என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RCB"

    • 18-வது சீசனில் ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது விதியால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்று நான் நினைக்கிறேன்.
    • அந்த அணிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் முதல் அணியாக ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து 2-வது இடத்தில் குஜராத் அணியும் 3-வது இடத்தில் டெல்லியும் அணியும் இடம் பிடித்தது.

    இதனையடுத்து இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதும் அணி யார் என்பது நாளை தெரியும். எலிமினேட்டர் சுற்றில் குஜராத்- டெல்லி அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி 5-ந் தேதி ஆர்சிபி அணியுடன் மோதும்.

    முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி அணி 2-வது முறையாக பட்டம் வெல்ல ஆவலுடன் உள்ளது. 3 சீசன்களில் ஆர்சிபி அணி ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றது.

    ஆனால் ஆடவர் ஆர்சிபி அணி 18 சீசனில் தனது முதல் பட்டத்தை வென்றது அற்புதமான உணர்வு என மகளிர் ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    18-வது சீசனில் ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது விதியால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்று நான் நினைக்கிறேன். நான் இறுதிப் போட்டியில் அங்கிருந்தேன். அனைவரும் கொண்டாடியதைப் பார்ப்பது அற்புதமாக இருந்தது.

    எனக்கு ஆர்சிபி நிர்வாகத்தினரை நன்றாகத் தெரியும். அவர்களின் கண்களில் கண்ணீரைக் கண்டேன். பதினெட்டு ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காத்திருப்பு. ஆனால் அது என் கண் முன்னே நடந்ததைப் பார்ப்பது ஒரு அற்புதமான உணர்வு. அந்த அணிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என மந்தனா கூறினார்.

    • ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் பலி.
    • கூட்ட நெரிசல், ரசிகர்கள் பாதுகாப்பு அச்சம் தொடர்பாக சின்னசாமி மைதானத்தில் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB). இந்த அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.

    கடந்த வருடம் முதன்முறையாக ஆர்.சி.பி. அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வருடம் ஆர்சிபி அணிக்கு சின்னசாமி மைதானம் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் ரசிகர்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக மைதானத்தில் 300 முதல் 350 ஏஐ கேமராக்கள் பொருத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஆர்சிபி அணி முறையாக பரிந்துரை செய்துள்ளது. இதற்கான செலவு 4.5 கோடி ரூபாயை தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

    ஆனால் போக்குவரத்து நெரிசல், ரசிகர்கள் பாதுகாப்பு ஆகிவற்றின் காரணமாக இந்த முறை போட்டியை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்குமா? என்பது கேள்விக்குறியாக இருந்தது.

    இந்த நிலையில் 2026 ஐ.பி.எல். கிரிக்கெட் பேட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், கர்நாடக மாநில அரசிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சர்வதேச போட்டிகளை நடத்தவும் அனுமதி பெற்றுள்ளது.

    • சின்னசாமி மைதானம் ஆர்சிபி-யின் சொந்த மைதானமாக திகழ்கிறது.
    • கடந்த ஆண்டு வெற்றி கொண்டாட்ட நிகழ்வின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB). இந்த அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.

    கடந்த வருடம் முதன்முறையாக ஆர்.சி.பி. அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வருடம் ஆர்சிபி அணிக்கு சின்னசாமி மைதானம் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் ரசிகர்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக மைதானத்தில் 300 முதல் 350 ஏஐ கேமராக்கள் பொருத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஆர்சிபி அணி முறையாக பரிந்துரை செய்துள்ளது. இதற்கான செலவு 4.5 கோடி ரூபாயை தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

    ஆனால் போக்குவரத்து நெரிசல், ரசிகர்கள் பாதுகாப்பு ஆகிவற்றின் காரணமாக இந்த முறை போட்டியை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்குமா? என்பது சந்தேகம்தான்...

    ஏஐ கேமராக்கள் மூலம் ரசிகர்கள் ஒரு இடத்தில் அதிகமாக கூட இருப்பதை அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு கூட்ட நெரிசலை தடுக்க முடியும் என்பதால் ஆர்சிபி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

    • பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் ஜனவரி 9-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
    • இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.

    4-வது பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் ஜனவரி 9-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. முதல் மூன்று சீசன்கள் முறையே மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் கோப்பையை வென்றுள்ளது.

    இந்த தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, யூ.பி. வாரியர்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்கு தலா 2 முறை மோத வேண்டும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான புதிய ஜெர்சியை ஆர்சிபி அணி வெளியிட்டுள்ளது. இந்த ஜெர்சியை அந்த அணியின் வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீல் அறிமுகப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்களை ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
    • கேமரூன் கிரீனை 25.20 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

    அபுதாபி:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.

    இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த வெங்கடேஷ் அய்யரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.7 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இவர் கடந்த ஆண்டு 23.75 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜஸ்தான் அணியின் 65 சதவீத பங்குகளை ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமம் வைத்துள்ளது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் விற்பனை தொடர்பாக அந்த அணி நிர்வாகம் எந்த அதிகாரப்பூர்வமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.

    மும்பை:

    19-வது ஐ.பி.எல் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 15-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கிடையே நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விற்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த அணியை வின்பனை செய்ய இருப்பதை அதன் உரிமையாளரான டியாஜியோ உறுதிப்படுத்தினார்.

    இந்த நிலையில் பெங்களூரு அணியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராஜஸ்தான் அணியின் 65 சதவீத பங்குகளை ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமம் வைத்துள்ளது.

