எனது ஆட்சி காலத்தை உயர்கல்வியின் பொற்காலமாக மாற்ற திட்டமிட்டு செயல்படுகிறோம்- மு.க.ஸ்டாலின்

பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டும், இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டும், “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம்” என்ற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மற்ற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன்: கவர்னர் ஆர்.என்.ரவி

பட்டம் பெற்றுள்ள மாணவ-மாணவிகள் தங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
கால்வாய் தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தரும் உண்மையான சொத்து கல்வி மட்டுமே- முதல்வர் மு.க.ஸ்டாலின்

நிதி பற்றாக்குறை இருந்தாலும் மாணவர்களுக்கான திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடையில்லை என்று அரசு அறிவிக்கவேண்டும்- சீமான் வலியுறுத்தல்

தமிழகத்தின் கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்வதற்கு எவ்விதத் தடையுமில்லை என்பதை அறிவிப்பாக வெளியிட வேண்டுமென தமிழக அரசை சீமான் வலியுறுத்தி உள்ளார்.
கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு- அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு

பிளஸ்2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.
பாராளுமன்ற மேல்சபை தேர்தல்- 2 எம்.பி. இடங்களுக்கு அ.தி.மு.க.வில் கடும் போட்டி

வேட்புமனு தாக்கலுக்கு 31-ந்தேதி வரை காலஅவகாசம் இருப்பதால் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யத்தில் இளைஞர்களை சேர்த்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுங்கள்- நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் உத்தரவு

சினிமா சூட்டிங்கில் இருந்தாலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்தே ஆன்லைன் கூட்டங்கள் வாயிலாகவும் கட்சி நிர்வாகிகளை கமல் சந்திக்க தவறுவது இல்லை என்கிறார்கள் கட்சியினர்.
டான்செட் நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் 10ந்தேதிக்குள் வெளியிடப்படும்- அண்ணா பல்கலைக்கழகம்

டான்செட் நுழைவுத்தேர்வு முடிவுகளை ஜூன் 10ந்தேதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஜூன் 12-ந்தேதி ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஜூன் 12-ந்தேதி ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வாழ்நாளில் மறக்க முடியாத இடம் வேதா நிலையம்: ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்

சாமான்யனும் அமைச்சராகலாம், சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம் என்பதை தன் செயல்கள் மூலம் இந்த உலகிற்கு, இந்திய நாட்டிற்கு எடுத்துக் காட்டியவர் அம்மா அவர்கள்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை

சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியலின் படி, மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
26ந் தேதி சென்னை வருகை... மதுரவாயல்-துறைமுகம் இரண்டடுக்கு மேம்பால பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

மதுரவாயல் துறைமுகம் இரண்டடுக்கு மேம்பாலச் சாலை திட்டத்துக்கு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலையில், சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரை முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
கீழ்ப்பாக்கத்தில் ரூட்தல போட்டியில் மாணவர்கள் பயங்கர மோதல்- 8 கத்தி பறிமுதல்

கீழ்ப்பாக்கத்தில் மாணவர்கள் நடுரோட்டில் ஒருவருக்கொருவர் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்ட சம்பவத்தில் 8 கத்திகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து 57 பவுன் நகைகளை சுருட்டிய பெண் கைது- கூட்டாளியான ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு

சென்னை அருகே வீடு வீடாக சென்று துணி வாங்குவது நடித்து நகைகளை கொள்ளையடித்த பெண்ணை கைது செய்த போலீசார், கூட்டாளியான ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி தகுதித்தேர்வு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான இலவச பயிற்சியை ஆற்றுப்படை அறக்கட்டளை நடத்தி வருகிறது. இதில் பங்கேற்பதற்கான தகுதித்தேர்வு 29ந் தேதி சென்னையில் நடக்கிறது.
தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது- ஜி.கே.வாசன்

தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த தேவசகாயத்துக்கு இத்தாலி நாட்டின் வாட்டிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
பாராளுமன்ற மேல்சபை தேர்தல்- காங்கிரஸ் சார்பில் எம்.பி. ஆகப்போவது யார்?

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.பி. விசுவநாதன், தகவல் திரட்டும் பிரிவு பொறுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி உள்பட பலர் எம்.பி. வாய்ப்புக்காக காய்நகர்த்தி வருகிறார்கள்.