search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's World Cup"

    • ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
    • ஜாம்பியா அணி 3-1 என்ற கணக்கில் கோஸ்ட்டா ரிக்காவை வீழ்த்தியது.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது.

    இன்று சி பிரிவில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் ஜப்பான் வீராங்கனையான ஹினாட்டா இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். முதல் கோலை 12-வது நிமிடத்திலும், 2-வது கோலை 40-வது நிமிடத்திலும் அடித்தார். மேலும் 29-வது நிமிடத்தில் ரிகோவும் 82-வது நிமிடத்தில் மினா டனாகாவும் கோல் அடித்தனர்.

    இறுதியில் ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய ஸ்பெயின் அணி ஒரு கோலை கூட பதிவு செய்யாமல் பரிதாபமாக தோல்வியை தழுவியது.

    இதனை தொடர்ந்து சி பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா மற்றும் ஜாம்பியா நாடுகள் மோதின. இதில் ஜாம்பியா அணி 3-1 என்ற கணக்கில் கோஸ்ட்டா ரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பையில் ஜாம்பியா தனது முதல் வெற்றியைப் பெற்றது. இரு அணிகளும் ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கான போட்டியில் இருந்து வெளியேறி விட்டன.

    • பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் டிக்கெட் விற்பனையை விட அதிகம்.

    9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 20ம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

    பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கிய நிலையில், இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.

    இது, கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியின் மொத்த டிக்கெட் விற்பனையைவிட இது அதிகமாகும்.

    • இந்திய பெண்கள் கால்பந்து அணியின் கேப்டன் வீட்டில் அடிப்படை வசதி இல்லை.
    • அஸ்டம் ஊருக்கு தார்சாலை அமைக்கும் பணியில் அவரது பெற்றோரும் கலந்து கொண்டு தினக்கூலியாக வேலை செய்தனர்.

    திருப்பதி:

    ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் அஸ்டம் (வயது 17). இவர் 17 வயதுக்கு உட்பட்டவர்க்கான இந்திய பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக உள்ளார். இவருடன் பிறந்தவர்கள் 5 பேர். இவரது பெற்றோர் தினமும் கூலி வேலை செய்தால் மட்டுமே சாப்பிட முடியும்.

    தனது மகள் இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தாலும் இவர்கள் தினமும் கூலி வேலை செய்து வந்தனர்.

    அஸ்டம் வசித்து வரும் ஊரில் யார் வீட்டிலும் டிவி இல்லை. அஸ்டம் இந்திய அணிக்காக விளையாடுவதை டிவியில் பார்க்க வேண்டும் என அவரது பெற்றோர் ஆசைப்பட்டனர்.

    வீட்டில் டிவி வாங்குவதற்காக கூலி வேலை செய்து வரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து வந்தனர்.


    அஸ்டமின் வீட்டில் டிவி இல்லை என்பது குறித்து ஒரு சில பத்திரிகைகளில் செய்தி வந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அஸ்டமின் வீட்டிற்கு டி.வி, இன்வெர்ட்டர், டி.டி.எச் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகளை செய்து தந்தனர். மேலும் அவரது ஊருக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


    அஸ்டம் ஊருக்கு தார்சாலை அமைக்கும் பணியில் அவரது பெற்றோரும் கலந்து கொண்டு தினக்கூலியாக வேலை செய்தனர்.

    ×