என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Govt"

    • பாடத்தில் இல்லாத கேள்வி கேட்கப்பட்டால் இமெயிலில் புகார் அளிக்கலாம்.
    • வினா எண்ணுடன் தவறை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

    தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் தவறு இருந்தால் இமெயிலில் புகார் அளிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

    வினாத்தாளில் தவறு, பாடத்தில் இல்லாத கேள்வி கேட்கப்பட்டால் இமெயிலில் புகார் அளிக்கலாம் என தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.

    அதன்படி, dgequestionpaperqueries@gmail.com என்ற இமெயிலில் மாணவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வினாத்தாள் தவறு குறித்து புகாரளிக்கும்போது வினா எண்ணுடன் தவறை தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும் தேர்வுகள் இயக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.50 கோடி மதிப்பீட்டில் 800 மாணவர்களுக்கான உறைவிட, உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
    • இன்னும் பலர் கல்வியைக் கைப்பற்றிக் கொண்டு, உன்னதமான உயரங்களை வாழ்வில் அடைந்திட வாழ்த்துகிறோம்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்

    கல்வியால் சிறக்கும் நமது அரசுப் பள்ளி மாணவர்களைச் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பெற வைத்துப் பூரிப்படைகிறோம்.

    2021-22-இல் கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாடல் பள்ளிகள், இன்று 38 மாவட்டங்களிலும், தலா ரூ.50 கோடி மதிப்பீட்டில் 800 மாணவர்களுக்கான உறைவிட, உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

    அதனால்தான், கடந்த 4 ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 2,358 மாணவர்களும், ஆதி திராவிடர் (37) மற்றும் பழங்குடியினர் (169) பள்ளிகளைச் சேர்ந்த 206 மாணவர்களும், 93 முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில், 50 துறைகளில் மேற்படிப்பு பயிலுகின்றனர். அதில் 41 பேர் IIT-களிலும், 22 பேர் முழு உதவித்தொகையுடன் வெளிநாடுகளிலும் பயில்கின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு ஐஐடி-யில் நுழைவதற்கான முதற்படியை அரசு மற்றும் மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 448 மாணவர்களும் - ஆதி திராவிடர் (13) மற்றும் பழங்குடியினர் (55) பள்ளிகளைச் சேர்ந்த 68 மாணவர்களும் வெற்றிகரமாகக் கடந்துள்ளனர்.

    பெரும்பாலும் முதல் தலைமுறையினராகக் கல்விச் சாலைக்குள் நுழைந்த இந்த மாணவர்களின் கனவுகளை அடைவதற்குத் துணை நிற்கின்ற பெருமையோடு, இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் பலர் கல்வியைக் கைப்பற்றிக் கொண்டு, உன்னதமான உயரங்களை வாழ்வில் அடைந்திட வாழ்த்துகிறோம்! என்று கூறியுள்ளார். 

    • குமரி மாவட்டத்தில் முடிவற்ற பல்வேறு திட்டங்களையும் திறந்து வைக்கிறார்.
    • நாகர்கோவில் கண்கார்டியா பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை (24-ந் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் புறப்படும் அவர், காலை 10 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.

    அங்கிருந்து கார் மூலமாக பகல் 11 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அவருக்கு கன்னியாகுமரி நான்கு வழி சாலை முடியும் சீரோ பாயிண்ட் பகுதியில் குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு வரை 'ரோடுஷோ' மூலம் பொதுமக்களை சந்திக்கிறார்.

