search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shardul Thakur"

    • துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
    • ஷர்துல் தாக்கூர் 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசிய தேஷ்பாண்டே மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோரை பிராவோ கட்டி அணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    துஷார் தேஷ்பாண்டே நான்கு ஓவர்கள் வீசி வெறும் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதைப்போன்று ஷர்துல் தாக்கூர் நான்கு ஓவர்கள் வீசி வெறும் 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

    குறிப்பாக 15-வது ஓவரை வீசிய சர்துல் தாக்கூர், இரண்டு ரன்களையும் 16-வது ஓவரை வீசிய தேஷ்பாண்டே மூன்று ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதுதான் ஆட்டத்தில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பிராவோ கூறியதாவது:-

    துசார் தேஷ்பாண்டே, சர்துல் தாகூர் ஆகியோர் வளர்வதை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்பா மகன்களை கட்டி அணைப்பதுபோல உங்களை கட்டி அணைத்தேன். உங்கள் தந்தையை பெருமைப்படுத்தி விட்டீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    • அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது அதிரடி ஆட்டத்தால் 89 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. அதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் மும்பை அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தமிழக பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணி ஒரு கட்டத்தில் 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது அதிரடி ஆட்டத்தால் 89 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். பின்னர் 104 பந்துகளில் 109 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் சென் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழந்தார்.

    தற்போது வரை, 322 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை மும்பை அணி இழந்துள்ளது. இதன் மூலம் மும்பை அணி 176 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

    • தீபக் சாஹருக்கு மாற்று வீரராக சென்னை அணி வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் தீபக் சாஹரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    மும்பை:

    பும்ரா உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது தீபக் சாஹரும் விலகி உள்ளார்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் ரிசர்வ் வீரராக இருந்த தீபக் சாஹரை மெயின் அணிக்கு கொண்டு செல்ல வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் தீபக் சாஹரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தீபக் சாஹர் பேட்டிங்கும் செய்வதால், அவர் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக இடம்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக பயிற்சி செய்த நிலையில் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த தொடரிலிருந்து விலகிய நிலையில் வாஷிங்டன் சுந்தர் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார்.


    இதனையடுத்து பெங்களூருவில் நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் தீபக் சாஹர் தோல்வி அடைந்தார். இதனால் அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    தீபக் சாஹருக்கு பதிலாக மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல முன்னணி பவுலர்கள் காயம் காரணமாக விலகுவது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அக்சார் பட்டேல், ஷர்துல் தாகூருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ஜடேஜா, சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்று விளையாடும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இந்தியா நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூப்பர் 4 பிரிவில் வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை இந்தியா எதிர்கொள்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    இந்திய அணியில் ஷர்துல் தாகூர், அக்சார் பட்டேல் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். தற்போது ஷர்துல் தாகூருக்கு இடுப்பு பகுதியிலும், அக்சார் பட்டேலுக்கு கை பெருவிரலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதனால் இருவருக்கும் பதிலாக சித்தார்த் கவுல் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் உடனடியாக துபாய் சென்று அணியில் இணைய இருக்கிறார்கள்.

    ஏற்கனவே ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    வெற்றி கோப்பையை தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டத்தில் மட்டும் களம் இறங்குவது எளிதான காரியம் அல்ல என வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வெற்றிபெறும் அணி கோப்பையை வெல்லும் என்பதால் இந்தியா மூன்று மாற்றங்களுடன் களம் இறங்கியது. உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல், சித்தார்த் கவுல் ஆகியோர் நீக்கப்பட்டு புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து ஜோ ரூட் (100) மற்றும் மோர்கன் (88) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 44.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது இந்திய வீரர் ஷர்துல் தாகூர் 10 ஓவர்கள் வீசி 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

    முதல் இரண்டு போட்டியில் விளையாடாத ஷர்துல் தாகூர் 3-வது போட்டியில் விளையாடினார். ஒரு தொடரில் பெஞ்சில் இருந்துவிட்டு திடீரென கடைசி போட்டியில், அதுவும் தொடரை தீர்மானிக்கும் போட்டியில் விளையாடுவது எளிதான காரியம் இல்லை என்று ஷர்துல் தாகூர் தெரிவத்துள்ளார்.

    இதுகுறித்து ஷர்துல் தாகூர் கூறுகையில் ‘‘நான் கடைசியாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினேன். அப்போது இந்தியா தொடரை கைப்பற்றியதால், அந்த போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய அவசியம் இல்லை.

    நேற்றைய போட்டியில் எனக்கு உண்மையிலேயே சற்று பதட்டமாக இருந்தது. ஏனென்றால் இந்த ஆட்டம் தொடரை தீர்மானிக்கக் கூடியதாகும். வீரர்கள் மீது நெருக்கடி உண்டாக்கும்போது, வீரர்களுடைய பொறுப்ப அணியை முன்னோக்கிச் எடுத்துச் செல்வதுதான். சில நேரம் நமக்க சாதகமாக இருக்கலாம். சில நேரம் போட்டி கையைவிட்டு விலகிச் செல்லலாம்.



    ஒரேயொரு போட்டியில் வாய்ப்பு கிடைத்து மைதானத்திற்குள் களம் இறங்கும்போது, அணி வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம்தான் எனது மனதிற்குள் இருக்கும். நேற்றைய போட்டியிலும் இந்த நிலைதான் இருந்தது. இந்தியா ‘ஏ’ அணியாக இருந்தாலும் சரி, இந்தியா சீனியர் அணியாக இருந்தாலும் சரி. என்னுடைய எண்ணம் இதுவாகத்தான் இருக்கும்.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஷர்துல் தாகூர் இடம்பிடித்துள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND @RishabPant777
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர்  ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆப்கானிஸ்தான் டெஸ்டின்போது யோ-யோ டெஸ்டில் தேர்ச்சியடையாத  முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



    சகா காயத்தில் இருந்து மீளாததால் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளார்.

    18 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி (கேப்டன்), 2. ரகானே (துணைக் கேப்டன்), 3. தவான், 4. கேஎல் ராகுல், 5. புஜாரா, 6. முரளி விஜய், 7. கருண் நாயர், 8. தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), 9. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 10. அஸ்வின், 11. ஜடேஜா, 12. குல்தீப் யாதவ. 13. ஹர்திக் பாண்டியா. 14. மொகமது ஷமி, 15. இசாந்த் சர்மா, 16. உமேஷ் யாதவ், 17. பும்ரா, 18. சர்துல் தாகூர்.
    இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND
    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதலில் அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதன்பின் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    மூன்றாவதாக 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த மூன்று தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பிடித்திருந்தார்.

    அயர்லாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது பும்ராவின் இடது கை பெருவிரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் கடந்த புதன்கிழமை லீட்ஸில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன்பின் இந்தியா திரும்பியுள்ளார்.



    ஒருநாள் போட்டி தொடங்குவதற்குள் பும்ரா காயம் குணமடைய வாய்ப்பில்லை. இதனால் பும்ராவிற்குப் பதிலாக மும்பையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பும்ரா பிசிசிஐ-யின் மெடிக்கல் குழுவின் மேற்பார்வையில் குணமடைவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார். அவரது காயம் குணமடைவதற்கான கால அவகாசம் குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதனால் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    ×