என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீம் இந்தியா"

    • முதல் இன்னிங்ஸ் ரன்னை விரைவாக எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது.
    • டெஸ்ட் போட்டியில் 489 ரன்களை விரைவாக எட்ட வேண்டும் என்பது யதார்த்தமற்றது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 201 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 288 ரன்கள் முன்னிலை பெற்று நல்ல நிலையில் உள்ளது.

    இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாட வேண்டும் என்ற நோக்கதில் களம் இறங்கிய அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், யான்செனை பவுன்சரை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கான அனைத்தும் இந்திய பேட்ஸ்மேன்களிடம் மிஸ்சிங் என அனில் கும்ப்ளே சாடியுள்ளார்.

    இது தொடர்பாக அனில் கும்ப்ளே கூறியதாவது:-

    இந்தியாவின் பேட்டிங் முயற்சி மிகவும் மோசம் என நான் உணர்ந்தேன். டெஸ்ட் போட்டிக்கு தேவையான பொறுமை மற்றும் திறமையை பயன்படுத்துதல் (application) மிஸ்சிங். சில பந்துகள் சிறப்பாக வீசப்பட்ட போதிலும், பேட்ஸ்மேன்கள் மிகவும் கடினமான ஸ்பெல்களை எதிர்கொள்ள தயாராக இல்லை அல்லது செசன் செசனாக விளையாட தயாராக இல்லை.

    முதல் இன்னிங்ஸ் ரன்னை விரைவாக எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது. டெஸ்ட் போட்டியில் 489 ரன்களை படிப்படியாகத்தான் எட்ட வேண்டுமே தவிர, விரைவாக எட்ட வேண்டும் என்பது யதார்த்தமற்றது. எதிரணி பந்து வீச்சாளர்கள் மற்றும் அவர்களது ஸ்பெல்களுக்கு மரியாதை கொடுப்பது முக்கியமானது. ஆனால் இந்தியா அதை போதுமான அளவு காட்டவில்லை.

    யான்சென் விதிவிலக்காக அபாரமாக பந்து வீசி, இந்திய பேட்ஸ்மேன்களை தொடர்ந்து நெருக்கடிக்குள் வைத்திருந்தார். அவர் பவுன்சர்களை வீசத் தொடங்கியபோது இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தை பின்னால் விட்டு விளையாடவோ அல்லது பந்துகள் தாக்குவதை எதிர்கொள்ளவோ தயாராக இல்லை என்று தோன்றியது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் சவாலான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க அந்த அணுகுமுறை அவசியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்றைய இந்தியாவின் அணுகுமுறையில் அது இல்லை.

    இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்தார்.

    • டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இந்தியா இன்னும் 10 போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது.
    • இதனால் இந்திய அணி பரிசோதனை என்ற பெயரில் வீரர்களை அடிக்கடி மாற்றக் கூடாது.

    இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் மற்றும் கடைசி போட்டி மழையால் கைவிடப்பட்டது. மற்ற 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

    இந்த ஐந்து போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் காம்பினேஷன் மாறிக் கொண்டே இருந்தது. இந்த அணி நிர்வாகம் இதை பரிசோதனை எனக் குறிப்பிடுகின்றது.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இந்தியா 10 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது. இதனால் அனைத்து பரிசோதனைகளும் நிறுத்தப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

    இது பரிசோதனை கட்டமாகும். இந்த பரிசோதனைகள் நின்றுவிடும் என்று நான் நம்புகிறேன். இந்திய அணி பரிசோதனை கட்டத்தில் இருக்கிறது. இதனால் யாரைம் டாப் வரிசை அல்லது கீழ் வரிசையில் விளையாட வைக்க முடியும், விளையாட அல்லது யாரையும் நீக்க முடியும் என்று சொல்கிறார்கள். வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும்போது, அவர்கள் பரிசோதனை செய்யலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

    எனினும், சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக 5 பேட்டிகளிலும் விளையாட இருக்கிறது. அது பரிசோதனை முடிவுக்கு நேரம் என்று நினைக்கிறேன். நாம முடிச்சிட்டோம்னு நினைக்கிறேன். இதற்கு அப்புறம் நீங்க அதிகமாக பரிசோதனை பண்ண முடியாது. நீங்க செய்யக் கூடாது. ஏனெ்றால், உலகக் கோப்பை பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.

    இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.

    • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • 3 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்து, பின்னர் கம்பேக் கொடுத்ததை பாராட்டியுள்ளார்.

    இந்தியாவில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆண்கள் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை (கபில்தேவ் தலைமையில் 1983, டோனி தலைமையில் 2011) 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது.

    உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் இன்று பிரதமர் மோடியை, அவரது லோக் கல்யாண் மார்க் வீட்டில் சந்தித்தனர். அப்போது வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.

    சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 3 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்து, பின்னர் கம்பேக் கொடுத்ததை பாராட்டியுள்ளார்.

    இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 2017-ல் பிரதமரை சாம்பியன் கோப்பை இல்லாமல் சந்தித்தோம். தற்போது சாம்பியன் கோப்பையுடன் சந்தித்தோம். பிரதமர் மோடியை அடிக்கடி சந்திக்க விரும்புகிறோம் என்றார்.

    • இங்கிலாந்து தொடரின்போது ரிஷப் பண்ட்-க்கு காயம் ஏற்பட்டது.
    • விக்கெட் கீப்பருடன், துணைக் கேப்டன் பதவியையும் சேர்ந்து கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுப்மன் கில் தலைமை தாங்க, ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருக்கு இங்கிலாந்து தொடரின்போது காயம் ஏற்பட்டது. காயத்தில் இருந்து மீண்டதால், அணியிடம் இடம் கிடைத்துள்ளது. அத்துடன் துணைக்கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆகாஷ் தீப்பும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த அணி விவரம்:-

    சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ஜுரெல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, அக்சர் படேல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் வருகிற 15ஆம் தேதி தொடங்குகிறது.

    • ரகானே இந்திய அணிக்காக கடைசியாக 2023ல் விளையாடினார்.
    • உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கிய ரகானே, மீண்டும் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். உள்ளூர் பேட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், தேர்வாளர்கள் அவரை பரிசீலனை செய்யாமல் புறக்கணிக்கின்றனர்.

    37 வயதாகும் ரகானே, ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். அவர் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 159 ரன்கள் விளாசினார்.

    இந்த நிலையில், 2024-25 தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-3 என படுதோல்வியடைந்தது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு நான் தேவை என உணர்ந்ததாக ரகானே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரகானே கூறியதாவது:-

    வயது வெறும் நம்பர்தான். ஒரு வீரராக உங்களுக்கு அனுபவம் இருந்தால், இன்னும் உள்ளூர் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தால், உங்களுடைய சிறந்த ஆட்டத்தை கொடுத்துக் கொண்டிருந்தால், தேர்வாளர்கள், உங்களை இந்திய சீனியர் அணிக்கு பரிசீலனை செய்ய வேண்டும்.

    தேர்வு வயதை பற்றியது அல்ல. அது நோக்கத்தை பற்றியது. அது ரெட்பால் கிரிக்கெட்டின் பேரார்வம் பற்றியது. நீங்கள் ஆட்டத்தில் கொடுக்கும் கடின உழைப்பை பற்றியது. இதனால் வயதை நான் முற்றிலுமாக நம்பவில்லை.

    ஆஸ்திரேலியாவை பார்த்தீர்கள் என்றால், மைக் ஹசி 30 வயதிற்குப் பிறகுதான் அறிமுகம் ஆனார். அதன்பின்பும் அவர் ரன்கள் குவித்தார். ரெட்பால் கிரிக்கெட்டில் அனுபவம்தான் விசயம். தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு நான் தேவை என்று நினைத்தேன். இது என்னுடைய தனிப்பட்ட உணர்வு.

