என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anil Kumble"

    • முதல் இன்னிங்ஸ் ரன்னை விரைவாக எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது.
    • டெஸ்ட் போட்டியில் 489 ரன்களை விரைவாக எட்ட வேண்டும் என்பது யதார்த்தமற்றது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 201 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 288 ரன்கள் முன்னிலை பெற்று நல்ல நிலையில் உள்ளது.

    இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாட வேண்டும் என்ற நோக்கதில் களம் இறங்கிய அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், யான்செனை பவுன்சரை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கான அனைத்தும் இந்திய பேட்ஸ்மேன்களிடம் மிஸ்சிங் என அனில் கும்ப்ளே சாடியுள்ளார்.

    இது தொடர்பாக அனில் கும்ப்ளே கூறியதாவது:-

    இந்தியாவின் பேட்டிங் முயற்சி மிகவும் மோசம் என நான் உணர்ந்தேன். டெஸ்ட் போட்டிக்கு தேவையான பொறுமை மற்றும் திறமையை பயன்படுத்துதல் (application) மிஸ்சிங். சில பந்துகள் சிறப்பாக வீசப்பட்ட போதிலும், பேட்ஸ்மேன்கள் மிகவும் கடினமான ஸ்பெல்களை எதிர்கொள்ள தயாராக இல்லை அல்லது செசன் செசனாக விளையாட தயாராக இல்லை.

    முதல் இன்னிங்ஸ் ரன்னை விரைவாக எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது. டெஸ்ட் போட்டியில் 489 ரன்களை படிப்படியாகத்தான் எட்ட வேண்டுமே தவிர, விரைவாக எட்ட வேண்டும் என்பது யதார்த்தமற்றது. எதிரணி பந்து வீச்சாளர்கள் மற்றும் அவர்களது ஸ்பெல்களுக்கு மரியாதை கொடுப்பது முக்கியமானது. ஆனால் இந்தியா அதை போதுமான அளவு காட்டவில்லை.

    யான்சென் விதிவிலக்காக அபாரமாக பந்து வீசி, இந்திய பேட்ஸ்மேன்களை தொடர்ந்து நெருக்கடிக்குள் வைத்திருந்தார். அவர் பவுன்சர்களை வீசத் தொடங்கியபோது இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தை பின்னால் விட்டு விளையாடவோ அல்லது பந்துகள் தாக்குவதை எதிர்கொள்ளவோ தயாராக இல்லை என்று தோன்றியது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் சவாலான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க அந்த அணுகுமுறை அவசியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்றைய இந்தியாவின் அணுகுமுறையில் அது இல்லை.

    இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்தார்.

    • இர்பான் பதான் ரிஷப் பண்டை போராளி என தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • காயத்திலும் இந்திய அணிக்காக பேட்டிங் செய்த ரிஷப் பண்டுக்கு ரசிகர்கள் புகழாரம் சுட்டியுள்ளனர்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து இருந்தது. ரிஷப்பண்ட் 37 ரன்னில் இருக்கும் போது காயத்தால் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

    2-வது நாள் ஆட்டத்தின் போது மீண்டும் ரிஷப் பண்ட் களமிறங்கி அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவித்தது.

    இந்நிலையில் காயத்திலும் இந்திய அணிக்காக பேட்டிங் செய்த ரிஷப் பண்டுக்கு ரசிகர்கள் புகழாரம் சுட்டியுள்ளனர். மேலும் 2002-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே கிழிந்த தாடையுடன் பந்து வீசி அசத்தினார். அவருடன் ரிஷப் பண்டை ஒப்பிட்டு ரசிகர்கள் உள்பட முன்னாள் இந்திய வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

    குறிப்பாக இர்பான் பதான் ரிஷப் பண்டை போராளி என தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • நிதிஷ் குமார் ரெட்டி லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக பந்து வீசியதை பார்த்து ஆச்சர்யப் பட்டேன்.
    • சரியான பகுதியில் தொடர்ந்து பந்தை பிட்ச் செய்தார்.

    ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டியை, இந்தியா தொடர்ந்து அணியில் இடம் பெறச் செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அனில் கும்ப்ளே கூறியதாவது:-

    நிதிஷ் குமார் ரெட்டி லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக பந்து வீசியதை பார்த்து ஆச்சர்யப் பட்டேன். சரியான பகுதியில் தொடர்ந்து பந்தை பிட்ச் செய்தார். லெக் சைடு ஷார்ட் பால் மூலம் விக்கெட் கிடைத்தது கிஃப்ட். மாற்றாக அவர் ஒழுக்கமாக பந்து வீசினார்.

