என் மலர்
நீங்கள் தேடியது "ஏர் இந்தியா"
- தென்னிந்தியாவின் சில நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்படலாம் என அறிவிப்பு.
- விமானங்களின் நிலவரத்தை பயணிகள் இணையதளத்தில் சரிபார்க்குமாறும் அறிவுறுத்தல்.
டிட்வா புயல் காரணமாக சென்னை மற்றும் தென்னிந்தியாவின் சில நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்படலாம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலையம் செல்வதற்கு முன், விமானங்களின் நிலவரத்தை பயணிகள் இணையதளத்தில் சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்பட பல நகரங்களில் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உதவிக்கு 011-69329333, 011-69329999 என்ற அவசர கால கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
- பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில், பல்வேறு தென் மாநில உணவு வகைகள் புதிதாக சேர்ப்பு
- முந்திரி உப்புமா, சாம்பார், மசால் தோசை, கிச்சடி, பரோட்டா ஆகிய உணவு வகைகள் சேர்ப்பு
வெளிநாடுகளுக்குச் செல்லும் தங்களது விமானங்களில் பயணிகளுக்கு தென்னிந்தியவின் சிறப்பான உணவுகளை இலவசமாக வழங்கப் போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டு உணவான மிளகாய்ப் பொடி இட்லி, முந்திரி உப்புமா, மினி மைசூர் மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, சாம்பார், மூன்று வகை சட்னிகளான தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்டினி உள்ளிட்டவையும் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் தமிழக பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே சமயம் பிரியாணி, மலபாரி கோழிக் கறி, சிக்கன் பிம்பாப் உள்ளிட்ட அசைவ உணவுகளும் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
- 2026 ஆம் ஆண்டிலேயே மும்பையிலிருந்து ஷாங்காய்க்கு நேரடி சேவைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.
- இண்டிகோ நிறுவனம் சமீபத்தில் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோவிற்கு தினசரி விமானங்களை இயக்க தொடங்கியது.
6 வருட இடைவெளிக்குப் பிறகு சீனாவிற்கு தனது சேவைகளை மீண்டும் தொடங்குவதாக டாடா குழுமத்தின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 1 முதல் டெல்லி மற்றும் சீனாவின் ஷாங்காய் இடையே நேரடி விமானங்களை இயக்கப்போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
அதன் அறிவிப்பில், இந்த வழித்தடத்தில் வாரத்திற்கு நான்கு முறை போயிங் 787-8 விமானங்கள் இயக்கப்படும்.
2026 ஆம் ஆண்டிலேயே மும்பையிலிருந்து ஷாங்காய்க்கு நேரடி சேவைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் சமீபத்தில் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோவிற்கு தினசரி விமானங்களை இயக்க தொடங்கியது.
முன்னதாக கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது.
எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
அண்மையில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து விமான சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மற்றும் வெளியே இருந்த 260 பேரும் உயிரிழந்தனர்.
- சர்வதேச நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமிக்கக் கோரியிருந்தார்.
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை யாரையும் பழிவாங்கும் முயற்சி அல்ல என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மற்றும் வெளியே இருந்த 260 பேரும் உயிரிழந்தனர். ஒரு பயணி அதிசயமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்துக்கு விமானி மீது குற்றம்சாட்டப்படுவதாக விமான விபத்தில் இறந்த கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
விசாரணையில் விமானிகள் மீது குற்றம் சாட்ட வாய்ப்புள்ளதாகக் குற்றம் சாட்டிய தந்தை, விசாரணை நடத்த சர்வதேச நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமிக்கக் கோரியிருந்தார்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸுக்கு மத்திய அரசு தற்போது இவ்வாறு பதிலளித்துள்ளது.
இந்நிலையில் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜெயமல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபோன்ற விசாரணையின் நோக்கம், துயரத்திற்கான காரணத்தைக் கண்டறிவதும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுப்பதும் ஆகும் என்றும், தனிநபர்கள் மீது பழி சுமத்துவதோ அல்லது யார் தவறு செய்தார்கள் என்று சொல்வதோ அல்ல என்றும் கூறியது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தரத்தின்படி விசாரணை நடத்தப்படுவதாகவும், விசாரணை யாரையும் பழிவாங்க முற்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
- அகமதாபாத் ஏர் விமான விபத்தில் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
- விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார்.
