என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசுத்தொகை"

    • இந்த தொகை 2023 ஆண்கள் உலகக் கோப்பையின் மொத்த பரிசுத்தொகையை விடவும் அதிகமாக உள்ளது.
    • 5-வது மற்றும் 6-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு தலா ரூ. 6.18 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி செப்டம்பர் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இந்த போட்டிகள் இந்தியாவில் குவாஹாட்டி, இந்தோர், நவி மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் இலங்கையில் கொழும்பு நகரத்திலும் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான தொடருக்கான பரிசுத் தொகையாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதன்படி இந்த தொடருக்கான பரிசுத்தொகையாக ரூ.122 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய பதிப்பை விட 297% அதிகமாகும்.

    முக்கியமாக, இந்த தொகை 2023 ஆண்கள் உலகக் கோப்பையின் மொத்த பரிசுத்தொகையை விடவும் அதிகமாக உள்ளது.

    அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.39.55 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.19.77 கோடி. அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு ரூ.9.89 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    5-வது மற்றும் 6-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு தலா ரூ. 6.18 கோடியும் 7-வது மற்றும் 8-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு ரூ.2.47 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.
    • ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்த விஷாலுக்கு சிறப்பு பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 64-வது மாநிலங்கள் இடையேயான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேருஸ்டேடியத்தில் கடந்த 5 தினங்களாக நடைபெற்றது.

    போட்டி முடிவில் தமிழக அணி 11 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களை குவித்தது. இதன் மூலம் ஆண்கள் ( 101 புள்ளிகள்) மற்றும் பெண்கள் ( 90 புள்ளிகள்) அணிகள் பிரி வில் சாம்பியன் பட்டத்தை வென்றது. 195 புள்ளிகளுடன் தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அரியானா 121 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது.

    தனிநபர் சாம்பியன் ஷிப் பட்டத்துக்கு ஆண்கள் பிரிவில் தமிழகத்தின் விஷால் (400 மீட்டர் ஓட்டம்), பெண்கள் பிரிவில் உத்தரகாண்டின் அங்கிதா (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு தடகள சங்க சேர்மன் தேவாரம், தலைவர் ராஜேந்திரன், செயலாளர் லதா, ஆக்கி இந்தியா பொருளாளர் சேகர் மனோகரன், மார்ட்டின் குரூப் நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    தேசிய சீனியர் தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தடகளம் சார்பில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதோடு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

    தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், வெண்கல பதக்கத்துக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்த விஷாலுக்கு சிறப்பு பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

    64-வது தேசிய தடகள போட்டியில் பதக்கத்தை வென்று சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.10 லட்சம் பரிசு தொகை அளிக்கப்பட்டது.தமிழ்நாடு தடகள சங்க சேர்மன் டபிள்யு. ஐ.தேவாரம், தலைவர் டி.கே.ராஜேந்திரன், பொதுச் செயலாளர் சி.லதா ஆகி யோர் விழாவில் பங்கேற்று வீரர், வீராங்கனைகளை பாராட்டி பரிசு தொகைகளை வழங்கினார்கள். 

    • சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.43 கோடி பரிசு தொகை அளிக்கப்படும்.
    • 2-வது இடத்துக்கு தலா ரூ.21.5 கோடி பரிசு தொகை கிடைக்கும்.

    டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாம் போட்டிகளாகும். ஆண்டு தோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) கைப்பற்றினார். அல்காரசுக்கு (ஸ்பெயின்) பிரெஞ்சு ஓபன் பட்டம் கிடைத்தது. பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை மேடிசன் கெய்சும் (அமெரிக்கா), பிரெஞ்சு ஓபனை கோதா கவூப்பும் (அமெரிக்கா) விம்பிள்டன் பட்டத்தை இகாஸ்வியா டெக்கும் (போலந்து) கைப்பற்றினார்கள்.

    ஆண்டின் கடைசி கிராண்ட் சிலாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 24-ந்தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது. செப்டம்பர் 7-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.789 கோடியாக பரிசு தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும்.

    சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.43 கோடி பரிசு தொகை அளிக்கப்படும். 2-வது இடத்துக்கு தலா ரூ.21.5 கோடி பரிசு தொகை கிடைக்கும்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடக்கிறது.
    • இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும்

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்கி, ஜூலை 13-ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது.

    இந்நிலையில், இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அறிவித்துள்ளது.

    இதன்படி, போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும். இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் அதிகமாகும்.

    ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனை தலா ரூ.34 கோடியை பரிசுத் தொகையாக அள்ளுவார்கள். முந்–தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 11.1 சதவீதம் கூடுதலாகும். 2-வது இடத்தைப் பிடிப்போருக்கு ரூ.17¾ கோடி கிடைக்கும்.

    இரட்டையரில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.8 கோடி வழங்கப்படும்.

    ஒற்றையர் முதலாவது சுற்றில் தோற்கும் வீரர், வீராங்கனை கூட ரூ.76 லட்சம் பரிசுடன் தான் வெளியேறுவார்கள்.

    • 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி கிடைக்கும்.
    • 3-வது இடத்துக்கு ரூ.7 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ.6.5 கோடி பரிசு தொகையும் கிடைக்கும்.

    அகமதாபாத்:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கான இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதுவரை சாம்பியன் பட்டம் பெறாத அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இதனால் முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல போவது பெங்களூரா? பஞ்சாப்பா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.சி.பி. 4-வது தடவையாகவும், பஞ்சாப் 2-வது முறையாகவும் இறுதிப் போட்டியில் ஆடுகின்றன.

    இரு அணிகளும் சம்பலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இரு அணிகளும் இன்று மோதுவது 37-வது முறையாகும். இதுவரை நடந்த 36 ஆட்டத்தில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியுடன் தலா 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    இந்த சீசனில் இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. முதல் ஆட்டத்தில் பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றன.

    'குவாலிபையர்1' ஆட்டத்தில் பஞ்சாப்பை 101 ரன்னில் சுருட்டி பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகை வழங்கப்படுகிறது. 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி கிடைக்கும்.

    3-வது இடத்துக்கு ரூ.7 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ.6.5 கோடி பரிசு தொகையும் கிடைக்கும். கடந்த 2022 முதல் இதே பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 

    • இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 30.82 கோடி பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.
    • 3-ம் இடம் பிடித்த இந்தியாவுக்கு ரூ.12.32 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

    2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி லண்டனில் ஜூன் மாதம் 11-15-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 30.82 கோடி பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 18.49 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இறுதிப் போட்டிக்கு ரூ. 49. 28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2 சீசனை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    பார்டர் கவாஸ்கர் தொடரில் தோல்வியுற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும் 3-ம் இடம் பிடித்ததால் இந்தியாவுக்கு ரூ.12.32 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகளின் பரிசுத்தொகை விவரம்:-

    வெற்றி பெற்ற அணிக்கு - ரூ. 30.78 கோடி.

    2-வது இடம் பிடிக்கும் அணிக்கு - ரூ. 18.46 கோடி.

    இந்தியா - ரூ. 12.31கோடி.

    நியூசிலாந்து - ரூ. 10.26கோடி.

    இங்கிலாந்து - ரூ. 8.2கோடி.

    இலங்கை - ரூ. 7.18கோடி.

    வங்கதேசம் - ரூ. 6.15கோடி.

    வெஸ்ட் இண்டீஸ் - ரூ. 5.13கோடி.

    பாகிஸ்தான் - ரூ. 4.10கோடி.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐசிசி-யின் தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்தது.
    • அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இந்திய மதிப்பில் தலா 3.22 கோடி ரூபாய் பரிசு தொகையாக கிடைக்கும்.

    மும்பை:

    8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டு ஓவலில் நேற்று முன்தினம் நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அரையிரயிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பரிசு தொகை எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னர் ஐசிசி அறிவித்தபடி அதன்படி சாம்பியன் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 13,04,90,640) ,. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலரும், அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலரும் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

    அந்த வகையில் அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இந்திய மதிப்பில் தலா 3.22 கோடி ரூபாய் பரிசு தொகையாக கிடைக்கும்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
    • 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வென்றதில்லை.

