என் மலர்
நீங்கள் தேடியது "Women's World Cup Cricket"
- 2 நாள் ஓய்வுக்குப் பிறகு இறுதிப்போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஓய். படேல் ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது.
- இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் முதல் முறையாக கோப்பையை வெல்ல உள்ளனர்.
நவிமும்பை:
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தொடங்கியது.
இந்தியா, இலங்கையில் நடைபெற்ற இந்த போட்டியில் 8 நாடுகள் பங்கேற்றன. கடந்த 26-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகியவை முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின. இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.
29-ந்தேதி கவுகாத்தியில் நடந்த முதல் அரை இறுதியில் தென்ஆப்பிரிக்கா 125 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடைபெற்ற 2-வது அரை இறுதியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும் தோற்கடித்தன.
2 நாள் ஓய்வுக்குப் பிறகு இறுதிப்போட்டி நவிமும் பையில் உள்ள டி.ஓய். படேல் ஸ்டேடியத்தில் நாளை (2-ந்தேதி) மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்க அணிகள் சாம்பியன் பட்டத்துக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.
இறுதிப்போட்டிக்கு முன் இரு அணி கேப்டன்களும் போட்டோஷூட் நடத்துவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் நாளை நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் அணி கேப்டனும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி கேப்டனும் கோப்பையுடன் போட்டோஷூட் எடுத்துக் கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்களை ஐசிசி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று நாடே ஆவலுடன் எதிா்பார்க்கிறது.
3-வது தடவையாக இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.இதற்கு முன்பு 2005-ல் ஆஸ்திரேலியாவிடமும் (98 ரன்), 2017-ல் இங்கிலாந்திடமும் (9 ரன்) தோற்று கோப்பையை இழந்தது.
இந்திய அணி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு பதிலடி கொடுத்து சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 339 ரன் இலக்கை எடுத்து சாதனை படைத்ததால் இறுதிப் போட்டியில் இந்தியா நம்பிக்கையுடன் விளையாடும்.
பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா (1 சதம், 2 அரை சதத்துடன் 389 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (1 சதம், 1 அரை சதத்துடன் 268 ரன்), கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர் (2 அரை சதத்துடன் 240 ரன்), ரிச்சா கோஷ் (1 அரை சதத்துடன் 201 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் தீப்தி சர்மா (17 விக்கெட்), ஸ்ரீசரணி (13 விக்கெட்) , கிராந்தி கவூட் (9 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
லாரா வால்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் முதல் தடவையாக உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. அந்த அணி முதல் முறையாக இறுதி ஆட்டத்தில் ஆடுகிறது.
இந்தியாவை ஏற்கனவே வீழ்த்தி இருப்பதால் நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா சமபலத்துடன் திகழ்கிறது.
இரு அணிகளும் 34 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 20-ல், தென் ஆப்பிரிக்கா 13-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.
- இந்த இலக்கை நிர்ணித்த போது பாதி வேலை முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன்.
- தோல்வி அடைந்து பேசும் இடத்தில் நான் இருப்பது கொஞ்சம் வினோதமாக தான் இருக்கின்றது.
மும்பை:
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹெலி,
இந்த போட்டி மிகவும் அற்புதமாக இருந்தது. ஆனால் இந்த தோல்விக்கு நாங்கள் தான் காரணம் எங்களுடைய அணியின் பேட்டிங்கை நாங்கள் சிறப்பாக முடிக்கவில்லை. இதே போல் எங்களுடைய பந்துவீச்சும் சிறப்பாக இல்லை. சில கேட்ச்களையும் நாங்கள் தவறவிட்டோம்.
இறுதியில் தோல்வியை தழுவியது மிகவும் ஏமாற்றமாக இருக்கின்றது. பல வாய்ப்புகளை உருவாக்கினோம். ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை. அதற்கு நானும் ஒரு காரணம் என்று தான் சொல்வேன்.
இந்த இலக்கை நிர்ணித்த போது பாதி வேலை முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன். கூடுதலாக சில ரன்ளை அடித்திருக்க வேண்டும். இந்தியா வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டார்கள். நெருக்கடியான சமயத்தில் அபாரமாக பேட்டிங் செய்து வெற்றியை தாண்டி விட்டார்கள்.
