என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு சியாரா கார் பரிசு - டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு
    X

    உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு சியாரா கார் பரிசு - டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு

    • முதன்முறையாக இந்திய மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்தது.
    • இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ 51 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.

    மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 51 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.

    இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலக கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசு ஒன்றை அறிவித்துள்ளது.

    விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள டாடா சியாரா கார், மகளிர் உலக கோப்பை வென்ற ஒவ்வொரு இந்திய வீராங்கனைகளுக்கு பரிசாக வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×