என் மலர்
நீங்கள் தேடியது "WPL"
- சதம் விளாசிய அவர் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- 9 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.
பெண்கள் பிரீமியர் லீக் 2026 சீசனில் வதோதராவில் நடைபெற போட்டியில் ஆர்சிபி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ், சஜீவன் சஜனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். சஜனா 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து மேத்யூஸ் உடன் நாட் ஸ்கைவர்-பிரன்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேத்யூஸ் 39 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் விளையாடிய நாட் ஸ்கைவர்-பிரன்ட் அபாரமாக விளையாடி 57 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் பெண்களுக்கான பிரீமியர் லீக்கில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். இவர் இங்கிலாந்து வீராங்கனை ஆவார்.
சதம் விளாசிய அவர் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது சதத்தால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.
200 என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. ஸ்மிருதி மந்தனா 18 ரன்களில் அவுட் ஆக, ரிச்சா கோஷ் தனி ஆளாகப் போராடி 50 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் ஆர்சிபி அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எட்ட முடிந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் போராடி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவி உள்ளது.
- 32 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்திருந்தார்.
- அடுத்த 25 பந்தில் சதத்தை தொட்டார்.
பெண்கள் பிரீமியர் லீக் 2026 சீசனில் வதோதராவில் நடைபெற்று வரும் போட்டியில் ஆர்சிபி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ், சஜீவன் சஜனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். சஜனா 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து மேத்யூஸ் உடன் நாட் ஸ்கைவர்-பிரன்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேத்யூஸ் 39 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் விளையாடிய நாட் ஸ்கைவர்-பிரன்ட் அபாரமாக விளையாடி 57 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் பெண்களுக்கான பிரீமியர் லீக்கில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இவர் இங்கிலாந்து வீராங்கனை ஆவார்.
சதம் விளாசிய அவர் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது சதத்தால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்துள்ளது.
நாட் ஸ்கைவர்-பிரன்ட் 32 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்திருந்தார். மும்பை இந்தியன்ஸ் 7.1 ஓவரில் 50 ரன்னையும், 11.4 ஓவரில் 100 ரன்களையும், 15 ஓவரில் 150 ரன்களையும் தொட்டது.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.
- இன்னும் 3 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது.
பெண்களுக்கான பிரீமியர் லீக் டி20 நடைபெற்று வரும் நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இரண்டு வீராங்கனைகள் காயத்தால் விலகியுள்ளனர்.
பேட்டர் தியா யாதவ், விக்கெட் கீப்பர் மமதா மதிவாலா ஆகியோர் காயத்தால் விலகியுள்ளனர். பிரகதி சிங் மற்றும் எட்லா ஸ்ருஜனா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரையும் தலா 10 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
டெல்லி அணி 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. நாளை ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. 27-ந்தேதி குஜராத் அணியையும், பிப்ரவரி 1-ந்தேதி உ.பி. வாரியர்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது.
- உ.பி. வாரியர்ஸ் அணி கேப்டன் மெக் லேனிங் 70 ரன்கள் விளாசினார்.
- லிட்ச்பீல்டு 37 பந்தில் 61 ரன்கள் சேர்த்தார்.
பெண்களுக்கான பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம் நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையான கேப்டன் மெக் லேனிங் 45 பந்தில் 70 ரன்கள் விளாசினார். லிட்ச்பீல்டு 37 பந்தில் 61 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது. மும்பை வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
6-வது வீரராக களம் இறங்கிய அமெலியா கெர், அதன்பின் வந்த அமான்ஜோத் கவுர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். என்றாலும் கவுர் 24 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கெர் ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 49 ரன்கள் எடுத்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணியால் 165 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதனால் உ.பி. வாரியர்ஸ் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 70 ரன்கள் விளாசிய மெக் லேனிங் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றார். தற்போது மும்பை 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. உ.பி. வாரியர்ஸ் அணியும் 5-ல் 2-ல் வெற்றி பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
- நிகோலா கேரி ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.
- ஆர்.சி.பி. அணியின் நடின் டி கிளார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 4-வது சீசன் இன்று நவி மும்பையில் தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற ஆர்.சி.பி. பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனை அமெலியா கெர் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜி. கமாலினி 28 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.
