search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WPL"

    • அவரால் தான் நான் கிரிக்கெட்டை பார்க்க ஆரம்பித்தான்.
    • அவரைப் போல் ஆக வேண்டும் என்ற கனவுடன் தான் வளர்ந்தேன்.

    இந்தியாவில் நடைபெற்ற 2-வது சீசன் மகளிர் பிரீமியர் லீக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்று டபிள்யூபிஎல் தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்று சாதித்துள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோஃபி மோலினக்ஸ் ஆட்டநாயகி விருதையும், தொடர் முழுவதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி சர்மா தொடர் நாயகி விருதையும் வென்றனர்.

    அதிக ரன்களை அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீராங்கனை எல்லிஸ் பெர்ரியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பர்பிள் தொப்பியை ஆர்சிபி அணியின் ஷ்ரேயங்கா பாட்டிலும் கைப்பற்றினார்.

    இதையடுத்து கோப்பையை வென்ற ஆர்சிபி மகளிர் அணிக்கு அந்த அணி நிர்வாகம் சார்பில் நேற்று பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் ஆடவர், மகளிர் ஆர்சிபி அணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆடவர் அணி வீரர்கள் கோப்பையை வென்ற மகளிர் அணி வீராங்கனைகளுக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஷ்ரேயங்கா பாட்டில் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, என் வாழ்க்கையின் சிறந்த தருணம் என பதிவுசெய்துள்ளார்.

    இதுகுறித்து ஷ்ரேயங்கா பாட்டில் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

    அவரால் தான் நான் கிரிக்கெட்டை பார்க்க ஆரம்பித்தான். அவரைப் போல் ஆக வேண்டும் என்ற கனவுடன் தான் வளர்ந்தேன். நேற்று இரவு, என் வாழ்வின் மிகசிறப்பு வாய்ந்த தருணம். விராட் கோலி என்னை நோக்கி, "ஹாய் ஷ்ரேயங்கா, நன்றாக பந்துவீசினாய்" என்றார். உண்மையில் அவருக்கு என் பெயர் தெரிந்துள்ளது.

    என அவர் கூறினார்.

    இப்பதிவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
    • டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது.

    புதுடெல்லி:

    2-வது மகளிர் பிரீமியர் 'லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது.

    பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    பெங்களூரு அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்து. கோப்பையை வென்றது. டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த தடவை மும்பையிடம் தோற்று இருந்தது.

    இந்நிலையில் கோப்பை வென்ற ஆர்சிபி அணி சமூக வலைதளங்களில் புதிய சாதனையை படைத்துள்ளது. அது என்னவென்றால் சாம்பியன் கோப்பையுடன் அணி வீராங்கனைகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட 9 நிமிடங்களில் 10 லட்சம் லைக்குகளை குவித்தது.

    இதன்மூலம் இந்தியாவிலேயே மிகக்குறைந்த நேரத்தில் அதிக லைக்குகள் பெற்ற புகைப்படம் என்ற புதிய சாதனையை பெற்றுள்ளது.

    • இந்த கோப்பையை அணியாக சேர்ந்து நாங்கள் வென்றுள்ளோம்.
    • வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று மந்தனா கூறி உள்ளார்.

    புதுடெல்லி:

    2-வது மகளிர் பிரீமியர் 'லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. இதனால் பெங்களூரு அணிக்கு 114 ரன் இலக்காக இருந்தது.

    ஷபாலி வர்மா அதிகபட்சமாக 27 பந்தில் 44 ரன் எடுத்தார். ஸ்ரேயங்கா பட் டேல் 4 விக்கெட்டும், மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட் டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    எலிஸ்பெரி 35 ரன்னும் (அவுட் இல்லை), கேப்டன் ஸ்மிருதி மந்தனா 31 ரன்னும், சோபி டேவின் 32 ரன்னும் எடுத்தனர். சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடத்தை பிடித்த டெல்லி அணிக்கு ரூ.3 கோடியும் கிடைத்தன.

    பெங்களூரு அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்து. கோப்பையை வென்றது. டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த தடவை மும்பையிடம் தோற்று இருந்தது.

    ஐ.பி.எஸ். போட்டியில் விராட் கோலியை கொண்ட ஆர்.சி.பி. அணி இதுவரை கோப்பையை வென்றது இல்லை. 16 ஆண்டுகளில் 3 தடவை இறுதிப் போட்டியில் தோற்றது.

    ஆனால் பெண்கள் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றியது.

    கோப்பையை வென்றதால் பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மகிழ்ச்சி அடைந்துள்ளார். வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று அவர் கூறி உள்ளார்.

