என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்மன்ப்ரீத் கவுர்"

    • மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
    • அடுத்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று ஹர்மன்பிரீத் கவுரின் மெழுகு சிலை திறந்து வைக்கப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நஹர்கர் கோட்டையில் உள்ள ஷீஸ் மஹாலில் மெழுகு சிலை செய்து வைக்கப்படும் என அந்தக் கண்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    வரும் 2026ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று ஹர்மன்பிரீத் கவுரின் மெழுகு சிலை திறந்து வைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, ஆடவர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு இங்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

    • முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.
    • 50 ஓவர் உலக கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார்.

    மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.

    இந்திய ஆண்கள் அணி இதற்கு முன் 50 ஓவர் உலக கோப்பையை 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் வென்றுள்ளது. அதன்பின் 2011ஆம் ஆண்டு எம்.எஸ். டோனி தலைமையில் வென்றுள்ளது.

    தற்போது மகளிர் அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. ஆண்கள் மற்றும் மகளிர் என இந்தியாவுக்கு 50 ஓவர் உலக கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார்.

    இந்நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு சிறந்த பேட்டர் மற்றும் ஃபீல்டர். அவர் இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினால் கேப்டன் பதவியின் சுமை இல்லாமல் இருந்தால் அவரால் இன்னும் சிறப்பாக அணிக்கு பங்களிக்க முடியும்" என்று தெரிவித்தார்.

    • 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா 50 ஓவர் உலக கோப்பையை வென்றது.
    • 2011-ல் டோனி தலைமையில் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா வென்றது.

    மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.

    இந்திய ஆண்கள் அணி இதற்கு முன் 50 ஓவர் உலக கோப்பையை 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் வென்றுள்ளது. அதன்பின் 2011ஆம் ஆண்டு எம்.எஸ். டோனி தலைமையில் வென்றுள்ளது.

    தற்போது மகளிர் அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. ஆண்கள் மற்றும் மகளிர் என இந்தியாவுக்கு 50 ஓவர் உலக கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து ஹர்மன்ப்ரீத் கவுரை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
    • ஹர்மன்ப்ரீத் கவுர், உலக கோப்பையுடன் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், உலக கோப்பையுடன் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    அப்புகைப்படத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரின் டி சர்ட்டில் கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு மட்டுமல்ல , அனைவருக்குமான விளையாட்டு" என்று எழுதப்பட்டுள்ளது.

    முன்னதாக கால்பந்து உலக கோப்பையை வென்ற மெஸ்ஸி, டி20 உலக கோப்பையை வென்ற ரோகித் ஆகியோர் உலக கோப்பையுடன் தூங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் நாளை இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • இந்தியா முதன்முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. நாளை இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    பொதுவாக இந்திய ஆண்கள் அணி விளையாடும்போது, ரசிகர்கள் அதிக அளவில் நேரில் வந்து பார்ப்பார்கள். பெண் ரசிகர்களும் அதிக அளவில் திரள்வார்கள். இதனால் வீரர்களிடம் டிக்கெட் வாங்கித் தருமாறு நெருங்கிய வட்டாரங்கள் வேண்டுகோள் விடுக்கும். ஆனால், பெண்கள் கிரிக்கெட்டிற்கு அவ்வாறு கூடுவது கிடையாது.

    ஆனால், இந்த இறுதிப் போட்டியை பார்க்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்திய வீராங்கனைகளிடம் டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்யுமாறு பலர் அன்புத்தொல்லை கொடுப்பதாக ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

    நெருக்கடி கிரிக்கெட்டில் மட்டுமல்ல, உலக கோப்பை இறுதி போட்டி டிக்கெட்டிற்கும்தான். இது சிறந்ததது. கிரிக்கெட் வளர்ச்சிக்கு சாதகமான அறிகுறி.

    "தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறும்போது, நாம் அதிகமான மாற்றங்களை கிரிக்கெட்டில் பார்க்கலாம். கிரிக்கெட் இன்னும் அதிக வளர்ச்சியை பெறும். அது சர்வதேச அளவில் மட்டுமல்ல. உள்ளூர் அளவில் வளர்ச்சி பெறும். பெண்கள் கிரிக்கெட் இன்றும் அதிகமான சீரியஸ் தன்மை மற்றும் அதிக பார்வையாளர்களை பெறுவதை பார்க்க, நாங்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

    • விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர்.
    • மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கு எடுத்துள்ளது.

    149 போட்டிகளில் விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 2992 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 8 ரன்கள் எடுத்தபோது 3 ஆயிரம் ரன்களை எடுத்தார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 150 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்த ரன்களை கடந்திருக்கிறார். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர்.

    33 வயதாகும் ஹர்மன்ப்ரீத் கவுர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்சமாக 103 ரன்களை எடுத்துள்ளார். இது எந்தவொரு இந்திய வீராங்கனையும் செய்யாத சாதனையாகும். இதேபோன்று சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களை (70) அடித்த வீராங்கனை என்ற ரிக்கார்டையும் அவர் ஏற்படுத்தியுள்ளார்.

    இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் டி20 உலகக்கோப்பை தொடரில் 13 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தார். இந்த சாதனையையும் ஹர்மன்ப்ரீத் கவுர் (14) முறியடித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அனைத்து டி20 உலகக்கோப்பை போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர். மொத்தம் 34 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 500 ரன்களை எடுத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கு எடுத்துள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் மார்ச் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
    • 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் டோனி ரன் அவுட் ஆனார்.