தோல்வி அடைந்து பேசும் இடத்தில் நான் இருப்பது கொஞ்சம் வினோதமாக தான் இருக்கின்றது. இனி அடுத்த உலக கோப்பை நோக்கி திட்டங்களை தீட்ட வேண்டியது தான். அடுத்த உலகக்கோப்பை நிச்சயம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் கண்டிப்பாக அடுத்த உலகக் கோப்பையில் நான் விளையாட மாட்டேன்.
மகளிர் கிரிக்கெட் விளையாடுவதில் எங்களுக்கு பெருமை . ஆனால் இந்த போட்டியில் தோல்விக்கு நாங்கள்தான் காரணம். கண்டிப்பாக எங்கள் தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம்.
என்று அலிசா ஹெலி தெரிவித்துள்ளார்.
- 4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி 9-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் ஆர்வத்தில் உள்ளது.
- தென்ஆப்பிரிக்கா இதுவரை இறுதிப் போட்டிக்கு நுழைந்தது கிடையாது.
கவுகாத்தி:
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த 30-ந் தேதி இந்தியா, இலங்கையில் தொடங்கியது.
8 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் கடந்த 26-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
லீக் முடிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.
2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு முதல் அரைஇறுதி ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை (புதன் கிழமை) நடக்கிறது. இதில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுப்போவது யார்? என்ற ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி 9-வது தடவையாக இறுதிப் போட் டிக்கு தகுதிபெறும் ஆர்வத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா இதுவரை இறுதிப் போட்டிக்கு நுழைந்தது கிடையாது. 3 தடவை அரை இறுதியில் தோற்றது. முதல் முறையாக இறுதிப்போட்டி வேட்கையில் உள்ளது.
இரு அணிகளும் கடந்த 3-ந்தேதி கவுகாத்தியில் மோதிய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 69 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை சுருட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். தென்ஆப்பிரிக்கா பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.
- கடந்த 12-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
- இந்த மோதலில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடர்ல் கடந்த 12-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த மோதலில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு ஓவர் வீச தாமதமானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- நடப்பு தொடரில் மழையால் ரத்தான 2-வது ஆட்டம் இதுவாகும்.
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் கொழும்பில் நேற்று நடந்த 15-வது லீக்கில் இலங்கை அணி, முன்னாள் சாம்பியனான நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்தது. உலகக் கோப்பையில் இலங்கையின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கேப்டன் சமாரி அட்டப்பட்டு (53 ரன்), நிலக்ஷிகா சில்வா (55 ரன், 28 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் விளாசினர்.
ஆனால் இலங்கையின் இன்னிங்ஸ் முடிந்ததும் மழை புகுந்து விளையாடியது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. நடப்பு தொடரில் மழையால் ரத்தான 2-வது ஆட்டம் இதுவாகும்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா- இலங்கை இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இதே மைதானத்தில் இன்று நடக்கும் 16-வது லீக்கில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் (பிற்பகல் 3 மணி) மோதுகின்றன.
- இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் போட்டியில் நாளை மோதுவது 12-வது முறையாகும்.
- பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை நடந்த 11 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றிபெற்றது.
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ( 50 ஓவர்) இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.
கொழும்பில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர், தீப்தி சர்மா, அமன் ஜோத் கவூர்,ஹார்லீன் தியோல், தீப்தி சர்மா, சினே ராணா , ஸ்ரீ சரணி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் மோதுவது இது 12-வது முறையாகும். இதுவரை நடந்த 11 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றிபெற்றது. நாளையும் இந்தியாவின் வெற்றி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கொழும்பில் இன்று நடைபெற இருந்த 5-வது லீக்கில் ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோத இருந்தது.
- கனமழை பெய்ததால் டாஸ் கூட போட முடியாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.
13-வது மகளிர்உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் கொழும்பில் இன்று நடைபெற இருந்த 5-வது லீக்கில் நடப்பு சாம்பியனான அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கையை எதிர்கொள்ள இருந்தது.
இந்த நிலையில் கனமழை பெய்ததால் டாஸ் கூட போட முடியாமல் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
- இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் நாளை மோதுவது 12-வது முறையாகும்.
- இதுவரை நடந்த 11 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றிபெற்றது.
கொழும்பு:
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ( 50 ஓவர்) இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.
8 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 59 ரன்னில் இலங்கையையும், 2-வது போட்டியில் (இந்தூர்) நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 89 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும், 3-வது ஆட்டத்தில்(கொழும்பு) வங்காளதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 4-வது போட்டியில் (கவுகாத்தி) இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவையும் தோற்கடித்தன. இன்று நடைபெறும் 5-வது ஆட்டத்தில் (கொழும்பு) ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.
கொழும்பில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர், தீப்தி சர்மா, அமன் ஜோத் கவூர்,ஹார்லீன் தியோல், தீப்தி சர்மா, சினே ராணா , ஸ்ரீ சரணி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் நாளை மோதுவது 12-வது முறையாகும். இதுவரை நடந்த 11 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றிபெற்றது. நாளையும் இந்தியாவின் வெற்றி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- முதல் போட்டியில் இலங்கையை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
- வருகிற ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.
பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வராது என்பதால் அந்த அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கை மண்ணில் ஆடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை எட்டினால், இறுதி ஆட்டம் கொழும்பில் நடக்கும். இல்லாவிட்டால் நவிமும்பையில் அரங்கேறும். 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டி திரும்பியிருக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இலங்கையை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 269 ரன்கள் அடித்த நிலையில், இலங்கை அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் கை குலுக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், மகளிர் உலக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைகுலுக்க வேண்டாம் என இந்திய வீராங்கனைகளுக்கு பி.சி.சி.ஐ அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், கிரிக்கெட்டின் அனைத்து விதிமுறைகள் இந்தப்போட்டியின் போது முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும் கை குலுக்குதல் அல்லது வீராங்கனைனகள் சகஜமாகப் பேசிக்கொள்வது போன்ற விஷயங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று பி.சி.சி.ஐ. செயலாளர் கூறியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 2025 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுடனான போட்டிகளின் போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, கை குலுக்கும் வழக்கத்தைத் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
- அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
- இந்திய அணி உலகக் கோப்பையை ஒரு போதும் வென்றதில்லை.
கவுகாத்தி:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகமாகி, 4 ஆண்டுக்கு ஒரு முறை (தவிர்க்க முடியாத காரணத்தால் சில தடவை தாமதம் ஆகியிருக்கிறது) நடத்தப்படுகிறது.
இதன்படி 13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வராது என்பதால் அந்த அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கை மண்ணில் ஆடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை எட்டினால், இறுதி ஆட்டம் கொழும்பில் நடக்கும். இல்லாவிட்டால் நவிமும்பையில் அரங்கேறும். 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டி திரும்பியிருக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீராங்கனைகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அணி உலகக் கோப்பையை ஒரு போதும் வென்றதில்லை. அதிகபட்சமாக 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதி ஆட்டங்களில் தோற்று இருக்கிறது. இந்திய கேப்டன் 36 வயதான ஹர்மன்பிரீத் கவுருக்கு இது 5-வது உலகக் கோப்பை போட்டியாகும். அனேகமாக அவருக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும். சொந்த மண்ணில் முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்தும் உத்வேகத்துடன் ஆயத்தமாகும் இந்திய அணியில் ஸ்மிர்தி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், கிரந்தி கவுட் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாகும்.
சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியை கூட நெருங்கியதில்லை. தான் ஓய்வு பெறுவதற்குள் அரைஇறுதியில் கால்பதித்து விட வேண்டும் என்பதே தனது கனவு என கேப்டனும், ஆல்-ரவுண்டருமான சமாரி அட்டப்பட்டு கூறியிருக்கிறார். ஆனால் சமாரி அட்டப்பட்டு தான் இலங்கையின் ஆணி வேர். அவர் ஜொலிப்பதை பொறுத்தே அவர்களின் வெற்றி வாய்ப்பு அமையும். போட்டியை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் ஆர்வம் காட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இவ்விரு அணிகள் இதுவரை 35 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31-ல் இந்தியாவும், 3-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
போட்டிக்கான இரு அணி வீராங்கனைகள் வருமாறு:-
இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், உமா சேத்ரி, ரிச்சா கோஷ், கிரந்தி கவுட், அமன்ஜோத் கவுர், சினே ராணா, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ஸ்ரீ சரனி, ராதா யாதவ்.
இலங்கை: சமாரி அட்டப்பட்டு (கேப்டன்), அனுஷ்கா சஞ்சீவானி, கவிஷா தில்ஹரி, இமிஷா துலானி, விஷ்மி குணரத்னே, அச்சினி குலசூர்யா, சுகந்திகா குமாரி, மால்கி மதரா, ஹாசினி பெரேரா, வத்சலா, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரனவீரா, ஹர்ஷிகா சமரவிக்ரமா, நிலக்ஷிகா சில்வா, தேமி விஹாங்கா.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதுகின்றன.
- அலிசா ஹீலி தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலியா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் அனைத்திலும் திடமான ஒரு அணியாக வலம் வருகிறது.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. கவுகாத்தியில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
பங்கேற்கும் 8 அணிகளில் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருப்பது யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலியா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் அனைத்திலும் திடமான ஒரு அணியாக வலம் வருகிறது. 7 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா அந்த எண்ணிக்கையை 8-ஆக உயர்த்த கங்கணம் கட்டுகிறது. 2024-ம் ஆண்டில் இருந்து 18 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 16-ல் வெற்றி கண்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதில் டெல்லியில் நடந்த ஆட்டத்தில் 412 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. கேப்டன் ஹீலியுடன் எலிஸ் பெர்ரி, பெத் மூனி, ஆஷ்லி கார்ட்னெர், தாலியா மெக்ராத், ஜார்ஜியா வோல், லிட்ச்பீல்டு, மேகன் ஸ்கட், சுதர்லாண்ட் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே ஆஸ்திரேலிய அணியில் அணிவகுத்து நிற்கிறார்கள். கோப்பையை வெல்ல அவர்களுக்கே பிரகாசமான வாய்ப்பு என்பதில் மாற்று கருத்து இல்லை.
இந்தியா: சொந்த மண்ணில் ஆடுவது இந்தியாவுக்கு அனுகூலமாகும். இதுவரை எந்த உலகக் கோப்பையும் வெல்லாத இந்தியா இந்த முறை இறுதிதடையை வெற்றிகரமாக உடைப்ேபாம் என கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சூளுரைத்துள்ளார். 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறியதே இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும். உலகின் 'நம்பர் ஒன்' பேட்டரான ஸ்மிர்தி மந்தனாவைத் தான் இந்திய அணி மலைபோல் நம்பி உள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 50 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்தார். 2025-ம் ஆண்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் (928 ரன்) முதலிடம் வகிக்கிறார்.
மேலும் இந்த ஆண்டில் இந்திய அணி ஆடிய 14 ஆட்டங்களில் 10-ல் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் ஒரு முறை பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும் அடங்கும். மந்தனாவுடன், 5-வது முறையாக உலகக் கோப்பையில் கால்பதிக்கும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ், ரேணுகா சிங், சினே ராணா, கிரந்தி கவுட் உள்ளிட்டோர் நெருக்கடியை திறம்பட கையாண்டு ஒருங்கிணைந்து செயல்படும் பட்சத்தில், கோப்பையை கையில் ஏந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை.
இங்கிலாந்து: 4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி நாட் சிவெர் தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. ஆல்-ரவுண்டரான நாட் சிவெர் தான் அந்த அணியின் முதுகெலும்பு. 2017-ம் ஆண்டு உலகக் கோப்பையை அந்த அணி உச்சிமுகர்ந்த போது, அந்த தொடரில் 2 சதங்கள் அடித்தார். 2022-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற போது கூட அதிலும் செஞ்சுரி கண்டார். அண்மை கால தடுமாற்றத்தை சமாளித்து இங்கிலாந்து மீண்டெழுவதற்கு அவர் கைகொடுக்க வேண்டியது அவசியமாகும். மற்றபடி சோபி எக்லெஸ்டோன், சார்லி டீன், டாமி பீமோன்ட், டேனி வியாட், விக்கெட் கீப்பர் அமெ ஜோன்ஸ், ஹீதர் நைட், அலிஸ் கேப்சி நம்பிக்கை அளிக்கிறார்கள்.