    மும்பை:

    2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

    இந்திய அணி வீரர்கள் (ஐபிஎல்லில் பங்கேற்காத வீரர்கள்) டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வென்றதில்லை என்ற நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் எண்ணத்துடன் ஆட உள்ளது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.13.2 கோடியும், தோற்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசு தொகை வழங்கபட உள்ளது. இதனை ஐசிசி அறிவித்துள்ளது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூலை 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை லண்டனில் நடக்கிறது.
    • 2019-ம் ஆண்டு கொரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட தற்போது 17.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் முடிந்துவிட்டன. ஆண்கள் ஒற்றையா் பிரிவில் ஜோகோவிச் (செர்பியா) இந்த 2 பட்டத்தையும் கைப்பற்றினார்.

    பெண்கள் ஒன்றையர் பிரிவில் ஷபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், ஸ்வியாடோக் (போலாந்து) பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் வென்றனர்.

    3-வது கிராண்ட்சிலாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூலை 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை லண்டனில் நடக்கிறது.

    இந்த நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மொத்த பரிசுத்தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்தப் போட்டியின் பரிசுத்தொகை ரூ.464 கோடியாகும். இது கடந்த முறை வழங்கப்பட்ட மொத்த பரிசுத் தொகையை விட 11 சதவீதம் அதிகமாகும்.

    ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுவதற்கு தலா ரூ.24.41 கோடி கிடைக்கும். முதல் சுற்றுடன் வெளியேறுபவர்கள் தலா ரூ.57 லட்சம் பெறவார்கள். 2019-ம் ஆண்டு கொரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட தற்போது 17.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 208 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
    • வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசுத்தொகை மற்றும் கேடயங்களை பெற்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 208 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர்.

    பொதுமக்களிடம் மனு க்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த மாணவர்களை கூடைப்பந்து போட்டியில் மாநில அளவில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டில் வெற்றி பெற்று பரிசுத்தொகை மற்றும் கேடயத்தை பெற்றதையொட்டி மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பாராட்டினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.பி.சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஐ.சி.சி. கூட்டம் தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்றது.
    • இதில் திருத்தப்பட்ட புதிய வருவாய் பகிர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    டர்பன்:

    ஐ.சி.சி சார்பில் இனிமேல் நடத்தப்படும் உலக கோப்பை உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு சரிசமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐ.சி.சி.தலைவர் கிரேக் பார்கிளே அறிவித்தார்.

    தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் இருந்து பெண்கள் கிரிக்கெட்டுக்கான பரிசுத்தொகையை அதிகரித்து வருவதாகவும், சரிசம பரிசுத்தொகை வழங்கும் இந்த முடிவு கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார்.

    பல்வேறு நாடுகளில் தற்போது டி20 வடிவிலான லீக் போட்டிகள் தொடங்கப்படுகின்றன. அமெரிக்காவில் எம்.எல்.சி. லீக் நடத்தப்படுகிறது. சவுதிஅரேபியாவிலும் டி20 கிரிக்கெட் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. டி20 லீக்கில் உள்ளூர் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆடும் லெவனில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என ஐ.சி.சி. தெளிவுபடுத்தியுள்ளது. திருத்தப்பட்ட புதிய வருவாய் பகிர்வுக்கும் ஐ.சி.சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

    • திருவாரூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை போட்டி நடைபெற்றது.
    • கலெக்டர் சாருஸ்ரீ மாணவனை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.

    மன்னார்குடி:

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் திருவாரூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை போட்டி நடைபெற்றது.

    இதில் மன்னார்குடி கூட்டுறவு அர்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவன் யோகேஷ்ராஜ் 2-ம் இடம் பிடித்தார்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மாணவனை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.

    பின்னர், மாணவன் யோகேஷ்ராஜையும், அவரது பெற்றோரையும், மாணவனை போட்டிக்கு தயார் செய்த தமிழாசிரியர் ராசகணேசனையும், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் சோழராஜன், துணை தலைவர் கைலாசம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    ×