    இந்திய அணி முன்னாள் கேப்டன் டோனிக்கு நடந்த அதே கொடுமை ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் நடந்ததால் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

    மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டி நேற்று கேப்டவுனில் நடைபெற்றது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது.

    இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு பேட்டிங் மோசமாக சொதப்பியது. ஓப்பனிங் பேட்டர்கள் சஃபாலி வெர்மா 9 ரன்களுக்கும், ஸ்மிருதி மந்தனா 2 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய யாஷ்டிகா பாட்டியா வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவூர் 52 ரன்களும், ஜெமிமா 42 ரன்களும் மட்டுமே அடிக்க 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

    இந்நிலையில் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது இந்தியா நிறைய விக்கெட்களை இழந்து தடுமாறிய போது டோனி தான் நம்பிக்கை தந்தார். எனினும் அவர் நூலிழையில் ரன் அவுட்டாகி உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. அதே சம்பவம் தான் தற்போதும் நடந்துள்ளது.


    டோனியை போலவே நம்பர் 7 ஜெர்சி அணியும் மகளிர் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 52 ரன்கள் அடித்து சிறப்பாக ஆடி வந்தார். 14.4வது ஓவரில் மிட் விக்கெட்டில் ஸ்வீப் ஷாட் ஆடினார். அப்போது அதனை டைவ் அடித்து பிடித்த கார்ட்னர் வேகமாக ஸ்டம்பிற்கு அனுப்பிவிட்டார். இதனால் கிட்டத்தட்ட கிறீஸை நெருங்கிவிட்ட ஹர்மன்ப்ரீத் கவுர் துரதிஷ்டவசமாக தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    இத்துடன் இந்தியாவின் டி20 உலகக்கோப்பை கனவும் தகர்ந்தது. இதனை நினைவுக்கூர்ந்து இருவரும் ரன் அவுட் ஆன வீடியோவை ரசிகர்கள் வேதனையுடன் பகிர்ந்து வருகின்றனர். 

    • விஸ்டன் பத்திரிகை முதல் 5 ஆட்டக்காரர்களின் பட்டியலில் கவுரை குறிப்பிட்டது
    • டைம் பத்திரிகையின் 100 நெக்ஸ்ட் பட்டியலில் கவுர் பெயர் இடம்பெற்றது

    15 வருடங்களாக சர்வதேச பெண்கள் கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளை புரிந்து வருபவர், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (34).

    பெண்கள் டி20 (T20) கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடித்த முதல் வீராங்கனை ஹர்மன்ப்ரீத்.

    கடந்த பிப்ரவரி மாதம் அவரது சாதனைகளில் ஒன்றாக 150 டி20 போட்டிகளில் விளையாடியவர் எனும் புகழ் பெற்றார்.

    மேலும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஸ்மிருதி மந்தானாவுடன் இணை கேப்டனாக தங்க பதக்கம் வென்றார்.

    கிரிக்கெட் சாதனைகளை குறித்த பதிவுகளை வெளியிடும் பிரபல "விஸ்டன்" (Wisden) பத்திரிகை, இவ்வருடத்தின் முதல் 5 கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் பெயரை குறிப்பிட்டது.

    தாக்கத்தை ஏற்படுத்திய முதல் 100 பெண்மணிகள் பட்டியலில் பிபிசி (BBC) செய்தி நிறுவனம் ஹர்மன்ப்ரீத் பெயரையும் சேர்த்தது. அதே போன்று, டைம் (TIME) பத்திரிகை வெளியிட்ட "100 நெக்ஸ்ட்" (100 Next) பட்டியலில் இவர் பெயர் இடம் பெற்றது.

    பிற விளையாட்டுகளை விட கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இந்திய மக்களிடையே பெண்கள் கிரிக்கெட்டிற்கும் ஆர்வம் ஏற்பட வைத்த பெருமைக்குரியவர்களில் ஹர்மன்ப்ரீத் ஒருவர். இவரது சாதனைகள் இந்திய பெண்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு வளர காரணமாக இருப்பதாக விமர்சகர்கள் ஒப்பு கொள்கின்றனர்.

    பஞ்சாப் மாநில மோகா பகுதியை சேர்ந்தவரான ஹர்மன்ப்ரீத் கவுர், நடுத்தர சீக்கிய குடும்பத்தை சேர்ந்தவர். கமல்தீஷ் சிங் சோதி என்பவரிடம் பயிற்சி எடுத்து கொள்ள தொடங்கியதும், ஹர்மன்ப்ரீத்தின் விளையாட்டு பயணம் ஏறுமுகத்தை காண தொடங்கியது.

    கடந்த வருடம் பெண்கள் கிரிக்கெட்டில் புகழ் பெற்ற மிதாலி ராஜ் ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு பெண்கள் கிரிக்கெட்டை அனைத்து வடிவங்களிலும் அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து செல்பவர்களில் ஒருவராக ஹர்மன்ப்ரீத் திகழ்கிறார்.

    ஹர்மன்ப்ரீத் இதுவரை 290 சர்வதேச போட்டிகளில் விளையாடி 6,500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

    அவ்வப்போது விளையாட்டு மைதானத்தில் கோபத்தை வெளிப்படுத்துபவராக பார்க்கப்பட்டாலும் விரைவில் பக்குவமுள்ள பவர் ஹிட்டராக (power hitter) கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்ப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×