என் மலர்
ஐ.பி.எல்.(IPL)
- டெல்லி அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் இந்தியா திரும்பமாட்டார் என்று அறிவித்துவிட்டார்.
- சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டன.
புதுடெல்லி:
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ந் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப்-டெல்லி இடையேயான ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து போர் பதற்றம் எதிரொலியாக ஐ.பி.எல். போட்டி 1 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இது தொடர்பாக நேற்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லக்னோ-பெங்களூரு அணிகள் மோதும் ஆட்டத்தில் இருந்து போட்டி தொடங்கும். டெல்லி-பஞ்சாப் இடையே பாதியில் ரத்து செய்யப்பட்ட ஆட்டம் மீண்டும் நடைபெறாது என்றும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இதனால் எஞ்சிய 12 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டி ஆக மொத்தம் 16 ஆட்டங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட அட்டவனையை வெளியிடுகிறது.
வருகிற 16 அல்லது 17-ந் தேதி ஐ.பி.எல். போட்டி மீண்டும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தர்மசாலா, டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், மும்பை ஆகிய நகரங்களில் மீண்டும் போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை.
சென்னை, ஐதராபாத், பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய 4 நகரங்களில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். இறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடைபெற வாய்ப்பு இல்லை. இறுதிப்போட்டி ஜூன் 1-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறலாம் என்று தெரிகிறது.
குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் ஐதராபாத்தில் தான் நடைபெறும். அதில் மாற்றம் இருக்காது.
போர் பதற்றத்தால் போட்டி 1 வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டதால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்பி விட்டனர். அவர்கள் ஐ.பி.எல். போட்டிக்காக மீண்டும் இந்தியா வருவது சந்தேகமே.
டெல்லி அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் இந்தியா திரும்பமாட்டார் என்று அறிவித்துவிட்டார். இது டெல்லி அணிக்கு பின்னடைவாகும். அதேபோல் பெங்களூர் அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஹாசல்வுட் காயத்தால் இந்தியா வரமாட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டன. 4 இடத்துக்கு 7 அணிகள் போட்டியில் உள்ளன.
- தோள்பட்டை வலியால் ஆர்.சி.பி. வீரர் ஜோஷ் ஹேசில்வுட் அவதிப்பட்டு வருகிறார்.
- ஐபிஎல் தொடர் வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மேலும், ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்குவதற்காக சொந்த ஊர் திரும்பிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மீண்டும் அழைக்கும் பணியில் அந்ததந்த அணி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வரும் ஆர்.சி.பி. அணியின் முக்கிய வீரரான ஜோஷ் ஹேசில்வுட் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பாக சரியான நேரத்தில் குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது
- ஐபிஎல் தொடர் வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மேலும், ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்குவதற்காக சொந்த ஊர் திரும்பிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மீண்டும் அழைக்கும் பணியில் அந்ததந்த அணி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது
- மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நேற்று முன்தினம் தர்மசாலாவில் நடந்த பஞ்சாப்-டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
- நடப்பு தொடரில் 12 லீக் ஆட்டம் மற்றும் 4 நாக்-அவுட் ஆட்டம் உள்பட 16 போட்டிகள் எஞ்சி உள்ளன.
10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நேற்று முன்தினம் தர்மசாலாவில் நடந்த பஞ்சாப்-டெல்லி (58-வது லீக் ஆட்டம்) அணிகள் மோதிய ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
போர் பதற்ற சூழல் காரணமாக ஐ.பி.எல் போட்டியை தொடர்ந்து நடத்தலாமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவசர ஆலோசனை நடத்தியது. இதில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நடப்பு தொடரில் 12 லீக் ஆட்டம் மற்றும் 4 நாக்-அவுட் ஆட்டம் உள்பட 16 போட்டிகள் எஞ்சி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியதாக தி கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஒரு வார நிறுத்தி வைப்புக்கு பிறகும் இந்தியாவில் ஐ.பி.எல் போட்டியை மீண்டும் தொடங்க முடியாவிட்டால், மீதமுள்ள போட்டிகளை இந்த ஆண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் நடத்தலாம் என்று அவர் பரிந்துரைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- நாட்டில் போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது.
- ஏராளமான இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால் பி.சி.சி.ஐ. இதை செய்ய வேண்டி உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தீவிரம் அடைந்து வருவதால் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐ.பி.எல். 2025 இடைநிறுத்தப்பட்டது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக சவுரவ் கங்குலி கூறுகையில்,
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, நடந்து வரும் ஐ.பி.எல். 2025 போட்டியை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக நேற்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.
நாட்டில் போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது. மேலும் ஏராளமான இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால் பி.சி.சி.ஐ. இதை செய்ய வேண்டி உள்ளது. போட்டி ஒரு முக்கியமான கட்டத்திற்கு நெருங்கி வருவதால், ஐ.பி.எல். விரைவில் மீண்டும் தொடங்கும் என்று நம்புவோம்
குறிப்பாக தரம்சாலா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் பி.சி.சி.ஐ இதைச் செய்ய வேண்டியிருந்தது. இவை அனைத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடங்கள்.
தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப இதை செய்வது அவசியம். காலப்போக்கில், நிலைமை சீரடைந்து போட்டிகளும் நடத்தப்படும்.
