என் மலர்tooltip icon

    சென்னை

    • பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
    • இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

    இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். மொழிப் போராட்ட பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது.

    இந்நிலையில், புத்தாண்டையொட்டி வடபழனி முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    • அதிமுக சார்பில் போட்டியிட நேற்று வரை விருப்பு மனு அளித்துள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என கூறி 2,187 பேர் விருப்ப மனு.

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட 7,187 பேர் விருப்பு மனு அளித்துள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

    இதில், தங்கள் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என கூறி 2,187 பேர் விருப்ப மனு வழங்கி உள்ளனர்.

    இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் தங்களுடைய விருப்ப மனுக்களை, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 15.12.2025 முதல் 23.12.2025 வரையிலும், மற்றும் 28.12.2025 முதல் 31.12.2025 வரையிலும் வழங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.

    அதன்பேரில், ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கி உள்ளனர். அதன்படி, எடப்பாடி பழனிசாமி 'தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து 2,187 விருப்ப மனுக்களும், கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உடன்பிறப்புகள் 'தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டி', தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உட்பட 7,988 விருப்ப மனுக்களும், ஆக மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வரும் ஜனவரி 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் 5ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கூட்டம் வரவிருக்கும் அரசியல் மாற்றங்கள் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் கூட்டணி குறித்த நிலைப்பாடுகள், கட்சி அமைப்பை வலுப்படுத்த புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தல், தற்போதைய அரசியல் சூழலில் கட்சியின் நிலைப்பாட்டை மாவட்ட அளவில் தொண்டர்களிடம் கொண்டு செல்வது என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மறைவுக்குப் பிறகு, கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் திரண்ட ஆசிரியர்கள் 6-வதுநாளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காந்தி இரவின் பாலத்தில் நடைபாதை ஓரமாக அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை எழும்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.

    மெரினா காமராஜர் சாலையிலும் முற்றுகையிட திரண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் திரண்ட ஆசிரியர்கள் 6-வதுநாளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் 7-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தினார்கள்.

    சென்னை எழும்பூரில் உள்ள காந்தி இர்வின் பாலத்தில் காலை 11.30 மணி அளவில் திரண்ட ஆசிரியர் ஆசிரியைகள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்கிற எங்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தருவதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது.

    அதனை மையப்படுத்தி தான் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஒரே வேலையை செய்து வரும் உங்களோடு பணிபுரியும் சக ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியமும் எங்களுக்கு குறைவான ஊதியமும் அளிக்கப்பட்டு வருகிறது.

    எனவே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி காந்தி இரவின் பாலத்தில் நடைபாதை ஓரமாக அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும், தினமும் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

    இடைநிலை ஆசிரியர்களின் இந்த தொடர் போராட்டம் காரணமாக சென்னை மாநகர போலீசார் தினமும் எங்கு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    லட்சத்தீவு- குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    3-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    7-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    நாளை முதல் 5-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • கைது செய்யப்பட்ட அனைவரையும் வீட்டிற்கு செல்லுமாறு கூறியும் அவர்கள் சமுதாய கூடத்தை விட்டு வெளியேறாமல் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    கடந்த சில மாதங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து பெரியமேடு, வேப்பேரி, உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 33 பெண்கள் 12 ஆண்கள் உட்பட 45 தூய்மை பணியாளர்களை கைது செய்து கண்ணப்பர் திடல் சமுதாய கூடத்தில் அடைத்து வைத்தனர்.

    கைது செய்யப்பட்ட அனைவரையும் வீட்டிற்கு செல்லுமாறு கூறியும் அவர்கள் சமுதாய கூடத்தை விட்டு வெளியேறாமல் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அனைவரையும் நேற்று இரவு கண்ணப்பர் திடல் சமுதாய கூடத்தில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அப்போது சரஸ்வதி, நிர்மலா, மகேஸ்வரி, தனலட்சுமி ஆகிய 4 தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சக தூய்மை பணியாளர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை கே.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் போலீஸார் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் நிறுத்தாமல் நேராக கோயம்பேடு நோக்கி சென்றதால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் பஸ்சிலேயே கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மற்ற தூய்மை பணியாளர்களும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் மெயின் ரோடு, காந்தி அண்ணன் கோவில் தெரு.