    இவ்வாறு ரகானே தெரிவித்துள்ளார்.

    ரகானே தலைமையில் இந்திய அணி 2020-21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மண்ணில் 2-1 என தொடரை வென்றது.

    2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரகானேவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.

    • இங்கிலாந்து தொடரின்போது உடற்தகுதியுடன் இருந்திருந்தால் அணியில் இடம் பிடித்திருப்பார்.
    • ரஞ்சி டிராபியில் எப்படி விளையாடுகிறார் எனப் பார்க்க வேண்டும்.

    இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, ஆஸ்திரேலியா தொடருக்கான ஒயிட்பால் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ரஞ்சி டிராபியில் விளையாடும்போது, ஒருநாள் கிரிக்கெட்டில் ஏன் விளையாட முடியாது?. உடற்தகுதிக்கா இந்திய அணி என்னை அழைக்கவில்லை என முகமது ஷமி இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

    ஆங்கில செய்தி நிறுவனமான என்.டி.டி.வியின் உலக மாநாடு 2025-ல் அஜித் அகர்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது முகமது ஷமி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அவர் என்னிடம் சொல்லியிருந்தால், நான் பதில் அளித்திருப்பேன். அவர் இங்கு இருந்திருந்தால், அவருக்கு பதில் கூறியிருப்பேன். அவர் சமூக ஊடகத்தில் என்ன சொன்னார் என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை. நான் படித்திருந்தால், அவருக்கு போன் செய்திருக்கலாம். இருந்தபோதிலும், பெரும்பாலான வீரர்களுக்கு எனது போன் எப்போதும் தயாராக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அவருடன் பலமுறை பேசியுள்ளேன். ஆனால், இங்கே அதை தலைப்பு செய்தியாக்க விரும்பவில்லை.

    அவர் இந்தியாவுக்கான அற்புதமான வீரர். அவர் சொன்னதை, என்னிடம் சொல்லியிருக்கலாம். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக கூட, அவர் உடற்தகுதியின் இருந்தால், இங்கிலாந்துக்குச் செல்வார் என நாங்கள் கூறியிருந்தோம். துரதிருஷ்டவசமாக அவர் உடற்தகுதி பெறவில்லை.

    தற்போது உள்ளூர் தொடர் தொடங்கியுள்ளது. அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க இருக்கிறோம். தற்போது முதல்சுற்று போட்டி நடைபெறுகிறது. இன்னும் ஒன்றிரண்டு போட்டிகளை பார்க்க வேண்டும். அவர் சிறப்பாக பந்து வீசினால், ஷமியை போன்றவர்களை ஏன் விரும்பாமல் இருக்க வேண்டும். இந்த வருடம் 8 மாதங்களுக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா தொடரில் கூட, அவர் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், அவர் உடதற்குதியுடன் இல்லை. அடுத்த சில மாதங்களாக அவருடைய உடற்தகுதியை நிலைத்து வைத்திருந்தால், கதை மாறியிருக்கலாம். இந்த கணக்கில், எனக்குத் தெரிந்தவரை, அவர் அந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு போதுமான அளவு பொருத்தமாக இல்லை.

    இவ்வாறு அஜித் அகர்கர் தெரிவித்தார்.

    • உடற்தகுதி குறித்து இந்திய அணி என்னை தொடர்பு கொள்ளவில்லை.
    • என்னுடைய உடற்தகுதி குறித்து அவர்களுக்கு நான் தகவல் தெரிவிக்கமாட்டேன்.

    இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் முகமது ஷமி. இவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. முகமது ஷமி பெங்கால் அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடுகிறார். நாளை ரஞ்சி டிராபி தொடங்குகிறது.