    ஆஸ்திரேலியாவில் விக்கெட் அதிக அளவில் வீழ்த்தவில்லை என்றாலும், நன்றாக பேட்டிங் செய்தார். சதமும் அடித்தார். இதுபோன்ற வீரர் பார்ட்னர்ஷிப்பை உடைக்க அணிக்கு தேவை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்து, அதே நேரத்தில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த இதுபோன்ற வீரர் அவசியம்.

    ஒரே ஸ்பெல்லில் ஏறக்குறைய 14 ஓவர்கள் வீசினார். இது அவருடைய உடற்தகுதி மற்றும் கட்டுப்பாட்டை வெளிப்படுத்துகிறது. சிறந்த பீல்டர், இளமையானவர். சதம் அடிக்கக் கூடியவர். அடிக்கடி நீக்குவது மற்றும் மாற்றுவது ஆகியவற்றை விட்டுவிட்டு, அவரை தொடர்ந்து அணியில் வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

    லார்ட்ஸ் போட்டியில் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களை நிதிஷ் குமார் அவுட்டாக்கி, அணிக்கு உத்வேகம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்சிபி அணியின் வெற்றி பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.
    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என கும்ப்ளே கூறினார்.

    ஐ.பி.எல். கோப்பை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கர்நாடக மாநில அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழா விதான சவுதாவில் நடைபெற்றது.

    இதையடுத்து, சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.

    இந்நிலையில் கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். மேலும், ஆர்சிபி-யின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என கூறினார். 

    • விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
    • விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் கே.எல்.ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

    ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20-ந்தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் 4 ஆம் இடத்தில் யார் களமிறங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது. விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் கே.எல்.ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், விராட் கோலிக்கு மாற்று வீரராக கருண் நாயரை விளையாட வைக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே ஆலோசனை வழங்கியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "முதல் தர கிரிக்கெட்டில் ரன்களை குவித்திருக்கும் கருண் நாயர், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற தகுதியானவர். அவரால் விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்" என்று தெரிவித்தார்.

    அண்மையில் நடந்து முடிந்த சையத் முஸ்தாக் அலி டிராபி தொடரில் கருண் நாயர் தான் அதிக ரன்கள் குவித்தார்.இதனை தொடர்ந்து நடைபெற்ற ரஞ்சி டிராபியில் 54 சராசரியுடன் 863 ரன்கள் குவித்தார். இதில் 4 சதம், 2 அரைசதம் அடங்கும்.

    • பிரேவிஸ் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார்.
    • சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக ஆடுவது அவ்வளவு எளிது கிடையாது.

    ஐதராபாத்துக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் டிவால்ட் பிரேவிஸ் அதிரடியாக ஆடினார். 25 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார்.

    இந்த நிலையில் பிரேவிஸ் சென்னை அணியில் நீண்ட காலம் இருப்பார் என்று முன்னாள் சுழற்பந்து வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பிரேவிஸ் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக ஆடுவது அவ்வளவு எளிது கிடையாது. தென் ஆப்பிரிக்க அணிக்காகவும், முதல்தர போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதன் காரணமாகவே அவர் ஐ.பி.எல். தொடரில் இணைந்து உள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கூட அவர் கிடையாது. மாற்று வீரராக இணைந்தார். பிரேவிசிடம் அனைத்து ஷாட்டுகளும் ஆடும் திறன் இருக்கிறது. அவருக்கு சி.எஸ்.கே.வுடன் நீண்ட காலம் பயணிக்கும் திறன் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகிஸ்தான் உண்மையில் நல்ல வேகப்பந்து வீச்சை வைத்திருக்கிறார்கள்.
    • அர்ஷ்தீப் சிங், ஜாகீர்கானின் பாதையில் சென்று இந்திய அணிக்கு பல அற்புதங்களை நிகழ்த்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக்கோப்பையில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி பாகிஸ்தான் தான் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், இந்திய அணி முன்னாள் கேப்டனுமான கும்ப்ளே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் உண்மையில் நல்ல வேகப்பந்து வீச்சை வைத்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியா போல் அவர்களிடம் ஆல்ரவுண்டர்கள் இல்லை. ஆஸ்திரேலிய அணியிலும் சிறந்த வேகப்பந்து வீரர்கள் உள்ளனர்.

