என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WPL"

    • 28 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி 22 ஆட்டங்களை கொண்டது.
    • நவி மும்பையில் உள்ள டி.ஒய். படேல் ஸ்டேடியத்தில் தொடக்க போட்டி நடக்கிறது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் டபிள்யூ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

    5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் 2 முறையும் (2023, 2025), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு தடவையும் (2024) சாம்பியன் பட்டம் பெற்றன.

    4-வது மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று வெளியிட்டது. அதன்படி இந்தப் போட்டி ஜனவரி 9-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 5-ந் தேதி வரை நடக்கிறது.

    முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர் கொள்கிறது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். படேல் ஸ்டேடியத்தில் தொடக்க போட்டி நடக்கிறது. 

    நவிமும்பை, வதோதரா ஆகிய 2 இடங்களில் போட்டி நடக்கிறது. எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டி வதோதராவில் நடக்கிறது. 28 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி 22 ஆட்டங்களை கொண்டது.

     

    • இந்தியாவின் தீப்தி சர்மாவை ரூ.3.20 கோடிக்கு உபி வாரியர்ஸ் எடுத்துள்ளது.
    • நியூசிலாந்தின் அமெலியா கெரை ரூ.3 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் எடுத்தது.

    புதுடெல்லி:

    4-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று டெல்லியில் நடைபெற்றது.

    ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அதிக விலை போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிகபட்சமாக விலை போன டாப் 5 வீராங்கனைகள் விவரம் வருமாறு:

    தீப்தி சர்மா: ரூ.3.20 கோடி- உபி வாரியர்ஸ்

    அமெலியா கெர்: ரூ.3 கோடி-மும்பை இந்தியன்ஸ்

    ஷிகா பாண்டே: ரூ.2.40 கோடி-உபி வாரியர்ஸ்

    சோபி டிவைன்: ரூ.2 கோடி- குஜராத் ஜெயண்ட்ஸ்

    மெக் லானிங்: ரூ.1.9 கோடி - உபி வாரியர்ஸ்

    • மகளிர் பிரிமீயர் லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்த தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடக்கவுள்ளது.

    புதுடெல்லி:

    5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இந்த தொடருக்கான தேதி மற்றும் போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அதன்படி மகளிர் பிரிமீயர் லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 5-வரை நடைபெறுகிறது. இந்த தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடக்கவுள்ளது.

    எப்போதும் பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதத்தில் முடியும் இந்த தொடர் இந்த முறையில் ஜனவரியில் தொடங்கி பிப்ரவரியில் முடிகிறது. பிப்ரவரி 7-ந் தேதி ஆண்களுக்கான உலக கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளதால் இந்த மாற்றம் நடந்துள்ளது.

    தொடக்கப் போட்டி நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானம் நடைபெறுவதாகவும் இறுதிப்போட்டி வதோதராவில் உள்ள BCA மைதானத்தில் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
    • ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.15 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு டெல்லியில் நடக்கிறது.

    ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து 23 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 73 பேர் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள். ஒரு அணியில் குறைந்தது 15, அதிகபட்சமாக 18 வீராங்கனைகள் இருக்கலாம்.

    ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.15 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தக்கவைத்த வீராங்கனைகளுக்கான ஊதியம் கழிக்கப்படும். ஒரு வீராங்கனையை மட்டுமே தக்க வைத்த உ.பி. வாரியர்சிடம் அதிகபட்சமாக 14½ கோடி கையிருப்பு உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.5.70 கோடி, குஜராத் ஜெயன்ட்ஸ் 9 கோடி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ரூ.5¾ கோடி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரூ.6.15 கோடி இருப்பு வைத்துள்ளன.

    ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர்நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென்ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அதிக விலை போக வாய்ப்புள்ளது. தீப்தி ஷர்மாவின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தக்க வைத்த வீராங்கனைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு அணிக்கும் சிறப்பு சலுகையாக ஆர்.டி.எம். கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஏலத்தில், தங்களது முந்தைய அணியில் ஆடிய வீராங்கனைகளை வாங்குவதற்கு ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தும் போது முன்னுரிமை அளிக்கப்படும். உ.பி. வாரியர்ஸ் அதிகபட்சமாக 4 ஆர்.டி.எம். கார்டு வைத்துள்ளது. 5 வீராங்கனைகளை முழுமையாக வைத்துக்கொண்ட டெல்லி, மும்பை அணிகளுக்கு ஆர்.டி.எம். இல்லை.

