என் மலர்
நீங்கள் தேடியது "RCB"
- ராஜஸ்தான் அணியின் 65 சதவீத பங்குகளை ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமம் வைத்துள்ளது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் விற்பனை தொடர்பாக அந்த அணி நிர்வாகம் எந்த அதிகாரப்பூர்வமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மும்பை:
19-வது ஐ.பி.எல் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 15-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கிடையே நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விற்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியை வின்பனை செய்ய இருப்பதை அதன் உரிமையாளரான டியாஜியோ உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் பெங்களூரு அணியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராஜஸ்தான் அணியின் 65 சதவீத பங்குகளை ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமம் வைத்துள்ளது.
இது தொடர்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சகோதரரான ஹர்ஷா கோயங்கா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணியை தொடர்ந்து மேலும் ஒரு அணி விற்பனைக்கு வர உள்ளதாக கேள்விப்பட்டேன். அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆகும். எனவே விற்பனைக்கு 2 அணிகள் உள்ளன. அதை வாங்குவது புனே, அகமதாபாத், மும்பை, பெங்களூரு அல்லது அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா? என்று தெரிவித்து உள்ளார்.
ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் விற்பனை தொடர்பாக அந்த அணி நிர்வாகம் எந்த அதிகாரப்பூர்வமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- RCB அணியின் மதிப்பு சுமார் ரூ.17,762 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.
இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமானமும் அதானி குழுமமும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும் ஆர்சிபி அணியை வாங்க முன்வந்துள்ளது.
அதாவது பிற நிறுவனங்களுடன் இணைந்து ஆர்சிபி அணியை வாங்கி இணை உரிமையாளராக மாற ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லிவிங்ஸ்டோன், முசாரபானி, லுங்கி நிகிடியை ரிலீஸ் செய்துள்ளது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முகமது ஷமி, வியான் முல்டர், அபிநவ் மனோகர், ஆடம் ஜம்பா ரிலீஸ் செய்துள்ளது.
2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று மாலை வரை கெடு விடுவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் பட்டியலை விடுவித்து வருகிறது.
அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லிவிங்ஸ்டோன், முசாரபானி, லுங்கி நிகிடி, டிம் ஷெய்பெர்ட், மயங்க் அகர்வால், ஸ்வாஸ்டிக் சிகாரா ஆகியோரை விடுவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குர்னால் சிங் ரதோர், தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா, பரூக்கி, ஆகாஷ் அத்வால், ஆஷோக் சர்மா, குமார் கார்த்திக்கேயா, சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா ஆகியோரை விடுவித்துள்ளது.
டேல்லி கேப்பிட்டல்ஸ் "ஜேக் பிராசர்-மெக்கர்க், டு பிளிஸ்சிஸ், டொனோவன் பெரேரியா, செதிகுல்லா அடல், மன்வான்த் குமார், தர்ஷன் நல்கண்டே ஆகியோரை வெளியேற்றியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முகமது ஷமி, வியான் முல்டர், அபிநவ் மனோகர், ஆடம் ஜம்பா, ராகுல் சாகர் ஆகியோரை வெளியேற்றியுள்ளது.
- பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலியானார்கள்.
- அடுத்த ஆண்டு நடைபெறும் (2026) போட்டிக்கான உள்ளூர் மைதானமாக பெங்களூரு இருக்கிறது.
மும்பை:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக இந்த சீசனில் (2025) ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.
வெற்றிக் கொண்டாட்ட பேரணியின் போது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டியை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு நடைபெறும் (2026) போட்டிக்கான உள்ளூர் மைதானமாக பெங்களூரு இருக்கிறது. ஆர்.சி.பி. அணி நிர்வாகம் திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், தர்மசாலா, நவி மும்பை, புனே, கான்பூர் ஆகிய 6 மைதானங்களில் ஒன்றை தேர்வு செய்யலாம் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஆர்.சி.பி. போட்டிகளை நடத்த புனே மைதானம் விருப்பத்துடன் இருப்பதாக மராட்டிய கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
- தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கெதிராக முதல் போட்டியில் விளையாடும்போது காயம்.
- ஐ.பி.எல். போட்டிக்கு முன்னதாக தயாராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் டி20 லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் இருந்து வருகிறார். இவர் தலைமையில் 2025-ல் ஆர்.சி.பி. அணி முதன்முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
மிடில் ஆர்டர் வரிசை பேட்ஸ்மேனான இவர் ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்தியா 'ஏ'- தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டிக்கான இந்தியா 'ஏ' அணியில் ரஜத் படிதார் இடம் பிடித்திருந்தார்.
