என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Test Championship Final"

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.
    • இந்த போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில் இறுதிப்போட்டி நடைபெறும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று ஆஸ்திரேலிய அணி பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு எனத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த மைதானத்தில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய அணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட், 20-ம் தேதி லார்ட்ஸில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 30.82 கோடி பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.
    • 3-ம் இடம் பிடித்த இந்தியாவுக்கு ரூ.12.32 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

    2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி லண்டனில் ஜூன் மாதம் 11-15-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 30.82 கோடி பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 18.49 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இறுதிப் போட்டிக்கு ரூ. 49. 28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2 சீசனை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    பார்டர் கவாஸ்கர் தொடரில் தோல்வியுற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும் 3-ம் இடம் பிடித்ததால் இந்தியாவுக்கு ரூ.12.32 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகளின் பரிசுத்தொகை விவரம்:-

    வெற்றி பெற்ற அணிக்கு - ரூ. 30.78 கோடி.

    2-வது இடம் பிடிக்கும் அணிக்கு - ரூ. 18.46 கோடி.

    இந்தியா - ரூ. 12.31கோடி.

    நியூசிலாந்து - ரூ. 10.26கோடி.

    இங்கிலாந்து - ரூ. 8.2கோடி.

    இலங்கை - ரூ. 7.18கோடி.

    வங்கதேசம் - ரூ. 6.15கோடி.

    வெஸ்ட் இண்டீஸ் - ரூ. 5.13கோடி.

    பாகிஸ்தான் - ரூ. 4.10கோடி.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐசிசி-யின் தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
    • இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ந் தேதி தொடங்க உள்ளது.

    2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று காலையும் தென் ஆப்பிரிக்கா அணி தற்போதும் அறிவித்தனர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சேனுரான் முத்துசாமி இடம் பிடித்துள்ளார்

    நாகையை பூர்வீகமாகக் கொண்ட இவர், 2019ல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி இதுவரை 4 டெஸ்டில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ந் தேதி தொடங்க உள்ளது.
    • இந்த போட்டிக்கான இரு அணிகளும் தங்களது அணிகளை அறிவித்துள்ளது.

    2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3 - 1 என வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    மறுபுறம், தென்னாப்பிரிக்காவும் அதிக வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 அன்று தொடங்க உள்ளது.

    இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று காலை அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்டார்க், ஹசில்வுட் ஆகியோர் இந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் டெஸ்ட் தொடருக்காக ஐபிஎல் தொடரில் விலக வாய்ப்பு உள்ளது.

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:-

    உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், மேத்யூ குஹ்னெமன், பிரெண்டன் டாகெட் (டிராவலிங் ரிசர்வ்)

    இந்நிலையில் டெம்பா பவுமா தலைமையிலான 16 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஐபிஎல் தொடரில் முக்கிய பங்கு வகிக்கும் ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன் ஆகியோர் உள்ளனர். இது ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவாக இருக்கும்.

    டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் பட்டுசாமி, டேன் பட்டுசாமி.

    • கடந்த முறை சவுதாம்டனில் வானிலை மிகவும் முக்கிய பங்காற்றியது.
    • வானிலைக்கு ஏற்றார்போல் நான் 12 வீரர்களை தேர்வு செய்கிறேன். எனது 12 வீரர்கள் பட்டியல் மிகவும் தெளிவானது.

    டெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யார்இடம்பெற வேண்டும் என்ற விருப்பத்தை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    மேலும், அணியில் எந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை பார்க்கும்போது கடந்த முறை இறுதிப்போட்டியில் இருந்து நிறைய கற்றுக்கொள்வது முக்கியது. கடந்த முறை சவுதாம்டனில் வானிலை மிகவும் முக்கிய பங்காற்றியது.

    ஆகையால், அதற்கு ஏற்றார்போல் நான் 12 வீரர்களை தேர்வு செய்கிறேன். எனது 12 வீரர்கள் பட்டியல் மிகவும் தெளிவானது. அதில், ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, கோலி, ரஹானே, அடுத்த வீரர்களில் கேஎஸ் பரத்தா அல்லது இஷான் கிஷனா என்பதில் எதிர் அணி 2 சுழப்பந்து வீச்சாளர்களுடன் சென்றால் நான் கேஎஸ் பரத்தை சேர்ப்பேன்.

    ஆனால், எதிர் அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 1 சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடினால் நான் இஷான் கிஷனை தேர்வு செய்வேன். அடுத்து ஜடேஜா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், அஸ்வின், உமேஷ் ஆகியோர் என் தேர்வு செய்யும் வீரர்கள் என ரவி சாஸ்திரி கூறினார்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோசமாக ஆடினார்கள்.
    • அவர் இந்திய அணிக்காக பலமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் ஜூலை 12-ந் தேதி தொடங்குகிறது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    டெஸ்ட் அணியில் இருந்து பேட்ஸ்மேன்களில் புஜராவும், பந்து வீச்சாளர்களில் உமேஷ் யாதவும் நீக்கப்பட்டுள்ளனர். முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான அணியில் ஜெய்ஷ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் டெஸ்ட் அணியில் இருந்து புஜரா நீக்கப்பட்டதற்கு முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். மற்ற வீரர்களுக்காக புஜாராவை மட்டும் பலிகடா ஆக்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    புஜாரா டெஸ்ட் அணியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார்? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோசமாக ஆடினார்கள். மோசமான பேட்டிங்காக புஜராவை மட்டும் பலிகடா ஆக்கியது ஏன்?

    அவர் இந்திய அணிக்காக பலமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் விசுவாசம் உள்ள அமைதியான சேவகர். அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின்தொடரவில்லை. இதனால் அவர் நீக்கப்பட்டுவிட்டாரா? மற்றவர்கள் அணியில் இருக்கும் போது புஜரா மட்டும் நீக்கப்பட்டது ஏன்?

    தேர்வுக்குழு என்ன அளவுகோல் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்தது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • 3 டெஸ்ட் கொண்டதாக இறுதிப்போட்டி இருந்தால் சவால் நிறைந்ததாக இருக்கும்.
    • இறுதிப்போட்டிகளை வெவ்வேறு மைதானங்களில் நடத்தினால் இரு அணிக்கும் சமவாய்ப்பாக இருக்கும்.

    மெல்போர்ன்:

    3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜூன் 11-ந் தேதி தொடங்குகிறது. இந்த இறுதிப்போட்டி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள நாதன் லயனின் வீடியோ பதிவில் 'நான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3 ஆட்டங்கள் கொண்டதாக நடப்பதை பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் ஒரு செஷனில் சரியாக செயல்படாவிட்டாலும் ஒரு டெஸ்ட் போட்டியில் நீங்கள் தோற்க நேரிடலாம். ஆனால் 3 ஆட்டங்கள் கொண்ட இறுதிப்போட்டியாக இருந்தால் ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டாலும், அதில் இருந்து மீண்டு வர வாய்ப்பு கிடைக்கும்.

    அத்துடன் ஆதிக்கம் செலுத்தினால் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற முடியும். 3 டெஸ்ட் கொண்டதாக இறுதிப்போட்டி இருந்தால் சவால் நிறைந்ததாக இருக்கும். மேலும் இந்த இறுதிப்போட்டிகளை வெவ்வேறு மைதானங்களில் நடத்தினால் ஒரு அணிக்கு மட்டும் சாதகமாக இல்லாமல் இரு அணிக்கும் சமவாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் போட்டியில் சவாலும், விறுவிறுப்பும் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.
    • இலங்கை 3-வது இடத்திலும் நியூசிலாந்து 4-வது இடத்திலும் உள்ளது.

    துபாய்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    இந்தியா 3 போட்டியிலும் தோற்றதால், ஆஸ்திரேலியா முதல் இடத்துக்கு முன்னேறியது. 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வி, ஒரு டிரா என 58.33 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

    இலங்கை 3-வது இடத்திலும், இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (54.55 சதவீதம்) என 4-வது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 5, 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். 5 போட்டிகளில் 4-ல் வெற்றியும், 1-ஐ சமன் செய்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற முடியும்.

    • பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
    • 4-1 அல்லது 3-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறும்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி தற்சமயம் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற கேள்வி உள்ளது.

    இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கான வழிகள் குறித்து பார்ப்போம்.

    அதன்படி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமெனில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கக்கூடாது. அந்தவகையில் இந்திய அணி இத்தொடரை 4-1 அல்லது 3-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    ஒருவேளை எஞ்சியுள்ள போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவினால் கூட பிற அணிகளின் வெற்றி தோல்வியை கணக்கில் கொண்ட இந்திய அணியின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு உறுதியாகும். அந்தவகையில் இந்திய அணி இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றியை ஈட்ட வேண்டும்.

    அதேசமயம் இந்த தொடரை இந்திய அணி 2-2 என சமநிலையில் முடிக்கும் பட்சத்தில் இலங்கை அணியானது ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியும் அல்லது இரண்டு போட்டிகளையும் டிரா செய்தால் மட்டுமே இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பானது கிடைக்கும்.

    ஒருவேளை இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இத்தொடரை இழக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை முழுமையாக வீழ்த்தியும், அஸ்திரேலிய அணி இலங்கை அணியை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணிக்கான வாய்ப்பு இருக்கும்.

    • மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது.
    • தொடரானது சமனில் முடியும் பட்சத்தில் இலங்கை அணியானது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும்.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்திருந்தது. நிதிஷ் 105 ரன்னிலும் சிராஜ் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இன்னும் இந்திய அணி 116 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் அல்லது போட்டி டிரா ஆகும் பட்சத்தில் உள்ளது.

    இந்த தொடரில் இந்திய அணி 3-வது மற்றும் 4-வது போட்டிகளில் வெற்றிகளை பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். ஆனால் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றியை மட்டுமே இந்திய அணி பெற்றுள்ளது. இதன் காரணமாக மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது.

    இந்நிலையில் இந்திய அணி 4-வது போட்டியில் தோல்வியடைந்து 5-வது போட்டியில் வெற்றி பெற்றால் இந்த தொடரானது இரண்டுக்கு இரண்டு கணக்கில் சமநிலையில் முடியும். அப்படி நடந்தால் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 55.26 ஆக இருக்கும்.

    ஒருவேளை இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்தால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்ல தகுதி பெறாது. இரண்டிலும் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுவிடும்.

    இந்த தொடரானது 2-2 என்ற கணக்கில் சமனில் முடியும் பட்சத்தில் இலங்கை அணியானது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும். 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தால், இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தினால் போதும்.

    சமநிலையில் அப்படி இல்லையெனில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்த வேண்டும். இப்படி இந்திய அணி மற்ற அணிகளின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

    • பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்றது.
    • முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    செஞ்சுரியன்:

    பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    ஒருகட்டத்தில் 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா அணி தத்தளித்தது. அந்த சமயத்தில் ரபாடா - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 150 ரன்கள் அடுத்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது.

    மேலும் முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×