    இந்த நிலையில் இந்திய அணி உடற்தகுதிக்காக தன்னை தொடர்பு கொள்ளவில்லை. ரஞ்சியில் விளையாட முடியும் என்றால். ஒருநாள் போட்டியில் ஏன் விளையாட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முகமது ஷமி கூறியதாவது:-

    உடற்தகுதி குறித்து இந்திய அணி என்னை தொடர்பு கொள்ளவில்லை. என்னுடைய உடற்தகுதி குறித்து அவர்களுக்கு நான் தகவல் தெரிவிக்கமாட்டேன். அவர்கள்தான என்னிடம் கேட்க வேண்டும். என்னால் நான்கு நாள் கிரிக்கெட் விளையாட முடியும் என்றால், பின்னர் ஏன் 50 ஓவர் போட்டியில் விளையாட முடியாது?. நான் உடற்தகுதியாக இல்லை என்றால், என்சிஏ-வில் இருந்திருப்பேன். ரஞ்சி போட்டியில் விளையாட முடியாது.

    இவ்வாறு முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • டெஸ்ட் போட்டியில் 7 இன்னிங்சில் 147 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன். இவர் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி ரன்கள் குவித்தார். நேர்த்தியான ஸ்ட்ரோக் பிளேயர் என்பதால் டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கெதிராக அறிமுகம் ஆனார். தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரிலும் இடம் பிடித்துள்ளார். சாய் சுதர்சன் 7 இன்னிங்சில் 147 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரேயொரு அரைசதம் அடங்கும். கடினமான 3ஆவது இடத்தில் இன்னும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை அவர் காண்பிக்கவில்லை. இருந்தபோதிலும், அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணியின் துணை பயிற்சியாளரான ரியன் டென் டோஸ்கேட், 3ஆவது இடத்திற்கு போதுமான பேட்ஸ்மேன்கள் காத்திருக்கிறார்கள் என்பது சாய் சுதர்சனுக்கு தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

    சாய் சுதர்சன் பற்றி ரியன் டென் டோஸ்கேட் கூறியதாவது:-

    சாய் சுதர்சனுக்கு கேப்டன் ஆதரவாக இருக்கிறார். கோச்சிங் ஸ்டாஃப் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை சாய் சுதர்சன் உணர்ந்துள்ளார் என்பது என்னால் உறுதியாக கூற முடியும். உறுதியளித்த அவருடைய திறமையான ஆட்டத்தை விரைவில் வெளிப்படுத்துவார் என நாங்கள் உணர்கிறோம்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் ஜுரல் சிறப்பாக விளையாடினார். அவர் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கும் வாய்ப்பை பெறலாம். முதல் மூன்று அல்லது நான்கு இடத்தில் விளையாட மற்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். சுப்மன் கில் தற்போது 4ஆவது இடத்தில் விளையாடி வருகிறார். ஆகவே, சாய் சுதர்சன் இதை அறிந்திருப்பார்.

    அந்த மாதிரியான போட்டியை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால், இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதை நீங்கள் ஒரு தொழிலாகத் தொடரமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். நான் சொன்ன மாதிரி, அவர் வெளியே சென்று நாம் நினைக்கும் அளவுக்கு ரன்கள் எடுக்க வேண்டும்.

    ஒரு இடத்திற்காக போராடுகிறீர்கள் என்பதை அவரால் மறைக்க முடியாது. உங்களுக்குத் தெரியும், கருண் நாயர் இங்கிலாந்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அந்த இடத்திற்கு நிறைய நல்ல வீரர்கள் போராடுகிறார்கள். எனவே சாய் சுதர்சன் தன்னை நம்புவதில் கவனம் செலுத்த வேண்டும். அவர் மீது அதிக நம்பிக்கை வைத்து 3ஆவது இடம் அவருக்கு வழங்கியுள்ளோம்.

    இவ்வாறு ரியன் டென் டோஸ்கேட் தெரிவித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றதால் 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்யவில்லை.