முதல் போட்டியில் விளையாடும்போது, ரஜத் படிதாருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய சுமார் 4 மாதங்களாகும் எனத் தெரிகிறது. இதனால் வரவிருக்கின்ற ரஞ்சி போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2026 ஐ.பி.எல். லீக் தொடர் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் தொடங்கும். அதற்கு தயாராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.
நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ஆர்.பி.சி. அணியை நிர்வகித்து வருகிறது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.
இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில் ஆர்.சி.பி. அணியை விற்க நிர்வாகம் எடுத்துள்ள முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
- கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.
இதனை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சிறப்பாக கொண்டாட அணி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சின்னசாமி மைதானம் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து பிரிட்டனின் Diageo குழுமத்திற்கு சொந்தமான ஆர்சிபி அணியை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக |(ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகினது. கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து அந்த குழுமம் அணியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ஆர்சிபி அணியை வாங்க உள்நாட்டில் 4 நிறுவனங்களும் வெளிநாடுகளில் 2 நிறுவங்களும் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமானமும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது. அதேபோல அதானி குழுமமும் ஆர்வமாக உள்ளது.
மேலும் பார்த் ஜிண்டால் (ஜே.எஸ்.டபிள்யூ குழுமம்), டெல்லியைச் சேர்ந்த பல துறை நலன்களைக் கொண்ட கோடீஸ்வரர்,
அமெரிக்காவை தளமாகக் கொண்ட இரண்டு தனியார் பங்கு நிறுவனங்கள் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது.
ஆர்சிபி அணியின் முதல் தலைவராக மல்லையா இருந்தார். அதனை தொடர்ந்து Diageo குழுமம் இந்த அணியை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.
- ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.
இதனை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சிறப்பாக கொண்டாட அணி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சின்னசாமி மைதானம் மூடப்பட்டது. இதனால் ஆர்சிபி அணி அடுத்த ஐபிஎல் போட்டிகளில் மூன்று வெவ்வேறு மைதானங்களில் விளையாட உள்ளது.
இந்நிலையில் பிரிட்டனின் Diageo குழுமத்திற்கு சொந்தமான ஆர்சிபி அணியை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக |(ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், Serum நிறுவன CEO அதார் பூனாவாலா அணியை வாங்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்சிபி அணியின் முதல் தலைவராக மல்லையா இருந்தார். அதனை தொடர்ந்து Diageo குழுமம் இந்த அணியை வாங்கியது. கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து அந்த குழுமம் அணியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் பிரபலமான அணியாக திகழும் ஆர்சிபி அணியை வாங்க இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும் போட்டி போட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு RCB Cares தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஆர்.சி.பி. அணி, கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு மேலும், தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என RCB Cares அறிவித்துள்ளது.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு விராட் கோலி அஞ்சலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்.சி.பி. அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், "ஆர்சிபி அணி வரலாற்றில் சந்தோஷம் நிறைந்ததாக இருக்க வேண்டிய நாள், துக்கம் நிறைந்ததாக மாறியது. கொண்டாட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்கள் கதையின் ஒரு அங்கமாகி விட்டது. அன்பு, அக்கறை, மரியாதையுடன் ஒன்றாக முன்னோக்கி செல்வோம்!" என்று கோலி தெரிவித்துள்ளார்.
- 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
- கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஆர்.சி.பி. அணி, கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என RCB Cares அறிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று முன்தினம் ஆர்.சி.பி. அணி நிர்வாகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
நாங்கள் இந்த தளத்தில் கருத்துகளை வெளியிட்டு 3 மாதங்கள் ஆகிவிட்டது. நாங்கள் வெளியே சென்றுவிடவில்லை. அமைதியாக இருப்பது என்பது இல்லாமல் போய்விட்டதாக இல்லை. இது துக்கம். ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை வெற்றி பெற்ற பிறகு நினைவுகளை கூறும் வகையில் சக்தியுடன் நீங்கள் கொண்டாடினீர்கள். மகிழ்ச்சி நிரம்பி இருந்தது. ஆனால் ஜூன் 4-ந்தேதி (கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்) இது அனைத்தையும் மாற்றிவிட்டது.
அந்த நாளில் நமது இதயம் வெடித்து சிதறியது. அதன் பிறகு ஏற்பட்ட அமைதி நமது இடத்தை நிறுத்தி வைத்தது. இந்த அமைதியில் நாங்கள் துக்கத்தில் இருந்தோம், எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்தோம், கற்றுக் கொண்டிருந்தோம். இப்போது நிதானமாக வெறும் பொறுப்பை தாண்டி நாங்கள் மீண்டும் ஏதாவது செய்வதை தொடங்கி இருக்கிறோம். இதில் நாங்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டுள்ளோம்.