சஜீவன் சஜனா 25 பந்தில் 45 ரன்கள் அடித்தார். நிகோலா கேரி ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 40 ரன்கள் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்.சி.பி. அணியின் நடின் டி கிளார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்.சி.பி. பேட்டிங் செய்து வருகிறது.
- டெல்லி அணியை 3 முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
- உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் 7 முறை இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவில் நடத்தப்படும் பெண்கள் பிரீமியர் லீக்கில் உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் 7 முறை இடம் பிடித்துள்ளார். இரண்டு முறை ஒருநாள் மற்றும் ஐந்து முறை டி20 உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்துள்ளார்.
இவரை உ.பி. வாரியர்ஸ் ஏலத்தில் 1.9 கோடி ரூபாய்க்கு எடுத்தது. உ.பி. வாரியர்ஸ் அறிமுக சீசனான 2023-ல் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடம் பிடித்து. 2024-ல் 4-வது இடமும், 2025-ல் 5-வது இடமும் பிடித்தது.
மெக் லேனிங் இதற்கு முன்னதாக மூன்று சீசனிலும் டெல்லி அணியின் கேப்டனாக இருந்தார். மூன்று முறையில் டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது. மூன்று முறையும் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
WPL தனது நான்காவது சீசனைத் தொடங்கும்போது, இந்த லீக் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள விதம், கிரிக்கெட்டின் தரம், போட்டித்தன்மை மற்றும் அற்புதமான புதிய வீராங்கனைகளின் திறமைகளின் எழுச்சி ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் தரத்தை உயர்த்தி வருவது பார்ப்பதற்கு நம்பமுடியாத வகையில் உள்ளது என மெக் லேனிங் தெரிவித்துள்ளார்.
பெண்கள் பிரீமியர் லீக் நவி மும்பையில் 9-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையிலும், வதோதராவில் ஜனவரி 19-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.
- பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் ஜனவரி 9-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
- இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
4-வது பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் ஜனவரி 9-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. முதல் மூன்று சீசன்கள் முறையே மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் கோப்பையை வென்றுள்ளது.
இந்த தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, யூ.பி. வாரியர்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்கு தலா 2 முறை மோத வேண்டும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான புதிய ஜெர்சியை ஆர்சிபி அணி வெளியிட்டுள்ளது. இந்த ஜெர்சியை அந்த அணியின் வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீல் அறிமுகப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்களை ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- 28 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி 22 ஆட்டங்களை கொண்டது.
- நவி மும்பையில் உள்ள டி.ஒய். படேல் ஸ்டேடியத்தில் தொடக்க போட்டி நடக்கிறது.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் டபிள்யூ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் 2 முறையும் (2023, 2025), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு தடவையும் (2024) சாம்பியன் பட்டம் பெற்றன.
4-வது மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று வெளியிட்டது. அதன்படி இந்தப் போட்டி ஜனவரி 9-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 5-ந் தேதி வரை நடக்கிறது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர் கொள்கிறது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். படேல் ஸ்டேடியத்தில் தொடக்க போட்டி நடக்கிறது.

நவிமும்பை, வதோதரா ஆகிய 2 இடங்களில் போட்டி நடக்கிறது. எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டி வதோதராவில் நடக்கிறது. 28 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி 22 ஆட்டங்களை கொண்டது.

- இந்தியாவின் தீப்தி சர்மாவை ரூ.3.20 கோடிக்கு உபி வாரியர்ஸ் எடுத்துள்ளது.
- நியூசிலாந்தின் அமெலியா கெரை ரூ.3 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் எடுத்தது.