பி.சி.சி.ஐ. ஐ.பி.எல். போட்டிகளை முடித்துவிடும். மேலும் பாகிஸ்தான் நீண்ட காலத்திற்கு அழுத்தத்தை கையாள முடியாததால் இந்த நிலைமை மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று அவர் கூறினார்.
- ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வெளிநாட்டு வீரர்கள் அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
- பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சில மாநிலங்களில் மட்டுமே பதற்றம் அதிக அளவில் உள்ளது.
மும்பை:
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஐபிஎல் தொடரை ஒருவாரம் ஒத்திவைத்தாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வெளிநாட்டு வீரர்கள் அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் தங்களை ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல அனுமதிக்குமாறு ஐபிஎல் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய போட்டி தரம்சாலாவில் நடந்தது. அந்தப் போட்டி தான் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த தரம்சாலாவில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில், அங்கு இருக்கும் ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் ஒளிபரப்பு செய்யும் குழுவினர் மற்றும் ஐபிஎல் சார்ந்த பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும் ஐபிஎல் நிர்வாகம் பாதுகாப்பாக ரெயிலில் அழைத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறது. இதுபோன்ற இடர்பாடுகளை அடுத்து தான் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் விரைவில் விவாதிக்க உள்ளதாகவும், ஐபிஎல் தொடரை வேறு நாட்டில் நடத்துவது குறித்தும் அதில் விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதன் முடிவில், ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வெளிநாட்டு வீரர்களை அவர்கள் நாட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சில மாநிலங்களில் மட்டுமே பதற்றம் அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
- காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், தற்போது ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்றிரவு ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அரியானா, குஜராத், ராஜஸ்தான், இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன.
இதனால் தரம்சாலாவில் நேற்றிரவு நடைபெற்று வந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது. அத்துடன் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் மேலும் மேலும் மோசமடைந்து வருவதால் ஐபிஎல் போட்டியில் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இன்று காலை பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஒருவார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐ இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஐபிஎல் தொடர் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சஸ்பெண்ட் ஒரு வார காலத்திற்கு இருக்கும்.
அதன்பின் சூழ்நிலை குறித்து விரிவாக ஆராய்ந்து புதிய போட்டி அட்டவணை மற்றும் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.
- ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரிக்கை.
- பாகிஸ்தானை சேர்ந்த மின்னஞ்சல் போல் உருவாக்கப்பட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். நடப்பு சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளை ஒருவாரத்திற்கு மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரித்து டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானை சேர்ந்த மின்னஞ்சல் போல் உருவாக்கப்பட்டு சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
- 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- தரம்ஷாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்து உள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்றுள்ள நாடுகளின் வீரர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தரம்ஷாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணி வீரர்களையும் பாதுகாப்பாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
- 3-ல் பெங்களூருவும், 2-ல் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன.
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்றிரவு லக்னோவில் நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
லக்னோ அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி என 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. முதல் 6 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்ற அந்த அணி அடுத்த 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டது. இதில் கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக தோற்றதும் அடங்கும். இனி எஞ்சிய 3 ஆட்டங்களில் வெற்றி பெறுவதுடன், மற்ற ஆட்டங்களின் முடிவும் சாதகமாக அமைந்தால் தான் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைய முடியும். எனவே இன்றைய ஆட்டம் அந்த அணிக்கு வாழ்வா-சாவா? போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று கனவு கலைந்து விடும்.
லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (410 ரன்), மிட்செல் மார்ஷ் (378), மார்க்ரம் (348), ஆயுஷ் பதோனி (326) அதிரடியில் அசத்துகின்றனர். கேப்டன் ரிஷப் பண்ட் (11 ஆட்டத்தில் 128 ரன்), டேவிட் மில்லர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடவில்லை. பந்து வீச்சில் திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் சில ஆட்டங்களில் நன்றாக பந்து வீசியுள்ளனர். பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியமாகும்.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் எடுத்து 2-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும். அந்த அணி தனது முந்தைய 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.
பேட்டிங்கில் விராட் கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் 7 அரைசதங்களுடன் 505 ரன்கள் குவித்துள்ளார். கேப்டன் ரஜத் படிதார், பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல் பயனுள்ள பங்களிப்பை அளிக்கின்றனர். காயத்தால் தேவ்தத் படிக்கல் விலகியிருப்பது சற்று பின்னடைவாகும். பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் மிரட்டுகிறார்கள்.
மொத்தத்தில் பெங்களூரு அணியின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போட லக்னோ அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 3-ல் பெங்களூருவும், 2-ல் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய் அல்லது ஆகாஷ் சிங்.
பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், லுங்கி இங்கிடி, யாஷ் தயாள், ஹேசில்வுட் அல்லது சுயாஷ் ஷர்மா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
- காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து சந்தீப் சர்மா விலகினார்.
புதுடெல்லி:
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 57 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.
இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
மேலும் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இதற்கிடையே, நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த சந்தீப் சர்மா கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், சந்தீப் சர்மாவுக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நன்ரே பர்கரை ரூ.3½ கோடிக்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிய பர்கர் 6 ஆட்டங்களில் 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.