என் மலர்
நீங்கள் தேடியது "திருவண்ணாமலை"
- ஞான தபோதனரை வாவென்றழைக்கும் திருவண்ணாமலையின் சிறப்பு என்பது கார்த்திகைத் தீபத் திருவிழா
- 2668 அடி மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.
ஞான தபோதனரை வாவென்றழைக்கும் திருவண்ணாமலையின் சிறப்பு என்பது கார்த்திகைத் தீபத் திருவிழா ஆகும். இது உலக பிரசித்தி பெற்றது. இத்திருவிழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாரை அரோகரா பக்தி கோஷத்துடன் வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து தற்போது 2668 அடி மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.
- கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
- மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
இதன் உச்சகட்டமாக கார்த்திகை தீப விழாவை ஒட்டி திருவண்ணாமலை மலையில் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
கோயிலில் அதிகாலை பரணி தீபத்தை தரிசிக்கவும், மாலை கோயிலில் இருந்து மகா தீபத்தையும், அர்த்தநாரீஸ்வரரையும் தரிசனம் செய்வதற்கும் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளதால் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
முன்னதாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிளிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
- நெல்லையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்.
- விழுப்புரத்தில் இருந்து வரும் 30, டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில்.
கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில். மறுமார்க்கமாக இது டிசம்பர் 4ம் தேதி இரவு 7.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் காலை நெல்லை சென்றடையும்
சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் டிசம்பர் 3, 4 தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும் ரெயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியே திருவண்ணாமலை சென்று, பின்னர் விழுப்புரம், செங்கல்பட்டு வழியே இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்
விழுப்புரத்தில் இருந்து வரும் 30, டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கமாக இதே தேதிகளில் மதியம் 12.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்
விழுப்புரத்தில் இருந்து டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 10.40 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் வேலூர் கண்டோன்மெண்ட் செல்லும். மறுமார்க்கமாக அங்கிருந்து டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு, காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்
தாம்பரத்தில் இருந்து வரும் டிசம்பர் 3, 4 தேதிகளில் காலை 9.15 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கமாக அதே நாளில் மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முன்பதிவு வசதி கொண்ட ரெயில்களுக்கு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.
- ஸ்ரீலீலா தற்போது தமிழ் மற்றும் இந்தி சினிமாக்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
- பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் ஸ்ரீலீலா தற்போது தமிழ் மற்றும் இந்தி சினிமாக்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், நடிகை ஸ்ரீலீலா திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் பலரும் ஸ்ரீலீலாவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
- வரும் நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்.
- சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பௌர்ணமி கிரிவல நிகழ்வை ஒட்டி நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

- காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
- இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலையில் இளம்பெண்ணை 2 காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான காவலர்கள் இருவரும் சஸ்பெண்ட் ஆன நிலையில் தற்போது நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- ரெயில் நிலையத்திற்கு இரவு நேரத்தில் வந்து சேர்ந்தாள் ஒரு பெண்மணி.
- திருவண்ணாமலை குறித்து இன்னொரு சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலையைத் தேடி வந்தவர். அங்கு தங்கி அங்கேயே தவம் செய்து வாழ்ந்தவர். அங்கேயே தம் உடலை உகுத்து இறைவனுடன் கலந்தார்.
திருவண்ணாமலை என்னும் புனிதத் திருத்தலத்தின் மகிமையை ஸ்ரீரமணர் முழுமையாக உணர்ந்திருந்தார். திருவண்ணாமலையிலேயே அவர் தங்க அதுதான் காரணம். அந்தத் தலத்தின் அற்புதங்கள் பற்றிப் பல அன்பர்களிடம் அவர் சொன்னதுண்டு.
ஸ்ரீரமணரின் அடியவர்களில் ஒருவர் தேவராஜ முதலியார். திருவண்ணாமலையின் மகிமை குறித்து ஸ்ரீரமணர் தம்மிடம் தெரிவித்த செய்தியொன்றை தேவராஜ முதலியார் பதிவு செய்திருக்கிறார். அந்தச் செய்தி இதுதான்:
திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு இரவு நேரத்தில் வந்து சேர்ந்தாள் ஒரு பெண்மணி. திருவண்ணாமலை ஆலயத்தில் அண்ணாமலையானை தரிசிக்க வேண்டும் என்பதே அவள் வருகையின் நோக்கம். அவள் ஒரு சிவ பக்தை.
கையில் கொஞ்சம் பணம் வைத்திருந்தாள். நகை நட்டுக்கள் வேறு அவள் உடலை அலங்கரித்தன.
ஏதேனும் ஒரு நல்ல உணவு விடுதிக்குப் போய் அன்றிரவு அறை எடுத்துத் தங்க வேண்டும். பிறகு மறுநாள் காலை ஆலயத்திற்குச் சென்று அண்ணாமலையானைக் கண்ணார தரிசிக்க வேண்டும். இதுவே அவள் திட்டம். அவளுடைய நெடுங்காலக் கனவு இது.
உணவு விடுதிக்குச் செல்வதற்குக் குதிரை வண்டி ஏதேனும் கிடைக்குமா என அவள் கண்கள் தேடிக் கொண்டிருந்தபோது, ஒரு ஜட்கா அவள் அருகில் வந்து நின்றது. எங்கே போக வேண்டும் எனக் கேட்டார் அந்தக் குதிரை வண்டி ஓட்டுநர்.
அவள் பக்கத்தில் உள்ள ஏதேனும் ஒரு நல்ல உணவு விடுதியில் தன்னைக் கொண்டு விடுமாறு சொல்லி எவ்வளவு கட்டணம் என்பதையும் கேட்டுக் கொண்டு ஜட்காவில் ஏறினாள்.
சிறிதுதூரம் சென்றதும் ஜட்கா யாருமில்லாத ஓர் ஒதுக்குப் புறமான இடத்தில் திடீரென நின்றது. ஜட்காவிலிருந்து குதித்துக் கீழே இறங்கினான் ஜட்காவை ஓட்டியவன்.
அவள் முன் வந்துநின்ற அவன் அவளிடமுள்ள பணம், நகை போன்றவற்றைக் கொடுத்துவிடுமாறு கத்தியைக் காட்டி மிரட்டத் தொடங்கினான்.
எங்கும் இருள். சுற்றிலும் யாருமில்லை. இப்போது என்ன செய்து எப்படித் தப்பிப்பது?
அவள் கடும் பீதி அடைந்தாள். `அண்ணாமலையானே, என்னைக் கைவிட்டு விடாதே! உன்னை தரிசிக்கத் தானே ஓடோடி வந்தேன்? நடுவழியில் இப்படியொரு திருடன் வந்து என்னை மிரட்டுகிறானே? இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா? இந்தப் புனித பூமியில் இப்படி நடக்கலாமா?` என அச்சத்தில் கண்ணீர் விட்டுக் கதறி அழத் தொடங்கினாள்.
மறுகணம் நடந்தது அந்த அற்புதம். அவள் குரலைக் கேட்டுத்தானோ என்னவோ டக் டக் என யாரோ நடந்துவரும் ஒலி கேட்டது. எங்கிருந்தோ இரு காவலர்கள் அங்கு வந்துசேர்ந்தார்கள்.
அவர்கள் வண்டி ஓட்டியவனை அதட்டினார்கள். நாங்களும் வண்டியில் வருகிறோம், எங்களையும் சேர்த்து உணவு விடுதிக்கு அழைத்துச் செல் என உத்தரவிட்டார்கள்.
காவலர்களைப் பார்த்ததும் அவளிடம் திருட நினைத்த வண்டியோட்டி பயந்துவிட்டான். மறுபேச்சுப் பேசாமல் தான் வண்டியில் ஏறி அவளையும் அந்தக் காவலர்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டான். அவர்களை உணவு விடுதியில் இறக்கி விட்டான். எதுவும் பேசாமல் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டான். அந்தக் காவலர்கள் இருவருக்கும் சமயத்தில் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி கூறினாள் அந்தப் பெண்மணி. அவள் படபடப்பு அப்போதுதான் கொஞ்சம் தணிந்திருந்தது.
தன்னைச் சரியான தருணத்தில் வந்து காப்பாற்றிய அவர்களின் பெயர்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டாள். அவர்கள் அவளை ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுறுத்தி விட்டு இருளில் நடந்து மறைந்தார்கள்...

