என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாடா மோட்டார்ஸ்"

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை தொடங்கி வைத்ததில் மிகவும் பெருமை அடைகிறேன்.
    • இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் மிக முக்கியமானது டாடா நிறுவனம்.

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம் துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ.9 ஆயிரம் கோடியில் முதலீடு மற்றும் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிலையில் டாடா தொழிற்சாலைகளை திறந்து வைத்து தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தை தொடங்கி வைப்பதற்காக இன்று மு.க.ஸ்டாலின் பனபாக்கத்திற்கு வருகை தந்தார்.

    வழி நெடுகிலும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மேளதாளம், தாரை தப்பட்டை, ஒயிலாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட தி.மு.க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் டாடா தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ரத்தன் டாடா உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து டாடா தொழிற்சாலையினை திறந்து வைத்து, தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஆலையின் முதலாவது ஜாகுவார் லேண்ட்ரோவர் வாகனத்தை ஓட்டி பார்த்தார். கார்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை தொடங்கி வைத்ததில் மிகவும் பெருமை அடைகிறேன். இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் மிக முக்கியமானது டாடா நிறுவனம்.

    ஆட்டோமொபைல் ஸ்டீல் ஏர்லைன்ஸ் தொலைதொடர்பு என பல துறைகளில் தடம் பதித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ள நிறுவனம்தான் டாடா குழுமம். இந்தியாவின் வாகன உற்பத்தி மற்றும் மின்வாகனத்தின் தலைநகரம் தமிழ்நாடு தான். தொழில்துறை வளர்ச்சியில் டி.ஆர்.பி. ராஜா சிறப்பாக செயலாற்றி வருகிறார்.

    தமிழ்நாடு தொழில்துறையில் முன்னோடியாக திகழ்ந்து வருவதற்கு இந்த டாடா மோட்டார்ஸ் தொழில் நிறுவனமே ஒரு சாட்சி.

    உலக நாடுகளே தொழில் முதலீட்டின் தமிழ்நாட்டிடம் போட்டி போட்டு வருகிறார்கள். தமிழ்நாடு வந்தோரை வாழவைக்கும் அதுதான் எங்கள் பண்பாடு. பொருளாதாரம் பெண்கள் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. இன்னும் பல்வேறு தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்

    நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. ஆர்.காந்தி, டி.ஆர்.பி.ராஜா, ஜெகத்ரட்சகன் எம்.பி. சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் வருகையையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாடா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார்.
    • கார் உற்பத்தி ஆலையில் உள்ள ரத்தன் டாடா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    ராணிப்பேட்டை அருகே ரூ.9000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட டாடா கார் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கப்பட்டது.

    பனப்பாக்கத்தில் டாடா நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் சொகுசு கார்கள் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்

    இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாடா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். இதையடுத்து டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ரேஞ்ச் ரோவர் காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    முன்னதாக, கார் உற்பத்தி ஆலையில் உள்ள ரத்தன் டாடா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

    • இது காரின் டாப் எண்ட் மாடல்களில் 360-டிகிரி கேமரா அமைப்பு மற்றும் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களைச் சேர்ப்பதற்கு வழிவகுக்கும்.
    • இயந்திர ரீதியாக, பன்ச் ஃபேஸ்லிஃப்ட் தற்போதுள்ள 1.2 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினுடன் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வருகிற 13ஆம் தேதி இந்திய சந்தையில் புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மமாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, டாடா மோட்டார்ஸ் வரவிருக்கும் பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் டீசர் படங்களை வெளியிட்டுள்ளது.

    இந்தப் படங்கள் புதுப்பிக்கப்பட்ட மாடலின் ஃபர்ஸ்ட் லுக்கை வழங்குகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிப்புற கூறுகளை முன்னிலைப்படுத்துகின்றன, அதே நேரத்தில் காரை முழுமையாக வெளிப்படுத்துவதை நிறுத்துகின்றன. தற்போது வெளியாகி இருக்கும் படங்கள் புதிய மாடலில் சாத்தியமான அம்சங்கள் புதிதாக வழங்குவதை சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும், இப்போதைக்கு உட்புறம் மறைக்கப்பட்டுள்ளது.