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை அணைத்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறப்பட்டு வந்தது.
மேலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (ஏஏஐபி) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் விரைவாக "கட்ஆஃப்" நிலைக்குச் சென்றதாக அறிக்கை கூறியது. சுமார் 10 வினாடிகளுக்குப் பிறகு, சுவிட்சுகள் மீண்டும் இயக்கப்பட்டன, ஆனால் என்ஜின்கள் ஏற்கனவே அணைந்து விமானம் விபத்துக்குள்ளானது என்று அறிக்கை கூறியது.
இந்த அறிக்கையை எதிர்த்து சுமித் சபர்வால் தந்தை புஷ்கராஜ் சபர்வால் மற்றும் இந்திய விமானிகள் கூட்டமைப்பு (எஃப்ஐபி) இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
அவர்களின் மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இன்றைய விசாரணையில், ஏஏஐபி அறிக்கையுடன் உடன்படவில்லை என்றும் விமானியை குறை சொல்ல முடியாது என்றும் தெரிவித்தது.
மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (டிஜிசிஏ) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
இந்நிலையில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி காரணம் அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
- AI 174 போயிங் 777 ரக விமானம் மதியம் 2.47 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டது.
- இரவு 9.59 மணிக்கு கொல்கத்தா வழியாக வந்து டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் மங்கோலியாவிற்கு திருப்பி விடப்பட்டது.
AI 174 போயிங் 777 ரக விமானம் மதியம் 2.47 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டது. இரவு 9.59 மணிக்கு கொல்கத்தா வழியாக வந்து டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகமங்கோலியா தலைநகர் உலான்பாதரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்தது.
விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
- தீப்பிடித்த பேருந்து விமானத்தில் இருந்து சில அங்குல தொலைவில் நின்று கொண்டிருந்தது.
- தீயணைப்பு வீர்ர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
புதுடெல்லி:
டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது..
தீப்பிடித்து எரிந்த பேருந்து ஒரு விமானத்திலிருந்து சில அங்குலங்கள் தொலைவில் நின்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பேருந்தில் பயணிகள் யாரும் விமானத்தில் இல்லை.
அங்கிருந்த தீயணைப்பு வீர்ர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
இந்த திடீர் தீவிபத்தால் அருகிலுள்ள விமானங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலைய அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மிலனில் இருந்து டெல்லிக்குச் செல்லவிருந்த ஏ.ஐ138 விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
- அனைத்து பயணிகளுக்கும் உணவு உள்பட தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா தொடர்ந்து வழங்குகிறது
இத்தாலியின் மிலன் நகரில் டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்த ஏர்-இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. எனவே விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதனால் தீபாவளி பண்டிகைக்காக இந்தியா திரும்பயிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் இத்தாலியில் தவித்து வருகிறார்கள்.
இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
17-ந் தேதி மிலனில் இருந்து டெல்லிக்குச் செல்லவிருந்த ஏ.ஐ138 விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவருக்கும் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் பணி நடந்து வருகிறது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் வருந்துகிறோம் என்று தெரிவித்து உள்ளது. மேலும் அனைத்து பயணிகளுக்கும் உணவு உள்பட தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா தொடர்ந்து வழங்குகிறது என்றும் தெரிவித்து உள்ளது. மாற்று விமானம் ஏற்பாடு செய்ய தாமதம் ஆகி வருவதால் தீபாவளிக்கு நாடு திரும்ப முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
- விமான விபத்து குறித்து புலனாய்வுப் பணியாகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது.
- உயிரிழந்த விமானி சுமித் சபர்வாலின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 171, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
விபத்தில், 230 பயணிகளில் 229 பேர், பணியாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் விமானம் மோதியதில் மேலும் 19 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டுமே அதிசயமாக உயிர் தப்பினார்.
இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்ச் பழுது காரணமாக எரிபொருள் விநியோகம் நின்று விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் விமானி இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்சை வேண்டுமென்றே ஆஃப் செய்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
விமான விபத்து குறித்து புலனாய்வுப் பணியாகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த விமானி சுமித் சபர்வாலின் தந்தை, இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP) உடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "விமான விபத்து குறித்து நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில், சுயாதீன விமானப் போக்குவரத்து நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்" என்று கோரியுள்ளார்.
மேலும், விமான விபத்து குறித்த புலனாய்வுப் பணியாகத்தின் (AAIB) முதற்கட்ட அறிக்கை "பாரபட்சமாகவும் குறைபாடுகளுடனும் உள்ளது என்றும் விமான விபத்துக்கு விமானி தான் காரணம் என்றும் கூறுகிறது. ஆகவே விமான விபத்து குறித்து புலனாய்வுப் பணியாகத்தால் (AAIB) நடைபெற்று வரும் விசாரணையை முடித்து வைக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
- கொல்கத்தாவில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டது.
துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது ஆங்காங்கே ஏற்பட்ட சில பிரச்சினைகள் தொடர்பான செய்திகள் இணையத்தில் வெளியாகி பரவிய வண்ணம் உள்ளன.
அந்த வகையில் கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையையொட்டி பூஜை பந்தல் அமைப்பது வாடிக்கை. அவ்வாறு கொல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்ட பூஜை பந்தல் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட ஏர் இந்திய விமான விபத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
260 பேரின் உயிர்களை காவு வாங்கிய அந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஏர் இந்தியா விமானம் ஒன்று அடுக்குமாடி கட்டிடத்தை மோதும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அனைவரும் மறக்க வேண்டிய இந்த கொடூர நிகழ்வை நினைவுப்படுத்தியது ஏன்? என்ற பதிவுகளுடன் இது தொடா்பான வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
- பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது
- விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.
நேற்று, பஞ்சாபின் அமிர்தசரஸிலிருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டது.
பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் அவசரகால ரேம் ஏர் டர்பைன் (RAT) தானாகத் திறந்து கொண்டது.
இதை கவனித்த விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்கினர். அனைத்துப் பயணிகளும் ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
விமானம் தற்போது பர்மிங்காமில் ஆய்வில் வைக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து டெல்லிக்குச் செல்லும் அடுத்த விமான சேவை (AI114) ரத்து செய்யப்பட்டுள்ளது.
- விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவில் மூன்று பேர் விமானப் போக்குவரத்து இயக்குநரககத்தை (DGCA) சேர்ந்தவர்கள் என்பது ஒருதலைப்பட்சமாக உள்ளது.
- மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 171, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
விபத்தில், 230 பயணிகளில் 229 பேர், பணியாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் விமானம் மோதியதில் மேலும் 19 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டுமே அதிசயமாக உயிர் தப்பினார்.
இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்ச் பழுது காரணமாக எரிபொருள் விநியோகம் நின்று விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் விமானி இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்சை வேண்டுமென்றே ஆஃப் செய்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து சுயாதீன விசாரணை கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கு நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி என் கோட்டேஷ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிட்டார். முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் சுவிட்ச் பிழைகள் மற்றும் மின் சிக்கல்கள் போன்ற முறையான பிழைகளை குறைத்து மதிப்பிட்டு விமானிகள் மீது பழியை மாற்ற முயற்சி நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
விபத்து குறித்த விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவில் மூன்று பேர் விமானப் போக்குவரத்து இயக்குநரககத்தை (DGCA) சேர்ந்தவர்கள் என்பது ஒருதலைப்பட்சமாக உள்ளது. யார் மீது குற்றச்சாட்டு உள்ளதோ அவர்களே விசாரணை நடத்துவது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், விமானிகள் மீது குற்றம் சாட்டி 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையில் கட்டுரை வெளிவந்ததை பிரசாந்த் பூஷண்குறிப்பிட்டார்.
அப்போது பேசிய நீதிபதி சூர்யா காந்த், "இது போன்ற ஊகங்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் பொறுப்பற்ற கருத்துக்கள் ஆகும். இதுபோன்ற முக்கியமான விஷயங்களில் ரகசியத்தன்மை மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்தார்.
மேலும் இந்த மனு மீது பதிலளிக்க கோரி மத்திய அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






