என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marco Jansen"

    • முதல் இன்னிங்ஸ் ரன்னை விரைவாக எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது.
    • டெஸ்ட் போட்டியில் 489 ரன்களை விரைவாக எட்ட வேண்டும் என்பது யதார்த்தமற்றது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 201 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 288 ரன்கள் முன்னிலை பெற்று நல்ல நிலையில் உள்ளது.

    இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாட வேண்டும் என்ற நோக்கதில் களம் இறங்கிய அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், யான்செனை பவுன்சரை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கான அனைத்தும் இந்திய பேட்ஸ்மேன்களிடம் மிஸ்சிங் என அனில் கும்ப்ளே சாடியுள்ளார்.

    இது தொடர்பாக அனில் கும்ப்ளே கூறியதாவது:-

    இந்தியாவின் பேட்டிங் முயற்சி மிகவும் மோசம் என நான் உணர்ந்தேன். டெஸ்ட் போட்டிக்கு தேவையான பொறுமை மற்றும் திறமையை பயன்படுத்துதல் (application) மிஸ்சிங். சில பந்துகள் சிறப்பாக வீசப்பட்ட போதிலும், பேட்ஸ்மேன்கள் மிகவும் கடினமான ஸ்பெல்களை எதிர்கொள்ள தயாராக இல்லை அல்லது செசன் செசனாக விளையாட தயாராக இல்லை.

    முதல் இன்னிங்ஸ் ரன்னை விரைவாக எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது. டெஸ்ட் போட்டியில் 489 ரன்களை படிப்படியாகத்தான் எட்ட வேண்டுமே தவிர, விரைவாக எட்ட வேண்டும் என்பது யதார்த்தமற்றது. எதிரணி பந்து வீச்சாளர்கள் மற்றும் அவர்களது ஸ்பெல்களுக்கு மரியாதை கொடுப்பது முக்கியமானது. ஆனால் இந்தியா அதை போதுமான அளவு காட்டவில்லை.

    யான்சென் விதிவிலக்காக அபாரமாக பந்து வீசி, இந்திய பேட்ஸ்மேன்களை தொடர்ந்து நெருக்கடிக்குள் வைத்திருந்தார். அவர் பவுன்சர்களை வீசத் தொடங்கியபோது இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தை பின்னால் விட்டு விளையாடவோ அல்லது பந்துகள் தாக்குவதை எதிர்கொள்ளவோ தயாராக இல்லை என்று தோன்றியது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் சவாலான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க அந்த அணுகுமுறை அவசியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்றைய இந்தியாவின் அணுகுமுறையில் அது இல்லை.

    இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்தார்.

    • முதல் இன்னிங்சில் யான்சென் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • ரிஷப் பண்ட் 7 ரன்கள் எடுத்த நிலையில் யான்சென் பந்தில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 201 ரன்களில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சென் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    முக்கியமாக ஷார்ட் பந்து யுக்தி மூலம் இந்திய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார். இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்கள் எடுத்த நிலையில் யான்சென் பந்தை இறங்கி வந்து அடிக்க முயற்சித்த போது எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.

    இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஷாட் செலக்ஷன் குறித்து ஆச்சரியப்படுகிறீர்களா? என்ற கேள்வி யான்செனிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு யான்சென் "எல்லாம் விசயங்களும் நாம் நினைத்த வழியில் செல்லாது. ரிஷப் பண்ட் பந்தை கேலரிக்கு பறக்க விட்டிருந்தால் அல்லது எனது தலைக்கு மேல் தூக்கி அடித்திருந்தால், இந்த உரையாடல் வேறுமாதிரி இருந்திருக்கும்.

    நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், கொல்கத்தா போன்று ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில பிட்ச் ஆகி பேட்ஸ்மேனை நோக்கி வரவில்லை. இதனால் நாங்கள் வேறு திட்டத்தை தேட வேண்டியிருந்தது. துருவ் ஜுரலை பவுன்சர் மூலம் வெளியேற்றிய பிறகு, ஓ.கே. கூல், இது எவ்வளவு தூரம் செல்கிறது பார்ப்போம் என்று நாங்கள் சொன்னோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    பேட்டிங் செய்வதற்கு சிறந்த ஆடுகளமாக உள்ளது. நல்ல வேகம், நல்ல பவுன்ஸ் உள்ளது. நீங்கள் ஷார்ட் பந்துகளை சிறப்பாக விளையாடினால், உங்களால் ரன்கள் குவிக்க இயலும். நீங்கள் சிறப்பாக பந்து வீசினால், உங்களால் விக்கெட் வீழ்த்த இயலும்" என்றார்.

    • முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சென் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. செனுரன் முத்துசாமி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது முதல் டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார். முத்துசாமி 109 ரன்னும், மார்கோ யான்சென் 93 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சென் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம் இந்திய மண்ணில் 15 ஆண்டுகளுக்கு பிறகு 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது வெளிநாட்டு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை மார்கோ யான்சென் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டு மொகாலியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சென் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

    மேலும் மொத்தமாக 3-வது இடதுகை வேகப்பந்து வீச்சாளராக யான்சென் உள்ளார். இதற்கு முன்பு 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இந்திய வீரர் ஜாகீர் கான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 9-வது வரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் யான்சென் களமிறங்கினார்.
    • யான்சென் 7 சிக்சருடன் 93 ரன்கள் நொறுக்கினார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில்

    9-வது வரிசையில் களம் புகுந்த தென்ஆப்பிரிக்க வீரர் யான்சென் 7 சிக்சருடன் 93 ரன்கள் நொறுக்கினார். 9 மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த சாதனையாளர் பட்டியலில் யான்சென் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    நியூசிலாந்தின் டிம் சவுதி 2008-ம் ஆண்டு நேப்பியரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 9 சிக்சர் அடித்ததே இந்த வகையில் சாதனையாக உள்ளது.

    ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விரட்டிய தென்ஆப்பிரிக்க வீரர்கள் டிவில்லியர்ஸ், குயின்டான் டி காக் (இருவரும் தலா 7 சிக்சர்) ஆகியோரின் சாதனையை யான்சென் சமன் செய்தார்.

    இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனைக்கு யான்சென் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் 6 சிக்சர் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது.

    • முத்துசாமி 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • யான்சன் 93 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 49 ரன்களும் பவுமா 41 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முத்துசாமி 25 ரன்களுடனும், வெரெய்ன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி- வெரெய்ன் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடியது.

    நிதானமாக விளையாடிய முத்துசாமி அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுறையில் நிதானமாக விளையாடிய வெரெய்ன் 45 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து முத்துசாமி உடன் யான்சன் ஜோடி சேர்ந்தார்.

    இதையடுத்து முத்துசாமி- யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய முத்துசாமி சதம் விளாசினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய யான்சன் அரைசதம் அடித்தார்.

    முத்துசாமி 109 ரன்கள் அடித்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹார்மர் 5 ரன்னில் வெளியேறினார்.

    யான்சன் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார். தென்ஆப்பிரிக்கா 9ஆவது விக்கெட்டை இழக்கும்போது, 462 ரன்கள் எடுத்திருந்தது, கடைசி விக்கெட்டுக்கு யான்சன் உடன் மகாராஜ் ஜோடி சேர்ந்தார்.

    யான்சன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியில் அனுப்பினார். இவரும் சதத்தை நோக்கி முன்னேறினார். 93 ரன் எடுத்திருக்கும்போது குல்தீப் யாதவ் பந்தில் போல்டானார். இதனால் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. மகாராஜ் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும் பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜான்சன் 7 விக்கெட்டை கைப்பற்றினார்.
    • இலங்கை அணியில் 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

    டர்பன்:

    தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    சிறப்பாக விளையாடி பவுமா (70) அடித்து அவுட் ஆனார். இலங்கை தரப்பில் அசிதா பெர்னண்டோ மற்றும் லஹிரு குமரா தலா 3 விக்கெட்டுகளும், பிரபாத் ஜெயசூர்யா, விஷ்வா பெர்னண்டோ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 13.5 ஓவர்களை மட்டுமே தாக்குபிடித்த இலங்கை அணி 42 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    அந்த அணியில் கமிந்து மெண்டீஸ் 13, லஹிரு குமரா 10 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். குறிப்பாக 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜான்சன் 7 விக்கெட்டை கைப்பற்றினார். தென் ஆப்பிரிக்கா அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    • பிரபாத் ஜெயசூர்யா அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    • உலக டெஸ்ட் சாப்பியன்ஷிப் தொடரில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் ஆவார்.

    இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 27-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 191 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    அதனை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 42 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 149 ரன்களுடன் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஜான்சன் மற்றும் இலங்கை வீரர் ஜெயசூர்யா ஆகியோர் பந்து வீச்சில் சாதனை படைத்துள்ளனர்.

    இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா முதல் இன்னிங்சில் 2 விக்கெட், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது விக்கெட் எண்ணிக்கை 101 ஆக (17 டெஸ்ட்) உயர்ந்தது. டெஸ்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த சாதனையாளர் பட்டியலில் 2-வது இடத்தை 4 வீரர்களுடன் அவர் பகிர்ந்துள்ளார்.

    அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தினார்

    ஜார்ஜ் ஆல்பிரட் லோமன் (இங்கிலாந்து) - 1886-ல் 16 டெஸ்ட் போட்டிகள்

    பிரபாத் ஜெயசூர்யா (இலங்கை) - 2024-ல் 17 டெஸ்ட் போட்டிகள்

    யாசிர் ஷா (பாகிஸ்தான்) - 2014-ல் 17 டெஸ்ட் போட்டிகள்

    சார்லி டர்னர் (ஆஸ்திரேலியா) - 1887-ல் 17 டெஸ்ட் போட்டிகள்

    சிட்னி பார்ன்ஸ் (இங்கிலாந்து) - 1901-ல் 17 டெஸ்ட் போட்டிகள்

    கிளாரி கிரிம்மெட் (ஆஸ்திரேலியா) - 1925-ல் 17 டெஸ்ட் போட்டிகள்

    ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா) - 2011-ல் 18 டெஸ்ட் போட்டிகள்

    இதேபோல ஜான்சன், உலக டெஸ்ட் சாப்பியன்ஷிப் தொடரில் ஒரு இன்னிங்சில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜான்சன் படைத்துள்ளார்.

    WTC வரலாற்றில் ஒரு வேகப்பந்து வீச்சாளரின் சிறந்த பந்து வீச்சு:-

    மார்கோ ஜான்சன் (தென்னாப்பிரிக்கா) - 2024-ல் இலங்கைக்கு எதிராக 7/13

    மாட் ஹென்றி (நியூசிலாந்து) - 7/23 தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2022

    கஸ் அட்கின்சன் (இங்கிலாந்து) - 7/45 வெஸ்ட் இண்டீஸ் எதிராக 2024

    ஷர்துல் தாக்கூர் (இந்தியா) - 7/61 தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2022

    மாட் ஹென்றி (நியூசிலாந்து) - 7/67 தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2024

    42 ரன்னில் ஆல்-அவுட் ஆன இலங்கைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு 1994-ம் ஆண்டு கண்டியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 71 ரன்னில் ஆட்டமிழந்ததே குறைந்த ஸ்கோராக இருந்தது.

    இலங்கையை சுருட்டுவதற்கு தென்ஆப்பிரிக்காவுக்கு மொத்தம் 83 பந்துகளே தேவைப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் குறைந்த பந்துகளில் 'சரண்' அடைந்த அணி இலங்கை தான். 1924-ம் ஆண்டு பர்மிங்காமில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து 75 பந்துகளில் தென்ஆப்பிரிக்காவை 30 ரன்னில் சுருட்டியதே இந்த வகையில் மோசமானதாக நீடிக்கிறது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு அணியின் குறைந்த ஸ்கோரும் இது தான். 2013-ம் ஆண்டு கேப்டவுனில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்து 45 ரன்னில் ஆல்-அவுட் ஆனதே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு அணியின் முந்தைய குறைந்த ஸ்கோராக இருந்தது.

    ×