    இந்த தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். டெல்லியில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினோம். அது சரியான நேரத்தில் நாங்கள் மீண்டு வர உதவியது. இது மாதிரியான தொடர்களில் அதுதான் மிகவும் முக்கியம். கடந்த ஆண்டு நாங்கள் நிறைய பாடம் கற்றோம்.

    அணியை நாங்கள்தான் கட்டமைக்க வேண்டும் என நிர்வாகம் தெரிவித்தது. இந்த கோப்பையை அணியாக சேர்ந்து நாங்கள் வென்றுள்ளோம். இந்த நேரத்தில் அணியின் அன்பான ரசிகர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். 'ஈ சாலா கப் நம்தே' என சொல்வது உண்டு. இப்போது கோப்பை நமது வசம் (ஈ சாலா கப் நம்து)

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோப்பையை வென்ற பெங்களூரு அணிக்கு விராட் கோலி வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

    • இறுதி போட்டிக்கு வந்ததற்காக 2 அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.
    • நீங்கள் விளையாடும் ஒவ்வொரு பந்தையும் நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.

    மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. மகளிர் ஐபிஎல் தொடரில் இம்முறை புதிய சாம்பியனாக சாதனை படைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லுமாறு மகளிர் ஆர்சிபி அணிக்கு ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இன்று நடைபெறும் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 2 பவரான அணிகள் மோதுகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

    அதைப் பார்ப்பதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை. இறுதி போட்டிக்கு வந்ததற்காக 2 அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். தனி நபராகவும் அணியாகவும் சேர்ந்து இத்தொடரில் அசத்திய இந்த இரண்டு அணிகளும் இறுதிபோட்டிக்கு வருவதற்கு தகுதியானவர்கள்.

    ஆர்சிபி அணிக்காக ஒரு சிறப்பு ஆதரவு தருகிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். கோப்பையை வீட்டுக்கு கொண்டு வந்து இந்த மாதத்தின் பிற்பகுதியில் துவங்கும் ஐபிஎல் தொடரில் ஆடவர் ஆர்சிபி அணிக்கு உத்வேகத்தை கொடுங்கள்.

    வாழ்த்துக்கள் நண்பர்களே. நீங்கள் விளையாடும் ஒவ்வொரு பந்தையும் நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.

    என்று டிவில்லியர்ஸ் கூறினார்.

    முன்னதாக மகளிர் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி அணியிடம் பெங்களூரு தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.
    • ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவடு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஷஃபாலி வர்மா மற்றும் ஜெஸ் ஜோனசனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் மகளிர் பிரீலிக் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 194 ரன்களைச் சேர்த்து அசத்தியது.

    இதையடுத்து ஆடிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தனது முதல் அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

    இந்நிலையில், இப்போட்டியின் போது ஆர்சிபி வீராங்கனை ஜார்ஜியா வேர்ஹாம் சிக்சரை தடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டெல்லி வீராங்கனை ஷஃபாலி வர்மா சிக்சர் அடிக்கும் முயற்சியில் பந்தை விளாசினார். அப்பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜார்ஜியா வேர்ஹாம் லாவகமாக தாவி பந்தை பிடித்து தரையை தொடுவதற்கு முன் அதனை மைதானத்திற்குள்ளும் தள்ளிவிட்டார். இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைத்தட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.

    முன்னதாக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கா விளையாடி வந்த ஏபிடி வில்லியர்ஸ் இதே போன்று ஒரு பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். அந்த காலத்தில் அவரை ஸ்பைடர் மேன் என நெட்டிசன்கள் புகழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் வேர்ஹாம் - டி வில்லியர்ஸ் இருவரும் ஒரே பாணியில் பந்தை தடுக்கும் புகைப்படத்தையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

    • முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • டெல்லி அணியின் ராதா யாதவ் 4 விக்கெட்டும், மேரிஜான் காப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்துவருகிறது. இதில் மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், உ.பி. வாரியர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இந்நிலையில், நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்வேதா ஷிவ்ராட் 45 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 14.3 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து, அபார வெற்றிபெற்றது. ஷிபாலி வர்மா 64 ரன்னும், மேக் லேனிங் 51 ரன்னும் குவித்தனர்.

    சிறப்பாக பந்துவீசிய டெல்லி அணியின் மேரிஜான் காப் ஆட்ட நாயகி விருது பெற்றார்.

    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.
    • குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அபார வெற்றிபெற்றது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    பெங்களூருவில் நேற்று நடந்த 3-வது லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.