நாங்கள் இன்று (அதாவது நேற்றுமுன்தினம்) முதல் மீண்டும் இந்த தளத்திற்கு திரும்பியுள்ளோம், கொண்டாட்டத்துடன் அல்ல, அக்கறையுடன் வந்துள்ளோம். உங்களுடன் கூட்டாக நிற்க, முன்னேறி நடக்க தயாராக உள்ளோம். கர்நாடகத்தின் பெருமையாக இருக்க நாங்கள் தொடர்ந்து பயணிக்கிறோம். இந்த ஆர்.சி.பி. கேர்ஸ் நிதி குறித்து முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மௌனம் என்பது இல்லாமை அல்ல. அது துக்கம்.
- ஜூன் 4 ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றியது.
அண்மையில் நடந்து முடிந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.
ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை இத்தொடரில் கைப்பற்றி அசத்தியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி அணியின் நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசின் பொறுப்பற்ற நிர்வாகமே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சோக சம்பவத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 3 மாதங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் எந்தவித பதிவும் போடாமல் இருந்தது.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் இன்று ஒரு அறிக்கையை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நிர்வாகம் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கடைசியாக இங்கு பதிவிட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. மௌனம் என்பது இல்லாமை அல்ல. அது துக்கம். இந்த இடம் ஒரு காலத்தில் நீங்கள் மிகவும் ரசித்த ஆற்றல், நினைவுகள் மற்றும் தருணங்களால் நிரம்பியிருந்தது.
ஆனால் ஜூன் 4 ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றியது. அந்த நாள் எங்கள் இதயங்களை உடைத்தது. அன்றிலிருந்து மௌனம் எங்கள் இடத்தைப் பிடித்துக் கொள்ளும் வழியாக இருந்து வருகிறது. அந்த மௌனத்தில், நாங்கள் துக்கப்படுகிறோம். கேட்டல், கற்றல், மெதுவாக, வெறும் பதிலை விட வேறு ஒன்றை உருவாக்கத் தொடங்கினோம். நாங்கள் உண்மையிலேயே நம்பும் ஒன்று.
அப்படித்தான் RCB CARES உருவானது. இது எங்கள் ரசிகர்களுடன் இருக்கவும், கவுரவிக்கவும், குணப்படுத்தவும், அர்த்தமுள்ள செயலுக்காக எங்கள் சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மேடை. நாங்கள் இன்று இந்த இடத்திற்கு மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை. ஆனால் அக்கறையுடன் திரும்புகிறோம். உங்களுடன் பகிர்ந்து கொள்ள, ஒன்றாக நிற்க... ஒன்றாக முன்னேற... கர்நாடகாவின் பெருமையாக தொடர ஆர்.சி.பி கேர்ஸ். எப்போதும் அப்படியே இருக்கும். விரைவில் மேலும் விவரங்கள்... என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாறுபட்ட ரோல் மூலமாக மீண்டும் ஐபிஎல் தொடரில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டாகலாம்.
- என்னுடைய இதயம் ஆர்சிபி-யேடு இருக்கிறது. எப்போதும் இருக்கும்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய தலைசிறந்த வீரர்களில் ஒருவர் தென்ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவர் ஆர்சிபி அணிக்காக 157 போட்டிகளில் விளையாடி 4522 ரன்கள் குவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஆர்சிபி அணியின் ஆலோசகர் அல்லது பயிற்சியாளராக பதவிக்கான வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள்வேன். அதன்மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-
மாறுபட்ட ரோல் மூலமாக மீண்டும் ஐபிஎல் தொடரில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டாகலாம். தொழில்முறை திறனுடன், சீசன் முழுவதும் ஈடுபடுவது உண்மையிலேயே ட்ரிக்கியானதாக இருக்கும். அந்த நாளும் முடிந்து விட்டன என நம்புகிறேன். என்னுடைய இதயம் ஆர்சிபி-யோடு இருக்கிறது. எப்போதும் இருக்கும். பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பதவி எனக்கானது என்று ஆர்சிபி உணர்ந்தால், என்னுடைய நேரம் வரும்போது, நான் தயாராக இருப்பேன். இது நிச்சயமாக ஆர்சிபிக்காக இருக்கும்.
இவ்வாறு டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.
டி வில்லியர்ஸ் ஆர்சிபி அணியில் 2011ஆம் ஆண்டு இணைந்தார். அதற்கு முன்னதாக 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கும்போது டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணியில் இடம் பிடித்திருந்தார்.