    சென்னை:

    சென்னையில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னையில் நாளை மறுநாள் (03.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    எம்எம்டிஏ காலனி: ஏ-பிளாக் முதல் ஆர்-பிளாக் வரை கமலா நேரு நகர் 1 மற்றும் 2வது தெரு, அசோகா நகர், சுப்பாராவ் நகர், வீரபாண்டி நகர், ராணி அண்ணாநகர், கல்கி நகர், 100 அடி சாலை.

    அரும்பாக்கம்: மேத்தா நகர், என்எம் சாலை, எம்எச் காலனி, ரெயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், பிராங்கோ இந்தியா, வைஷ்ணவ் கல்லூரி, கோவிந்தன் தெரு, கலெக்ட்ரேட் காலனி, அய்யாவூ காலனி காயத்ரி தேவி, ரசாக் கார்டன், ஜேடி துராஜ் ராஜ் நகர், ஆசாத் நகர், விஜிஏ நகர், எஸ்பிஐ அதிகாரி.

    அழகிரி நகர்: தமிழர் வீதி, இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் மெயின் ரோடு, காந்தி அண்ணன் கோவில் தெரு, பெரியார் பாதை, அய்யப்பன் நகர், லட்சுமி நகர், ஆண்டவன் தெரு.

    சூளைமேடு: சக்தி நகர் 1 முதல் 5வது தெரு, திருவள்ளுவபுரம் 1 மற்றும் 2வது தெரு, திருவேங்கடபுரம் 1 மற்றும் 2வது தெரு, நெல்சன் மாணிக்கம் சாலை, கிழக்கு மற்றும் மேற்கு நம்சிவாயபுரம், சூளைமேடு உயர் சாலை, கில் நகர், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீலகந்தன் தெரு, கான் தெரு.

    கோடம்பாக்கம்: பஜனை கோவில் 3வது, 4வது தெரு ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. 

    • பிரமாண்ட வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க. கட்சியினரும் சென்னை குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.
    • துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

    சென்னை:

    துணை ஜனாதிபதியாக சி.பி.ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. 2 முறை அந்த நிகழ்ச்சி தள்ளிப்போனது. இந்தநிலையில் முதல் முறையாக நாளை அவர் சென்னை வருகிறார்.

    அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க. கட்சியினரும் சென்னை குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

    மாலை 5 மணி அளவில் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஹண்டே தலைமை தாங்குகிறார். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகிக்கிறார்.

    மத்திய மந்திரி எல்.முருகன், இசைஞானி இளையராஜா ஆகியோர் பாராட்டு உரை வழங்குகிறார்கள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், ஜோதிமணி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர், ஐசரி கணேஷ், இயக்குனர் பாக்கியராஜ், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், டாக்டர் சுதா சேஷையன், டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். முடிவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

    முன்னதாக நாளை காலை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிக்கும் விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
    • தொண்டர்களின் வீடியோக்களை வெளியிட்டு முதலமைச்சர் பகிர்ந்துள்ளார்.

    2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர், புது வெற்றியை தேடித்தர உள்ள உடன்பிறப்புகளுடன் தொடங்கியது புத்தாண்டு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், புத்தாண்டை ஒட்டி தன்னை சந்திக்க வருகை தரும் தொண்டர்களின் வீடியோக்களை வெளியிட்டு முதலமைச்சர் பகிர்ந்துள்ளார்.

    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் ஏராளமானோர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
    • தன்னை சந்தித்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி திருப்பதி காலண்டர் வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அடையாறில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் ஏராளமானோர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், கே.பி.அன்பழகன், டி.ஜெயக்குமார், கருப்பண்ணன், பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தனர்.

    தன்னை சந்தித்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி திருப்பதி காலண்டர் வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.

    • போதை கலாச்சாரத்தை ஒடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இடைநிலை ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் போராட்டங்களால் சென்னை ஸ்தம்பித்துள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாடு என்ற பெயருடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

    * போதை கலாச்சாரத்தை ஒடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * இடைநிலை ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் போராட்டங்களால் சென்னை ஸ்தம்பித்துள்ளது.

    * தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சி முடியும் நிலையிலும் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.

    * அரசியல் மாற்றம் ஏற்பட்டு, மக்களுக்கு நல்லது நடந்தால் தே.மு.தி.க. வரவேற்கும்.

    * கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.

    * தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என் தந்தை எல்லா இலக்குகளையும் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக செய்து முடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்.
    • எங்கள் கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் மதிப்பு உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    கே: வர இருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் சக்தி வாய்ந்த போட்டியாளராக யார் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

    ப: அ.தி.மு.க. எங்கள் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும், இந்த தேர்தலில் வலுவான போட்டியாளர் யாரும் தெரியவில்லை. தற்போதைய பலவீனமான நிலையில் கூட தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை முதன்மை எதிர்க்கட்சியாக நாங்கள் கருதுகிறோம்.

    கே: நீங்களும் ஒரு கடின உழைப்பாளி என்பதை உங்கள் தந்தை (மு.க.ஸ்டாலின்) கவனித்தாரா?

    ப: நான் என்னால் முடிந்ததை செய்ய முயற்சிக்கிறேன். என்னை கலைஞர் மற்றும் தலைவருடன் (மு.க.ஸ்டாலின்) ஒப்பிட முயற்சிக்கும் கூட்டங்களில் நான் அதை ஊக்குவிப்பதில்லை. கலைஞர் எப்போதும் கலைஞர்தான். அவருக்கு 50 வருட அனுபவம் உள்ளது.

    எனக்கு அரசியலில் 6 வயதுதான். என் தந்தை எல்லா இலக்குகளையும் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக செய்து முடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்.

    கே: திருவண்ணாமலையில் நடந்த இளைஞரணி கூட்டம் எவ்வளவு வெற்றிகரமாக இருந்தது?

    ப: தி.மு.க. வடக்கு மண்டலத்தில் இருந்து 91 சட்டமன்ற தொகுதி களுக்கான இளைஞர் அணி நிர்வாகிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் 1.3 லட்சத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்றனர். அதை ஒரு வெற்றியாகவே பார்க்கிறோம்.

    கே: பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு தமிழ்நாடுதான் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதற்கு தமிழ்நாட்டிற்கு ஆணவத்துடன் வருபவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

    ப: எங்கள் முதலமைச்சரின் கூற்றுடன் நான் முழுமையாக ஒத்துப்போகிறேன். பா.ஜ.க. கட்சியையும் அதன் அனைத்து 'பி' டீம்களையும் (அணி) எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    மாநிலத்தில் மதசார்பற்ற சக்திகளை பலவீனப்படுத்த பா.ஜ.க. கட்சி தன்னிடம் உள்ள அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்தும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

    ஆனால் தமிழகம், அதன் மக்கள் மற்றும் திராவிட மாடல் அரசாங்கத்தை அவமதிக்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டத்தை தமிழக மக்கள் தெளிவாக உணர்ந்து உள்ளனர். நிச்சயம் தமிழக மக்களால் அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.

    கே: என்ஜின் இல்லாத கார் அ.தி.மு.க. என்றும் அதனை பா.ஜ.க. என்ற லாரி கட்டி இழுப்பதாக விமர்சித்து இருக்கிறீர்களே? தி.மு.க. ஒரு தேசிய கட்சியை சார்ந்து இல்லையா?

    ப: எங்கள் கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் மதிப்பு உள்ளது. அதில் தி.மு.க. அனைத்து கட்சிகளின் கருத்துக்களையும் மதித்து ஏற்று நடக்கிறது. எங்கள் முதலமைச்சர் ஜனநாயகத்தில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைவரையும் உள்ளடக்கிய தலைவர். எங்கள் கூட்டணி பா.ஜ.க. கூட்டணி போல் கிடையாது. டெல்லியில் ஒருதலைபட்சமாக முடிவுகள் எடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் கட்சிகள் மீது திணிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து எங்கள் கூட்டணி மிகவும் வித்தியாசப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×