    மும்பை சார்பில் அமெலியா கெர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. மும்பை அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.

    4 விக்கெட் வீழ்த்திய அமெலியா கெர் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

    • நிகழ்ச்சியில் ஷாருக் கான் கலந்து கொள்வது உறுதியானது.
    • மகளிர் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் விரைவில் துவங்க இருக்கும் மகளிர் கிரிக்கெட் லீக் தொடரில் பாலிவுட் திரை நட்சித்திரம் ஷாருக் கான் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் துவக்க நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.

    நாளை (பிப்ரவரி 23) மாலை 6.30 மணிக்கு இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பெங்களூருவில் உள்ள எம்.ஏ. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஷாருக் கான் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது.

     


    ஷாருக் கான் மட்டுமின்றி ஷாஹித் கபூர், கார்திக் ஆர்யன், வருண் தவான், டைகர் ஷெராஃப் உள்ளிட்ட பிரபலங்களும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதி போட்டியில் மோதிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாட உள்ளன. மகளிர் பிரீமியர் லீக் தொடர் நாளை துவங்கி மார்ச் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    • ஆண்கள் ஐபிஎல் முதல் சீசனின் இறுதி போட்டியில் நடந்தது போலவே தற்போது மகளிர் பிரீமியர் லீக்கிலும் நடந்துள்ளது.
    • ஐபிஎல் தொடரின் முதல் சீசசின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நாளையுடன் முடிவடைகிறது. பரபரப்பாக சென்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    அன்று ஆண்கள் ஐபிஎல் முதல் சீசனின் இறுதி போட்டியில் நடந்தது போலவே தற்போது மகளிர் பிரீமியர் லீக்கிலும் நடந்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் முதல் சீசசின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி கடைசிப் பந்து வரை சென்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை வென்று கோப்பையை வென்றது.

    இதே போன்று மகளிர் பிரீமியர் லீக்கில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மெக் லேனிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

    ஆண்கள் ஐபிஎல் முதல் சீசனை வைத்து பார்க்கும் போது ஆஸ்திரேலிய அணியின் மெக் லேனிங் தலைமையிலான அணி வெற்றி பெறுமா? அல்லது இந்திய கேப்டன் கவுர் தலைமையிலான அணி முடிவை மாற்றி அமைக்குமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

    • முதலில் ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.
    • உ.பி.வாரியர்ஸ் அணியில் அதிரடியாக ஆடிய மெக்ராத் 57 ரன்னிலும், ஹாரிஸ் 72 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலாவது ஆட்டத்தில் குஜராத் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய கார்ட்னர் 39 பந்தில் 60 ரன்னும், ஹேமலதா 33 பந்தில் 57 ரன்னும் விளாசினர்.

    இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. அணியின் துவக்க வீராங்கனைகள் விரைவில் அவுட் ஆகினர். தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அசத்தினர். மெக்ராத் 57 ரன்னிலும், ஹாரிஸ் 72 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இறுதியில் உ.பி.வாரியர்ஸ் அணி ஒரு பந்து மீதமிருந்த நிலையில், 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. மும்பை மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. தற்போது 3வது அணியாக உ.பி.வாரியர்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    • சர்வதேச மகளிர் தினத்தன்று மகளிர் பிரீமியர் லீக் போட்டியை இலவசமாக காணலாம்.
    • இத்தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 4-ம் தேதி தொடங்கிய இத்தொடர் வரும் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெறும் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையிலான போட்டியை பெண்கள், சிறுமிகள் மற்றும் ஆண்கள் உள்பட அனைவரும் இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக்கின் அதிகாரபூர்வ டுவிட்டரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    ஏற்கனவே, மகளிர் கிரிக்கெட் தொடரில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளையும் பெண்கள், சிறுமிகள் இலவசமாக பார்க்கலாம் என பிசிசிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 207 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 65 ரன்கள் குவித்தார்.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார்.

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே மும்பை இந்தியன்ஸ்

    பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. எந்த வீராங்கனையும் ஒற்றை இலக்கை ரன்னை தாண்டவில்லை. 4 பேர் டக் அவுட் ஆனார்கள். 23 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி திணறியது.

    அந்த அணியின் தயாளன் ஹேமலதா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய மோனிகா படேலும் இரட்டை இலக்கை எட்டினார்.

    இறுதியில், குஜராத் அணி 64 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. ஹேமலதா 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    மும்பை இந்தியன்ஸ் சார்பில் சைகா இஷாக் 4 விக்கெட்டும், நட் சிவர் பிரண்ட், அமீலியா கெர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதன்மூலம், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முத்திரை பதித்து 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ×