என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஷிங்டன் சுந்தர்"

    • நான் எந்த சூழ்நிலையில் இருக்கிறேன் என்பது விசயம் அல்ல.
    • அந்த வழி எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது.

    முதல் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் வாஷிங்டன் சுந்தர் 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய களம் இறக்கப்பட்டார். தற்போது நடைபெற்று வரும் 2-வது போட்டியில் 8-வது இடத்தில் களம் இறக்கப்பட்டார். நேற்று 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடிக்கடி பேட்டிங் வரிசை மாற்றப்படுவது குறித்த கேள்விக்கு வாஷிங்டன் சுந்தர் அளித்த பதில் பின்வருமாறு:-

    அணி என்னை எங்கு பேட்டிங் செய்ய விரும்புகிறதோ அங்கு பேட்டிங் செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறுவேன். அந்த வகையில், இது மிகவும் உற்சாகமானது. இது ஒரு டீம் கேம்.

    உண்மையைச் சொன்னால், அணி தேவைப்படும் போதெல்லாம், அணி என்னை எங்கு பேட்டிங் செய்து பந்து வீசச் சொல்ல விரும்புகிறதோ அதற்கு தயாராக இருக்கும் கிரிக்கெட் வீரராக நான் இருக்க விரும்புகிறேன். நான் தயாராக இருக்க வேண்டும். அணிக்காக சிறப்பான ஆட்டத்தை கொடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய மனநிலை.

    நான் எந்த சூழ்நிலையில் இருக்கிறேன் என்பது விசயம் அல்ல. அந்த வழி எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. எனக்கும் வித்தியாசமான ரோல்களில் விளையாட முடிகிறது. பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கிறேன். எனவே, இது உற்சாகமாக மட்டுமே.

    இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

    • வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார்.
    • யான்சென் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. செனுரன் முத்துசாமி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது முதல் டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார். முத்துசாமி 109 ரன்னும், மார்கோ யான்சென் 93 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 7 ரன்னுடனும், கே.எல். ராகுல் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. 480 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது. தென்ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சால் இந்திய அணி விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 122 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

    கே.எல். ராகுல் 22 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சாய்சுதர்சன் 15 ரன்னிலும், துருவ் ஜூரல் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்னிலும், நிதிஷ்குமார் ரெட்டி 10 ரன்னிலும், ஜடேஜா 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மார்கோ யான்சென் 4 விக்கெட்டையும், ஹார்மர் 2 விக்கெட்டையும், கேசவ் மகராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

    இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்ததால் பாலோஆன் நோக்கி சென்றது. 8-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர் உடன் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இந்த ஜோடி 50 ரன்களை தாண்டி விளையாடியது.

    வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்மர் பந்தில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர்- குல்தீப் யாதவ் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது.

    வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்ததும் குல்தீப் யாதவ் 19 ரன்னில் வெளியேறினார். குல்தீப் யாதவ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் யான்சென் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    கடைச விக்கடெ்டுக்கு பும்ரா உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். பும்ரா 5 ரன்னில் யான்சென் பந்தில் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா பாலோ-ஆன் ஆனது.

    ஆனால் தென்ஆப்பிரிக்கா பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. தற்போது 288 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

    • தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் 3 ஆம் இடத்தில் களமிறங்கினார்.
    • வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்சில் 29 ரன்களும் 2 ஆவது இன்னிங்சில் 31 ரன்களும் அடித்தார்.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வீழ்த்தியது. 15 வருடத்திற்குப் பிறகு இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தியது.

    இந்த டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக 3 ஆம் இடத்தில் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்சில் 29 ரன்களும் 2 ஆவது இன்னிங்சில் 31 ரன்களும் அடித்து நம்பிக்கை தந்தார்.

    இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தினேஷ் கார்த்திக்கிடம் வாஷிங்டன் சுந்தர் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "3 ஆம் இடத்தில் இறங்கி பேட்டிங் செய்வது மிகவும் சவாலானது. அந்த இடத்தில் பியூர் பேட்ஸ்மேன் மட்டுமே விளையாடுவார்கள். வாஷிங்டன் சுந்தர் ஒரு ஆல்ரவுண்டர், அவரிடம் பேட்டிங் டெக்னிக் இருந்தாலும், 3 ஆம் இடத்தில் இறங்கி விளையாடுவது சவாலானாதாக இருக்கும். ஒரு பேட்ஸ்மேன் 3 ஆம் இடத்தில் விளையாடவேண்டும் என்றால் அதற்கு அதிகமாக தயாராகவேண்டும். அவரால் பவுலிங், பேட்டிங் இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடியாது.. அவருடைய பந்துவீச்சு பாதிக்கப்படும்" என்று தெரிவித்தார். 

    • தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறி ஓய்வை அறிவித்துள்ளார்.
    • வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்து சிஎஸ்கே அணி தங்களது அணியில் இணைத்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது.

    இதன் காரணமாக தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் தயார் செய்து வருகிறது. அதோடு அதற்கு முன்னதாக வீரர்கள் டிரேடிங் முறையிலும் அணிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதனால் சில நட்சத்திர வீரர்கள் அதன் வாயிலாக அணிமாற்றம் செய்வார்கள் என்றும் பேசப்பட்டு வந்தது.

    அந்த வகையில் இந்த ஆண்டு பெரியளவில் பேசப்பட்ட டிரேடிங்காக வாஷிங்டன் சுந்தரின் டிரேடிங் செய்தி அமைந்தது. ஏனெனில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறி ஓய்வை அறிவித்த வேளையில் அவரது இடத்திற்கு சரியான மாற்று வீரராக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்து சிஎஸ்கே அணி தங்களது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று செய்திகள் வெளியாகின. ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே இது குறித்த தகவல் அதிகளவு வைரலாகி வருகிறது.

    ஆனால் இது குறித்து குஜராத் அணியின் நிர்வாகமும் சரி, சென்னை அணியின் நிர்வாகமும் சரி உறுதியான அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

    இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்ய குஜராத் டைட்டன்ஸ் அணி மறுத்துவிட்டது.

    • ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கவுள்ளது.
    • சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார்.

    ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் சிஎஸ்கே அணியும் ஆலோசனை நடத்தி வருகிறது.

    சிஎஸ்கே அணி மெகா ஏலத்தின் போது அஸ்வின், தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டி உள்ளிட்ட சீனியர் வீரர்களில் முதலீடு செய்தது. ஆனால் எந்த வீரரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்து வருகிறது.

    அதன்படி குஜராத் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தரை டிரேட் முறையில் வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவரின் இடத்தை வாஷிங்டன் சுந்தர் மூலமாக நிரப்ப முயற்சிகள் நடந்தது.

    இந்நிலையில், வாஷிங்டன் சுந்தரை சிஎஸ்கேவுடன் வர்த்தகம் செய்யும் யோசனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெக்ரா ஏற்க மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த முடிவை சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

    • சூர்யகுமார் யாதவ் 11 பந்தில் 24 ரன்கள் அடித்தார்.
    • திலக் வர்மா 29 ரன்களும், அபிஷேக் சர்மா 25 ரன்களும் சேர்த்தனர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹோபர்ட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா ஆகியோர் நீக்கப்பட்டனர்.

    முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா டிம் டேவிட், ஸ்டோய்னிஸ் அரைசதத்தால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது. டிம் டேவிட் 38 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் 39 பந்தில் 8 பவுண்டிரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா தலா 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 25 ரன்கள் அடித்து எல்லீஸ் பந்தில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 12 பந்தில் 15 ரன்கள் எடுத்து எல்லீஸ் பந்தில் வெளியேறினார்.

    அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் 11 பந்தில் 24 ரன்களும், திலக் வர்மா 26 பந்தில் 29 ரன்களும் சேர்த்தனர். அக்சர் படேல் 12 பந்தில் 17 எடுத்தார்.

    அடுத்து வாஷிங்கடன் சுந்தர் களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடினார். இதனால் இந்தியா எளிதாக இலக்கை நெருங்கியது.

    18.3 ஓவரில் 188 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 23 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜித்தேஷ் சர்மா 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.

    • ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் சிஎஸ்கே அணியும் ஆலோசனை நடத்தி வருகிறது.

    சிஎஸ்கே அணி மெகா ஏலத்தின் போது அஸ்வின், தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டி உள்ளிட்ட சீனியர் வீரர்களில் முதலீடு செய்தது. ஆனால் எந்த வீரரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்து வருகிறது.

    அதன்படி குஜராத் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தரை டிரேட் முறையில் வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவரின் இடத்தை வாஷிங்டன் சுந்தர் மூலமாக நிரப்ப முயற்சிகள் நடந்து வருகிறது.

    அதற்கு குஜராத் அணியும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், சிஎஸ்கே அணியிடம் பெரிய டிமாண்ட் எதுவும் முன் வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் மட்டும் சிஎஸ்கே அணிக்கு கொண்டு வரப்பட்டால், அது சேப்பாக்கம் பிட்சில் மிகப்பெரிய ஜாக்பாட்டாக அமையும். 

    • இங்கிலாந்து இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
    • சுந்தர் விளையாடிய 4 போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இங்கிலாந்து- இந்தியா ஆகிய அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்தது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடர் அனைவராலும் கவரப்பட்டது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான 'IMPACT PLAYER' விருது வழங்க பிசிசிஐ முடிவு செய்திருந்தது. அந்த வகையில் இந்த தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

    குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் விளாசிய 53 ரன்கள் மிகவும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா 2வது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

    முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 66 ரன்கள் சேர்த்தார். ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஜடேஜா அரை சதம் கடந்து 53 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் அரை சதம் கடந்து 53 ரன் எடுத்தார்.

    இறுதியில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் எனது மகன் அணியில் இருந்து நீக்கப்படுகிறார்.
    • வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கும் இந்த மாதிரியான அணுகுமுறை பின்பற்றப்பட்டிருக்கிறதா?

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் வாஷிங்டன் சுந்தர் (101 நாட்அவுட்), ஜடேஜா (107 நாட்அவுட்) ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்ததால் இந்தியா டெஸ்ட் போட்டியை டிரா செய்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. தொடரை இழக்கவில்லை. கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்ய முடியும்.

    இந்த நிலையில் எனது மகன் சிறப்பாக விளையாடிய போதிலும், தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என வாஷிங்டன் சுந்தரின் தந்தை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக வாஷிங்டன் சுந்தர் தந்தை கூறியதாவது:-

    வாஷிங்டன் சுந்தர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார். எனினும், மக்கள் அவரை தவிர்க்கவும், அவருடைய ஆட்டத்திறனையும் தவிர்க்க முனைகிறார்கள். மற்ற வீரர்கள் தொடர்ந்து வாய்ப்பு பெறுகிறார்கள். எனது மகனுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. மான்செஸ்டர் டெஸ்ட் 2ஆவது இன்னிங்சில் 5ஆவது வீரராக களம் இறங்கியது போல் தொடர்ந்து அதே இடத்தில் களம் இறக்கப்பட வேண்டும். தொடர்ந்து ஐந்து முதல் 10 வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டுக்கு என் மகன் தேர்வு செய்யப்படாதது வியப்பளிக்கிறது.

    ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் எனது மகன் அணியில் இருந்து நீக்கப்படுகிறார். இது நியாயமானது அல்ல. 2021 ஆம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக அதிகமாக டர்ன் ஆகக்கூடிய ஆடுகளத்தில் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் அடித்தார். அகமதாபாத் டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் அடித்தார். அந்த இரண்டையும் சதமாக மாற்றியிருந்தாலும் நீக்கப்பட்டிப்பார்.

    வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கும் இந்த மாதிரியான அணுகுமுறை பின்பற்றப்பட்டிருக்கிறதா? இதற்கெல்லாம் பிறகு அவர் மிகவும் வலிமையானவராக மாறிவிட்டார், அதன் விளைவாகத்தான் இப்போது மக்கள் இந்த செயல்திறனைப் பார்க்கிறார்கள்.

    இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் தந்தை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    வாஷிங்டன் சுந்தர் 2017ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 25 வயதாகும் அவர் 12 டெஸ்ட், 23 ஒருநாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    • இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்தது.
    • சுப்மன் கில், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதமடித்து அசத்தினர்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார். அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஷர்துல் தாகூர் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடித்து அசத்திய ஜோ ரூட் 150 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடை 141 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 94 ரன்னும், ஜாக் கிராலே 84 ரன்னும், ஒல்லி போப் 71 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், பும்ரா தலா 2 விக்கெட்டும், கம்போஜ், சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவரில் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சனை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து இணைந்த கே.எல்.ராகுலும், கேப்டன் சுப்மன் கில்லும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 87 ரன்னும், சுப்மன் கில் 78 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்னும் 137 ரன்கள் பின் தங்கியுள்ளது.

    இந்நிலையில், இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெற்றது. 3வது விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 90 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய சுப்மன் கில் சதமடித்து 103 ரன்னில் வெளியேறினார்.

    5வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தருடன் ஜடேஜா இணைந்தார். இந்த ஜோடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்து வீசி களைத்துப் போயினர். இருவரும் சதம் கடந்து அசத்தினர்.

    இறுதியில், இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

    • பர்மிங்காம் மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை.
    • இந்திய அணி 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது.

    பர்மிங்காம்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

    இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பர்மிங்காம் மைதானத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சும், போக போக பேட்டிங்குக்கும் அனுகூலமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை. இந்திய அணி 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது. அதனால் இங்கிலாந்தின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டி இந்தியா சரித்திரம் படைக்குமா அல்லது மறுபடியும் பணிந்து போகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    ×