நியூசிலாந்து: கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை சொந்தமாக்கிய நியூசிலாந்து, இப்போது 50 ஓவர் உலகக் கோப்பைக்கு குறி வைத்துள்ளது. கேப்டன் சோபி டிவைன் உலகக் கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அனுபவமும், இளமையும் கலந்த அணியாக நியூசிலாந்து திகழ்கிறது. சுசி பேட்ஸ், லியா தஹூதஹூ, அமெலியா கெர், மேடி கிரீன், ஜார்ஜியா பிளிமெர் பலம் சேர்க்கிறார்கள். கடந்த 6 மாதங்களாக நியூசிலாந்து எந்த ஒரு நாள் போட்டியிலும் விளையாடவில்லை. ஆனாலும் கடந்த மாதம் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள சூழலுக்கு ஏற்ப பழக்கப்படுத்திக் கொள்ள 2 வாரம் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டனர். எப்படியும் அவர்கள் டாப்-4 அணிக்குள் ஒன்றாக அரைஇறுதியை எட்டி விடுவார்கள் என்பதே நிபுணர்களின் கணிப்பு.
தென்ஆப்பிரிக்கா: கடந்த இரு உலகக் கோப்பை தொடர்களில் அரைஇறுதிக்கு வந்திருந்த தென்ஆப்பிரிக்கா இந்த முறை மேலும் ஒரு அடி முன்னேறி முதல்முறையாக இறுதி சுற்றை எட்டுவோம் என்று கூறியுள்ளது. இந்த தடவை தாங்கள் மிகவும் வலுவான அணியாக இருப்பதாக கேப்டன் லாரா வோல்வார்ட் கூறுகிறார். அவருடன், 'ஹாட்ரிக்' சதம் அடித்துள்ள தஸ்மின் பிரிட்ஸ், நடினே டி கிளெர்க், மரிஜானே காப் ஆகியோர் அந்த அணியின் கவனிக்கத்தக்க வீராங்கனைகளாக உள்ளனர். இவர்கள் ஜொலிப்பதை பொறுத்தே தென்ஆப்பிரிக்காவின் வீறுநடை அமையும்.
மற்ற அணிகளான இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் இதுவரை அரைஇறுதிக்கு கூட நெருங்கியதில்லை. அவர்களை பொறுத்தவரை அது தான் அவர்களின் முதல் குறி. இதில் சொந்த மண்ணில் பெரும்பாலான ஆட்டங்களில் விளையாடும் சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அதிர்ச்சி வைத்தியங்களை அளிக்க ஆயத்தமாகிறது.
- இந்த தொகை 2023 ஆண்கள் உலகக் கோப்பையின் மொத்த பரிசுத்தொகையை விடவும் அதிகமாக உள்ளது.
- 5-வது மற்றும் 6-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு தலா ரூ. 6.18 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி செப்டம்பர் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த போட்டிகள் இந்தியாவில் குவாஹாட்டி, இந்தோர், நவி மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் இலங்கையில் கொழும்பு நகரத்திலும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான தொடருக்கான பரிசுத் தொகையாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதன்படி இந்த தொடருக்கான பரிசுத்தொகையாக ரூ.122 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய பதிப்பை விட 297% அதிகமாகும்.
முக்கியமாக, இந்த தொகை 2023 ஆண்கள் உலகக் கோப்பையின் மொத்த பரிசுத்தொகையை விடவும் அதிகமாக உள்ளது.
அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.39.55 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.19.77 கோடி. அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு ரூ.9.89 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
5-வது மற்றும் 6-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு தலா ரூ. 6.18 கோடியும் 7-வது மற்றும் 8-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு ரூ.2.47 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.