    அதன் பிறகு பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ரூ.1 கோடியே 46 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அலங்கார தோரண நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார். பின்னர் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் புறப்பட்டு புத்தளம் அருகே உள்ள கல்லடி விளை வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் படைப்பகம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார். அதன் பிறகு மாலை 6.30 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா வருகிறார். அங்கு ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள பொன்னப்ப நாடார் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் இரவில் நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை மறுநாள் (25-ந் தேதி) காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் கண்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் முடிவற்ற பல்வேறு திட்டங்களையும் திறந்து வைக்கிறார். புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். அவரது வருகையை அடுத்து முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் கண்கார்டியா பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகள், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு தனித்தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் வந்து செல்ல வசதியாக தனி பாதை வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நலத்திட்ட உதவிகள் வாங்க வரும் பயனாளிகள் வாகனங்களை நிறுத்த வசதியாக பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை அடுத்து நாகர்கோவில் நகரில் 2 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வருகை தந்துள்ளனர். கண்கார்டியா பள்ளி மைதானம் மற்றும் கல்லடி விளை, கன்னியாகுமரி பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • தமிழகம் முழுவதும் தமிழக அரசின் இந்த திடீர் பரிசுத்தொகை பேசு பொருளாக மாறி உள்ளது.
    • மனைவி ஒப்புதலுடன் மணி ஆர்டர் மூலம் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்து உள்ளார்.

    தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் பெண்களுக்கு தேர்தல் காலத்தில் வரும் 3 மாத உரிமைத் தொகை மற்றும் கோடைகால ஊக்கத் தொகை ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை சேர்த்து ரூ.5 ஆயிரத்தை மொத்தமாக 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்கி தமிழக அரசு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

    தமிழகம் முழுவதும் தமிழக அரசின் இந்த திடீர் பரிசுத்தொகை பேசு பொருளாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் இதுபற்றி ஒவ்வொரு விதமாக பேசுகின்றன. இதையே சமூகநல ஆர்வலர் ஒருவர் வேறு விதமாக அணுகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரையை சேர்ந்த சங்கரபாண்டி என்ற அந்த சமூக ஆர்வலர் தனது மனைவி பெயருக்கு அரசு அனுப்பி இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தையும் மனைவி ஒப்புதலுடன் மணி ஆர்டர் மூலம் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்து உள்ளார்.

    இதுபற்றி குறிப்பிட்டு உள்ள அவர் 'கடன் சுமையுடன் இருக்கும் தமிழக அரசுக்கு என் பங்களிப்பாக இருக்கட்டும் என்று கடிதம் எழுதி உள்ளார். தன் பணத்தை திருப்பி அனுப்பியதை சமூக வலைத்தளங்களிலும் அவர் பதிவிட்டுள்ளார். இது பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
    • கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார்.

    நாகர்கோவில்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அவர் குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில் வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் வருகை தருவதாக இருந்தது. பின்னர் அந்த தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு 23, 24 ஆகிய தேதிகளில் வருகை தருவார் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், முதலமைச்சரின் சுற்றுப்பயண தேதி மீண்டும் மாற்றப்பட்டு உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய அட்டவணையின்படி, பிப்ரவரி 24 மற்றும் 25-ந்தேதிகளில் அவர் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    முதல் நாள் அன்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, புத்தளம் கல்லடிவிளையில் மு.க.ஸ்டாலின் படைப்பகம் மற்றும் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைத்து உரையாற்றுகிறார். பின்னர் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். அன்று இரவு அவர் நாகர்கோவிலிலேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.

    அதன்பிறகு மறுநாள் காலை நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அங்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையை தூய்மைப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விழா நடைபெறும் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலத்தை சமப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மேடை மற்றும் பந்தல் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். விழாவிற்கு வரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா மற்றும் அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார். அதன்பிறகு தற்போது மீண்டும் குமரி மாவட்டத்திற்கு வருகை தருவது தி.மு.க. நிர்வாகிகளிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முதலமைச்சரின் வருகை குமரி மாவட்ட தேர்தல் களத்தை சூடுபடுத்தி உள்ளது. 

    • ஒரு வீடு கட்டுவதற்குத் தலா ரூ. 3.50 லட்சம் நிதி உதவியைத் தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
    • "குடிசைகள் இல்லாத மாநிலமாக" மாற்றுவதற்காகத் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட திட்டம்

    கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    குடிசை மற்றும் சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாதவர்கள், ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தகுதியுடைய பயனாளிகளுக்கு, 360 சதுர அடி நிலம் இலவசமாக வழங்கப்பட்டு, ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டித்தரப்படும்.