புதுடெல்லி:
4-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அதிக விலை போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிகபட்சமாக விலை போன டாப் 5 வீராங்கனைகள் விவரம் வருமாறு:
தீப்தி சர்மா: ரூ.3.20 கோடி- உபி வாரியர்ஸ்
அமெலியா கெர்: ரூ.3 கோடி-மும்பை இந்தியன்ஸ்
ஷிகா பாண்டே: ரூ.2.40 கோடி-உபி வாரியர்ஸ்
சோபி டிவைன்: ரூ.2 கோடி- குஜராத் ஜெயண்ட்ஸ்
மெக் லானிங்: ரூ.1.9 கோடி - உபி வாரியர்ஸ்
- மகளிர் பிரிமீயர் லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி தொடங்குகிறது.
- இந்த தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடக்கவுள்ளது.
புதுடெல்லி:
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இந்த தொடருக்கான தேதி மற்றும் போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி மகளிர் பிரிமீயர் லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 5-வரை நடைபெறுகிறது. இந்த தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடக்கவுள்ளது.
எப்போதும் பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதத்தில் முடியும் இந்த தொடர் இந்த முறையில் ஜனவரியில் தொடங்கி பிப்ரவரியில் முடிகிறது. பிப்ரவரி 7-ந் தேதி ஆண்களுக்கான உலக கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளதால் இந்த மாற்றம் நடந்துள்ளது.
தொடக்கப் போட்டி நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானம் நடைபெறுவதாகவும் இறுதிப்போட்டி வதோதராவில் உள்ள BCA மைதானத்தில் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
- ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.15 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு டெல்லியில் நடக்கிறது.
ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து 23 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 73 பேர் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள். ஒரு அணியில் குறைந்தது 15, அதிகபட்சமாக 18 வீராங்கனைகள் இருக்கலாம்.
ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.15 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தக்கவைத்த வீராங்கனைகளுக்கான ஊதியம் கழிக்கப்படும். ஒரு வீராங்கனையை மட்டுமே தக்க வைத்த உ.பி. வாரியர்சிடம் அதிகபட்சமாக 14½ கோடி கையிருப்பு உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.5.70 கோடி, குஜராத் ஜெயன்ட்ஸ் 9 கோடி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ரூ.5¾ கோடி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரூ.6.15 கோடி இருப்பு வைத்துள்ளன.
ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர்நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென்ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அதிக விலை போக வாய்ப்புள்ளது. தீப்தி ஷர்மாவின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தக்க வைத்த வீராங்கனைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு அணிக்கும் சிறப்பு சலுகையாக ஆர்.டி.எம். கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஏலத்தில், தங்களது முந்தைய அணியில் ஆடிய வீராங்கனைகளை வாங்குவதற்கு ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தும் போது முன்னுரிமை அளிக்கப்படும். உ.பி. வாரியர்ஸ் அதிகபட்சமாக 4 ஆர்.டி.எம். கார்டு வைத்துள்ளது. 5 வீராங்கனைகளை முழுமையாக வைத்துக்கொண்ட டெல்லி, மும்பை அணிகளுக்கு ஆர்.டி.எம். இல்லை.
- மகளிர் ஐபிஎல் வரலாற்றின் முதல் 'மெகா ஏலம்' வரும் நவம்பர் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
- டெல்லி அணி தொடர்ச்சியாக மூன்று சீசன்களிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் கடந்த 2023-ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டது. இதன் 3-வது சீசன் இந்த வருடம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதனையடுத்து 4-வது சீசன் அடுத்த வருடம் (2026) நடைபெற உள்ளது. 2023-ம் ஆண்டுக்கான ஏலம் துபாயிலும், 2024-ம் ஆண்டுக்கான ஏலம் ஜெட்டாவிலும் நடைபெற்றன. இந்த ஆண்டும் வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ஏலம் நடக்கலாம் என முதலில் செய்திகள் வெளியாகிய நிலையில் மகளிர் ஐபிஎல் வரலாற்றின் முதல் 'மெகா ஏலம்' வரும் நவம்பர் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக அணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் நிர்வாகங்கள் இறங்கியுள்ளன. அந்த வகையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த லானிங்கை ஏலத்திற்கு முன்பு கழற்றி விட்டது. அவர் டெல்லி அணியை தொடர்ச்சியாக மூன்று இறுதிப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் 3 முறையும் அந்த அணி தோல்வியையே தழுவியது குறிப்பிடத்தக்கது.






