என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shardul Thakur"

    • அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது.
    • தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

    கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால் அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மும்பை அணி நிர்வாகம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூரை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருவதாக முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ரவிசந்திரன் அஸ்வின் நேற்று தெரிவித்தார். .

    இந்நிலையில், லக்னோ வீரர் ஷர்துல் தாக்கூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

    2026 ஐபிஎல் தொடருக்காக பலவித TRADE யூகங்கள் பரவிய நிலையில், முதல் வீரராக ஷர்துல் தாக்கூர் TRADE ஆகியுள்ளார்.

    முன்னதாக, ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ அணிக்கு கொடுக்க மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ஷர்துல் தாகூருக்கு பதில் அர்ஜுன் டெண்டுல்கரா? என்று இந்த தகவலை நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டலடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
    • அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

    கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால் அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மும்பை அணி நிர்வாகம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூரை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருவதாக முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    அவருக்கு பதிலாக தனக்கு அணியின் அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ அணிக்கு கொடுக்க மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஷர்துல் தாகூருக்கு பதில் அர்ஜுன் டெண்டுல்கரா? என்று இந்த தகவலை நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.

    • பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் பவுலர் மீது குறைகள் இருந்தாலும் அதை விமர்சனம் செய்வது நியாயமற்றது.
    • ஆனால் ஜடேஜாவை நான் விமர்சிப்பேன்.

    இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தால் 364 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

    இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 82 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 373 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய அனுபவத்தை வீணடித்து விட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிட்ச் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எந்த ஆதரவையும் கொடுக்கவில்லை. அந்த பிட்ச்சில் பும்ராவால் கூட எதையும் செய்ய முடியவில்லை. காற்றிலும் உதவியும் கிடைக்கவில்லை. இதுபோக பும்ரா, ஜடேஜாவுக்கு எதிராக பென் டக்கெட் சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளார்.

    அவரை சொந்த மண்ணில் நடைபெற்ற 2024 தொடரில் கூட ஜடேஜா அவுட்டாக்கியதாக எனக்குத் தெரியவில்லை அப்படி உங்களுடைய 2 முன்னணி பவுலர்களுக்கு எதிராக செட்டிலான இங்கிலாந்து பேட்ஸ்மேன் விளையாடினால் அவர்களுக்கு வெற்றி உறுதியாகி விடும்.

    பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் பவுலர் மீது குறைகள் இருந்தாலும் அதை விமர்சனம் செய்வது நியாயமற்றது. ஆனால் ஜடேஜாவை நான் விமர்சிப்பேன். ஏனெனில் கடைசி நாளில் பிட்ச்சில் அவருக்கு உதவி செய்ய ரஃப் இருந்தது. அது வழக்கமான இங்கிலாந்து சூழ்நிலைகள் கிடையாது. அந்த காலடிகளை பென் ஸ்டோக்ஸ்க்கு எதிராக ஜடேஜா பயன்படுத்தவில்லை. மிகவும் தாமதமாக பென் டக்கெட்டுக்கு எதிராக பயன்படுத்தினார்.

    ஆனால் அவரைப் போன்ற அனுபவமிக்க பவுலர் அதை அதிகம் பயன்படுத்துவார் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அங்கே தான் ஜடேஜா ஏமாற்றத்தைக் கொடுத்தார் என்று நினைக்கிறேன்.

    ஒரு காலத்தில் இந்தியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைக்கும். அது நியூசிலாந்தாக இருந்தாலும் சரி, இங்கிலாந்தாக இருந்தாலும் சரி. குல்தீப் உங்கள் அணியில் இருந்தால், அவரை விளையாட விடுங்கள். இங்கிலாந்தில் விளையாடுவதால் மட்டும் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்யாதீர்கள்.

    நான் ஒரு வேகப்பந்து வீச்சாளரை விட்டுவிட்டு குல்தீப் யாதவை அணியில் சேர்ப்பேன். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம் பெற வேண்டும்.

    என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறினார்.

    • இங்கிலாந்து ஆடுகளங்கள் வித்தியாசமான சவால்களை கொண்டது.
    • இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம்பெற்று உள்ளார்கள்.

    லண்டன்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் நாளை மறுநாள் (20-ந்தேதி) லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம் என்று வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து ஆடுகளங்கள் வித்தியாசமான சவால்களை கொண்டது. இங்கு விளையாட இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இங்கிலாந்தில் நிலவும் வானிலையை முதலாவதாகக் கூறுவேன். சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சில நேரங்களில் சூரியன் பிரகாசமாக உள்ள நாளாக இருக்கும். வானிலை எப்படி இருப்பினும், வீரர்கள் அதற்கு ஏற்ப தங்களை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டியது இருக்கும்.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம்பெற்று உள்ளார்கள். அணியில் திறமையான வீரர்கள் இடம்பெறுவது எப்போதும் உற்சாகம் அளிப்பதாக இருக்கும். இங்கிலாந்து அணியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய யுக்தியை பின்பற்றி விளையாடி வருகிறார்கள்.

    வெளிநாடுகளில் தொடர்களை கைப்பற்றுவது எப்போதும் சிறப்பானதாக இருக்கும். இங்கிலாந்தில் நாங்கள் தொடரை வென்றால் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் மிகப்பெரிய விஷயமாக இருக்கும். இங்கிலாந்தில் தொடரை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜஸ்பிரித் பும்ரா (2015), முகமது சிராஜ் (2023) கலீல் அகமது (2024) போன்றவர்கள் தொடர்ச்சியாக நான்கு வைடுகள் வீசியுள்ளனர்.
    • மொத்தத்தில் லக்னோ பவுலர்கள் வைடு வகையில் 20 ரன்களை வாரி வழங்கினர்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 238 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 234 ரன்கள் எடுத்தது. இதனால் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இந்த பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 13-வது ஓவரில் தொடர்ந்து 5 வைடுகளை வீசினார்.

    ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு பவுலர் தொடர்ச்சியாக 5 வைடு வீசியது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் லக்னோ பவுலர்கள் வைடு வகையில் 20 ரன்களை வாரி வழங்கினர். இதில் தாக்குரின் பங்களிப்பு மட்டும் 8. ஒரு இன்னிங்சில் அதிக வைடு போட்ட மோசமான பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    ஜஸ்பிரித் பும்ரா (2015), பிரவீன் குமார் (2017), முகமது சிராஜ் (2023) மற்றும் கலீல் அகமது (2024) போன்றவர்கள் தொடர்ச்சியாக நான்கு வைடுகள் வீசியுள்ளனர்.

    மேலும் அவர் ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசி, துஷார் தேஷ்பாண்டே மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் சாதனையையும் சமன் செய்தார். தேஷ்பாண்டே எல்எஸ்ஜிக்கு எதிராகவும் சிராஜ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும் ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசியுள்ளனர். 2023-ம் ஆண்டு இந்த சம்பவம் அரங்கேறியது.

    • லக்னோ அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • ஐ.பி.எல். தொடரில் ஷர்துல் தாக்குர் 100 விக்கெட் எடுத்தோர் பட்டியலில் இணைந்துள்ளார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். 2025 தொடரின் 7-வது லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார்.

    லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. 4 விக்கெட் வீழ்த்திய ஷர்துல் தாக்குருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    ஷர்துல் தாக்குர் ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். அத்துடன், நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஊதா நிற தொப்பியையும் தன்வசப்படுத்தி உள்ளார்.

    இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது பெற்றபோது ஷர்துல் தாக்குர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ஐ.பி.எல்லில் எந்த அணியாலும் எடுக்கப்படுவேன் என நம்பவில்லை. ஐ.பி.எல் சமயத்தில் என்ன செய்யலாம் என திட்டமிட்டு கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஆட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். அதன்பிறகுதான் ரஞ்சி டிராபியில் ஆடிக்கொண்டிருந்தபோது ஜாகீர்கானிடமிருந்து அழைப்பு வந்தது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி என்னைத்தான் முதலில் அணுகியது. அதனால் நான் அதை ஏற்றுக்கொண்டேன்.

    கிரிக்கெட்ல நல்ல நாட்களும் இருக்கும், கெட்ட நாட்களும் இருக்கும். அதையெல்லாம் கடந்துதான் போகணும். ஸ்கோர்ஷீட்டில் இருப்பது எப்பவும் நல்லதுதான், ஆனா ஆட்டத்தை வெல்வது எனக்கு முக்கியம்.

    நான் ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்துகிட்டே இருக்கேன். விக்கெட் பத்தியோ, ரன் பத்தியோ நான் அதிகம் பார்க்கல. மேட்ச் வின்னிங் பெர்பார்மென்சை மட்டுமே காட்ட விரும்புகிறேன்.

    பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் பிட்ச் தயார் செய்யப்படுவது பந்துவீச்சாலர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

    அவங்க பவுலர்களை ரொம்பவே தாக்குறாங்க. அதனால அவங்களை ஏன் கடுமையாக தாக்கக்கூடாது? கூட்டா அவங்களை எதிர்த்துப் போராடுவதுதான் திட்டம். ஆரம்பத்துலயே விக்கெட் எடுத்தா நல்லா விளையாடுவோம்னு நினைத்தோம் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 190 ரன்களை எடுத்துள்ளது.
    • அடுத்து ஆடிய லக்னோ 193 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    ஐபிஎல் 2025 தொடரின் 7-வது லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 28 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்தார். அனிகெட் வர்மா 36 ரன்னும், நிதிஷ் ரெட்டி 32 ரன்னும், கிளாசன் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், ஆவேஷ் கான், திக்வேஷ் ராதி, பிரின்ஸ் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்கிரம் ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

    மிட்செல் மார்ஷ் உடன் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. குறிப்பாக, நிகோலஸ் பூரன் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார். அவர் 26 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரிகள் உள்பட 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பண்ட் 15 ரன்னில் வெளியேறினார். கடைசியில் இறங்கிய அப்துல் சமத் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டாஸ் வென்று சொன்னபடி ரிஷப் பண்ட் செய்து வெற்றி பெற்றுவிட்டார்.

    • ஷர்துல் தாகூர் அடுத்தடுத்து பந்தில் விக்கெட் வீழ்த்தி ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
    • டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 7-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3-வது ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது, ஷர்துல் தாகூர் வீசிய அந்த ஓவரில் அபிஷேக் சர்மா 6 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் ஐதராபாத் 2.2 ஓவரில் 15 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்கோர் 7.3 ஓவரில் 76 ரன்னாக இருக்கும்போது டிராவிஸ் ஹெட் 28 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை பிரின்ஸ் யாதவ் வீழ்த்தினார்.

    அடுத்து களமிறங்கிய கிளாசனும் அதிரடியாக விளையாடினார். துரதிருஷ்டவசமாக 17 பந்தில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, ரன்அவுட் ஆனார். அடுத்து நிதிஷ் ரெட்டி 32 பந்தில் வெளியேறினார். இவரை ரவி பிஷ்னோய் க்ளீன் போல்டாக்கினார்.

    இதனால் 14.1 ஓவரில் 128 ரன்கள் அடிப்பதற்குள் முக்கிய ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 200 ரன்னைத் தொடுவது சந்தேகமானது. ஆனால் அனிகெட் வர்மா 13 பந்தில் 36 ரன்களும், பேட் கம்மின்ஸ் 4 பந்தில் 18 ரன்களும் அடித்தனர். என்றபோதிலும், பேட் கம்மின்ஸ் ஆட்டமிழக்கும்போது 17.3 ஓவரில் 176 ரன்கள் எடுத்திருந்தது.

    இறுதியாக 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்தது. ஷர்துல் தாகூர் அபாரமாக பந்து வீசி 4 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். பிரின்ஸ் யாதவ் 4 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ பேட்டிங் செய்து வருகிறது.

    • அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது அதிரடி ஆட்டத்தால் 89 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. அதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் மும்பை அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தமிழக பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணி ஒரு கட்டத்தில் 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது அதிரடி ஆட்டத்தால் 89 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். பின்னர் 104 பந்துகளில் 109 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் சென் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழந்தார்.

    தற்போது வரை, 322 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை மும்பை அணி இழந்துள்ளது. இதன் மூலம் மும்பை அணி 176 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

    • துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
    • ஷர்துல் தாக்கூர் 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசிய தேஷ்பாண்டே மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோரை பிராவோ கட்டி அணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    துஷார் தேஷ்பாண்டே நான்கு ஓவர்கள் வீசி வெறும் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதைப்போன்று ஷர்துல் தாக்கூர் நான்கு ஓவர்கள் வீசி வெறும் 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

    குறிப்பாக 15-வது ஓவரை வீசிய சர்துல் தாக்கூர், இரண்டு ரன்களையும் 16-வது ஓவரை வீசிய தேஷ்பாண்டே மூன்று ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதுதான் ஆட்டத்தில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பிராவோ கூறியதாவது:-

    துசார் தேஷ்பாண்டே, சர்துல் தாகூர் ஆகியோர் வளர்வதை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்பா மகன்களை கட்டி அணைப்பதுபோல உங்களை கட்டி அணைத்தேன். உங்கள் தந்தையை பெருமைப்படுத்தி விட்டீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    • ஷர்துலின் பதிவை பயனர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
    • காரில் எங்கோ சென்று கொண்டிருக்கும் ஷர்துல் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டுள்ளார்.

    நடப்பு ஐ.பி.எல். 2024 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூர், 9 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் ஷர்துல் இதுவரை 95 போட்டிகளில் விளையாடியுள்ளார். அப்போட்டிகளில் 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறப்பான ஆட்டமாக உள்ளது.

    இந்நிலையில், ஷர்துல் எக்ஸ் தள பக்கத்தில் "ஃபாஸ்ட் டேக் அல்லது ஸ்லோ டேக்" என்ற தலைப்பில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தை பார்க்கும் போது, காரில் எங்கோ சென்று கொண்டிருக்கும் ஷர்துல் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டுள்ளார். நெரிசலுக்கு சுங்கச்சாவடியே காரணம் என்று கருதப்படுகிறது.

    ஷர்துலின் இந்த பதிவை பயனர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இதற்கு ஒரு பயனர் கூறுகையில், உங்கள் பந்துவீச்சு போல் மெதுவாக என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர் "இது தோனியின் 2019 அரையிறுதி இன்னிங்ஸை விட மெதுவாக இருக்கும்" என கருத்து தெரிவித்துள்ளார்.

    • டோனி தலைமையில் இந்தியா ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 கோப்பைகளை வென்றுள்ளது.
    • டோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்து பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் எம்.எஸ்.டோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்த டோனி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார்.

    மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர். அந்த வகையில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.

    இந்நிலையில் விராட் கோலி, ரோகித், தாம் போன்ற பல இந்திய வீரர்கள் வளர்வதற்கு டோனி முக்கிய காரணமாக இருந்ததாக ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    டோனியுடன் விளையாடுவது எப்போதுமே சிறப்பானது. ஏனெனில் அவர் உங்களை வளர அனுமதிப்பார். அவர் எப்பொழுதும் எங்களை சொந்த திட்டத்துடன் விளையாட அனுமதிப்பார். அவர் எப்போதும் எங்களுக்கு திட்டங்களை வகுத்து கொடுக்க மாட்டார்.

    குறிப்பாக 'நாளை நான் விக்கெட் கீப்பராக இருக்க மாட்டேன். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? எனவே உங்கள் அறைக்கு சென்று உங்களுடைய விளையாட்டை சிந்தித்து திட்டத்துடன் வாருங்கள். அது வேலை செய்யவில்லையென்றால் நான் உதவி செய்கிறேன்' என்று டோனி எங்களிடம் சொல்வார்.

    3 ஐசிசி கோப்பைகளை வென்ற அவர் பல இளம் வீரர்களை வளர்த்து தனது மரபை விட்டு சென்றுள்ளார். தற்போதைய மகத்தான வீரர்களான விராட், ரோகித் போன்றவர்கள் கூட ஆரம்ப காலத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் மகத்தான எம்.எஸ். டோனி அவர்களை ஆதரித்தார். அந்த ஆதரவுடன் அவர்கள் 2012-க்குப்பின் இப்போது வரை அசத்தி வருகிறார்கள்" என்று கூறினார்.

    ×