    இது தொடர்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சகோதரரான ஹர்ஷா கோயங்கா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணியை தொடர்ந்து மேலும் ஒரு அணி விற்பனைக்கு வர உள்ளதாக கேள்விப்பட்டேன். அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆகும். எனவே விற்பனைக்கு 2 அணிகள் உள்ளன. அதை வாங்குவது புனே, அகமதாபாத், மும்பை, பெங்களூரு அல்லது அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா? என்று தெரிவித்து உள்ளார்.

    ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் விற்பனை தொடர்பாக அந்த அணி நிர்வாகம் எந்த அதிகாரப்பூர்வமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    • RCB அணியின் மதிப்பு சுமார் ரூ.17,762 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமானமும் அதானி குழுமமும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும் ஆர்சிபி அணியை வாங்க முன்வந்துள்ளது.

    அதாவது பிற நிறுவனங்களுடன் இணைந்து ஆர்சிபி அணியை வாங்கி இணை உரிமையாளராக மாற ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லிவிங்ஸ்டோன், முசாரபானி, லுங்கி நிகிடியை ரிலீஸ் செய்துள்ளது.
    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முகமது ஷமி, வியான் முல்டர், அபிநவ் மனோகர், ஆடம் ஜம்பா ரிலீஸ் செய்துள்ளது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று மாலை வரை கெடு விடுவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் பட்டியலை விடுவித்து வருகிறது.

    அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லிவிங்ஸ்டோன், முசாரபானி, லுங்கி நிகிடி, டிம் ஷெய்பெர்ட், மயங்க் அகர்வால், ஸ்வாஸ்டிக் சிகாரா ஆகியோரை விடுவித்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குர்னால் சிங் ரதோர், தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா, பரூக்கி, ஆகாஷ் அத்வால், ஆஷோக் சர்மா, குமார் கார்த்திக்கேயா, சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா ஆகியோரை விடுவித்துள்ளது.

    டேல்லி கேப்பிட்டல்ஸ் "ஜேக் பிராசர்-மெக்கர்க், டு பிளிஸ்சிஸ், டொனோவன் பெரேரியா, செதிகுல்லா அடல், மன்வான்த் குமார், தர்ஷன் நல்கண்டே ஆகியோரை வெளியேற்றியுள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முகமது ஷமி, வியான் முல்டர், அபிநவ் மனோகர், ஆடம் ஜம்பா, ராகுல் சாகர் ஆகியோரை வெளியேற்றியுள்ளது.

    • பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலியானார்கள்.
    • அடுத்த ஆண்டு நடைபெறும் (2026) போட்டிக்கான உள்ளூர் மைதானமாக பெங்களூரு இருக்கிறது.

    மும்பை:

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக இந்த சீசனில் (2025) ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.

    வெற்றிக் கொண்டாட்ட பேரணியின் போது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டியை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    அடுத்த ஆண்டு நடைபெறும் (2026) போட்டிக்கான உள்ளூர் மைதானமாக பெங்களூரு இருக்கிறது. ஆர்.சி.பி. அணி நிர்வாகம் திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், தர்மசாலா, நவி மும்பை, புனே, கான்பூர் ஆகிய 6 மைதானங்களில் ஒன்றை தேர்வு செய்யலாம் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.

    இந்த நிலையில் ஆர்.சி.பி. போட்டிகளை நடத்த புனே மைதானம் விருப்பத்துடன் இருப்பதாக மராட்டிய கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

    • தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கெதிராக முதல் போட்டியில் விளையாடும்போது காயம்.
    • ஐ.பி.எல். போட்டிக்கு முன்னதாக தயாராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் டி20 லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் இருந்து வருகிறார். இவர் தலைமையில் 2025-ல் ஆர்.சி.பி. அணி முதன்முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.

    மிடில் ஆர்டர் வரிசை பேட்ஸ்மேனான இவர் ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்தியா 'ஏ'- தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டிக்கான இந்தியா 'ஏ' அணியில் ரஜத் படிதார் இடம் பிடித்திருந்தார்.

    முதல் போட்டியில் விளையாடும்போது, ரஜத் படிதாருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய சுமார் 4 மாதங்களாகும் எனத் தெரிகிறது. இதனால் வரவிருக்கின்ற ரஞ்சி போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2026 ஐ.பி.எல். லீக் தொடர் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் தொடங்கும். அதற்கு தயாராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது.
    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ஆர்.பி.சி. அணியை நிர்வகித்து வருகிறது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



    விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில் ஆர்.சி.பி. அணியை விற்க நிர்வாகம் எடுத்துள்ள முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    • ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
    • கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.

    இதனை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சிறப்பாக கொண்டாட அணி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து சின்னசாமி மைதானம் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து பிரிட்டனின் Diageo குழுமத்திற்கு சொந்தமான ஆர்சிபி அணியை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக |(ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகினது. கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து அந்த குழுமம் அணியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில் ஆர்சிபி அணியை வாங்க உள்நாட்டில் 4 நிறுவனங்களும் வெளிநாடுகளில் 2 நிறுவங்களும் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த வகையில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமானமும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது. அதேபோல அதானி குழுமமும் ஆர்வமாக உள்ளது.

    மேலும் பார்த் ஜிண்டால் (ஜே.எஸ்.டபிள்யூ குழுமம்), டெல்லியைச் சேர்ந்த பல துறை நலன்களைக் கொண்ட கோடீஸ்வரர்,

    அமெரிக்காவை தளமாகக் கொண்ட இரண்டு தனியார் பங்கு நிறுவனங்கள் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது.

    ஆர்சிபி அணியின் முதல் தலைவராக மல்லையா இருந்தார். அதனை தொடர்ந்து Diageo குழுமம் இந்த அணியை வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

    ×