search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accident"

    • கட்டிடத்தில் 13 வது மாடியில் இருந்த அறையின் ஜன்னலில் இருந்து இடறி விழுந்துள்ளார்.
    • இந்த விபத்தில் அவருக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

    ரஷியாவின் நோவோசிபிர்ஸ்க் [Novosibirsk] நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் 13 வது மாடியில் இருந்து விழுந்த  இளம்பெண் அதிசயிக்கத்தக்க வகையில் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார்.

    சைபீரியாவைச் சேர்ந்த 22 வயதான அந்த இளம்பெண் கடந்த ஜூலை 18 ஆம் தேதி அந்த கட்டிடத்தில் 13 வது மாடியில் இருந்த அறையின் ஜன்னலில் இருந்து இடறி விழுந்துள்ளார். இளம்பெண் கீழே புல் தரையில் விழுந்த உடனே நிதானித்து எழுந்து நின்ற காட்சிகள் வெளியாகி அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது.

    இந்த விபத்தில் அவருக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதற்கிடையில் இந்த வீடியோ இணையத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது. 

    • விபத்தில் கடலூர் முதுநகர் பகவான் மகாவீர் தெருவை சேர்ந்த தனஞ்செயனும் சிக்கி உள்ளார்.
    • அபிநயா மற்றும் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எழிலரசியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    துபாயில் உள்ள துறைமுகத்தில் இருந்து சென்ற எண்ணெய் கப்பல் ஓமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகம் அருகே கடலில் கவிழ்ந்த விபத்தில் 13 இந்திய மாலுமிகள் உள்பட 16 பேர் சிக்கினர்.

    அவர்களில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்தில் கடலூர் முதுநகர் பகவான் மகாவீர் தெருவை சேர்ந்த தனஞ்செயனும் சிக்கி உள்ளார்.

    இந்நிலையில் மாயமான தனஞ்செயனை மீட்டுத்தரக்கோரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது மனைவி எழிலரசி (வயது 31) குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, மனு அளித்தார். ஆனால் அந்த மனு தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வந்த எழிலரசி, விபத்தில் சிக்கி மாயமான தனது கணவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறும்போது, விபத்து நடந்து 6 நாட்கள் ஆகியும் எனது கணவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனது கணவரை மீட்டுத்தர அரசு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அப்போது அங்கு வந்த கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ சேகர், கடலூர் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எழிலரசியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கை மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    அதனை ஏற்று எழிலரசி போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • டிராவல் கம்பெனி மூலம் 3.56 லட்ச ரூபாய் கொடுத்து இந்த சுற்றுலாவை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
    • இதில், தங்குமிடம், போக்குவரத்து, ஊர் சுற்றி பார்த்தல், பயண காப்பீடு அனைத்தும் அடங்கும்.

    யோகேஷ் சைகல் என்பவர் தனது மனைவி, மகன், மகள் மற்றும் மாமனாருடன் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    தாமஸ் குக் என்ற டிராவல் கம்பெனி மூலம் 3.56 லட்ச ரூபாய் கொடுத்து இந்த சுற்றுலாவை அவர் ஏற்பாடு செய்துள்ளார். இதில், தங்குமிடம், போக்குவரத்து, ஊர் சுற்றி பார்த்தல், பயண காப்பீடு அனைத்தும் அடங்கும்.

    இலங்கைக்கு சுற்றுலா சென்ற அவரின் குடும்பம் கொழும்புவில் காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரியில் மோதியுள்ளது. அந்த விபத்தில் சைகலின் மனைவி, மகன், மாமனார் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த சைகல் மற்றும் அவரது மகள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தனர்.

    சைகலின் சுற்றுலா பயணம் தாமஸ் குக் என்ற டிராவல் கம்பெனி புக் செய்யப்பட்டிருந்தாலும், அவரின் இலங்கை சுற்றுலாவை ரெட் ஆப்பிள் டிராவல் கம்பெனி தான் கவனித்து கொண்டது.

    இந்த விபத்திற்கு பிறகு டிராவல் கம்பெனிகளின் அலட்சியத்தால் எனது குடும்பத்தை இழந்து விட்டேன் என்று டெல்லி நுகர்வோர் ஆணையத்திடம் யோகேஷ் சைகல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் முடிவில் தாமஸ் குக் மற்றும் ரெட் ஆப்பிள் டிராவல் கம்பெனிகள் சேர்ந்து 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.
    • வகுப்பில் சுவர் இடிந்தபோது சுவரின் அருகே இருந்த மாணவனும் சுவரோடு கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது.

