-ந் தேதி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 1-ந் தேதி முதல் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது. பகலும் இரவாக காட்சிஅளித்தது. கருமேகங்கள் திரண்டு வானம் இருண்டு கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் சென்னை வாசிகள் வீடுகளில் முடங்கினர். டிட்வா புயல் சென்னை அருகே மையம் கொண்டதால் விட்டு விட்டு கனமழை பெய்தது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இன்று காலை 7 மணி வரை மழை தூறிக் கொண்டே இருந்தது. சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி நின்றதாலும், ஒரு சில பகுதிகளில் மழைநீர் வடியாததாலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று மழை நின்றதால் சூரிய பிரவேசம் இருந்தது. சென்னை மக்கள் வெயிலை இன்று பார்த்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். தினமும் பயன்படுத்திய துணிமணிகள் எல்லாம் வீடுகளில் உலர வைக்க முடியாமல் இருந்தனர்.
வெயில் இன்று தலைகாட்டியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். பயன்படுத்திய உடைகளையெல்லாம் துவைத்து வெயிலில் காய வைத்தனர்.
மழையால் சாலையோர கடைகள் காணாமல் போனது. காய்கறி, பழங்கள் விற்கும் சிறு வியாபாரிகள் இன்று மீண்டும் விற்பனையை தொடங்கினர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் கனமழை மற்றும் குளிரால் வெயிலை தேடும் நிலை ஏற்பட்டது.
- டேர்ம் காப்பீடு என்பது தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆயுள் காப்பீட்டு வடிவமாக மாறியுள்ளது.
- முக்கியமாக இணையத்தின் மூலம் காப்பீடு வாங்கும்போது பல நன்மைகள் கிடைக்கின்றன.
இன்றைய வேகமான வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் எப்போது நேரும் என்பதை யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது. குடும்பத்தின் நிதி பாதுகாப்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை தூண்களில் ஒன்று.
அந்தப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று கால காப்பீட்டுத் திட்டம் ஆகும். குறிப்பாக, குறைந்த பிரீமியத்தில் அதிக பாதுகாப்பு வழங்கும் தன்மை காரணமாக, டேர்ம் காப்பீடு (Term Insurance) என்பது தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆயுள் காப்பீட்டு வடிவமாக மாறியுள்ளது.
அதோடு, ஆன்லைன் காப்பீட்டு தளங்களின் வளர்ச்சியால், பலரும் சில நிமிடங்களில் ACKO Term Insurance போன்ற திட்டங்களை ஒப்பிட்டு வாங்க முடிகிறது.
கால அடிப்படையிலான காப்பீடு என்றால் என்ன?
காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு வழங்கும் வாழ்க்கை காப்பீட்டை கால காப்பீடு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பாதுகாப்பு அளிக்கும் ஒப்பந்தமாகும். அந்தக் காலத்திற்குள் காப்பீடு வாங்கிய நபர் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு முன்னதாக ஒப்புக்கொண்ட தொகை வழங்கப்படும்.
இது ஒரு முதலீட்டு திட்டம் இல்லாததால், முழுக்க முழுக்க பாதுகாப்பையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அதனால் பிரீமியம் குறைவாகவும் பாதுகாப்பு அதிகமாகவும் இருக்கும். குடும்பத்திற்கு நிதிச் சுமை ஏற்படாமல் காக்கும் மிக வலுவான ஓர் ஆதாரமாக இது செயல்படுகிறது.
ஏன் டேர்ம் காப்பீடு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது?
குறைந்த செலவில் அதிக பாதுகாப்பு
மற்ற வாழ்க்கை காப்பீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது, கால காப்பீட்டுத் திட்டங்களில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை மிகவும் குறைவு. காப்பீட்டு நிறுவனத்துக்கு முதலீட்டு சுமை இல்லாததால், முழு பாதுகாப்பையும் சிறிய பிரீமியத்தில் வழங்க முடிகிறது.
உதாரணமாக, மாதம் சில நூறு ரூபாய்களில் கூட ஒரு குடும்பம் கோடிக்கணக்கான பாதுகாப்பை பெற முடியும். இதுவே இந்த திட்டத்தை சாதாரண வருமானம் உள்ளவர்கள் முதல் நடுத்தர குடும்பங்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாக மாற்றுகிறது.
குடும்பத்திற்கான நிதி பாதுகாப்பு
ஒரு குடும்பத்தின் வருமானம் வழங்கும் நபர் திடீரென இல்லாமல் போனால், அது ஒரு பெரிய உணர்ச்சி இழப்பாக மட்டுமல்லாமல் நிதி ரீதியாகவும் பெரும் சுமையாகிவிடும்.
கால காப்பீடு இருப்பதால் குடும்பம்:
●தினசரி வாழ்க்கைச் செலவு
●வீட்டுக் கடன் தொகை
●குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி செலவுகள்
●அவசர மருத்துவச் செலவுகள்
●நெருக்கடி நேர நிதித் தேவைகள்
இவற்றை சமாளிக்க தேவையான பாதுகாப்பு பெறும்.
அத்தகைய பாதுகாப்பு இல்லாத குடும்பங்கள் மிகப்பெரிய சிரமங்களை சந்திக்க நேரிடும்.
வெளிப்படையான ஒப்பந்தம்
இந்த திட்டம் முழுக்க பாதுகாப்பைக் மட்டுமே வழங்குவதால், இதில் மறைமுக நிபந்தனைகள் இல்லை. எந்த சூழ்நிலையில் எவ்வளவு பாதுகாப்பு கிடைக்கும், claim செய்யும்போது என்ன செய்ய வேண்டும், எத்தகைய ஆவணங்கள் வேண்டும் ஆகிய தகவல்கள் தெளிவாக இருக்கும்.
இதனால் குழப்பமும் தவறான புரிதலும் இல்லாமல், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் தேர்வு செய்ய முடிகிறது.
கிளைம் வழங்கும் விகிதம் உயர்வு
இன்றைய காப்பீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் கிளைம் வழங்கும் விகிதத்தில் மிக உயர்ந்த நிலையைப் பெற்று வருகின்றன.
இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றது. குடும்பம் claim செய்யும்போது தாமதம் இல்லாமல் நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகாலமானவர்களை இந்த காப்பீடு வாங்க தூண்டும் முக்கிய காரணமாக உள்ளது.
சரியான கால காப்பீட்டு திட்டத்தைத் தேர்வு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை
காப்பீட்டு தொகை
இது திட்டத்தின் மைய அம்சம். குடும்பத்தின் எதிர்கால நிதி தேவைகளைப் பாதுகாக்கும் அளவிற்கான பாதுகாப்பு தொகையைத் தேர்வு செய்ய வேண்டும். வருட வருமானத்தின் குறைந்தது பத்து முதல் பதினைந்து மடங்கு வரை பாதுகாப்பு வைத்துக்கொள்வது நல்லது.
காப்பீட்டு காலம்
உங்கள் வயது மற்றும் நிதி பொறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு காலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இளம் வயதில் வாங்கினால் பிரீமியம் மிகவும் குறைவாக இருக்கும். வயது அதிகரிக்கும்போது பிரீமியம் அதிகரிக்கும்.
பிரீமியம் தொகை
உங்கள் குடும்ப வருமானத்திற்கும் மாதாந்திர செலவுகளுக்கும் பொருந்தும் அளவில் பிரீமியத்தைச் செலுத்தக்கூடிய திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பலர் பிரீமியம் அதிகம் என தவறாக நினைக்கும் போதிலும், உண்மையில் இந்த திட்டம் மிகவும் ஏற்றது.
கூடுதல் பாதுகாப்பு (ரெய்டர்) சேர்த்தல்
தீவிர நோய் பாதுகாப்பு, விபத்து மரண பாதுகாப்பு, வருமான மாற்று பாதுகாப்பு போன்றவை சேர்த்தால் குடும்பத்திற்கு கூடுதல் நன்மை கிடைக்கும்.
கிளைம் வழங்கும் விகிதம்
உயர்ந்த கிளைம் விகிதம் கொண்ட நிறுவனத்தைத் தேர்வு செய்வது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் சேவை
காப்பீட்டு நிறுவனம் எவ்வளவு விசுவாசத்துடன் செயல்படுகிறது, வாடிக்கையாளர் சேவை எப்படி உள்ளது, claim செய்யும் போது ஆதரவு கிடைக்குமா என்பதைப் பாருங்கள்.
ஏன் பலரும் இணையத்தின் மூலம் டேர்ம் காப்பீடு வாங்குகின்றனர்?
நவீன காலத்தில் பெரும்பாலானவர்கள் life insurance online வாங்குவதையே விரும்புகிறார்கள், ஏனெனில் அதில் வேகமும் வசதியும் அதிகம், செலவும் குறைவு. இதற்கு முக்கிய காரணம், டிஜிட்டல் வழியில் கிடைக்கும் வசதியும் வெளிப்படைத்தன்மையும். முன்னொரு காலத்தில் காப்பீடு வாங்குவதற்கு முகவரை சந்திக்க வேண்டும், பல ஆவணங்களை உடன் கொண்டு செல்ல வேண்டும், பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று அது சில நிமிடங்களுக்குள் முடியும் தன்மைக்கு மாறியுள்ளது.
முக்கியமாக இணையத்தின் மூலம் காப்பீடு வாங்கும்போது பல நன்மைகள் கிடைக்கின்றன:
திட்டங்களை ஒரே இடத்தில் ஒப்பிடும் வசதி
ஒரே இணையப் பக்கத்தில் பல நிறுவனங்களின் கால காப்பீட்டு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கலாம். பாதுகாப்பு தொகை, பிரீமியம், காலம், நிபந்தனைகள், கூடுதல் பாதுகாப்புகள் போன்றவற்றை ஒரே பார்வையில் அறிந்து கொண்டு முடிவு எடுக்க இயலும். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பொருத்தமானதாகவும், பட்ஜெட்டுக்கு ஏற்றதாகவும் உள்ள திட்டத்தை எளிதில் தேர்வு செய்ய முடிகிறது.
