என் மலர்
நீங்கள் தேடியது "RCB"
- பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் விளையாட்டு மைதானம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது.
- 2022-ம் ஆண்டு என்னை அவர்கள் ஏமாற்றிவிட்டனர்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 8 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்காக சாஹல் விளையாடி வந்தார். இந்நிலையில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது சாஹலை, ஆர்சிபி அணி நிர்வாகம் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. 2022-ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணிக்காக சாஹல் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் 2022 ஏலத்தில் ஆர்சிபி அணி அவரை ஏலத்தில் எடுக்காதது குறித்து சாஹல் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஆர்சிபி அணிக்காக 140 போட்டிகளில் விளையாடியுள்ளேன். பல போட்டிகளில் வெற்றி தேடிக் கொடுத்தேன். ஆனால், 2022-ம் ஆண்டு என்னை அவர்கள் ஏமாற்றிவிட்டனர். ஏலம் குறித்து ஆர்சிபி அணியிடமிருந்து எனக்கு ஒழுங்கான தகவல் தெரிவிக்கவில்லை.
ஆர்சிபி அணிக்காக 8 ஆண்டுகள் விளையாடி உள்ளேன். ஆனால் 2022 ஏலத்தில் என்னை எடுக்காததால் நான் மிகவும் கோபமடைந்தேன். அதிக வருத்தம் அடைந்தேன். பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் விளையாட்டு மைதானம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், 145 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகள் எடுத்து பிராவோவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் உள்ளார்.
- பேஸ்புக் தளத்தில் டாப் 5 விளையாட்டுகளில் ஒரே ஒரு விளையாட்டு (கிரிக்கெட்) அணியாக சிஎஸ்கே இடம் பெற்றுள்ளது.
- சமூக ஊடகங்களில் சிறந்த 10 பிரபலமான விளையாட்டு அணிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் சிறந்த 10 பிரபலமான விளையாட்டு அணிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பிரபலமான கால்பந்து கிளப்புகளை விட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஆகிய இரண்டு கிரிக்கெட் அணிகள் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன.
பேஸ்புக் தளத்தில் டாப் 5 விளையாட்டுகளில் ஒரே ஒரு விளையாட்டு (கிரிக்கெட்) அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம் பெற்றுள்ளது.
கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் (31,6 மில்லியன்) நம்பர் 1 விளையாட்டு அணியாக உள்ளது. கிரிக்கெட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (30,2 மில்லியன்) இரண்டாவது இடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து கால்பந்து அணிகளான மான்செஸ்டர் சிட்டி (27,9 மில்லியன்), பார்சிலோனா (24,2 மில்லியன்), லிவர்பூல் (14,9 மில்லியன்) ஆகிய அணிகள் உள்ளன.
இதேபோல இன்ஸ்டாகிராமில் அனைத்து விளையாட்டு அணிகளிலும் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அதிக பாலோவர்களை கொண்ட அணிகளாக உள்ளது. முதல் இடத்தில் ஆர்சிபி (285 மில்லியன்), 2-வது இடத்தில் சிஎஸ்கே (276 மில்லியன்), 3, 4, 5 ஆகிய இடங்கள் முறையே ரியல் மாட்ரிட் (259 மில்லியன்) மும்பை இந்தியன்ஸ் (196 மில்லியன்), பார்சிலோனா (162 மில்லியன்) பாலோவர்களை கொண்டுள்ளது.
உலக அளவில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஆர்சிபி முதல் இடத்திலும் சிஎஸ்கே 2-வது இடத்திலும் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது.
- டோனி களம் காண வேண்டுமென என்னை வெளியேற சொல்கிறார்கள் என்று ஜடேஜா கூறியிருந்தார்.
- டோனியின் நிழலில் இருந்து டுபிளிசிஸ், அஸ்வின் போல வெளியேறுங்கள் என சிலர் கருத்து தெரிவித்தனர்.
சென்னை:
நடப்பு ஐபிஎல் சீசனில் 53 ஓவர்கள் வீசி 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா. ஐபிஎல் கிரிக்கெட்டில் மொத்தம் 151 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். சென்னை அணியின் அனைத்து போட்டியிலும் அவரது பங்கு அதிகமாகவே உள்ளது.
சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் ஜடேஜாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த சீசனில் சென்னை அணியில் இருந்து ஜடேஜா வெளியேறிவிட்டார் என்ற தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. அதுபோலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே குறித்த புகைப்படம் எல்லாவற்றையும் அவர் நீக்கி இருந்தார். ஒருவழியாக டோனி சமரசம் பேசி சென்னை அணிக்கு மீண்டும் வந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜடேஜா அவ்வப்போது சிஎஸ்கே ரசிகர்களை தனது கருத்துகளால் மறைமுகமாக சாடி வருகிறார்.
ஒரு பேட்டியில் டோனி களம் காண வேண்டுமென என்னை வெளியேற சொல்கிறார்கள் என்று கூறியிருந்தார். அதன்பிறகு சில நாட்களுக்கும் முன்னர் இன்ஸ்டாவில், உங்கள் கர்மா நிச்சயம் உங்களை தேடி வரும் என்று பதிவிட்டிருந்தார். இன்று அவர்களுக்குத் தெரிகிறது... ஆனால், சில ரசிகர்களுக்கு அது தெரியவில்லை என சர்ச்சைக்கூறிய வகையில் டுவீட் செய்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில் ஆர்சிபி ரசிகர்கள் ஜடேஜாவை ஆர்சிபி அணிக்கு விளையாட வருமாறு சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி படத்தில் 'நம்ம வீட்டுக்கு வாங்க' என சாலமன் பாப்பையா சொல்வது போல 'ஆர்சிபி-க்கு வருக' என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்கள் ஜடேஜாவுக்கு வலை விரிக்கின்றனர்.
இதில் சில ரசிகர்கள் அப்போ அடுத்த வருஷம் ஜட்டு (ஜடேஜா) ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் மீண்டும் சிஎஸ்கே vs ஜடேஜா என்று கூறினார். மற்றோரு ரசிகர் ஆர்சிபி-க்கு வாங்க ஜட்டு. ஆர்சிபி-க்கு வாங்க. சேர்ந்தே தோற்போம்.
டோனியின் நிழலில் இருந்து டுபிளிசிஸ், அஸ்வின் போல வெளியேறுங்கள். ஆர்சிபி-க்கு வாங்க. ராஜாவை போல பாத்துக்குறோம் என சில டுவிட்டுகள் வலம் வருகின்றன.
- இந்த ஐபிஎல் சீசன் சிறப்பாக அமைந்தது.
- அணியினர் மற்றும் பயிற்சியாளருக்கு நன்றி.
பெங்களூரு:
16-வது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று முதல் பிளே ஆப் போட்டிகள் நடைபெற உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய 4 அணிகள் முன்னேறி உள்ளன. இதில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் ஆட உள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6-வது இடத்தை பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. ஐபிஎல் அறிமுகம் ஆன 2008-ம் ஆண்டில் இருந்து இதுவரை பெங்களூர் அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்று அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக விராட்கோலி கேப்டனாக இருந்த காலத்தில் எப்படியாவது வெல்ல வேண்டுமென்று நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இந்நிலையில், பெங்களூரு அணியை அனைத்து நிலைகளிலும் ஆதரித்த விசுவாசமான ரசிகர்களுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
இந்த ஐபிஎல் சீசன் சிறப்பாக அமைந்தது. இருப்பினும் எதிர்பாராத வகையில் நாங்கள் ஒரு சில இடங்களில் சரியாக விளையாடவில்லை. வருத்தமாக தான் இருக்கிறது. இருந்தாலும் நாம் நம்முடைய ரசிகர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அணியினர் மற்றும் பயிற்சியாளருக்கு நன்றி. நாங்கள் வலுவாக திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- கடந்த ஆண்டு ஆர்.சி.பி. அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல நாங்கள் உதவி செய்தோம்.
- பிளே ஆப் சுற்றுக்கு எங்களால் செல்ல முடியாவிட்டால் அதனால் நாங்கள் விமர்சிக்கப்படுவோம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் லீக் சுற்றுக்கான போட்டிகள் முடிவுக்கு வந்தது. நாளை முதல் பிளே ஆப் சுற்று தொடங்கவுள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் ரோகித் சர்மா பிளேஆப் சுற்று தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது-
உங்களால் எதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியுமோ அதை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். மற்றபடி, நமக்கு சிறந்தது கிடைக்கும் என்ற நம்பிக்கை வைக்க வேண்டும். பிளே ஆப் சுற்றுக்கு எங்களால் செல்ல முடியாவிட்டால் அதனால் நாங்கள் விமர்சிக்கப்படுவோம். சென்றால் அதற்கு எங்கள் அணி வீரர்களே முக்கிய காரணம்.
கடந்த ஆண்டு ஆர்.சி.பி. அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல நாங்கள் உதவி செய்தோம். அதற்கான பலன் இப்போது கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஐபிஎல் தொடரின்போது, 69-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
- பெங்களூர் அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதால் விராட்கோலி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.
- ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வெளியே இருந்த அவரது முகம் ஏமாற்றத்துடன் காணப்பட்டது.
பெங்களூர்:
ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த கடைசி 'லீக்' ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சிடம் தோற்றது.
வெற்றிபெற வேண்டிய இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி தோற்றதால் பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இந்த ஆட்டத்தில் விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடினார். அவர் 61 பந்துகளில் 13 பவுண்டரி, 1 சிக்சருடன் 101 ரன் எடுத்தார். தொடர்ச்சியாக 2 சதத்தை பதிவு செய்தார். மேலும் ஐ.பி.எல்.லில் 7 சதம் அடித்து சாதனை புரிந்தார்.
விராட்கோலியின் இந்த சதம் பலன் இல்லாமல் போனது. அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஜராத் வீரர் சுப்மன்கில் செஞ்சூரி அடித்து குஜராத் அணியை வெற்றி பெற வைத்து பெங்களூரை வெளியேற்றினார்.
Some memorable souvenirs for players and a lap of honour for the ever-so-energetic Chinnaswamy crowd ????#TATAIPL | #RCBvGT | @RCBTweets pic.twitter.com/Y8dQzz2QyP
— IndianPremierLeague (@IPL) May 21, 2023
பெங்களூர் அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதால் விராட்கோலி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வெளியே இருந்த அவரது முகம் ஏமாற்றத்துடன் காணப்பட்டது. அவரால் தோல்வியை தாங்கி கொள்ள முடியவில்லை.
மற்ற போட்டிகள் முடிந்த பிறகு இளம் வீரர்களுடன் கலகலப்பாக பேசி சிரித்த விராட் கோலி, இந்த போட்டி முடிந்த பிறகு சோகமாகவே காணப்பட்டார். குஜராத் அணி வீரர்கள் கோலியிடம் ஜெர்சியில் ஆட்டோகிராப் கேட்டனர். ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த அவர் சோகத்துடனே காணப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் தரும் விதமாக பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சீசனில் விராட் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 14 ஆட்டத்தில் 639 ரன் குவித்துள்ளார். 2 போட்டியில் அவுட் ஆகாததால் சராசரி 53.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 139.82 ஆக உள்ளது. இரண்டு சதமும், 6 அரை சதமும் அடித்துள்ளார்.
- லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
- இன்றைய இரண்டு ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஐபிஎல் என்றாலே விறுவிறுப்பு தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் கடைசி நான்கு போட்டிகள் இருக்கும் வரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் கடைசி மூன்று அணிகள் எவை என்பதில் விறுவிறுப்புகள் கூடிக் கொண்டே இருந்தது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு ரெண்டாவது அணியாக முன்னேறியது. கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா, லக்னோ அணிகள் மோதின.
இந்த ஆட்டம் லக்னோவிற்கு மட்டுமல்ல மும்பை, ஆர் சி பி அணிகளுக்கும் முக்கிய போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் ஒருவேளை கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் ஆர் சி பி மும்பை ஆகிய இரண்டு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் எளிதாக மூன்றாவது நான்காவது இடங்களை பிடிக்கும் என்ற நிலை இருந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் ரிங் சிங் அதிரடியாக விளையாடி கொல்கத்தாவை வெற்றிபெறும் நிலைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் கடைசி மூன்று பந்துகளில் 3 சிக்ஸ் தேவை என்ற நிலையில் இரண்டு சிக்ஸ் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்ததால் லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதனால் மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இன்னும் ஒரு இடம் தான் இருக்கிறது. அந்த இடத்திற்கு ஆர் சி பி, மும்பை ராஜஸ்தான் 3 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் ரன் ரேட் அடிப்படையில் இருந்தாலும் அந்த அணிக்கு 14 போட்டிகள் முடிந்து விட்டன.
இன்று மதியம் நடக்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் ஹைதராபாத் அணிகள் வான்கடே மைதானத்தில் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றே தீர வேண்டும். ஒரு வேளை வெற்றி பெற்றாலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம். ஏனென்றால் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடக்கும் அடுத்த போட்டியில் ஆர்சிபி குஜராத் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் ஏற்கனவே மும்பையை விட அதிக ரன் ரேட்டில் இருக்கும் ஆர்சிபி நாலாவது இடத்திற்கு முன்னேறி விடும்.
ஒருவேளை ஆர்சிபி தோல்வி அடைந்து மும்பை வெற்றி பெற்றால் மும்பை முன்னேறிவிடும். இதனால் மும்பை அணி வான்கடேயில் வெற்றி பெற்றாலும் ஆர்சிபி குஜராத் அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதனால் இன்றைய இரண்டு ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருவேளை சொந்த மண்ணில் ஆர்சிபி யும், மும்பையும் தோல்வி அடைந்தால் ராஜஸ்தான் அணியும் இந்த இரண்டு அணிகளும் தலா ஏழு வெற்றிகளுடன் இருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி முன்னேறும்.
ஒருவேளை மும்பை தோற்று ஆர் சி பி-யும் தோல்வி அடையும் நிலையில் இருந்தால் கூட கடைசி போட்டி என்பதால் குஜராத்தை இத்தனை ரன்னுக்கு சுருட்ட வேண்டும் அல்லாத பட்சத்தில் இத்தனை ரன்கள் அடிக்கவேண்டும் என்று நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே எந்த ஒரு நிலையில் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெறும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் இன்றைய சண்டே ஸ்பெஷல் ஆக ரசிகர்களுக்கு அமையும் என்ற சந்தேகம் இல்லை. அதிரடி பரபரப்பு திரில் மோதலை இன்றைய போட்டியில் அதிகமாக ரசிகர்கள் எதிர்பார்க்க வாய்ப்புள்ளது.
- பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை அணி அவர்களது கடைசி லீக் போட்டியில் தோல்வியடைய வேண்டும்.
- மும்பை பெங்களூரு அணிகள் தோல்வியடைந்தால் ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
16-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில் ஐதராபாத்தில் 18-ந் தேதி நடந்த ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் பிளேஆஃப் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 14 புள்ளிகளை பெற்றுள்ளது. மேலும், புள்ளிகள் பட்டியலில் மும்பையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை அணி அவர்களது கடைசி லீக் போட்டியில் தோல்வியடைய வேண்டும். அப்படி நடந்தால் பெங்களூரு அணி கடைசி லீக் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் கூட ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். மும்பை ஒருவேளை வெற்றி பெற்றால் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் போதும். ஏனென்றால் மும்பையை விட பெங்களூரு அணி அதிக ரன் ரேட் வைத்துள்ளது. இந்த 2 அணியும் தோல்வியடைந்தால் ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
ஒருவேளை கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் லக்னோ அணி தோல்வியடைந்தால் பெங்களூரு மற்றும் மும்பை அணி வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
- அதிரடியாக விளையாடி ஆர்சிபி அணியின் வெற்றி முக்கிய பங்கு வகித்த விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
- முதல் 3 வீரர்களில் யாரோ ஒருவர் சதமடிக்க போகிறார் என என் உள்ளுணர்வு சொல்கிறது என பாஃப் என்னிடம் கூறினார்.