    முன்பக்கத்தில், பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கிடைமட்டமாக நிலைநிறுத்தப்பட்ட LED DRL-களைக் கொண்டுள்ளது. பிரதான ஹெட்லேம்ப் அலகுகள் புதுப்பிக்கப்பட்ட பம்பரின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு, டார்க் சரவுண்ட்களை கொண்டுள்ளன. இத்துடன் கிரில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

    பின்புறம், புதிய LED டெயில்-லேம்ப்கள் உள்ளன. பக்கவாட்டில் இருந்து, டீஸர் படங்கள் மல்டி-ஸ்போக் டிசைனுடன் புதிய டூயல்-டோன் அலாய் வீல்களைக் காட்டுகின்றன. புதுப்பிக்கப்பட்ட சக்கரங்களைத் தவிர, ஒட்டுமொத்த சில்ஹவுட் மற்றும் பாடி கிளாடிங் இந்த கட்டத்தில் ஒரே மாதிரியாகத் தெரிகிறது.

     

    ஸ்டைலிங்கைத் தவிர, டீசர் முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட கேமரா மற்றும் கீழ் கிரில் பகுதிக்குள் ஒரு சென்சார் ஆகியவற்றைக் காட்டுகிறது. இது காரின் டாப் எண்ட் மாடல்களில் 360-டிகிரி கேமரா அமைப்பு மற்றும் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களைச் சேர்ப்பதற்கு வழிவகுக்கும்.

    இயந்திர ரீதியாக, பன்ச் ஃபேஸ்லிஃப்ட் தற்போதுள்ள 1.2 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினுடன் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை பொருத்தப்பட்ட CNG மாறுபாடும் வரிசையில் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்புள்ளது.

    • டர்போ-பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.
    • மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதுவரவு மாடலான சியரா விலை குறித்த அப்டேட்டை வழங்கியுள்ளது. ஏற்கனவே இந்த காரின் சில வேரியண்ட்களின் விலை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இரு வேரியண்ட்களின் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சியரா அக்கம்ப்ளிஷ்டு (Accomplished) மற்றும் அக்கம்ப்ளிஷ்டு+ (Accomplished +) வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலை முறையே ரூ. 17.99 லட்சம் மற்றும் ரூ. 20.29 லட்சம் ஆகும்.

    அக்கம்ப்ளிஷ்டு மற்றும் அக்கம்ப்ளிஷ்டு + ஆகிய இரண்டு வகைகளும் டாடாவின் டைரக்ட் இன்ஜெக்டெட் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் வழங்கப்படுகின்றன. டீசல் என்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அதே நேரத்தில் டர்போ-பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.

    கூடுதலாக, அக்கம்ப்ளிஷ்டு வேரியண்ட் வாங்குபவர்களுக்கு 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் வடிவத்தில் மூன்றாவது பவர்டிரெயின் ஆப்ஷனும் வழங்குகிறது. இது மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

     

    இந்த டாப் வேரியண்ட்கள், குறைந்த வேரியண்ட்களில் இருந்து தனித்து நிற்கும் பிரீமியம் வசதி மற்றும் சவுகரிய அம்சங்களை உள்ளடக்கிய விரிவான உபகரணப் பட்டியலில் இருந்தும் பயன் அடைகின்றன. உபகரணங்களைப் பொறுத்தவரை, லெவல் 2 ADAS, 12-ஸ்பீக்கர் JBL ஆடியோ சிஸ்டம், மெமரி செயல்பாட்டுடன் கூடிய பவர்டு டிரைவர் இருக்கை, பவர்டு டெயில்கேட், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் iRA கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை இதில் அடங்கும்.

    இந்திய சந்தையில் புதிய டாடா சியரா மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி விக்டோரிஸ், ஸ்கோடா குஷாக், டொயோட்டா ஹைரைடர் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றுக்கு போட்டியாக அமைகிறது.

    • டாடா அல்ட்ராஸ் மாடலுக்கு ரூ.85 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.
    • இந்த தள்ளுபடி நகரங்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.

    டாடா நிறுவனம், ஆண்டு இறுதியை முன்னிட்டு தனது கார் மாடல்களுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்துள்ளது. இதன்படி நடப்பு உற்பத்தி ஆண்டு ஹேரியர், சஃபாரி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. இதில் ரொக்க தள்ளுபடி ரூ.75 ஆயிரம் வரை பெறலாம்.

    இந்திய சந்தையில் ஹேரியர் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.14 லட்சம் முதல் ரூ.25.24 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சஃபாரி மாடலின் விலை ரூ.14.66 லட்சம் முதல் ரூ.25.96 லட்சம் வரை ஆகும். இதுபோல் டாடா அல்ட்ராஸ் மாடலுக்கு ரூ.85 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.5 லட்சம் முதல் துவங்குகிறது.

    டாடா பஞ்ச் காருக்கு ரூ.75 ஆயிரம் வரையிலும் (ஷோரூம் விலை ரூ.5.5 லட்சம் முதல்), டியாகோ, டிகோர் கார்களுக்கு ரூ.55 ஆயிரம் வரையிலும் (டியாகோ ரூ.4.57 லட்சம் முதல், டிகோர் ரூ.5.49 லட்சம் முதல்), நெக்சான் (ரூ.7.99 லட்சம் முதல்) மற்றும் கர்வுக்கு (ரூ.9.65 லட்சம் முதல்) ரூ.50 ஆயிரம் வரையிலும் தள்ளுபடி சலுகை பெறலாம். இந்த தள்ளுபடி நகரங்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.

    • புதிய அம்சமாக கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் மாடலில் 2 ஜோன் கான்சியர்ஸ் கிளைமேட் ஏ.சி. பொருத்தப்பட்டுள்ளது.
    • அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    டாடா மோட்டார் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

    டாடா கர்வ் காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 120 எச்.பி. பவரையும், 170 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வேரியண்டும் உள்ளது. இது அதிகபட்சமாக 118 எச்.பி. பவரையும், 260 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும். இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

    டாடா கர்வ் எலெக்ட்ரிக் மாடலில் 45 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 55 கிலோவாட் ஹவர் பேட்டரி வேரியண்ட்கள் உள்ளன. இவை முறையே 150 எச்.பி. பவரையும், 167 எச்.பி. பவரையும் வெளிப்படுத்தும். இரண்டு வேரியண்டும் 210 என்.எம். வரையிலான டார்க்கை வெளிப்படுத்தும்.

    புதிய அம்சமாக கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் மாடலில் 2 ஜோன் கான்சியர்ஸ் கிளைமேட் ஏ.சி. பொருத்தப்பட்டுள்ளது. கர்வ் EV-யில் குரல் மூலம் செயல்படுத்தக்கூடிய பனோரமிக் சன்ரூப், சைகை மூலம் இயக்கக்கூடிய டெயில்கேட், 12.3 அங்குல டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    விலையை பொருத்தவரை புதிய டாடா கர்வ் ரூ.14.55 லட்சம் என்றும் கர்வ் EV சுமார் ரூ.18.49 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    • முதன்முறையாக இந்திய மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்தது.
    • இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ 51 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.

    மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 51 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.

    இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலக கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசு ஒன்றை அறிவித்துள்ளது.

    விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள டாடா சியாரா கார், மகளிர் உலக கோப்பை வென்ற ஒவ்வொரு இந்திய வீராங்கனைகளுக்கு பரிசாக வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • இந்த யூனிட் 143bhp பவர் மற்றும் 215Nm டார்க் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடல்களில் ADAS ஆப்ஷன் பொருத்தப்பட்ட வேரியண்ட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய வேரியண்ட்களின் விலை ரூ. 17.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

    இந்த கார் தற்போது எம்பவர்டு +A 45, எம்பவர்டு +A 45 டார்க், மற்றும் எம்பவர்டு +A 45 ரெட் டார்க் உள்ளிட்ட மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ. 17.29 லட்சம், ரூ. 17.49 லட்சம் மற்றும் ரூ. 17.49 லட்சம் (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ADAS உடன் கூடிய நெக்சான் எலெக்ட்ரிக் மாடலில் லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் சென்டரிங் சிஸ்டம், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் ஹை பீம் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.

    நெக்சான் எலெக்ட்ரிக் மாடலின் டார்க் மற்றும் ரெட் டார்க் மாடல்களைப் பொறுத்தவரை, இந்த வேரியண்ட்களில் பிளாக் பெயின்ட் ஃபினிஷ் மற்றும் பிளாக்டு அவுட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. உள்புறத்தில் ஃபுல் பிளாக் தீம் (டார்க் எடிஷன்) அல்லது பிளாக் மற்றும் ரெட் தீம் (ரெட் டார்க் எடிஷன்) ஆகியவை அடங்கும்.