    சுழற்பந்து வீச்சில் இந்திய அணி நல்ல நிலையில் இருக்கிறது. இதே போல வேகப்பந்து வீச்சு என்று என்னிடம் கேட்டால் பாகிஸ்தானை தான் சொல்வேன்.

    இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், ஜாகீர்கானின் பாதையில் சென்று இந்திய அணிக்கு பல அற்புதங்களை நிகழ்த்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சினால் மிகவும் கவரப்பட்டேன். நான் அவருடன் 3 ஆண்டுகள் ஒன்றாக பணியாற்றி இருக்கிறேன். 20 ஓவர் போட்டிகளில் அவர் வளர்ந்து வந்த விதத்தை கண்கூடாக பார்த்து இருக்கிறேன். கடந்த ஐ.பி.எல். அவரது வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பதற்றம் இல்லாமல் வீசுவது என்பது கனவு தான். ஆனால் அதிலும் அர்ஷ்தீப்சிங் தேறி விட்டார். அவர் முதிர்ச்சி அடைந்து விட்டார். அவர் இது மாதிரியே முன்னேறி செல்ல வேண்டும். அதாவது ஜாகீர்கான் போல் இவரும் ஒரு பெரிய பவுலராக வரவேண்டும்.

    இவ்வாறு கும்ப்ளே கூறியுள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆகாஷ்.
    • 2018ல் இருந்து என்னுடைய வாய்ப்பிற்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன்.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றது.

    அடுத்தடுத்து ஏற்பட்ட ரன் அவுட் உள்ளிட்ட காரணங்களால் லக்னோ அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களிலேயே ஆட்டத்தை இழந்தது.

    இதில், மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால், அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    இதுகுறித்து ஆகாஷ் மத்வால் கூறியதாவது:-

    என்னுடைய இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன். நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். ஆனால் என்னுடைய விருப்பம் கிரிக்கெட்டாக இருந்தது. 2018ல் இருந்து என்னுடைய வாய்ப்பிற்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன். வரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவேன் என்று நம்புகிறேன். இன்ஜினியர்கள் விரைவாக கற்றுக்கொள்பவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • உங்களின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் இதோடு நிறுத்த கூடாது, 620, 625, 700 விக்கெட்டுகள் என்று தான் உங்களது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்யவேண்டும்.

    ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை அஷ்வின் படைத்துள்ளார். சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 9-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். 499 விக்கெட்டுகளோடு இருந்த அஷ்வின், இங்கிலாந்து அணியின் ஓப்பனரான சக் க்ராலியை தனது 500வது விக்கெட்டாக வீழ்த்தியிருக்கிறார்.

    ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் போட்டிக்கு பிறகு அஷ்வினிடம் பேசிய, கும்ப்ளே, "ஆஷ்! வாழ்த்துகள். உங்களின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் இதோடு நிறுத்த கூடாது, 620, 625, 700 விக்கெட்டுகள் என்று தான் உங்களது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்யவேண்டும். அதற்குக் குறைவாக விக்கெட்டுகளோடு உங்கள் கிரிக்கெட் பயணத்தை முடிக்க வேண்டும் என்று கூட நீங்கள் நினைக்க கூடாது" என்று பெருமிதமாக அவர் தெரிவித்தார்.

    அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் டெஸ்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரராக உள்ளார். கும்ளேவுக்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 2-வது இடத்தில உள்ளார்.

    உலக அளவில் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த போது 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவ்வேளையில் தற்போது அஸ்வின் தனது 98-வது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    அதேபோன்று குறைந்த பந்துகளை வீசி 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அஷ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிளென் மெக்ராத் 25528 பந்துகளை வீசி 500 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியிருந்த வேளையில் அஸ்வின் 25,714 பந்துகளை வீசி 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • பேட்டிங்க்கும், பந்துவீச்சுக்கும் சம நிலையான போட்டி இருக்க வேண்டும்.
    • சில காலம் கழித்து இந்தியாவில் பந்து வீச இளைஞர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

    இந்திய அணி முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமாக இருந்துள்ளது. குறிப்பாக தொடரின் முதல் பாதி மிகுந்த சிரமத்தை கொடுத்தது.