ஐபிஎல் தொடரின் 65-வது லீக் போட்டியில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 186 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 19.2 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி ஆர்சிபி அணியின் வெற்றி முக்கிய பங்கு வகித்த விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் நான் இன்று சதம் அடிப்பேன் என்று அணியின் கேப்டன் பாஃப் முன்பே என்னிடம் தெரிவித்தார் என விராட் கோலி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் பேட்டிங் செய்ய தொடங்குவதற்கு முன்பு பேட்டிங் வரிசையில் உள்ள முதல் 3 வீரர்களில் யாரோ ஒருவர் சதமடிக்க போகிறார் என என் உள்ளுணர்வு சொல்கிறது என பாஃப் என்னிடம் கூறினார். அது நீங்கள்தான் என நான் கூறினேன். அதற்கு இல்லை நீங்கள்தான் என்றார். அதுபோலவே நானும் சதம் விளாசினேன்.
என விராட் கோலி கூறினார்.
- கோலி, சிராஜ், பார்னல் ஆகியோர் ரொனால்டோவை போல வெற்றியை கொண்டாடினர்.
- ஐதராபாத் அணியின் இளம் வீரர்கள் பலரும் கோலியிடம் ஆட்டோகிராஃப் மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ஆர்சிபி - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் விராட் கோலியின் அதிரடி சதத்தால் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல பெங்களூரு அணிக்கு வாய்ப்புக்கு உள்ளது.
இந்நிலையில் விராட் கோலி சதம் அடித்த போது ரசிகர்கள் அனைவரும் கொண்டினர். அப்போது ஆர்சிபி வீரர்கள் விராட் கோலி நோக்கி தலை வணங்கி கொண்டாடினர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் போட்டிக்கு பின் விராட் கோலி ஐதராபாத் அணியின் இளம் வீரர்களுடன் சிறிது நேரம் செலவிட்டார். கிட்டத்தட்ட டோனியை போலவே எதிரணியின் இளம் வீரர்களுடன் செலவிடுவதை கோலி வழக்கமாக கொண்டுள்ளார். நேற்றும் ஐதராபாத் அணியின் இளம் வீரர்கள் பலரும் கோலியிடம் ஆட்டோகிராஃப் மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பின்னர் விராட் கோலி அவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.
King Kohli giving autograph to SRH youngsters#SRHvsRCB #SRHvRCB #RCBvsSRH #RCBvSRH #IPLPlayOffs #IPL2023 #ViratKohli #FafDuPlesis #SunrisersHyderabad #Markram #ViratKohli? #GOAT? #6thIPL #RoyalChallengersBangalore #Haarcb #Klaasen #PlayBold #Bhuvi pic.twitter.com/2ffmkTcc6y
— Sumit Mukherjee (@Who_Sumit) May 18, 2023
மேலும் கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு ஆர்சிபி அணியில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே விராட் கோலி மற்றும் சிராஜ் ஆகியோர் ரொனால்டோவின் தீவிர ரசிகர்கள் என்று அறிவித்துள்ள நிலையில், ஆர்சிபி அணியின் பார்னல்லும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

இவர்கள் மூவரும் இணைந்து ரொனால்டோவின் வெற்றிக் கொண்டாட்டத்தை ஆர்சிபி ஓய்வறையில் செய்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.