    இத்துடன் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புறம் சன் ப்ளைண்டுகள், சரவுண்ட் லைட்கள், V2V மற்றும் V2L தொழில்நுட்பங்கள் மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

    ADAS கொண்ட புதிய டாடா நெக்சான் எலெக்ட்ரிக் மாடலில் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 45kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 143bhp பவர் மற்றும் 215Nm டார்க் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

    • புதிய அம்சங்கள் நெக்சான் EV எம்பவர்டு+ A வேரியண்ட் எனப்படும் புதிய வேரியண்டில் கிடைக்கும்.
    • ஒரு முறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடலில் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய வேரியண்ட் விலை விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும். டாடா நிறுவனத்தின் பிரபல எலெக்ட்ரிக் கார் விரைவில் ஒரு குறிப்பிடத்தக்க அப்டேட்டை பெற இருக்கிறது.

    அதன்படி டாடா நிறுவனம் விரைவில் நெக்சான் EV-இல் லெவல் 2 ADAS சூட் பொருத்த இருக்கிறது. டாடா நிறுவனம் தனது சப் 4-மீட்டர் எஸ்யூவிக்கு இதுவரை மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பான ADAS சூட் வழங்கவில்லை. இந்த புதிய அம்சங்கள் நெக்சான் EV எம்பவர்டு+ A வேரியண்ட் எனப்படும் புதிய வேரியண்டில் கிடைக்கும். இதில் A என்ற எழுத்து ADAS சூட்-ஐ குறிக்கிறது.

    புதிய அப்டேட் உடன் வரும் நெக்சான் எலெக்ட்ரிக் காரில் டாடா தற்போது வழங்கும் அனைத்து சலுகைகளுடன் வரும். கூடுதலாக, இது 45kWh பேட்டரி பேக் பதிப்பில் மட்டுமே வழங்கப்படும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

    நெக்சான் EV பெறக்கூடிய லெவல் 2 ADAS அம்சங்களில் ஓட்டுநர் தூக்கத்தில் இருக்கிறாரா என்பதை கண்டறிதல், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ரியர் கிராஸ் டிராஃபிக் அலெர்ட், ரியர் கொலிஷன் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் கொலிஷன் வார்னிங் ஆகியவை அடங்கும்.

    • புதிய CEO-வாக பாலாஜி தேர்வு நவம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார்.
    • பாலாஜி தற்போது டாடா குழுமத்தின் தலைமை நிதி மேலாண்மை அதிகாரியாக பதவி வகித்து வருகிறார்.

    டாடா குழுமம் வசமிருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO-வாக தமிழரான P.B.பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் CEO-வாக அட்ரியன் மார்டெலின் பதவிக் காலம் வருகின்ற அக்டோபர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், புதிய CEO-வாக பாலாஜி தேர்வு நவம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார்.

    தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி, 2017 ஆம் ஆண்டு வரை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழும தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றார். பாலாஜி தற்போது டாடா குழுமத்தின் தலைமை நிதி மேலாண்மை அதிகாரியாக (CFO) பதவி வகித்து வருகிறார்.

    • டாடா கர்வ்வ் மூன்று வெவ்வேறு எஞ்சின் விருப்பங்களுடன் கிடைக்கிறது.
    • 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 116 ஹெச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனத கர்வ் (Curvv) கூப்-எஸ்யூவி மாடலின் விலையை உடனடியாக அமல்படுத்தும் வகையில் திருத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம், கர்வ் மாடலின் விலை இப்போது மாறுபாட்டைப் பொறுத்து ரூ.13,000 வரை அதிகரித்துள்ளது. இதனுடன், மற்ற மாடல்களின் விலைகளிலும் டாடா மோட்டார்ஸ் மாற்றங்களைச் செய்துள்ளது. குறிப்பாக, டியாகோ, டியாகோ NRG மற்றும் டிகோர் மாடல்களின் விலை உயர்ந்துள்ளது.

    திருத்தப்பட்ட விலைகளின் படி டாடா கர்வ் பேஸ் மாடல் ஆரம்ப விலை ரூ. 10 லட்சமாகவே உள்ளது. அக்கம்ப்ளிஷ்டு எஸ் ஜிடிஐ டர்போ பெட்ரோல் MT டார்க் எடிஷன், அக்கம்ப்ளிஷ்டு எஸ் ஜிடிஐ டர்போ பெட்ரோல் DCA டார்க் எடிஷன், அக்கம்ப்ளிஷ்டு ஏ+ ஜிடிஐ டர்போ பெட்ரோல் MT டார்க் எடிஷன், அக்கம்ப்ளிஷ்டு+ ஏ ஜிடிஐ டர்போ பெட்ரோல் DCA டார்க் எடிஷன், ஸ்மார்ட் டீசல் MT, அக்கம்ப்ளிஷ்டுஎஸ் டீசல் MT டார்க் எடிஷன், அக்கம்ப்ளிஷ்ட எஸ் டீசல் DCA டார்க் எடிஷன், அக்கம்ப்ளிஷ்டு+ ஏ டீசல் MT டார்க் எடிஷன் மற்றும் அக்கம்ப்ளிஷ்டு+ ஏ டீசல் DCA டார்க் எடிஷன் உள்ளிட்ட பல வேரியண்ட்களின் விலைகள் அப்படியே உள்ளன.