    பந்துவீச்சாளர்களை பாதுகாக்க சில மாற்றங்களை செய்ய வேண்டும். இந்தியாவில் இருக்கும் எல்லா மைதானத்தின் எல்லைகளும் அதிகரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரி எல்லையை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். முதல் கட்டமாக, பவுண்டரி எல்லையை ஒட்டி அணியினர் அமர்ந்திருக்கும் டக் அவுட்டை நீங்கள் மைதானத்தில் ரசிகர்கள் இருக்கும் பகுதிக்கு நகர்த்தலாம். மேலும் பந்தின் தையல் கொஞ்சம் பெரிதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வது, பந்தில் கொஞ்சம் அசைவு இருப்பதற்கு உதவி செய்யும். பேட்டிங்க்கும், பந்துவீச்சுக்கும் சம நிலையான போட்டி இருக்க வேண்டும். எனவே இத்தகைய மாற்றங்களை செய்தாக வேண்டும். இல்லையென்றால் சில காலம் கழித்து இந்தியாவில் பந்து வீச இளைஞர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். 20 ஓவர் உலகக்கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் ஆட்டத்தில் எந்த சுழற்பந்து வீச்சாளர் இடம் பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் குல்தீப் யாதவ் நிச்சயம் இருப்பார். குல்தீப் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் என்பதால் இந்தியாவின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 618 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்.
    • கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடிக்க வேண்டும் என்றால் 104 விக்கெட்கள் அவருக்கு தேவை.

    சென்னை:

    சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளராக விளங்கும் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வந்தால் 38 வயதை நிறைவு செய்வார். இதனால் அஸ்வின் தன்னுடைய கடைசி கிரிக்கெட் அத்தியாயத்தை நெருங்கி இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

    இதுவரை இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 2-வது இடத்தில் இருக்கிறார். 619 விக்கெட்களுடன் முதலிடத்தில் கும்ப்ளே இருக்கின்றார். கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடிக்க வேண்டும் என்றால் 104 விக்கெட்கள் அவருக்கு தேவை.

    இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு பெறப்போவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கான பதிலை அவர் 2017-ம் ஆண்டு தெரிவித்திருக்கிறார். 7 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில் தாம் 618 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

    இது குறித்து பேசியுள்ள அவர், நான் அனில் கும்ப்ளேவில் மிகப்பெரிய ரசிகர். அவர் 619 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதனால் நான் 618 விக்கெட்டுகள் வந்த உடனேயே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன். அவருடைய சாதனையை நான் முறியடிக்க மாட்டேன். 618 விக்கெட்டுகள் வந்தாலே நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

    நான் எப்போது 618 விக்கெட் எடுக்கிறேனோ அதுதான் என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று அஸ்வின் கூறியிருந்தார். அஸ்வின் இந்த பழைய பேட்டி தற்போது வைரலாக இருக்கின்றது. கும்ப்ளே ஓய்வு பெற்ற பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து 2011-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு அஸ்வின் கால் எடுத்து வைத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியிலே ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வாங்கிய அஸ்வின், அந்த தொடரில் மொத்தமாக 22 விக்கெட்டுகளும், பேட்டிங்கில் 121 ரன்களும் அடித்திருந்தார். அஸ்வின் கும்ப்ளேவின் சாதனையை நெருங்க வேண்டுமென்றால் குறைந்தது 20 டெஸ்ட் போட்டிகள் ஆவது விளையாட வேண்டும். இதில் இந்திய அணி வரும் ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

    • அஸ்வின் 2 ஆவது இன்னிங்சில் 96 விக்கெட்டுகள் வீழ்த்தி கும்ப்ளே சாதனையை முறியடித்தார்.
    • அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியர்கள் பட்டியலில் ஷேன் வார்னே சாதனையை அஷ்வின் சமன் செய்துள்ளார்.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அஷ்வின் 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்தியா சார்பில் 2 ஆவது இன்னிங்சில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஷ்வின் படைத்துள்ளார்.

    இந்தியா சார்பில் 2 ஆவது இன்னிங்சில் 94 விக்கெட்டுகள் வீழ்த்திய அனில் கும்ப்ளேவின் சாதனையை 96 விக்கெட்டுகள் வீழ்த்தி அஷ்வின் முறியடித்துள்ளார்.

    மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுக்குள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே சாதனையை அஷ்வின் சமன் செய்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் அஷ்வின் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியல்:

    67 - முத்தையா முரளிதரன்

    37 - ரவிச்சந்திரன் அஸ்வின்

    37 - ஷேன் வார்னே

    36 - ரிச்சர்ட் ஹாட்லீ

    35 - அனில் கும்ப்ளே

    ×