என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை இந்தியன்ஸ்"

    • அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது
    • தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

    கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால் அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக குஜராத் அணியிடம் இருந்து ரூ.2.6 கோடிக்கு அதிரடி வீரர் ஷெர்பான் ரூதர்போர்ட்-ஐ மும்பை அணி TRADE செய்துள்ளது.

    முன்னதாக லக்னோ வீரர் ஷர்துல் தாக்கூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    • அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது.
    • தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

    கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால் அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மும்பை அணி நிர்வாகம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூரை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருவதாக முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ரவிசந்திரன் அஸ்வின் நேற்று தெரிவித்தார். .

    இந்நிலையில், லக்னோ வீரர் ஷர்துல் தாக்கூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

    2026 ஐபிஎல் தொடருக்காக பலவித TRADE யூகங்கள் பரவிய நிலையில், முதல் வீரராக ஷர்துல் தாக்கூர் TRADE ஆகியுள்ளார்.

    முன்னதாக, ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ அணிக்கு கொடுக்க மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ஷர்துல் தாகூருக்கு பதில் அர்ஜுன் டெண்டுல்கரா? என்று இந்த தகவலை நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டலடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
    • அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

    கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால் அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மும்பை அணி நிர்வாகம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூரை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருவதாக முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    அவருக்கு பதிலாக தனக்கு அணியின் அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ அணிக்கு கொடுக்க மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஷர்துல் தாகூருக்கு பதில் அர்ஜுன் டெண்டுல்கரா? என்று இந்த தகவலை நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி எந்த சர்வதேச டி20 அணியையும் வீழ்த்த முடியும்.
    • முக்கிய அணி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் வரும் 15-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். இதனால் டிரேட் முறையில் ஐபிஎல் அணிகள் ஏலத்திற்கு முன்பே தங்களது வீரர்களை வேறு அணிக்கு மாற்றிக் கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அப்படி ஏதும் செய்ய தேவையில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    மும்பை ஒரு அற்புதமான அணி. அவர்களைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. தீபக் சாஹர் போன்ற ஒருவரை மாற்றுவது பற்றி அவர்கள் யோசிக்கலாம். அதைத் தவிர, அவர்களுக்கு வேறு யாரும் தேவையில்லை.

    ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, டிரென்ட் போல்ட், மிட்செல் சாண்ட்னர் மற்றும் ரியான் ரிக்கல்டன் என சொல்லி கொண்டே போகலாம். ஒரு அணிக்கு வேறு என்ன தேவை. எனவே அவர்களுக்கு இன்னும் இரண்டு முதல் மூன்று வீரர்கள் மட்டுமே தேவை. அது ஒரு துப்பாக்கி அணியாக இருக்கும்.

    மும்பை இந்தியன்ஸ் அணி எந்த சர்வதேச டி20 அணியையும் வீழ்த்த முடியும். அவர்கள் எதையும் மாற்ற வேண்டியதில்லை. ஏலத்தில் சில வீரர்களை அவர்கள் எடுக்கலாம். ஆனால் முக்கிய அணி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

    என்று பத்ரிநாத் கூறினார்.

    • பஞ்சாப்புக்கு எதிரான தோல்வியின் மூலம் மும்பை இந்த மைதானத்தில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது.
    • நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிராக 4 போட்டிகளில் மும்பை தோல்வியடைந்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2-ல் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 203 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் மும்பை அணி தோல்வியை சந்தித்தே இல்லை. அந்த சாதனையை நேற்று பஞ்சாப் அணி தகர்த்தது.

    இந்நிலையில் இந்த தோல்வியில் மும்பை அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் மும்பை இந்த மைதானத்தில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக குஜராத் அணிக்கு எதிராக 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

    2014-ம் ஆண்டிற்கு பிறகு நரேந்திர மோடி ஸ்டேயத்தில் நடந்த போட்டிகளில் மும்பை வெற்றி பெற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அதன் விவரம்:-

    2015 VS ராஜஸ்தான்

    2023 VS குஜராத்

    2023 VS குஜராத்

    2024 VS குஜராத்

    2025 VS குஜராத்

    2025 VS பஞ்சாப் கிங்ஸ்

    • ஷ்ரேயஸ் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
    • பும்ரா வீசிய யார்க்கர் பந்துகளை சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் பவுண்டரிக்கு விளாசினார்.

    நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    குறிப்பாக இந்த போட்டியில் பும்ரா வீசிய யார்க்கர் பந்துகளை சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் பவுண்டரிகள் விளாசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சொன்னபோனால் இதற்கு முன்பாக டெல்லி அணிக்கு விளையாடிய போதும் பும்ராவின் யார்க்கர் பந்துகளை இதே போல் ஷ்ரேயஸ் பவுண்டரிகள் அடித்துள்ளார்.

    இந்நிலையில், "பும்ராவுக்கு எதிராக ஸ்ரேயஸ் விளையாடிய ஷாட் தான் இந்தாண்டு ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த ஷாட்" என்று ஏபி டிவில்லியர்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய டிவில்லியர்ஸ், "பும்ராவின் யார்க்கர் பந்துகளை ஷ்ரேயஸ் விளையாடிய ஷாட் தான் இந்த ஆண்டு ஐபிஎல்-ன் சிறந்த ஷாட். பும்ரா வீசிய யார்க்கர் பந்துகளை நான் எதிர்கொண்டிருந்தால் என் மிடில் ஸ்டம்புகளை பந்து தாக்கியிருக்கும். 

    ஸ்ரேயஸ் அடித்த சிக்ஸர்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தன. அவரது தலை அசையாமல் இருந்தது. அவர் அமைதியாகவும், சமநிலையுடனும் இருக்கிறார். அவர் திமிர்பிடித்தவர் அல்ல. அதனால் எனக்கு அவரைப் பற்றி மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் அவர் இன்னும் அதிக ரன்களை குவிப்பார்" என்று பாராட்டினார்.

    • மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
    • இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது.

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இதனையடுத்து, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் ஸ்ரேயஸ் உடன் அந்த அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா செல்ஃபி எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    • மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தரையில் உற்கார்ந்து சோகத்தில் மூழ்கினார்.

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாமல் தோல்வியை தழுவியதால் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தரையில் உற்கார்ந்து சோகத்தில் மூழ்கினார். இதனையடுத்து பஞ்சாப் வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், பாண்ட்யாவுக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்களைக் குவித்த மிடில் ஆர்டர் வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் படைத்தார்.
    • நடப்பு ஐ.பி.எல் தொடரில் சூர்யகுமார் யாதவ் 717 ரன்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இந்த போட்டியில் ஏபி டி வில்லியர்ஸின் 9 ஆண்டு கால சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.

    இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 15 ரன்களை கடந்த போது, ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் அல்லாத வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    கடந்த 2016ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 687 ரன்களைக் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் சூர்யகுமார் யாதவ் 717 ரன்கள் அடித்து இந்த சாதனையை முறியடித்துள்ளார்..

    ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த மிடில் ஆர்டர் வீரர்

    சூர்யகுமார் யாதவ் - 717 ரன்கள் (2025)

    ஏபி டி வில்லியர்ஸ் - 687 ரன்கள் (2016)

    ரிஷப் பண்ட் - 684 ரன்கள் (2018)

    கேன் வில்லியம்சன் - 622 ரன்கள் (2018)

    • 2024 ஆம் ஆண்டு ஸ்ரேயஸ் தலைமையிலான கொல்கத்தா அணி கோப்பையை வென்றது
    • வேறு எந்த வீரரும் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதில்லை.

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதன் மூலம் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்குள் அழைத்து சென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார்.

    கடந்த 2020ம் ஆண்டு டெல்லி அணியையும், 2024ம் ஆண்டு கொல்கத்தா அணியையும், நடப்பு சீசனில் பஞ்சாப் அணியையும் ஸ்ரேயஸ் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் தொடர்ச்சியான 2 ஐபிஎல் சீசன்களில் இரண்டு வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். வேறு எந்த வீரரும் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதில்லை.

    இதில், 2024 ஆம் ஆண்டு ஸ்ரேயஸ் தலைமையிலான கொல்கத்தா அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்கள் அடித்த 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
    • மும்பை அணியின் இந்த மகத்தான சாதனைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 200+ ரன்கள் இலக்கை துரத்தி வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்தது.

    ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்கள் அடித்த 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். அண்மையில் முடிந்த எலிமினேட்டர் போட்டியில் கூட முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 200+ ரன்கள் அடித்து வெற்றி பெற்றிருந்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த மகத்தான சாதனைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    மேலும், ஐபிஎல் பிளேஆப் போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கும் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் நாக் அவுட் போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு:

    204 - PBKS vs MI, அகமதாபாத், 2025*

    200 - KKR vs PBKS, பெங்களூரு, 2014

    191 - KKR vs CSK, சென்னை, 2012

    189 - GT vs RR, கொல்கத்தா, 2022

    179 - CSK vs SRH, மும்பை, 2018

    • முதலில் ஆடிய மும்பை அணி 203 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய பஞ்சாப் 207 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.

    மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டானார். பேர்ஸ்டோவ் 24 பந்தில் 38 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 44 ரன்னும், திலக் வர்மா 26 பந்தில் 44 ரன்னும் குவித்தனர். கடைசி கட்டத்தில் நமன் தீர் 18 பந்தில் 37 ரன் எடுத்து அவுட்டானார்.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. பிரப் சிம்ரன் சிங் 8 ரன்னும், பிரியான்ஷு ஆர்யா 20 ரன்னும் எடுத்தனர்.

    3வது விக்கெட்டுக்கு ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி இணைந்தது. இங்லிஸ் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து இறங்கிய நேஹல் வதேரா ஷ்ரேயசுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஷ்ரேயஸ் அய்யர் பொறுப்புடன் ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 41 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    ×