    டாடா கர்வ் மாடலின் கிரியேட்டிவ் எஸ் ஜிடிஐ டர்போ-பெட்ரோல் எம்டி, அக்கம்ப்ளிஷ்டு+ ஏ ஜிடிஐ டர்போ-பெட்ரோல் டிசிஏ, கிரியேட்டிவ்+ எஸ் ஜிடிஐ டர்போ-பெட்ரோல் எம்டி, கிரியேட்டிவ்+ எஸ் ஜிடிஐ டர்போ-பெட்ரோல் டிசிஏ, அக்கம்ப்ளிஷ்டு எஸ் ஜிடிஐ டர்போ-பெட்ரோல் எம்டி, அக்கம்ப்ளிஷ்டு+ ஏ ஜிடிஐ டர்போ-பெட்ரோல் எம்டி மற்றும் அக்கம்ப்ளிஷ்டு+ ஏ ஜிடிஐ டர்போ-பெட்ரோல் டிசிஏ மாடல்களுக்கு ரூ.3,000 விலை உயர்வு பொருந்தும். மீதமுள்ள அனைத்து வேரியண்ட்களும் ரூ.13,000 நிலையான விலை மாற்றத்தை பெற்றுள்ளன.

    டாடா கர்வ்வ் மூன்று வெவ்வேறு எஞ்சின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. இரண்டு பெட்ரோல் வகைகள் மற்றும் ஒரு டீசல் யூனிட். 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் 118 ஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது. கர்வ்வின் 1.2 லிட்டர் ஹைபரியன் பெட்ரோல் எஞ்சின் 123 ஹெச்பி பவர் மற்றும் 225 என்எம் டார்க்கை வழங்குகிறது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 116 ஹெச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது.

    ஒவ்வொரு எஞ்சின் தேர்வும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு டிசிஏ உடன் வருகிறது. இந்த விவரக்குறிப்புகளுடன், டாடா கர்வ் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் பிற மாடல்களுடன் போட்டியிடுகிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மூன்று கார்களை விற்பனை செய்து வருகிறது.
    • எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் புது மைல்கல்லை எட்டி அசத்தி உள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பூனேவில் உள்ள உற்பத்தி ஆலையில் இருந்து 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிட்டு உள்ளது. 50 ஆயிரமாவது யூனிட்டாக டாடா நெக்சான் EV வெளியிடப்பட்டது. இந்த கார் கிளேசியர் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

    இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV, டிகோர் EV மற்றும் டியாகோ EV என மூன்று எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இது மட்டுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களில் கர்வ் EV, அவினியா மற்றும் அல்ட்ரோஸ் EV உள்ளிட்டவை ப்ரோடக்‌ஷன் நிலையை எட்டும் என தெரிகிறது.

    "இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் நிலையில், வாடிக்கையாளர்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு சேர்க்கும் பொறுப்பு எங்களிடம் இருந்தது. கச்சிதமான வாகனம், நுகர்வோர் எதிர்பார்க்கும் அம்சங்கள் மீது கவனம் செலுத்தினோம்."

    "வாடிக்கையாளர்களுக்கு எளிய, குறைந்த விலை தீர்வுகளை வழங்க டாடா குழும நிறுவனங்களுடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகன துறையை உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவில் 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை கொண்டாடுவது, மக்கள் எங்களின் தயாரிப்புகளை எந்த அளவுக்கு ஏற்று கொண்டுள்ளனர் என்பதற்கு சான்றாக விளங்குகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருள் விலை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றை தவிர்க்க சரியான மாற்று எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும்."

    "தற்போது வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்க தயாராகி விட்டனர். முன்கூட்டியே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க செய்ததோடு, இந்திய வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முதன்மை பிராண்டாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்." என டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனம் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவு நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார்.

    ×