என் மலர்
இந்தியா

அகமதாபாத்தில் நடந்த அதே கோளாறு.. பெங்களூரில் பெரும் விபத்தில் இருந்து தப்பிய ஏர் இந்தியா விமானம்
- அந்தச் சுவிட்ச் தானாகவே 'Cut-off' நிலைக்குச் சென்றதால், எரிபொருள் விநியோகம் தடைபடும் அபாயம் இருந்தது.
- ஏர் இந்தியா தனது அனைத்து போயிங் 787 விமானங்களையும் பரிசோதனை செய்திருந்தது.
லண்டனிலிருந்து வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 டிரீம்லைனர் விமானம் இன்று மாலை பெங்களூரில் தரைறயிறங்கியது.
பின்னர் அடுத்த பயணத்திற்கு விமானம் சிறித நேரம் கழித்து புறப்பட தயாரானது. ஆனால், அப்போது எதிர்பாராத விதமாக, எரிபொருள் சுவிட்ச் தானாகவே 'Run' நிலையில் இருந்து 'Cutoff' நிலைக்கு மாறியிருக்கிறது.
அந்தச் சுவிட்ச் தானாகவே 'Cut-off' நிலைக்குச் சென்றதால், எரிபொருள் விநியோகம் தடைபடும் அபாயம் இருந்தது.
கோளாறு கண்டறியப்பட்டவுடன் பயணம் ரத்து செய்யப்பட்டு விமானம் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு ஏர் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து விடுதி ஒன்றின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
அந்த விபத்திற்கும் இந்த எரிபொருள் சுவிட்ச் கோளாறுதான் முக்கியக் காரணமாகக் கண்டறியப்பட்டது.
அகமதாபாத் விபத்திற்குப் பிறகு ஏர் இந்தியா தனது அனைத்து போயிங் 787 விமானங்களையும் பரிசோதனை செய்திருந்தது.
இருப்பினும், தற்போது மீண்டும் அதே போன்ற கோளாறு ஒரு விமானத்தில் கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