    • மகளிர் ஐபிஎல் வரலாற்றின் முதல் 'மெகா ஏலம்' வரும் நவம்பர் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
    • டெல்லி அணி தொடர்ச்சியாக மூன்று சீசன்களிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் கடந்த 2023-ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டது. இதன் 3-வது சீசன் இந்த வருடம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    இதனையடுத்து 4-வது சீசன் அடுத்த வருடம் (2026) நடைபெற உள்ளது. 2023-ம் ஆண்டுக்கான ஏலம் துபாயிலும், 2024-ம் ஆண்டுக்கான ஏலம் ஜெட்டாவிலும் நடைபெற்றன. இந்த ஆண்டும் வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ஏலம் நடக்கலாம் என முதலில் செய்திகள் வெளியாகிய நிலையில் மகளிர் ஐபிஎல் வரலாற்றின் முதல் 'மெகா ஏலம்' வரும் நவம்பர் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

    இதற்கு முன்னதாக அணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் நிர்வாகங்கள் இறங்கியுள்ளன. அந்த வகையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த லானிங்கை ஏலத்திற்கு முன்பு கழற்றி விட்டது. அவர் டெல்லி அணியை தொடர்ச்சியாக மூன்று இறுதிப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் 3 முறையும் அந்த அணி தோல்வியையே தழுவியது குறிப்பிடத்தக்கது. 

    • ஹெய்லி மேத்யூஸ் 3, யாஸ்திகா பாட்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் தடுமாறினர்.

    இதனால் ஹெய்லி மேத்யூஸ் 3, யாஸ்திகா பாட்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    அதிரடியாக விளையாடி கவுர் அரை சதம் அடித்து அசத்தினார். மந்தமாக விளையாடிய நாட் சிவெர் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அமெலியா கெர் 2, சஜனா 0 என அடுத்தடுத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து கவுர் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனஸ்சென், நல்லபுரெட்டி சரணி, மாரிசேன் காப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
    • டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. லீக் போட்டிகள் முடிவில் மும்பை, குஜராத், டெல்லி ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இதில் டெல்லி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெளியேற்றுதல் சுற்றில் குஜராத்தை வீழ்த்தி மும்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    • 2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற குறி வைத்துள்ளது.
    • மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது.

    லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 10 புள்ளி பெற்றாலும் ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 4-வது இடமும், உ.பி.வாரியர்ஸ் கடைசி இடமும் பெற்று நடையை கட்டின. நேற்று முன்தினம் இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் 47 ரன் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தி 2-வது அணியாக இறுதிப்போட்டியை எட்டியது.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறுகிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

    2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற குறி வைத்துள்ளது. அந்த அணியில் நட்சத்திர பட்டாளத்துக்கு குறைவில்லை. ரன் குவிப்பில் முதலிடம் வகிக்கும் நாட் சிவெர் (493 ரன்கள், 9 விக்கெட்), அதிக விக்கெட் வீழ்த்தியதில் முதலிடத்தில் இருக்கும் ஹெய்லி மேத்யூஸ் (17 விக்கெட், 304 ரன்) ஆகியோர் ஆல்-ரவுண்டராக அசத்தி மும்பை அணிக்கு வலுசேர்க்கிறார்கள். பேட்டிங்கில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், பந்து வீச்சில் அமெலியா கெர் (16 விக்கெட்), ஷப்னிம் இஸ்மாயிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'ஒரே மைதானத்தில் ஒரே ஆடுகளத்தில் தான் இறுதிப்போட்டியையும் விளையாடப் போகிறோம். கடந்த 4 நாட்களில் இங்கு 3 ஆட்டங்களில் விளையாடி உள்ளோம். இதனால் நிறைய விஷயங்களை புரிந்து கொண்டுள்ளோம். குறிப்பாக இங்குள்ள சூழல், ஆடுகளத்தன்மையை நன்கு அறிந்துள்ளோம். இதை எங்களுக்கு சாதகமான அம்சமாக பார்க்கிறேன்' என்றார்.

    மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. கடந்த 2 தடவையும் தோல்வியை சந்தித்த டெல்லி அணி 3-வது முயற்சியிலாவது கோப்பை ஏக்கத்தை தணிக்குமா? என்ற ஆவல் எழுந்துள்ளது.

    டெல்லி அணி பந்து வீச்சையே அதிகம் நம்பி இருக்கிறது. பேட்டிங்கில் ஷபாலி வர்மா (300 ரன்), மெக் லானிங்கும் (263 ரன்), பந்து வீச்சில் ஷிகா பாண்டே, அனபெல் சுதர்லாண்ட், மின்னு மணியும் நல்ல நிலையில் உள்ளனர். ஜோனஸ்சென் (137 ரன், 11 விக்கெட்) ஆல்-ரவுண்டராக ஜொலிக்கிறார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஜானே காப் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்காதது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அவர்களும் பார்முக்கு திரும்பினால், டெல்லி இன்னும் வலிமை அடையும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. அதில் மும்பை 3 ஆட்டங்களிலும், டெல்லி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. நடப்பு தொடரில் 2 ஆட்டங்களிலும் டெல்லி அணி வெற்றியை ருசித்து இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் உள்ளூர் சூழல் மும்பை அணிக்கு அனுகூலமாக இருக்கும். அத்துடன் மும்பை இந்தியன்ஸ் வீரர்களும் நேரில் வந்து உற்சாகப்படுத்துவதால் வீராங்கனைகள் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுகட்டுவதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.

    இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    மும்பை இந்தியன்ஸ்: யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ், நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), சஜனா, அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், கமலினி, சன்ஸ்கீர்த்தி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லானிங் (கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெஸ் ஜோனஸ்சென், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனபெல் சுதர்லாண்ட், சாரா பிரைசி, நிக்கி பிரசாத், ஷிகா பாண்டே, மின்னு மணி, திதாஸ் சாது.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
    • 2023-ம் ஆண்டு மும்பையிடமும், கடந்த ஆண்டு பெங்களூரு அணியிடமும் தோற்று கோப்பையை இழந்தது.

    மும்பை:

    3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் 20 ஓவர் போட்டித் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 5 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் கடந்த 11-ந்தேதியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்தன.

    இதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், 3-வது இடத்தை பிடித்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெளியேற்றுதல் சுற்று போட்டிக்குள் நுழைந்தன. கடைசி 2 இடங்களை பிடித்த பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்று போட்டியில் குஜராத்தை 47 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இப்போட்டி மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டில் கோப்பையை வென்றது. 2-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. மும்பை அணியில் ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    மேலும் நாட்சிவெர், கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர், அமெலியா கெர், இஸ்மாயில், யாஸ்திகா பாட்டியா போன்ற வீராங்கனைகள் உள்ளனர். அந்த அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது.

    டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டு மும்பையிடமும், கடந்த ஆண்டு பெங்களூரு அணியிடமும் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த 2 முறையும் கோப்பையை வெல்ல முடியாத சோகத்தை சந்தித்த டெல்லி இந்த முறை பட்டத்தை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

    மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணியில் ஷபாலி வர்மா, ஜோனா சென், சதர்லெண்ட், ரோட்ரிக்ஸ், மாரிசேன் காப், ஷிகா பாண்டே ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.

    இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • நாட் ஸ்கைவர், மேத்யூஸ் ஆகியோர் 77 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
    • கேப்டன் கவுர் 12 பந்தில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதி டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி மும்பை அணி தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா- ஹேலி மேத்யூஸ் களமிறங்கினர். பாட்டியா 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நாட் ஸ்கைவர்-பிரண்ட், மேத்யூஸ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்.

    இருவரும் குஜராத் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். இருவரும் 77 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் களம் புகுந்த கேப்டன் கவுர் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 12 பந்தில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் எடுத்தது.

    • மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெர்ரி 49 ரன்கள் குவித்தார்.
    • பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி மும்பையில உள்ள பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 20-வது மற்றும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது.

    இதில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிசுற்றுக்கு முன்னேறலாம் என்ற சூழலில் 'டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் 65 ரன்கள் திரட்டினர். எலிஸ் பெர்ரி 49 ரன்களுடன் (38 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.

    அடுத்து களம் இறங்கிய மும்பை அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 188 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டியில் 49 ரன்கள் குவித்ததன் மூலம் ஆர்சிபி அணி வீராங்கனை புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகளின் பட்டியலில் பெங்களூரு வீராங்கனை எலிஸ் பெர்ரி முதலிடத்தை பிடித்தார். அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 972 ஆக (25 ஆட்டம்) உயர்ந்தது. டெல்லி கேப்டன் மெக்லானிங் 939 ரன்களுடன் (26 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.

    • மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது.
    • மும்பை-குஜராத் ஆகிய இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றது.

    மும்பை:

    5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (தலா 10 புள்ளிகள்), குஜராத் ஜெயன்ட்ஸ் (8) ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (6), உ.பி. வாரியர்ஸ் (6) ஆகியவை வெளியேற்றப்பட்டன.

    டெல்லி, மும்பை அணிகளில் ரன்ரேட் அடிப்படையில் டெல்லி முதல் இடத்தை பிடித்தது. அந்த அணி 15-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

    இறுதிப்போட்டிக்கு நுழையும் 2-வது அணி எது? என்பது நாளை தெரியும். மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் டெல்லியை சந்திக்கும். தோற்கும் அணி வெளியேறும்.

    இந்த தொடரில் இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றது. வதோதராவில் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் 9 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் நம்பிக்கையுடன் விளையாடும்.

    அதே நேரத்தில் குஜராத் அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் இறுதிப் போட் டிக்கு முன்னேற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×