திருப்பூர் கிருஷ்ணன்
உணவு விடுதியில் அறை எடுத்துத் தங்கிய அவள், தகுந்த நேரத்தில் தன்னைக் காப்பாற்ற ஆள் அனுப்பிய அண்ணாமலையானை மனதில் வணங்கியவாறு, அந்த இரு காவலர்களை நெகிழ்ச்சியோடு நினைத்த படியே உறங்கினாள். மறுநாள் காலை எழுந்ததும் அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றிற்று. அந்தக் காவலர்களின் பெயர்களைத்தான் அவள் குறித்து வைத்திருக்கிறாளே? திருவண்ணாமலை காவல் நிலையத்திற்குப் போய் அவர்களுக்கு ஒரு சிறிய அன்பளிப்புத் தொகையைக் கொடுத்துவிட்டு அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தால் என்ன?
இந்த எண்ணத்தோடு அவர்களைத் தேடிச் சென்றாள் அவள். அவள் அணிந்திருந்த தங்க நகைகளையெல்லாம் காப்பாற்றியவர்கள் அவர்களல்லவா?
ஆனால் காவல் நிலையத்தில் விசாரித்தபோது அவள் தெரிந்துகொண்ட விவரம் அவளைத் திகைப்பில் ஆழ்த்தியது. அப்படிப்பட்ட பெயர்களிலோ அவள் சொன்ன ஜாடையிலோ அங்கே எந்தக் காவலரும் பணியாற்றவில்லை!
இது என்ன வியப்பு! அப்படியானால் நேற்றிரவு தக்க தருணத்தில் வந்து தன்னைக் காப்பாற்றியவர்கள் யார்?
அண்ணாமலை கோபுரத்தை நோக்கி அவள் கைகள் தானாய்க் குவிந்தன. திருவண்ணாமலைக்கு பக்தியோடு வருவோரின் பாதுகாப்பை அண்ணாமலையான் பார்த்துக் கொள்வான் என்பதைப் புரிந்துகொண்டாள் அவள்.
இந்த சம்பவம் உண்மையாக நடந்ததுதான் என்றும் கற்பனைக் கலப்பில்லாதது என்றும் இந்த நிகழ்ச்சி பற்றி ஸ்ரீரமணரே தம்மிடம் விவரித்துச் சொன்னதாகவும் தேவராஜ முதலியார் பதிவு செய்துள்ளார்.
திருவண்ணாமலை குறித்து இன்னொரு சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. சுந்தரேச ஐயர் தொடர்பான சம்பவம் அது.
ஸ்ரீரமணரின் தத்துவங்களில் சரணடைந்து வாழ்ந்த ஒரு தீவிர ரமண பக்தர் சுந்தரேச ஐயர். அடிக்கடி ஸ்ரீரமணரைப் போய்ப் பார்ப்பதும் திருவண்ணாமலை ஆலயத்திற்குச் சென்று இறைவனை தரிசிப்பதும் அவரின் வழக்கம்.
அவரது உறவினர் ஒருவருக்கு திடீரென்று காலில் அடிபட்டுக் கால் ஊனப்பட்டுவிட்டது. எவ்வளவோ சிகிச்சை செய்து பார்த்தும் பூரண குணம் கிட்டவில்லை.
கையில் ஒரு கம்பு வைத்து ஊன்றிக் கொண்டுதான் அவரால் நடக்க முடியும். கம்பில்லாமல் ஓர் அடி கூட எடுத்துவைக்க இயலாது என்கிற நிலைமை.
இப்படியாகி விட்டதே, இனி வாழ்நாள் முழுதும் தான் இப்படித்தான் வாழ வேண்டுமா என்று அவர் பெரிதும் மனம் புழுங்கினார். ஊன்று கோல் இல்லாமல் முன்போல் தன்னால் எப்போது இயல்பாக நடக்க முடியும் எனக் கவலையில் ஆழ்ந்தார்.
திருவண்ணாமலையில் வாழும் பகவான் ரமணர் பற்றி அவர் கேள்விப் பட்டிருந்தார். உறவினர் சுந்தரேச ஐயர் அடிக்கடி ஸ்ரீரமணரின் பெருமைகள் பற்றி அவரிடம் சொல்வதுண்டு. அதனால் அவருக்கு பகவான் ஸ்ரீரமணரிடம் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது.