    இதுவரை இத்திட்டத்தின்கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கலைஞர் கனவு இல்லம் திட்டம், 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை "குடிசைகள் இல்லாத மாநிலமாக" மாற்றுவதற்காக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. 2030-க்குள் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாடா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார்.
    • கார் உற்பத்தி ஆலையில் உள்ள ரத்தன் டாடா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    ராணிப்பேட்டை அருகே ரூ.9000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட டாடா கார் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கப்பட்டது.

    பனப்பாக்கத்தில் டாடா நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் சொகுசு கார்கள் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்

    இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாடா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். இதையடுத்து டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ரேஞ்ச் ரோவர் காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    முன்னதாக, கார் உற்பத்தி ஆலையில் உள்ள ரத்தன் டாடா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

    • 1 லட்சத்து 29 ஆயிரத்து 689 தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கி வைத்திருந்தார்.

    இதன்மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஷிப்ட் அடிப்படையில் பணி செய்து வரும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை, மாலை, இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    காலை உணவில் இட்லி, பொங்கல், கிச்சடி போன்றவையும், மதியம் கலவை சாதம், ரசம், சாம்பார், கூட்டு, பொரியல். இரவில் சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள போளிவாக்கம் ஊராட்சி அத்திக்குளம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் சென்னை உள்பட 25 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள், 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 689 தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெப்பம் தாங்கும் பையில் வைக்கப்பட்ட உணவு கலன்களை தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார். விழா மேடையில் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆவடி நாசர், மதிவேந்தன், ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமைச் செயலாளர் முருகானந்தம், அரசு துறை செயலாளர் சத்தியபிரதா சாகு, மாநகராட்சி, நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், சந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இதர தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்
    • புதிய தேதி மற்றும் புதிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் 15 நாட்களுக்கு முன்பாகவே தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்

    இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டது. தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் சில மையங்களுக்கு வினாத்தாள்கள் தாமதமாகச் சென்றது போன்ற தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் காரணங்களால் இத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும். இதற்கான புதிய தேதி மற்றும் புதிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் 15 நாட்களுக்கு முன்பாகவே தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    மேலும் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இதர தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய ஹால் டிக்கெட்டுகள் பிப்ரவரி 13, 2026 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். 

    இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் அப்பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய அலுவலராக வெங்கடபிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

    • ஏற்கெனவே நகராட்சித் துறையில் வேலைக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிவந்துள்ளன.
    • தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது உறு

    தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தவெக தலைவர் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

    "அரசுப் பணி என்கிற கனவோடு TNPSC Group 2, 2A முதன்மைத் தேர்வை எழுதவிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைத்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

    அரசுப் பணி என்பது, இளைஞர்கள் ஒவ்வொருவரின் உயரிய கனவும் லட்சியமும் ஆகும். அதை அடைய அவர்கள் பல ஆண்டுகளாக இரவு பகலாகக் கண்விழித்துப் படித்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவார்கள். அப்படிப்பட்ட ஈடு இணையற்ற உழைப்புடன் தயாராகி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமது எதிர்கால வாழ்வு குறித்த மிகப் பெரிய கனவுகளோடு முதன்மைத் தேர்வை எழுத வருவார்கள்.

    அந்த நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டால், இவ்வளவு காலம் உழைத்த உழைப்பு வீணாகி விடுமோ என்ற அச்சம் அவர்களின் மனத்தில் ஆழப் பதிந்துவிடும். ரத்து செய்யப்பட்ட தேர்வு மீண்டும் நடத்தப்பட்டாலும் அதற்காக மீண்டும் மீண்டும் தங்களது கடின உழைப்பை முதலீடாக்கும் சூழல் உருவாகும். இதனால் இளைஞர்களின் பெறற்கரிய காலம் வீணாவதுடன் மனத்தளவில் அவர்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.

