என் மலர்
நீங்கள் தேடியது "Senuran Muthusamy"
- இந்தியாவில் எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக நன்றி தெரிவிக்கிறேன்.
- முதல் இன்னிங்சில் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது சிறந்ததாக இருந்தது.
கவுகாத்தி:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தவறி விட்டனர்.
முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்து இருந்தது. நேற்றைய 2-வது நாளில் எஞ்சிய 3 விக்கெட்டுகளை எளிதில் கைப்பற்ற தவறி விட்டனர். இதனால் 489 ரன்களை அந்த அணி குவித்து விட்டது.
இந்திய பந்து வீச்சாளர்களுக்கு செனுரான் முத்துசாமி சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவருக்கு யான்சென் மிகவும் உதவியாக இருந்தார். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட முத்துசாமி 109 ரன்கள் எடுத்தார். தனது 8-வது டெஸ்டில் விளையாடும் அவர் முதல் சதத்தை பதிவு செய்தார். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக 89 ரன் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
முதல் சதம் அடித்தது குறித்து முத்துசாமி நேற்றைய போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல் சதத்தை பதிவு செய்தது அற்புதமான அனுபவமாகும். 2019-ல் நாங்கள் இந்தியாவில் டெஸ்ட் தொடரை மோசமாக இழந்த பிறகு நான் உள்நாட்டு போட்டியில் விளையாடி தேசிய அணியில் மீண்டும் இடம் பிடித்தேன்.
இந்தியாவில் எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக நன்றி தெரிவிக்கிறேன். முதல் இன்னிங்சில் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது சிறந்ததாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முத்துசாமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை 2-வது டெஸ்டில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் தொட ரில் அவர் தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முத்துசாமி 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- யான்சன் 93 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 49 ரன்களும் பவுமா 41 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முத்துசாமி 25 ரன்களுடனும், வெரெய்ன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி- வெரெய்ன் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடியது.
நிதானமாக விளையாடிய முத்துசாமி அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுறையில் நிதானமாக விளையாடிய வெரெய்ன் 45 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து முத்துசாமி உடன் யான்சன் ஜோடி சேர்ந்தார்.
இதையடுத்து முத்துசாமி- யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய முத்துசாமி சதம் விளாசினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய யான்சன் அரைசதம் அடித்தார்.
முத்துசாமி 109 ரன்கள் அடித்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹார்மர் 5 ரன்னில் வெளியேறினார்.
யான்சன் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார். தென்ஆப்பிரிக்கா 9ஆவது விக்கெட்டை இழக்கும்போது, 462 ரன்கள் எடுத்திருந்தது, கடைசி விக்கெட்டுக்கு யான்சன் உடன் மகாராஜ் ஜோடி சேர்ந்தார்.
யான்சன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியில் அனுப்பினார். இவரும் சதத்தை நோக்கி முன்னேறினார். 93 ரன் எடுத்திருக்கும்போது குல்தீப் யாதவ் பந்தில் போல்டானார். இதனால் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. மகாராஜ் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும் பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
- இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ந் தேதி தொடங்க உள்ளது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று காலையும் தென் ஆப்பிரிக்கா அணி தற்போதும் அறிவித்தனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சேனுரான் முத்துசாமி இடம் பிடித்துள்ளார்
நாகையை பூர்வீகமாகக் கொண்ட இவர், 2019ல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி இதுவரை 4 டெஸ்டில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