திருவண்ணாமலையை வலம் வரலாம், பகவான் ரமணரைச் சரணடைந்து வாழலாம், காலப்போக்கில் கம்பில்லாமலே இயல்பாக நடக்கக் கூடிய நிலையை ஸ்ரீரமணர் கட்டாயம் அருள்வார் என அவர் மனதில் திடமான உறுதி ஏற்படுத்திக் கொண்டார்.
தம் இருப்பிடத்தையே திருவண்ணாமலைக்கு மாற்றிக் கொண்டார் அவர். திருவண்ணாமலையிலேயே தொடர்ந்து வசிக்கலானார்.
நாள்தோறும் கம்பை ஊன்றிக் கொண்டு கால் வலிக்க வலிக்க கிரிவலம் வந்தார். மகரிஷி ரமணரின் பாதாரவிந்தங்களை பக்தியோடு நாள்தோறும் நமஸ்கரித்தார். கம்பில்லாமல் நடக்க வேண்டும் கடவுளே என ஓயாமல் பிரார்த்தனை செய்தவாறிருந்தார்.
இப்படியாகச் சிறிது காலம் சென்றது. ஆனால் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. நாட்கள் சென்றனவே தவிர, ஊன்றுகோலை எடுத்துவிட்டு இயல்பாக நடப்பதென்பது அவரால் இயலாததாகவே இருந்தது.
நடக்க முடியும் என்று தான் நினைத்தது நடக்காததால், மெல்ல மெல்ல அவருக்குத் தம் திருவண்ணாமலை வாழ்வில் சலிப்பு ஏற்பட்டது. ஆனால் ஸ்ரீரமணரோ அவர் திருவண்ணாமலையில் வசிப்பதையும் நாள்தோறும் கிரிவலம் வருவதையும் ஊக்குவித்துக் கொண்டிருந்தார்.
`இவ்வளவு நாள் ஆகிவிட்டது, இனி மேலும் திருவண்ணாமலையில் இருந்து என்ன பயன்?` என எண்ணத் தொடங்கினார் அவர். ஒருநாள் மனம் வெறுத்துப் போய் விரக்தியுடன் திருவண்ணாமலையை விட்டுப் புறப்பட்டார்.
தளர்ந்த உடலோடும் தளர்ந்த மனத்தோடும் கம்பை ஊன்றிக் கொண்டு, ரமணாஸ்ரமத்திலிருந்து விடைபெற்று, மெல்ல திருவண்ணாமலையை விட்டு விலகிச் செல்லலானார். அப்போதுதான் அந்த விந்தையான சம்பவம் நடந்தது. அவர் முன்பின் பார்த்திராத, அவருக்கு அறிமுகமே இல்லாத யாரோ ஒருவர் திடீரென அங்கே வந்தார். சற்று நில் என அவரை கம்பீரமாக அதட்டினார். கட்டளைக்குக் கட்டுப்பட்டாற்போல் நின்றார் அவர். அவர் கம்பை ஊன்றிக் கொண்டு நடக்க முடியாமல் நடப்பதையே சற்றுநேரம் உற்றுப் பார்த்தார் வந்த புதியவர். பின் `அடேய்! இனி உனக்குக் கம்பு தேவையில்லை!` எனக் கூறி, கம்பை அவர் கையிலிருந்து சடாரென்று பிடுங்கி இரண்டாய் முறித்து வீசிவிட்டு விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். அவர் எங்கு போனார் என்றே தெரியவில்லை.
இருந்த கம்பும் போயிற்றா, இனி என்ன செய்வது என்று எண்ணியவாறே கம்பில்லாமல் நடக்கத் தொடங்கினார் அந்த அன்பர். என்ன ஆச்சரியம்! கம்பில்லாமலேயே அவரால் முன்புபோல் இயல்பாக நடக்க முடிந்தது!