    • 2007ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது.
    • 2024ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று கடைசி போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் நேற்று மோதின. முதலில் விளையாடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது. பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை, பதுன் நிஷாங்காவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி நோக்கி சென்றது.

    அவர் 58 பந்தில் 107 ரன்கள் குவித்தார். குசால் பெரேரா 32 பந்தில் 58 ரன்கள் அடித்தார். ஷனகா 11 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, இலங்கை 20 ஓவரில் 202 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி "டை"யில் முடிவடைந்தது.

    இதன் காரணமாக சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 2 ரன்கள் மட்டுமே அடித்தது. பின்னர் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

    இந்திய அணிக்கு இது 5ஆவது சூப்பர் ஓவர் போட்டியாகும். இந்த ஐந்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது கிடையாது.

    2007ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.

    2020-ல் நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு முறை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.

    2024ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது.

    தற்போது இலங்கைக்கு எதிராக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.

    • முதல் இன்னிங்சில் இந்தியா 194 ரன்களில் சுருண்டு 226 ரன்கள் பின்தங்கியிருந்தது.
    • 2ஆவது இன்னிங்சில ஆஸ்திரேலியா ஏ அணி 226 ரன்னில் சுருண்டது.

    இந்தியா- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையில் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 2ஆவது டெஸ்ட் லக்னோவில் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ முதல் இன்னிங்சில் 420 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ 194 ரன்களில் சுருண்டது. சாய் சுதர்சன் மட்டும் தாக்குப்பிடித்து 75 ரன்கள் அடித்தார்.

    பின்னர் 226 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா ஏ 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. குர்னூர் பிரார், மனாவ் சுதர் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் மற்றும் யாஷ் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்த ஆஸ்திரேலியா ஏ 2ஆவது இன்னிங்சில் 185 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா ஏ 411 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களம் இறங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது, சாய் சுதர்சன் 44 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இன்று 4ஆவது நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சாய் சுதர்சனுடன் இணைந்து கே.எல். ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாய் சுதர்சன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துருவ் ஜுரெல் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    கே.எல். ராகுல் 176 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா ஏ அணி 91.3 ஓவரில் 413 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2ஆவது போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது.

    • 45 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
    • 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2ஆவது போட்டி இன்று நியூ சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஆனால் ஸ்மிரி மந்தனா சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். 45 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்த நிலையில், 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வயிடைந்தது. 3ஆவது மற்றும் கடைசி போட்டி 20ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது.

    • அபிஷேக் சர்மா 16 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ரன்கள் விளாசினார்.
    • சுப்மன் கில் 9 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ஆகிய இருவரும் இடம் பிடித்தனர்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 57 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார். மொத்தமாக 2.1 ஓவரில் 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஷிவம் துபே 2 ஓவரில் 4 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    யுஏஇ அணி சார்பில் தொடக்க வீரர்கள் ஷரஃபு (22), கேப்டன் முகமது வாசீம் (19) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர்.

    பின்னர் 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே சிக்சர் விளாசினார். அடுத்த பந்தில் பவுண்டரி விளாசினார். அடுத்த நான்கு பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்லை. இதனால் முதல் ஓவரில் இந்தியா 10 ரன்கள் அடித்தது. அடுத்த ஓவரில் சுப்மன் கில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் அடித்தது.

    3ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தன. இதனால் இந்தியா 3 ஓவரில் 38 ரன்கள் சேர்த்தது. 4ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் சிக்ஸ் அடித்த அபிஷேக் சர்மா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்தார்.

    2ஆவது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் சூர்யகமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் யாதவ் 4ஆவது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் இந்தியா 4 ஓவரில் முடிவில் 54 ரன்கள் சேர்த்தது. 5ஆவது ஓவரின் 3வது பந்தை சுப்மன் கில் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 4.3 ஓவரில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சுப்மன் கில் 9 பந்தில் 20 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 2 பந்தில் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ×