என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AUSvIND"

    • இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
    • மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ் பேனில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 4-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா புதிய சாதனையை நோக்கி இருக்கிறார். அவர் இன்று ஒரு விக்கெட் எடுத்தால் 100-வது விக்கெட்டை தொடுவார். 31 வயதான அவர் 79 ஆட்டத்தில் விளையாடி 99 விக்கெட் எடுத்துள்ளார்.

    100-வது விக்கெட்டை எடுக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெறுகிறார். அர்ஷ் தீப் சிங் 105 விக்கெட்டுடன் (67 போட்டி) முதல் இடத்தில் உள்ளார். பும்ரா இந்த தொடரில் 3 விக்கெட்டே எடுத்துள்ளார்.

    சர்வதேச அளவில் 33 வீரர்கள் 100 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத்கான் 182 விக்கெட்டுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    டிம் சவுத்தி (நியூசி லாந்து) 164 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், முஷ்டா பிசுர் ரகுமான் (வங்காள தேசம்) 155 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.

    • கடந்த 2 T20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
    • இன்றைய கடைசி போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நேற்று முன்தினம் நடந்த 4-வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.

    இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    • கடந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
    • இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

    பிரிஸ்பேன்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நேற்று முன்தினம் நடந்த 4-வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.

    இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் ஷிவம் துபே, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் உள்ளனர்.

    கடந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது.

    மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், இங்லிஸ், ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர். அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் அடித்தது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    இதையடுத்து, 5 போட்டி கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஹோபர்ட்டில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4-வது டி20 போட்டி கோல்டு கோஸ்டில் உள்ள கராராவில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா - சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 28 ரன்கள் அடித்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து களமிங்கிய சிவம் துபே 22 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 39 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார 20 ரன்னிலும் திலக் வர்மா 5 ரன்னிலும் ஜித்தேஷ் சர்மா 3 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    கடைசி நேரத்தில் அக்சர் படேல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்ததால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்தது. அக்சர் பட்டேல் 21 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் எல்லீஸ், ஆடம் சாம்பா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இறுதியில் 18.2 ஓவர்கள் முடிவில் 119 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 1.2 ஓவர்கள் மட்டுமே பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. 

    • டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 39 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    இதையடுத்து, 5 போட்டி கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஹோபர்ட்டில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4-வது டி20 போட்டி கோல்டு கோஸ்டில் உள்ள கராராவில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா - சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 28 ரன்கள் அடித்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து களமிங்கிய சிவம் துபே 22 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 39 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார 20 ரன்னிலும் திலக் வர்மா 5 ரன்னிலும் ஜித்தேஷ் சர்மா 3 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    கடைசி நேரத்தில் அக்சர் படேல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்ததால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்தது. அக்சர் பட்டேல் 21 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆஸ்திரேலியா அணி தரப்பில் எல்லீஸ், ஆடம் சாம்பா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.  

    • முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
    • இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    இதையடுத்து, 5 போட்டி கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஹோபர்ட்டில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4-வது டி20 போட்டி கோல்டு கோஸ்டில் உள்ள கராராவில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். 

    • முதல் டி20 ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
    • மெல்போர்னில் நடந்த 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது.

    கோல்ட்கோஸ்ட்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    இதையடுத்து, 5 போட்டி கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஹோபர்ட்டில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4-வது டி20 போட்டி கோல்டு கோஸ்டில் உள்ள கராராவில் இன்று நடைபெறுகிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று முன்னிலை பெறுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கடந்த ஆட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதேபோல மற்றோரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி யும் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளார். வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் தனக்கு கிடைத்த வாய்ப்பில் திறமையை வெளிப்படுத்தினார்.

    தொடக்க வீரர்களில் துணை கேப்டன் சுப்மன் கில்லின் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. இதனால் சஞ்சு சாம்சனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம். அவருக்கு பதிலாக இடம்பெற்ற ஜிதேஷ் சர்மா 3-வது போட்டியில் வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். எனவே அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே கருதப்படுகிறது.

    மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் கேப்டன் மிட்செல் மார்ஷ், டிம் டேவிட், ஸ்டோய்னிஸ் ஆகியோரும், பந்துவீச்சில் நாதன் எல்லீஸ், ஹேசில்வுட் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் மோதிய 35 டி20 போட்டியில் இந்தியா 21-ல், ஆஸ்திரேலியா 12-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி முடிவு இல்லை.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • 3 ஆவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
    • சுப்மன் கில் வருகையால் சஞ்சு சாம்சனின் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இப்போட்டியில் சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் சுப்மன் கில் வருகையால் மிடில் ஆர்டர் பினிஷிங் என மாறி மாறி களமிறக்கப்பட்டார். இப்போது அணியில் இருந்தும் டிராப் செய்யப்பட்டுள்ளார். இதனால் சஞ்சு சாம்சனின் டி20 கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி மாறியுள்ளது.

    • முதல் 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
    • 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    2 ஆவது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அபிஷேக் சர்மா மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • மற்ற பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடினால் மட்டுமே ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும்.

    ஹோபர்ட்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹோபர்ட்டில் நாளை (2-ந் தேதி) நடைபெறுகிறது. நேற்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி பதிலடி கொடுத்து சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அபிஷேக் சர்மா மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடினால் மட்டுமே ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும். அதே நேரத்தில் பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்த ஆட்டத்திலும் வென்று 2-0 என்ற முன்னிலையை பெறும் வேட்கையில் உள்ளது.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • இந்த போட்டியில் ஷிவம் துபே 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும் எல்லீஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவரில் 126 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் (1-0) முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஆடும் லெவனில் ஷிவம் துபே இருந்து முதல் முறையாக இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.

    2019-ம் ஆண்டில் இருந்து ஷிவம் துபே 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 3 போட்டிகள் முடிவில்லாமல் போனது. 56 போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு தோல்வி அடங்கும். துபேவின் தொடர் வெற்றியை ஆஸ்திரேலிய அணி முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.  

    • அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • இந்திய தரப்பில் வருண், குல்தீப், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் சுப்மன் கில் 6 பந்துகள் சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்தார். அதனை தொடர்ந்து 10 பந்துகளில் 5 எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் திலக் வர்மா டக் அவுட்டிலும் நடையை கட்டினார்.

    இதனால் பவர் பிளேயில் இந்திய அணி 40 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இதனையடுத்து அபிஷேக் சர்மாவும் அக்சர் படேலும் நிதானமாக விளையாடினர். இதில் அக்சர் படேல் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    ஹர்ஷித் ராணா - அபிஷேக் சர்மா ஜோடி நல்ல பாட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய அபிஷேக் அரைசதம் அடித்து அசத்தினார். ராணா 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த துபே 4 ரன்னில் வெளியேறினார்.

    ஒரு முனையில் போராடிய அபிஷேக் 68 ரன்னில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும் எல்லீஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ராணா இவர்களை தவிர மற்ற எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை.

    இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 28 ரன்கள் இருக்கும் போது டிராவிஸ் ஹெட் அவுட் ஆனார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் குல்தீப் யாதவின் ஒரே ஓவரில் 20 ரன்கள் குவித்து அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து டிம் டேவிட் 1, இங்கிலீஸ் 20, என விக்கெட்டுகளை இழந்தனர். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 14, ஷார்ட் 0 என அடுத்தடுத்து பும்ரா வீசிய பந்தில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இறுதியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் வருண், குல்தீப், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நவம்பர் 2-ந் தேதி நடக்கவுள்ளது.

    ×