    எதிர்காலம் குறித்துக் கனவுகளோடு இருந்த இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கிய இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு யாருக்காக இயங்குகிறது? இளைஞர்களுக்கு நல்லதொரு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்காத இந்த அரசு, இருந்து என்ன பயன்? இன்று TNPSC Group 2, 2A தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது, இந்தக் கபட நாடகத் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

    ஏற்கெனவே நகராட்சித் துறையில் வேலைக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், TNPSC நடத்தும் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்திருக்குமோ என்ற ஐயம் எழுவது இயல்பே. இன்னும் எந்த மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க இது நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழாமல் எப்படி இருக்கும்? இதற்கு உரியவர்கள், உண்மையை நேர்மையாகச் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.

    எனவே, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாவண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வெற்று விளம்பரத்தினால் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது உறுதி." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • மின்சார பஸ்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
    • தினமும் சுமார் 2 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் மின்சார பஸ் சேவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. முதன் முதலாக வியாசர்பாடி பணிமனையில் இருந்து பாஸ்கள் இயக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பெரும்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பணிமனையில் இருந்து மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    மொத்தம் 625 மின்சார பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் இதுவரையில் 380 மின்சார பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 225 ஏ.சி. பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக பல்லவன் இல்லம் பணிமனையில் இருந்து 145 மின்சார பஸ்கள் இயக்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை பணிமனையில் இருந்து 100 மின் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மின்சார பஸ்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தினமும் சுமார் 2 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.

    இதுவரையில் 225 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 100 குளு குளு சொகுசு பஸ்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3000 ஏசி வசதி அல்லாத பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக 1000 மின்சார ஏ.சி. பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் படிப்படியாக ஏ.சி. சொகுசு பஸ்கள் விடப்பட்டு உள்ளது.

    டபுள் டக்கர் 20 ஏ.சி. பஸ் விடுவதற்கான டெண்டர் இறுதி செய்யப்படுகிறது. ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்தில் இந்த பஸ்கள் பயன்பாட்டுக்கு வரும்.

    முதல் கட்ட மின்சார பஸ் வசதி இந்த மாத இறுதிக்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்த பின்னர் 2-வது கட்டமாக 600 மின்சார பஸ்கள் கொண்டு வரப்படும். பொதுமக்கள் தங்கள் பயணத்தை மாற்றி வருகிறார்கள். நெரிசலில் பயணம் செய்வதை தவிர்த்து, வசதியாக அமர்ந்து செல்லவே விரும்புகிறார்கள். அதனால் ஏ.சி. மின்சார பஸ்களில் இனி வரும் காலங்களில் அதிக பயன்பாடு உள்ளதாக இருக்கும் என்றார்.

    • ரூ.212.86 கோடியில் கட்டப்பட்ட பாலம், அங்கன்வாடி, சமுதாயக்கூடம், பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
    • மருத்துவமனைகளில் ஓமியோபதி, சுகாதார நிலையக் கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். அதன் விவரம் வருமாறு:

    * ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பில் ரூ.42.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 சமத்துவபுரங்களை தொடங்கி வைக்கிறார்.

    * நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி முதல் கொடமலை வரை ரூ.34.12 கோடியில் அமைக்கப்பட்ட சாலையை தொடங்கி வைக்கிறார்.

    * ரூ.212.86 கோடியில் கட்டப்பட்ட பாலம், அங்கன்வாடி, சமுதாயக்கூடம், பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.

    * தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.1,238.19 கோடி மதிப்பீட்டில் கட்டிய 9,696 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைக்கிறார்.

    * கிண்டியில் ரூ.14.50 கோடி மதிப்பில் தமிழ்நாட்டில் முதல் கடல் ஆமை மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    * கடல் ஆமை பாதுகாப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் தமிழ்நாடு நகர்ப்புற பசுமை கொள்கை 2026ஐ வெளியிடுகிறார்.

    * பல்வேறு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூ.348.59 கோடியில் கட்டப்பட்ட நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடங்கள் திறந்து வைக்கிறார்.

    * மருத்துவமனைகளில் ஓமியோபதி, சுகாதார நிலையக் கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.

    * கும்மிடிப்பூண்டியில் ரூ.2,091 கோடி முதலீட்டில் 2,104 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மிட்சுபிஷியின் குளிர்சாதன இயந்திரம், கருவி உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். 

    ×