அதை உணர்ந்ததும் அவர் மனத்தில் வியப்பும் பரவசமும் எழுந்தன. `அண்ணாமலை யாரைப் பிரார்த்தித்தால் ஆழ்மனம் வலிமை பெறுகிறது, நடக்காது என்று நாம் நினைத்ததையெல்லாம் வலிமை பெற்ற ஆழ்மனம் நடக்கச் செய்துவிடுகிறது!` என்னும் சூட்சுமத்தைப் புரிந்துகொண்ட அந்த அன்பரின் விழிகளில் கரகரவெனக் கண்ணீர் பெருகியது. அண்ணாமலை ஆலயத்தை நோக்கியும் ரமணாஸ்ரமம் இருந்த திசைநோக்கியும் அவரது இரு கரங்களும் குவிந்தன. திருவண்ணாமலை மேலும் ஸ்ரீரமணர்மேலும் வைக்கும் திடமான நம்பிக்கை அற்புதங்களை நிகழ்த்தக் கூடியது என்பதை அவர் மனம் உணர்ந்துகொண்டது.
தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com
- ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
- விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லை தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு நாய்க்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் அனாமிகா என்ற 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
- அருண் என்பவருக்கும் மகா லெட்சுமி என்ற பெண்ணுக்கும் 3 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது.
- அருண் தற்போது ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார்.
திருவண்ணாமலை அடுத்த வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் மகா லட்சுமி (25) என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் அருண் ஜெர்மனியில் வேலை செய்து வரும் நிலையில், மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மகா லட்சுமி உயிரை மாய்த்துக்கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மகா லெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மகா லட்சுமியின் தந்தை மதுரையில் தலைமைக் காவலராக பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது.
- கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும்.
கிரிவலம் செல்லும்போது பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் வருமாறு:-
குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது.
நீராடி தூய ஆடை அணிந்து, விபூதி, குங்குமம், இட்டுக் கொண்டுதான் கிரிவலம் வர வேண்டும்.
ஆண்கள் வேட்டி, துண்டு அணிந்து கொண்டு வலம் வரலாம். பெண்கள் மெட்டி, வளையல், நெற்றியில் குங்குமம் வைத்து வலம் வர வேண்டும்.
மிதியடி அணிந்து கொண்டு வலம் வரக்கூடாது. ஏனென்றால் அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கம் உள்ளது என்பார்கள். குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது.
கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது. பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் குறிப்பாக தொலைக்காட்சி தொடர்கள் பற்றி தேவை இல்லாமல் பேசிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும், வழியில் எல்லா இடங்களில் அமர்ந்து கொண்டும் வலம் வரக்கூடாது. மனம் முழுக்க ஈசன் நினைவு மட்டுமே இருக்க வேண்டும்.வேறு பல நினைவுகளுடன் வரக்கூடாது. குறுக்கும், நெடுக்கும் நடந்து வலம் வரக்கூடாது.
போதை பொருளை உட்கொள்ளக் கூடாது. சிகரெட், பீடி குடிக்க கூடாது. புலால் உண்ட அன்றும், போதைப் பொருட்கள் பயன்படுத்திய தினத்திலும் கிரிவலம் வரக்கூடாது.
தூரம் அதிகமாக உள்ளதே என்று மலைத்த இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது. எப்படி நடக்கப்போகிறோம் என்று மலைப்புடன் வலம் வரக்கூடாது.
யாருடனும் பேசாது அஞ்செழுத்தை மனதிற்குள் கூறியபடி வலம் வருதல் நல்லது. மனம் முழுவதும் சிவன் மீது நாட்டம் கொண்டிருக்க வேண்டும்.
கை வீசிக் கொண்டு செல்லாமல் நிதானமாக நடந்து வலம் வர வேண்டும். இது பிராணாயாமம் செய்வதற்கு சமமாக பலன் கிடைக்கும். இன்னும் கூறப்போனால் ஒரு கர்ப்பிணிப் பெண் போல் மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். இது ஒட்டப் பந்தயமோ, நடைப் பந்தயமோ அல்லது எவ்வளவு வேகமாக நடந்தோம் என்பதை விட எவ்வளவு மெதுவாக நடந்தோம் என்பதிலேயே பலன் உள்ளது.
கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும். மலையை பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். அப்போது ஓம் நமச்சிவாய என்று தவறாமல் உச்சரிக்க வேண்டும். திருநீறு, சந்தனம், குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை வைத்திருத்தல் அவசியம். கையில் ஊதுபத்தி மற்றும் தூபம் எடுத்துக் கொண்டு சென்று அதன் மூலம் ஆராதித்து வழிபடுவது சிறப்பு.