    குஜராத் மாநிலத்தில் 7 ஆம்  வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த  பள்ளியின் வகுப்பறை இடிந்து விழுந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் உள்ள வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயண் குருகுல் பள்ளியின் முதல் தளத்தில் இருந்த 7 வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையின்  பக்கவாட்டுச் சுவர் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.

    வகுப்பறையில் இருந்த மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு தலைமையாசிரியர் உட்பட  அனைவரும் அங்கு ஓடி வந்து  மாணவ்ர்களை அங்கிருந்து மீட்டனர். இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வகுப்பறையின் சுவரானது கீழ் தளத்தில் இருந்த, மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்த்தின்மீது விழுந்துள்ளது.

    வகுப்பில் சுவர் இடிந்தபோது  சுவரின் அருகே இருந்த மாணவனும் கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது. இதற்கிடையில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து  பள்ளிக் கட்டடங்களின் தரம் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 

    • வெடி விபத்தால் பாதிக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த சுந்தராம்பாள் (வயது 56) என்பவர் குடியிருப்பு அருகில் செடிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது திடீரென பறந்து வந்த மர்ம பொருள் ஒன்று காலின் மீது விழுந்து காயம் ஏற்படுத்தியது. வலியால் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து பறந்து வந்து விழுந்த பொருள் எதுவென தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர். தொடர்ந்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    குடியிருப்பு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சுந்தராம்பாள் மீது பறந்து வந்து விழுந்த கருப்பு நிற பொருள் எதுவென்று தெரியவந்தது.

    அப்பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தனியார் நிறுவனத்தின் கியாஸ் திட்டத்தில் எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய்கள் பதிக்கப்பட்டு ள்ளது. வாவிபாளையம் பகுதியில் அதற்கான செக்கிங் பாயிண்ட் அமைந்துள்ளது. செக்கிங் பாயிண்டில் அதிக அழுத்தம் காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் குழாய் பதிப்பில் இருந்த உபகரணம் பறந்து வந்து மூதாட்டியின் மீது விழுந்து காயத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

    தொடர்ந்து எரிவாயு குழாய் பராமரிப்பு பணியில் உள்ள ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் வெடி விபத்தால் பாதிக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சுந்தராம்பாள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கியாஸ் நிறுவனத்தின் மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி., காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    குடியிருப்புக்கு அருகாமையில் இது போன்ற தரை வழியாக எரிவாயு கொண்டு செல்லும்போது அதற்காக பதிக்கப்படும் குழாய்களைச் சுற்றி பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாததே விபத்திற்கு காரணம் . எனவே செக்கிங் பாயிண்ட் பகுதியை சுற்றி கம்பி வேலி அல்லது தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் லேபிள் நடந்த சர்தார் 2 படப்பிடிப்பில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது.
    • இந்த விபத்து தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சர்தார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது.

    கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த், மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

    இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படம் பூஜையுடன் கடந்த வாரம் துவங்கியது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

    இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் சர்தார் 2 படத்தின் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எந்த வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை, 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்

    மேலிருந்து கீழே விழுந்ததில், மார்பு பகுதியில் காயமடைந்து நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் ஏழுமலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விபத்து தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜோஸ் தனது மோட்டார் சைக்கிளை கார் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டுள்ளார்.
    • சிறுமி ஜோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் தாசர்புரம் பகுதியில் உள்ள சி எஸ் ஐ தேவாலயத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பாதிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோஸ் (வயது 39). இவர் தேவாலயத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மனைவி மலர்விழி(35). இவர் திருநின்றவூர் அடுத்த பாக்கம் அருகே காவனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு ஜோபி ஜெ.கிறிஸ்டில்டா (8) என்ற மகளும், ஜோவின் (2) என்ற மகனும் உண்டு. இவர்களது மூத்த மகள் ஜோபி ஜெ.கிறிஸ்டில்டா திருநின்றவூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை பாதிரியார் ஜோஸ் மோட்டார் சைக்கிளில் சென்று தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார். அப்போது திருநின்றவூர் பகுதியில் தனியார் கம்பெனி அருகே சென்ற போது, அவரது மோட்டார் சைக்கிளுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஜோஸ் தனது மோட்டார் சைக்கிளை கார் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்பொழுது நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் இருவரும் கீழே விழுந்தனர். இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து வந்த சிறுமி ஜோபி ஜெ.கிறிஸ்டில்டா தலையின் மீது பின்னால் வந்து கொண்டிருந்த கனரக லாரியின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஜோஸ் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். இந்த விபத்தை கண்ட லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த சிறுமி ஜோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். தந்தை கண்முன் 3-ம் வகுப்பு மாணவி லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • உயிர் தப்பிய பாண்டீஸ்வரன் என்பவர் தான் சமையல் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

    சூலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குன்று என்ற இடத்தைச் சேர்ந்தவர் அழகர்ராஜா (வயது 30). இவர் கோவையில் பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் பணிக்கு செல்வதற்கு வசதியாக சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்தார். இவருடன் அவரது ஊரைச் சேர்ந்த 4 லாரி டிரைவர்களும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 2 பேரும் தங்கியிருந்தனர்.

    நேற்று நள்ளிரவில் இவர்கள் தங்கியிருந்த வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்த 7 பேரும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டு அலறினார்கள்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். தீ வீடு முழுவதும் எரிந்ததால் மற்றவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இதுபற்றி சூலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் அழகர்ராஜா, அவருடன் தங்கியிருந்த டிரைவர் முத்துக்குமார், சின்னக்கருப்பு ஆகிய 3 பேரும் உடல் கருகி பலியானார்கள்.

    பாண்டீஸ்வரன், தினேஷ்குமார், மனோஜ், வீரமணி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் தினேஷ்குமார், மனோஜ், வீரமணி ஆகிய 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அனைவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாண்டீஸ்வரனுக்கு மட்டும் குறைவான காயங்கள் இருந்துள்ளது. அவர் தான் மற்ற 3 பேரையும் மீட்டு வெளியே அழைத்து வந்துள்ளார்.

    இந்த கோர விபத்து தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    வீட்டில் தங்கியிருந்தவர்கள் டிரைவர்கள் என்பதால் லாரியின் தேவைக்காக சுமார் 10 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்தார்களாம். அந்த பெட்ரோலை மற்றொரு கேனுக்கு மாற்றியுள்ளனர். அப்போது கியாஸ் சிலிண்டரில் சமையல் வேலையும் நடந்துள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதனாலேயே 3 பேர் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    உயிர் தப்பிய பாண்டீஸ்வரன் என்பவர் தான் சமையல் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு நடந்த விவரங்களை வாக்குமூலமாக பெற்றுள்ளார். அந்த வாக்குமூலத்தின் பெயரிலேயே தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை. சிலிண்டர் வெடித்து இருந்தால் அந்த வீடு மட்டுமல்லாமல் பக்கத்து வீடுகளும் சேதம் அடைந்து உயிர்ச்சேதம் அதிகரித்து இருக்கும். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு சிலிண்டர் வெடிப்பதற்குள் அதனை குளிர்வித்து வெளியே கொண்டு வந்தனர்.

    தீ விபத்தில் பலியான அழகர்ராஜா, ராவத்தூர் பிரிவு அருகே நேற்று காலை லாரி ஓட்டிச் சென்றார். அப்போது மொபட்டில் வந்த தனியார் பள்ளி ஆசிரியை மீது லாரி மோதியது. இந்த விபத்தில் ஆசிரியை பலியானார்.

    இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அழகர்ராஜாவை கைது செய்துள்ளனர். இரவில் அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு வீட்டுக்கு திரும்பிய நிலையில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் காலையில் நடந்த சாலை விபத்துக்கும், தீ விபத்துக்கும் எதேனும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • கார் மோதியதில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவிடைமருதூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). இவர் ஆண்டலாம்பேட்டை மற்றும் இளந்துறையில் பிளவர் மில் நடத்தி வந்தார். இவர் தனது மனைவி நீலாவுடன் (65) கடைவீதிக்கு சென்று காய்கறி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார்.

    திருவிடைமருதூர் தெற்கு வீதியில் வந்து கொண்டிருந்த போது எதிரில் வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபைட் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட செல்வராஜ், நீலா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார்.

    மேல் சிகிச்சைக்காக நீலாவை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நீலாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த திருவிடைமருதூர் மனவெளி தெருவை சேர்ந்த பாலாஜி (28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கார் மோதியதில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கன்டெய்னர் பெட்டி விழுந்து விபத்துக்குள்ளானது.

    அதிக எடை கொண்ட கன்டெய்னர் விழுந்ததில், கீழே வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கிரேன் மூலம் கன்டெய்னரை தூக்கியபோது கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திரிசூலி ஆற்றில் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
    • நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவதால், இதுவரை யாரையும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

    நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேருந்துகள் ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில், 7 இந்தியர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

    தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்வான் மாவட்டத்தில் உள்ள நாராயண்காட்- மக்லிங் சாலையில் உள்ள சிமால்டால் பகுதியில் உள்ள திரிசூலி ஆற்றில் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த விபத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

    காத்மாண்டு நோக்கிச் செல்லும் ஏஞ்சல் பேருந்தில் 24 பேர் இருந்த நிலையில், நேபாளத் தலைநகரில் இருந்து கவுர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கணபதி டீலக்ஸில் 41 பேர் பயணம் செய்துள்ளனர்.

    காணாமல் போன இந்தியர்கள் சந்தோஷ் தாக்கூர், சுரேந்திர சா, ஆதித் மியான், சுனில், ஷாநவாஜ் ஆலம் மற்றும் அன்சாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவதால், இதுவரை யாரையும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, கணபதி டீலக்ஸ் பேருந்தில் இருந்த 3 பயணிகள் வாகனத்தில் இருந்து குதித்து தப்பியதாக கூறப்படுகிறது.

    நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' விபத்து குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, உடனடி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான உத்தரவுகளை வழங்கினார்.

    • இந்த வழக்கு குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளிவந்தன.
    • மிஹிர் தனது காதலி வீட்டில் இருப்பதாக போலீசுக்கு துப்பு கிடைத்தது.

    மும்பையில் பாஜக கூட்டணி ஷிண்டே சிவசேனா தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா கடந்த ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமையன்று மதுபோதையில் BMW சொகுசு காரை இயக்கி ஏற்படுத்திய விபத்தில் காவேரி என்ற பெண் உயிரிழந்த நிலையில் அங்கிருந்து மிஹிர் தலைமறைவானான்.

     

     மிஹிரின் தந்தை மற்றும் அவருடன் காரில் வந்த டிரைவரை போலீசார் கைது செய்த நிலையில், மிஹிரை ஆறு தனிப்படைகள்அமைத்து வலைவீசி தேடிவந்தது மும்பை போலீஸ். இந்த வழக்கு குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளிவந்தன. விபத்தில் கார் பானட்டில் சிக்கி 1.5 கி.மீ தூரத்துக்கு இழுத்துசெல்லப்பட்டு உயிருக்கு போராடிய காவேரியை, வண்டியை நிறுத்தி காரில் இருந்து விடுவித்து கீழே சாலையில் கிடத்தியபின், மிஹிர் காரின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே உள்ள இருக்கையில் அமர ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்டிய டிரைவர் காவேரி மீது மீண்டும் காரை ஏற்றி இறக்கியுள்ளார்.

     

    அதனபின்னர் மற்றொரு காரில்  மாயமான மிஹிர் தனது காதலி வீட்டில் இருப்பதாக போலீசுக்கு துப்பு கிடைத்தது. விபத்து ஏற்படுத்தியதும் கோரேகானில் உள்ள தனது காதலி வீட்டுக்கு மிஹிர் சென்று சேர்ந்ததும் மிஹிரின் காதலி அவனது சகோதரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு வந்து மிஹிரை வேறொரு காரில் ஏற்றி போரிவாலியில் உள்ள தங்களின் வீட்டுக்கு அவனது சகோதரி அழைத்துச்சென்றுள்ளார்.

    அங்கிருந்து மிஹிருடன் அவனது தாய், இரண்டு சகோதரிகள் மற்றும் அவனது நண்பன் என 5  பேரும் மும்பைக்கு 70 கிலோமீட்டர் தொலைவில் ஷாபூர் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மிஹிர் மட்டும் தந்து நண்பனுடன் மும்பையில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள தானேவின் விரார் பகுதிக்கு சென்று பதுங்கியுள்ளான்.

    ஐவரும் செல் போன்களை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். மிஹிரின் நன்பனின் போனை போலீசார் டேப் செய்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில்   நேற்று அதிகாலை மிஹிரின் நண்பன் தனது போனை 15 நிமிடத்துக்கு ஸ்விட்ச் ஆன் செய்ததால் அவர்களின் மறைவிடம்  தெரிந்து போலீசார் மிஹிர் உட்பட அனைவரையும் கைது செய்தனர். மிஹிரின் தந்தை ராஜேஷ் ஷா தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிஹிர் ஷாவுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று விபத்தில் உயிரிழந்த காவேரியின் மகள் கூறியுள்ளார்.

    ×