ஆவணங்களை எளிதில் பதிவேற்றும் சுலபம்
இணையத்தின் மூலம் ஆவணங்களை சில நொடிகளில் பதிவேற்ற முடியும். அடையாள அட்டை, முகவரி சான்று, புகைப்படம் போன்றவை தனித்தனி அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே சமர்ப்பிக்கலாம். இதனால் நேரம் மிச்சமாகும்.
முழு செயல்முறை வெளிப்படையானது நிபந்தனைகள், வரம்புகள், விலக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெளிவாக இணையத்தில் காண்பிக்கப்படுவதால் குழப்பம் ஏற்படாது. முகவர் கூறும் தகவலையே மட்டும் நம்ப வேண்டிய நிலை இல்லாமல், ஒவ்வொரு தகவலையும் நேரடியாக புரிந்து கொண்டு முடிவு செய்யலாம்.
இந்த வெளிப்படைத்தன்மை பலரையும் இணைய வழியை விரும்ப வைக்கிறது.
நடுவண் முகவர் கட்டணம் இல்லாததால் செலவு குறைவு
இணையத்தின் மூலம் நேரடியாக நிறுவனம் இருந்து திட்டத்தை வாங்கும் போது நடுவண் முகவர் கமிஷன் இருக்காது. இதனால் பிரீமியம் தொகை மேலும் குறைவாக இருக்கும். குறைந்த செலவில் அதிக பாதுகாப்பு கிடைப்பது பெரிய நன்மையாகும்.
விரைவான அங்கீகாரம்
முன்னொரு காலத்தில் காப்பீடு அங்கீகரிப்பதற்கு பல நாட்களோ வாரங்களோ எடுத்துக்கொள்ளும். இப்போது e-KYC செயல்முறை மூலம் சில மணிநேரங்களில் அல்லது சில சமயங்களில் சில நிமிடங்களிலேயே அங்கீகாரம் கிடைக்கிறது. இதனால் பாதுகாப்பு அவசியம் உள்ளவர்கள் உடனடியாக திட்டத்தைப் பெறலாம்.
முழுநேர வாடிக்கையாளர் சேவை
வரிகள், நிபந்தனைகள், claim செயல்முறை போன்றவற்றை பற்றி சந்தேகம் எழும்போது 24 மணி நேரமும் உதவி கிடைக்கிறது. வாடிக்கையாளர் சேவை எப்போதும் கிடைப்பதால் நம்பிக்கை அதிகரிக்கிறது.
அணுகுவதற்கும் மேலாண்மை செய்வதற்கும் சுலபம்
இணையத்தில் வாங்கிய காப்பீட்டுகளை:
●புதுப்பிக்க
●பிரீமியம் செலுத்த
●ஆவணங்களைப் பதிவிறக்க
●மாற்றங்களைச் செய்ய
●claim நிலையைச் சரிபார்க்க
எல்லாம் மொபைல் கைப்பேசியில் இருந்து கூட செய்ய முடியும். இதனால் நேரில் அலுவலகத்தில் சென்று உட்கார வேண்டிய அவசியம் இல்லாமல் விடுகிறது.
பாதுகாப்பான பண பரிமாற்றம்
எல்லா நிறுவனங்களும் உயர் பாதுகாப்பு முறைமை, குறியாக்கம் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் சரிபார்ப்புகளை பயன்படுத்துவதால், பண பரிமாற்றம் பாதுகாப்பாக இருக்கும். இதனால் இணையத்தில் காப்பீடு வாங்குவதில் பயம் அல்லது சந்தேகத்திற்கான இடம் இருப்பதில்லை.
முடிவுரை
டேர்ம் காப்பீடு என்பது குறைந்த செலவில் அதிக பாதுகாப்பை வழங்கும் மிக நம்பகமான வாழ்க்கை காப்பீட்டு திட்டமாகும். குடும்பத்தின் எதிர்பாராத நிதிச் சுமைகளை சமாளிக்க இது உறுதியான பாதுகாப்பு வலையமைப்பாக செயல்படுகிறது.
வெளிப்படையான நிபந்தனைகள், எளிய ஆன்லைன் செயல்முறை, குறைந்த பிரீமியம் மற்றும் விரைவான அங்கீகாரம் ஆகிய காரணங்களால், இது இன்று பெரும்பாலான குடும்பங்களின் முதன்மையான தேர்வாக மாறியுள்ளது. குடும்பத்தின் எதிர்கால நன்மைக்காக, உங்களுக்கு ஏற்ற கால காப்பீட்டு திட்டத்தை இன்றே தேர்வு செய்வது ஒரு பொறுப்பான முடிவாகும்.