பிராணிகளுக்கோ, பசுக்களுக்கோ, பிச்சை கேட்போருக்கோ, வலம் வரும்போது சிறு பிரசாதம் அல்லது வாழைப்பழம், பிஸ்கட் ஆகியவற்றை தருதல் நலம்.
- திருவண்ணாமலையை போல் இங்கும் பெரியமலை உள்ளது.
- வனப்பகுதியில் இருக்கும் லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கிறார்கள்.
திருவண்ணாமலைக்கு இணையான தலமாக கருதப்படுவது கோவை மாவட்டம் மதுக்கரையில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் ஆலயம். இங்குள்ள சுவாமியை வணங்கி கிரிவலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் தான் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் கிரிவலம் செல்லக்கூடிய இடமாக தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.
கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, திண்டுக்கல் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்கிறார்கள். திருவண்ணாமலையை போல் இங்கும் பெரியமலை உள்ளது. திருவண்ணாமலையில் தினந்தோறும் கிரிவலம் செல்லலாம். ஆனால் இங்கு பவுர்ணமி அன்று ஒருநாள் மட்டுமே கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காரணமான வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மற்ற நாட்களில் யாரையும் கிரிவலம் செல்ல அனுமதிப்பதில்லை.
கிரிவலப்பாதையானது மொத்தம் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்களான இந்திர லிங்கம், அக்னிலிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. கிரிவலப்பாதையில் உள்ள 8 லிங்கங்களையும் பக்தர்கள் தரிசித்தபடி செல்கிறார்கள். கிரிவலம் செல்லும்போதே பக்தர்கள் பால், பன்னீர், மலர்கள், வில்வ இலைகளை வாங்கிச் செல்கிறார்கள். அந்த அபிஷேக பொருட்களை கொண்டு வனப்பகுதியில் இருக்கும் லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கிறார்கள்.

கிரிவலப்பாதையில் தார்சாலையோ, சிமெண்டு சாலையோ கிடையாது. கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை என்பார்களே. அதேபோல கிரிவலப்பாதையில் பல இடங்கள் மேடு, பள்ளமாகவும், கற்கள் படர்ந்தும் காணப்படும். அவற்றை பொருட்படுத்தாமலேயே பக்தர்கள் கிரிவலம் சென்று வருகிறார்கள். மலையை சுற்றி ஏராளமான மூலிகை மரங்கள் உள்ளன. அவற்றை உராய்ந்து வரும் தூய காற்று மருத்துவக்குணம் கொண்டது. அவற்றை முகர்ந்தபடியே பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். இந்த மூலிகை மரங்களும் பக்தர்கள் அங்கு திரண்டு வர காரணமாக அமைந்துள்ளது. எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் 3 முறை தொடர்ந்து பவுர்ணமி கிரிவலம் வந்தால் நிச்சயம் பிரச்சினைகள் தீரும் என்கிறார்கள். மனஅழுத்தம், திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கிரிவலம் சென்றால் விரைவில் பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் பிரச்சினைகள் உள்ளவர்களும் கிரிவலம் சென்று வர நோய்கள் நீங்கும்.
கிரிவலத்தின் சிறப்புகள்:
உடல்நலம்: கிரிவலம் செல்வதால் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகும், கால்களுக்கு பயிற்சி கிடைக்கும், மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மனநலம்: கிரிவலம் மன அழுத்தத்தை குறைத்து, அமைதியையும், நிம்மதியையும் தரும்.
ஆன்மீக பலம்: கிரிவலம் செல்வதால் தெய்வத்தின் அருள் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், மனத்தெளிவு பிறக்கும்.
நன்மைகள்: கிரிவலம் செல்வதால் குடும்ப வாழ்வில் இன்பம், மாங்கல்ய பலம், எதிரிகளின் தொல்லை நீங்குதல் போன்ற பலன்கள் கிடைக்கும்.
- கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வது சிறப்பு.
- மலையடிவாரத்தில் பீமன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.
சிவ வழிபாட்டில் நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாக கருதப்படுவது திருவண்ணாமலை. அப்படிப்பட்ட திருவண்ணாமலை தலத்துக்கு இணையான கோவில் கொங்கு மண்டலமான கோவையில் உள்ளது. அந்த கோவில் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் ஆகும்.
கொங்கு திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் இந்த கோவில் கோவை- பாலக்காடு சாலையில் குனியமுத்தூரை தாண்டியதும் மதுக்கரை மரப்பாலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுமார் 1600 அடி உயரமுள்ள மலை உச்சியில் கோவில் அமைந்திருப்பது சிறப்பானது. இந்த மலை தர்மலிங்க மலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வது சிறப்பு. திருவண்ணாமலைக்கு அடுத்து அதிக பக்தர்கள் கிரிவலம் செல்லும் ஆலயமாக தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இதனால் கொங்கு திருவண்ணாமலை என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
அதேசமயம் வனவிலங்குகள் நடமாட்டம் கருதி பவுர்ணமி தினத்தில் மட்டும் கிரிவலம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். திருவண்ணாமலையில் ஏற்றுவது போல் இங்கும் கார்த்திகை திருவிழாவின் போது மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
தர்மலிங்கேஸ்வரர் பெயர்க்காரணம்
பஞ்சபாண்டவர்கள் காலக்கட்டத்தில் பாண்டவர்களில் மூத்தவரான தருமன் இங்கு வந்து ஈஸ்வரனை தவமிருந்து வழிபட்ட காரணத்தால் சுவாமி, தர்மலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அந்த சமயத்தில் பீமன் கீழே காவல் காத்ததாகவும், மற்ற தம்பிகள் பாதுகாப்பாக கிரிவலம் வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இதன்காரணமாக மலையடிவாரத்தில் பீமன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.

சுயம்பு மூர்த்தி
தர்மலிங்கேஸ்வரர் மலையில் தானாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவார். பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான பசுமாடு காணாமல் போய் இருக்கிறது. அந்த பசுவை தேடி விவசாயி மலை உச்சிக்கு சென்று இருக்கிறார். அங்கு சுயம்புலிங்கத்திற்கு மாடு பால்சொரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் ஊர் முழுக்க பரவி அதன்பிறகே பக்தர்கள் வழிபடத் தொடங்கி அங்கு கோவில் எழுப்பப்பட்டதாக சொல்கிறார்கள்.
ஏன் கொங்கு திருவண்ணாமலை
இந்த ஆலயத்தை கொங்கு திருவண்ணாமலை என்று அழைப்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தான் தர்மலிங்கேஸ்வரர் வீற்றிருக்கும் மலை. ஆனால் மற்ற மலைகளுடன் சேர்ந்து இருக்காமல் தனித்துவமாக இந்த மலை அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது போல் இங்கும் கிரிவலப்பாதையில் 8 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
ஆலய அமைப்பு:
கோவில் சன்னதிக்கு முன்பு முதலில் ஸ்தூபியும், கொடிமரமும் உள்ளன. அதையடுத்து மகாமண்டபம், நந்தி, பலிபீடத்தைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் உள்ளது. கருவறையில் சித்தலிங்கேஸ்வரர் ஆவுடையார் மீது சிவலிங்கத் திருமேனியில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மூலவர் தர்மலிங்கேஸ்வரர் இரண்டே கால் அடி உயரத்தில் உள்ள கற்சிலை ஆகும். கருவறை நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகர் மற்றும் வலது புறம் முருகப் பெருமான் திருமேனிகள் உள்ளன.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. காலைக் கதிரவன் தன் பொற்கதிர்களால் கருவறை இறைவனை தினம் தினம் குளிப்பாட்டும் காட்சி நம் கண்களை வியக்க வைக்கும் காட்சியாகும். கருவறையின் விமானம் தொலைவிலிருந்து பார்க்கும் பக்தர்களின் கண்களுக்கு நல் விருந்தாக அமைகிறது. தைப்பூசம், நவராத்திரி, சிவராத்திரி, ஆண்டு பிறப்பு நாட்களில் இறைவனுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் பிரார்த்தனை பலித்ததும் பிறந்த குழந்தையை அழைத்து வந்து இறைவன் சன்னதியில் இறைவனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது இங்கு இயல்பாக காணும் காட்சிகளாக உள்ளது. கோவிலில் தமிழ் முறைப்படி மட்டுமே அர்ச்சனைகள், வழிபாடுகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.






